Advertisement

 ஷான், ஒரு துப்பறியும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவளை பற்றி விசாரிக்க சொன்னான்.
அந்த துப்பறியும் நபர்,ஷானின் தந்தையின் நண்பன்.அவர் யோகாவை பற்றிய விபரங்களை ஷானுக்கு அடுத்த நாள் காலையில் கொடுத்தார்.
அந்த தகவலின் படி யோகாவின் வீட்டில் ஏதோ விசேஷம் போல் உள்ளது என்று கூடுதல் தகவலாக கூறினார்.
உடனே அவன் ,என்ன  விசேஷம் என்று சொல்லுங்கள் என்றான்.
நாளை சொல்லுவேன் என்றார்.
ஆனால் அவன் மனதிலோ ஏதோ நடக்க கூடாதது நடக்க போகிறது போல் உணர்ந்தான்.
அங்கே யோகாவின் வீட்டில்,திருமண வேலைகள் துரிதமாக நடந்தனர்.
அடுத்த நாள் காலையில் யோகா கீழே வரும் போது, தன் அப்பா சிரித்து கொண்டு வேலை செய்ததை பார்த்து யோகாவின் மனதில் இந்த திருமணம் நடக்குமா இல்லையா என்று கூட தெரியமாட்டங்கிறது, என்ன தான் கடவுள்  ௭ன் தலையில் எழுதினாரோ என்று அலுத்தப்படி வந்தாள். நான் இன்னும் ,இந்த விசயத்தை தோழிகளிடம் கூற வில்லையே என்று நினைத்தாள்.
கைப்பேசியை கையில் எடுத்து, ஆனந்திக்கு அழைத்தால்,என்ன யோகா ௭ன்ன விசயம்,௧ாலையில் அழைக்கிறாய்,ஏன் நீ கல்லூரிக்கு வர வில்லை என்று கேட்டாள்,
அடியே ஆனந்தி,மூச்சுவிட்டு பேசு,
நான் ஒரு முக்கியமான விசயத்தை பற்றி பேச வந்தேன்.
“ஓகே சொல்லு” என்றாள் ஆனந்தி.
“எனக்கு இன்னும்,பத்து நாளில் திருமணம்,மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை என் அத்தை பையன் தான் “என்றாள் யோகா.
“என்ன யோகா காமடி ஏதும் பண்ணுரியா”.என்றாள் ஆனந்தி.
“உண்மையை சொன்னாலும் ,நம்ப மாட்டங்கிறியே “என்றாள் யோகா.
“ஓகே ,அப்படினாலும்,சொந்தத்தில் திருமணம் செய்வது நல்லது இல்லையே,அப்பா எப்படி யோசிக்காம முடிவு எடுத்தார்”என்றாள் ஆனந்தி.
அது ௭ல்லாம்,பெரிய கதை என்று நடந்த விசயத்தை ௭ல்லாம் சொன்னாள்.
“இன்னும், இரண்டு நாளில் நிச்சயம்,என்ன செய்வேன் என்றே தெரியவில்லை “என்றாள் யோகா
“ஓண்ணும் பயப்படாதே,எது நடக்கனுமோ அது தான் நடக்கும்,நீ பயந்தால் நடக்க வேண்டியது மாறும் என்று நினைக்கிறியா!அப்படி ௭ல்லாம் மாறாது,நீ கடவுளை வணங்கு,எல்லா குளப்பத்திற்கும் விடைக்கிடைக்கும். நானும் ,சிந்துவும் எப்போதும் உன்னுடன் இருப்போம் “என்றாள் ஆனந்தி.
அன்று இரவு  ,அவள் அத்தை வந்து பூ வைத்து, திருமணத்தை உறுதி செய்தார்.
யோகவின் அம்மாவிற்கு, இந்த திருமணம் நல்ல படியாக முடிய வேண்டும் என்று இறைவனை துதித்தபடி இருந்தார்.
