அதனால் விரைவாக ஆதிசேஷனை வரும் படி சொல்லி மகனிடம் ஏற்கனவே சொல்லிவிட்டுருக்க!
இது எதுவும் அறியாத ஆதிசேஷன் சரவணன் அழைத்து கொண்டு சாதாரணமாக அமர்ந்து எதிரேயுள்ள சுவரை வெறுமனே பார்த்து கொண்டு தரையில் அமர்ந்து இருந்தனர் தாய் சேய் இருவரும்!
சரவணன் ஓடி சென்று ஜானவியை தொட முயல அதே நேரம் பின்னாடி டோமேன்று ஒருவர் கட்டையை வைத்து சரவணனை தலையில் அடிக்க அப்படியே சரவணன் அலரியபடியே மயங்கி கிழே விழ!
உள்ளரையில் அமர்ந்து இருந்த சிகாமணி கூட்டதினருக்கு சந்தோஷம் வர, ஆதிசேஷனிற்காக காத்து கிடக்க!
ஆதிசேஷன் ஓரு தலையை துணியில் கட்டி அந்த துணியில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட தந்தையிடம் கொடுக்க, அதனை சந்தோஷத்துடன் வாங்கிய சிகாமணி உள்ளே இருக்கும் அந்த தலையை பார்க்காமலே பூஜையை முடிக்க, ஜானவியை தன் சிசியனிடம் அலைத்து வரும் படி சொல்ல!
இப்போது ஜானவி உடம்பில் லோலிட்டா நடந்து வர, இதனை அறிந்த சிகாமணி ஜானவி உடம்பில் இருந்த லோலிட்டாவை போகச் சொல்லி ஆன்மாவை மற்றும் தூர்ஆன்மாகளை கட்டு படுத்தும் மந்திர பூக்களை தூவ!
இங்கே ஜானவி உடம்பில் இருந்து வலியில் விலகிய லோலிட்டா சிகாமணி கைகளில் உள்ள எழுமிச்சை பழத்தில் சிக்கி கொள்ள!
நேரம் நகர்ந்து கொண்டே இருக்க பதறிய சிகாமணி மகனை மாங்கல்யத்தை கட்ட சொல்ல!
அதே நேரம் காற்று பலமாக வீச லோலிடாவின் ஆன்மா கூட்டம் இதனை தடுப்பதற்கு தங்களால் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய! நடப்பது எதுவும் சரியில்லாமல் இருக்க அதே நேரம் ஜானவிக்கு இந்த எட்டாம் மாதத்திலே பிரசவ வலி வர தொடங்க!
இதனை பார்த்து பயந்த சிகாமணி சீக்கிரம் கட்டுடா தாலியை என்று கையில் கொடுத்து கட்ட சொல்ல!
இத்தனை நேரம் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பை போல மந்திரத்திற்கு கட்டு பட்டு தந்தை சொல்லியதை செய்து கொண்டு இருந்த ஆதிசேஷன் ஜானவியின் குரலில் நிஜ உலகத்திற்கு வந்தவன் தன்னை சுற்றி நடந்து கொண்டிருந்ததை கண்டு போலிசாக இருந்தும் சற்று அஞ்சியவன் ஜானவியின் அழுகுரலில் ஜானவியை கைகளில் தூக்கியவன் வேகமாக அங்கிருந்து அந்த வீட்டில் இருந்து வெளியேற!
ஜானவி அந்த பிரசவ வலியிலும் அய்யோ என்னோட பையன் நவிலன் என்று ஜானவி அழுக!
அதனை கருத்தில் கொள்ளாத ஆதிசேஷன் வேகமாக அந்த மந்திரகட்டிற்கு இருபது அடி. தல்லி வந்தவன் அங்கே நின்றிருந்த சரவணனிடம் ஜானவியை ஓப்படைத்தவன் வேதனையோடு கண்ணில் சிறுவலியோடு தன்னையே முறைத்த படி இருக்கும் மகன் நவிலன் தலையை வருடியவன் உடனே இங்கிருந்து நகருமாறு சரவணனிற்கு கட்டளை இட்டவன் , அங்கிருந்த தன்னுடைய வண்டியின் சாவியை கொடுத்தவன் , மீண்டும் அந்த விட்டிற்கு உள்ளே போகச் செல்ல!
