Advertisement

ஷான் கண் அடித்து விட்டு சென்ற போது,தன்னை மறந்து ஷானை ரசித்து கொண்டு இருந்தாள்.இவனை நாம் திருமணம் செய்வமோ,இல்லையா ? என்று நினைத்து கொண்டு இருக்கும் போது,யோகாவின் அம்மா,யோகா…யோகா… என்று சத்தம் கொடுத்தாா்.
இதோ வரேன் மா என்று கூறி,அவள் ஆடையை களைந்து கொண்டு இருந்தாள்,களையும் போது ஷான் சொன்னது நியபகம் வந்து, அவள் முகம் வெட்கத்தால் சிவந்து இருந்தது.
ஒரு சுடிதாரை போட்டுவிட்டு,கீழே சென்றால்,”அம்மா,ஏன் இவ்வளவு அவசரமாக கூப்பிட்டாய் ,” என்றாள்.
“யோகா,நான் சொல்வதை கேட்டு தப்பாக எந்த முடிவும் எடுக்காதே…,யோகா இந்த திருமணம் நின்றுவிட்டது,” என்றாா் யோகாவின் அம்மா.
“அதற்கு நான் எதற்கு மா தப்பாக முடிவு எடுக்க வேண்டும்,நீங்கள் தான்,நான் சுற்றுலா போயிட்டு வரும் போது அழுது கொண்டு இருந்தீர்கள்,நான் ஓரு கனவு கண்டேன் அதன்படி ஜாதகம் பாா்தேன் என்றீர்கள்,உடனே திருமணம் என்றீர்கள்,நான் எவ்வளவோ சொன்னேன் ,நான் இன்னும் படிப்பு முடியவில்லையே அம்மா ,படிப்பு முடிந்ததும் திருமணம் வைத்து கொள்ளுங்கள் என்றேன்,நீங்கள் கேட்டிற்களா அம்மா, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருந்தீீற்கள்,நான் அதற்கு என்ன செய்வேன்,” என்றாள்.
“என்னங்க…,பாருங்க….., யோகா எப்படி பேசுகிறாள்,” என்று யோகாவின் அம்மா சொல்ல.
“அவள்,சரியாக தானே சொல்கிறாள்,இதில் குற்றம் சொல்ல என்ன இருக்கு ,” என்றாா் யோகாவின் அப்பா.
“ஏங்க அந்த கனவு பலிச்சிடுமோ என்று பயமாக உள்ளது,திருமணம் வேறு நின்றுவிட்டது,ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்று பயமாக உள்ளது ,”என்று யோகாவின் அம்மா சொல்ல.
“சும்மா அதையே நினைக்காதே,சும்மா இருக்கிற மனம்,சைத்தானின் உறைவிடம்,அதனால்,எப்போதும் பாசிட்டிவாக நினை,நல்லதே நடக்கும்,”என்றாா் யோகாவின் அப்பா.
யோகா தன் அம்மாவிடம் பேசிவிட்டு வந்து ,”நாம் நம் அம்மாவையா குறை கூறினோம்,அவர்கள் என்ன செய்வாா்கள்,என் மேல் வைத்த பாசத்தினால்,அவர்கள் இப்படி செய்தாா்கள்,நம் பிள்ளைகள் நல்லா இருக்கனும் என்று எல்லா பெற்றோா் நினைப்பது போல்,நம் அம்மாவும் நினைத்துவிட்டாா்கள்,உடனே கீழே போய் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்து,”கீழே  சென்றாள் அம்மாவை பாா்க்க.
இவர்கள் இவ்வாறு பேசி கொண்டு இருக்க,விதியோ நான் செய்ததற்கு எல்லோரும் தன்னை தானே குறை கூருகிறாா்களே என்று விதி சிரித்தது.
யோகா வருவதை அறியாமல்,ஓரு சோக சித்திரம் போல் அழுது முகம்வாடி இருந்தாா்.
யோகா,”அம்மா … “என்று தான் அழைத்தாள்.
“ஒ…. என்ற சத்ததோடு,என்னை மன்னித்துவிடு யோகா ,”என்று அவள் மடியில் விழுந்து அழுதாா்.
“என்ன மா இது,சின்ன பிள்ளைத்தனமா அழுறீங்க,முதல நீங்க எழும்புங்க,நாம இரண்டு பேரும் காப்பி குடிப்போம் வாங்க அம்மா ,”என்று சமையல் அரைக்கு அழைத்து சென்றாள்.
“அம்மாவை சமதானம் பண்ணி தூங்க வைத்துவிட்டு”,தன் அரைக்கு வந்தாள்.
