“உன்னுள் ரோஜாவாய் நான்”

அத்தியாயம்-17

                 வினோதினியின் குடும்பம் மொத்தமும் சந்தோஷத்தில் திகழ்ந்தனர்.

மாப்பிள்ளையும் வந்து விட்டார்  இனி வினோவிற்கு ஒரு பிரச்சனையும் இருக்காது என்று நினைத்து சந்தோஷத்தில் இருந்தனர். லட்சுமி தான் முதலில் கேட்டார் எப்படி மாப்பிள்ளை ஹாஸ்பிடலுக்கு வந்தீங்க என்றார். அதற்கு மோகனோ முதலில் வீட்டுக்கு தான் சென்றேன்அத்தை.வீட்டில் உள்ள வேலை ஆட்கள் தான் சொன்னார்கள் என்றான். பிறகு ஒவ்வொருத்தரும் குழந்தையை தூக்கி கொஞ்ச  ஆரம்பித்தனர். குழந்தை வெளிர் நிறத்தில் அம்மா வினோவை போலவும் முகச்சாடையில் தன் அப்பா மோகனைப் போலவும் இருந்தது.

               ராஜனும் தன் பேர பிள்ளையை கையில் வாங்கி கொஞ்சினார். அப்பொழுது மோகன் அப்பா இந்த நேரத்தில் கூட அம்மா வல்லையா என்று கேட்டான். அதற்கு ராஜனும் இல்லப்பா இன்னும் குழந்தை பிறந்தது தெரியாது நீ வரேன்னு ஒரு வார்த்தை சொல்லலையே, அம்மாவுக்கு தெரியுமா என்றார். அதற்கு மோகனோஅம்மாவுக்கு ஏன் அப்பா சொல்லணும் என் பொண்டாட்டியை எந்த தப்பும் பண்ணாம வீட்டை விட்டு அனுப்புவாங்க அதற்குப் பிறகு எத்தனை வாட்டி கெஞ்சினேன் வீட்டிற்கு கூட்டிட்டு வாங்கன்னு அப்படி என்ன வினோ பண்ணுனா இதோ இப்ப கூட அவங்க என் குழந்தையை பார்க்க வரல நீங்க ஹாஸ்பிடலுக்கு வந்தது தெரியுமா தெரியாதா என்று கேட்டான் அதற்கு ராஜனும் தெரியும்பா என்றார்.

              என் பிள்ளை என்ன செஞ்சுச்சு அவங்கள இனிமே நான் அந்த வீட்டிற்கு வர மாட்டேன். நாங்க தனியா இருந்துக்குறோம். ஏதோ இன்னைக்கு  திருந்திடுவாங்க நாளைக்கு திருந்திடுவாங்க. நாம  வினோவை விரும்பியதை சொல்லாமல் கொள்ளாமல் இருந்தது தான் தப்பு நானும் பேசாமல் இருந்தேன். அவங்களால என் பொண்டாட்டியோட பிரசவ நேரத்தில் கூட அவளோட இருக்க முடியாம குழந்தை வயித்துல இருக்கும்போது அவளை பாத்துக்க முடியாம எதுக்கு எடுத்தாலும் அம்மா திட்டுவாங்க அம்மா என்ன நினைப்பாங்களோ என்று நான் மட்டும் பயந்து வினோவும் பயந்து இருக்கிறதுக்கு பதிலா நாங்க தனியாஇருந்துக்கிறோம் என்று சொல்லிவிட்டான்.

               ராஜனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தான் ஹாஸ்பிடல் கிளம்பியது ஜெயராணிக்கு தெரியும் ஆனால் குழந்தை பிறந்தது தெரிய வாய்ப்பில்லை. மோகனோஇப்படி சொல்கிறான் என்று மனதில் நினைத்துக் கொண்டார். இங்கே வினோதினியோ மயக்கம் தெளிந்து எழுந்தாள். வினோதினிக்கு மோகன் வந்தது தெரியாது. எல்லோரும் ஒவ்வொருத்தராக பார்த்து விட்டு சென்றனர். மோகன் கடைசியாக தான் வந்தான். வினோதினி தான் பார்ப்பது கனவா நினைவா என்று தன்னைக் கிள்ளி பார்த்தாள். நிஜம்தான் மோகன் என்று பக்கத்தில் வந்ததும் பாய்ந்தாள்.

             மோகனோ “பார்த்துமா ஏன்டா இப்படி நான் உன்கிட்ட தானே வரேன்” என்று கூறினான். வினோதினியோ “ஆமா எப்ப வந்தீங்க நான் சொல்றத கேட்காம என்னை விட்டுவிட்டு ஊருக்கு போனீங்களே அங்கே போயும் ஒரு போன் கூட பண்ணல நான்   உங்களோட  கோவமா இருக்கேன்” என்று மூஞ்சியை திருப்பிக் கொண்டாள்.

