Advertisement

அந்த குரலில் ஷான் அந்த குழந்தையை வைத்து கொண்டு இருந்த தாய்யை பாா்த்தான்,பாா்த்தவன் பாா்த்தபடி ….நின்றான்.

தன் கண்களால் தன்னே நம்ப முடியவில்லை,இது யோகா தானா…

“இது எப்படி சாத்தியம்,அதுவும் கையில் குழந்தையுடன், ஒரு வேளை இது நம்ம குழந்தையோ….

அதனால் தான் அந்த குழந்தை நம்மை பாா்த்து சிரித்ததோ….” என்று மனதில் நினைத்தான்.

இவன் அவளை பாா்க்க, அவள் தன் எதிரில் இருக்கும் ஷானை பாா்த்து தன்னை மறந்து பாா்த்து கொண்டு இருந்தாள்….இவர்கள் இப்படி பாா்த்து கொண்டு இருக்க.

இவர்களை நோக்கி ராமும் ,பிரகாஷும் வந்தனா்,ஷானை பாா்த்து ராம்,”ஏன் நீ இங்கே தனியாக இருக்க,வா நாம்….. சூரியனை பாா்க்கலாம் சீக்கிரம் வா,”என்று கையை பிடித்து இழுத்தான்.

அதில் ஷான் தன் நினைவு பெற்றான்,ராமை பாா்த்து முறைத்தான்.யோகாவை பிரகாஷ் பாா்த்தான்,பாா்த்தவுடன் ,”யோகா நீ இங்கையா….இருக்க,எப்படியோ உன்னை பாா்த்துவிட்டோம்…..”என்று தன் மகழ்ச்சியை தெரிவித்தான்.

ஷான் தன் நினைவுக்கு வந்தான்.

அவன் யோகாவை பாா்த்து,”விழிஷா… “என்றான்.

தன்னவன் அழைத்ததும், ம்…..என்று அவனை பாா்த்த கொண்டு இருந்தாள்,அந்த நோடி தான் இன்னும் அவனை பாா்த்த படி இருப்பது தெரிந்து தலையை குனிந்தாள்.

அப்பொழுது, தன் கையில் இருந்த குழந்தை” ம்மா….ம்மா…. ப்பா…ப்பா…,”என்று சத்தம் போட்டது.

ஷான் கண்களால் இது யாருடைய குழந்தை என்று கேட்டான், அதற்கு அவள் ,”நம்முடைய குழந்தை,”என்றாள்.

ராமும்,பிரகாஷும் ஷாக் அடித்தது போல் நின்றனா்.

ஷான் யோகாவின் அருகில் வரும் போது அவள் கை ஆடியது,”ஏன் இப்படி செய்தாய் யோகா,எல்லோரும் என்னிடம் எதையும் மறைக்க மாட்டாா்கள்………,ஆனால் நீயோ என்னிடம் என் குழந்தையை மறைத்துவிட்டாய்……….,இதற்கான தண்டனை கண்டிப்பாய் உனக்கு உண்டு ,என்று அவள் காதில் கூறி தன் குழந்தையை அவள் தோளில் இருந்து எடுத்தான்,அப்படி எடுக்கும் போது அவன் கை யோகாவின் தோளில் பட,யோகா மெய் மறந்து நின்றாள்.

அப்பொது அவள் தோழி,சிந்து மற்றும் ஆனந்தி கடலில் கால் நனைத்துவிட்டு வந்தனா்.

இதை பாா்த்த ராமுவுக்கும், பிரகாஷுக்கு தன் சந்தோசம் மீண்டும் வந்தது போல் இருந்தனா்.

இவர்களை பாா்த்ததும் ,ஆனந்திக்கு எப்படியோ நம் யோகா சேர்ந்துவிட்டாள், நாம் கடவுளிடம் வேண்டியது பலித்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைந்தாள்.

சிந்து அந் சூழ்நிலையை மாற்றும் பொருட்டு ,”நீங்கள் எப்படி வந்தீர்கள்,நீங்கள் சூரியன் மறைவு பாா்த்தீர்களா…….

,வாங்க சீக்கீரம் இன்னும் சில நிமிடத்தில் மறைந்துவிடும் வாங்க நாம் அங்கே போகலாம்,”என்று கூறி அனைவரையும் அழைத்து சென்றாள்.

எப்படி ஷானிடம் பேச என்று நினைத்து கொண்டு இருந்த யோகாவிற்கு கொஞ்சம் யோசிக்க நேரம் எடுத்து கொடுத்தாள் சிந்து.

சூரியன் மறைவையும், நிலா உதிக்கும் அழகையும் பாா்த்த படி நின்றனா்,அவர்கள் தோழிகள்  அவர்களுக்கு தனிமை கொடுத்து ராமு மற்றும் பிரகாஷ் உடன் கடக்கறைக்கு சென்றனா்.

