Advertisement

ஷான் வினித்தை சந்திக்க அவனுடைய கம்பெனிக்கு சென்றான்.
அங்கே ரிசப்சனில் இருந்தவள்,ஷானை பார்த்து,”யார் இந்த 6 அடி மனிதன்,நம் பாஸை மிஞ்சும் அளவுக்கு  கேன்சமா இருக்கான் “என்று நினைத்தாள்.
ஷான் அவளிடம்,”வினித் எங்கே இருக்கான் “,என்று கேட்க.
ரிசப்சனில் இருந்தவள்,” பாஸ் இங்க தான் இருக்காங்க சாா், உங்கள் பெயர் என்ன சாா் ,நான் பாஸ்கிட்ட சொல்லுகிறேன்”என்றாள்.
ஷான்,”தன் பெயர் ஷான் நவப்,சூரத்தில் இருந்து வந்து உள்ளேன் “என்றான்.
ரிசப்சனில் இருந்தவள் வினித்தை தொடர்பு கொண்டு  ஷானை பற்றி கூறினாள்.
வினித்துக்கு பெயரை கேட்டதும் பயம் மனதில் வந்தது,” இவன் எதற்கு இங்கே வந்தான்,நம் திருமணம் சமயம் பார்த்தா இங்கே வரவேண்டும்,எல்லாம் என் நேரம்”,என்றான்.
ரிசப்சனில் இருந்தவள்,”பாஸ் நீங்கள் லைனில் இருக்கிறிா்களா “,என்றாள்.
உடனே வினித்,”அவனை என்னுடைய ரூம்க்கு வர சொல்,மேலும் இரண்டு காப்பியை என் ரூம்க்கு கொண்டு வர சொல்”,
என்றான்.
ரிசப்சனில் இருந்தவள் ஷானை பார்த்து,” பாஸ் உங்களை அவர் ரூம்க்கு வர சொன்னார்”,என்றாள்.
ஷான் ,”ரூம் எங்கு இருக்கிறது”,என்று கேட்க.
அதற்கு அவள்,”சார் நீங்கள் இடது பக்கம் போனால் ,ஒரு ரூம் வினித் என்ற பெயர் பலகை கொண்டு இருக்கும்”,என்றாள்.
ஷான்,”நன்றி “,என்று கூறி சொன்றான்.
ஷான் ,வினித்தின் ரூம் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான்.
வினித் ஷானை பார்த்தவுடன்,” வா ஷான்,எப்படி இருக்க,உட்காா் “என்று கூறி வரவேற்றான்.
ஷானுக்கு ஆச்சிரியமாக இருந்தது அவன் பேச்சை பார்த்து, ஏன் என்றால்,கல்லூரில் இருவரும் எலியும் புனையும் போல் இருப்பார்கள்.
 வினித் ஷானை பார்த்ததும் ,”ஏன் இங்கு வந்தாய்” என்று கேட்பான் என்று ஷான் நினைத்தான்.ஆனால் அதற்கு நேர்மாறாக வினித் நடந்து கொண்டான்.
வினித் மனதி்ல், “இவன் எதற்கு வந்தான்,தேவையில்லாமல் வரமாட்டானே.எதற்காக வந்திருப்பான்”.
வினித் ,” இரண்டு காப்பி கொண்டு வா “,என்று தனது பிஎ -வை வெளியே அனுப்பி வைத்தான்.
பிஎ வெளியே சென்றவுடன்,”என்ன விசயமாக வந்தாய் ஷான்”,என்றான் வினித்.
ஷான்,” நான் பிசுனஸ் விசயமாக சென்னை வந்தேன்,நீ எப்படி இருக்கா என்று பார்க்க வந்தேன்”,என்றான்.
இதை கேட்டவுடன் வினித் மனதில்,”சோழியன் குடும்மி சும்மா ஆடாதே,ஏதோ மனதில் வைத்து கொண்டு வந்து உள்ளான்,நாம் இவனிடம் கவனமாக இருக்க வேண்டும்”.
“இப்போது என்ன  பிசுனஸ் பண்ணுகிறாய் ஷான்”,என்று கேட்டான் வினித்.
“நான் என் தந்தையின் தொழிலோடு, என் துணிகளை எக்ஸ்பொர்ட் செய்யும் தொழிலையும் பார்கிறேன், நான் சென்னையில் ஒரு கம்பெனியை தொடங்கலாம்  என்று வந்துள்ளேன்”,என்றான் ஷான்.
