“உன்னுள் ரோஜாவாய் நான் “

அத்தியாயம் -16

               வினோவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருந்தனர்.குடும்பம் மொத்தமும் பதட்டத்தில் இருந்தன. வினோதினி நல்லா இருக்கணும் குழந்தையும் நன்றாக இருக்கணும் கடவுளே என்று எல்லோரும் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தன. நரேனோ குற்ற உணர்ச்சியில் இருந்தான். அக்காவுடைய இந்த நிலைமைக்கு தான் காரணம் என்று அழுது கொண்டிருந்தான்.

            நரேன் மோகனுக்கு போன் பண்ணினான். மோகனுக்கு போன் எடுக்கவில்லை ஏன்.னென்றால் அவன் பிளைட்டில் ஏறி இருந்தான் அதனால் போன் பிளைட் மூடிலிருந்தது. நரேனுக்கு நான் அக்காவையும் மாமாவையும் சந்திக்க வைத்திருந்தால் அக்காவுக்கு இந்த நிலைமை வந்து இருக்காது நான் தப்பு பண்ணிட்டேன் என்று எல்லோரிடமும் அழுது புலம்பினான். எல்லோரும் அவனை திட்ட ஆரம்பித்தனர்.

            வினோவின் அம்மா லட்சுமி தான் நரேன் மேல எந்த தப்பும்  இல்ல வினோவிற்காக தான் யோசித்தான். இப்ப மாப்பிள்ளையும் வினோவும் பிரிஞ்சு இருக்கிறது நல்லது தான். மோகன் மாப்பிள்ளையோட அம்மா குணம் தெரியாம கட்டிக் கொடுத்தது நம்ம தப்பு. ஏதோ பார்க்கிற இடத்தில் எல்லாம் நல்லா பேசுறாங்க உரிமையா அண்ணின்னு கூப்பிடுறாங்க என்று நினைத்து கட்டினது நம்மளுடைய தப்பு நம்ம ராஜன் அண்ணனுடைய குணத்தை மட்டுமே பார்த்து பொண்ணை கொடுத்தோம். அது இப்போ வினையாகி விட்டது என்றார்.

              இப்போது குடும்பம் மொத்தமும் கடவுளை சரண் அடைந்தனர். வினோதினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். டாக்டர் ஒரு வாராக அவளுக்கு சிகிச்சை அளித்து மூச்சு திணறலை குறைத்தனர். டாக்டர் வெளியில் வந்து வினோதினிக்கு எப்படி இப்படி ஆனது என்று வீரபாண்டியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் வீரபாண்டியோ வினோவோட ஹஸ்பண்ட் வெளிநாட்டுக்கு போயிட்டாரு அவர தடுக்க வேண்டி போயிருக்கா ஆனா அதுக்குள்ளபிளைட் போயிருச்சு அதனால அழுது அழுது இப்படி வந்துருச்சு என்றார். பிரக்னண்டா இருக்க பொண்ண இப்படித்தான் தனியா விடுவிங்களா? இனிமேல் இப்படி விடாதீங்க என்றனர். இப்போது மூச்சுத் திணறல்  கம்மியா இருக்கு குழந்தையும் நன்றாக இருக்கு ஆனால்  இனி ஒரு வாட்டி மூச்சு திணல் வராமல் இருக்கணும் என்று கூறி வினோதினி இரண்டு நாட்களுக்கு ஹாஸ்பிடல் தங்கி ரெஸ்ட் எடுக்கட்டும் என்று கூறி சென்றார் டாக்டர். அப்பொழுதுதான் ராஜனுக்கு விஷயம் தெரிந்து வந்தார். அவரைப் பார்த்ததும் வீரபாண்டிக்கு கோபம் வந்தது.

