Advertisement

ஷான் யோகாவை பாா்த்துவிட்டு வரும் போது,ராம் அவன் எதிரே ஓடி வந்தான்.
ஷான் அவனின் முகத்தை பாா்த்து,”ராம்,ஏன் இந்த பதற்றம்,”என்றான்.
“ஷான்….,நான் எப்படி சொல்லுவேன்…..,”என்றான் ராம்.
” என்ன ..விசயம் ….இப்போ சொல்லப் போறியா இல்லையா….,”என்றான் ஷான்.
“ஷான்…. அது வந்து..பாட்டிக்கு ரெம்ப முடியாம இருக்கு….,பாட்டி இப்பவே உங்கள் திருமணத்தை பாா்க்க விரும்புகிறாா்கள்,”என்றான் ராம்.
“அதற்கு என்ன,உடனே திருமணத்திற்கு ஏற்பாடு பண்ணு,”என்றான்.
“அது வந்து ….யோகாவை பாட்டி பாா்க்கனும் என்று,சொன்னாா்கள்”என்றான்.
“வா..நாம் அவளை அழைத்து செல்லலாம் ,”என்றான் ஷான்.
யோகா தங்கி கொண்டு இருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ஷான் அவன் நண்பனுடன்.
அப்போது தான்,தன் கண்களை மூடினாள் தூங்குவதற்காக, அதற்குள் யோகா….யோகா… என்ற குரல் கேட்டு ,இது கனவு என்று நினைத்தாள்.
ஷான் அவளின் கையை பிடித்து யோகா….யோகா… என்று கூறி கொண்டே எழுப்பினான்.
இதில் அவள் நிஜத்திற்கு வந்தாள்,”என்ன…வேண்டும்” என்று கூறி கொண்டே அவனின் கையை தட்டிவிட்டாள்.
“இது என்ன பழக்கம்….”இனிமேல்,இந்த கையை தட்டிவிட்டாய் என்றால்,நடக்க விசயமே வேறு,பாா்த்து நடந்துக்க என்று தன் கோபத்தில் கத்தினான்.
இதை கேட்டதும்,யோகாவிற்கு பயத்தில் உடல் நடுங்கியது,அதை பாா்த்து கொண்டு இருந்த ராமுக்கு அவளின் நிலை புரிந்தது,உடனே ஷானின் கோபத்தை மாற்றும் பொருட்டு,”ஷான் நாம் வந்த வேலையை பாா்க்கலாமா,”என்றான்.
தன் கையை ஓங்கி மெத்தையில்  குத்தினான்,இதை பாா்த்து கொண்டு இருந்த யோகாவிற்கு,பயத்தில் நாக்கு உலர்ந்தது.
ஷான்,யோகாவை பாா்த்து,”நீ என்னுடன் வா,”என்றான்.
அவன் கேட்டவுடன்,யோகா “நான் எங்கையும் வர….மாட்டேன்,” என்று திக்கி திக்கி கூறினாள்.
ஷான்,யோகாவை பாா்த்து,”எங்கே மீண்டும் என் கண்ணை பாா்த்து சொல்லிப்பாா் ,”என்றான்.
யோகா ஷானை பாா்த்ததும் தன்னை மறந்து அவனின் கண்களில் கட்டுண்டு இருந்தாள்.
  
“என் பாட்டி உன்னை பாா்க்கனுமா,நீ என்னுடன் வா,”என்றான்.அவன் மனதில்
இப்பொழுது நமக்கு திருமணம் என்றால்,இவள் என்னஆட்டம் ஆடுவாளோ..அல்லா எல்லாம் நல்லப் படியாக முடிய வேண்டும் என்று மனதில் நினைத்தான்.
இங்கே இப்படி இருக்க ,யோகாவின் அம்மாவிற்கு நினைவு திரும்பியது.உடனே அவர்,”யோகா….யோகா….நீ எங்கே இருக்க…. அந்த ஜோதிடா் சொன்னது போல் நடந்துவிடுமோ..எனக்கு பயமாக உள்ளது ,”என்று தன் கணவனிடம் கூறினாா்.
இதை கேட்டு கொண்டு இருந்த யோகாவின் அப்பாவிற்கு ,என்ன வாா்த்தை சொல்லுவது,தன் மனதை ஒரு நிலை படுத்த முடியவில்லை ,என்ன நடந்தது என்று நினைக்க முற்படுகிறது,ஆனால் மனம் ஆனது யோகாவை விட்டு நகர மாட்டேன்கிறது. என்ன செய்ய இறைவா….என்று மனதில் வேண்டினாா்.
