Advertisement

ஷான் வினித்தின் அம்மாவை அழைத்து கொண்டு,நகை கடைக்கு சென்றான்.அங்கே,யோகாவின் அளவுக்கு தனக்கு பிடித்த  டைம்மண்ட மோதிரத்தை எடுத்து தன் பா்சில்  வைத்து கொண்டான், வேறு ஒரு மோதிரத்தை எடுத்து வினித்தின் அன்னையிடம் கொடுத்து,”அம்மா பாருங்க ,இந்த மோதிரம் நல்ல இருக்கும் இல்ல, என்னோட பரிசாக நான் இதை வினித்துக்கு தாரேன் “,என்றான்.
வினித்தின் அம்மா,”ஏன் தம்பி,உங்களுக்கு இந்த வீண் செலவு “,என்றாா்.
“அது எல்லாம் ஒன்னும் இல்லை மா ,என்னுடைய நண்பனுக்கு செய்யாமல்,நான் வேறு யாருக்கு செய்வேன் ,நீங்கள் மறுக்காமல் வாங்கி கொள்ளுங்கள்,”என்றான் ஷான்.
“நீங்கள்,இவ்வளவு சொல்லுவதால் நான் இதை வாங்கி கொள்கிறேன் “,என்றாா்.
ஷான் மனதில்,தன் விழிஷாவுக்கு ஆசை ஆசையாக பார்த்து எடுத்த மோதிரத்தை கைகளால் வருடி கொடுத்தான்,அவன் வினித்தின் அம்மாவுக்கு தெரியாமல் இந்த மோதிரத்தை வாங்கினான்.
மோதிரத்தை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தனர்,அப்படி காரில் வரும் போது ,ஷான் ,யோகாவை மனதில் நினைத்தவாரே வந்தான்,” உன்னை தெடுறது எல்லாம் நான் மட்டும் தான்! நீ வாழ போகிறதும் என்னோடு மட்டும் தான்! நீ எனக்கு  மட்டும் தான்!”.என்று நினைத்தான்.
வினித்தின் அம்மா,வினித்திடம்  மோதிரத்தை வாங்கின விசயத்தை சொன்னாா்கள்.அதற்கு அவன்,”சும்மா விடுமா!, இதில் நமக்கு லாபமே ! இதை அவன் மனதார தான்  தந்து இருப்பான்! நீ கவலை படமல் நாளைக்கு உள்ள நிச்சயத்திற்கு உரிய வேலையை செய்   மா.. !”,என்றான்
இதை கேட்டதும்,அவன் அம்மா வேலையை பாா்க்க சென்றாா்.ஆனால் வினித்தின் மனதிலோ ,இந்த ஷான் ஏன் இப்படி செய்கிறான்,ஏதாவது தப்பாக செய்ய போகிறான் போல் மனது அடிக்கிறதே.இந்த திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும்,நாம் ஒரு கண்ணை ஷானிடம் வைத்து கொள்ள வேண்டும்.நாளை நிச்சயம் முடியட்டும்,இந்த ஷானையும் அவர் நண்பர்களையும் நாம் பெக் செய்ய வேண்டும்,இல்லை என்றால் இவர்கள் நம்மை பெக் செய்து விட்டாலும் விடுவார்கள்,என்று நினைத்தான்.
ஷான், தன் நண்பா்களிடம்,தான் வாங்கிய மோதிரத்தை காண்பித்தான்.
ஷான், தன் நண்பா்களை பாா்த்து,”நீங்கள் எல்லாம் ரெடியாக இருக்கிறிா்கள் அல்லவா”, என்று கேட்டான்.
அவன் நண்பா்கள்,”நீ சொன்னப்படி எல்லா வேலையும் செய்துவிட்டோம் ,நாளை சரியான சமயத்திற்கு அவர்கள் வந்துவிடுவார்கள்,”என்றனா்.
ஷான், தன் நண்பா்களை பாா்த்து,” நீங்கள் எல்லாம் போய் துங்குங்க,நாளைக்கு நமக்கு நிறைய வேலை இருக்கிறது,”என்றனா்.
கதிரவன் தன் கரங்களால் எல்லோரையும் எழுப்புகிறார்,அந்த காலை வேளையில்,ஷான் அல்லாவை தொழுகிறான்,”அல்லா நான் செய்யும் இக்காரணத்தால் என் யோகா கஷ்டப்படுவாள்,அவளுக்கு மன அமைதி கொடு என்று வேண்டினான்”.
விதியோ அவனை பார்த்து சிரித்தது, இதில் நீயும் கஷ்டப்படபோகிறாய் என்று.
