“உன்னுள் ரோஜாவாய் நான்”

அத்தியாயம்- 8

            அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் வினோதினி நைட் டிபன் செய்ய ஆரம்பித்தால் அன்று வித்தியாசமாக முருங்கைக்கீரை பூரியும் தக்காளி குருமாவும் பண்ணி இருந்தாள். அனைவரும் டைம் டேபிள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது ராஜனுக்கோ பெருமை தாங்கவில்லை மருமகள்நைட் டிபன் வித்தியாசமாக செய்ய ஆரம்பித்து இருந்தால் வந்ததுல இருந்து.இன்றுலத்திகா முருங்கைக் கீரையை தொட மாட்டாள் அதற்காக முருங்கைக்கீரை  பூரி செய்துஅதற்கு ஏற்றார் போல் தக்காளி குருமா செய்திருந்தால் எல்லோருக்கும் என்ன பிடிக்கும் என்று பார்த்து பார்த்து  கேட்டு கேட்டு சமைக்க ஆரம்பித்தால் ஆனால் ஜெயராணியோ தன் மருமகளிடம் இது பிடிக்கும் அது பிடிக்கும் என்று சொல்லுவதே இல்லை அதனால்  அவர்களுக்கு  என்ன பிடிக்கும் என்று இவளுக்கு தெரியாது.

             “ராஜன் இதெல்லாம் எங்க இருந்து மா கத்துக்குற, அம்மா சொல்லி கொடுத்தாங்கலாமா” என்று கேட்க “இல்ல மாமா யூடியூப்ல பார்த்து தான் செஞ்சேன்” என்றாள். மோகனுக்கும் சந்தோசம் அப்பா தன் மனைவியை  புகழ்ந்ததில் அவனுக்கும் பெருமை.

         அன்று இரவு படுக்கும் போது மோகன் அந்த அருண் சாரிடம் உனக்கு என்ன பேச்சு? என்று கேட்டான். ஏன் சும்மாதான் பேசிட்டு இருந்தோம் ஒரு சின்ன குழந்தை நேத்து சேர்ந்தவுடன் அழுதுகிட்டே இருந்துச்சு அதை பத்தி தான் பேசிகிட்டு இருந்தோம் .” இனிமே அவர்கிட்ட பேசாத” என்றான் “நான் யாரு கிட்ட பேசினா உங்களுக்கு என்ன?” என்றாள்.

         “என்ன உங்களுக்கு என்னவா? நான் யாருன்னு தெரியும்ல” யார் நீங்க? “பெரிய ஆளா?” உங்க தலையில கொம்பு முளைச்சி இருக்கா என்று கேட்டாள்.நான் வந்து உன் புருஷன். இதை கட்டினவன் என்று தாலியை தொட்டு காண்பித்தான். உனக்கு பிடிச்சதெல்லாம் நான் செய்ய முடியாது என்றால் மரியாதை இல்லாமல் நான் யாரு கிட்ட பேசணும் பேசக்கூடாது நீ சொல்ல வேணாம் எனக்கு தெரியும் என்றாள். டக்குனா அவளை இழுத்து இதழோடு இதழ் பதித்தான். நீண்ட முத்தத்திற்கு பிறகு அவள் மூச்சு விட சிரமப்படும் பொழுது அவளை விடுவித்தான். நான் புருஷனுக்கு உண்டான உரிமையை எடுக்க ஆரம்பிச்சா தெரியும் இல்ல என்று கேட்டான். சி மனுஷனா நீ ?என்றாள். நான் மனுஷன் தாண்டி  இல்ல நான் என்ன மிருகமா? அது என்ன உனக்கு என்கிட்ட பேசுற இருந்தா மட்டும் கசக்கும் மத்தவங்களோட மட்டும் நல்லா பேசுவியா என்றான் உனக்கு என்ன நான் பேசினா என்றால் பேசக்கூடாது அப்படி தான் பேசுவேன் உனக்கு என்ன வந்துச்சு வேணாம் திரும்பவும் என் வாயை கலராத இங்க வா வரமாட்டேன் இங்க வாடிஒரு நிமிஷம் என்றான் நான் வரமாட்டேன் என்பவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

