Advertisement

அதன் சத்ததில் அன்னத்தின் உடலும் சற்று நடுங்க தான் செய்தது. ஜெய் பக்கத்தில் இருந்தால் நிச்சயம் கண்டு கொண்டு இருப்பான். அவன் அவளின் மறுபக்கம் திரும்பி நிற்க, அன்னம் தனக்கு தானே சொல்லிக்கொண்டாள் ‘அவர் எது பேசினாலும் திரும்ப பதில் சொல்லாத… உனக்கு அவர் கிட்ட பேச தெரியலை… அவர் சொல்லுறத மட்டும் கேட்டுக்க’ என்று.
தூரத்தில் தெரிந்த வெளிச்ச புள்ளிகளை பார்த்த படி நின்றவன் ‘ஏற்கனவே பட்ட கோபத்தால எதுவும் தெரியாத பொண்ணோட வாழ்க்கைய கெடுத்து வச்சு இருக்குற.. இப்ப மறு படியும் கோபபட்டு என்ன செய்ய போற?? நீ செய்யும் செயல் உனக்கானது இல்லை அது தாக்குவது அன்னத்தை தான்’ என மனம் புத்தி சொல்ல  அன்னத்தை தான் திரும்பி பார்த்தான். 
வலி அதிகமானது போல் காலை கைகளால் அவள் பிடித்து விட்டு கொண்டு இருக்க, கோபம் மறந்து வந்தவன் “என்ன அனு கால் அதிகமா வலிக்குதா” கேட்டவன் அவளின் முட்டியை பார்க்க அது சற்று வீக்கமாக தான் இருந்தது.  
அவளுக்கு உண்டான மாத்திரையை தர  அதை சாப்பிட்டவள் அப்படியே தூங்க போக “இப்படியேவா தூங்குவ??” என்றான் அவளின் புடவையை காட்டி… 
“ஆமாம்” என அன்னம் தலை அசைக்க “ஏன் நைட் டிரஸ் போட்டுட்டு தூங்க வேண்டியது தான??”
“இல்லை நைட் டிரஸ் போடுற பழக்கம் இல்லை. அத தான் கடையில சொல்ல வந்தேன் நீங்க  எடுத்துட்டீங்க” என்றவளை ‘என்ன இவ இப்படி இருக்கா??’ என்று தான் பார்த்தான் ஜெய்.
“சரி இனி எல்லாம் பழக்கிகலாம்” என்றவன் புதியதை எடுக்காமல் அவனின் நைட் பேன்டையும் சர்டையும் தர “ஐயோ” என வாயில் கை வைத்தாள் அன்னம். “இப்ப என்ன??” என்றவனுக்கு அவளின் பாவனை அத்தனை சிரிப்பாக இருந்தது. ஏதோ பார்க்க கூடாததை பார்த்தது போல்.
“ஏண்டி நான் என்ன டூ பீஸ்சா!!! தந்தேன் இந்த ரியாக்சன் தர்றதுக்கு… இதுவும் டூ பீஸ் தான் ஆனா புல்லா கவர் ஆகிடும்.  நீ கட்டுற சேலையாவது ஐயோ பாவமேன்னு நினைக்கும் இது அப்படி எல்லாம் நினைக்காது. எனக்கு எதையும் காட்டாது” என அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவனை “என்ன இப்படி பேசுறாரு” என்று மனத்தில் மட்டுமே நினைக்க முடிந்தது வெளியில் அதே “ஐயோ” பொசிசன் தான்.
“புதுசுனாலும் அப்படியே போட கூடாது.  அதனால இன்னிக்கு இதை போடு… போ இதை மாத்திட்டு வந்து தூங்கு இப்படியே படுத்தா கால் அசைச்சா ஃபிரியா இருக்காது தூக்கம் கெடும்” என்று உடையை அவள் கைகளில் திணிக்க, அவன் உடையை எப்படி போட என்று பார்த்தாள் அவள். 
“எப்படி போடுறதுன்னு பாக்குறியா??” என்று அவளின் பார்வைக்கு சரியாக அர்த்தம் கண்டு பிடித்தவன் “நான் வேணுன்னா போட்டு விடவா…!!!” என்று குனிந்து  மென்மையாக கேட்டு அவள் முகம் பார்க்க சந்தன முகம் குங்குமம் பூசியதை போல் ஆனது.   
