வினோதினி எழுந்து குளித்துவிட்டு மோகனை எழுப்பினால்” எனக்கு ரொம்ப பசிக்குது வாங்க கீழே போகலாம்” என்றாள். மோகனும் குளித்துவிட்டு வந்து இருவரும் டைனிங் டேபிள் அமர்ந்து ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டனர். அந்த நேரம் பார்த்து ஜெயராணியோ வீட்டிற்குள் உள்ளே வந்தார். “ஆமாண்டா அப்பா இதற்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்றார்.இருவரும் எழுந்து “அம்மா” என்றான்மோகன் வினோதினியோ “வாங்கஅத்தை”என்றாள்.
மோகன் “என்னம்மா திடீர்னு வந்து இருக்கீங்க அண்ணே கொண்டு வந்து விட்டானா இல்ல நீங்களா வந்தீங்களா” என்றான். “உங்க அண்ணன் எப்படி வருவான் உங்க அப்பா கூப்பிடாம நான் தான் வந்தேன் “என்றார். என்னம்மா அதுக்குள்ளே வந்துட்டீங்க என்றான். ஏன் “நான் வந்ததுல உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கோ” என்றாள். இல்லம்மா சொல்லியிருந்தா நான் வந்து கூட்டிட்டு வந்து இருப்ப இல்ல என்றான். “அந்த நிஷா என்னடா பொண்ணு?”” என் பேச்சை துளி கூட கேட்க மாட்டேங்கிறா எதை சாப்பிடக்கூடாதுன்னு சொல்றோமோ அதை சாப்பிடுற உங்க முகில் அண்ணனும் அவ சொல் பேச்சைக் கேட்டு ஆடுறான் எனக்கு மரியாதை இல்லாத இடத்தில நான் ஏன் இருக்கணும் ,அதனால வந்துட்டேன்”. “முகிலன் நீ போ மா டெலிவரி டையத்துல வந்தா போதும் சொல்லிட்டேன்” “அது சரி நீங்க ஏன் வேலைக்கு இன்னைக்கு போகல “என்றார். மோகன் இல்லமா “அது வந்து அவ டூர் போயிட்டு நேத்து தான் வந்தா நானும் மதுரைக்கு போயிட்டு வந்தேன் ரெண்டு பேருக்கும் முடியல ரொம்ப டயர்டா இருந்துச்சு அதனால வீட்ல இருந்தோம் என்றான். ஓ மேடம் நான் இல்லாத நேரத்தில் டூர் எல்லாம் போய் இருக்காங்களா என்றார். வீட்ல ஒரு ஆள் இல்லைன்னு சொன்னதும் உன் இஷ்டத்துக்கு ஆடுற அப்படித்தானே அப்படி எல்லாம் இல்ல அத்தை என்றாள்.
மோகன் “அப்படிலாம் இல்லமா என்கிட்டயும் அப்பாட்டையும் கேட்டுட்டு தான் போனா” ஏய்! நீ ,பேசாம இரு டா நான் அவ கிட்ட பேசிகிட்டு இருக்கேன். ஒரு வீட்டு தலைவியா என்கிட்ட சொல்லிட்டு போணுமா இல்லையா என்றார் அப்புறம் எதுக்கு பெரிய மனுசி நான் ஒருத்தி இருக்கேன். அத்தை நீங்க ஊர்ல இருந்தீங்க அதனால திடீர்னு தான் டூர் போனோம் என்றாள் வினோதினி. மோகனோ அம்மா நான் தான் சொல்றேன் இல்லம்மா என்றான். வினோதினியோ பேச்சை முடிப்பது போல் சரி அத்தை இனிமே எங்க போனாலும் சொல்லிட்டே போறேன் என்றாள். அதிலிருந்து வினோதினியும் மோகனும் எது செய்தாலும் ஜெயராணியிடம் சொல்லிவிட்டு செய்தார்கள் எங்கு போனாலும் சொல்லிவிட்டு சென்றார்கள் சரி அந்த மரியாதை கொடுத்தா போதும் என்று நினைத்தார் ஜெயராணியும் நாட்கள் இவ்வாறாக ஓட ஆரம்பித்தது.
மோகனும்வினோதினியும் காலையில் வேலைக்கு கிளம்பி செல்கிறவர்கள் சாய்ந்திரம் 5 மணிக்கு மேலேதான் வீட்டிற்கு வருவார்கள் இப்பொழுதெல்லாம் மோகன் அருண் சாரிடம் பேசிப் பழக ஆரம்பித்தான். ஏனென்றால் அவன் தானே அவளுக்கு புரிய வைத்தது.