          ராஜனும் வீரபாண்டியை மச்சான் வினோவிற்கு எப்படி இருக்குது என்று கேட்டார்.அவ்வளவுதான் வீரபாண்டி பொங்கி எழுந்து விட்டார் உங்க குடும்பத்தில் கல்யாணம் பண்ணி வச்சதுக்கு இன்னும் உயிரோட தான் இருக்கிறாள். அதிக கோபத்தில் வீரபாண்டி என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ராஜனுடைய சட்டையைப் பிடித்து என் பொண்ண இளவரசியா வளர்த்தோம் அவளுடைய இந்த நிலைமைக்கு காரணம் நீதான் ஐயா நீ மட்டும் பொண்ணு கேட்காமல் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது உன் முதல் பையனுக்கு பேசி முடிச்சு கல்யாணம் அன்னைக்கு உன் பையன் ஓடிப்போய் எல்லாரும் முன்னாடியும் தலை குனிந்து நின்றோம். பிறகு உன்னுடைய இரண்டாவது பையனுக்கு கல்யாணம் பண்ணினேன் உன்னை பத்தி பல வருடங்களுக்கு முன்னாடியே நான் செய்யாத தப்பை செஞ்சேன் சொன்னியே அப்பவே தெரிஞ்சிருந்தும் பொன்னை கொடுத்தேன் பாரு என்ன சொல்லணும் உன்னால தான் என்பொண்ணுக்கு இந்த நிலைமை வேறொரு இடத்தில் கல்யாணம் பண்ணி இருந்தா ராணி மாதிரி இருந்திருப்பா என்று கூறினார். எல்லோரும் சமாதானப்படுத்தின டாக்டர் வந்து ஒவ்வொருத்தராக பார்க்கலாம் என்று கூறி சென்றார்.

            வீரபாண்டி முதல்ல உள்ளே சென்று “பாப்பா ஏம்மா அழுதழுது இப்படி உன் உடம்பையும் மனசையும் கெடுத்துக்குற  மோகன் ஊருக்கு போனா என்ன உன்ன சுத்தி நாங்க இத்தனை பேர் இருக்கோம். நாங்க உனக்கு முக்கியம் இல்லையா நேத்து வந்து அவர்தான் முக்கியமா” என்று கேட்டார். வீரபாண்டி ப்ளீஸ் டா இனிமே அழுது உடம்ப கெடுத்துக்காதே இப்ப உன்னை மட்டும் பாதிக்காது உன் வயித்துல வளர குழந்தையும் பாதிக்கும் இனிமே எதுவாயிருந்தாலும் அப்பா கிட்ட சொல்லு நான் பாத்துக்குறேன் என்று கூறினார் டாக்டரும் இதே அறிவுரை கூறினார். அதனால் வினோதினி தன் குழந்தைக்காக மனதை சமாதானப்படுத்திக் கொண்டு அழுகையை நிப்பாட்டினாள்.

          வினோதினி இரண்டு நாட்கள் ஹாஸ்பிடலில் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டாள். வினோதினி முழுமையாக பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறி இருந்ததால் தன் படுக்கை அறையை விட்டு வெளியே வரவில்லை. லட்சுமியும் வினோதினியின் சித்தியும் வந்து உணவு கொடுக்கும்போது வினோவின் சித்தி அக்கா நம்ம வினோவிற்கு தாலி பெருக்கி போடணும் இல்ல என்றார். அதற்கு லட்சுமியோ இப்போ தாலி பெருக்கி போடக்கூடாது இரண்டாவது வாட்டி கல்யாணம் பண்ண உடனே நம்ம வினோ மாசமாயிட்டா அதனால இனிமே குழந்தை பிறந்த பிறகுதான் தாலி பெருக்கி போட வேண்டும் என்று கூறினார்.

       வினோதினியோ தன் கழுத்தில் கிடந்த தாலியே எடுத்துப் பார்த்தால் அப்பொழுது கோயிலில் இரண்டாவது வாட்டி கல்யாணம் நடக்கும் போது  ஏற்கனவே இரண்டு கல்யாணம் முடிந்து இவர்கள் மூன்றாவது ஜோடியாக மனையில் அமர்ந்து இருந்தனர். பரிகார கல்யாணம் தானே என்று எந்த அலங்காரமும் செய்யவில்லை சிம்பிளாக சேலையும் கழுத்தில் ஒரு செயினும் அணிவித்து இருந்தால் மோகனும் பேண்ட் சட்டையில் இருந்தான் அன்று கோயில் அடுத்து அடுத்து கல்யாணம் நடந்ததால் கூட்டம் பெருகி இருந்தது.

