“உன்னுள் ரோஜாவாய் நான் ” அத்தியாயம் -9

           வினோதினிக்கு கேரளா செல்ல அவ்வளவு சீக்கிரம் பர்மிஷன் கிடைக்கவில்லை அவள் அப்பா வீரபாண்டியிடம் தான் முதலில் சொன்னாள்.அவர் தாம் தூம் என்று குதித்தார் அடுத்ததாக மோகனிடம் சொல் என்றார் மோகனிடம் சொன்னதற்கு நம் நாம் இருவரும் எங்கேயாவது போயிட்டு வரும் ஊட்டி கொடைக்கானல் என்று சொன்னான். ஆனால் அவளோ பிடிவாதம் பிடித்து நான் என் ஸ்டாப்போட தான் செல்வேன் என்று பிடிவாதம் பிடித்துக் கிளம்பலானாள்.

                வினோதா உடன் 5 கல்யாணமான ஆசிரியர்களும் இரண்டு சார்களும் மூன்று கல்யாணம் ஆகாத பெண்களும் சென்றனர். நரேனின் மூலம் அனைத்து தகவல்களையும் சேகரித்துக் கொண்டான் மோகன் அதற்குப் பிறகு அவளை கொண்டு போய் இறக்கி விட்டான் ஸ்டாப்பில் அப்பொழுது அவளுக்கு கை செலவிற்கு 3 ஆயிரத்து எடுத்துக் கொடுத்தான் அவள் “எனக்கு ஒன்னும் வேணாம்” என்றால் இல்ல பரவால்ல வச்சுக்கோ என்றான் “எனக்கு வேணாம் நான் வச்சிருக்கேன்” என்றாள். இல்ல பரவால்ல வச்சுக்க என்று கையில் திணித்து விட்டு பஸ் கிளம்பும் வரை நின்று இருந்தான் பஸ் கிளம்பின உடனே தான் அவன் கிளம்பினான்.

            இதில் வேறு அருண் சார் வினோதாவிடம் வாவ் மிஸ் சுடிதார்ல பார்க்க அப்படி ஏஞ்சல் மாதிரி ஃபர்ஸ்ட் டைம் உங்கள சுடிதார்ல பார்க்கிறேன் சின்ன பொண்ணு மாதிரி இருக்கீங்க மிஸ் என்றான் மோகனுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது இந்த இவன் இப்பதான் என் பொண்டாட்டிய முதல் முதல்ல சுடிதார்ல பார்க்கிறானா அவனுக்கு எவ்ளோ சேட்டஇருக்கும் எனக்கு முன்னாடியே வர்ணிக்கிறான். கட்டின புருஷன் பக்கத்துல இருக்கான்னு கூட தெரியாம வர்ணிக்கிற இவனை மொகரையெல்லாம் பேத்தா என்ன என்று கண்ணாலேயே அவனை எச்சரித்தான். அதனைப் பார்த்தும் பார்க்காத மாதிரியும் அருண் சார் பிற ஆசிரியர்களுடன் பேசுவது போல் சென்று விட்டான்.

          நைட்டில் பஸ்ஸில் ஏற ஆரம்பித்து காலையில் கேரளா சென்றடைந்தனர். வினோதினி ஏர்னதிலிருந்தே இரண்டு கண்கள் அவளையே பார்த்த வண்ணம் இருந்தன. மலை மேகங்களின் நடுவில் அவர்களது பஸ் சென்று கொண்டிருந்தது அவளுக்கு மலை ஏறும் போது குமட்டல் எடுக்க ஆரம்பிச்சது எப்போதும் பஸ் பயணம் செய்தால் அவளுக்கு வாந்தி வராது ஆனால் இன்று மழை ஏறும் பொழுது அவளுக்கு குடலைப் புரட்டிக் கொண்டு வாந்தி வந்தது அதனை எடுப்பதற்காக ஜன்னல் வழியில் தன் இருக்கையில் இருந்து நகர்ந்து பக்கத்துஜன்னலுக்கு சென்றாள். அப்படி செல்லும் பொழுது வினோதினின் கையை ஒரு கரங்கள் பிடித்து இழுத்தது இவள் யாருடா அது என்று திரும்பி பார்க்க அருண் சார்  இருந்தார் பிடித்த கையை உதறிவிட்டு அரைய சென்றாள் பக்கத்தில் இருந்த கோமதி அவள் பிரண்ட் அவளோ ஏன் பா அவர் உனக்கு முடியல வாமிட் வர மாதிரி இருக்குன்னு சொன்னதும் எங்க விழுந்து விடுவாயோ என்ற பயத்துல தான் புடிச்சார் என்றாள் சட்டென்று கையை கீழே இறக்கிவிட்டு வினோதினி போய் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள். அவள் வாந்தி எடுப்பதை பார்த்து அனைவரும் ஏப்ப ஏதாவது குட் நியூஸ் இருக்கா என்றார்கள்.அதற்கு வினோதினி அதெல்லாம் இல்லப்பா மழையில ஏறினால குடலை பிரட்டிக்கிட்டு வருது என்றாள்.