இரண்டு மாதங்கள் கழித்து வினோதினியின் பிறந்தநாள் வந்தது அதற்கு மோகன் சப்ரைசாக அவளுக்கு பர்பிள் நிற சேலையும் அதற்கு மேட்ச்சாக ஒரு ஆரமும் வாங்கி வந்தான். அன்றைய தினம் 12 மணிக்கு அவனுடைய ரூமிலேயே கேக் கட் பண்ணினார்கள் ஒருவர் மீது ஒருவர் கேக் அப்பிக் கொண்டு அவர்களது வேலையை தொடங்கினர்.
மீண்டும் அவளுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்க சாய்ந்தரம் பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருந்தான். அதற்கு வினோதினியின் அம்மா அப்பா சித்தி சித்தப்பா யாழினி நரேன் அவர்களை அனைவரையும் வீட்டிற்கு வர வைத்தான்.
அதனை ஜெயராணி இடம் சொல்லவில்லை எல்லோருக்கும் சப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று நினைத்தான் மோகன் அதன் விளைவு அங்கு ஒரு போர்க்களமே உருவாகியது.
அன்றைய தினம் அவள் பள்ளிக்கு செல்லாததால் இருவரும் கோயிலுக்குச் சென்று விட்டு அப்பொழுதுதான் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.இவர்களை பார்த்தவுடன் அம்மா அப்பா எப்ப வந்தீங்க சித்தப்பா எப்ப வந்தீங்க சித்தி என்று கேட்டாள் அதற்கு அவர்கள் பதில் ஏதும் சொல்லவில்லை ஏனென்றால் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் ஜெயராணி வந்து ஒரு வார்த்தை சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிறீங்க என்றார்.
வீட்டிற்கு வந்தவர்களை வாங்க என்று சொல்லி தான் கேள்விப்பட்டிருக்கோம்”இந்த அம்மா என்னடானா சொல்லாம கொள்ளாம வந்திருக்கோம் என்று சொல்லி சண்டைக்கு வருது” என்று மனதில் நினைத்துக் கொண்டு நின்றார்கள். நரேன் “நாங்க ஒன்னும் சொல்லாமல் கொள்ளாமல் வல்ல மோகன் மாமா கிட்ட சொல்லிட்டு தான் வந்தோம்”” இன்னிக்கி அக்காவுக்கு பிறந்தநாள் “என்றான். ஓ அது ஒன்னு தான் குறைச்சல் உங்க அக்காவுக்கு என்றார். வீரபாண்டியும் அவருடைய தம்பியும் ஏன் எங்க பொண்ணுக்கு என்ன அவ ஒரு இளவரசியா தான் எங்க வீட்டுல வாழ்ந்தாள். இங்கேயும், அப்படித்தான் இருக்கிறாள் என்று நம்பினோம். இத்தனை நாளா ஆனா இப்ப எல்லாம் தெரியுது என் பொண்ணு இங்க சந்தோஷமா இல்லை என்பது வினோதினியோ அப்படிலாம் இல்லப்பா நான் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன் என்றாள். இல்லம்மா உன்னை என்னைக்கு அவங்க மூத்த பையனுக்கு பேசிட்டு ரெண்டாவது பையனுக்கு கற்றமேனு
என்ற நினைப்பு இருந்துச்சுஅன்னையிலிருந்து எனக்கு மனசு கஷ்டமா தான் இருந்துச்சு பொண்னை இப்படி புடிச்சு தள்ளுறோமே அப்படின்னு இருந்தாலும் மோகன் நல்ல பையன் ராஜன் மச்சான் உன்னைய நல்லா பாத்துக்குவாரு தான் உன்னைய கட்டி வச்சேன்ஆனா அது தப்புன்னு இப்ப பீல் பண்றேன் என்றார். மாமா “அதெல்லாம் தப்பா எடுத்துக்காதீங்க!” நானும் வினோதினி சந்தோஷமா தான் இருக்கும் என்ன எங்களுக்கு ஒரு புரிதல் வரதுக்கு தான் இவ்வளவு நாளாச்சு இப்ப புரிஞ்சுகிட்டு ஒருத்தருக்குஒருத்தர் நல்லா அனுசரிச்சு தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம் மாமா”” அம்மா அப்படித்தான் சொல்லிட்டே இருப்பாங்க அவங்கள கண்டுக்காதீங்க” என்றான் நல்லா இருக்குடா ரொம்ப நல்லா இருக்கு பெத்த அம்மா பாத்து அப்படி சொல்ற என்றார் ஜெயராணி.” உன் மாமனார் வீடு எப்படி என்னை மதிப்பாங்க “என்றார்.