ஷானின் பிசுனஸை கேட்டதும்,வினித்க்கு பேராசை வந்தது,நாம் இவனுடன் சேர்ந்து எக்ஸ்பொர்ட் செய்யும் தொழிலையும் செய்தால் என்ன என்று நினைத்தான்.
வினித்தின் கண்களில் பேராசை கண்டு ,”இவன் நம் வலையில் விழுந்துவிட்டான்” என்று நினைத்தான் ஷான்.
வினித்தோ ,”இவனை எப்படியும் மடக்கிட வேண்டும் “.என்று நினைத்தான்.
“ஷான்,நீ எங்கே தங்கி இருக்க,உண்ணோடு யார் எல்லாம் இருக்காங்க,”என்று கேட்டான்.
 வினித்.
“தான் தங்கி இருக்கிற இடத்தையும்,தன் நண்பர்களை பற்றியும்”,  சொன்னான் ஷான் .
வினித் “தனக்கு வருகின்ற ஞாயிறு திருமணம்,அதனால் நீயும்,உன் நண்பர்களையும் அழைத்து கொண்டு ,இப்போதே என்னுடைய வீட்டிற்கு வா,” என்றான்.
இதை எதிர் பார்த்தே ஷான் வினித்தை சந்திக்க வந்தது.அவன் வந்த வேலை முடிந்தவுடன்,ஷான் வினித்திடம் ,”நாளை நாங்கள் ரூம்மை காலி செய்துட்டு வருகிறோம்,உன்னுடைய விலாசத்தை கொடு “,என்றான்.
விலாசத்தை பெற்று கொண்டு,”ஒகே நான் வருகிறேன் உன் வாழ்க்கையில்
…,சாரி உன் வீட்டில் …வாய் தவறி வந்து விட்டது” ,என்று கூறி விடைப்பெற்றான்.
வினித்துக்கு ஒரே சந்தோசம்,கூடிய சீக்கிரத்தில் தான் ஓரு கோடிஸ்வரனாக  போகிறோம் என்று கனவில் மிதந்தான்.
வினித் நினைக்கவில்லை,தன் எதிரி ஷான் எப்படி இப்படி  ஆதயம் இல்லாமல் வருவான்  என்று. அவன் உணர்ந்தான் என்றால் அவன் வாழ்க்கையே தப்பித்து இருக்குமோ,ஆனால் விதி யாரை விட்டது ,அவனே யோகாவின் துயருக்கு ஒரு காரணம் ஆக போகிறான் என்று.
வினித் மனதில் மிக சந்தோசமாக, “ஷான் வந்த விசயத்தை”, தன் தாயிடம் கூறினான்.அவர்களுக்கு  ரூம்மை ஏற்பாடு செய்யும் படி கூறினான்.
ஷான் தன் நண்பர்களிடம்,”எல்லா துணியும் பேக் பண்ணுங்க “என்றான்.
அவன் நண்பர்கள்,” ஏன் நாம் உடனே கிளம்பனும்,நீ உன்னுடைய முடிவை மாற்றி கொண்டுவிட்டாயா”,என்று கேட்டார்கள்.
ஷான் சரித்து கொண்டே,”நான் துணியை தான் பேக் பண்ணுங்க 
என்று சொன்னேன்,ஊரை விட்டு போகிறோம் என்று சொல்லவில்லை”.என்றான்.
“நான் வினித்தை சந்தித்தேன் அல்லவா,அவன் தான் நம்மை எல்லோரையும் அவன் வீட்டில் தங்க கூப்பிட்டான்,அதனால் தான் துணியை பேக் பண்ணுங்க 
என்று சொன்னேன்”,என்றான் ஷான்.
“நாளை காலையில், எல்லோரும் வினித் வீட்டில் இருப்போம்,நாளையில் இருந்து நம் வேலையை ஆரம்பிக்க போகிறோம்”.என்றான் ஷான்.
ஷான் தன் நண்பர்களுடன்,வினித் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு வினித் வீட்டில்,அவன் அம்மா வாங்க என்று வரவேற்று, அவர்களுக்கு அவர்கள் ரூம்மை காட்டினார்.நீங்கள் போய் சுத்தம் செய்துவிட்டு  சாப்பிட வாங்க என்றார்.