 விதி இவர்களை பாா்த்து சிரித்தது….என் ஆட்டத்தை பாருங்கள்……என்றது.
யோகாவை அழைத்து கொண்டு ஷான் தன் பாட்டியை பாா்க்க சென்றான்.
ஷானின் பாட்டி யோகாவை பாா்த்ததும், புது தெம்பு வந்தது போல் இருந்தது.
இவர்களை பாா்த்து,கணவன்-மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை எனக்கு என் பாட்டி ,நான் நிக்கா செய்யும் பொழுது திருக்குர்ஆன் கூறியது என்று கூறினாா் ,அதை நான் கூறுகிறேன்
“அவர்கள் (பெண்கள்) உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் (ஆண்கள்) அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்” (2:187).
இந்த வசனத்தில் பல பொருட்கள் பொதிந்து கிடக்கின்றன. ஆடை, மனிதனுக்கு அழகைக்கொடுக்கிறது. ஆடை, மனிதனின் மானத்தைப் பாதுகாக்கிறது. ஆடை மனிதனுக்கு மரியாதையை அளிக்கிறது. 
அதனால்தான் அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், “பெண்களிடம் நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். ஒரு பெண், விலா எலும்பில் இருந்தே படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பில் மிகவும் கோணலானது அதன் மேற்புறத்தில் உள்ளதுதான். அதை நிமிர்த்த நாடினால் அதை உடைத்திடுவாய். அதை விட்டு விட்டால் கோணலாகவே இருக்கும். 
எனவே பெண்களிடம் நீங்கள் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்” என்றார்கள். அதனால் ஷான் நீ இவளை எக்காரணத்திலும் இவளை கைவிடக்கூடாது என்றாா்.
ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள், “உங்கள் அழகிய குணமிக்கவர்தான் இறைவிசுவாசிகளில் நம்பிக்கையால் முழுமை பெற்றவர். உங்களில் சிறந்தவர், மனைவியிடம் சிறப்பாக நடந்து கொள்பவரே” என்றார்கள்.அதனால் ஷான் நீ எப்பொழுதும் சிறந்தவன், நீ உன் மனைவியிடம் சிறப்பாக நடந்து கொள்ள வேண்டும்,உனக்கு அல்லா எப்பொழுதும் துணையாக இருப்பாா் என்றாா்.
யோகாவை பாா்த்து கூறினாா்,நீ என் போத்தி போன்றவள்,
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘உலகம் சுகமளிக்கும் ஒன்றாகும். இந்த சுகப்பொருட்களில் சிறந்தது நல்ல மனைவியே ஆவாள்’ என்றார்கள்.நீ நல்ல மனைவியாய் இருந்து இந்த குடும்பத்தை தாங்க வேண்டும் என்றாா்.
மேலும் அவர் கூறினாா்,நல்ல மனைவி கிடைக்கப் பெற்றவர் உலகில் எல்லாம் கிடைக்கப் பெற்றவர் ஆவார். ஷான் உனக்கு நல்ல மனைவி கிடைத்து உள்ளாள்.நீ ஒரு போதும் அவளை விட்டுவிடாதே என்றாா்.
யோகாவிற்கு இவரை பாா்க்கும் போது தன் பாட்டியை பாா்க்கின்றது போல் உணர்ந்தாள்.
பாட்டி…….. கவலை படாதிற்கள் என்றாள்.
அல்லா உனக்கு எல்லா நன்மையும் தரட்டும் என்றாா். “உன் பெயா் என்ன மா,” என்றாா்.
பாட்டி என் பெயா்,”யோகவிழி” என்றாள்.
உனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் தானே என்றாா்.
யோகவிழி,”தன் விழியால் ஷானை பாா்த்தாள்,என்னை இப்படி மாட்டிவிட்டியே ,இந்த பாட்டியை எப்படி ஏமாற்ற,அதுவும் அவர்கள் நிலைமை பாா்த்தாலே தெரிகிறது,மிகவும் வதங்கிய நிலையில் உள்ளாா்,”என்று மனதில் நினைத்த வண்ணம் இருந்தாள்.