“அப்ப …பா.. கொஞ்ச நேரத்தில் என்ன எல்லாம் நடந்துவிட்டது,எப்படியோ இந்த திருமணம் நின்றுவிட்டது ,என்ன கொஞ்ச நாளைக்கு நம்மளை தொந்தரவு பண்ண மாட்டாா்கள்,நாம் நிம்மதியாக இருக்கலாம் “,என்று நினைத்தாள் யோகா.
ஆனால் விதியோ யோகாவை பாா்த்து சிரித்தது.ஷானை கொண்டு உன்னை நான் என்ன  செய்கிறேன் பாா் என்றது…
கதிரவன் தன் கடமையை செய்ய சரியான சமையத்தில் வந்து ,இந்த பூமியை தன் ஒளியால் ஒளி நிரப்புகிறான்,அப்படி பட்ட கதிரவனை வணங்கி தன் அன்றாட வாழ்க்கையை வாழ்கிறாள் வினித்தின் அம்மா துளசி.
“இன்றைக்கு தன் மகன் வீட்டிற்கு வருகிறான் ,அதனால் காலை உணவையை முடித்துவிட்டு நாம் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் ” என்று வேக..  வேகமாக  எல்லாம் செய்கிறாள்.
மருத்துவமனையில் ,”வினித் ரெடியாக இருந்தான் வீட்டிற்கு வர”.அப்பொது டாக்டர் உள்ளே வந்தாா்.
 “டாக்டர், எனக்கு என்ன நடந்தது என்று சொல்ல முடியுமா,” என்றான் வினித்.
டாக்டர் மனதில் சொல்லாமா!,வோண்டாமா! என்று ஒரு பட்டி மன்றமே நடத்திவிட்டு,சரி சொல்லுவோம் ஷானுக்கு இதில் ஒரு பிரச்சனை வராது என்று நினைத்து சொன்னாா்.
“வினித் ,நான் சொல்வதை கேட்டு ஆச்சிரியமாக இருக்கும்
மயக்க மருந்து (Anesthetic) என்பது அறுவை சிகிச்சைகளின் போது வலி தெரியாமல் இருப்பதற்காகவும் மயக்கமடையச் செய்வதற்காகவும் கொடுக்கப்படும் மருந்து ஆகும். இம்மருந்து மனித உடலின் சுவாசம், இரத்த அழுத்தம், இரத்த ஓட்டம், இதயத்தின் செயற்பாடு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக் கூடியது. மயக்க மருந்தானது தோலில் உரோஞ்சுவதன் மூலமும், மருந்து ஊசியின் மூலமும், வாயுவாகவும் மனித உடலினுள் உட்செலுத்தப்படுகின்றது.  இதில் உங்களுக்கு வாயுவாக பயன் படுத்தி உள்ளனா்.இதை1842 ஆம் ஆண்டில் அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தாக டை எத்தில் ஈதர், குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.மயக்க மருந்துப் பயன்பாட்டினை அனஸ்தீசியா (anaesthesia) என அழைப்பர். ஜோசப் லிஸ்டர் என்பவரே நவீன மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர். மயக்க மருந்தின் பெரிய மற்றும் சிறிய அபாயங்கள் உள்ளன,” என்றாா் டாக்டர்.
“டாக்டர்,நீங்கள்  பெரிய மற்றும் சிறிய அபாயங்கள் உள்ளன என்று சொல்லுகிறீர்கள் அது  என்ன என்று சொல்ல முடியுமா?,” என்றான் வினித்.
உடனே அவர்,”பெரிய அபாயங்களுக்கான எடுத்துக்காட்டுகளில் மரணம், மாரடைப்பு மற்றும் நுரையீரல் தக்கையடைப்பு ஆகியவை அடங்கும், நீங்கள் கேள்விபட்டிற்களோ என்னாவோ?
ரஷ்யாவுக்கு படிக்கச் சென்ற இந்தியப் பெண் ஒருவர் கடும் வயிற்று வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் பிரச்னையைக் கண்டறிந்து, அதற்குத் தீர்வு காண ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அப்போது மயக்க மருந்து அளவுக்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டதன் காரணமாக, அப்பெண்ணுக்கு சுய நினைவு திரும்பவில்லை. அதன் பிறகு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் பயனில்லாமல் போகவே, இன்றைக்கும் அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர்.
அடுத்த  பெரிய எடுத்து காட்டே உள்ளது,ஹைதராபாத்தை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது மயக்க மருந்தின் அளவு அதிகமாக செலுத்தப்பட்டதன் காரணமாக சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளான்.