“அம்மா,வினித் எங்கே மா,அவனை பார்க்கவில்லையே,”என்று கேட்டான் ஷான்.
அதற்கு அவன் அம்மா,”அவன் உள்ளே தான் இருக்கிறான்,இதோ வந்துவிடுவான்”,என்றார்.
அவர் சொல்ல ,அவன் வரவும் சரியாக இருந்தது.
ஹாய் ஷான்,”எப்போ வந்தாய்” என்று கேட்டான் வினித். அவன் ,அம்மாவை பார்த்து “அம்மா காபி,டீ எதாவது கொடுத்திர்களா”,என்று கேட்டான்.
உடனே ஷான்,”அம்மா எல்லாம் தந்தார்கள்,நாங்கள் தான் அம்மாவிடம் உன்னை பற்றி கேட்டோம் “என்றான் ஷான்.
“ஏன்,நீ டல்லாக உள்ளாய், திருமண மாப்பிளைக்குரிய முக கலை இல்லையே”,என்று கேட்டான் ஷான்.
“நல்ல கேளுங்க தம்பி அவனை”என்றார் வினித்தின் அம்மா.
 “அதுவந்து….அதுவந்து….”என்று வினித் இழுக்க,”என்னடா அதுவந்து சொல்லு “என்று கேட்டான் ஷான்.
உடனே அவன்,” நீயே கேளுடா, திருமண பெண் வேறு யாரும் இல்லை என் அத்தை பெண் தான்,திருமணம் உறுதி செய்த பிறகு நான் அவளை பார்க்க வில்லை,அம்மா இப்பொழுது,அங்கே தான் செல்கிறார்கள்,நானும் வருகிறேன் என்று கூறுகிறேன்,கேட்கமாட்டேன் என்கிறார்கள்”,என்றான் வினித்.
“அம்மா, நீங்க அவனை அழைத்து செல்லுங்கமா “, என்று கேட்டான் ஷான்.  அவன் மனதில் ,என் யோகாவை பாா்க்க உனக்கு கேட்குதா.
“தம்பி  அது வந்து….,என்று இழுத்துவிட்டு,மணமகனை ,பெண்வீட்டிற்கு அழைத்து செல்ல கூடாது,நாளை தானே நிச்சயம்,அப்போது பார்த்து கொள்ளலாம்,யோகாவை”,என்றார் வினித்தின் அம்மா.
ஆனால் அவர் மனதில்,தன் மகனை பற்றி தெரியுமே,எங்க யோகாவிடம் பேசினால்,இந்த திருமணத்தை யோகாவே நிறுத்திவிடும் அளவுக்கு வந்துவிடுவாள், அவன் பேச்சால்,அதனால் இவனை நிச்சயம் முடிந்த பிறகு தான் அவனை யோகாவிடம் பேசவிட வேண்டும் என்று நினைத்தார்.
ஷான்,தன் நண்பர்களை பாா்த்து கண்சிமிட்டினான்,உடனே அவா்கள் வினித்தின் அம்மா விடம்,
“அம்மா நாங்கள் வரலாமா ,இதுவரை நாங்கள் எந்த தமிழ் திருமணத்தையும் பாா்க்க வில்லை,உங்களுக்கும் உதவியாக இருக்கும்.நாளைக்கு நிச்சயத்தை வைத்து கொண்டு இப்படி இருக்கின்றிர்.என்ன வேலை செய்யனுமோ எங்களிடம் சொல்லுங்கள் என்றாா்கள்.”
 வினித்தின் அம்மா மனதில், இந்த வினித்க்கு இப்படி ஒரு நண்பர்களா,நினைத்து பார்க்கவே முடியல என்று நினைத்தார்.
வினித்தின் அம்மா,ராம்மை பார்த்து,” நீ கோவில் அர்ச்சகரிடம் நாளைக்கு சுப முர்த்தம் எப்போது என்று கேட்டு கொண்டுவா  “,என்றார்.
“பிரகாஷ், நீ வினித்துடன் இருந்து அவனை வெளியே போகாமல் பார்த்து கொள்” ,என்றார்.
வினித் அவன் அம்மாவை பார்த்து,”அம்மா நீ செய்றது சரி இல்லை,என்னை நம்பாமல்,இப்போது வந்த இவர்களை நம்புகிறாய்,” என்று கத்தினான்.