          பிறகு ஒரு இடத்தில் நிப்பாட்டி அவர்கள் பல் விலக்கி குளித்து முடித்து பச்சை நிற சுடிதார் உடுத்தி எழில் ஓவியமாக திகழ்ந்தாள். அருண்  சார் பார்த்தவுடன்  மிஸ் யூ சோ பியூட்டிஃபுல் என்று சொன்னான். வினோதினியும் சும்மா இருங்க சார் என்றாள். முதலில் கொச்சின் பீச்சுக்கு சென்றார்கள் அங்கு கடலில் சரியான ஆட்டம் அடுத்து பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றார்கள். அடுத்து இரவு நேரம் குருவாயூர் சென்று கிருஷ்ணரை தரிசித்தார்கள். குருவாயூர் கிருஷ்ணனும் அழகாக சிரித்துக் கொண்டிருந்தார். வினோதினி என்னப்பா என் வாழ்க்கைல நடக்குது என்று எனக்கு ஒண்ணுமே புரியல நீ கொடுத்த வாழ்க்கையை ஏத்துக்கிறதா இல்ல என்ன பண்றதுன்னு எனக்கு புரியல என்று உருக்கத்தோடு வேண்டிக் கொண்டிருந்தாள்.

         அடுத்த நாள் அனைவரும் ஆலப்புழாவில் உள்ள போட் ஹவுஸில் தங்கினார்கள். அங்கு அனைவரும் குளித்துக் கிளம்பி கொண்டு இருந்தார்கள் வினோதினியோ வந்ததும் குளித்துவிட்டு போட் ஹவுஸில் நைட் டின்னர் ரெடியாய் கொண்டிருந்தது  வினோதினியோ  போட்டின் மேல் மாடியில் சென்று அதன் அழகை ரசித்து கொண்டு இருந்தாள் .

                  அப்பொழுது  அருண் சார் என்பவன் வந்து மிஸ் லைஃப் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என்றான்நல்லா தான் போகுது என்றாள். நீங்க வேலைக்கு சேர்ந்து ரெண்டு வருஷம் ஆச்சுன்னா என்னால நம்பவே முடியல உங்கள ஒழுங்கா கூட பாக்கல அதுக்குள்ளயும் கல்யாணம் நடந்துச்சு உங்களுக்கு என்றான். உங்க முகத்தை பார்த்தா உங்க கல்யாண வாழ்க்கையில ஏதோ பிரச்சனையும் நினைக்கிறேன் அப்படித்தானே என்றான் அதெல்லாம் இல்லையே என்றாள்வினோதினி இல்ல மிஸ் பொய் சொல்லாதீங்க கல்யாணம் நிச்சயம் பண்ணது ஒருத்தரோட கல்யாணம் ஆனது ஒருத்தரோட அந்த குழப்பத்திலேயே தானே இருக்கீங்க என்றான் அதற்கு வினோதினி  மனதில் இவனுக்கு எப்படி தெரியும் என்று நினைத்துக் கொண்டாள்.

             சோ சிம்பிள்  மிஸ் நான் ஒன்று சொல்லவா என்றான். வினோதினி என்ன என்று கேட்டாள். உங்க குழப்பத்தை நான் தீர்த்து வைக்கவா என்றான். அவர டிவோர்ஸ் பண்ணிருங்க சட்டுனு எதிர்ப்பதவிதமாக அவள் கையைப் பிடித்து உங்களுக்கு விருப்பம் இருந்தால் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்றான். யூ  ஆர்கவுன்ட்ரஸ் என்று அவனை ஓங்கி ஒரு அறை விட்டால் மனதில் தான் மோகனுக்கு மட்டுமே சொந்தம் என்று உரைத்தது. மிஸ் தப்பா எடுத்துக்காதீங்க இப்ப இந்த நிமிஷத்துல உங்க மனசில யார நினைச்சீங்க என்றான். என்னோட ஹஸ்பண்ட் தான் நெனச்சேன் என்றாள். உங்க மனசுல யாரு இருக்கான்னு புரிய வைக்க தான் அப்படி பண்ணினேன் என்றான். ஓ சாரி சாரி என்றாள் வினோதினி.

              அடுத்து அனைவரும் வந்தவுடன் நைட் டின்னருக்கு சப்பாத்தியும் சிக்கன் குருமாவும் சாப்பிட்டார்கள் போட்டிலே ரெடி பண்ணி கொடுத்தார்கள்.  வினோதினி கோ  சாப்பிடவே முடியவில்லை. எப்பொழுது இருந்து மோகன் மனதில் வந்தான் என்று நினைத்து மருகிக் கொண்டு இருந்தாள்.

