அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நரேன்னும் யாழினியும் “அக்கா மாமா ஒருத்தர் ஒருத்தர் ஊட்டி விடுங்கள் “என்று தன் மொபைலில் போட்டோ எடுத்தார்கள் மோகனும், வினோதினியும் வேறு வழியில்லாமல் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டனர்.
அடுத்து அனைவரும் காரில் ஏறி புறப்பட்டன.நரேனுக்கும் யாழினிக்கும் நடுவில் மோகனும் வினோதினியும் உக்காந்திருந்தன வினோதினி தூக்க கலக்கத்தில் அவன் தோல் மேல் சாய்ந்து உறங்கலானால் மோகன் வாழ்க்கை ஃபுல்லா இப்படியே இருந்துட்டா எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தான். கனவிலே குடும்பம் நடத்தி மூன்று பிள்ளைகள் பெற்று விட்டான். தன்னை யாரோ எழுப்புவது போல் தோன்ற வினோதினி சட்டென்று முழித்துப் பார்த்தால் அப்பொழுது மோகனின் தோளில் சாய்ந்து இருந்தது ஞாபகம் வந்தது உடனே மோகன் இடம் சாரி என்றாள். அவனோ முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு பரவால்ல என்றான்.
வீட்டை நெருங்கும் போது இரவு 9 மணி ஆனது வினோதினியும் மோகனும் சாப்பாடு வேண்டாம் என்று விட்டு போய் உறங்கலானார்கள். அப்பொழுது வினோதினியோ “மோகன் ஒரு நிமிஷம் பேசணும் உன்கிட்ட” என்றாள். மோகனும் “என்ன பேசணும் “என்றான். வினோதினி “மோகன் நான் நாளையிலிருந்து வேலைக்கு போகலாம்னு இருக்கேன் பெங்களூர் போறதால வேலைய விட நெனச்சேன் ஆனா இப்ப வந்து நான் இங்கே தானே இருக்க போறேன் அதுக்கு எதுக்கு வேலையை விடணும் அதனால நான் வேலையை கன்டினியூ பண்ணலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்ற” என்று கேட்டாள்.
மோகனுக்கு தூக்கி வாரி போட்டது “எதுக்கு வேலைக்கு அதெல்லாம் வேணாம் வேலைக்கு எல்லாம் போக வேணாம்” என்றான். வினோதினி “ஏன் பெண்கள் கல்யாணம் ஆனா வேலைக்கு போக கூடாதா” என்றாள். மோகன் “அது அப்படி இல்ல, நீ எதுக்கு போய் கஷ்டப்படணும் அதனால தான் சொல்றேன்” என்றான். வினோதினி “எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை எனக்கு வேலைக்கு போனதான் மைண்ட் ரிலீஃப் இருக்கும்” என்றாள். “சரி இப்போ நீ ரிசைன் லெட்டர் கொடுத்திருக்க அப்புறம் எப்படி வேலைக்கு போவ ” என்றான் மோகன். “இல்லையே நான் கோயில இருக்கும் போதே போன் பண்ணி அவங்க கிட்ட கேட்டுட்டேன் அது எனக்கு பதில் இன்னும் ஆள் சேரல அதனால வர சொல்லிட்டாங்க” என்றாள் வினோதினி.
“மேரேஜ் அன்னிக்கு உன் கைய புடிச்சு யாரோ ஒருத்தர் பேசிட்டு இருந்தாரு அவர் பெயர் என்ன?” என்றான் மோகன். “ஓ அவரா ஸ்பெஷல் சைல்டுக்கு பாடம் எடுக்கிறவரு அருண் சார். அவர் ” “என்ன சொன்னாரு உன்கிட்ட” “அதுவா எனக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கவில்லையே மிஸ் அப்படின்னு சொன்னாரு ” அவர் சும்மா விளையாட்டுக்கு சொல்லுவாரு மத்தபடி நல்ல டைப் தான்”.” ஓகே நாளைக்கு நான் மதுரைக்கு போறேன்” என்றான் மோகன்.
இருவரும் படுக்க சென்றனர் மோகனுக்கோ தூக்கம் வரவில்லை நாளையிலிருந்து இப்படி இருக்கதே மிஸ் பண்ணுவோமே என்று நினைத்தான். அவள் தன் மேல் போட்டிருக்கும் கையை எடுத்து சத்தம் இல்லாமல் தன் இதழ்களை பதித்தான்.செல்லம்மா உன்னை எப்படியாவது சீக்கிரமா மதுரைக்கு கூட்டிட்டு போகணும் என் கூடவே வச்சுக்கணும் என்று நினைத்தான். செல்லம்மா ஐ லவ் யூ டா என்று திரும்பத் திரும்ப தன் இதழ்களை ஒற்றி எடுத்தான்.