அவன் அம்மா,”நீ சும்மா இருடா ,ஒரு ஆள் முகத்தை பார்தாலே தெரியும் அவர்கள் நல்லவா்களா,கேட்டவா்களா,”என்றார்.
“அம்மா, நாங்கள் உங்களுக்கு சிரமம் கொடுக்கிறேமா”,என்று கேட்டான் ஷான்.
” இல்லை தம்பி ,நான் என் அண்ணன் வீடு வரை போக வேண்டும் நீ என்னுடன் வா  தம்பி.”என்றார் வினித்தின் அம்மா.
ஷான் மனதில், ஒரே சந்தோசம்,பழம் நழுவி பாலில் விழுந்த கதையாய்,தான் வந்த வேலையை வினித்தின் அம்மா மூலம் நிறைவேறும் என்று நினைத்தான்.
தன் யோகாவை பார்க்க போகும் போது,அழகாக போக வேண்டாமா என்று நினைத்து.
அம்மா,” ஒரு நிமிசம் நான் சுத்தம் செய்து கொண்டுவரேன்” என்றான் ஷான்.
 “தம்பி ,நான் எல்லா வேலையும்  செய்கிறேன்,நீங்கள் மெதுவாக வாருங்கள்”,என்றார் வினித்தின் அம்மா.
“இதோ அம்மா “, என்று கூறி சந்தோசமாக சென்றான்,இதை பார்த்து அவன் நண்பா்கள் சந்தோசப்பட்டனர்,ஆனால், வினித் துக்கோ ,இவன் எதற்கு இப்படி சந்தோசப்படுகிறான் என்று நினைத்தான்.
ஷான்,”அம்மா எங்கே இருக்கின்றிர், நான் ரெடி”,என்றான்.
“ஷான் இதோ வரேன்”என்றார் வினித்தின் அம்மா.
“அம்மா நான் கேட்டேன் என்று தப்பாக நினைக்க மாட்டிற்களே,நானும் உங்களோடு வந்தால் அங்கே யாரும் உங்களை தப்பா நினைக்க மாட்டார்களா,”என்றான் ஷான்.
அதற்கு அவர்,”தம்பி அது வேறு யாரும் வீடு அல்ல ,என் தம்பி வீடு தான் அதனால் பயப்படாமல் வாங்க,”என்றார் வினித்தின் அம்மா.
அங்கே யோகவின் வீட்டில்,அவள் அம்மா,”ஏய் யோகா,சீக்கிரம் குளி உன் அத்தை உன்னை பார்க்க வருகிறார்.”என்றார்.
உடனே அவள்,”அம்மா,நான் கண்டிப்பாக குளிக்கனும்மா என்றாள்”.
“அடி பிண்ணிருவேன், போய் குளி”என்றார் யோகாவின் அம்மா.
யோகா குளித்துவிட்டுவரவும்,அவள் அத்தை வரவும் சரியாக இருந்தது.
யோகாவின் வீட்டில் ஷான்,வினித்தின் அம்மாவுடன் நுழையும் போது,அவள் பாட்டி காப்பி குடித்து கொண்டு இருந்தார்,அவள் அப்பா ,கைபேசியில் யாருடனோ பேசி கொண்டு இருந்தார்.அவள் அம்மா சமையல் அறையில் இருந்தார்.
வினித்தின் அம்மாவை பார்த்தவுடன்,பாட்டி,”வா துளசி “என்றார்.”இது யார் புதுசா இருக்கு”என்றார் .
வினித்தின் அம்மா,”அம்மா இது ஷான் நவப்,சூரத்தில் இருந்து வந்து உள்ளான்,அம்மா இவன் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவன்,மிகவும் அன்பானவன் மா,அவன் தந்தையின் தொழிலோடு,  துணிகளை எக்ஸ்பொர்ட் செய்யும் தொழிலையும் பார்கிறேன்,இப்பொழுது தான் வந்தான்,வினித்யின் நண்பன், எனக்கு உதவி செய்ய உடனே என்னுடன் வந்தான், எந்த பந்தாவும் இல்லாமல்”.என்றார்.
யோகாவின் அப்பா,இவர்கள் அவனை பற்றி பேசி கொண்டு இருக்கும் போது வந்தார்.அவனை பார்த்து “வாப்பா ! வந்து உட்கார்”,என்றார்.
