அறைக்கு வந்த சரவணனிடம் என்ன சரவணா எதுக்கு ஆதிசேஷன் வந்தாரு என்று குழந்தையை கொஞ்சியவனிடம் ஜானவி கேட்க!
அவர் மதுரைக்கு மாற்றல்லாகி இருக்கறத பத்தி சொல்லிட்டு நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டாரு என்றவன் உன்னிடம் சொல்லி செல்லலாம் என்று நினைத்தார் போல, ஆனால் நவிலன் அவர் பெண்ணை அழுக வைத்ததில் உடனேயே கிளம்பிட்டாங்க!
ம்….. என்ற ஜானவி , ஆமாம் அவருக்கு தான் கல்யாணமே ஆகலையே எப்படி அவருக்கு பொண்ணு?
அவரு இரண்டு பெண் பிள்ளைகளை தத்து எடுத்து இருக்கார் என்று சொன்னார் ஜானவி!
என்ன தான் முற்பிறவி என்று பல விடயங்கள் நமக்குள் நினைவுக்கு வந்தாலும் நம்மை இக்காட்டான சுழ்நிலையிலும் காப்பாற்றிய ஆதிசேஷனுக்கு, நீயும் நானும் சேர்ந்து நன்றி சொல்லி இருக்கனும் ஜானவி என்று சரவணன் சொல்ல!
ம் என்று பெருமூச்சு விட்ட ஜானவி நீ சொல்லுறது எல்லாம் சரி தான் சரவணா ஆனால், தீயினால் சுட்ட புண் ஆறும் ஆனால் காயம் தந்த வடு அப்படியே தானே இருக்கும்,அது நினைவு, நீ நிஜம் எனக்கு நிஜமான இந்த வாழ்க்கை போதும், நானும் ஆதிசேஷனும் சந்திகாம இருந்தா தான் எனக்கு நல்லது நம்ம குடும்பத்திற்கு நல்லது என்றவள் கணவனை அனைத்து நெற்றியில் இதழ் பதிக்க!
டு யூ லவ் மி ஜானும்மா!
ஏன் இந்த கேள்வி என் ஆசை அத்தானுக்கு!
பிகாஸ் கல்யாணம் ஆன இந்த நாலு வருஷத்தில் என்னோட காதல் மனைவி எனக்கு காதல் சொல்லவே இல்லை!
சொன்னா தான் காதலா என்று புருவம் உயர்த்தி ஜானவி கேட்க!
சொல்லாத காதல் செல்லாது என்று நான் சொல்ல மாட்டேன்,ம்…. ஆனால் சொன்னனா அது ஒரு தனி ஃபீல் என்றவன் மனைவி முகத்தை பார்க்க!
ஏய் ஜானவி அதான் உன்னோட ஹப்பி இத்தனை தடவை கேட்டும் லவ் சொல்லுறதுக்கு உனக்கு என்னடி என்று லோலிட்டா பக்கத்தில் நின்று கேள்வி எழுப்ப!
ஏய் எத்தனை தடவை சொல்லுறது நாங்கள் இரண்டு பேரும் பேசும்போதும், இருக்கும் போது பக்கத்தில் வராத என்று எத்தனை முறை சொல்லுறது போடி அங்குட்டு போய் நவிலன் பக்கத்தில் எந்த 👻 பேயும் ஆன்மாவும் இருக்க விடாம பேபி சிட்டர் பண்ணு என்று ஜானவி லோலிட்டாவை கிளப்ப!
இவ மட்டும் ஜாலியா லவ்ஸு பண்ணுவா அவ புருஷனோடநான் மட்டும் பேபி சிட் பண்ணட்டுமா இது என்னடா நியாயம்,புள்ளை என்னவோ அவளுது அதுக்கு காவல் காக்குற வாச்வுமேன் வேலை மட்டும் பிரியா பண்ணணுமா! நான் இன்னிக்கு ஹாலிடே வாங்கி எனக்கு ஒரு ரோமியோவோ இல்லை சேக்சுபியரையோ நான் டுயட்பாட கூட்டிட்டு வரலை, நான் லோலிட்டா இல்லை என்றவள் நவிலனிடம் டுடே ஐயம் ஹாலிடே பாய் பாய் மை பாய் என்று லோலிட்டா எஸ் ஆக!