இதெல்லாம் தெரியாமல் வினோதினி கும்பகர்ணனை போல் தூங்கிக் கொண்டிருந்தாள்.
இருவரும் காலையில் எழுந்தவுடன் மோகனுடைய வீட்டிற்கு சென்றார்கள்.அங்கிருந்து இருவரும் கிளம்பி மோகன் மதுரைக்கும் வினோதினியோ அவளுடைய பள்ளிக்கும் சென்றார்கள். அன்றைய தினம் ஜெயராணியே சமைத்து இருவருக்கும் கொடுத்து அனுப்பினார்கள். வினோதினி ஸ்கூலுக்கு சென்றவுடன் அங்கு அனைவரும் இவளை பற்றி தான் பேச்சு “என்ன வினோதினி இப்படி ஆயிருச்சு என்ன அதுக்குள்ளேயே ஸ்கூலுக்கு வந்துட்ட என்று கேட்டார்கள்” “இல்ல வீட்ல இருக்க ஒரு மாதிரி இருந்துச்சு அதனால தான் ஸ்கூலுக்கு வந்துட்டேன்” என்றாள் வினோதினி.
வினோதினியும் தன் வேலையில் மூழ்கினாள். மதியநேர இடைவெளியின் போது மோகன் போன் செய்தான் வினோதினியோ யாரோ புது நம்பரா இருக்கே என்று எடுத்து பேசலானால் அப்பொழுதுதான் அது மோகனின் நம்பர் என்று தெரிந்தது மோகன்” வினோதா சாப்டியா” என்று கேட்டான் “சாப்பிட்டேன் நீ என்று கேட்டு பிறகு திருத்தி நீங்க என்றாள்”. “ஸ்கூல்ல ஏதாவது சொன்னாங்களா “என்று கேட்டான் “இல்லையே யாருமே எதுவும் சொல்லலையே” என்று சொன்னாள். ஆனா அவளுக்கு தான் தெரியும் அருண் சார் என்பவன் என்ன மேடம் நிச்சயதார்த்தம் ஒருத்தரோட கல்யாண ஒருத்தரோட அப்படின்னு சொல்லி கேலி பண்ணது. வினோதினி இனிமேல் அருண் சார் கிட்ட பேச்ச அளவா வச்சுக்கணும் என்று நினைத்தாள்.
மோகனோ அங்கே நினைத்தான் சனி ஞாயிறு எப்படா வரும் என்று இருந்தது மோகன் ஊருக்கு சென்ற அடுத்த நாளே ஜெயராணியோ சமைக்காமல் இருந்தார். வினோதினியோ எட்டு மணிக்கு கீழே இறங்கி வந்தாள். மதிய சமையல் செய்யாமல் இருந்தது எப்படி கேட்பது என்று நினைத்துக் கொண்டே இருந்தால் ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து “அத்தை இன்னும் மதிய சாப்பாடு செய்யலையா” என்றாள். ” உனக்கு மதிய சாப்பாடு வேணும்னா நீந்தாமா வந்து செய்யணும் நேத்து என் பையன்இருந்தான் அவன் வேலைக்கு போறானே என்று சமைச்சு வச்சேன் நீ இறங்கி வந்து உனக்கு வேணுங்கிறது சமைச்சுக்க நான் சூடா தான் வடிப்பேன் என் புருஷனுக்கு” என்றார்.
காலை சாப்பாடு அளவாக இருந்தது அதில் இரண்டு இட்லிகளை டிபன் பாக்ஸில் எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். அடுத்த நாள் காலையிலிருந்து அவள் சீக்கிரமாக சமைக்க ஆரம்பித்தால், மதியத்திற்கும் சேர்த்து சமைத்து வைத்துவிட்டு சாதம் மட்டும் அத்தை வச்சு கட்டும் என்று சொல்லி மத்த அனைத்தையும் நிறையவே பண்ணி வைத்து விட்டாள். இப்படியாக நாட்கள் கழிந்து சனி ஞாயிறு வந்தது. அப்பொழுதுதான் ராஜன் மோகனுக்குபோன் பண்ணும்போது கல்யாணத்துக்கு நிறைய நாள் லீவு எடுத்ததனால அவனுக்கு லீவு கிடைக்கவில்லை என்று தெரிந்தது சனி ஞாயிறு வேலை அதிகமாக இருந்தது அதனால் அவன் வரவில்லை. அடுத்து இரண்டு வாரங்கள் கழித்து மோகன் சனி ஞாயிறு லீவில் வந்தான்.மோகன் வந்ததும் ஜெயராணி முகமே மாறிவிட்டது திரும்ப பழையபடி எந்திரித்து அவர்களே சமைக்க ஆரம்பித்தார்கள். வினோதினிக்கு ஒன்றும் புரியவில்லை எப்பொழுதும் நம்ம தாண்டா செய்வோம் இன்னைக்கு என்ன திடீர்னு இவங்களே எந்திரிச்சு செய்றாங்க எல்லா வேலையும் என்று நினைத்தாள். அன்று இரவு மோகன் தன் மனைவியை தூங்கும் பொழுது ரசிக்க ஆரம்பித்தான்.” என் செல்லமா எப்படி உன்னை விட்டுட்டு இருக்க கஷ்டமா இருக்குதுடா “என்று சொல்லி தன் இதழ்களை ஒற்றினான் அவள் பாதத்தில். வினோதினி தூக்கத்தில் கை கால்களை போட அதையும் சுகமாகவே அனுபவித்தான். அடுத்து ஒரு வாரம் ஆகுதோ, ரெண்டு வாரம் ஆகுதோ என்று மனதில் நினைத்துக் கொண்டான். இவ்வாராக நாட்கள் கழிந்தது .