              உனக்கு  வலது முட்டிக்கால்ல ஒரு தழும்பு இருக்குல என்றான். ஆமா உனக்கு எப்படி தெரியும் என்றாள். தெரியும் என்றான் ஓ நான் தூங்கிட்டு இருக்கும் போது தெரியாம விலகி இருந்துருக்கு நீ  அத  பாத்து இருக்க அப்படித்தானே என்றாள். ஓ இதுக்கு தான் நான் பெட்ல படுக்க சொன்னேனா வந்து வேகமா படுத்தியா என்றாள். வேணா ரொம்ப பேசாத பின்னாடி ரொம்ப கவலைப்படுவ என்றான். அப்படித்தான் பேசுவேன் உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என்றாள். ஏன் என்னோட ரைட்ஸ் காமிச்சுது உனக்கு பத்தலையா என்றான். திடீர்னு பக்கத்துல போனான் மீண்டும் தன் முத்திரையை பதித்தான் வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து விடுபட்டு வேண்டாம் என்னை இந்த மாதிரி பண்ணாத என்றாள். நான் என்னமோ உன்னைய ரொம்ப நல்லவன் நினைச்சுகிட்டு இருந்தேன் ஆனா சீ நீ இப்படிப்பட்டவன என்றாள்.

         என்னடி ரொம்ப வாய் பேசற நான் எப்படிப்பட்டவன் உனக்கு தெரியாதா?ஸ்கூல்ல இருந்தே என்றான். அப்புறம் எதுக்கு இப்படி பண்ற என்றாள். ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம அவளை தொடக்கூடாது என்பது உனக்கு தெரியாதா?  இனிமே உன் கூட படுக்க மாட்டேன் என்றாள்.

            நான் கீழே படுத்துக்கிறேன் என்று பாயை விரிக்கலானள். ஏய் எந்திரி ஒழுங்கா பெட்ல  படு  என்றான். இல்ல இனிமே உன் கூட நான் பெட்ல படுக்க மாட்டேன் என்றாள். ஒரு பொண்ணு தனியா இருந்தா போதுமே அவளை இப்படித்தான் இது பண்ணுவியா என்றாள். ஒரு விதமான நடுக்கத்துடன் அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். சரி நான் அப்படி யூஸ் பண்றேன் நான் உனக்கே உனக்கு தெரியாதா என்ன பத்தி என்றான் வேறு எந்த பொண்ணு கிட்டயாவது நான் பேசி இருக்கேனா இல்ல பழகி இருக்கனா என்றான்.

               இத்தனை நாளா உன் கூட தான் இருந்தேன் உன்னை சின்ன டச்சாவது பண்ணி இருப்பேனா? உனக்கு தெரிஞ்சு என்றான். இல்ல இனிமே நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் நான் கீழே படுத்துகிறேன் என்றாள். சரி வேணா இப்படி வச்சுக்குவோம்,  நீனா என்னை வந்து தொடுற வரைக்கும் நானும் தள்ளியே இருப்பேன் போதுமா என்றான்.

   திரும்பவும் சொல்றேன் நான் உன்னை மனைவியை ஏத்துக்கிட்டனால தான் என்னோட உரிமையை காமிச்சேன் அது உனக்கு பிடிக்கவில்லை என்றால் இனிமேல் நான் தள்ளியே இருந்துக்கிறேன் என்றான் உனக்கு புடிச்சா போதுமா எனக்கு பிடிக்க வேண்டாமா என்னோட விருப்பத்தை நீ கேட்க மாட்டியா என்றாள்.

சரி பெட்ல வந்து படு என்றான். நான் படுக்க மாட்டேன் என்றாள். சரி அப்ப நான் தூக்கிட்டு போய் பெட்ல போடுவேன் என்றான் வேணா வேணா நானே பெட்ல படுத்துகிறேன் என்றாள். அப்புறம் இன்னொன்னு இப்பதானே சொன்ன என்னோட விருப்பம் இல்லாம தொட மாட்டேன்னு சொன்னேன்ல என்றாள் சரி இனிமே விருப்பமில்லாமல் தொட மாட்டேன் என்றான்.

        அன்று இரவு அவள் தூங்கின பிறகு ஏண்டி என்னை இப்படி சித்திரவதை பண்ற அழகான மனைவியை பக்கத்துல வச்சுக்கிட்டு யாராவது இப்படி தூங்குவானா ஏன்டி என்னைய கொடுமை படுத்துற என்றான். எப்போ உன் மனசு மாறி புருஷன் பொண்டாட்டி  நாம வாழ்றது என்று  நினைத்தான்.அவளோ தூக்க கலக்கத்தில் எப்பவும் போல் அவன் மேல் கையை போட்டாள் உன் மனசு மாறுறவரைக்கும் நான் காத்துக்கிட்டே இருப்பேன். இப்போ இதுவாது போதும் எனக்கு என்று நினைத்துக் கொண்டு தானும் உறங்கலானான்.

