“உன்னுள் ரோஜாவாய் நான்”

அத்தியாயம் -11

            வினோதினி வினோதினியின்அம்மா அப்பா ஹாஸ்பிடலில் எல்லோரும் ஒரு புறம் காத்துக்கொண்டிருக்க வினோதினியின் சித்தி சித்தப்பாவோ மோகனுடைய ஜாதகத்தையும் வினோதனின் ஜாதகத்தையும் கொண்டு போய் அவர்கள் குடும்ப ஜோசியர் இடம் காண்பித்தனர்.அவரோ “எப்பா மோகனுக்கு இரண்டு தாரம் பா என்று கூறினார். திரும்ப அவர்களுடைய கல்யாணம் நடக்கணும் அப்பதான்  குழந்தை பாக்கியம் இருக்கும் என்று ஜாதகத்தில் சொல்ல வினோதின் சித்தி சித்தப்பாவிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை இதை எப்படி மற்றவர்களிடம் சொல்வது என்றும் தெரியவில்லை ஜோசியரோ இவர்கள் முதல்ல கட்டிருந்து தாலியை கழட்டி 16 நாட்கள் விரதம் இருந்து பொண்ணு மாப்பிள்ளையும் ஒருத்தர் ஒருத்தர் பாத்துக்காம இருந்து திரும்பவும் கோயில கட்டணும் அப்பதான் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றார்.

      இங்கு ஹாஸ்பிடல்ல டெஸ்ட் ரிப்போர்ட் வந்தது வினோதினி வினோதினி அப்பா வீரபாண்டி அம்மா லக்ஷ்மி அனைவரும் டாக்டர் ரூமிற்கு சென்றனர். அவரோ கல்யாணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆகின்றன என்று கேட்டனர். வினோதினியோ ஆறு மாதங்கள் ஆகின்றன என்று சொன்னாள்.

அம்மா ஆறு மாதங்கள் தான் ஆகிறது அதுக்குள்ள என்னமா அவசரம் உங்களுக்கு என்றார். வினோதினி அம்மாவோ எங்களுக்கு ஒரு அவசரம் இல்ல டாக்டர் அவங்க மாமியாக்கு தான் அவசரம் என்றனர். வினோதினியோ அவர்கள் நீர்க்கட்டி இருக்குமோ என்று பயப்படுகிறார்கள் என்றாள். அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லமா உன்னோட உடம்பு ரொம்ப நல்லா இருக்கு எந்த பிரச்சனையும் இல்லம்மா யார் அப்படி சொன்னாங்களோ அவங்களுக்கு முன்னாடி இந்த ரிப்போர்ட்ட போய் தூக்கி போடு என்றனர். அப்பொழுதுதான் வினோதினிக்கு போன உயிர் திரும்பி வந்தது. அனைவரும் முகத்தில் மகிழ்ச்சி திரும்பியது. சந்தோசமாக அனைவரும் வீட்டிற்கு வந்தனர்.

இவர்கள் வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்தில் வினோதினியின் சித்தப்பாவும் சித்தியும் வந்தார்கள். ஜோசியர் சொன்ன அனைத்தையும் கூறினர். வினோதினியோ அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு இதற்கு அத்தை ஒத்துக்க மாட்டார்கள் என்று கூறினாள். முதலில் மாப்பிள்ளை கிட்ட சொல்லுவோம் அவர் என்ன சொல்றான்னு பார்த்துகிட்டு அதுக்கப்புறம் வீட்டில் செல்வோம் என்றனர். மோகனிடம் தெரிவித்த போது மோகன்அதெல்லாம் ஒன்னும் இல்லை  நாங்க எப்பவும் நல்லாதான் இருப்போம் இந்த மாதிரி  இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்றான். நாங்க ஒருத்தர் ஒருத்தர் புரிஞ்சுகிட்டு இப்பதான் வாழ ஆரம்பிச்சிருக்கோம் இனிமேலும் எங்களுக்கு ஒன்னும் ஆகாது நல்லா தான் இருப்போம்  என்றான்.  வினோதினியின்  குடும்பமோ இல்லை எங்களுக்கு அது சரிபடாது ஜோசியர் சொன்னதை செஞ்சாதான் வினோதினியை உங்க வீட்டுக்கு அனுப்புவோம் என்றனர். வீரபாண்டி இதுவரைக்கும் எங்க ஜோசியரை கேட்காமல் நாங்க எதுவும் பண்ணதில்லை இதுதான் முதல் தடவை  உங்க கல்யாணம் நடந்துச்சு அதனால அவர் சொல்றபடி கேப்போம் என்றார்.