ஆனால் அவருக்கு தெரியாதே, நினைப்பதெல்லாம் நடப்பதற்குள் விதி தன் வேலையை காட்டிவிடும் என்று அவர் அறிவாரோ.
அந்த துப்பறியும் நபர்,”யோகாவிற்கு திருமணம்” என்று ஷானிடம் கூறினார்.
அதை கேட்டவுடன்,ஷான் இந்த திருமணத்தை  எப்படி நிறுத்த என்று சிந்தித்தான்.
அவன் தன் தந்தையை கைப்பேசில் அழைத்தான்,”அப்பா!,நான் ஒரு முக்கியமான விசயமாக சென்னை செல்கிறேன். வருவதற்கு சிறிது நாள் ஆகும்,அது வரை என்னை தொடர்பு கொள்ளாதீர்கள்”.என்று ஷான் கூறினான்.
“என்ன விசயமாக சென்னை செல்கிறாய்!,சொல்லனும் என்று தோன்றினால் சொல், ஒரு பிரச்சனை இல்லை,டேக் கேர் “,என்று கூறி வைத்தார் அவன் தந்தை.
ஷான் தன் நண்பனிடம்,நான் சென்னை செல்கிறேன்.நீங்கள் பத்திரமா௧ இருங்கள் என்றான்.
அவர்கள் நாங்களும் வருவோம் என்றனர்.அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தாங்கள் வருவோம் என்றனா்.
“சரி வாங்க!”என்றான் ஷான்.
ஷானும்,அவர் நண்பா்களும் சென்னையில் தி லீலா பேலஸ்யில்  தங்கியிருந்தனர். 
எப்படி அவளை சந்திக்கலாம் என்று நினைத்து கொண்டு இருந்தான்.
பிரகாஷ் ஷானிடம் கேட்டான்,” இது சரியா வருமா! ,நீ அவளை ஒரே ஒரு நாள்  தானே பார்த்தாய்,அதற்குள் காதல் என்று சொல்கிறாயே,அவளுக்கு திருமணம்,௭ப்படி நிப்பாட்டுவாய்,அவளை நீ சந்தித்து பேசினாலும்,அவள் இந்த திருமணம்  நிப்பாட்டுவாளா என்ன.”என்றான்
“எப்படியும் யோகா சம்மதிக்க மாட்டாள்”என்றான் ஷான்.
“நாம் அவளின் அப்பா அம்மாவிடம் பேசி பார்போமா” என்றான் ராம்.
“அவர்கள் இதற்கு சம்மதிக்கமாட்டார்கள்,முதல் காரணமே நான் ஒரு முஸ்லிம் ௭ன்பதால்”என்றான் ஷான்.
“நாம் உன் தொழில்,குடும்பம் பற்றி பேசினால் சம்மதிப்பார்களா”என்றான் பிரகாஷ்.
“எது கூறினாலும் சம்மதிக்க மாட்டார்கள்,ஏன் என்றால் திருமணம் யோகவிற்கும் அவள் அத்தை பையனுக்கும் நடக்கிறது.”என்றான் ஷான்.
” இதை உன் அப்பாவிடம் கூறினாயா” என்று  கேட்டான் பிரகாஷ்.
“இதை பிறகு சொல்லுவேன்”.என்றான் ஷான்.
“அப்படி என்ன தான் செய்ய போகிறாய்.”என்றான் ராம்.
“அதை நடக்கும் போது பாருங்கள்,இப்போது எல்லோரும் படுங்கள் ,நான் வெளியே போகிறேன்,நீங்கள் பத்திரமாக இருங்கள்”என்றான் ஷான்.
இதை கேட்டவுடன் அவா்கள் நாங்களும் வருகிறோம் என்றார்கள்.
உடனே ஷான்,”நீங்கள் வரவேண்டாம்,தேவைப்பட்டால் நான் அழைக்கிறேன் ” என்றான்.
