“உன்னுள் ரோஜாவை நான்”
அத்தியாயம் -6
மோகனும் வினோதினியும் பைக்கில் வந்து கொண்டிருக்கும்போது எதிரே ஒரு நாய் குறுக்கே வந்தது அதனால் மோகன் சடன் பிரேக் போட்டு நிப்பாட்டினான். அதில், வினோதினி பயந்து அவனை கட்டிக் கொண்டாள்.மோகன் வினோதினியை என்ன பண்ற கையை எடு என்று தட்டி விட்டான் அப்பொழுதுதான் வினோதினிக்கு தான் செய்த தவறு புரிந்தது பயத்துல இவனை போய் கட்டிப்பிடித்தேனா  என்று நினைத்துக் கொண்டாள்.

மோகனுக்கு உடம்பு கூச ஆரம்பித்தது இவள் என்ன திடீர்னு இப்படி பண்ணிட்டா என்று நினைத்தான். வினோதினி நீ ஏன்பிரேக் போட்ட என்று கேட்டாள். நாய் குருக்கால வந்துருச்சு என்றான்.

சாரி என்று முணுமுணுத்தாள் வினோதினி. ஒருவழியாக இரண்டு பேரும் வீட்டிற்கு வந்தனர்.  லட்சுமி வந்ததும் இரண்டு பேருக்கும் ஆழம் கரைத்து சுற்றினார்கள்.
வினோதினிக்கு இன்னும்மனசே ஆறவில்லை .போயும் போயும் இவன போய் கட்டிப்பிடித்தேனா என்னை, என்ன நினைச்சு இருப்பான் என்று நினைத்து  மருகி கொண்டு இருந்தாள்.

அப்பதான் நினைத்தாள் பெண்கள்னாலே இவனுக்கு பிடிக்காது ஆனா அவங்க அம்மாவும் தங்கச்சியோடையும் நல்லா தானே பேசுறான் என்னைய பாத்தா எப்படி தெரியுது.  இத விடக்கூடாது கேட்டே ஆகணும் தனக்கு வரப்போற புருஷன் எப்படியெல்லாம் இருக்கணும்னு கனவு கண்டேன். ஆனா ,இப்படி வந்து இருக்காரு  தெரியாமல் தொட்டது கூட இப்படி எரிந்து விழுகிறவனோட நான் எப்படி வாழ்வது கடவுளே  நீதான் என்னை காப்பாத்தணும் இங்கேயோ மஞ்சள் கயிறு மேஜிக் என்பார்களே அது மாதிரி மோகனுக்கு வினோதினி மேல் பிரியம் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது .

இரவு சாப்பிட்டு முடித்ததும் மோகன் வினோதினி  அறைக்குச் சென்றான்.
மோகன் வினோதினனிடம் வந்து நான் கீழே படுத்து கொள்கிறேன் என்றான். வினோதினியோ வேணா வேணா நான் அங்கே உங்கள் ரூமில் மேலே தானே படுத்தேன் அதனால் நீங்களும் மேலே படுத்துக்குங்க எனக்கு ஒரு பிரச்சனை இல்லை என்றால் மோகனோ உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஆனா எனக்கு தான் பிரச்சனை என்றான்.