         மோகனுக்கு இதனை வீட்டில் எவ்வாறு சொல்வது அம்மா எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று யோசித்தான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கணும்னு நினைக்கும் போது தான் இப்படி வருமா ,என்று மனதில் நினைத்துக் கொண்டான். இதே போல் தான் வினோதினியும் அங்கே நினைத்துக் கொண்டிருந்தாள். வினோதினி அப்பா வீரபாண்டி மோகனின் அப்பா ராஜனை கூப்பிட்டு ஜோசியர் சொன்னதைசொன்னார். ராஜனும் சரி மச்சான் அப்படியே பண்ணிடுவோம் என்றார் ஆனால் தன் மனைவியை எப்படி சமாளிப்பது என்பது தான் அவருக்கு தெரியவில்லை. தன் மனைவி ஜெயராணியிடம் ராஜன் கூறிய போது அவர் தாம்தூம் என்று குதித்தார். அதெல்லாம் இன்னொரு வாட்டி கல்யாணம் பண்ண முடியாது முதல் தடவை அவன் கட்டிருக்கான் அதை போய் அவிழ்த்துவிட்டு திரும்ப கட்ட முடியுமா என்று கூறினார். முதல் தடவ கட்டுனதோட அவள் என் பிள்ளையோட வாழட்டும் அப்படி இல்லைனா  ஊர் உலகத்துல வேற  பொண்ணா இல்ல அந்த பொண்ணு வேணாம் நம்ம வேற பொண்ண மோகனுக்கு கல்யாணம் பண்ணிக்கலாம் என்றார். மோகனுக்கு தூக்கி வாரி போட்டது. அம்மா எனக்கு கல்யாணம் ஒரு வாட்டி தான் அது ஏற்கனவே என்னை பொறுத்த வரைக்கும் நடந்திருச்சு.  வேற பொண்ணு பாப்போம் என்கின்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றான்.

         ஆனால் வினோதினியின் வீட்டிலோ இந்த கல்யாணம் நடந்தால்தான் வினோதினி உங்க வீட்ல கொண்டாந்து விடுவோம் என்றனர் மோகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மோகன் தன் அப்பா ராஜனிடம் அப்பா எப்படியாவது எங்களை சேர்த்து வைங்க என்றான். வினோதினியோ தன் அப்பா வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்தாள். மோகன் வேலைக்கு போயிட்டு வினோதினியும் தன் பள்ளி முடிந்தவுடன் இருவரும் காபி ஷாப்பில் மீட் பண்ணுவார்கள். அப்பொழுது வினோதினி என்னங்க நம்ம சேர்ந்து வாழணும்னு நினைக்கும் போது இப்படி நம்ம வீட்டில் பிரச்சனை பண்றாங்களே என்று கூறினாள். அத்தை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணுங்க என்றாள். எங்க அம்மா கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாங்க திரும்ப கல்யாணம் பண்ணுகிற பேச்சுக்கே இடமில்லை இப்ப என்னதான் பண்றது நம்ம என்றாள். இப்ப நம்ம ரெண்டு பேரும் நம்ம வீட்டுல கன்வின்ஸ் பண்ணி ஒண்ணா வாழ்றது தான் இதுக்கு வழி என்றான். அம்மாவோ மொத மொத கட்டினத இது பண்ண கூடாதுன்னு பாக்குறாங்க எங்க வீட்டில திரும்பவும் கட்னா தான் நல்லா இருக்கும்னு ஆசைபடுறாங்க என்றாள் வினோதினி.

        மோகன் நம்ம இருவரும் வீட்டில் கன்வின்ஸ் பண்ணுவோம் என்றான். வினோதினியும் அப்பா அம்மாவிடம் கேட்டு பார்க்கிறேன் என்று கிளம்பினாள். வினோத தன் அப்ப வீரபாண்டியிடம் அம்மாவிடமும் சென்று அப்பா மோகன்  இல்லாம என்னால இருக்க முடியாது நான் அவங்க வீட்டுக்கு போறேன் அத்தை என்ன சொன்னாங்க நீர்க்கட்டி மாதிரி பிரச்சனை இருக்கும் தானே பயந்தாங்க இப்பதான் அந்த மாதிரி எதுவும் இல்லையே அப்புறம் ஏன் நாம பயப்படனும் என்றாள். வீரபாண்டிக்கும் லட்சுமிக்கும் விருப்பமில்லை நம்ம ஜோசியர் சொன்ன கரெக்ட்டா தான்  இருக்கும் அவர் சொல்றபடி கேப்போம் பாப்பா என்றனர். வினோதினியோ அப்படிலாம் எதுவும் நடக்காது பா பயப்படாம என்னை அனுப்புங்கப்பா என்றாள்.