உலகெங்கிலும் இது போன்று பல சம்பவங்களை சுட்டிக் காட்ட முடியும்.”என்றாா் டாக்டர்.
“அதே சமயம் சிறிய ஆபத்துகளில் அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும்”,என்றாா் டாக்டர்.
“டாக்டர்,அப்படியென்றால் மயக்க மருந்து உயிரையும் பறிக்குமா?”என்றான் வினித்.
“நோயாளியின் உடல்நலம், அறுவை சிகிச்சையின் சிக்கலானது மற்றும் மயக்க மருந்து வகை தொடர்பான பல்வேறு காரணிகளின் ஒப்பீட்டு ஆபத்துக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த காரணங்களால், நாங்கள், அறுவைசிகிச்சைக்கு முன்னர் நபரின் உடல்நலம் (ASA உடல் நிலை வகைப்பாடு முறையால் அடுக்கடுக்காக உள்ளது)இதை நாங்கள் பாா்த்து அதற்கான  அளவில் மயக்க மருந்தை கொடுப்போம்.” என்றாா் டாக்டா்.
“டாக்டா் ,அப்படி என்ன வகை மருந்து எனக்கு கொடுக்கபட்டது,இதில் எனக்கு ஏதாவது பின் விளைவுகள் இருக்கா டாக்டா்,”என்று கேட்டான் வினித்.
“எங்கள் மருத்துவ துறையில்,மயக்க மருந்து நிபுணர் (Anesthesiologist) என்றால் அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுத்து மயங்க வைப்பவர் என்றுதான் பலருக்கும் தெரியும். ஒரு அறுவை சிகிச்சையில் மூளையாக இருந்து செயல்படுவதும், சிகிச்சையை வழி நடத்துவதும் மயக்க மருந்து நிபுணர்தான். அறுவை சிகிச்சையைப் பொறுத்தமட்டிலும், மற்ற துறை மருத்துவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. கொஞ்சம் தவறினாலும் உயிரிழப்பு மற்றும் நினைவிழந்து போதல் போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும். 
இரு வகையான மயங்க வைத்தல்கள் இருக்கின்றன. முதலாவது நோயாளியை முழுமையாக மயக்கமடையச் செய்கிற ‘பொது மயக்க மருந்து’ (General anesthesia). வயிற்றுக்கு மேற்பகுதிகளான இதயம், மூளை, நுரையீரல், கல்லீரல் தொடர்பான அறுவை சிகிச்சைகளுக்கும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கும் பொது மயக்க மருந்து கொடுக்கப்படும்.
எந்த பாகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோமே, அந்த பாகத்தை மட்டும் மரத்துப் போக வைக்கிறது ‘மண்டல மயக்க மருந்து’ (Regional anesthesia),இது இரண்டாவது வகை.  வயிற்றுக்குக் கீழ் உள்ள பகுதிகளில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, மகப்பேறு ஆகியவற்றுக்கு, மண்டல மயக்க மருந்து கொடுக்கப்படும்.
மண்டல மயக்க மருந்தை ஸ்பைனல்‘Spinal’, எபிடியூரல்‘Epidural’ என இரண்டாகப் பிரிக்கலாம். ஸ்பைனல் என்பது பெருமூளைத் தண்டுவட நீர் (Cerebrospinal fluid) எனும் பகுதியில் மயக்க மருந்தைச் செலுத்துவது. எபிடியூரல் என்பது தண்டு வடத்துக்கு முன்புள்ள பகுதியில் மருந்தைச் செலுத்தி மரத்துப்போகச் செய்வது.
பரவலான மக்கள் அறுவை சிகிச்சையின் போது தண்டுவடத்தில் ஊசி போடுவதாக நினைக்கிறார்கள். உண்மையில், தண்டுவடத்துக்கு வெளியே உள்ள (subarachnoid space) வலையனையமிடை வெளி எனும் பகுதியில்தான் ஊசியைச் செலுத்துகிறோம். கை மற்றும் கால் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யும்போது நரம்பு தொகுதிகள்(nerve blocks )எனும் பகுதியில் மயக்க மருந்தைச் செலுத்துவோம்.
பொது மயக்க மருந்தை விட மண்டல மயக்க மருந்துதான் மிகவும் பாதுகாப்பானது. மண்டல மயக்க மருந்திலேயே ஸ்பைனல் மிகவும் பாதுகாப்பானது. ஸ்பைனல் கொடுப்பதால் முதுகு வலி ஏற்படுகிறது என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மை என்னவெனில், 20 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பைனல் ஊசி பெரியதாக இருந்தது… அதன் காரணமாக முதுகு வலி ஏற்பட்டிருக்கலாம். 