உங்களுக்கு என்ன பிரச்சனை என்றால் வினோதினி ஏன் நானும் உங்க அம்மா மாதிரி தங்கச்சி மாதிரி வேணா வேணா அப்படி எல்லாம் சொல்லிடாத என்று மோகன்  மனதில் நினைத்துக் கொண்டான். வினோதினியோ பெண் தானே தெரியாமல் கைபட்டதுக்கு அந்த கத்து பயத்துல   தானே புடிச்சேன் வேணும்னே புடிச்சேன். மோகனோவிடாது நான் கீழே படுத்துகிறேன் என்றான் சரி என்னமும் பண்ணுங்க என்று தலையணையையும் பெட்ஷீட்டையும் கீழே எடுத்துப் போட்டால், அந்த நேரம் பார்த்து கதவு தட்டுற சத்தம் கேட்டது இந்நேரத்தில் யாராக இருக்கும் என்று பார்த்தார்கள். வந்தது, வினோதினியின் அம்மா லட்சுமி தான் வினோதினயிடம் பாப்பா நாளைக்கு காலைல சீக்கிரம் எந்திரிங்க நம்ம எல்லாரும் ஊருக்கு போகணும் கோவில்பட்டிக்கு  உனக்கு கல்யாணம் ஆச்சுன்னா செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு வரேன் வேண்டி இருந்தேன். அவருடைய பார்வை ரூமில் படுக்கைகீழே விரித்திருப்பதில் சென்றது. வினோதினியும் பார்த்துவிட்டு அம்மா நேத்து தானம்மா கல்யாணம் ஆயிருக்கு நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுக்கணும் இல்ல அதனால தான் என்றாள்.

லட்சுமி மகளை தனியாக கூப்பிட்டு அம்மா நம்மளுக்கு நினைச்சதுகிடைக்கலைன்னா கிடைச்சத நல்லா வச்சுக்கிட்டு சந்தோஷமா வாழனும் அதை புரிஞ்சுக்க,மோகன் வந்து நல்ல பையன் எனக்கு தெரிஞ்சு பொண்ணுங்களை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டான் அதான் என்னோட பிரச்சனையே என்று மனதில் நினைத்துக் கொண்டாள் வினோதினி. பெண்களுக்கு இது எழுதப்பட்ட விதி அம்மா என்றார் லட்சுமி மெல்ல மெல்ல புரிஞ்சுகிட்டு மோகனுக்கு ஏத்த மாதிரி நடந்துக்க மா என்றார்.

வினோதினி ரூமிற்கு வந்த பின்பு மோகனிடம் ஏன் பொண்ணுங்கள பார்த்தாலே உங்களுக்கு புடிக்கல என்று கேட்டால் மோகனும் பதில் சொன்னான் அது என்னமோ தெரியல எனக்கு சின்ன வயசுல இருந்தே   அம்மாவும் தங்கச்சியும் தான் உலகம் வேற எந்த பொண்ணுகிட்டயும் பேசி எனக்கு பழக்கம் இல்ல.

எங்க வீட்ல இருக்கிற வரைக்கும் கொஞ்சம் நம்ம அன்யூனியம்மா இருக்கிற மாதிரி காமிச்சுக்கணும். அதுக்கு எனக்கு உன்னோட ஹெல்ப் தேவை என்றாள் வினோதினி. சரி அதே மாதிரி எங்க வீட்ல இருக்கும் போதும் நீ ஹெல்ப் பண்ணனும் என்றான் மோகன். ஓகே டீல் நம்ம ரெண்டு பேரும் இன்னையிலிருந்து  பிரண்ட்ஸ் ஓகேவா நம்மளுக்கு புடிச்சிருந்தா வாழ்வோம் இல்லைன்னா டிவோர்ஸ் பண்ணிக்கலாம் ஓகேவா, உனக்கு சரினா கையை கொடு என்றாள்.

மோகனோ மனதில் எனக்கு  வாழ்க்கையில ஒருவாட்டி தான் எனக்கு கல்யாணம் அது என்ன பொறுத்த வரைக்கும் நடந்துச்சு. நீ தான் என் பொண்டாட்டி. இதை யாராலையும் மாற்ற முடியாது  என்று நினைத்துக் கொண்டான்.

மோகனும் தன் கையை கொடுத்து ஓகே  டீல் என்றான். சரி வா வந்து பெட்ல படு வேற யாராவது பார்த்தாங்கன்னா அதுக்கும் என்னை திட்டுவாங்க என்றாள்.
அடக்கடவுளே இவ பண்றத பாத்தா இன்னைக்கு நைட்டும் எனக்கு தூக்கம் வராது போலையே என்று நினைத்துக் கொண்டு சந்தோசமாகவே பெட்டில் படுத்தான்.