இதற்கு மேல் போனால் தனக்கே தாங்கது என்ற நிலை ஜெய்க்கு. “இரு நான் கீழ போறேன் நீ  டிரஸ்ஸ மாத்திட்டு படு நான் சாப்பிட்டு வர்றேன்” என்றவன் கீழே வந்து விட்டான். எத்தனையே அழகிகள் அவன் முன்னால் இருந்து இருக்க,  இவள் மட்டுமே உலக அழகி ஆனால் அவனின் கண்களுக்கு.
  
அவன் சென்ற பின்னும் அவனின் முகம் தான் இவள் மனதில் ஊர்வலம் சென்றது.  அவன் கேட்டது இவளை தொட்டது போல உடலில் சிறு  வெப்பம் பரவ அதை உணர்ந்தவள் அவனின் உடையை மாற்றி படுத்து கொண்டாள்.  
ஜெய் கீழே வரவும் சத்தியன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. “என்னடா இந்த நேரம்??” என்று டைனிங் டேபிளில் அமர்ந்தான் ஜெய். சத்தியன் “நாளைக்கு சேலைக்கு போட மேட்சிங்கான ஆரத்தை இங்க விட்டுட்டாளாம் அது தான் எடுத்துட்டு போக வந்தேன்” என்றவன் ஜெய்யின் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.
“என்னடா முகம் டல்லா இருக்கு??” ஜெய் கேட்க “அது எல்லாம் ஒன்னும் இல்லைண்ணா” என்றவனிடம் “வெளிய போகலாம் சத்தியா” ஜெய் சொல்ல… அவனுக்கும் ஜெய்யிடம்  பேச வேண்டியது இருப்பதால் “சரி” என்று தலையசைத்தான்.  
ஜெய் உணவினை சாப்பிட்டு  முடிக்க  சத்தியன் பைக்கை எடுத்தவன் “எங்கடா போக??” கேட்டான் ஜெய்யிடம். 
“தோப்புக்கு” ஜெய் சொல்ல…. 
“ம்ம் சரி” என்றவன் வண்டியை தோப்பிற்கு விட்டான்… 
அங்கு வந்தும் அமைதி தான் சத்தியனிடம். அவன் பேசுவான் என்று ஜெய் பார்த்து இருக்க, அவன் இவனிடம் எப்படி பேச?? என உள்ளுக்குள்ளேயே அலசி கொண்டு இருந்தான்.
“சொல்லுடா என்ன பேசனும்??” என்று கேட்க “அண்ணா சொன்னா கோப படாத… நீ ஊருக்கு போகும் போது அண்ணிய கூட கூட்டி போனாலும் சரி  இல்லை அவங்க கூட தான் நீ இருக்குறன்னு காட்டிட்டு போனாலும் சரி  இனி அவங்கள தனியா விடாதா….” என்று முடிக்கு போது வேர்வையில் குளித்து விட்டான் சத்தியன்.  
ஜெய் அவனையே பார்த்து இருத்தவன் “என்ன நடந்தது சத்தியா??” 
“என்ன நடந்து இருந்தாலும் அதை மாத்த முடியாது… ஆனா இனி நடக்காம இருக்க செய்யலாமே!!” என்றவன் முகமும், பேச்சும் இனி உன் குடும்பத்துடன் தான் இருக்க வேண்டும் என்றது. “வேற ஏதவது இருக்கா??” என்று ஜெய் கேட்க “அண்ணா கேவிச்சுகிட்டியா??” என்று பதற
“டேய் எதுக்குட என்னைய பாத்தா எல்லாம் மிரளுறீங்க??? நான் என்ன அவ்வளவு பயங்கரமாவா இருக்கேன்!!” என்றவன் பேச்சில் கோபம் இல்லை என்பதை உணர்ந்தவன்,  “இல்லடா படு கேவலமா இருக்குற” என்று சிரிக்க நெடு நாளைக்கு பிறகு தம்பியுடானான சிரிப்பு ஜெய்க்கு. 
சத்தியனை விட்டு விட்டு வீட்டிற்கு வர அனைவரும்  உறக்கத்தில். மாடிக்கு போக ஜெய்யுடைய உடையில் மாத்திரை போட்டதால் நல்ல உறக்கத்தில் இருந்தாள் அன்னம். 