              அவனை எப்ப நான் புருஷனா ஏத்துக்க ஆரம்பிச்சேன் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். அவனை எனக்கு பிடிக்காதே என்று தானே நினைத்துக் கொண்டிருந்தேன் எப்ப இருந்து இந்த மாற்றம் என்று புலம்பி கொண்டு இருந்தாள் மனதில். சின்ன வயசுல இருந்து மோகனுக்கு பொண்ணுங்கன்னாலே பிடிக்காது என்று இருந்தேன் கல்யாணம் ஆன பிறகு என்னை அவனுக்கு புடிச்சி இருக்குன்னு நினைக்கிறேன் அதனால தானே அவனோட உரிமையை காமிச்சன் அவன் என்னையே கட்டினதுக்காண்டி மனைவியா ஏத்துக்குறானா இல்ல என்னை விரும்பி ஏத்துக்குறானான்னு தெரியலையே.

             மோகன் எப்பொழுது இருந்து என் மனசுக்குள் வந்தான் அவன் உரிமையை காமிச்சானே அப்பொழுது இல்ல கல்யாணத்துக்கு முன்னாடியே வா, இல்ல கல்யாணம் ஆன பிறகா சின்ன வயசுல அவன மாதிரி புருஷன் இருந்தா நல்லா இருக்குமே நினைச்சி இருக்கேன் என ஒரு பொண்ணுங்களோட அவன் ஏறெடுத்து பார்க்க மாட்டான். அந்த குணம் எனக்கு பிடிச்சிருந்தது நான் கூப்பிட்டா கூட பதிலுக்கு நிக்காம போவான் அந்த திமிரு எனக்கு புடிச்சிருந்துச்சு  ஆமா சின்ன வயசுல இருந்தே அவன் மேல எனக்கு ஒரு கிரஷ் இருந்திருக்கு நல்லவேளை நான் முகிலனை  கல்யாணம் பண்ணல உடனே மோகனை பார்க்கணும் போல் இருந்தது.

மோகனிடம் இது அனைத்தையும் கூற வேண்டும் போல் இருந்தது ஒருவேளை இதெல்லாம் நம்ம சொல்லி அவனுக்கு நம்மள பிடிக்காம போயிருச்சுனா என்று நினைத்தாள். நாளைக்கு போனதும் நம்ம மோகன பாக்க போறோம் என்று நினைப்பில் உறங்கலானாள்.

        காலையில் நரேன் தான் அவளை கூப்பிட பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருந்தான் அவன்கிட்ட “ஏன்டா உங்க மாமா வல்லையா கூப்பிட” என்றாள். “மாமா ப்ராஜெக்ட் விஷயமா மதுரை வரைக்கும் போய் இருக்காங்க அதான் என்னைய போய் கூட்டிட்டு வர சொன்னாங்க”

 என்றான்.

         எப்பொழுதுடா மோகன் வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்தால், அவன் வர நைட்டு பத்து மணி ஆனது அவன் வந்ததும் டூரலாம்  எப்படி இருந்துச்சு என்று கேட்டான் அதற்கு வினோதினியோ நல்லா இருந்துச்சு என்றாள். வீட்டில் உள்ள அனைவருக்கும் சாப்பாடு பரிமாறினால் அவளும் சாப்பிட்ட பிறகு ரூமிற்கு சென்றாள் அங்கு மோகன் தனது லேப்டாப்பில் மூழ்கி இருந்தான். மோகன் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள். என்ன பேசணும் என்றான் லேப்டாப்பை அணைத்துவிட்டு.

 டூரில்  நடந்துவற்றே முதலில் கூற நினைத்தால் பிறகு மோகன் மனதில் தான்  இருக்கிறோமா என்று நினைத்து அதனை கூறாது இப்படியாக திரித்துக் கூறினாள். அருண் சார் கிட்ட நீங்க பேசாத ன்னு சொன்னீங்க இல்ல  என்றாள்வினோதினி. ஆமா சொன்னேன் என்றான் உங்களுக்கு ஏன் அவர புடிக்கல என்றாள்.

என் பொண்டாட்டி கிட்ட வேற எவனாவது பேசினா எனக்கு எப்படி இருக்கும் என்றான். என்னை உனக்கு பிடிக்குமா என்றாள். எப்ப இருந்து பிடிக்கும் கல்யாணமான பிரகா என்று கேட்டாள்.  மோகனோ சிறுவயதிலிருந்தே உன்னை பிடிக்கும் என்று சொல்ல வந்ததை மறைத்து கல்யாணம் ஆனதிலிருந்து தான் என்றான். ஓ அதற்குப் பிறகுதான் புடிக்குமா என்றாள்.