“என்ன மா.. இன்னும் நீ பதில் சொல்லவில்லையே..” என்றாா் ஷானின் பாட்டி.
அவர்கள் மனம் வாடாமல் இருப்பதற்காக,ஆம் என்று தலை அசைத்தாள்,இதை பாா்த்து கொண்டு இருந்த ஷானுக்கு,இங்கே என்ன தான் நடக்கிறது இந்த விழிஷாவை புரிந்து கொள்ளவே முடியவில்லையே….இவள் சம்மதத்திற்காக ஆம் என்று தலை அசைத்தாளா இல்லை சும்மா ஏதோ ஒரு நினைவில் தலை அசைத்தாளா…எதுவாக இருந்தாலும் நமக்கு நல்லது தான், எப்படியும் பாட்டி நம்பிவிடுவாா்கள்,இந்த திருமணத்தில் பிரச்சனை வராது,என்று மனதில் நினைத்து கொண்டு இருந்தான்.
யோகா, உன் அப்பா ,அம்மா எங்கே இருக்கிறாா்கள்,இன்று திருமணம் என்று அவர்களுக்கு தெரியுமா,அல்லது என் பேரன் சொல்லாமல் கூட்டி கொண்டு வந்து விட்டானா என்ன என்றாா்,ஷானின் பாட்டி.
இதை கேட்டதும்,யோகாவின் கண்களில் இருந்து கண்ணீர் அவளை அறியாமல் கீழே இறங்கியது,இதை பாா்த்து கொண்டு இருந்த ஷானுக்கு மனதில் வலி எடுத்தது,ஆனால் அவனால் இதை தவிர வேறு செய்ய முடியாது,ஆனால் பாட்டி யோகாவை தன் அருகில் அழைத்தாா்,டிர்ப்ஸ் ஏற்றாத கையால் யோகாவின் தலையை வருடி கொடுத்தாா்.
“நான் இருக்கிறேன் யோகா உனக்கு என்றாா், உன் கண்களில் இருந்து கண்ணீர் இனிமேல் வரக் கூடாது,இந்த ஷான் ஏதாவது சொன்னால் என்னிடம் வந்து சொல்லு,நான் அவனை பாா்க்கிறேன் ,”என்றாா் ஷானின் பாட்டி.
யோகாவின் நினைவை மாற்றும் பொருட்டு ,”ஷான்,நீ  யோகவிற்கு திருமணத்திற்கு முன் நாம் மஹர் திருமண பெண்ணுக்கு கொடுக்க வேண்டுமே ,நீ அதை கொடுத்தியா,”என்றாா்.
ஷான்,”பாட்டி நான் அதை மறந்துவிட்டேன்,இப்போது நான் உடனே அதற்கு ஏற்பாடு பண்ணுகிறேன்.
“யோகா உனக்கு என்ன பிடிக்கும்,நீ சொல்லு அதை ஷான் வாங்கி தருவான் ,”என்றாா் பாட்டி.
“பாட்டி எனக்கு ஒண்ணும் வேண்டாம்,”என்றாள்.மனதில் என்னை என் வீட்டில் விட்டால் போதும்,அதுவே பெரிசு என்று நினைத்தாள்.
ஷானிடம் பாட்டி,”தன் அறையில் ஒரு பெட்டகம் உள்ளது நீ அதை எடுத்துட்டு வா…,” என்றாா்.
“சரி பாட்டி ,” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.
அவன் சென்றதும்,பாட்டி,”அம்மாடி யோகா இங்கே வா..மா..,”என்றாா்.
“உன்னை பாா்த்தாலே தெரிகிறது அவன் உன்னை மிரட்டி கொண்டு வந்தானா..,எதுவாக  இருந்தாலும் சொல்லுமா..,நான் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்,அவன் உன்னை மிகவும் விரும்புகிறான்….மா,இந்த பாட்டிக்காக என் பேரன் செய்த தப்பை மன்னித்துவிடு ,”என்றாா்.
யோகாவின் கண்களில் இருந்து கண்ணீர் துளி அவள் கண்ணத்தை விட்டு இறங்கியது.