அவன் எதிர்பார்த்தது போலவே அன்றைய நைட்டும் அவள் கை கால்களை  தலையணையில் போடுவது போல் மோகன் மேல் போட்டுக் கொண்டாள். எங்கே அசைந்தால் எந்திரிச்சு விடுவாளோ என்று பயந்து அசையாமல் படுத்து , இன்று நடந்துவற்றை யோசித்துப் பார்த்தான் . முகிலனை விரும்பி இருந்தால் போல அவ மனசு மாறுற வரைக்கும் கொஞ்சம் காத்துகிட்டு இருப்போம் என்று நினைத்தான்  பிறகு கண்ணுறங்கினான்.

காலையில் மோகன் சீக்கிரமாக கண் விழித்தான் அவள் எந்திரிக்கும் முன்பே எந்திரித்து தலையணையை தான் இருக்கும் இடத்தில் வைத்துவிட்டு நெட்டி முருச்சான்அசையாமல் படுத்து கிடந்தது அவனுக்கு கை கால்களில் வலி ஏற்பட்டது.
ஹீட்டரை போட்டு சுடுதண்ணியில் குளித்தான். பின்பு அவளை எழுப்பு முயற்சித்தான் ஆகா நேத்தே சொன்னாலே என்னைய ஏய் ஏய் கூப்பிடாதே என்று பின்ன எப்படி கூப்பிடுறது வினோ  கூப்பிடலாமா இல்ல வீட்ல எல்லாரும் அதே மாதிரி தான் கூப்பிடுறாங்க பின்ன எப்படி கூப்பிடுறது வினோதினி   பெயரை பலமுறை சொல்லிப் பார்த்தான் கடைசியாக இதுவரைக்கும் யாரு கூப்பிடாத பேரா இருக்கணும் என்ன வைக்கிறது என்று யோசித்தான் வினி ஓகே கூப்பிடுவோம். வினி,வினி என்று அழைத்தான்.  வினோவோ யார் நம்மளை இவ்வளவு சாப்டா கூப்பிடுறது என்று மெதுவாக கண் திறந்தாள்.

கூப்பிடுவது மோகன் என்று தெரிந்ததும் என்னடா இது  யாருமே இப்படி நம்மளை கூப்பிட்டது இல்லையே ஒரே நாள்ல இவ்வளவு சேஞ்ச் சரி இப்படியாவது கூப்பிடுறாங்களே பரவால்ல என்று நினைத்துக் கொண்டு என்ன மோகன் என்று கேட்டாள். நேராச்சு எந்திரி எல்லாரும் நம்மள கீழ தேடுவாங்க  சீக்கிரம் கோயிலுக்கு போகணும் இல்ல ,சரி நான் போய் குளிச்சிட்டு வரேன் என்று கிளம்பினாள்.

அடுத்து அனைவரும் கோயிலுக்கு கிளம்பினார்கள் அங்கு போய் செண்பகவல்லி அம்மன் முன் நின்றாள் செண்பகவல்லி அம்மன் மடிசார் கட்டி அழகாக வீற்றிருந்தாள்  நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பது போல்சிரித்துக் கொண்டிருந்தாள்.அதைக் காண கண் கோடி வேண்டும் என்று நினைத்து தன் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்  வினோதினி. லட்சுமி வீரபாண்டி நரேன் யாழினி எல்லோரும் கோயிலுக்கு சென்று இருந்தார்கள். அங்கு அர்ச்சகர் முன் சுவாமி புதுசா கல்யாணம் ஆனவங்க இவங்க பேருக்கு அர்ச்சனை பண்ணிடுங்க என்றார்கள். அர்ச்சனை செய்துவிட்டு  அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு மாலைகளைக் கொண்டு வந்து மாலை மாற்ற சொன்னார் அர்ச்சகர்.