அங்கே மோகனோ தன் அம்மாவிடம் வாதாடிக் கொண்டிருந்தான். அம்மா இன்னொரு வாட்டி வினோதினியின் கழுத்தில் தாலி கட்டினால் உங்களுக்கு என்னமா பிரச்சனை என்றான். எனக்கு  பிரச்சனை தான் டா மொத மொத கட்டுனது அதை போய் யாராவது இப்படி செய்வாங்ல என்றார். சரிமா அப்படி செய்ய வேண்டாம். வினோதினியை  நான் வீட்டுக்கு கூட்டிட்டு வர போறேன் அவளுக்கு ரிப்போர்ட்ல எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிட்டாங்க அது உங்களுக்கு தெரியும் தானே என்றான். அது தெரியும் என்று கூறிவிட்டு கூட்டிட்டு வா என்றார்.

       வினோதினியும் மோகனும் வீட்டிற்கு வந்து சந்தோசமாகவே வாழ்ந்து கொண்டிருந்தனர். வினோதினி தனக்கு ஒவ்வொரு மாசம் நின்றுவிடும் நின்றுவிடும் என்று நினைத்து செக்கப் பண்ணிக் கொண்டே இருந்தாள்.  ஆனால் அவளுக்கு நின்ற பாடு இல்லை மோகன் நமக்கு கண்டிப்பா குழந்தை பிறக்கும் ஏன் கவலைப்படுகிறாய் என்று ஆறுதல் கூறினான்.ஜெயராணியோ அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பொய் சொன்னீர்களா என்று கேட்க ஆரம்பித்தார். ராஜனும் மோகனும் கூறுவதை காதில் வாங்கவில்லை டாக்டரிடம் பொய் சர்டிபிகேட் வாங்கிட்டு வந்து இருக்காள் என்று கூற ஆரம்பித்தார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த வினோதினிக்கு அழுகையும் கோபம் முட்டிக்கொண்டு வந்தது. வினோதினிக்கோ அப்பா அம்மா சொன்னதை கேட்டு இருக்கணும் நான் தான் தப்பு பண்ணிட்டேன் என்று நினைக்க ஆரம்பித்தாள். அவர்கள் சொன்ன மாதிரி செஞ்சு இருந்தா இந்நேரம் குழந்தை உண்டாயிருக்குமோ என்று நினைத்து மறுகலானாள்.நாளுக்கு நாள் ஜெயராணியோ ரொம்ப மோசமாக நடந்து கொண்டார். சாதாரண விஷயத்துக்கெல்லாம் வினோதினியை திட்டி தீர்த்தார். ஒருநாள் ஸ்கூல் விட்டு வந்ததும் டீ எடுத்துக் கொண்டு வர சொன்னார். வினோதினியோ அத்தை கேக்கற நேரத்துல கொடுத்தால்தான் என்று நினைத்து விட்டு வேகமாக சென்று எடுத்துக் கொண்டு வந்தாள். அப்பொழுது கைத்தறி ஜெயராணியின் மேல்கொட்டி விட்டதுஅதுதான் ஷாக் என்றுவினோதினியை பிடித்துக் கொண்டார்.

             எவ்வளவு நாளா இப்படி சூடான டீய என் மேல ஊத்துறதுக்கு பிளான் பண்ணி இருந்த நான் ஒருத்தி தான் உனக்கு எதிரா இருக்கேன்னு என்னை கொல்ல பாக்குறியா என்றார். வினோதினியோ பதறிப்போய் அத்தை தெரியாமல் தான்  கொட்டுணிச்சு வேணும்னு செய்யல என்று அழுக ஆரம்பித்தாள்.

                    மோகன் வந்ததும் இது ஒரு குற்றம்போல் அவனிடம் சொல்லிஇவ  உனக்கு வேணாண்டா வேற பொண்ணை பாப்போம் என்றார் இதுவே வேறொரு பொண்ணா இருந்தா இந்நேரம் குழந்தை உண்டாய் இருக்கும் என்று பிடித்துக் கொண்டார். மோகன் இந்த பேச்சை இனிமேல் அம்மா எடுக்க கூடாது என்று நினைத்து அம்மா நீங்க நினைக்கிற மாதிரி அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்ல எனக்கு தான் பிரச்சனை என்றான்.