இன்றைக்கு நூலிழை அளவில்தான் ஸ்பைனல் ஊசி இருக்கிறது. அதனால் முதுகுவலி வரவே வராது. விபத்துக்கு ஆளானவர்கள் polytrauma என்னும் உடலின் பல பகுதிகள் சிதைந்த நிலையில் அனுமதிக்கப் படுவர். அவர்களுக்கு ரத்தம் நிறைய வெளியேறியிருக்கும் என்பதால், அவசர சிகிச்சைக்கு பொது மயக்க மருந்துதான் சிறந்தது. நரம்பு தொகுதிகள்(nerve blocks )பகுதியில் (nerve locator)நரம்பு லொக்கேட்டர் எனும் கருவி மூலம் தசைத்துடிப்பை கண்டறிந்து சரியான நரம்பில் மயக்க மருந்தைச் செலுத்துவதும் பாதுகாப்பானதுதான். மிகவும் அரிதாக சிலருக்கு ஜன்னி வரலாம்.
நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்தே அவருக்கு பொது மயக்க மருந்து அளிப்பதா, மண்டல மயக்க மருந்து அளிப்பதா என்கிற முடிவுக்கு வர முடியும். ஆஸ்துமா, இளைப்பு, தொண்டை வலி, சளி, இருமல் ஆகியவை இருந்தால் அதை சரி செய்து கொண்ட பிறகுதான் பொது மயக்க மருந்து கொடுக்க முடியும்.
நோயாளியின் வயது மற்றும் எடையை வைத்துதான் மயக்க மருந்தின் அளவைத் தீர்மானிக்க முடியும். முன்பைக் காட்டிலும் இன்றைக்குள்ள மயக்க மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை. 99 சதவிகிதம் இந்த மருந்துகள் காரணமாக உயிரிழப்பு நேரிடுவதில்லை. லட்சத்தில் ஒருவர் உயிரிழக்கலாம். அதற்கான காரணம் அவரது உடலின் தன்மையும் கூட.
பொது மயக்கத்தின்போது நோயாளியால் சுவாசிக்க முடியாது என்பதால் (Endotracheal tube)எண்டோட்ராஷியல் குழாய்-ஐ சுவாசக்குழாய் வழியே செலுத்தி செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். மிகவும் அரிதாக சில நேரங்களில் நோயாளிகளின் தொண்டை மற்றும் பல் அமைப்பு காரணமாக சுவாசக்குழாயில் ட்யூப் செலுத்துவது கடினமானதாக மாறி விடும். 
இந்நிலையை (Difficult Intubation)கடினமான ஊடுருவல் என்போம். முழு மயக்கத்துக்கு ஆளான நோயாளிக்கு 2-3 நிமிடங்களுக்குள் ஆக்சிஜன் கிடைத்தாக வேண்டும். இல்லையென்றால் மூளை செயலிழந்து, நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு நின்று உயிரிழந்து விடுவர். தாமதமாக ஆக்சிஜன் கொடுக்கப்படும்போது ரத்தம் இதயத்தில் பம்ப் ஆகி மூளைக்குச் செல்லாமல் போவதால் (Hypoxic encephalopathy) ஹைபோக்சிக் என்செபலோபதி என்கிற கோமா நிலைக்கு ஆளாகி விடுகின்றனர்.
நாங்கள் உயிரிழப்பைத் தவிர்க்க
ஹைரிஸ்க் நோயாளிகளை அனைத்து வசதிகளுமுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்தான் அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அறுவைசிகிச்சையின்போது வேறு ஏதேனும் உடற்பிரச்சனை வந்து விட்டால் அதை சரி செய்து அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்தான் முடியும் என்று கூறினாா் டாக்டா் . இதில் உனக்கு கொடுத்தது மண்டல மயக்க மருந்துதான் ,இது மிகவும் பாதுகாப்பானது அதனால் உனக்கு ஒரு பிரச்சனை இல்லை என்றாா்.”
வினித்,”டாக்டா்,நான் கேட்டதற்காக எனக்கு புரியும் படி சொன்னதர்க்கு நன்றி டாக்டா்,”என்றான்.
“ஒரு சந்தேகம் வந்தால் நிவர்த்தி செய்வது என் கடமை தான் ,என்றாா் டாக்டா்.
