Advertisement

அவன் சட்டையை தாண்டி, அவள் உணர்ந்த அவனுடைய வாசனை, அவளை அவன் மேல் பைத்தியமாக்கியது.
“என்ன வேணாலும் செஞ்சிக்கோ”, என்ற படி அவனிடம் தன்னை ஒப்பு கொடுத்தாள் மது.
விரலை வைத்து அவள் முகத்தை மீட்டினான் தேவா. அவன் விரல்கள் போன பாதையின் பின்னே அவன் உதடுகளும் பயணித்தது.
அவனுடைய தொடுகையில் கரைந்து கொண்டிருந்தாலும், மதுவின் கால் கட்டிலில் இடித்து கொண்டிருந்தது. அவள் நகர வேண்டும் என்றால் அவனை விலக்க வேண்டும் என்ற உண்மை புரிந்து. அது முடியாததால் கட்டிலிலே  விழுந்தாள், அவனையும் இழுத்து கொண்டு.
அவள் திடிரென்று இப்படி இழுப்பாள் என்று அறியாததால் அவள் மேலேயே விழுந்தான்.
“ஆ”, என்று கத்தினாள் மது.
“சாரி மது. மேலே விழுந்துட்டேன்ல? இடிச்சிடுச்சா டா?”, என்று குலைந்து போய் வந்தது அவனுடைய குரல்.
“இல்லை கட்டில் தான் இடிச்சிருச்சு”
“ஓ நான் செய்றது பிடிக்காம தான் விலகுறியோன்னு நினைச்சேன். நான் செய்றது பிடிச்சிருக்கா மது?”, என்று கேட்டான் தேவா.
“எப்படி கேக்குறான் பாரு. பேசியே சாகடிக்கிறான்”, என்று நினைத்து கொண்டு அருகில் கிடந்தவனின் நெஞ்சில் சாய்ந்தாள் மது.
அவள் செய்கையை அவன் கேட்ட கேள்விக்கு விடையாய் எடுத்து கொண்டு அவளை இறுக்கி கொண்டான் தேவா.
அவள் மேல் கவிழ்ந்த தேவா, அவள் முகம் முழுவதும் முத்தத்தை பதித்தான். அவள் கைகள், அவன் முதுகில் அங்கே இங்கே அலைந்தது. 

முழு சரணாகதியாக தன்னிடம் அவள் அடைக்கலம் ஆகி இருப்பதை உணர்ந்தவன், அவளுக்கு மதிப்பளித்து அவளிடம் இருந்து விலக எண்ணி “சந்தோசமா இருக்கு மது. இப்படி உன்னையே தருவேன்னு நான் எதிர் பார்க்கலை. உன்னை கல்யாணம் செஞ்சிக்கிறது என்னோட பாக்கியம். இப்ப உன்னை நம்புறேன்”, என்று சொல்லி விட்டு எழ பார்த்தவனை அவள் கைகள் எழ விடாமல் தடுத்தது.

அவள் செய்கை புரியாமல் “என்ன டா?”, என்று கேட்டான்.

“எனக்கு… எனக்கு இப்ப நீங்க வேணும்”, என்றாள் மதுமிதா.

“மது”, என்று அதிர்ச்சியாக அழைத்தான் தேவா.

“ஆமா, எனக்கு நீங்க வேணும் ப்ளீஸ். என்னை என்ன வேணா நினைச்சுக்கோங்க. இப்ப நீங்க ஆரம்பிச்சதை முடிக்கணும். உங்க மனசுல உருவான சந்தேகம் முழுசும் போகலைன்னா, என்னால நிம்மதியா இருக்க முடியாது. அது மட்டும் இல்லாம, நீங்க எனக்கு கிடைப்பீங்களா, மாட்டிங்களான்னு என் மனசு ஊசலாடிக்கிட்டு இருக்கு. நாம ரெண்டு பேரும், முழு மனசோட சந்தோசமா இந்த கல்யாணத்தை செஞ்சிக்கணும்னா, நான் உங்க கூட வாழனும். அதுவும் இப்பவே”

“நான் கேட்டதே தப்பு மது. அப்புறம் வருத்தமா இருக்கும். கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் தான இருக்கு. அப்புறம் எல்லாம் முறைப்படி நடக்கட்டுமே”

“ஒரு பொண்ணா, நானே இப்படி கேக்குறேன்னு நீங்க என்னை தப்பா நினைக்கிறீங்களா அத்தான்?”

“அப்படி எல்லாம் இல்லை டா. நானும் தான் அப்படி கேட்டேன். ஆனா….”

“என்ன ஆனா? என்னை பிடிக்கலையா உங்களுக்கு?”