ஷான்  அந்த துப்பறியும் நபரை சந்திக்க சென்றான்,அவரிடம் சில விசயம் கேட்க வேண்டி உள்ளது.
ஷான் வரும் போது ,அவர் அலுவலகத்தில் அவர் மட்டும் இருந்தார்.
“வா ஷான், எப்போது வந்தாய்”என்றார் துப்பறியும் நபர்.
“அங்கிள், நான் மாலையில் வந்தேன்,எனக்கு சில விசயங்கள் தெளிவுப்படுத்த வேண்டி உள்ளது.”என்றான் ஷான்.
“என்ன விசயம் ,தாராளமாக கேள் ஷான்”என்றார் துப்பறியும் நபர்.
௭னக்குள் சில கேள்விகள் உள்ளன அங்கிள்”திருமணம் நாள் என்னைக்கு,எங்கே நடக்கிறது,ஏன் இந்த திடிர் திருமணம்  என்று”.கேட்டான் ஷான்.
“ஆர் யுவ் யின் லவ் வித் கர்”என்றார் துப்பறியும் நபர்.
“ஐ திங் ,ஐயம் யின் லவ்”என்றான் ஷான்.
“ஷான் வருகின்ற ஞாயிறு திருமணம்,வடபழனி கோயில் வைத்து திருமணம் நடைபேறுகிறது.நீ கேட்டியே ஏன் இந்த திடிர் திருமணம்  என்று அதற்கு எல்லாம் காரணம் யோகாவின் ஜாதகம் பலன் தான் காரணமாம்,நான் அந்த ஐய்யரிடம் விசாரித்தேன்,அவர் இதை தவிர வேறு ஒன்றும் கூறவில்லை.”என்றார் துப்பறியும் நபர்.
“ரெம்ப நன்றி அங்கிள்,இந்த விசயம் அப்பாவுக்கு தெரிய வேண்டாம் அங்கிள்,நான் வரேன்”என்றான் ஷான்.
ஷான் ஹோட்டலுக்கு வரும்போது ,”எப்படி இந்த திருமணத்தை நிறுத்துவோம்,அல்லா என்னுடன் இருந்து வழிகாட்டும் “என்று நினைத்த படி ரூமுக்கு வந்தான்.
ஷானின் நண்பர்கள் தூங்கி கொண்டு இருந்தனர்.அவன் தன்னை சுத்தம் செய்துவிட்டு படுத்துவிட்டான்.
காலை 4.00 மணிக்கு ஷான் முளித்துவிட்டான் ,நண்பர்களுக்கு ஓரு துண்டு சீட்டில் தகவலை எழுதிவைத்து விட்டு,ஷான் யோகாவின் வீட்டிற்கு வந்தான்.
அதிகாலையில் யாரும் முளிக்கவில்லை ,மாடி படியை ஏறும் போது இருமல் கேட்டது,ஓகோ இது தான் யோகாவின் பாட்டியாக இருக்கும்,அவன் யோகாவின் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் பற்றிய விபரத்தை முன்பே அறிந்து கொண்டான்.மேல் மாடிக்கு வரும் போது அங்கே நான்கு ரூம் இருந்தது.அவன் நேரே இருந்த ரூம் க்குள் நுளைந்தான். அங்கே யோகாவை பார்த்தான்,பார்த்தவுடன் அவனுக்கு எல்லாம் மறந்துவிட்டது,யோகா ஏதோ கனவு கண்டு இருப்பாள் போல்,போங்க ஷிவ் என்றாள்,இதை கேட்டவுடன் ,ஷானால் அவனை அடக்கமுடியாமல்,தன் முதல் முத்தத்தை யோகாவிற்கு கொடுத்துவிட்டு,அவளை அணைத்து கொண்டான்,இந்த அணைப்பில் ஓரு பாதுகாப்பு உணர்வை உணர்ந்தாள்.எங்கே கண்விழித்தால் கனவு கலைந்துவிடும் என்று தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.ஷான் அந்த நீண்ட முடியை கையில் வைத்து பார்த்து கொண்டு இருந்தான்.இப்படியே காலம் செல்லாதா என்று அவன் மனம் நினைக்க. காலம் யாருக்கும் காத்து இருக்காது என்பதை அவன் உணரவில்லை.