அதற்குள் வெளியே வந்த சிகாமணி குருப்ஸ் அங்கே உயிரோடு இருந்த சரவணனை கண்டவர்கள் ஆதிசேஷன் தாம் சொன்ன எதுவும் செய்யாமல் இருந்திருக்கிறான் எப்படி தன் வசியத்த்திலிருந்து தப்பித்தான் என்று தெரியாமல் ஒரு நோடி சிந்தித்தவர் மறுநோடுயே சரவணனை கொள்ள தன் கையில் இருந்த வால் கொண்டு சரவணனை நோக்கி குறிபார்த்து வீச!
அதில் சரவணன் கழுத்தில் வால் ஓருக் கழித்து இடது பக்கம் உரசி செல்ல அதில் சரவணனுக்கு கழுத்தில் சிறிதாக ரத்தம் வர!
இதனை பார்த்த ஜானவி ஐயோ சரவணா என்று அலரியவள் இப்போது பிரசவ வேதனையிலும் கணவனின் கழுத்தில் உதிரும் ரத்தத்திலும் கத்தி அலர!
நவிலன் அம்மா அப்பா என்று ஒரு பக்கம் அழுக!
ஜானவி தண்ணீர் குடம் உடைந்து குழந்தை பிறக்க போவதை சொல்ல!
ஆதிசேஷன் இந்த திறந்த வெளியில் ஜானவி பிரசவம் நடைபெற வேண்டாம் என்று நினைத்தவன் தன் தந்தை ஜானவியிடம் வேகமாக வருவதை அறிந்து ஜானவியை அழைத்து கொண்டு வேகமாக காரிர்குள் படுக்க வைத்தவன் அவள் அழுகையை காண பொறுக்க முடியாதவன் உன் கணவனை, நான் உன்னிடம் சேர்க்க,நீ இந்த குழந்தையை கஷ்டப்பட்டு பெத்து எடு என்று கூறியவன், வெளியே காரினை ஓப்பன் செய்ய வந்த தந்தைக்கு வேகமாக அடிகள் பல கொடுக்க அதனை வாங்கி கொன்டு இருந்தவர் அந்த குழந்தை பிறந்துடிச்சினா உனக்கு உன்னோட கங்கை கிடைக்கமாட்டா சீரஞ்சீவி என்று இவர் ஆதிசேஷனிடம் முன் ஜென்ம சீரஞ்சீவியை அழைக்க ,அதனை கேட்டு ஆதிசேஷன் கண்கள் ரத்த நிறத்திற்கு வந்து அவரை உள்ளே ஜானவியிடம் போக அனுமதி தர!
அதே நேரம் இரண்டு வயது நவிலன் அந்த கிராமமே அதிர்ந்து போகும் ஹா……………….. என்று அந்த நடுநிசி வேலையில் கத்த!
அந்த சத்தத்திற்கு கட்டு பட்டு அந்த ஊர் கிராம தேவதைகளும் காவல் தெய்வங்களும் வர!
அதே நேரம் சீகாமணி இங்கு ஜானவியின் கழுத்தை சிகாமணி நெருக்க,தாயிற்கு எதோ ஆகபோவது தெரிந்து ஜானவிசரவணனின் இரண்டாவது மகள் தூர்கா,அந்த ஜகன்மாதா தூர்கா தேவி எப்படி மகிஷனை வதம் செய்தாளோ அதே போல் இந்த தீயவனை கொல்ல தான் பிறந்தால் தான் முடியும் என்றும் இவள் பிறந்தால் தான் ,கடவுள் நான் உன் முன்னே தொன்றுவேன் என்று பிறப்பதற்கு முன்பே நவிலன் தூர்காவிற்கு வரம் கொடுத்த கடவுள் அதன் படியே நின்றவர்கள்!
தங்கள் ஆயுதங்கள் கொண்டு அனைவரையும் அழித்தவர்கள் நவிலனிடம் சிரித்தபடி விடை கொடுத்தவர்கள், தூர்கா தேவியை காற்றில் வாழ்த்தி விட்டு செல்ல!