ஷான் அல்லாவை தொழுகிறதை பாா்த்து அவன் நண்பர்களும் எழுந்தனர்.எல்லா துணிகளையும் பெட்டியில் அடைத்தனர்.ஷான் சொன்னது போலவே,அவர்கள் எல்லோரும் கீழே வந்தனர்.
இதை வினித்தின் அம்மா பார்த்து,”தம்பி காலையிலே எல்லோரும் எங்க செல்லுகிற்கள்,இன்னும் ஒரு மணிக்குள் நாம் எல்லோரும் நிச்சயத்துக்கு போக வேண்டும் அல்லவா,”என்றார்.
ஷான்,” அம்மா எங்களை மன்னிக்கவும்,எங்களுக்கு ஒரு முக்கியமான வேலை வந்துவிட்டது,ஆனால் நாங்கள் நிச்சயத்திற்கு அங்கு வருவோம்,” என்றான்.
ஆனால்,ஷான் மனதில்,”அம்மா என்னை மன்னிக்கவும் “,என்று வேண்டினான்.
அப்பொது தான் வினித் எழும்பி வந்தான்,வந்தவன் இவர்களின் பையை பார்த்து,மனதில்,”அப்பா இவன்கள் எல்லாம் செல்லுகிறார்களா ,ரெம்ப நல்லது ,இவன்களால் நமக்கு என்ன பிரச்சனை வரும் என்று பார்த்து கொண்டே இருக்க முடியாது,எப்பா சனியன்கள் ஒழிகிறது”, என்று நினைத்தான்.
ஆனால் அவன் நினைக்கவில்லை , இவர்களால் தான் தன் திருமணம் நிப்பாட்டபடுகிறது என்று.
வினித் ,ஷானை பார்த்து,”என்ன ஷான் இப்பொழுது கிளம்புகிறாய்,”என்றான்.
அதற்கு ஷான்,”நான் இல்லாமல்லா நிச்சயம்,நான் கண்டிப்பாக வருவேன் “,என்றான்.
ஷானும்,அவர் நண்பர்களும் கிளம்பினார்கள்.
யோகாவின் வீட்டில்,யோகாவின் அப்பா சாப்பாடு எல்லாம் ரெடியாக இருக்கிறதா என்று பாா்க்க சென்றாா்.
யோகாவின் அம்மா, “யோகா கீழே வந்து காப்பி குடி”,என்றாா்.
யோகா தன் கைபேசியை எடுத்து,” ஆனந்தி ,ஏன் இன்னும் வரவில்லை,நான் நேற்றே சொன்னே அல்லவா ,இங்கே வந்து தான் டிபன் சாப்பிடனும் என்று,நீங்கள் வந்தால் தான் நான் சாப்பிடுவேன்,சீக்கிரம் வா என்று,”கைபேசியை வைத்தாள்.
அடுத்து அவள் சிந்துக்கு அழைத்தாள்,”ஏய் சிந்து”, என்றாள்.
“அது யாரு காலங்காத்தாலே, என் தூக்கத்தை கலைத்தது ,”என்று சிந்து கேட்டாள்.
“சிந்து…,பொந்து…,நந்து…நான் தான் யோகா என்றாள்.
“ஆ சொல்லு யோகா,என்ன விசயம்”,என்றாள் சிந்து.
“உன்னிடம் நேற்றே சொன்னே அல்லவா,ஏன் வரவில்லை,இப்பொழுதே நீ என் வீட்டில் இருக்க வேண்டும், சீக்கிரம் வா,”என்று யோகா கைபேசியை வைத்தாள்.
ஆனந்தியும்,சிந்துவும், அரக்க பரக்க கிளம்பி வந்தனர் .
யோகா ,அவர்களுக்காக காத்து கொண்டு இருந்தாள்.அவர்கள் வந்தவுடன்,அவர்களுக்கு டிபன் கொடுத்தாள்.”நீங்கள், சாப்பிட்டு மேலே வாங்க”, நான் உங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறேன் என்றாள்.
அவர்கள் சாப்பிட்டு மேலே வந்தவுடன்,யோகா,”அவர்களிடம் ஷானை பார்த்ததை பற்றி கூறினாள்”,அவன் கொடுத்த முத்தத்தை விட்டுவிட்டு அனைத்தையும் சொன்னால்.
இதை கேட்டுவிட்டு அவர்கள்,”அப்படியா! அப்போ இன்று வருவார்கள் அல்லவா,நீ அந்த 100 ரூபாய்யை கொடுத்துவிடு “,என்றனா்.
இதை கேட்டு,தலையில் அடித்து கொள்ளலாம் போல இருந்தது.