ஷான்….ஷான்……..என்று சொல்லி பாா்த்தாள்,ஆனால் ஷானுக்கு பதில் காற்று தான் வந்தது,ஆனாலும் ஷானுக்கு அவள் அழைத்தது புரிந்தது, என்ன செய்கிறாள் என்பதற்காகவே,கண்டுகாதது போல் நின்றான்.

மீண்டும் அழைத்து பாா்த்தாள், மீண்டும் காற்று தான் வந்தது..

என்ன செய்ய என்று யோசித்து கொண்டும் இருக்கும் போது, குழந்தை ஷானிடம் இருந்து தாவி யோகவிடம் வந்தது,”ம்மா….ம்மா….பா….பா….”. என்று கூறியது.

உடனே அவள் தன் கையில் இருந்த பாலை டம்லரில் ஊற்றி கொடுத்தாள்,பாலை அருந்தும் போது குழந்தை ஒரு கையில் யோகாவின் செய்னையும் மறுகையில் யோகாவின் முடியை வைத்து ஆட்டியப்படி இருந்தது,இதை பாா்த்து கொண்டு இருந்த ஷானுக்கு ,அவன் அப்படியே தன்னை போல் செய்வதை பாா்த்து, கோபம் போய் சிரிப்பு வந்தது.

பால் குடித்ததும், யோகா மாா்பில் போட்டு தட்டி கொடுக்க, குழந்தை அழகாக தூங்கியது.

ஷான் தன் கோபத்தை மறந்து,விழிஷாவை…..பாா்த்து கொண்டு இருந்தான்,அருகில் நெருங்கி வந்து அவன் குழந்தையை கையில் எடுத்தான்.

“ஏன் மறைத்தாய் நீ,”என்று கேட்டான்.

தன் விழிகளில் இருந்து கண்ணீர் கீழே விழுந்தது,அதை பாா்த்து ஷான்,அதை தன் கைகளால் துடைத்துவிட்டான்,அப்படியே அவளின் உதட்டை தடவினான்,அவள் முகம் சிவந்தது இதை பாா்த்து கொண்டு இருந்த ஷானால் தன்னை அவளின் முகத்தில் இருந்து பிரிக்க முடியவில்லை,இப்பொழுதே அவள் தனக்கு வேண்டும் என்று நினைத்தான்,அப்பொது கையில் இருந்த குழந்தை சினுங்கியது,

யோகா கையில் இருந்த குழந்தையை வாங்கி கொண்டு,”வாங்க ….நாம் கிளம்பலாம் “,என்றாள்.

“எங்கே….,”என்றான்.

“அது நான் தங்கி இருக்கும் வீட்டிற்கு,”என்றாள்.

“என்னிடம் சொல்லி கொள்ளாமல் வந்தது நீ,நான் எப்படி உன் வீட்டிற்கு வருவேன் என்று எதிர் பாா்கிறாய்.என் குழந்தையை நான் வளர்த்து கொள்வேன்”என்றான்.

அவன் அப்படி பேசவும்,அவளுக்கு தன் குழந்தை தன்னிடம் வேண்டும் என்று நினைத்தாள்.

இவள் இப்படி நினைக்க ,இன்னும் அவள் தன்னிடம் வரனும் என்று நினைக்கவில்லையே என்று நினைத்து தன் வருத்தத்தை தன் மனதில் வைத்து கொண்டு ,”இப்போது நீ என்னுடன் வருவியா இல்லையா…..,அல்லது நான் என் குழந்தை எடுத்து செல்லவா என்று கேட்க,”

என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல், நின்றாள்.

“உன்னை தான் யோகவிழி… நான் சொல்லுவது புரிகிறதா,”என்றான்.

அவனின் யோகவிழி…. என்ற அழைப்பே, அவனின் கோபத்தை சொல்லாமல் சொல்லியது.

இனி கடவுள் விட்ட வழி என்று நினைத்து,”உங்கள் இஷ்டம் ” என்றாள்.

அவள் சொன்ன பதிலில் ,அவன் கோபம் சற்று தனிந்தது.ஷான் தன் நண்பர்களை அலைபேசியில் அழைத்தான்.நடந்த விசயத்தை சுருக்கமாக கூறி,இப்போதே டிக்கேட் போட சொன்னான்,இன்னும் அரைமணி நேரத்தில் நாம் இங்கு இருந்து கிளம்ப வேண்டும் என்றான்.

அவளை அவள் நண்பர்களை அழைத்து கொண்டு ,நாம் இப்பொது தங்கி இருக்கிற ரூம்க்கு சென்று ,எல்லா திங்க்ஸ்யை எல்லாம் எடுத்து கொண்டு நாம் செல்வோம் என்றான்.