இவர்கள் பேசி முடிக்கவும்,வினித்தின் அம்மா வரவும் சரியாக இருந்தது.
வினித்தின் அம்மா,” வணக்கம் டாக்டா்,”என்றாா்.
டாக்டா்,”அம்மா உங்கள் பையனை அழைத்து செல்லாம், “என்றாா்.
வினித்தின் அம்மா,” ரெம்ப நன்றி டாக்டா்,”என்றாா்.
“இதில் ஒண்ணும் இல்லை அம்மா , நான் என் கடமையை தான் செய்தேன்,ஒகே நான் வாரேன்,” என்று கிளம்பினாா்.
வினித் அவன் அம்மாவுடன் வீடு கிளம்பினான்,வீட்டிற்கு வந்த உடன் அம்மா திருமண வேலையை ஆரம்பிக்க வேண்டாமா? என்று கேட்டான் வினித்.
அவன் அம்மா,”நான் இந்த திருமணத்தை நிறுத்திவிட்டேன்,”என்றாா்.
“ஏன்மா …. இப்படி செய்திற்கள், எவனோ ஒருத்தன் செய்த தப்புக்கு நீங்கள்,உங்கள் தம்பி வீட்டை தலை குனிய வைத்து விட்டிற்களே? யோகா எப்படி இருக்காளோ?நான் உடனே யோகாவை பாா்க்க வேண்டும்,நீங்கள் என்னுடன் வந்து மன்னிப்பு கேளுங்கள்,”என்றான் வினித்.
“உடனே ,அவர் நான் ஏதோ ஒரு சிந்தனையில் பேசிவிட்டேன்,வா.. நாம் போகலாம்,”என்றாா்.
வினித் அவன் அம்மாவுடன் யோகாவின் வீட்டிற்கு வந்தான்.
அங்கே யோகாவின் அம்மா மடியில் தலை வைத்து படுத்து கொண்டு இருந்தாள்,அவள் அப்பா கைபேசில், யாருடனோ பேசி கொண்டு இருந்தாா்.
இவர்களை பாா்த்தவுடன்,”வா… அக்கா…,” என்றாா் யோகாவின் அப்பா.
“தம்பி என்னை மன்னித்து விடு,நீ கேட்ட மாதிரியே வருகின்ற ஞாயிற்றில்,திருமணம் வைத்து கொள்வோம் ,”என்றாா் வினித்தின் அம்மா.
யோகாவின் அப்பா,தன் மனைவியை பாா்த்தாா்.
அவா் யோகாவின் தலையை வருடி கொடுத்தவாரே,வேண்டாங்க என்று தலையை ஆட்டினாா்.
யோகாவின் அப்பா,தன் அக்காவை பாா்த்து,”அக்கா தப்பாக நினைக்காதே, யோகாவின்  படிப்பு முடிந்த பிறகு இதை பாா்த்து கொள்ளலாம் “என்றாா்.
“வினித் எப்படி இருக்க ,உடம்பு நல்லா இருக்கா,”என்றாா்.
“ஆமா மாமா,வருத்தபடாதிங்க மாமா…நான்  யோகாவின் படிப்பு முடிந்த பிறகு அவளை திருமணம் செய்து கொள்கிறேன்,”என்றான் வினித்.
“சரிப்பா பிறகு இதை பாா்க்கலாம்,மத்தியம் உணவு சாப்பிட்டு தான் போக வேண்டும் ,”என்றாா்.
“சரி மாமா”,என்றான் வினித்.
இங்கே இவர்கள் இப்படி இருக்க, அங்கே ஷானோ தன் நண்பர்களிடம் நடந்தவைகளை பற்றி பேசினான்.
ஷான்,தன் நண்பர்களை பாா்த்து,”நான் சென்னையில் யோகா படிக்கின்ற கல்லூரிக்கு மாற்றம் வாங்கி கொண்டு MBA இரண்டாம் ஆண்டு அங்கே படிக்க போகிறேன் ,என்றான்.
அவன் நண்பர்களும்,”நாங்களும் வாறோம் ,”என்றனர்.
அதற்கு அவன்,”சரி நாம் எல்லோரும் ஒண்ணாக போகலாம், அதற்குரிய ஏற்பாட்டை நான் பாா்கிறேன்,நீங்கள் நம் எல்லா திங்க்சையும் பேக் பண்ணுங்க,வருகின்ற திங்கள் நாம் அந்த கல்லூரியில் இருப்போம்”என்றான்.
ஷானும் ,யோகாவும் சந்தித்து காதலை வளர்ப்பாா்களா பாா்போம்…..

Advertisement