இரண்டு மாதங்களுக்குப் பிறகு முகிலன் இடமிருந்து போன் வந்தது அம்மா நிஷா கர்ப்பமா இருக்கா நான் அப்பாவாக போறேன் என்று சொல்லி ஜெயராணிக்கு போன் வந்தது. “அப்படியா ரொம்ப சந்தோஷம்பா நீ எப்பப்பா இங்க வர நீ கண்ணுக்குள்ள நிக்கிறப்ப உன்னைய பாக்கணும் போல இருக்கு” என்றார். “அப்பாக்கு உன் மேல உள்ள கோபம் குறைந்ததும் உன்னைய நான் வர சொல்றேன் அப்ப வந்திருப்பா என்றார். இந்த விஷயத்தை சொன்னா அப்பாக்கு கண்டிப்பா கோபம் குறைஞ்சிடும்” என்றார்.
ராஜன் வந்ததும்” என்னங்க உங்களுக்கு ஒன்னு தெரியுமா முகிலன் வந்து அப்பாவாக போறாங்க” என்றார். ராஜனோ கோபத்தில் “அவன் பெயரை சொல்லாத அவன் அப்பாவான எனக்கென்ன” என்றார்.”என்னங்க நீங்க தாத்தாவாக போறீங்க இப்ப போய் பிடிவாதம் பிடிச்சுக்கிட்டு இருக்கீங்களே அவனா பார்த்துக்கிட்டாலும் ஏதோ நல்லது நடந்திருக்கு நம்ம பார்த்து வச்சு கல்யாணம் பண்ணது இந்த சும்மா தான் இருக்கு என்றார் வினோதினியை சுட்டிக்காட்டி.” இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வினோதினியின் கண்ணில் அடக்க முடியாமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. ராஜனோ “வினோதாவா அப்படி சொல்லாத” என்றார்.”மோகன் பாவம் என்னபண்ணுவான் சனி ஞாயிறு தான் வாரான் அப்போதும் வினோதக்கு ஸ்கூல் இருக்கு அவங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் ஃப்ரீயா பேசிக்கிட்டது கூட இல்ல அப்படி இருக்கும்போது உடனே எதிர்பார்க்கிறது நம்ம தப்பு தான்” என்றார் ஆமா கடந்த ஒரு மாதமாக வினோதா வீட்டிலே இருக்கவில்லை சனி ஞாயிறு பள்ளியில் ஆண்டு விழா ப்ராக்டீஸ் நடைபெறுவதாக கூறிவிட்டு சென்று கொண்டு இருந்தாள்.
வினோதா மாடிக்கு வந்து அடக்க முடியாமல் தன் ரூமில் அழுது கொண்டிருந்தாள். ஜெயராணி பேசியது செய்றது எல்லாம் யாரு கிட்ட சொல்லி அழுது புலம்புவது யாருகிட்ட ஆறுதல் தேடுவது என்று கூட அவளுக்கு தெரியவில்லை. அம்மாவிடம் சொன்னால் கஷ்டப்படுவார்கள் என்று நினைத்தாள். மோகனோ சரிவர பேச மாட்டேங்கிறான் எப்படி நான் சொல்றது யாருகிட்ட என்னோட கஷ்டத்தை சொல்றது என்று அழுது புலம்பினாள்.
ஜெயராணி வினோதா தலை குளித்திருக்கும்போதெல்லாம் விளக்கேற்ற முடியாமல் இருக்கும் பொழுது அதுக்கு குலைமா குளிச்சிட்டகேட்டுக் கொண்டே இருந்து முகத்தை திருப்பிக் கொண்டிருந்தார். வினோதா பேசினாலும் பதிலுக்கு பேசுவதில்லை இப்படியாக நாட்கள் கழிந்தது. வீட்டிலேயே லத்திகா தான் வினோதினியிடம் கொஞ்சம் பேசுவாள் அவளும் காலேஜ் படிப்பதால் சிறிது நேரம் மட்டும் பேசிக்கொண்டு இருந்து விட்டு படிக்க சென்று விடுவாள்.