தான் இவர்களிடம் எப்படி மனதில் இருப்பதை சொல்ல முடியும் , அதற்கு முக்கிய காரணம் ,இன்று அவளுக்கு நிச்சயத்தை வைத்து கொண்டு எப்படி சொல்லுவாள் ஷானை தான் விரும்பியதை பற்றி.
ஷான்,தன் நண்பர்களுடன்,இன்று என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்தான்.
வினித்தின் வீட்டில் இருந்து எல்லோரும்,யோகாவின் வீட்டிற்கு வந்து விட்டனர்,யோகாவின் அம்மாவும் ,அப்பாவும் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்தனர்.
ஐய்யர் வர இன்னும் நேரம் இருப்பதால்,அதற்கு வேண்டிய எல்லா ஏற்பாட்டையும் செய்தனர்.
யோகாவை ,அவள் தோழிகள் ரெடி செய்தனர்.
வினித்தின் அம்மா ,யோகாவை பார்க்க  வந்தார்.வந்தவர்,
யோகாவின் அழகில் மயங்கி அப்படியே இருந்தாா்,யோகா அத்தையை பார்த்து,”வாங்க அத்தை ” என்றாள்,அதில் அவர் சுயஉணர்வு அடைந்தாா்.
வினித்தின் அம்மா ,யோகாவை பாா்த்து “என் கண்ணே உனக்கு பட்டுவிடும் போல் ” என்று கூறி திருஷ்டி எடுத்தாா்.
“ஐய்யர் வந்துவிட்டார்,எல்லாம் ரெடியா,”என்று கீழே இருந்து யோகாவின் அப்பா குரல் கொடுத்தார்.
அதை கேட்டு,”யோகா !!கீழே ஐய்யர் வந்துவிட்டார்,நான் கீழே செல்கிறேன்,நீ வரும் போது இந்த பூவை வைத்து கொண்டு வா,” என்றார் வினித்தின் அம்மா.
அவர் கீழே வரும் போது,யோகாவின் அப்பா ஐய்யரிடம் பேசி கொண்டு இருந்தார்.அவர் தன் அக்காவை பாா்த்து ஐய்யரிடம்,”இது தான் என் அக்கா,மாப்பிளை பையனுடைய அம்மா “என்றார்.
வினித்தின் அம்மா.” வணக்கம் ஐயா”என்றார்.
அதற்கு அவா்,”வணக்கம் அம்மா, நேற்று நீங்கள் சொல்லி  என்னை பார்க்க வந்த பையன் எங்கே அம்மா,”என்றார்.
“ஏன் ஐயா,அந்த தம்பியை பற்றி கேட்கின்றீர்கள் “,என்றார் 
வினித்தின் அம்மா.
“அது வேறு ஒண்ணும் இல்லை, அந்த தம்பி கிட்ட எல்லா பொருளும் வாங்கிட்டு வர சொல்லி லிஸ்டை கொடுத்தேன்.”என்றார் ஐய்யர்.
“ஆமா ஐயா,அந்த தம்பி லிஸ்டை தந்தான்,அது படி எல்லாம் ரெடி பண்ணி வச்சுருக்கேன்”,என்றார் வினித்தின் அம்மா.
“அம்மா எத்தனை தட்டுகள்,ரெடி பண்ணி வச்சு இருக்கின்றீர் நிச்சயத்திற்கு.”என்றார் ஐய்யர்.
வினித்தின் அம்மா,”நான் 11 தட்டு ரெடி பண்ணி வச்சு இருக்கிறேன்.” என்றார்.
ஐய்யர்,”அம்மா என்ன, என்ன தட்டு எல்லாம் ரெடி பண்ணி வச்சு இருக்கின்றீர் “,என்றார்.
வினித்தின் அம்மா,”  தேங்காய்,பூ பழம், இனிப்பு வகைகள்,நிச்சயத்திற்கு பெண்ணுக்கான துணி போன்ற தட்டை பற்றி,”கூறினாா்.
இன்னும் சிறிது நாளிகை தான் உள்ளது ,”பெண்னை அழைச்சிட்டு வாருங்க “,என்றார்.
யோகாவை அழைச்சிட்டு வர அவள் அம்மா மேலே சென்றாா்.
யோகா தன் தோழிகள் புடைசூள 
கீழே வந்தாள்.
யோகாவை மனையில் அமரவைத்து,மந்திரம் ஓதினாா்,பிறகு வினித்தின் அம்மாவை பார்த்து,”நீங்கள் கொண்டு வந்த தட்டை எடுத்து பெண்ணிடம் கொடுங்கள்”,என்றார்.