சீதா,”இரண்டு காப்பி கொண்டு வா” என்றார்.
“வேண்டாம்”, நாங்கள் இப்பொழுது தான் குடித்தோம் என்றானர்.
அக்கா என்ன விசயமாக வந்தாய் என்று கேட்டார்.அவர் உடனே,”நாளைக்கு நிச்சயதார்த்தம் அல்லவா,அதான் யோகாவிற்கு மோதிரம் போட அளவு பார்க்க வந்தேன்” என்றார்.
யோகாவின் அப்பா, ” யோகா ,அத்தை  வந்திருக்கா  கீழே வா ,”என்றார்.
“இதோ வரேன் அப்பா”,என்று கூறி சுடிதார் மேல் ஷாலை போட்டு கொண்டு வந்தாள். அவள் அப்படி வந்து கொண்டு  இருக்கும் போது, ஷான் வினித்தின் அம்மா விடம்,”நான் இந்த புகைப்படத்தை பார்த்து கொண்டு  இருக்கிறேன்,நீங்கள் பேசி கொண்டு வாருங்கள் “என்றான்.
யோகா, தற்செயலாக பார்க்கும் போது, அங்கே ஷான் அவளை பார்த்து கொண்டு இருப்பது போல் தோன்றியது.என்ன நாம் பகலிலே கனவு காண்கிறோமா  ,அப்படி இருக்க வாய்பில்லையே என்று நினைத்தாள்.
ஷானோ,அங்கே இருந்தால் யோகாவை பார்க்க முடியாது என்று நினைத்து,அவளை பார்பதற்காக ஒரு பொய்யை சொல்லி அங்கு இருந்து தப்பி ,இப்போது அவளின் அழகை ரசித்து கொண்டு  இருந்தான்.அவள் நீண்ட முடியில் இருந்து தண்ணீர் துளி கீழே விழ ,அது அவனுக்கு தன்னை அவளிடம் அழைப்பது போல் இருந்தது.
உடனே அவன்,சுற்றி முற்றி பார்க்க  அங்கே அவர்கள் திருமண வேலையை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள்.
இது தான் சமயம் என்று நினைத்து,அங்கே வந்து கொண்டு இருந்த யோகவிடம் பேசுவோம் என்று மேல் மாடியை நோக்கி நடந்தான்.இவன் மேலே வர …வர … இவள் தன்னை அறியாமல் பின்னே நகர்ந்தாள்,இவள் அருகில் அவன் வந்து ,விழிஷா … என்று அழைத்து அவள் முடியை தன் கையில் வைத்து கொண்டு,நீ எனக்கு தான்! நான் யாருக்கும் உன்னை விட்டு தர மாட்டேன் என்று கூறி அவள் தலையில் முத்தம் வைத்து கீழே சென்றான்.
“யோகா என்ன செய்கிறாய்,”இன்னும் கீழே  வரவில்லை என்றார்.
“இதோ வரேன் அப்பா”,என்று கூறி கீழே வந்தார்.
அங்கே ஷானை பார்த்ததும்,இது கனவு அல்ல நிஜம் தானா, நான் என்ன செய்வேன் ஈஸ்வரா,அவனை நேரிலே கொண்டு வந்து உள்ளாயே என்றாள்.
அவள் அத்தையை பார்த்து,” வாங்க அத்தை ,நல்லா இருக்கிறிர்களா”,என்று கேட்டாள்.
அவர் அவளின் அழகை பார்த்து, திருஷ்டி கழித்தார்.
யோகாவோ ஷானை பார்த்து ,சரியான ராசட்சன் என்ன வேலை எல்லாம் செய்தான் ,அப்பா அம்மாவின் முன்னால் எப்படி பார்கிறான் என்று மனதில்  ரசித்து கொண்டு இருந்தாள்.
யோகாவின் அத்தை ,அவளிடம் மோதிரம் அளவு வாங்கி கொண்டு சென்றார்.
ஷான்,மற்றவர்களை பார்த்து சிரித்துவிட்டு ,யோகாவை பார்த்து யாரும் அறியாமல் கண்சிமிட்டிவிட்டு, அவள் முடியை இழுத்து விட்டு சென்றான்….
யோகாவின் நிச்சயதார்தம் நடக்குமா பார்போம்….

Advertisement