வினோதினியோ வீட்டிற்கு வருவதற்கு பதில் ஸ்கூல்லயே இருந்து விடலாம் போல என்று நினைக்க ஆரம்பித்தாள். இப்படி இருக்கும் பொழுது தான் ராஜன் மதுரைக்கே சென்று மோகனின் மேலாளரிடம் பேச ஆரம்பித்தார். அவனுக்கு உள்ளூரிலேயே டிரான்ஸ்பர் வாங்கி கொடுத்தார். மோகனும் சந்தோசமாக தன் வீட்டிலிருந்து இனி ஒவ்வொரு நாளும் வினோதினியிடம் பேசலாம் பழகலாம் அவளோடு இருக்கும் ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாக கழிக்க வேண்டும் என்று நினைத்தான்.
மோகனும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். ஒவ்வொரு நாளும் விடியலின் போது வினோதினியை பார்த்தே கண் விழித்தான். இரண்டு பேரும் பேசுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான் இனிமேல் தினமும் காலையில் தான் பைக்கில் கொண்டு போய் ஸ்கூலில் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுத்தான். வினோதினியோ சனி ஞாயிறுகளில் கொஞ்சம் படுத்திருப்பாள் மற்ற நாள் பள்ளி நாட்களில் வேகமாக எந்திரிச்சு சமைக்க ஆரம்பிப்பாள் மோகன் வந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது அன்று திங்கட்கிழமை என்பதால் அதிகாலையில் வினோதினி எழுந்திருத்தாள் எந்திரிக்கும் பொழுது தான்பார்த்தால் தன் கை கால்கள் அவன் மேல் கிடந்தது அவன் நன்கு உறங்கிக் கொண்டிருந்தான். கடவுளே நான் என்ன பண்ணினேன் இப்படித்தான் டெய்லியும் படுத்ததேன என்னை பற்றி அவன் என்ன நினைச்சிருப்பான் கண்டிப்பா என்னைதப்பா நினைச்சிருப்பான் என்று தனக்குள் சொல்லிக்கொண்டு வேகமாக எழுந்தால் குளித்துவிட்டு கீழே இறங்கி சமைக்க சென்றாள். மோகன் எந்திருச்சு வினோதினி காணோமே என்று பார்த்தான் பின்பு சமயக்கட்டில் சத்தம் கேட்டதால் கீழே இறங்கி வந்தான்.எப்பவும் நம்ம எந்திரிக்கறதுக்கு முன்னாடி எந்திரிக்க மாட்டாளே இன்னைக்கு எந்திரிச்சிட்டானா அப்ப நம்ம மேல கை கால் போடுவது தெரிஞ்சிருக்கும் இன்னைக்கு என்ன பண்ண காத்து இருக்கிறாளோ என்று நினைத்தான்.
மோகன் பயந்தது போலவே அன்று முகத்தை பார்த்து பேசவில்லை அன்று பள்ளிக்கு வினோதினியை மோகனே வண்டியில் கூட்டி சென்றான். எல்லாம் ராஜனுடைய ஏற்பாடு அவர்தான் “ஏம்மா வினோதினி தம்பி போற வழியில தானே உன்னோட ஸ்கூலும் அதனால அங்க போய் இறங்கிகம்மா ” என்று கூறினார். அதனால் வேறு வழி இல்லாமல் வினோதினியும் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள். மோகன் பள்ளியில் கொண்டு போய் வினோதினியை இறக்கி விடும் பொழுது அங்கு அருண் சார் வெளியில் வண்டி நிப்பாட்டிக் கொண்டிருந்தார். அவர் வினோதினியை பார்த்து குட்மார்னிங் மிஸ் என்றான் வினோதினியும் பதிலுக்கு குட்மார்னிங் சார் இருவரும் ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கு சென்றார்கள் அருண் சாரிடம் வினோதினி ஏதோ சிரித்து பேசிக்கொண்டு செல்வது போல் தெரிந்தது அதனைப் பார்த்த மோகன் என் கூட பேசுவதற்கு மட்டும் தான் இவளுக்கு கசக்கும் மத்தபடி மத்த எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசுறா அது மாதிரி இவன் இருக்கானே நீ என் பொண்டாட்டி என்னதான் நினைச்சுகிட்டு இருக்கானு தெரியல கல்யாணம் ஆயிடுச்சு நினைச்சனா இல்ல நினைக்கலையான்னு தெரியல எப்ப பார்த்தாலும் என் பொண்டாட்டியோட தான் சிரிச்சு பேசுகிறான் என்று புகைந்தான் மோகன்.