“அதெல்லாம் இல்ல. எது எது எங்க இருக்குன்னு கூட தெரியாது டி”, என்று சிரித்தான் தேவா.

அவன் வார்த்தையில் முகம் சிவந்தவள் “அதுக்கு நான் ஹெல்ப் பண்றேன்”, என்று முணுமுணுத்தாள்.

“இப்படி எல்லாம் ஏத்தி விடாத மது. நானே கஷ்ட பட்டு தான் விலகிருக்கேன்”

“இவ்வளவு யோசிக்கிறீங்கன்னா, எனக்கு சந்தேகமா இருக்கு அத்தான்”, என்று சொன்னவள் குரலில் சிரிப்பிருந்தது.

“என்ன சந்தேகம் மது?”

“இல்லை ஒரு வேளை, உங்களால முடியாதோன்னு தான்”, என்று சொல்லி சீண்டி விட்டாள்.

“இப்படி எல்லாம் சீண்டி விடாத டி. அதெல்லாம் முடியும். நடத்தி காட்டிருவேன். பேசாம இரு மது மா”, என்று சொன்னவனை தன் மேல் விழுமாறு இழுத்தவள் “பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க அத்தான் ப்ளீஸ். இன்னைக்கு ஒரு நாள்”, என்று சொல்லி கொண்டே அவனுடைய உதடுகளை சிறை செய்து அவன் முதுகில் கைகளை வைத்து பின்னி கொண்டாள்.
“இரு டி. ஒரு நிமிஷம். மது அங்க இருக்க பீரோல ஒரு கவர் இருக்கும் எடுத்துட்டு வாயேன்”, என்று சொன்னான்.
“என்னது அத்தான்?”
“நீ எடுத்துட்டு வாயேன். நான் சொல்றேன்”
“சரி இருங்க வரேன்”, என்று எழுந்து போனவள் எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்.
“உள்ள இருக்கிறதை வெளிய  எடு மது”
அவன் அருகே அமர்ந்தவள் அதை பிரித்தாள். அதில் ஒரு நகை பெட்டி இருந்தது. அதை வெளியே எடுத்தவள் “செயினா அத்தான்? இந்தாங்க. இப்ப எதுக்கு இது?”, என்று கேட்டு கொண்டே  அவன் கையில் கொடுத்தாள்.
“இது  என்னோட பொண்டாட்டிக்கு நான் கொடுக்குற முதல் பரிசு”, என்று சொல்லி கொண்டே அவள் கழுத்தில் போட்டான் தேவா.
அடுத்த நொடி அவன் நெஞ்சில் சாய்ந்தவளின் கண்ணில் கண்ணீர் வந்தது.
அதை அவன் சட்டையில் துடைத்தாள் மதுமிதா. அவன் கைகளும் அவளை அணைத்து கொண்டது.
அதுக்கு மேல் தன்னை கட்டு படுத்த முடியாமல், அவளை ஆக்ரமித்தான் தேவா. அவளை வார்த்தையால் சீண்டி, வெட்க பட  வைத்து கல்யாணத்துக்கு முன்பே முதலிரவை  முடித்தே  விட்டான்.
சிறிது  நேரம்  கழித்து, அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன், தன்னுடன்  அவளை இறுக்கி  கொண்டான்.
எல்லை   இல்லா  நிம்மதியுடன், அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் மது.
“மது”, என்று அழைத்தான் தேவா.
“ம்ம்”
“நான் ஏமாத்திருவேன்னு பயமா இருக்கா?”
“நீங்க ஏமாத்தினா கூட எனக்கு சந்தோசம் தான்”
“கல்யாணத்துக்கு முன்னாடியே  உன்னை எடுத்துகிட்டேன்ல? கோபமா  டா?”
“இல்லை”
“அப்புறம் ஏன் அமைதியா  இருக்க?”
“எனக்கு ஒன்னு  உங்க கிட்ட கேக்கணும் அத்தான்?”
“என்ன? இன்னொரு  தடவை  செய்யணுமா? எதுக்கும்  நீ கல்யாணம்  வரைக்கும்  என்னோட ரூம்க்கு  வராம  இருந்தா  சந்தோசம்”
“ச்சி  போங்க”
“இதுவே  வாங்கன்னு  சொல்ற  மாதிரி  தான் இருக்கு. சரி  என்ன கேக்கணும்  சொல்லு?”
“இல்லை… அது வந்து”
“என்ன டா?”
“இப்ப உங்களால என்னை உணர  முடியுமா அத்தான்?”
“உணர முடியுமான்னா? என்ன கேக்குற? எனக்கு புரியலை”
“இல்லை வேற  பொண்ணுங்க, உங்க கிட்ட  வந்தா  கூட  அது நானா இல்லையான்னு உங்களால கண்டு பிடிக்க முடியுமா?”
