Advertisement
உனக்கானவன் உனக்கே
உன்னவன் – 5
என் வாழ்வில்…..
நான் காணும்
பல ஆயிரம் முகங்களில்….
உனது முகம் மட்டும்
என் மனத்திரையில்…..
பதிய வேண்டுவதும்
ஏனடி… என் சகியே…..
மனதில் நீங்கா என்
கண்ணம்மா….!!
மீரா அழகுதான்….. அதிலும் ரோஸ் நிறமும், குண்டு கண்களும் அவளை பேரழகியாகவே காட்டும். ஆனாலும் அவளை வெறும் அழகியாக மட்டும் தன் மனம் எண்ணவில்லை என ஏ.கே முழுமையாக உணர்ந்தான். அதையே தன் நண்பனிடமும் கூறினான்.
“மச்சான் உன்ன மாத்துன அந்த பொண்ண நான் பாக்கனுமேடா…..” என்றான் சத்யா ஆவலுடன்.
“டேய்….. நானே லவ் பண்றேனா…. இல்லயான்னு குழப்பத்துல இருக்கேன்.. இதுல நீ வேற ஏன்டா…..?” என்று சலித்துக்கொண்டான் ஏ.கே.
“மச்சான்…. நீ தான் லவ் பண்றேன்னு சொன்ன.. இப்போ நீயே இப்புடி சொன்னா என்ன அர்த்தம் மச்சி”
“ஏய்…. லவ் பண்றேன்னு நெனைக்கிறேன்னு தானடா சொன்னேன்”
“ஓ…. சாரி மச்சான். காயப்போட்டுட்டு சொல்லு. அப்புறமா பாப்போம்”
“டேய்….. என் கண்ணு முன்னாடி மட்டும் இருந்த…. நீ போடுற மொக்க வரவர எல்லய மீறி போகுதுடா” என்றான் ஏ.கே கடுப்புடன்.
“சரிடா சீரியஸ்….. சொல்லு உனக்கு இப்ப என்ன தான் பிரச்சனை” என்றான் சத்யா.
“மச்சி லவ் எப்புடி மச்சி வரும்….”
“அதான் சொன்னேனேடா ட்ரெய்ன் பிடிச்சு”
“டேய்…… நீ மொதல்ல போன வை” என்று ஏகத்துக்கும் கடுப்பானான் ஏ.கே.
“மச்சான்….. என்ன விட்டா நீ வேற யார்கிட்டயும் இதபத்தி பேச மாட்ட. சோ…. உனக்கு வேற வழியே இல்ல நான் பேசுறத எல்லாம் கேட்டுதான் ஆகனும். சொல்லு சொல்லு” எனவும் தன் நிலையை நொந்து மீண்டும் சொன்னான்.
“இது லவ்தானா இல்ல சும்மா வெறும் ஈர்ப்பு தானான்னு தெரியனும்டா”
“ஓ….. அதுவா மச்சி… அவள பாக்கும் போது…. சோன்னு மழை, சில்லுனு காத்து, உன்ன சுத்தி வயலின் சத்தம், அவ மேல பூமழை இதெல்லாம் நடந்தா அது தான் மச்சான் லவ்” என்றான் சத்யா குறும்புடன்.
“டேய்….. இதென்ன சினிமாவா? இதெல்லாம் நடக்க….”
“தெரியுதுலடா வெண்ண! மச்சான்….. நீ ஒரு பொண்ண பத்தி பேசிட்டு இருக்கடா…. அதுவும் இவ்ளோ நேரமா….. ஐ திங்க் ஸீ இஸ் த ஒன் மச்சி” என்றான் இன்பமாய்….
“மச்சி…. அப்புடினா…. நான் அவள லவ் பண்றேன்னு சொல்றயாடா? ” என்று கூறினான் ஏ.கே அப்போதும் குழப்பமாக…
“அது எனக்கு சரியா தெரியல மச்சான்… ஆனா அவகூட இருந்தா என்ன மறந்துடறேன்னு சொன்ன பாரு…. அவ தான்டா உனக்கானவ” என்றான்.
“அப்போ… நான் போய் அவகிட்ட ப்ரபோஸ் பண்ணவா….”
“எப்போ மச்சி”
“ம்…. இப்போ….. கால் பண்ணி சொல்றேன்”
“மச்சி நான் ஒன்னு கேக்கவா….”
“கேளுடா… மச்சி”
“நீ ஏன் இன்னும் சாகல”
“டேய்….”
“பின்ன என்னடா…? போன் பண்ணி லவ் சொல்றானாம். நீ எல்லாம் லவ் பண்ணலைன்னு யாருடா அழுதது” என்றான் கோபமாக…
“டேய்…. வேற எப்புடி தான்டா சொல்றது”
“மச்சான்… இப்போ உன்ன நெனச்சா என் மனசுல என்ன தோனுது தெரியுமா”
“சொல்லித்தொல… கேக்கலைன்னா மெஜேஜ் பண்ணியாச்சும் சொல்லிருவ…. அதுக்கு இப்பவே சொல்லு கேட்டுத் தொலையிறேன்” என்று சலித்துக்கொண்டான் ஏ.கே.
“டேய் எரும… அடுத்தவன் என்ன சொல்ல வர்ரான்னு கேட்டுட்டு பேச மாட்டியா? உன்ன கண்டிப்பா மதி ஆன்ட்டி பெத்துருக்க மாட்டாங்கடா….. ஆஸ்பத்திரில மாத்தி தூக்கிட்டு வந்துருப்பாங்க” என்றான் சத்யா கோபத்துடன்.