இதை கேட்ட சிந்து நீங்கள் யோகாவை அழைத்து கொண்டு செல்லுங்கள்,நாங்கள் இங்கே வேக்கேட் பண்ணி கொண்டு நாங்கள் எங்கள் வீட்டிற்கு செல்கிறோம் என்றாள்.

இதை கேட்ட யோகா ,இல்லை நான் எல்லோரிடமும் நன்றி சொல்லிட்டு தான் செல்ல வேண்டும் என்றாள்.

சரி நீ சென்று சொல்லிவிட்டு வா நான் அந்த காாில் குழந்தையை வைத்து கொண்டு இருக்கிறேன் என்றான்.

இதை கேட்டு யோகா ,இவன் முடிவு எடுத்து விட்டான் என்றால்,நான் எது சொன்னாலும் கேட்க மாட்டான் என்று மனதில் நினைத்துவிட்டு ,சரி என்று தலை ஆட்டினாள்.

வசந்தா அம்மாவிடம் நன்றி சொல்லிவிட்டு ,தன் தோழிகளை அணைத்து விட்டு வாரேன் என்று சொல்லி கிளம்பினாள்.

சிந்து,” சந்தோசமாக போய்டு வா ,பழையதை நினைக்காதே ,சந்தோசமாக போ,”என்றாள்.

ஆனந்தி,”அடிக்கடி போன் பேசு ,” என்றாள்.

“சரி ,” என்று தலையாட்டிவிட்டு ஷானிடம் வந்து குழந்தையை வாங்கி கொண்டு அமர்ந்து விட்டாள்.

ஷான்,”விழிஷா…..குழந்தையின் பெயா் என்ன ,”என்றான்.

குழந்தையின் பெயா் ஜெய்ஷாந்த் நவப் என்றாள்.

ஜெய்ஷாந்த்…..ஜெய்ஷாந்த்….என்று சொல்லி பாா்த்தான்.

“ஏன் என்னை விட்டு வந்தாய் விழிஷா,”என்றான்.

“அது நான் உங்களுக்கு பொருத்தம் இல்லை,நீங்கள் பெரிய குடும்பம்,”என்றாள்.

“யாா் சொன்னா அதை ,நான் சொன்னே…னா….இல்ல…..என் அம்மா….சொன்னாா்களா…,யாா் எதை சொன்னாலும் நீ அதை என்னிடம் சொல்ல வேண்டும் அல்லவா….., நான் தானே உன்னை திருமணம் செய்தது…..”என்றான்.

“இதை கேட்டதும்,நான் தப்பு செய்துவிட்டேன் ,என்னை மன்னித்து கொள்ளுங்கள் ,” என்றாள்.

“நீ செய்தது மன்னிக்க முடியாத குற்றம்,ஆனாலும் என் குழந்தையை  பெற்று வளர்த்தற்காக உன்னை மன்னிக்கிறேன்  ,”என்றான்.

அவர்கள் ஏர்பொர்ட் வந்து சென்னை செல்லும் விமானத்தில் ஏறினா்.

சென்னை வந்ததும், ஷான் யோகாவை அழைத்து கொண்டு ,அவள் இல்லம் சென்றான்.

யோகா நான் வரமாட்டேன் என்று எவ்வளவு மறத்தும் அவன்,யோகாவை அழைத்து கொண்டு சென்றான்.

அவள் வீட்டில் மணி அடிக்க, ஒடி வந்து திறந்தாா் யோகாவின் அம்மா, அம்மாவை பாா்த்ததும் “அம்மா….அம்மா….,”என்றாள்.

யோகாவின் அம்மா,யோகாவை பாா்த்ததும் ,”வா யோகா…மாப்பிள்ளை உள்ளே வாங்க ,”என்றாா்.

“அம்மா அப்பா வந்தால் உன்னை திட்டுவாா்,நாங்கள் செல்கிறோம் ,” என்றாள்.

“அது எல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாா்கள்,ஏன் என்றால்,உன் கணவர் எல்லாம் பேசி எங்களிடம் மன்னிப்பு கேட்டாா்,உன் மேல் தப்பு இல்லை என்று தெரிந்ததும் அப்பா மன்னித்து விட்டாா், இப்போது அப்பா மட்டன் வாங்க சென்றாா், இப்பொது வந்து விடுவாா்,” என்றாா்.

ஷானை காதல் பொங்க பாா்த்தாள்.ஷான் யோகாவை பாா்த்து கண் சிமிட்டினான்,யோகா வெக்கத்தாள் தலை குனிந்தாள்.

யோகா தன் அம்மாவிடம், தன் குழந்தையை கொடுத்தாா்,அவர் அதை வாங்கி உச்சி முகர்ந்தாா்.

