“உன்னுள் ரோஜாவாய் நான்”

அத்தியாயம்-14

         ராஜனும் மச்சான் வினோதினியை நாங்க நல்லா பாத்துக்குவோம் எங்க கூட அனுப்பி வைங்க என்றார் வீரபாண்டியோ அது சரிப்பட்டு வராது என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது வினோதினி சித்தப்பாவோ கண்ணும் கருத்துமா பாத்துக்க வேண்டியவங்களே பேசாம இருக்குறாங்க நீங்க என்னமோ பேசிகிட்டு இருக்கீங்க என்றார்.

     ஜெயராணியோ நான் ஏன் பேசணும் இப்பதான் நான் உங்க கண்ணுக்கு தெரிகிறேனா கல்யாணம் பண்ணும் போது தெரியலையா என்றார் அதற்கு வினோதினியின் பாட்டியோ ஏன்மா உன்கிட்ட சொன்னோம் நீ கேட்கல அதனால தானே நாங்களா பார்த்து பண்ணி வச்சோம் இப்ப அதனால என்ன நீ எப்பவும் கேட்ட விஷயம் தானே நடந்திருக்கு என்றார் அதற்கு ஜெயராணி அதுல தான் எனக்கு சந்தேகமே உண்மையை சொல்லுங்க உங்க பொண்ணு உண்மையிலேயே கர்ப்பமா இருக்குறாளா இல்ல நான் வீட்டை விட்டு விரட்டிட்டேன் அதற்காக எல்லோரும் சேர்ந்து பொய் சொல்றீங்களா என்றார்.

           அது எப்படிங்க இவ்வளவு நாள் இல்லாம இந்த இரண்டாம் கல்யாணம் பண்ணின உடனே மாசமாய் இருக்கா அது மட்டும் இல்ல வீட்டில் இருக்கும்போது இவளுக்கு தெரியாம இங்க வந்தே தான் தெரிஞ்சுச்சா என்றார்.

வீரபாண்டி குடும்பத்துக்கே கோபம் பொத்துக் கொண்டு வந்தது. வீரபாண்டியோ பேச ஆரம்பித்தார் அம்மா நாங்க முன்னாடி வினோ பிறந்த நாளைக்கு வந்த போது உங்க சுயரூபம் தெரிஞ்சு போச்சு அதனாலதான் குழந்தை பிறக்கிற வரைக்கும் எங்க பொண்ணு எங்களுடைய இருக்கட்டும் என்று முடிவெடுத்து ஆனா இப்ப நீங்க பேசுற பாத்தா என் பிள்ளையை குழந்தை பிறந்ததும் அனுப்ப வேண்டாம்னு தோணுது என்றார்.

         இது போதுமே ஜெயராணிக்கு ஏன் அனுப்புறீங்க நீங்களே வச்சுக்கோங்க ரொம்ப நல்லது என் மகனுக்கு நாங்க வேற கல்யாணம் பண்ணிக்கிறோம். மோகன்”அம்மா ஏன் இப்படி என் வாழ்க்கையில் விளையாண்டுக்கிட்டு இருக்கீங்க நான் சந்தோஷமா இருந்தா உங்களுக்கு பிடிக்காதா என்னையும் வினோதினியையும் பிரிச்சு  என்ன பண்ணப் போறீங்க அவ இல்லாமஎன்னால இருக்க முடியாது.”

      மோகன் விடாது வினோதினியை கூப்பிடுங்க நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போவோம் என்றான். உனக்கு இந்த பொண்ணு வேண்டாம் மோகன் உனக்கு வேற பொண்ணு பார்க்கிறேன் என்றார் ஜெயராணி .