“ஏய்… சொல்லித்தொலடா மொதல்ல”
“மச்சான், ரெண்டு நாள் முன்னாடி ஆன்ட்டி கால் பண்ணாங்க. நீ பேசுனத சொல்லி ரொம்ப பீல் பண்ணாங்கடா. நான் உங்கிட்ட பேசறேன்னு சொன்னதுக்கு கூட வேண்டான்னு சொல்லிட்டாங்க. ஆனா அவங்க நம்பிக்கையா சொன்னாங்க மச்சி…. என் பையனுக்கு ஏத்த பொண்ணு அவன தேடி வருவா… அவனே வந்து இவதான் என் பொண்டாட்டி எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேப்பான்னு சொன்னாங்க. இன்னிக்கு அது நடந்துடுச்சு மச்சி. சந்தோசமா இருக்குடா” என்றான் சத்யா உண்மையான மகிழ்ச்சியுடன்…..
“உண்மை தான்டா…. ஏன்னே தெரியாம கல்யாணத்துல வெறுப்பா இருந்தேன். நான் இதுவரைக்கும் பாத்த பொண்ணுங்க மாதிரி தான் எல்லா பொண்ணுங்களும்ன்னு நம்பிட்டு இருந்தேன். எல்லாத்தையுமே அவ மாத்திட்டாடா” என்று கண்களில் கனவு மிதக்க கூறினான் ஏ.கே.
“சரி மச்சி…. கண்டிப்பா மதுரைக்கு போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து உன் மனச மாத்துன தேவதைய பாத்துட்டு போறேன். அதுவரைக்கும் கனவு கண்டுட்டு இரு. ஆனாலும் மச்சி…. உங்கிட்ட இந்தளவுக்கு எதிர்பாக்கலடா” எனவும் ஏ.கே சிரித்தான்.
“சரி வா மச்சான்” என்று அழைப்பை துண்டித்த ஏ.கேவிற்கு நம்ப முடியவில்லை. ‘நான் லவ் பண்றேனா? ‘ சிரித்துக்கொண்டே கண்மூடி தலைகோத ‘இந்த பார்வைக்கு என்னதான் அர்த்தம் கிருஷ்’ என கேட்டுக்கொண்டு மூடிய கண்களுக்குள் வந்து நின்றாள் மீரா. அப்போது கதவை திறந்து உள்ளே நுழைந்தான் ஏ.கேவின் பி.ஏ கதிர். வெளியே கேட்ட பாடல் தன்னையும் அறியாமல் ஏ.கே உதட்டோரம் புன்னகை பூக்க செய்தது…..
காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ
ஏ… காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ
எத்தனை நாட்களாய் இத்தனை காதலை
உனக்கென சேர்த்து வைத்தேன் நெஞ்சே நான்
எத்தனை ஆழமாய் இத்தனை ஆசையை
எனக்குள்ளே நான் மறைத்தேன் அன்பே
காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ
நேற்றிரவு விழித்திருந்தேன்
காரணம் நீ காரணம் நீ காரணம் நீ
அதிகாலையிலேயே விழித்துக்கொண்டேன்
காரணம் நீ காரணம் நீ காரணம் நீ
உனை பிரிந்து எங்கே போனாலும்
நினைவோடு நீயும் வருவாயே
நீ இல்லா இடமும் எனக்கேது
உன்னருகில் சேர்ந்தே இருந்தாலும்
கண் முழுதும் நீயே நிற்பாயே
இமைகள் அது பாவம் இமைக்காது
எனை எதோ செய்கின்றாய்
காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ… செய்தேனோ…
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ
வீட்டு சுவற்றில் கிறுக்கும்
சிறு பிள்ளை போல நானும்
உந்தன் பேரை காற்றில்
வரைகின்றேனே அவசரமாய்
உன்னை பார்க்கும் நொடியில்
கண்ணாடி பார்க்க தோன்றும்
உந்தன் கண்ணில் என்னை நான் பார்க்கின்றேனே
ஒரு கனவாகி நீ கலைந்து போனாலும்
இரவெல்லாம் தொலைந்தே கனவுக்கு காத்திருப்பேன்
உளறியது வார்த்தை அல்ல
நீ வசிக்கும் இதயம் என் கண்ணே
உருகியது நானுமல்ல
நீ கொடுத்த காதல் பெண்ணே
காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ
உனக்கென சேர்த்து வைத்தேன் நெஞ்சே நான்
எத்தனை ஆழமாய் இத்தனை ஆசையை
எனக்குள்ளே நான் மறைத்தேன் அன்பே
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ
காரணம் நீ காரணம் நீ காரணம் நீ
அதிகாலையிலேயே விழித்துக்கொண்டேன்
காரணம் நீ காரணம் நீ காரணம் நீ
நினைவோடு நீயும் வருவாயே
நீ இல்லா இடமும் எனக்கேது
கண் முழுதும் நீயே நிற்பாயே
இமைகள் அது பாவம் இமைக்காது
எனை எதோ செய்கின்றாய்
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ
சிறு பிள்ளை போல நானும்
உந்தன் பேரை காற்றில்
வரைகின்றேனே அவசரமாய்
கண்ணாடி பார்க்க தோன்றும்
உந்தன் கண்ணில் என்னை நான் பார்க்கின்றேனே
இரவெல்லாம் தொலைந்தே கனவுக்கு காத்திருப்பேன்
நீ வசிக்கும் இதயம் என் கண்ணே
உருகியது நானுமல்ல
நீ கொடுத்த காதல் பெண்ணே
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