        அந்த சண்டைக்குப் பிறகு இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ளவில்லை மோகனும் அவன் பாட்டுக்கு இருந்தான் அவளும் சமையல் ஸ்கூல் என்று இருந்தாள். ஒரு நாள் அவளுக்கு ஸ்கூல் போயிட்டு வந்து ரொம்ப முடியவில்லை, அப்பொழுது லத்திகாவிடம் இன்னைக்கு நைட்டுக்கு மட்டும் ஏதாவது டின்னர்  பண்ண சொல்லு  லத்திகா அத்தை கிட்ட சொல்லி என்னால முடியல என்றாள்.

          அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜெயராணியோ ஏன் மேடம்னால இன்னைக்கு பண்ண முடியாது.  எப்பவும் அவ தானே விதவிதமா பண்ணுவா இன்னைக்கு என்ன வந்துச்சு என்றார்.என்னல எல்லாம் பண்ண முடியாது எப்பவும்  போல அவளையே  பண்ண சொல்லு என்றார். அம்மா  அண்ணிக்கு ரொம்ப முடியல மா என்றாள் அதனை மோகன் கேட்டுக்  கொண்டிருந்துவிட்டு தானே சமையல்கட்டிற்கு சென்றான் லத்திகா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இன்னைக்கு சமைப்போம் யாரும்  என்பொண்டாட்டிக்கு தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டாம் என்றான். நாளையிலிருந்து வேலைக்கு ஒரு ஆள் வர சொல்றேன் இனிமே என் பொண்டாட்டியும் பார்க்க வேண்டாம் அம்மாவும் இப்படி சொல்ல வேணாம் என்றான்.

ஜெயராணிக்கு மகன் இப்படி சொன்னதில் ஏகப்பட்ட வருத்தம். மோகன் இப்படி சொல்லிட்டானே நேத்து வந்த பொண்டாட்டி முக்கியம், அம்மா அப்பா முக்கியம் இல்லையா என்று கேட்க ஆரம்பித்தார். அதற்கு மோகன் நீங்களும் முக்கியம்தான் அவளை எனக்கு முக்கியம் தான் என்று சொல்ல ஆரம்பித்தான். நல்ல மயக்கி வச்சிருக்காடா உன்பொண்டாட்டி கல்யாணம் ஆன மூணு மாசத்துல அப்படியே மாறிட்டியே டா எப்படிடா என்று கேட்க ஆரம்பித்தார். அம்மா நீங்க ஓவரா பேசுறீங்க அவளும்எனக்கு முக்கியம் நீங்களும் எனக்கு முக்கியம் நீங்க தானே பார்த்து கல்யாணம் பண்ணி வச்சீங்க அப்புறம் என்ன .

             நான் பெரிய பையன் வீட்டுக்கு போறேன், அங்கே போய் நான் இருக்கிறேன் மருமகளும் மாசமா இருக்கா அங்க இருந்துக்கிறேன் என்றார் ஜெயராணி. மோகன் லத்திகாவிடம் இருந்து கேட்டு தெரிந்து கொண்டான். யார் ஸ்கூலுக்கு போகும் போது சமைப்பது என்று அதற்கு லத்திகா அண்ணி வந்ததுல இருந்து அண்ணி தான் சமைப்பாங்க என்றாள். மோகனோ நான் இருக்கும்போது அம்மா தானே சமைப்பார்கள் என்றான். அதற்கு லத்திகா நீங்கள் இருக்கும் போது மட்டும் தான் அது நடக்கும் என்றாள்.

             மோகன் சற்று யோசித்து விட்டு உங்க இஷ்டப்படியே போய் இருங்க என்றான். எப்படியும் நம்ம மகன் இருக்க சொல்லுவான் என்று நினைத்துக் கொண்டிருந்த ஜெயராணிக்கோ இடி விழுந்தது போல் ஆனது. ராஜனும் அதான் நல்லது நீனும் கொஞ்ச நாளைக்கு அங்க போய் இரு என்றார். ஏன்னா அவருக்கும் பிடிக்கவில்லை  எப்ப பாத்தாலும் வினோதினியை ஏதாவது சொல்லி திட்டிக் கொண்டே இருந்தார் ஜெயராணி. என்ன சமைத்து போட்டாலும் அதிலும் ஒரு குற்றம் குறை கண்டுபிடிப்பார்.