         இவர்கள் கல்யாணம் நடக்கும்போது இது லவ் மேரேஜ் போல பாவம்  வீட்டை விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிறாங்க என்று அனைவரும் கூடி பேசி எல்லோரும் தாங்களாகவே வந்து ஆசீர்வாதம் பண்ணினார்.வினோதினியின் முந்தியை பிடிக்க சொல்லி மடிநிறப்பினர். வினோதினியின் பெற்றோருக்கு கண்கள் கலங்கிவிட்டது. வினோவும் மோகனும் ஒருவர் விடாது எல்லோர் கால்களிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர். அன்று இரவு மோகன் இதற்கு முன்னாடியே நடந்த முதல் இரவில் ஒருத்தருக்கு ஒருத்தர் மூஞ்சியை திருப்பிக் கொண்டு படுத்தோம் இந்த இரண்டாவது முதல் இரவை விட்டுவிடக்கூடாது என்று விடிய விடிய பிடித்த பிடியை விடவில்லை மோகனும்வினோதினியும் விடிய விடிய அவர்கள் கதைகளை பேசிக் கொண்ட இருந்தனர். அதற்கு பரிசாக தானே இந்த குழந்தை கிடைத்துள்ளது என்று தன் வயிற்றில் தடவிக் கொண்டாள் எங்களின் அன்புக்கு சாட்சியாக கிடைத்த குழந்தையை இனிமேல் கண்ணுக்குள் வைத்து காக்க வேண்டும் என்று தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு அழுகையை அடக்கினாள். வினோதினி இப்படி மோகன் தானும் வாழ்ந்த வாழ்க்கை நினைத்துக் கொண்டே காலத்தை கழித்தாள்.

         வெளிநாட்டில் மோகனோ அதே நிலைமையில் தான் இருந்தான். இந்த நேரத்தில் வினோதினியை விட்டுவிட்டு வந்து விட்டேனே.   கோபத்தில் இப்படியா முடிவெடுப்பேன் என்று ஒவ்வொரு நாளும் நொந்து கொண்டிருந்தான். நரேனுக்கு கால் பண்ணி அடிக்கடி  பேசினான். ஆனால் வினோதினிக்கு போன் பண்ண வில்லை எங்கே அவள் இடம் பேசினால் மனம் மாறி விடுவோமோ என்று பயந்து ஒவ்வொரு நாளையும் கடத்தினான்.

              நான்கு மாதங்களுக்குப் பிறகு வினோதினி மந்திலி செக் அப் போயிருக்கும்போது டாக்டர் குழந்தை எப்ப வேணா பிறந்திடும் இன்றே அட்மிஷன் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். வினோவின் அம்மா லட்சுமியும் அவளது சித்தியும் வந்து இருந்தன இவ்வாறு கூறியவுடன்  வினோதினியோ அம்மா எனக்கு வயிறு வலிக்கல இப்பொழுது எதுக்கு ஹாஸ்பிடல் அட்மிஷன் போடணும் எனக்கு வழி வந்த பிறகு அட்மிஷன் போட்டுக்கலாம்இப்ப  நம் வீட்டிற்கு போகலாம்என்று கூறினாள்.  ஆனால் லட்சுமியோ அதெல்லாம் வேணாம் டாக்டர் சொல்லிட்டாங்க நாம இன்னைக்கு அட்மிஷன் போட்டுக்கலாம் என்று கூறி தனது தங்கையை வைத்துவிட்டு  வீட்டிற்கு சென்று தேவையான துணிகளை எடுத்து வந்து விடுகிறேன் என்று சென்றார் .

            வினோதினிக்கு ஹாஸ்பிடல் அட்மிஷன் போடப்பட்டு ஒரு ரூமில் தங்க வைத்தனர் வினோவின் சித்தியும் வினோ எங்க ஊர் காரங்க ஹாஸ்பிடல் நிக்கிறதை பார்த்தேன். அவங்கள பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று கூறி சென்று விட்டார். அவர் போன சில நிமிடங்களில் வினோவிற்கு வழி வந்து விட்டது. வினோவிற்கு பொறுக்க முடியவில்லை யாரும் பக்கத்தில் இல்லை மெதுவாக எழுந்து சுவரைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தால் அப்பொழுது ஒரு பெண் அவளைப் பார்த்துவிட்டு என்னமா வலி வந்துடுச்சா உன் கூட யாரும் இல்லையா இந்த அம்மா யாருக்காவது போன் பண்ணி வர சொல்லுமா என்றார்.

           வினோதினியும் அவளுடைய அம்மாவிற்கு ஃபோன் பண்ணி அம்மா எனக்கு வலி வந்துருச்சுசித்திய வேற காணும் சீக்கிரமா என்று கூறி போனை அணைத்து விட்டால் அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை அப்பொழுது பக்கத்தில் இருந்த பெண் நர்சை கூப்பிட்டு சொன்னார் டாக்டர் அழைத்து வினோவிற்கு வழி வந்ததை கூறி  பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றனர்.