வெளியே,யோகாவின் அப்பா ,அவள் அம்மாவிடம் “நாளை மறுநாள் நிச்சயதார்த்தம் வைத்து கொள்வோம் ,அதற்குரிய ஏற்பாட்டை நான் பார்த்து கொள்கிறேன் நீ கவலைபடாமல் இரு ” என்றார்.
யோகாவின் அம்மா,”ஏங்க! இந்த திருமணம் நல்ல படியாக முடியும் அல்லவா ” என்று கேட்டார்.
அதற்கு அவர்,”நீ கவலைபடாமல் இரு எல்லாம் நல்ல படியாக முடியும் “.என்றார்.
தங்கள் வீட்டில்,வேறு ஒருவர் உள்ளார் என்பதை அவர்கள் அறியவில்லை.
யோகாவின் தூக்கம் கலைகிறது உடனே,அவன்,தன் கையை அந்த முடியில் இருந்து எடுத்துவிட்டு,கதவு பின்னாடி தன்னை மறைத்து கொண்டான்.
யோகா ,எழுந்தவுடன் என்ன கனவு இது,அந்த ஷான் வந்தது மாதிரி உணர்வு இருக்கிறதே. சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்கே யாரும் இல்லை.ஷான் அப்பொழுது தான் மாடி படியில் தாவி  கீழே சென்றான்.
யோகா வாய்விட்டே புலம்பினாள்,”நான் இந்த ஷான்னை மறக்கவில்லையா!ஒரே ஒரு நாள் தானே  அவனை பார்த்தேன்,ஆனால் அவன் எனது மனதில் நீங்காம இருக்கிறானே,எனகோ  ஞாயிற்று கிழமையில் திருமணம் ,கடவுளே நான் என்ன செய்வேன்,மனதில் ஒருத்தனை வைத்து கொண்டு எப்படி திருமணம் செய்வேன் இதற்கு ஒரு தீர்வுவறாதா.”
அங்கே ஷான் வரும் போது, அவன் நண்பர்கள் தூங்கி கொண்டு இருந்தனர்,அவன் எழுதி வைத்த துண்டு சீட்டை  ௭டுத்து குப்பையில்   போட்டுவிட்டு ,ஒன்றும் அறியாதவன் போல் தூங்கினான்.
ஆனால், தூக்கம் தான் வரவில்லை, அவன் நினைவு அனைத்தும் யோகாவிடமே இருந்தது,அவள் அறியாமல் தான் கொடுத்த முதல் முத்ததிலே இருந்தது ,அவள் தனக்கு இப்போதே வேண்டும் ,அவனால் அவனை அடக்க முடியவில்லை,உடனே அவன் குளியல் அறைக்கு சென்று தண்ணீர் அடியில் இருந்தான்.”நல்ல வேளை நாம் உடனே வந்துவிட்டோம்,இல்லைனா ஏதாவது செய்துவிடுவோம் அவளை”.
ஷான் எழுந்ததை பார்த்து ,அவன் நண்பர்களும்  தூக்கம் கலைந்தனர்.
ஷான் வெளியை வந்த உடன்,அவன் நண்பர்கள்,”ஷான்,நீ  யோகாவை பற்றி சிந்தித்தியா, என்ன செயலாம் என்று நினைக்கிறாய்”,என்று கேட்டனர்.
அதற்கு ஷான்,”நான் மறந்தால் தானே நினைப்பதற்கு, எப்போதும் அவள் நினைவு தான்,நான் பள்ளியில் படிக்கும் போதே என்னுடைய தந்தையின் கம்பெனிக்கு செல்வேன்,அது உங்களுக்கே தெரியும்,எப்படி காயை நகர்த்த வேண்டுமோ அப்படி நகர்த்துவேன்”.என்றான்.