தன்னை சுத்த படுத்தியவன் கட்டிலுக்கு வர தூக்கத்திலும் காலை பிடித்த படி தான் இருந்தாள் அன்னம். 
‘ரொம்ப வலி இருந்து இருக்குமோ?? முகம் சுண்டி போச்சு’.  ஜெய்  மெதுவாகா கால்களை அழுத்தி விட கையை தலையணையில் வைத்தவள் இன்னும் ஆழ் தூக்கத்திற்கு சென்றாள்.
இருவருக்குமான பேச்சு இன்னும் அந்தரங்கத்தை தொடவில்லை என்றாலும் தான் தள்ளி நின்றால் நிச்சயம் அவள் ஒட்ட போவது இல்லை என்பதை உணர்ந்தவன்  “அனு”  என்று அழைக்க அவளிடம் எந்த பிரதிபிலிப்பும் இல்லை. “தூங்கிட்டாடா!!!  ஏதோ நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு கொஞ்சம் முகம் செவந்து இருந்தது அதை நானே மாத்திரைய கொடுத்து கெடுத்துகிட்டேன். உனக்கு இந்த பிறவிக்கு சிவராத்திரி கிடையாது ஜெய்” அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்.
நேற்று படுத்தை போல் இன்று விலகி படுக்க முடியுமா?? என்று பார்க்க முடியவில்லை ஏனோ அன்னத்தின் வெம்மை வேண்டும் எனத்தோன்ற அவள் உறக்கம் கலையாமல் அவளை அணைத்தவன் அப்படியே உறங்கி போனான். 
அன்னம் காலையில் கண்விழித்தது ஜெய்யின் கை வளைவில் தான் ‘ஐயோ தூக்கத்துல அவர்மேல வந்து தூங்கிட்டேன் போல’ நினைத்தவளுக்கு பயம், வெட்க்கம், கூச்சம் இதில் எதுவும் வரவில்லை. அதற்கு மாற்றாக ‘அவன் விழித்து விடக்கூடாது’ என்ற நினைப்பு மட்டும் வந்தது.
இப்போது காலில் வலி சற்று குறைந்து இருந்தது. அன்னம் எழுந்து  குளிக்க போக ஜெய்யும் கண்விழித்து விட்டான்.  குளியல் அறையில் சத்தம் கேட்க “அன்னம்” என்றவனுக்கு “இருங்க வந்துடுறேன்” என்ற பதில் வந்தது உள்ளே இருந்து. 
அன்னம் வெளிய வந்து பார்க்க ஜெய் அங்கு இல்லை. படுக்கையின் மீது அவளுக்கு உண்டான உடை மட்டும் இருந்தது.  காப்பரில் நேவி புளூ சாஃப்ட் சில்க் இருக்க அதை உடுத்தியவள் தயாராகி கீழே வர ரூபிணிதான் “அண்ணி சூப்பர்!!” என்றாள். 
மங்களம், வீராசாமி, ரூபிணி காரில் ஏறும் போது தான் வந்தான் ஜெய். அன்னத்திடம் “அவன சீக்கிரம் ரெடியாக சொல்லு நாங்க முன்னாடி போறோம்” மங்களம் சொல்ல “சரி” என்றாள் அன்னம். 
அனைவரும் முன்னால்  சென்று விட….  ஜெய் வர அன்னம் காரில் ஏறினாள். கார் ரம்யாவின் வீட்டு பக்கம் போகாமல் நல்லசாமி வீட்டுக்கு போக “ஏங்க இது மாமா வீட்டுக்கு பேற வழி.. நாம பெரியப்பா வீட்டுக்கு போகனும்” என்று முடிப்பதற்குள் கார் நல்லசாமி வீட்டின் முன்னாள் நின்றது. 
அன்னம் ஜெய் முகம் பார்க்க “கீழ இறங்கு” என்றவனும் கீழே இறங்க அனைவரும் வாசலுக்கே வந்து விட்டனர். 
“ஜெய் வாப்பா… வாம்மா அன்னம்” என் அனைவரும் சந்தோசமாக அழைக்க. “எப்படியோ மருமகள கூட்டிட்டு வந்துட்ட!!” என்றார் நல்லசாமி. 