இந்த கேள்விக்கு  கட்டாயம்  பதில்  வேண்டும் அவளுக்கு. அதிக எதிர்பார்ப்புடன்  அவன் வார்த்தைக்காக  காத்திருந்தாள்  மதுமிதா.
“இந்த உலகத்தில்  உள்ள எத்தனை  பொண்ணுங்களை, நீ என் பக்கத்தில்  கூட்டிட்டு  வந்தாலும், என்னால உன்னோட  வாசனையை  கண்டு  பிடிக்க  முடியும் மது மா. உன்னை  பார்த்த  அந்த  நிமிஷமே  என்னோட மனசுல நிறைஞ்சவ நீ டா. உனக்காக வாங்குன செயின் தான் இது. இதை எப்ப உன் கழுத்துல போட்டேனோ, அப்பவே நீ என் பொண்டாட்டி தான். ஐ லவ் யு மது”
“தேங்க்ஸ் அத்தான்”
“கல்யாணம் முடியுற வரைக்கும் என் கூடவே இருக்கியா மது?”, என்று கேட்டான் தேவா.
“அடி வாங்க போறீங்க அத்தான்”, என்று சிரித்தாள் மது.
“ஏய் லூசு. அதை சொல்லலை. எனக்கு துணையா, இங்கயே இருந்துறேன்”
“அம்மா, அப்பா விட மாட்டாங்க”
“நான் அவங்க கிட்ட கேக்குறேன். நீ இருந்தா மனசுக்கு சந்தோசமா இருக்கு டா. இனி கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி நடந்துக்க மாட்டேன். ப்ளீஸ் இங்கயே இரு டா. அம்மா கூட தங்கிக்கோ”
அவன் கையை கிள்ளியவள் “உங்க மாமனார் சம்மதம் சொன்னா, எனக்கு சம்மதம் தான்”, என்று சிரித்தாள்.
“சரி வா கீழே போலாம். அவங்க கிட்ட கேக்கலாம்”
“இப்படியே போனா விளங்கிரும். எல்லா டிரஸ்சும் எங்க எங்கயோ கிடக்கு”
“ஹா ஹா, இப்ப தான் கண்ணு இல்லையேன்னு வருத்தமா இருக்கு”, என்று சிரித்தவன் “இப்போதைக்கு குளிச்சிட்டு மாத்த, மாத்து துணி கூட இல்லை. அதனால பழசையே போட்டுக்கோ மது சாரி”, என்றான்.
“இப்போதைக்கு இதையே மாத்திக்கிறேன்”, என்று எழுந்தவள் பாத்ரூம் போக பார்த்தாள்.
“எங்க போற மது? நீ கண் முன்னாடி மாத்துனா கூட எனக்கு தெரியாது”, என்று சிரித்தான் தேவா.
“இப்படியே பேசுனீங்க கடிச்சு வச்சிருவேன். ஒரு காக்கா குளியல் போட்டுட்டு மாத்திட்டு வரேன். தலைக்கு அப்புறமா குளிச்சிக்கிறேன். யாரும் கண்டு பிடிச்சிற மாட்டாங்க தான அத்தான்?”
“இது என்னை கட்டி பிடிச்சு இழுக்குறதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும்”, என்று சிரித்தான் தேவா.
அவன் கையில் கிள்ளியவள், “என்னவோ வேண்டா வெறுப்பா சொல்ற மாதிரி இருக்கு”, என்று சிணுங்கினாள்.
“இப்படி எல்லாம் ஏத்தி விடாத டி. நான் அடுத்த ரவுண்ட் ஆரம்பிச்சிற போறேன் மது. அப்புறம் கீழ இருந்து எல்லாரும் வந்துருவாங்க”
“சரி சரி போறேன்”, என்று சொல்லி போய் குளித்து விட்டு வந்தாள்.
கண்ணாடி முன்பு நின்று தன்னை சீர் செய்தவள், “எதுவும் வித்தியாசம் தெரியுதா அத்தான்”, என்று கேட்ட பின்னர் தலையில் அடித்து கொண்டாள்.
அவன் அதுக்கு என்ன சொல்வான் என்று தெரியும் ஆதலால், அவன் வாயை தன் கையால் மூடினாள்.
உதட்டில் படிந்த அவள் விரலுக்கு முத்தமிட்டவன், சிரித்து கொண்டே “வா போகலாம்”, என்று சொல்லி அவள் கை பிடித்து கொண்டே கீழே சென்றான்.
இருவரும் புன்னகையுடன் இறங்கி வருவதை பார்த்து அன்னம், கேசவன், சாவித்ரிக்கு நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருந்தது.

காதல் போராட்டம் தொடரும்…..

Advertisement