கடைசியாக இருந்த எல்லையம்மன் அங்கே அனாதறவாக பிள்ளை பெற்று மயங்கி இருந்த ஜானவியின் தலையை வருடியவர் , என்னோட எல்லையில் எப்போதும் எந்த உயிரும் போக விடமாட்டேன்,அதே போல தீயவர்கள் வந்தால் காணமால் போவார்கள், என் எல்லையில் என்னையே கட்டி போட்ட அவனை உன் மகன் மற்றும் மகளாள் விடுபட்ட நான் உனக்கு வாக்கு தருகிறேன் எந்த கஷ்டமான நேரத்தில் நீ என்னை அழைத்தாலும் உனக்காக நான் வருவேன் என்றவர் மாயமாகி மறைந்து விட!.
இத்தனை கிராம தெய்வங்கள் வந்து தீயவர்களை கொண்றது யாருக்கும் தெரியாமல் போனது ஏன் என்றால் சரவணன்,ஜானவி, ஆதிசேஷன் மற்றும் பாடிகார்ட்ஸ் அனைவரும் மயங்கி இருக்க,வந்தது இருவருக்கும் மட்டும் தான் தெரியும்!
சம்பவம் நடந்து முடிந்த சிறது நேரத்தில் போலிஸ் ஜீப் மற்றும் ஆம்புலன்ஸ் வந்து இறங்க,அதில் ஆம்புலன்ஸில் இறந்தவர்களை ஏற்றியவர்கள் அதற்குள் மீடியாக்கு நீயூஸ் போக எல்லோரும் ஆதிசேஷனிடம் பேட்டி எடுக்க வர!
அதற்குள் சீனியர் அபிசர்கள் ஆதிசேஷனை என் கோயரிக்காக அழைத்து செல்ல பட!
ஹாஸ்பிடலில் ஒரு பக்கம் ஜானவி மற்றும் குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா என்று அனுமதித்து செக் செய்யபட!
மறுபக்கம் சரவணனிற்கு உதிரம் வெளியேறியதால் உதிரம் செலுத்தி கழுத்தில் கட்டுயிட்டு படுக்கையில் இருக்க!
அதற்குள் திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு வந்த பார்வதி,இளங்கோ,சீதா, தான்யாலஷ்மி, ருத்ரன், கிரிதரன்,அது என்ன உனக்கு ஒரு தகவல் தெரிஞ்சு இருந்ததுனா எங்களையும் அழைச்சிட்டு தானே போகனும் நீ பாட்டுக்கு வந்து பாரு என்ன ஆகியிருக்கு என்பவர்களுக்கு,
இதற்கு காரணம் சிகாமணி என்று தகவல் சொன்ன சரவணன், இனியும் ஜாதகம் தாயத்து என்று கண்டதையும் அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்க என்று நம்பாதிங்க, அதனால் என்ன ஆகியிருக்கு பாருங்க நல்ல வேலை என் பசங்களுக்கும் என்னோட மனைவிக்கும் எதுவும் ஆகவில்லை அந்த சிகாமணியால்,எல்லாத்திற்கும் அவர் மகன் ஆதிசேஷனிடம் தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்!
நல்ல போலிஸ்காரர்,”இளங்கோ”!
ஆமாம் எங்க அக்கா பாப்பா எல்லோரும் எங்க இருக்காங்க இப்போ! “சீத்தா”
பக்கத்து ரும்ல தான் இருக்காங்க,”சரவணன்”
வேகமாக அந்த ரும்க்கு சீத்தா செல்ல, அங்கே நவிலன் குட்டி பாப்பா,புஜ்ஜி பாப்பா விளையாட்டு காட்ட,
அடடே ஒரு குட்டி புஜ்ஜு பாப்பா, இன்னோரு பாப்பாவ கொஞ்சுதே என்று சொல்லியபடி தொட்டிலில் இருந்த குழந்தையை கண்டு அச்சோ அக்கா அழகா தேவதை போல இருக்கா அக்கா அப்படியே உன்னை போல இல்லை, என்னை போல இருக்கா பாப்பா என்று பல் இழித்து சீத்தா கூற!
நவிலன் நோ பாப்பா அம்மா போல அழுவா (அழகா) இக்கா(இருக்கா)
அப்படியே குடும்பத்தில் உள்ள அனைவரும் குழந்தையையும் பார்த்து விட்டு ஒருவர் மாற்றி ஒருவர் பெண்கள் துணை இருக்க!
நான்கு நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்து சரவணன் ஜானவி, குட்டி அம்மு தூர்கா, நவிலன் அனைவரும் சென்னைக்கு வந்துவிட்டனர்.