         வினோதினியின் சித்தப்பாவோ என் பொண்ணு மட்டும் இல்ல எந்த பொண்ணும் உங்க வீட்டில் வாழ முடியாது மோகன் பாத்தியா இவரும் உன் அம்மாவை எப்படி பேசுகிறார் என்று  ஜெயராணி புலம்ப ,ராஜனும் ஜெயராணி ஓங்கி ஒரு அறை விட்டார் வாயை மூடுடி ஒழுங்கா என் பிள்ளைகளை சேர்த்து வை அப்படி இல்லாமல் என்  பையனை  வாழ விடாமல் பண்ணிக்கிட்டு இருந்த எங்கேயாவது போயிடு என்றார்.

         ஜெயராணியோ கோபத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் ரொம்ப நல்லா இருக்கு என் புருஷன் என் பிள்ளையவே எனக்கு எதிரா மாத்தி வச்சிருக்கீங்க இவளுக்கு சப்போர்ட் பண்ணி என்னை எல்லாரும் முன்னாடி அடுச்சிட்டீங்க இல்ல வினோதினி எப்படி என் வீட்டில் வாழ்கிறாய் என்று பார்க்கிறேன் என்று கோபமாக அங்கிருந்து சென்று விட்டார்.

          மோகன் அம்மா பேசினது மனசுல வச்சுக்காதீங்க நான் வினோவை நன்றாக பார்த்துக்கொள்வேன் என்னோட அனுப்புங்க என்றான். ராஜனும் தன் பங்கிற்கு மச்சான் அவ பேசுனதை கேட்டுகிட்டு எங்களோட வினோதினியை அனுப்பாமல் இருந்துடாதீங்க எங்க வீட்டு மகாலட்சுமியை அனுப்புங்க என்றார்.

           வீரபாண்டியோ அது மட்டும் முடியாது மச்சான் இன்னைக்கு  உங்களை நம்பி அனுப்பிட்டு நாளைக்கு நீங்க கடைக்கும் மோகன் வேலைக்கும் போனதுக்கு அப்புறம் என் பொண்ணுக்கு மயக்கம்  வாந்தின்னு வந்தா அவளை  யாரும் திரும்பி கூட பாக்க மாட்டாங்க உங்க வீட்ல உங்க வீட்டு அம்மா சொல்லிட்டு போனதை கேட்டீங்க இல்ல உங்க வீட்டை நம்பி என் பொண்ணு அனுப்புறது சாதாரணமாகவே இப்படி இருக்கிற வீட்டுக்கு அனுப்ப மாட்டேன் அதுவும் இப்ப என் பொண்ணு வாயும் வயிறு மா  இருக்கிறாள் எப்படி அனுப்புவேன்.

         இங்க பாக்குறீங்க இல்ல என் பொண்ண சுத்தி எத்தனை உறவுகள் அன்பாகவும் பாசமாகவும் இருக்காங்க இப்படி இருக்க வீட்ல என் பொண்ணு நல்லா இருப்பாளா இல்ல உங்க வீட்டுலயா என்றார். ராஜனும் நீங்க சொல்றதும் சரிதான் வினோதினி இங்கே இருக்கட்டும் நாங்க வந்து பார்த்துகிறோம் என்று கிளம்பிவிட்டார் மோகனுக்கு வினோதாவை விட்டு பிரிவதைநினைத்து வேதனையாக இருந்தது.

        வினோதினிக்கும் இனி மோகனை டெய்லியும் பார்க்க முடியாது அவன் மடியில் சாய்வது எப்போது என்று ஒரு பக்கம் இருந்தாலும் அத்தை என்னைய அவங்க வீட்டிற்கு கூப்பிடாம நான் அங்க போக கூடாது என்று வைராக்கியமா நின்று இருந்தாள்.