              வினோவிற்கு வழியிலும் மோகன் ஞாபகம் வந்தது நாம் உயிர் பிழைப்போமா ஒரு பெண்ணிற்கு பிரசவம் என்பது இரண்டாவது பிறப்பு என்று கூறுவார்களே நான் என் மோகனை பார்க்காமலே சென்று விடுவேனா என்று மிகவும் பயந்தாள். அப்பொழுது லட்சுமியும் வினோவின் சித்தியும் ஒன்றாக வந்தன லட்சுமி தன் தங்கையை திட்டி தீர்த்து விட்டார். எதற்காக பிள்ளையை தனியாக விட்டு விட்டு சென்றாய் நான் வர வரைக்கும் இருந்து பார்த்து இருக்கலாம் இல்ல இப்ப பாரு யாருமில்லாத சமயத்தில் என் பொண்ணுக்கு வலி வந்துருச்சு என்று கூறி பிரசவறையை பார்த்து அழுதார். என் பிள்ளை என்ன பாடுபட்டாலோ என்று புலம்பினார்.

          வினோவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் வந்து சேர்ந்தன வினோவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. வினோ மயக்கத்தில் இருந்தபோது  டாக்டர் அவளை எழுப்பி இங்க பாருமா உனக்கு என்ன குழந்தை பிறந்து இருக்குன்னு என்றார். வினோதினியோ அரை மயக்கத்தில் ஆண் குழந்தை  என்று விட்டு தன் குழந்தைக்கு முத்தம் கொடுத்து மயங்கினாள்.

         அப்பொழுது ராஜனும் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தார். எல்லோரும் வெளியில் ஆவலுடன் காத்திருந்தனர். அப்பொழுது டாக்டர் வந்து இந்தாங்க உங்களுக்கு பேரன் பிறந்திருக்கான் என்று வீரபாண்டியன் கையில் கொடுத்தனர். வீரபாண்டிக்கும்  அவரது குடும்பத்திற்கும் சந்தோசம் பொறுக்கவில்லை. நரேனோ இந்த நல்ல விஷயத்தை முதலில் மோகன் மாமாவிடம் சொல்ல வேண்டும் என்று மோகனுக்கு போன் ட்ரை பண்ணி கொண்டே இருந்தான்.

           மோகனோ ஹாஸ்பிடலில் நுழைந்து கொண்டிருந்தான். எல்லோரும் மோகனை பார்த்து திகைத்து நின்றனர். மோகனோ யாரையும் கவனிக்காது வீரபாண்டியிடம் தன் குழந்தையைவாங்கிக் கொண்டிருந்தான். மோகன் வெளிநாட்டில் இருக்கும் போதே முடிவு செய்துவிட்டான்.  மோகனுக்கு வினோதினியை பார்க்காமல் இருக்க முடியவில்லை தன் மகவை சுமந்து கொண்டிருக்கும் பொழுது தன் மனை ஆளை இவ்வாறு விட்டுவிட்டு வந்து விட்டோமே என்று ஒவ்வொரு நொடியும் செத்துக்கொண்டிருந்தான். எப்படியும் அவளது பிரசவ நேரத்தில் தான் கூட இருக்க வேண்டும்இதற்கு மேல் என் வினியை பார்க்காமல் இருக்க முடியாது என்று நினைத்து வந்தவேலையை இரவு பகல் பாராது துரிதமாக முடித்தான். பிரசவ நாள் முன்பாகவே ஒரு வாரத்திற்கு முன்பே வந்து விட்டான்.அவன் வந்த நேரமோ அவனது குழந்தையும் இந்த உலகத்திற்கு வந்து விட்டது. வினோதினிக்கு ஆண் பிள்ளை என்பதால் பத்து மாதம் முடியும் முன்பே குழந்தை பிறந்து விட்டது. மோகனுக்கு தன் குழந்தையை கையில் வாங்கியவுடன் கைகள் நடுங்கத் தொடங்கின என் செல்லம் என் பட்டு என்று கொஞ்சம் தொடங்கினார் அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். எப்படி மாப்பிள்ளை சரியான நேரத்தில் வந்தார் என்று எல்லோரும்அதிசயத்து  கொண்டு இருந்தனர். தன் மகனைக் கொஞ்சியவுடன் பிறகு தன் மனைவியை பார்க்க கண்கள் ஏங்கின. டாக்டர் புரிந்துகொண்டு உங்க வைஃப் மயக்கமா இருக்காங்க என்றார். கொஞ்ச நேரத்துல கண் முழிச்சுருவாங்க அப்ப போய் பாருங்க என்றார்.

இனி…