உன்னை நினைத்து 21

ஆதிசேஷன் தனது பழைய வீட்டை விற்று  புதிதாக தாங்கள் செல்ல போகும் மதுரையில் வீடு வாங்கி அங்கு பொருட்களை  வைத்து எல்லாவற்றையும் சரிப்படுத்தி, அங்கு தாயையும் மகளையும் குடி அமர்த்தி இதோ  பணி மாற்றம் மதுரையில் வாங்கிக் கொண்டு தன் சக அதிகாரிகளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு,நேராக சென்றது என்னவோ அரசு குழந்தைகள் காப்பகம் ஆம் அவன் ராதைக்கு வாக்கு கொடுத்த படி இந்த ஒரு மாதமும் ராதையை தனது மகளாக மாற்ற  எல்லாம் ஆவனங்களையும் அவனை பற்றி என்று எல்லாவற்றையும் சமர்பித்து  அவர்கள் அங்கீகரிக்கப்பட்டு  கடைசியில் ஒரு மரத்தின் அடியில் மற்ற குழந்தைகளை பார்த்து அமர்ந்து இருந்த ராதையின் அருகில் அமர்ந்த ஆதிசேஷன் தன்னை கண்டுகொள்ளாது அமர்ந்து இருந்த ராதையை பார்த்த படி ஐந்து நிமிடம் அப்படியே அமர்ந்து இருக்க!

யாரோ யவரோ தன்னருகே அமர்ந்தது என்று மேம்போக்காக இருந்த ராதை,அரை விழிகளால் அருகில் இருந்தவனை பார்த்தவள் இப்போது ஆச்சிரியாத்தில்  கண்களை விரித்தவள்

இப்போது  முழுதாக பார்த்தவள் நம்ப முடியாமல் கண்ணை கசக்கி கொண்டு பார்க்க!

ஆம் ராதை  நீ கண்ணை  கசக்கி பார்த்தாலும் நான் தான்  அப்பா தான் தெரிவேன்  பார்த்தியா அப்பா சொன்னது போல உன்னை நம்ம வீட்டுக்கு அழைத்து செல்ல வந்திட்டேன் என்று சிரித்தபடி ஆதிசேஷன் கூற!

அதுவரை கட்டுபடுத்தி வைத்த அழுகையெல்லாம் ஒன்று திரட்டி அப்பா என்று அழுதபடி ஆதிசேஷனை அனைத்து அழ!

காப்பகத்தின் உரிமையாளர் என்ன ஆதி சார் குட்டி பாப்பாக்கு உங்க கூட வர விருப்பம் இல்லையோ என்று கேட்க!

நோ நான் அப்பா கூட தான் நான் போவேன் அப்பா எனக்காக தான் வந்தார் ஆமாதானேப்பா!

ம்..‌.. என்று மகளை அனைத்தபடி கூறியவன் இன்னும் சில ஆவனங்களிள்  அவனிடம் கையெழுத்து வாங்கி , எங்க ஆட்கள் மதுரையில் மாதம் ஒரு முறை குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று  செக் செய்வோம் ஆதி சார், இப்போது நீங்கள் இந்த குட்டி ராதையை அழைச்சிட்டு உங்கள் வீட்டுக்கு போகலாம் என்றவர் விடைதர!

அப்பா  பாட்டி அக்கா வரலையா!

ஆதிசேஷன் கார் ஓட்டியபடியே   அவங்க ஊர்ல இருக்காங்க நாமலும் அங்க தான் போறோம் அங்கே மதுரையில் தான் நம்ம வீடு இருக்கு!

மதுரை எங்கே இருக்கு?

 நானூறு கீலோ மீட்டர் தொலைவில் இருக்கு!

ஓ அவ்வளோ தூரமா……!

ம்…. ஆமாம் என்றவன் இப்போது வண்டியை ஒரு பெரிய வீட்டின் முன் நிப்பாட்டி ராதையை கையில் தூக்கி கொண்டு  அங்கு நின்றிருந்த காவலாளியிடம் ஆதிசேஷன் வந்து இருப்பதாக உரிமையாளரிடம் சொல்லச் சொல்ல!

அவனும் இன்டர் காமில் சொல்ல பதிலுக்கு அவர்கள் அவனை உடனேயே அனுமதிக்க சொல்ல!

 ஆதிசேஷன்  உள்ளே நுழைந்தவன் அங்கு தொட்டத்தில் குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல் சர்க்கஸ் என்று பார்த்தபடி மகளை தூக்கி கொண்டு உள் நுழைய!

மகளோ  அப்பா இது யார் வீடு!

தெரிஞ்சவங்க வீடுடா குட்டிம்மா!

ருத்ரன்,பார்வதி, வாங்க வாங்க ஆதி சார் என்று வாசலில் வந்து வரவேற்க!

ஹாய் ஹாலோ எப்படி இருக்கிங்க ருத்ரன் சார்!

ஐ யம் குட் ஆதி, நீங்க மதுரைக்கு மாற்றல் வாங்கியிருக்கிறதா சரவணன் சொன்னான் , அங்க லைப் எப்படி போகுது  எல்லாம் அங்கே செட்டில்டா, இல்லை நம்ம ஆளுங்களை உங்களுக்கு ஹெல்ப்க்கு வர சொல்லட்டா?

நோ நோ எல்லாம் அங்கே செட்டில்டு சார் நான் வந்தது இதோ என் மகள் ராதையை எங்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல தான் என்று தனது மடியில் அமர்ந்து இருந்த ராதையை காட்டியவர், பின்பு சரவணனிடம் பேசி செல்ல வந்தேன் சரவணன் வீட்டில் இல்லையா?