           நாட்கள் வாரங்களாக மாற வினோ

பொழுதும் முச்சூடும் வாந்தி மயக்கம் என்று இருக்க வினோதினியின் குடும்பமே அவளை தங்கத்தட்டில் வைத்து தாங்கியது அவள் இருக்கும் படுக்கைக்கு பக்கத்திலேயே வாஷ்பேஷனை அமைத்து கொடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் அப்படித்தான் ஒரு நாள் இருக்கையில் இருந்து எழும் முன்பே வீரபாண்டியன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வாந்தி வந்துவிட வாந்தி எடுப்பதற்கு முன்பே வந்துவிட்டது அப்போது வீரபாண்டியினே கையில் பிடித்துக் கொண்டார். அப்பா நீங்க ஏன் ? பிடித்தீங்க வாந்தி வந்தால் கீழே எடுத்திருப்பேன்லப்பா என்றாள். வீரபாண்டியோ இருக்கட்டும் அம்மா பரவால்ல வாஷ்பேஷனுக்கு வா என்றார் அதன் பிறகு நரேன் வந்து தலையைப் பிடித்துக் கொண்டான் வாந்தி எடுத்ததை கழுவிக் கொண்டிருந்தான் நரேன். அவளை கை தாங்கலாக பெட்டில் அமர வைத்து கால்களில் ஆயில் தடவி மசாஜ் செய்து  தேய்த்துக் கொண்டிருந்தான். இதையெல்லாம் வினோதினிக்கு பார்க்கும்பொழுது கண்கள் பணித்தது. இப்படி என்னை சுற்றி உறவுகள் கிடைக்க கொடுத்து வச்சிருக்கேன் என்று நினைத்துக் கொண்டாள். இன்னும் என் புருஷனும் பக்கத்துல இருந்த ரொம்ப சந்தோஷப்படுவேன் என்று நினைத்து மறுகலானாள்.

       வினோதினியின் வீட்டில் சண்டை நடந்த பிறகு ஒரு மாதத்திற்கு மோகன் வரவே இல்லை அவன் அம்மாவுடன் மல்லு கட்டவே நேரம் சரியாக இருந்தது.அதற்குப் பிறகு சனி ஞாயிறு வந்து பார்த்துவிட்டு போய்விடுவான் வினோதினி முன்பு போல் அவனிடம் பேசமாட்டாள். மோகன் வாங்கி வந்த பழங்களைஅவளை உண்ண வைப்பான் பின்பு மாதுளை முத்துக்களை எடுத்துக் கொடுப்பான். இரவு நேரம் அங்கே தங்கினால் ஜெயராணி சண்டையை ஆரம்பிப்பார் என்று பயந்து அங்கே இருக்க மாட்டான் இப்படியாக நாட்கள் கழிந்தது. வினோதினிக்கு ஐந்து மாதங்கள் ஆனது தீர்த்தம் கொடுப்பதற்காக ஜெயரானியை அழைத்ததற்கு அவர் வரவே இல்லை.

         ராஜனும் மோகனும் மட்டுமே கலந்து கொண்டார்கள் தீர்த்தம்  கொடுத்து முடித்தவுடன் அவளை ரூமில் மோகன் சந்தித்தான். அப்போது வினி இப்ப எப்படி தெரியுமா இருக்க ஆப்பிள் பல மாதிரி இருக்க அப்படியே கடித்து திங்கனும் போல இருக்கு அப்படியே பக்கத்துல வா  வினி   என்று  இழுத்த அனைத்து முத்தமிட்டான் வினிகோ  இவ்வளவு நாள் ஏங்கிய அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக பறந்தது  வினி நம்ம குழந்தையை பாரு வினிகொஞ்சம் கொஞ்சமா பெருசாயிட்டே வரான் இல்ல  உனக்கு ஒன்னு தெரியுமா நாம +2 முடிச்சு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போனோம் இல்ல  அப்ப உன்ன பாத்தா கொஞ்சம் திமிரு புடிச்ச மாதிரியே தெரிவே அதனால தான் எனக்கு கொஞ்சம் கோவமாவே இருக்கும் உன் மேல உன் முகத்தை பார்க்கவே லீவு போடாம டெய்லியும் வருவேன் ஆனா சந்தோஷ் கேட்கும்போது ஸ்போக்கன் இங்கிலீஷ் கத்துக்கணும்னு ஆசை அதனால ஒரு நாள் கூட லீவ் போடாம வரேன் என்பேன். மிஸ் நடத்தும் போது உன் முகத்தையே கவனிப்பேன் உனக்கு புரிஞ்சிச்சா விட்டுடுவேன் ஆனா உனக்கு புரியலைன்னா  என்று சொல்லி நிறுத்தினான்.