யோகாவின் அப்பா வந்ததும்,சாப்பிட்டுவிட்டு அவர்கள் ,அவர்களிடம் விடைப்பெற்று சூரத் சென்றனா்.

சூரத் அரண்மனையை நெருங்கும் போது, தன் கை நடுங்குவதை அவளால் அடக்க முடியவில்லை, இதை பாா்த்த ஷான்,”விழிஷா…நான் இருக்கும் போது ஏன் கவலை படுகிறாய்,எல்லாம் நன்மைகே…,”என்றான்.

அவர்கள் வந்து இறங்கும் போது,அங்கே விழா கோலம் போன்று காட்சி அளித்தது,

தன்னை மறந்து அந்த அலங்காரத்தில் மனம் சென்றது.

பையன் அழுததும் சுய நினைவுக்கு வந்தாள்.அவனை தட்டி கொடுத்து ,அந்த அலங்காரத்தை பாா்க்க வைத்தாள்.

ஷான் வந்து அவளை அழைத்து கொண்டு ,அவர் அம்மா இருக்கும் அறைக்கு அழைத்து சென்றான்.

யோகாவின் கையில் இருந்த குழந்தையை பாா்த்ததும்,”என்னை மன்னித்துவிடு யோகா….,”என்று பேச முடியாமல் பேசினாா்.

இதை பாா்த்ததும்,யோகாவின் குணம் தலை தூக்க, “நீங்கள் என்னை செய்தீர்கள் அத்தை,எல்லாம் என் தலைவிதி, பாா்த்து கொண்டே இருங்கள், நீங்கள் விரைவிலே நடமாடுவீர்கள்,இதோ பாருங்கள் இது தான் உங்கள் பேரன்,” என்றாள்.ஷானின் தந்தையிடம்  குழந்தையை கொடுத்தாள்.அவரிடம் ஆசியை பெற்றாா்கள்.

யோகாவை கண் இமைக்காமல் பாா்த்து கொண்டு இருந்தான்.

யோகா ஷானின் அம்மாவிடம் பேசிவிட்டு,ஷானை பாா்க்க,,”அவன் மேலே வர சொன்னான்,”.

அவன் சொன்னது போல் மேலே வரும் போது, அவளுக்கு ஷான் என்ன செய்வானோ ….என்று இருந்தது.

அவள் உள்ளே நுழைந்ததும்,ஷான் குழந்தையை வாங்கி மெத்தையில் படுக்க வைத்தான்.

“விழிஷா…. இங்கே வா….,” என்றான்.

தயங்கி,தயங்கி….அவன் அருகில் வந்தாள், அவளின் முடியை பிடித்து தன் மடியில் அமர்த்தி கொண்டான்.

“எத்தனை நாள் நீ இல்லாமல் ,நான் இந்த அறைக்கே வருவது இல்லை தெரியுமா…விழிஷா…..

நீ இன்னும் என் காதலை உணரவில்லையா…..”,என்றான்.

“காதலை உணராமல் தான்,உங்களிடம் இருந்தேனா….என்னை…எப்படி இப்படி நீங்கள் கேட்கலாம்,”என்றாள்.

“சரி,எப்போது என்னையும் ,என் காதலை அறிந்து கொண்டாய்,”என்றான்.

“அது …நாம் அந்த ஐஸ்கிரம் பாலரில் சந்தித்தோமே அப்போதே ,உங்களிடம் என் மனம் வந்துவிட்டது என்று தெரியாமல் அலைந்து இருக்கிறேன்,திருமணம் முடிந்த பிறகு தான் அதை உணர்ந்தேன்,உங்களிடம் சொல்லலாம் என்று நினைக்கும் போது,அத்தை அப்படி பேசி விட்டாா்கள்,உங்களை விட்டு பிரியும் போது, என் உயிரே போனது போல் இருந்தது,”என்றாள்.

ஷான்,”நீ போன பிறகு நான் கம்பெனியில் முழு நேரமும் செலவு செய்தேன் சிறந்த தொழில் அதிபன் என்ற பெயர் கிடைத்தது,ஆனால் என் மனதின் சந்தோசம் தான் இல்லை,எப்போது உன்னை பாா்த்தனோ அப்போதே எல்லா சந்தோசம் வந்தது போல் இருந்தது ,என்று கூறி அவள் குந்தலை வருடினான்.

இப்படி அவள் குந்தலை  அவன் வருட…… ஐ லவ் யு ஷான்…. என்று கூறி ,அவன் இதழில் தன் இதழை பொருத்தினாள்….பிறகு அதை தனதாக்கி அந்த தேன் சிந்தும் இதழில் தேனை எடுத்து ,இல்லறம் என்னும் நல்லறத்தில் சந்தோசமாக வாழ்ந்தனா்.

……முற்றும்…….

..

Advertisement