       அவரும் வினோதினியின்  நல்லதற்காக ஜெயராணி அங்கேயே இருக்கட்டும் என்று முடிவு செய்தார். மோகனும் லத்திகாவும் இருவரும் சேர்ந்து சமைத்து முடித்தனர். பிறகு “அண்ணியை கூட்டிட்டு வா “என்று அனுப்பினான் மோகன். அம்மா நாளைக்கு முகிலன்  அண்ணன் வீட்டுக்கு போறாங்க பெங்களூருக்கு என்றாள்லத்திகா. ஏன்என்று கேட்டால் வினோதினி அதற்கு லத்திகா “அப்பாவும் அண்ணனும் சேர்ந்து தான் இந்த முடிவு எடுத்தாங்க” என்று கூறினாள்.

       கீழே சாப்பிட இறங்கி  வந்தாள் வினோதினி. என்னத்த போட்டுமா என் பிள்ளையை மயக்குனா என்றார் ஜெயராணி.  அத்தை  எதுவுமே சொல்லல அத்தை என்றாள். எதையும் சொல்லாம தான் என் பிள்ளை என்னை பெங்களூர்க்கு அனுப்புறானா என்றார் மோகன் அம்மா “நீங்கதான் முதல்ல பெங்களூர் போறேன்னு ஆரம்பிச்சீங்க நானும் அப்பாவும் சரி போயிட்டு வாங்கன்னு சொன்னோம்” அவ இதுல எதுலயுமே சம்பந்தப்படவில்லை என்றான்.

         அன்று  இரவும் மோகனும் வினோதாவும் சண்டை போட்டுக் கொண்டார்கள் வினோதா உங்களால தான் உங்க அம்மா என்னை திட்டுறாங்க என்றாள். கோபப்படாத உனக்கு முடியல அதனால தானே நீ அப்படி சொன்ன அப்ப அவங்க புரிஞ்சுகிட்டு என்ன பண்ணி இருக்கணும் சமைக்க வந்திருக்கணுமா இல்லையா  லத்திகா சொன்னா நீ தல குளித்து இருக்கும் போது உன்னை திட்டிக்கிட்டே இருந்தாங்களாமே என்றுமோகன் கூறினான்.

         பரவால்ல அத்தை தானே போற இடத்தில எப்படி வேணாலும் இருக்கும் நம்ம தான் புரிஞ்சு நடந்துக்கணும். எங்க அம்மா சொல்லித்தான் வளர்த்தாங்க என்றாள். இப்ப என்ன நெனைப்பாங்க அத்தை நான் சொல்லித்தான் நீங்க இப்படி பண்றீங்கன்னு என்னை தப்பா நினைக்க மாட்டாங்களா இன்னும் என் மேல கோவம் அதிகமாகும் என்றாள். இதற்கெல்லாம் காரணம் நீங்கள் தான் எல்லாத்துக்குமே நீங்க தான் காரணம் என்றாள்.

        அடுத்த நாள் ஜெயராணி பெங்களூர் கிளம்ப வீட்டிற்கு வேலையாள் ஒருவர் சேர்ந்திருந்தார். வினோதிக்கோ இதில் விருப்பமில்லை என்றாலும் லத்திகாவும் ராஜனும் தான் நீ ஒரு ஆளு எம்புட்டு வேலம்மா பாப்ப அத்த வேற இல்ல அதனால இந்த ஆள் இருக்கட்டும் என்று சொன்னார்கள். வினோதினியும் ஆமா நம்ம ஸ்கூலுக்கு போயிட்டா வீட்ல இருக்கறவங்களை யார் பார்த்து சாப்பாடு போட்டு கவனிச்சுக்கிறது அதுக்கு கண்டிப்பா ஆள் வேணும் தானே என்று நினைத்தாள்.

           இரண்டு வாரங்கள் கழித்து மோகனிடம் வினோதினி நான் ஸ்டாப் எல்லாருடையும் சேர்ந்து கேரளா டூர் போறேன் என்று கூறினாள். மோகன் கோபத்தில் நல்லது ரொம்ப நல்லது அவ அவ புருஷனோட ஹனிமூன் போவானு பேரு ஆனா நீ ஸ்டாஃபோட சேர்ந்து டூர் போற சரி என்றான்.  வினோதினியும் சக ஊழியர்களோடு கேரளாவிற்கு சென்றாள்.

அங்கேதான் அவளது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. எஸ் அவளோட மனசுல யாரு இருக்கான்னு அங்க தான் தெரிஞ்சுகிட்டா.

இனி…