நரேனும் யாழினியும் அக்கா மாமா இங்க பாருங்கள் என்று தன் செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
மோகனோ மனதில் அம்மா நாங்கள் ஒருமித்த தம்பதியராக வாழவேண்டும் என்று நினைத்துக் கொண்டு மாலையை அணிவித்தான். வினோதினியோ அம்மா நீ தான் காப்பாத்தணும் என்று மாலையை அணிவித்தாள்.

மோகன் ,நரேன், யாழினி ,வினோதினி, நால்வரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். கோயிலில் அமர்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த மோகன் நம்மிடமும் இப்படி பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.

எல்லோரும் அங்கே ஒரு ஹோட்டலில் சாப்பிட செல்லும் பொழுது காரை  பார்க் பண்ணிவிட்டு நடந்து வரும் பொழுது மோகனை இடிப்பது போல் ஒரு கார் வந்தது, அதனைப் பார்த்து பயந்து வினோதினியோ சற்றென்று மோகனின் கையைப் பிடித்து இழுத்தாள்.

பரவால்ல புருஷன் மேல அக்கறையா தான் இருக்கிற என்றான் நீங்கள் இல்ல யாரா இருந்தாலும் நான் அப்படித்தான் காப்பாத்திருப்பேன் என்றாள். எல்லோரும் சாப்பிடாமல்  இருவருக்காகவும் காத்துக் கொண்டு இருந்தார்கள் இருவரும் பேசிக்கொண்டு நடந்து வந்திருந்தார்கள் அவள் கை பிடித்ததை விடவே இல்லை.

சரிப்பா உங்களுக்கு பிடிச்சது ஆர்டர் பண்ணிக்கோங்க நாங்கலாம் சொல்லிட்டோம் என்று சொன்னார்கள் அதற்கு இருவரும் ஒரே நேரத்தில் வெஜ் ரைஸ் என்றார்கள். இருவரும் கைகோர்த்து வந்த பொழுது லட்சுமியின் முகத்தில் அவ்வளவு ஒரு சந்தோஷம் . தன்மகள் வாழ்க்கையில் ஜெயித்து விடுவாள் என்று அந்த தாய்க்கு எண்ணம் ஏற்பட்டது.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நரேன் தான் எடுத்த போட்டோக்களை மோகனிடம் காண்பித்துக் கொண்டிருந்தான் அதைப் பார்க்க அவ்வளவு பாந்தமாக இருந்தது. அதனை தன் போனிற்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டிருந்தான். மனதில் முகிலனுக்கோ நன்றி சொல்லிக் கொண்டிருந்தான்.எனக்காக பண்ண உதவிக்கு நன்றி அண்ணா என்ற மனசார சொல்லிக் கொண்டிருந்தான்.

தன் அப்பா  உடன் வினோதினி வீட்டிற்கு சென்றிருக்கும் பொழுது அவளை காலேஜ் முடிச்சதும் அப்பொழுதுதான் பார்த்தான். அதற்குப் பிறகு அவனுடைய எண்ணங்களை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை அவள் ஒரு இளவரசியாக மனதில் தோன்றினாள்.    அன்றிலிருந்து அவள் ஞாபகமாக இருந்தது இது எதனால் என்று யோசித்துப் பார்க்கும்பொழுது தான் தெரிந்தது அவன் சின்ன வயசுல இருந்து அவ மட்டுமே மனசுல இருக்கா!இந்த கல்யாணத்தை ,எப்படி நிப்பாட்டுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான். அப்பொழுதுதான் முகிலன் நிஷாவை விரும்புவது தெரிந்தது.உடனே அண்ணனிடம் நீ இப்போது சொல்லிராத அப்பா ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாரு அதனால   கல்யாண நாள் அன்னைக்கு  போ பெங்களூருக்கு என்று சொன்னான்  உனக்கும் நல்லது எனக்கும் நல்லது என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