ராஜனும் “இப்படி ஜெயராணிபேசுவத நிப்பாட்டு முதல்ல” என்றார்.”அப்பா மோகன் ஹோட்டலில் இருந்து ஆர்டர் பண்ணி சாப்பாடு வரவைப்பா என்றார் கேக் வெட்டி முடிச்ச உடனே எல்லாரும் டின்னர் சாப்பிடனும் இல்ல” என்றார். “அதுக்கெல்லாம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன்பா” என்றான் மோகன்.
வினோதினியின் அப்பா அம்மா இந்தாம்மா உனக்கும் மாப்பிள்ளைக்கும் என்று புது துணிமணிகளை கொடுத்தார் வினோதினி உடைய அப்பா அம்மா சித்தப்பா சித்தி நால்வரும் டிரஸ் எடுத்து வந்திருந்தார்கள் அவர்களுக்கு அதையெல்லாம் கொடுத்தார்கள். பின்பு கேக் வெட்ட வாங்க என்று ஜெயராணி அழைத்ததற்குவந்து நின்றார். வினோதினி கேக் கட் பண்ணினாள் அனைவரும்பர்த்டே சாங் பாட ஆரம்பித்தார்கள். வினோதினி அனைவருக்கும் கேக் துண்டுகளை ஒவ்வொருவருக்காக கொடுத்து வந்தாள். அப்போது ஜெயராணியிடம் வந்துகொடுக்கும் பொழுது ஜெயராணி ஏமா முதல்ல உங்க வீட்டுக்கு போயி உனக்கு நீர் கட்டி இருக்கான்னு பார்த்து செக் பண்ணிட்டு வா என்றார். வினோதினிக்கு தூக்கி வாரி போட்டது.
மோகனோ கல்யாணம் ஆயி ஆறு மாசம் தானே ஆகுது அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு என்றான் அது என்னம்மா நாக்கா தேள் கொடுக்க வினோதினி மனசும் வீட்டுக்கு வந்தவங்களோட மனசு எவ்வளவு கஷ்டப்படும் என்றான். ஜெயராணியோ உனக்கு ஒன்னும் தெரியாது பேசாம கடடா என்றார். வினோதினிக்கோ அழுகை பொத்துக் கொண்டு வந்தது தன் அப்பா அம்மாவிடம் ஓடி சென்று கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தாள். ராஜன் ,ஏன் ஜெயராணி இப்படி பேசுற வந்தவங்க என்ன நினைப்பாங்க கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுற கல்யாணம் ஆகிஆறு மாசம் தானடி ஆகுது அதுக்குள்ள உனக்கு என்ன பிரச்சனை என்றார். முகிலன் அவனா தேடிக்கிட்டாலும் அவனுக்கு பிள்ளை உண்டாயிருச்சு இது நம்ம பார்த்து கட்டுனது இன்னும் ஒன்னு உண்டாகல என்று சொன்னார். ராஜனும் உச்சகட்ட கோபத்தில் ஜெயராணியை ஒரு அரை விட்டார். ஜெயராணியோ உண்மைய சொன்னாள் உங்களுக்கு எதற்கு கோபம் வருகிறது என்னை அடிக்கிறீங்க அதுவும் எல்லாருக்கும் முன்னாடிஅவள போய் முதல்ல செக் பண்ணிட்டு வர சொல்லுங்க என்று தன் பிடிவாதத்திலே நின்றார் . வீரபாண்டியும் லட்சுமியும் அம்மா வினோதினி வாமா கிளம்பலாம். இங்க இனிமேல் நீ இருக்க வேண்டாம் என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர். மோகனோ என்ன பண்றீங்க மா கூப்பிடுங்கம்மா அவங்கள அப்படியெல்லாம் அவளுக்கு எதுவும் இருக்காது அம்மா என்றான். சும்மா இருடா உனக்கு ஒன்னும் தெரியாது என்றார். வினோதினியோ மோகனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை தன் பெற்றோருடன் கிளம்பி விட்டாள்.
அம்மா இனிமே நான் அங்க போகலாமா என்று வினோதினி தேம்பித் தேம்பி அழுக ஆரம்பித்தாள். லட்சுமி அம்மா நாங்க வரதுக்கு முன்னாடி உங்க வீட்ல என்ன நடந்துச்சு வினோ என்று கேட்டார். இந்த ஆறு மாசமும் எப்படிம்மா இருந்த என்றார். நரேனோ ஒரு அரை மணி நேரம் அந்த அம்மா முகத்தை என்னால பாக்க முடியல அக்கா, எப்படி பொழுதுக்கும் அங்கே இருந்து அவங்களுடையேவாழ முடியும் என்றான்.