ராமை அழைத்து,”நீ பிரகாஷை அழைத்து கொண்டு உன் ஆசிரமம் போய்விட்டு,அவனுக்கு இந்த சென்னையை சுற்றிகாட்டு”,என்றான்.
பிரகாஷுக்கு கோபம் வந்துவிட்டது,”என்ன நினைத்து கொண்டு பேசுகிறாய்,நாங்கள் என்ன  ஊரை சுற்றி பார்க்கையா வந்தோம்,கொஞ்சம் யோசித்து பேசு ,வாயை விடாதே,”என்று சாடினான்.
ஷான் உடனே,”ஏ கூல் கூல்,நான் சும்மா சொன்னே,நேற்று நீங்கள் தூங்கினீர்கள் அல்லவா, அதனால் சும்மா கலாய்ச்சி பார்தேன்”,என்றான்.
ஷான்,”இன்றைக்கு நான் ஒரு முக்கியமான ஆளை பார்க்க போறேன்,நீங்கள் நான் சொல்கின்ற விலசத்தில் இருக்கும் நபரிடம் நான் சொல்லும் விசயத்தை சொல்ல வேண்டும்,”என்றான்.
பிரகாஷ், “அப்படி என்ன விசயம் டா”என்றான்.
ஷான் நான் கூறுவதை கவனமாக கேளுங்கள்,”நான் அந்த வினித்தை பார்க்க செல்கிறேன்,நீங்கள் யோகாவின் வீட்டில் யார் எல்லாம் வருகிறார்கள்,போகிறார்கள் என்பதை  நான் கூறும் நபரிடம் கேட்டு சொல்ல வேண்டும்.நான் இந்த விசயத்தை துப்பறியும் நபரிடம் கொடுத்தேன் என்றால்,அது எப்படியாவது என் தந்தையின் காதுக்கு சென்றுவிடும்,அதனால் தான் உங்களை அனுப்புகிறேன்,நீங்கள் சந்திக்கும் நபர் என்னுடைய நலம் விரும்பி”,என்றான்.
ராம்,”இது சரிப்பட்டு வருமா “,என்று கேட்டான்.
ஷான்,” எல்லாம் சரிப்பட்டுவரும்”,என்றான்
பிரகாஷ்,” நீ ஏன் வினித்தை பார்க்க வேண்டும் “,என்று கேட்டான்.
ஷான்,” பிரகாஷ் அந்த வினித் யார் தெரியுமா! நாம் யுஜி படிக்கும் போது ,நமக்கு எதிராக ஆட்களை சேர்த்து கொண்டு திரிவானே அவன் தான்,அவன் தான் யோகாவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவன் வேறு யாரும் இல்லை , யோகாவின் அத்தை பையன்”,என்றான்.
பிரகாஷ் இதை கேட்டவுடன்,”நீ சொல்லுவது உண்மையா ,அவன் ஒரு பெண் பித்தன் ஆச்சே ,எப்படி யோகாவின் வீட்டில் சம்மதித்தார்கள்,எனக்கே ஆச்சிரியமாக உள்ளது”,என்றான்.
ஷான்,”அவனை பற்றிய விபரத்தை வெளியை அவன் காட்டி கொள்ளவில்லை,மேலும் யோகாவின் அப்பா அவனை பற்றி விசாரிக்கவில்லை,”என்றான்.
ஷான்,”நான்  அந்த வினித்தை சந்தித்து வருகிறேன்,நீங்கள் நான் சொன்ன வேலையை பாருங்கள்”,
என்று கூறி சென்றான்.
ஷான் வினித்தை சந்தித்து இந்த திருமணத்தை நிறுத்துவானா என்பதை பார்போம்….

Advertisement