          அதற்கு மோகன், “என் வினிக் குட்டின வினிக் குட்டி தான் எப்பவும் என் செல்லமா நீ தான் என்று கன்னத்தைப் பிடித்து முத்தமிட்டான்”. வினி மூஞ்சியை திருப்பிக் கொண்டாள். மோகன் வினோவிடம் “ப்ளீஸ் குட்டி இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிருந்தா நல்லா இல்ல திரும்பி பாருடா எங்க உன் கிட்ட பேசினால் நான் திரும்பி வந்து விடுவேனோ என்று பயந்தேன் ஆனால் நீ பேசாமலே என்னை வர வச்சுட்ட” என்றான்.

சரி மன்னிச்சிட்டேன் அதுக்கு பதிலா நீங்க 100  கிஸ் தரணும். மோகனும் அது எனக்கு கசக்குமா என்ன எப்ப வேணாலும் ஐயா ரெடி என்றான். வெட்கத்தில் வினோதினிக்கோ கன்னங்கள் சிவந்தது.

           எங்க நம்ம குழந்தையை பார்த்தீர்களா என்று கேட்டாள். அதற்கு மோகனோ பார்த்தேனே நம் குழந்தை கலர்ல உன்னை போலவும், முகச்சாயல்ல என்னை போலவும் இருக்குன்னு எல்லோரும் சொன்னாங்க. ஆனா எனக்கு அது பத்தாது உன்னை மாதிரியே குட்டி பாப்பா வேணும் இந்த குட்டி என்ன மாதிரி இருக்கான் என்றான். அதற்கு வினோதினியோ போங்க என்று சினுங்கினாள். ஆமா அத்தை எங்க என்று கேட்டாள்.அதற்கு மோகனோ” அம்மா இன்னும் வரல” என்றான். “அத்தை இன்னும் என் மேல கோவமா இருக்காங்களா முதலில் குழந்தை இல்லைன்னு சண்டை போட்டாங்க இப்ப என்ன” என்றாள். வேற என்ன நீயும் நானும் படிக்கிற காலத்துல இருந்தே காதலிக்கிறோமா நம்ம காதலிச்சது யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்று புலம்பினாங்க அவங்க ஒவ்வொரு நாளும் உன்னையும் என்னையும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருந்தாங்க அதனாலதான் கம்பெனியிலிருந்து வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு வந்ததும் நானும் போயிட்டேன் இங்கே இருந்து உன்னையும் பார்க்க முடியாமல் ஒவ்வொரு நாளும் அவங்க பண்றத பாக்க முடியாம தான் ஓடினேன். இதுக்கு மேல உன்னையும் நம்ம குழந்தையும் பார்க்காம இருக்க முடியாது.

          என்ன ஆனாலும் பரவாயில்லை என்று வந்துட்டேன் என்றான் மோகன் இனிமே நான் அம்மா இருக்கிற வீட்டிற்கு போக மாட்டேன். நாம தனியா இருக்க போறோம் நம்மளுக்குன்னு தனியா ஒரு வீடு. நீ நான் நம்ம குழந்தைன்னு வாழ போறோம் இப்போ உனக்கு சந்தோஷம் தானே என்றான். அதற்கு வினோதினியோ என்ன பேச்சு பேசுறீங்க நான் எப்பவும் கூட்டு குடும்பத்தில் இருந்தவ நான் எப்படி தனியா இருக்கணும் ஆசைப்படுவேன் அது மட்டுமல்ல அத்தை கிட்ட இருந்து உங்களை   பிரிச்சேன் என்கிற பேரு எனக்கு வர வேண்டாம். உங்க அம்மா மனசு மாறுற வரைக்கும் காத்துகிட்டு இருப்போம் என்றாள்.

               மோகனோ அது நடக்காத காரியம் நீ இப்படி சொல்ற ஆனா அவங்க உன்கிட்ட இருந்து என்னை பிரிக்க பார்க்கிறாங்க அது மட்டும் இல்ல பிறந்த நம்ம குழந்தையை கூட பார்க்க வல்ல என்று கூறினான். அதற்கு வினோதினியோ கண்டிப்பாக மனசு மாதிரி  நம்மளை அத்தை ஏத்துப்பாங்க இப்ப நம்ம தனியா போறோம்னா நாம மேல இன்னும் கோபம் அதிகமாகும். அதனால், வேணாங்க என்றாள். சரி அது அப்புறம் பாத்துக்குவோம் இப்ப நீ தூங்கு என்றான்.

                 மோகனுக்கு அவனது நண்பன்

சந்தோஷிடமிருந்து போன் வந்தது. அப்பொழுது மோகன் வந்துவிட்டேன்டா அதற்கு சந்தோஷ் என்னடா அதுக்குள்ள வந்துட்ட என்றான்.” சந்தோஷ் என் வினியை பிரிந்து இருக்க முடியல வாழ்றது ஒரு வாழ்க்கை அதுல என்னால வினியை பிரிந்து இருக்க முடியாது”. அப்புறம் சந்தோஷ் உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லவா எனக்கு பையன் பிறந்து இருக்கான். அவனுக்கு கூடிய சீக்கிரமே பெயர் வைக்கிற ஃபங்ஷனுக்கு உன்னை கூப்பிடுறேன் என்று போனை வைத்தான்.