லட்சுமியும் இருடா சின்ன புள்ளத்தனமா பேசாத நரேன். முதல்ல என்ன நடந்துச்சுன்னு வினோ கிட்ட கேட்போம். அங்க இருக்கும்போது டீ னு நான் கொண்டு போய் கொடுத்தா என் கையால குடிக்க மாட்டாங்க அடுத்து சாப்பிட வாங்க என்றுஎத்தனை வாட்டி கூப்பிட்டாலும் வர மாட்டாங்க அதுக்கு பிறகு டீய கொண்டு போய் கேட்கும் போது கொடுத்தால் இது என்ன ஆறி போயிருச்சு என்பார்கள் அடுத்து சூடு பண்ணி கொடுத்தால் இவ்வளவு சூடா நான் குடிக்க மாட்டேன் என்பார்கள். நான் ஒவ்வொரு வாட்டி தலை குளிக்கும் பொழுதெல்லாம் மூஞ்சிய தூக்கி வச்சுக்குவாங்க என்னோட சரியா பேச மாட்டாங்க இதுதான் அங்கே நடந்துச்சு நான் யாருகிட்டடா சொல்லி அழுது புலம்புறதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். இதெல்லாம் ஏன்மா முன்னாடியே என்கிட்ட சொல்லல என்றார் வீரபாண்டி. என்னால நீங்க கஷ்டப்படக்கூடாது இல்லப்பா அதனால தான் பா உங்க யாருகிட்டயும் சொல்லல சரி சரியாயிடும் சரியாயிடும் நானும் இருந்துகிட்டே இருந்தேன். இன்னைக்கு உங்களை அந்த அம்மா வந்தவங்கள வாங்கனு கூட கேட்கலைன்னு சொன்னதால் தான் எனக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு. ஒருத்தங்க மக வீட்டுக்கு போறதுக்கு சொல்லிட்டு வருவாங்களா என்று அழுகையும் ஆத்திரமாக கேட்டாள் வினோதினி.
லட்சுமி கோ மனது பொறுக்கவில்லை தன் மகளை இவ்வாறாக செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டவுடன் கண்ணீர் அவர் கண்களில் ஆறாகப் பெருகியது. அம்மா வினோதினி நீ வா நம்ம முதல்ல ஹாஸ்பிடலுக்கு போவோம் அந்த அம்மா சொன்ன மாதிரி எதுவும் இருக்காது இருந்தாலும் நம்ம அதுக்கு முன்னாடி ப்ரூப் கொண்டு போய் காமிக்கணும் என்றார் வீரபாண்டி. மேலும் நான்தாம்மா உன்ன அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன் என்னோட தப்பு தான் ராஜன் மச்சான் காண்டி தான் நான் பார்த்தேன்அவர் உன்னை நல்லா பார்த்துக்கிறேன் எனக்கு வாக்கு கொடுத்தாரு. அப்பா மாமா பத்தியோ எனக்கு மோகன பத்திய எந்த பிரச்சனையும் இல்ல அவங்க ரெண்டு பேரும் என்னை புரிஞ்சுகிட்டு நல்லா தான் நடத்துறாங்க ஏன் லத்திகா கூட என்னைய நல்லா நடத்துறா, வீட்டிலேயே அத்தை மட்டும் தான்என்னை இப்படி நடத்துறாங்க என்றாள்
லட்சுமி வாமா வினோ நாளைக்கு ஹாஸ்பிடல் போய் நம்ம செக் பண்ணிட்டு வந்துடுவோம் அந்த அம்மா முகத்துல கரிய பூசணும் வா என்று கூறினார். அடுத்த நாள் காலையில் கிளம்பி வீரபாண்டியன் குடும்பமே ஹாஸ்பிடல் க்கு சென்றது அங்கு அவளுக்கு ஏகப்பட்ட டெஸ்டுகள் செய்தனர் கடைசியாக ஸ்கேன் பண்ணி பார்த்தனர் நர்ஸ் வந்து கொஞ்சம் பொறுங்க ரிசல்ட் வந்ததும் டாக்டரை பாக்கணும் என்றாள்.நைட் முழுவதும் வினோதினி தன் அம்மாவிடம் அழுது கொண்டிருந்தாள் அம்மா எனக்கு நீர்கட்டி இருக்குமோஅந்த அம்மா சொன்ன மாதிரி என்று அழுது புலம்பி கொண்டு இருந்தாள்.லட்சுமி அப்படில்லாம் நம்ம குடும்பத்துல யாருக்கும் இல்லடி உனக்கும் அந்த மாதிரி வராது கவலைப்படாம இரு என்று தேற்றினார். இருந்தும் வினோதினி அழுது கொண்டே இருந்தால்இப்பொழுதும் அதே கவலையோடு இருந்தாள். டெஸ்ட் ரிப்போர்ட்டில் என்ன வரப்போகிறது என்பதை இனி பார்ப்போம்