அனைவரும் அன்னத்தை நலம் விசாரித்து சகஜமாக பேச  யாரும் அவளை தள்ளி நிறுத்தவில்லை. ஜெய்யும் அதற்கு விடவில்லை. அதற்குள் கூட்டதில் யாரோ?? ஜெய்தான் ஜெடீ என்று விட இப்போது ஜெய்தான் அந்த இடத்தின் கதாநாயகன் ஆனான். 
சுற்றி இருந்த இளவட்டங்கள் அனைத்தும் கூடி விட, ஜெய்யை அமர வைத்து வித விதாமான செல்பி கிளுக்கி தள்ள அனுமதி வேண்ட, இது எதுவும் ஜெடீ என்று சமூக வலைதளத்தில் வர கூடாது என்று கட்டுப்படுத்தியே எடுக்க அனுமதித்தான். 
“யாருடா உங்களுக்கு சொன்னா?? ஜெய் விசாகாவிடம் கேட்க “ரூபி தாண்ணா சொன்னா’ என்றவள் நாக்கை கடித்துக்கொண்டாள். இதற்காக தானே இவன் பயந்தது… என்ன கட்டுப்படுத்தினாலும் கண்டிப்பாக  இந்த புகைபடம் அனைத்தும் பதிவேற்றப்படும் என்பது தெரிந்தது தான்.  
ஜெய் விசாகாவை பார்க்க “அண்ணா… எனக்கு ஒரு ஆசை செய்வீங்களா…” சலுகை கேட்க, “கல்யாண பொண்ணு சொன்ன செய்யாம இருக்க முடியுமா!!” சொல்லுடா சரண்டர் ஆனான் ஜெய். 
“கல்யாண முகூர்த்தை மட்டும் நீங்க சூட் பண்ணுறீங்களா!!!” என்று கேட்டாள் விசாகா.  அவளை பார்க்க சிறு வயதில் ரூபியுடன் சேர்ந்து  அவனிடம்  பட்டம் கேட்டு அடம் பிடிக்கும் குழந்தையாக தான் தெரிந்தாள். ரூபியை விட விசாகா இரண்டு வயது பெரியவள். எப்போதும் இருவரும் இவன் இருக்கும் இடத்தில் தான் இருப்பார்கள் அதனால் தான் நேற்று நல்லசாமி அண்ணாக அவன் நிற்க வேண்டும் என்றதுக்கு ஒத்துக்கொண்டான். ஜெய் இப்போது விசாக கேட்டதற்கும் “சரி” சொல்ல அடுத்த தலைப்பு செய்தி பரவ தொடங்கியது இங்கு. 
ஜெய் அன்னத்தை தேட அவள் மகளீர் அணியுடன் ஐக்கியம் ஆகி இருந்தாள்.  “ஜெய் உன் பொண்டாட்டி இருந்தா வேலைக்கு யாரும் வேண்டாம் ஊருக்கே பந்தி வைச்சுடுவா!!” என்று அத்தை முறை உள்ளவர் கேலி செய்ய, அது அவனுக்கு என்னவென்று தோணியதே அவளை அழைத்து தன்னுடனேயே வைத்து கொண்டான்.
“ஏய் இங்க வேலை செய்யவா வந்த??” என்று ஜெய் பல்லை கடித்து கேட்க “அது கல்யாண வீடு வேலை இருக்கும் தான… எல்லாரும் சொஞ்சா தான் முடியும்” என அன்னம் சொல்ல “அத அவங்க பாத்துப்பாங்க நீ இங்கயே இரு எழுந்தா கொன்னுடுவேன்” என்று ஜெய் சொன்ன பின் நகருவாளா அன்னம் அந்த இடம் விட்டு. 
சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்ணுக்கு வளையல் போட வர அனைவரையும் வீட்டு ஆளாக நின்று ஜெய்யும் அன்னமும் அழைக்க சாந்தியும் வள்ளியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“அன்னையாய் மடி சாய்க்கும் வேளையில் 
கள்வனாய் என்னை திருட எண்ணம்  வருமா!!!!!” 
தாளத்தில் சேராதா தனி பாடல்………………

Advertisement