      இப்ப ஏன் இதெல்லாம் கேட்கிற என்றான் இல்ல அருண் சார் என்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணாரு அவர்னால தான் என் மனசுல யாரு இருக்கான்னு புரிஞ்சுகிட்டேன் அவர் ரொம்ப நல்லவர் என்று சொன்னாள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த மோகனுக்கு கோபம் தலைக்கேறியது. மோகனோ எப்ப இருந்து அவனை விரும்புற சரி உன் இஷ்டம் நான் இனிமேல் தலையிட மாட்டேன் உனக்கு டிவர்ஸ்  வேணும்னா மியூச்சுவலா   ரெண்டு பேரும் பிரிஞ்சுக்கலாம் என்றான்.

       அவனை ஓங்கி ஒரு அறைவிட்டாள். யூ இடியட் உன்னை விரும்புவதை உன்கிட்ட சொல்ல வந்தா நீ இப்படித்தான் தப்பா புரிஞ்சிக்குவியா என்றாள். இது எப்போதிலிருந்து, உனக்கு. என்னை பிடிக்காது இல்ல என்றான் புடிச்சதால தான் நின்னு பேசிட்டு இருக்கேன் ஃபூல் என்றாள்.

       மோகனோ அவளை நம்ப முடியாமல் பார்த்தான். இப்ப தானடி சொன்ன  அருண் சார் ப்ரொபோஸ் பண்ணுனார் என்றான். அவர் சொல்லும்போது தான் எனக்கே தெரிஞ்சிருச்சு நான் உன்ன விரும்புறதே என்றாள். இங்க வா என்று பக்கத்தில் அழைத்தான் போ வரமாட்டேன் என்றாள் ஏய் நான் சொல்றேன்ல பக்கத்துல வா என்றான். நீதான சொன்ன டிவைஸ் பண்ணிக்கலாம்னு இனிமே சொல்ல மாட்டேன் டி பக்கத்துல வா இன்று இழுத்து அணைத்தான்.  ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவள் இதழை  சிறை செய்தான். சிறிது நேரம் கழித்து அதனை தனதாக்கி கொண்டாள். விடாது இருவரும் ஒருவர் மாறி ஒருவர் முத்தம் கொடுத்துக் கொண்டார்கள். மோகனோ இதற்கு மேல் ஒரு நிமிடம் கூட என்னால் கண்ட்ரோல் பண்ண முடியாது என்று அவளை தூக்கி சென்றான். வினோதினியை தனக்கே சொந்தமாக்கி கொண்டான்.

              விடியலின் போது தான் இருவரும் உறங்க ஆரம்பித்தன. காலையில் வினோதினி முதலில் கண்விழித்தாள். வினோதினி கோ இரவு நேரங்களில் நடந்த அனைத்தும் ஞாபகம் வந்து தன் கையால் முகத்தை மூடிக்கொண்டாள். மோகனோ அவளை விடாது இழுத்து அனைத்திருந்தான். மோகனை கொஞ்சஆரம்பித்தால் என் செல்லம். நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கலைன்னா நம்ம ரெண்டு பேரும் என்னவாயிருப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். வாழ்க்கையே இழந்த மாதிரி இருப்போம். மோகனோ இப்ப எதுக்கு அந்த பேச்சு என்று திரும்பவும் இழுக்க ஆரம்பித்தான். உன் வாயை அடைக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் இதழில் முத்தமிட்டான்.” மோகன் ப்ளீஸ் பா நான் போகணும் “என்றாள். “எங்கே போனோம் இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவு போடு” என்றான். “சரி லீவு போடுறேன் இப்ப விடுங்க” என்றாள் “அதான் லீவு போடறேன்னு சொல்லிட்டு அப்புறம் என்ன” என்று இழுத்த அனைத்து மீண்டும் அவன் வேலையை  தொடங்கினான். “நீங்க வேலைக்கு இன்னைக்கு லீவா” என்று கேட்டாள்  நானும் லீவு தான் போட போறேன்” என்றான். சரி என்றாள் மீண்டும் அவர்களது வேலை தொடர்ந்து கொண்டே இருந்தது மதியம் வரை. இங்கு ராஜன் லத்திகாவிடம் என்னம்மா இன்னும்  அண்ணனும் அண்ணியும்  வரலையா என்று கேட்டார். லத்திகாவும் இல்லைப்பா நைட் அண்ணன் லேட்டா தான் வந்தான் என்றாள்.

சரிமா அவர்களை டிஸ்டர்ப் பண்ண வேணாம் என்றார்.

         இன்னும் இவர்களது வாழ்க்கையில் யார் முள்ளாகவும் ரோஜாவாகவும் மலர போகிறார்கள் என்று பார்ப்போம்.

இனி…