        ஜெயராணியோ என்னடா தம்பி சொல்ற என்று கேட்க ஆரம்பித்தார். வினோதினியை சொல்றதுக்காண்டி நீ பொய் சொல்ற நான் நம்ப மாட்டேன் என்றார். இல்லமா உண்மையில தான் சொல்றேன் வினோதினிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிந்தவுடன் நானும் டாக்டரை போய் பார்த்தேன் அப்பொழுது தான் சொன்னார்கள் எனக்கு அணுக்கள் கம்மியாக இருக்கின்றது என்று இதனை எப்படி எல்லோரிடம் சொல்வது அதனால் தான் சொல்லாமல் இருந்தேன் என்றான். ஜெயராணியோ என் மகனுக்க இப்படி என்று புலம்ப ஆரம்பித்தார்.

         ஒரு சில வாரங்கள் சென்று முகிலன் இடமிருந்து போன் வந்தது அம்மா நிஷாவுக்கு வளைகாப்பு செய்கிறோம் அவங்க அப்பா அம்மா ஊருக்கு வராங்க நீங்களும் வந்தா சந்தோஷப்படுவோம் என்றான் மோகனுடைய வாழ்க்கை தான் இப்படி இருக்கு சரி முகிலனுக்காது குழந்தை பிறக்கட்டும் என்று நானும் வருகிறேன் வளைகாப்புக்கு என்று கூறி சென்றார். இதுதான் சாக்கென்று வினோதினியின் வீட்டில் அவர் சென்றவுடன் இருவரையும் அவர்கள் வீட்டிற்கு கூட்டி சென்று ஜோசியர் சொன்ன பரிகாரத்தை செய்ய ஆரம்பித்தனர். மோகனும் வினோதினி படும் கஷ்டத்தை பார்த்து ஒத்துக் கொண்டான். இருவருக்கும் காரைக்குடி அருகே உள்ள கைலசனதர் கோயிலில் இரண்டாவது கல்யாணம் சிறப்பாக முடிந்தது. இரண்டாவதாக கட்டும் பொழுது இருவரும் ஒருமித்த தம்பதியரை வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அந்த கைலாசநாதர் பிரசன்ன தேவி அம்மா மாதிரி ஒருத்தருக்கு ஒருத்தர் இருக்க வேண்டும் என்று நினைத்துக்  மனதில் பிரார்த்தித்துக் கொண்டனர்.

இருவரும் அன்று தொடங்கிய வாழ்க்கையை மனதார ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்தனர். பெங்களூரில் முகிலனுக்கும் நிஷாவுக்கும் பெண் குழந்தை பிறந்தது. முகிலன் ஜெயராணியிடம் கல்யாணத்தப்ப நடந்த குளறுபடிகளை சொல்ல ஆரம்பித்தான் அது மட்டுமல்ல மோகன் வினோதினியை விரும்பியதையும் சொல்ல ஆரம்பித்தான். மோகனே தனக்கு வழி சொன்னதையும் கூறினான். ஜெயராணியோ அடுத்த நிமிடம் நான் ஊருக்கு போக வேண்டும் என்று சொன்னார்.

          அவசரம் அவசரமாக ஊருக்கு கிளம்பி வந்தார் ஜெயராணி வினோதினி ஸ்கூலுக்கு போகும் முன் வந்து பிடித்து விட்டார். வினோதினியை பார்த்து மோகன் உன்னையே கல்யாணத்துக்கு முன்னாடியே விரும்பினான  என்று கேட்டார். அதற்கு வினோதினியோ அப்படி எல்லாம் இல்லையே என்றாள். இல்ல நீ பொய் சொல்ற நீனும் மோகனும் ஒருத்தருக்கு ஒருத்தர் படிக்கிற காலத்துல இருந்து விரும்பி இருக்கீங்க என்றார். வினோதினியோ அப்படிலாம் இல்லையே யார் சொன்னா உங்களுக்கு என்றாள். ஜெயராணியோ திரும்பத் திரும்ப பொய் சொல்லாதே என்று மோகன் மோகன் என்று கத்த தொடங்கினார். மோகன் தனது ரூமில் இருந்து வெளியே வந்தான் என்னம்மா எப்ப வந்தீங்க என்று கேட்டான் குழந்தை நல்லா இருக்கா நானும் வினோதினியும் இந்த வீக்கண்டில் வருவோனு இருந்தோம். என்னம்மா அதுக்குள்ளே வந்துட்டீங்க என்றான். ஜெயராணியோ முதல்ல எனக்கு ஒரு உண்மையை சொல்லு, நீ கல்யாணத்துக்கு முன்னாடியே வினோதவை விரும்புனியா என்றார். உண்மையை மறைக்காம அம்மா மேல சத்தியம் பண்ணி சொல்லு மோகன். மோகனோ ஆமாம் என்றான்.

   இனி…