நவிலனோ ம்மா என்று சத்தமிட்டபடியே அறைக்கு வர!
இங்கேயோ தாய் தந்தைக்கு லவ் யு லவ் யு என்று சொல்லி தந்தையை கொஞ்சி கொண்டு இருப்பதை கண்டு நவிலன் நானும் அம்மா, அப்பா, பாப்பா லவ் யு என்று முத்தா கொடுக்க!
இளங்கோ வீடு
என்னடி ஏதோ பெரிய டிசைனர் அது இதுனு ரொம்ப அல்டாப்பு என் பையன் தான் பண்ணான் பார்த்தா உங்க அப்பா அம்மா அதுக்கும் மேலே உன்னை பில்டப் பண்ணது, நான் கிச்சனில் சமைக்க தான என்று புலம்பிய படி சமைத்து இருந்த தாயை பார்த்து ம்மா…. என் செல்ல அம்மால பாவாம்ம்மா சீத்தா ஷீ ஸ் சோ டயர்ட், அவ சமையல் செய்யுறது உன் புள்ளை என்னாலயே சாப்பிட முடியாத அப்போ அவள் வயிற்றில் இருக்கும் எம் பிள்ளை எப்படிம்மா அந்த சாப்பாட்ட சாபிடும், பிளிச், மீ அண்ட் மை சன் பாபம், என்று அழுவது போல் வினிதா விடம் பேச!
அவனை மேலேயேயும் கிழேயும் கேவலமான லூக் விட்ட வினிதா து…. என்று துப்ப!
அதை ஏதோ சாதனை போலே ஏற்று முகத்தை துடைத்த இளங்கோ, ம்மா… இப்போ தான் புரியுது, எதுக்கு என் மாமனார் இப்படி சாப்பாட்ட புகழ்ந்தாருனு, என் மாமியாரும் இப்படி மோசமா சமச்சதனாலே ,என் மனைவி சீத்தாவும் இப்படி சமச்சாலோ?
இருக்கும் இருக்கும் யாரு கண்டா ஆமா,நீ எதுக்கு கிட்ச்சனே கதி என்று என் பின்னாடி இருக்க?
ம்மா அந்த சோக கதையை உன் விட்டா எனக்கு சொல்லுறதுக்கு யாரு இருக்கா, பாவி மக கன்சிவ்வான சந்தோஷத்தை சுவிட்டுடன் தான் பகிறுவாலாம் அதனாலா அவங்க அம்மா வீட்டுல சுவிட் என்ற பேர்ல் பசையை செஞ்சி ஊட்டுனா பாருங்க , அப்போ என் கண்ணுல கண்ணீர்ரோட வாயை தொறக்க முடியலைமா முடியலை ,அதை என் பொண்டாட்டி ஆனந்த கண்ணீர்னு தாப்பா நினைச்சாம்மா, தாப்பா நினைச்சா, நான் கண்ணீரோடு அவங்க அப்பா முகத்தை பார்த்தா மனிஷன் முகத்திலும் அதே ஆனந்த கண்ணீர்னா பார்த்துக்கோங்களேன்,அதுல என் மாமியார் அதை ருசிச்சு சப்பு கோட்டி சாப்பிட்ட என் மாமியார் சொன்னாங்க பாருங்க வார்த்தை அதுல பசை போல ஒட்டி இருந்த வாய், நோ என்று சொல்லி உடனே அங்கே இருந்து என் பொண்டாட்டிய கூட்டிட்டு வந்து இதோ இப்போ உன் முன்னாடி உன் புள்ளையாவே நிக்குறேன் பாரு அது நீ செஞ்ச புண்ணியம் ம்மா!
அய்யோ அம்மாவ ரோம்ப புகழாதடா மகனே என்று சிரிப்புடனே சொன்ன வினிதா, ஆமாம் உன்னோட மாமியார் அப்படி என்னத்த சொன்னாங்க என்று நீ இப்படி ஓடி வந்துருக்க!