யோகா எல்லா தட்டையும் அவள் அத்தையிடம்  இருந்து வாங்கி தன் தோழிகளிடம் கொடுத்தாள்.
ஐய்யர்,”அம்மா யோகா,நீ போய் இந்த துணியை அணிந்து கொண்டு வா மா,”என்றார்.
யோகா அவள் அத்தையிடம்  இருந்து வாங்கிய துணியை எடுத்து கொண்டு மேலே சென்றாள்.
இன்னும்,சில நிமிடம் இருப்பதால்,மாப்பிள்ளையை அழைத்து மனையில் உட்கார வைத்து,சடங்குகளை செய்தார்,அப்படி அவர் செய்து கொண்டு இருக்கும் போது.ஷானும் அவர் நண்பர்களும் உள்ளே நுழைந்தனர்.
அவர்களை முதலில் பார்த்தது வினித் தான்,அவன் மனதில், “இந்த ஷானும் அவர் நண்பர்களும்  எதற்கு மறுபடியும் வந்தனர்”, என்று நினைத்தான்.
ஷானை பார்த்த வினித்தின் அம்மா,”வா ஷான் உள்ளே”, என்றாா்.
” இதோ வரேன் மா”, என்று சொல்லி உள்ளே சென்றான் அவர் நண்பர்களுடன்.
“யோகாவை அழைத்து வாங்க”,என்று ஐய்யர் கூற.
யோகா தன் தோழிகள் புடைசூள,யோகாவின் அம்மா அழைத்து வந்தார்.
யோகாவை   ,தான் எடுத்து கொடுத்த பட்டு புடைவையில் முதல் முதலாக பார்த்ததும் ,அவள் அழகில் மெய் மறந்தான்,ஷான்.
நேற்று நடந்தை நினைத்து பார்த்தான்,அவர்கள் மோதிரம் எடுத்து கொண்டு வீட்டுக்கு வரும் போது தான்,வினித்தின் அம்மாவுக்கு பட்டு வாங்காதது நினைவு வந்தது,அவர் உடனே ஷானிடம் கூறினார்.
அவன் உடனே,”அம்மா கவலை பட வேண்டாம் ,நான் இப்பொழுதே என்னுடைய கடையில் இருந்து பட்டு புடைவையை எடுத்து கொண்டு வருகிறேன்.”என்றான்.
அவன் மனதில்,பட்டு புடைவையை எடுக்கவில்லையே என்று நினைத்து கொண்டே இருந்தான்.”என் விழிஷாக்கு நான் தான் பட்டு புடைவையை எடுக்க வேண்டும்” என்று நினைத்து கொண்டு இருந்தான்.
அவன் நினைத்து போலே,அவனின் விழிஷாக்கு,தனக்கு பிடித்த நிறத்தில் பட்டு புடைவையை எடுத்தான்,அவன் அவளின் அளவுக்கு ரவிக்கையை எடுத்து வந்து வினித்தின் அம்மாவிடம் கொடுத்தான்.
அவர் அவனிடம்,ரவிக்கையின் அளவு உனக்கு எப்படி கிடைத்தது என்றார்,அம்மா நான் கடையில் யோகா மாதிரியே ஒரு பெண்ணை பாா்த்தேன்,அதே அளவில் கேட்டேன் கிடைத்தது என்றான்.
அவர் அதை உண்மை என்று நம்பினாா்.
ஆனால், நடந்ததோ வேறு,ஷானுக்கு அவனின் விழிஷாவின் அளவு தெரியும்,எப்படி என்றால் முதல் நாள்,அவன் யாருக்கும் தெரியாமல் யோகாவின் வீட்டிற்கு வந்தான் அல்லவா, அப்போது அவளை அணைக்கும் பொழுது, அவள் அளவை அவன் தெரிந்து கொண்டான்.
ஷான் மெய் மறந்தது பார்த்ததை பாா்த்து,யோகாவிற்கு நாணம் வந்து தலை குனிந்தாள்.அவளின் முக சிவப்பை பார்த்து,அதை தொட்டு பாா்க்க  விளைந்த கையை அடக்கினான்,ஷான்.
ஷான் தன் நண்பர்களுக்கு கண்ணை காட்ட,அவர்கள் அவனை பார்த்து சிரித்தனர்.
யோகா,வினித்தின் பக்கத்தில் வரவும்,அவன் மயங்கி விளவும் சரியாக இருந்தது.
இதை பார்த்து மொத்த கூட்டமும் சம்பித்து நின்றது.
யோகாவின் நிச்சயதாா்த்தம் நடைபெறுமா , இல்லையா என்பதை பற்றி பார்போம்…
 

Advertisement