நைட்டோட நைட்டாக பேக் பண்ணி அனுப்பி விட்டான்.
இதையெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தேன் அண்ணன் மட்டும் அப்படி ஒரு உதவி செய்யாட்டி நான் என்னவாயிருப்பேன் வினோதினி எனக்கு அண்ணி அதைக் கேட்கவே காது கூசுது நல்லவேளை அப்படி எதுவும் நடக்கல. ஆனா அவன் கல்யாணம் நடந்துரும்னு எதிர்பார்க்கல எப்படியும் ஒத்துக்க மாட்டாள் தெரியும் இருந்தாலும் அவ  குடும்பத்தை எண்ணி ஒத்துக்கு வாங்குற நம்பிக்கைதான். ஓகே ன்னு சொன்னா சந்தேகம் வந்துரும்  என்று பர்ஸ்ட் இவனும் ஒத்துக்காத மாதிரி அவங்க அப்பாவிடம் நடிச்சான் அதுக்கப்புறம் ஒத்துக்கிட்டு தாலி கட்டினான் அவளுக்கு உடனே சந்தேகம் வந்துரும் என்பதனால் தானும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லாதது போல் நடித்தான்.

சின்ன வயதில்  காலில் கட்டு போட்டு அழகாக பாவாடையை பிடித்துக் கொண்டு நடந்த வினோதினி கண்ணில் தோன்றினாள்.எவ்வளவு அழகு சோ க்யூட் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
அடுத்ததாக பள்ளி பருவத்தில் இருவரும் சண்டை போட்டது ஞாபகம் வந்தது.அப்ப ஒழுங்கா புரிஞ்சுக்கல இனிமேல் அவளை ஒழுங்கா புரிஞ்சுகிட்டு நடந்துக்கிறனும்  என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
அடுத்ததாக தன் அண்ணன் என்ன ஆனான் என்று போனிலிருந்து ட்ரை பண்ணினால் முகிலனோ போலீஸ் ஸ்டேஷனில் இருந்தான் அவர்கள் வீட்டுக்கு முன்பாகவே வந்து  சண்டை போட்டு நிஷாவை இழுத்து சென்றார்கள் .  அதனால் முகிலன் வேறு வழியில்லாமல் போலீஸ்க்கு கால் செய்தான். போலீஸ் வந்து இருவரையும் விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார்கள். நிஷாவும் முகிலனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி கல்யாணம் பண்ணிட்டோம் சார். என்று போலீஸ் ஸ்டேஷனில் கூறினார்கள். இவங்க ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணுனதுனால எங்கள பிரிக்க பாக்குறாங்க என்றார்கள்.

முகிலன் உடைய மாமனார் நிஷாவை என்னோட அனுப்பிடுங்க என்று வாதாடி கொண்டு இருந்தார் போலீஸ்காரர் அவங்க சட்டப்படி மேஜர் அவர்களை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறினார்கள் இனி அவர்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை அவர்களை தொந்தரவு பண்ணக்கூடாது என்றும் கூறினார்கள்.

        நிஷா உடைய அப்பா ஒன்றும் கூற முடியாமல் அங்கிருந்து தன் ஆட்களை கூட்டிக்கொண்டு சென்று விட்டார். முகிலனோ இங்கே எல்லோரும் safe என்று மெசேஜ் அனுப்பினான்.

        அதனைப் பார்த்ததும் தான் உயிர் வந்தது மோகனுக்கு. எங்கே தன்னால் அண்ணன் மாட்டிக்கொள்வானோ என்று பயந்து போயிருந்தான். இப்பொழுதோ ரிலாக்ஸாக ஃபீல் பண்ணினான்.

            வினோதினிக்கு இதெல்லாம் தெரிந்தால் என்ன ஆகும் என்று யோசிக்கவே பயமாக இருந்தது அவனுக்கு.

இனி…