அவங்க மகள் சமைச்தில், அவங்களுக்கு, அவங்க மகளுக்கும் எனக்கும் அடுத்த பத்து மாதத்திற்கும் அவங்களே அவங்க கையால சைமைச்சு போடனுமாம் அதான் நான் நோ சொல்லி கூட்டிட்டு வந்துட்டேன் என்று புருவம் உயர்த்தி இளங்கோ சிரிக்க!
அங்கு வரவேற்பு அறையில் மாமா எப்படி இருக்கு நான் செஞ்ச கேசரி என்று சீத்தா சந்தோஷத்துடன் இளங்கோவின் தந்தை ராமரிடம் கேட்க!
அவரோ ஏன்டா இந்த பசையை சாப்பிட்டோம் என்ற நிலைக்கு சென்றவர்,சைகையில் பிரமாதம் என்று சொன்னவர்,நீ சாப்பிட்டியா என்று கேட்க!
இல்லை மாமா,அம்மா அத்தை இந்த நேரத்தில் அதிக சுவிட் சாப்பிட வேண்டாம் என்று சொன்னார்கள் என்று சொன்னவள், அப்போது அங்கே வந்த சரவணன் மற்றும் அவர்கள் குடும்பம் வந்த சத்தத்தில் வினிதாவும்,இளங்கோவும் கிட்சனில் இருந்து வெளியே வர!
இளங்கோவிற்கு சரவணன் வாழ்த்துக்கள் என்று கட்டி பிடித்து சொல்லியவன், சீத்தா விற்கும் வாழ்த்து தெரிவிக்க!
ருத்ரன் என்ன தாத்தா ஆக போகிறத அல்லவா சாப்பிட்டு சந்தோஷபடுறியாடா தம்பி என்று ராமரிடம் ருத்ரன் கேட்க!
அய்யோ மாமா அது அல்வா இல்லை கேசரி நான் செஞ்சது! என்று சீத்தா சொல்ல
சரவணன் ஓ நீ செஞ்சதா சீத்தா ரோம்ப சந்தோஷம் அப்பா,அம்மாவுக்கு சுகர்ம்மா!
அதனால் அவங்க சாப்பிட மாட்டாங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கெலம்புறேன், நீ ஜானவிட்ட போன்ல பேசும் மா என்றவன் வேகமாக வெளியேற!
யூ டு புருடஸ் என்ற இளங்கோ செல்லும் சரவணனை பார்த்து சொல்ல!
எல்லாருக்கும் தெரிஞ்சது கடைசியில் தான் எனக்கு தெரிஞ்சுதா என்று நொந்தவன் இனி ஓடவும் முடியாது ஒளியும் முடியாது ஐ ம் வாட்சிங் என்று வாழ்க்கை சொல்ல!
தனக்கு வாய்தது இது தான் என்று நோந்த படி கேசரி, இல்லை பசையையை குளி தொண்டி புதைக்க சென்றான் இளங்கோ!
மெரினா பிச்
கடற்கரை மணலில் நடந்த படியும், தன் காதலியிடம் கடல் அலைகளை பார்த்தபடி கடலைப் போட்டு கொண்டு இருந்த பல அழகான ஆண்களை சயிட் அடித்து கொண்டு இருந்த லோலிட்டா, அங்கே சம்மந்தமே இல்லாதபடி கடலை ரசனையுடன் பார்த்து கொண்டு இருந்த சைனீஸ் பையனைப் பார்த்து அச்சோ கியூட்டா இருக்கானே, தூரத்திலே இவ்வளோ அழகு பக்கத்தில் போய் பார்த்தா முழு அழகையும் ரசிக்கலாமே என்று சைனீஸ் பையனைப் சுற்றி சுற்றி ஆவியாக இருந்த லோலிட்டா வட்டம் போட!
ஏய் பொண்ணே ஏன் ரசனையை கலைக்காம அப்படிக்கா போய் வட்டம் போடு சைனீஸ் காரண் சொல்ல!
அச்சோ அச்சோ நான் உங்கள் கண்ணுக்கு தெரியுரனா, நீங்களும் பேய் பார்ப்பிங்களா,அச்சோ ஐயம் சோ ஹாப்பி என்று லோலிட்டா கூச்சல் போட!
சைனீஸ் காரணோ அட பேயே நானும் ஆவின்னு தெரியாம தான் என்ன சைட் அடிச்சியா!