             அன்று இரவு லட்சுமி ஹாஸ்பிடல் தங்கிக் கொள்கிறேன் என்பதற்கு மோகன் வேணாம்அத்தை நானே இருந்து பார்த்துக்கிறேன் என்று கூறினான். லட்சுமி குழந்தையை உங்களால பாத்துக்க முடியாது நான் இருந்து பார்த்துக்கிறேன் என்றார். ஆனால் மோகனோகேட்பதாக இல்லை கடைசியில் இருவரும் தங்குவதாக முடிவு செய்தனர்.

                மோகன் போய் இரவு சாப்பாட்டிற்கு கேன்டினில் வாங்கிக் கொண்டு வினோதினியின் ரூமுக்கு வந்தான் வினோதினி சட்டென்று அம்மா சேலை முட்டிக்காலுக்கு மேல் இருக்குமா இழுத்து விடுமா என்றாள். அதனைப் பார்த்து மோகன் சிரித்துக்கொண்டே இருந்தான். லட்சுமி சேலையை இழுத்து விட்டு மாப்பிள்ளையும் நீயும் சாப்பிடுங்க எனக்கு இப்ப பசிக்கல நான் அப்புறம் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று குழந்தையை  தூக்கிக்கொண்டு வெளியே சென்றார். அவர் போனதும் மோகனுக்கு இன்னும் வசதியாக போய்விட்டது. நன்றாக சிரித்துக்கொண்டு இருந்தான் அதற்கு “வினோதினி எதற்காக இப்படி சிரிக்கிறீங்க” என்றாள்.

           மோகனோ “உனக்கு முட்டிக்கால்ல ஒரு தழும்பு இருக்குது இல்ல அது எப்படி வந்துச்சுன்னு நெனச்சு சிரிச்சேன்” என்றான். வினோதினியோ “ஆமா அன்னைக்கே கேக்கணும் நெனச்சேன் அது எப்படி தெரியும் நான் தூங்கும் போது சேலை நழுவி இருக்கும் அதானே” என்றாள். அதற்கு மோகனோ” இல்ல அந்த காயம் எப்படி ஏற்பட்டுச்சுன்னு தெரியும் எதனால இவ்வளவு பெரிய தழும்பு வந்துச்சுன்னு தெரியும்” என்றான். அது எப்படி தெரியும் என்றாள். வினோதினி அப்பொழுது சின்ன வயசுல உங்க சித்தி கல்யாணத்துல நான் எங்க அண்ணன் மற்ற பிள்ளைகள் எல்லாம் விளையாடிக் கொண்டிருந்தோம் அப்பொழுது நான் உன்னை முதல்முறையாக பார்த்தேன். அப்படியே தேவதை மாதிரி உன்னோட புண்ணில் படாமல் இரண்டு கைகளையும் பாவாடை பிடித்துக் கொண்டு நடந்து வந்தாய் அப்பொழுதே என்னோட மனசுல ரோஜாவாய் வந்துட்ட ஆனா என்ன அது எனக்கு லேட்டா தான் புரிஞ்சுச்சு அதற்கு வினோவோ பொய் சொல்றீங்க என்றாள்.

          மோகனோ” இல்லப்பா நான் உண்மையை தான் சொல்றேன்” என்றான் “இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கு நீ அன்னைக்கு ஒயிட்ல ஆரஞ்சு கலர் பட்டுப்பாவாட போட்டிருந்த அது மட்டுமில்ல இந்த ஒரு சின்ன புண்ணு எப்படி இவ்வளவு பெரிய தழும்பா வந்துச்சுன்னு எனக்கு தெரியும்” என்று அந்த கதையை  சொல்ல அதைக் கேட்ட வினோதினிக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது இருந்தே இவன் மனசில் இருந்தோமா என்று வியந்தாள். இந்த அன்பிற்கு நான் எதைக் கொடுப்பேன் என்று தன் கண்களாலே காதலை உணர்த்தினாள்.

             ஜெயராணி கோ சந்தோஷம்தான் பேரன் பிறந்ததில் ஆனால் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு போய் வினோதினியும்பேரனையும் பார்ப்பது என்று தடுமாறினார். ராஜன் வந்து மோகன்  சொன்னதை அனைத்தையும்  சொல்லிவிட்டார். அடுத்த நாள் வினோதினியையும் பேரணையும் பார்க்க வேண்டும் என்று கிளம்பினார். ராஜனும் சந்தோஷமாகவே கூட்டிக்கொண்டு சென்றார்.

           ஜெயராணி கோ தன் பேரனை எப்படியாவது தன் வீட்டிற்கு கூட்டி வந்துவிட வேண்டும் என்று நினைத்தார் அப்படி என்றால் தான் மோகனும் தன்னுடனே இருப்பான். மோகனை எப்படியாவது தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட வேண்டும் என்று ஹாஸ்பிடலுக்கு சென்றார். ஏனென்றால் முகிலனும் தன்னிடம் வந்து இருக்கப் போவதில்லை. பெங்களூரிலேயே செட்டில் ஆயிட்டான் இனி மோகன் தான் தனது பிடி அவனை விட்டு விடக்கூடாது என்று மனதில் உருப்போட்டு கொண்டே இருந்தார்.

இனி…