      வினோதினியோ என்ன? என்று கேட்டாள்அதற்கு மோகன் வேறென்ன மேக்ஸ் டியூஷன் ல சந்தோஷ் க்கு புரிய வைக்கிற மாதிரி உனக்கு புரிய வைப்பேன் உனக்காக சந்தேகம் கேட்டா தீர்த்து வைக்க தீர்த்து வைக்கவிட்டால் உன் முன்னாடி அசிங்கமா போயிருமேன்னு வீட்டில் வந்து விழுந்து விழுந்து படிப்பேன் அப்படி படிச்சு தான் சார் உன்னோட பிளஸ் டூவில் அதிகம மார்க் வாங்கினேன் சோ இதுல இருந்து என்ன தெரியுது நான் உன்னை மனதில் நினைச்சுகிட்டு இருந்திருக்கிறேன் இல்ல நான் நல்ல மார்க் வாங்குவதற்கு காரணம் நீதான் நீ என் கூட இருந்த எப்பவுமே எனக்கு வெற்றி தான்.

         வினோதினியோ “இதெல்லாம் நல்லா பேசுங்க ஆனா உங்களால உங்க அம்மாவ சமாதானப்படுத்த முடியல இல்ல இன்னைக்கு எல்லாரும் முன்னாடியும் எங்க குடும்பம் எவ்வளவு அவமானப்பட்டு நின்னுச்சுன்னு தெரியுமா வந்தவங்க எல்லாரும் உங்க சம்மந்தி அம்மா எங்க !முதன்முதல மருமக மாசமா இருக்கா இதுக்கு கூட வராம இருந்தா எப்படி? எப்படின்னு கேள்வி கேட்டாங்க எங்களுக்கு அந்த இடத்துல எப்படி இருந்திருக்கும்” என்றாள் வினோதினி. மேலும் வினோதினி” கோபத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் இனிமே உங்க அம்மாவை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வராமல் இங்க வராதீங்க” என்றாள்.

       மோகனுக்கோ ஓ! “என்னைவிட எங்க அம்மா தான் உனக்கு முக்கியமா அவங்க வரலைன்னா என்ன அதான் நான் வரேன் இல்ல அப்புறம் என்ன உனக்கு அப்ப இனிமே நான் உன்னை பார்க்க வரக்கூடாது அப்படித்தானே” என்றான். வினோதினிக்கு அப்பதான் உரைத்தது இல்லைங்க அது வந்து நான் என்ன சொல்ல வந்தேனா வேணா நீ எதுவும் சொல்லாத என்றான் மோகன் இனிமே அம்மா இங்கே வராமல் நான் உன்னை பார்க்க வரமாட்டேன் போதுமா என்று அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

          மோகன் கிளம்பியுடன் தான் வினோதினிக்கு தான் செய்த தவறு புரிந்தது சை கோபத்தில்  வர வேணாம்னு சொல்லிட்டோமே என்று நொந்து போனால் அவளும் தான் என்ன பண்ணுவாள் உறவுகள் அனைவரும் பக்கத்தில் இருக்க புருஷனும் தன் பக்கத்தில் இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைத்து ஒவ்வொரு நாளும்  வெந்து போவாள் அதன் வெளிப்படையே இப்போது கோபமாக அவனிடம் சொல்ல வைத்தது. இதெல்லாம் யாரால அவர் மட்டும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தார்னா அங்கேயே இருந்திருக்கலாம்  நானும் அவரும் இந்த நேரத்தில் சேர்ந்து இருப்போம்ல என்று நினைத்து நினைத்து ஒவ்வொரு நாளும் மறுகலானாள்.

இனி…