நவிலனை ப்ளே ஸ்கூல் சேர்த்து இருக்கோம் சரவணன் அழைத்து வர போயிருக்கான் வர டயம் தான் என்ற ருத்ரன் பார்வதியிடம் பேபி சாப்பிட ஏதாவது எடுத்து வா என்று கூறி அனுப்ப!

சரவணன் நவிலனை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தவன் ஆதிசேஷனை கண்டு அதிர்ந்தவன்,மகனை

பார்க்க, நவிலனோ  ஆதிசேஷனை முறைத்த படி தனது தாத்தாவின் மடியில் போய் அமர்ந்து கொள்ள!

நவிலன் தன்னை முறைப்பதை கண்டு வருந்திய ஆதிசேஷன் சரவணனிடம் பேசவேண்டி, வெளியே போய் பேசலாமா என்று கேட்க!

ம்….. என்று யோசனையுடன் சொன்ன சரவணன் தோட்டத்திற்கு செல்ல!

ம் அப்பா எங்கே போறிங்க என்னை விட்டு என்று போகும் ஆதிசேஷனை பார்த்து ராதை கூற!

சரவணன் அப்பா என்று கேட்ட குரலில் வெளியே சென்றவன் திரும்பி பார்க்க!

அச்சோ குட்டி அப்பா பேசிட்டு வருவேன் அதுவரை நீ நவிலனோட விளையாடு என்று சொல்லிய ஆதி வெளியே செல்ல!

 இங்கு ராதையோ தன்னை முறைத்த படி அமர்ந்து இருந்த நவிலனை கண்டு பார்த்தவள், கைகளை பிசைந்த படி அந்த சோஃபாவில் அந்த சின்ன பிட்டு அமர்ந்து இருக்க!

ருத்ரன் உன் பேர் என்ன என்று ராதையை பார்த்துக் கேட்க!

ரா…ரா…ராதை….. என்றவள் அவங்க…அவங்க…அந்த பையன் என்ன பார்த்து முரை…முரைக்குரான் எனக்கு பயமாக இருக்கு…. நான் அப்பாட்ட போகனும் என்று அழுதபடி பேச!

பார்வதி அச்சோ நிவிலா பாரு உன்னை பார்த்து அந்த குட்டி பாப்பா அழுகுறா பாரு என்ற பார்வதி ராதையை பார்த்து உனக்கு குட்டி பாப்பா காட்டட்டா என்று கேட்க!

ராதை சுத்தியிலும் பார்வை பதித்தவள் பாப்பா காணோம் என்று கேட்க!

பாப்பா இங்கே இல்லை வா உனக்கு பாட்டி காட்டுறேன் என்றவர் மேலே ஜானவி மடியில் தூர்கா படுத்தபடி அ….உ… என்று ஓசை கொடுக்க!

அதை தூரத்தில் பார்த்த ராதை கண்களில் ஆசையாக பார்த்தவள் பார்வதியிடம் குட்டி பாப்பா என்று சொல்லி சிரிக்க!

ஜானவி  தனது மாமியார் தூக்கி வைத்து இருக்கும் ராதையை ஆச்சிரியத்துடன் பார்த்தவள் யார் பாப்பா அத்தை இவங்க,சோ குயூட் என்று கேட்க!

போலிஸ் அதிகாரி ஆதிசேஷன் மகள் என்று சொல்ல!

என்ன ஆதிசேஷன் சார் பொண்ணா, அவருக்கு திருமணம் ஆகலியே என்று மாமியாரை பார்த்து கேட்டவள், அதற்குள் தூர்கா அருகில் வந்த ராதையை தள்ளி விட்டு நவிலன் இவ என்னோட பாப்பா நீ தொடக்கூடாது என்று சத்தமிட!

இந்த சத்தத்தில் தூர்காவும்,கிழே விழுந்ததில் ராதையும் வீறீட்டு அழ!

இந்த சத்தம் கேட்டு ஆதிசேஷன் மகளை தேடி தோட்டத்தில் இருந்து வரவேற்பு அறைக்கு வந்தவன் அங்கு மகள் இல்லாது இருந்ததை கண்டு பதட்டமாக, ருத்ரனோ குழந்தை ராதையை சாமாதானபடுத்திய படியே வந்தவர், குழந்தையை ஆதிசேஷனிடம் தர!

அப்பா அப்பா என்று ராதை அழுக,அச்சொ கண்ணம்மா என்ன என்னாச்சு குட்டி ராதைக்கு என்று கேட்க!

அப்பா அப்பா அந்த பையன் பேட் பாய், என்று விம்மியபடியே  சொன்னவள்,வாப்பா நாம போகலாம் போகலாம் என்று விடாது அழுக!

சரவணன் லிட்டில் பிரின்ஸஸ் அழுக கூடாது, பாருங்க நீங்க அழுததால வானம் அழுகுது என்று அப்போது தான் தூர ஆராம்பித்து இருந்த மழையை காட்ட!

அப்போது தந்தையின்  தோளில்  தன்னை மறைத்த படி அரை கண்ணால் சரவணனை பார்த்தவள் ரியலி என்று கேட்க!

ரியலி லிட்டில் பிரின்ஸஸ் என்று சரவணன் சொல்ல!

ஆனால் அவன் பேட் பாய்  என்று உதட்டை பிதுக்கியவள்,தந்தையை  பார்த்து கண் சமிட்டி வெளிவர துடித்த கண்ணீரை உள்ளித்து போலாம் ப்பா என்று கேட்க!

ஆதிசேஷனுக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது குழந்தை ராதையை பார்த்து சரி கிளம்புறேன் சரவணா என்று சொன்ன ஆதிசேஷன் அனைவரிடமும் விடைபெற்று சென்று விட்டான்!