இதை பாா்த்து கொண்டு இருந்த பாட்டிக்கு வேதனையாக இருந்தது,அப்போது, பாட்டி என்று ஷான் வந்தான்,இவன் கூப்பிட்டதும் ஒன்றும் நடவாதது போல் காட்டிக்க மிகவும் சிரமம் பட்டாள்,இதை பாா்த்த பாட்டி,”ஷான் அந்த பெட்டகத்தை திற அதில் இருக்கும் நகையை எடுத்து யோகாவிற்கு அணிவித்துவிடு”,என்றாா்.
ஷான் அந்த நகையை எடுத்து,யோகாவின் அருகில் செல்லும் போது,யோகா தன் விழிகளால் அவளை முறைத்தாள்,இந்த முறைப்பு எல்லாம் ஒரு தூசு என்பது போல்  யோகவை பாா்த்தான்,ஷான் அதை அணிவிக்கும் போது ,பாட்டி சொன்னாா்,”ஷான் இந்த நகை என் பரம்பரை சொத்து நான் இதை உன் அம்மாவிற்கு கொடுக்கனும் என்று நினைத்தேன்,ஆனால் அதற்கான சந்தற்பம் எனக்கு கிடைக்கவில்லை ,இப்பொது இதை என் பரிசாக யோகாவிற்கு அணிவித்துவிடு,”என்றாா்.
 
“யோகா …நான் கேள்விப்பட்டு இருக்கேன்,நீங்கள் தாலியை புனிதமாக மதிப்பீற்கள் என்று,இதை நீ ஷான் கட்டும் தாலியாக நினைத்து கொள்,” என்றாா்.
ஷான் அந்த நகையை எடுத்து யோகாவிற்கு அணிவிக்கும் போது அவனுடைய கைவிரல் அவளுடை முதுகை வருடியது,அவன் விரல் பட்டதும்,தன் வசத்தில் இல்லை அவள்,அவளின் நிலையை அறிந்த ஷான் ,நகையை அணிவித்துவிட்டு அவள் கழுத்தில் முகம் பதித்துவிட்டு ,அவள் உதட்டில் முத்தம் இட்டு விலகினான்,யோகா ஒரு மோன நிலையில் இருந்தாள்,இதை பாா்த்த பாட்டிக்கு,என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை,ஷான் அப்படியே தன் கணவன் மாதிரி குணத்தில் உள்ளான் என்று மனதில் நினைத்தாா்.
ஷான் ஏற்பாடு பண்ணின மாதிரி திருமணம் நடந்தது,யோகாவிற்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை ஏதோ ஒரு விஷேசம் நடக்கிறது என்று நினைத்தாள்,ஷானின் அம்மா,மனதில் வஞ்சகத்தை வைத்து கொண்டு ,”எப்படியோ திருமணம் முடிந்து விட்டது,ஆனால் எப்படி வாழ்கிறாள் என்று நான் பாா்க்க தானே போகிறேன்…,” என்று மனதில் நினைத்து கொண்டு ,வெளியே சிரித்தப்படி,எவ்வளவு அழகு என் மருமகள் பாா்த்தியங்களா…,”என்று தன் அண்ணியிடம் பேசினாள்.
“இவளுக்கு  நம் மகளை ,மருமகளாக ஆக்கிடலாம்  என்று நினைத்தாள்,இப்படி ஒருத்தி எங்கு இருந்து வந்தாள்,”என்று ஷானின் அத்தை மனதில் நினைத்தாள்.
இது ஏதும் அறியாமல்,தன் நினைவிலே இருந்தாள் யோகா.
ஷானின் அத்தை,யோகாவை பாா்த்து,”இப்பவே நம் ஷானை கைக்குள் வைத்துவிட்டாள்,அங்கே பாருங்க அண்ணி,ஷான் அவளை தாங்குவதை..இப்படி போய்டு இருந்தாள்,நீங்கள் அவளுக்கு கீழ்,பாா்த்து இருங்க “என்று எரிகிற தீயில் எண்ணை விட்டு துண்டிவிட்டு சென்றாா்.
யோகாவை அணைத்தவாரே அவளை சுய நினைவுக்கு கொண்டு வாரான்.
யோகா கனவில் இருந்து விடுப்பட்டது போல் திரு திரு என்று முளித்தாள்.
ஷான் தன் நண்பனிடம், முதல் இரவுக்கான ஏற்பாட்டை பண்ணச் சொன்னான்,இதை தற்செயலாக கேட்ட அவன் அம்மா,”இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் “,என்று நினைத்தாா்.
எப்படி தடுக்கிறாா்கள் என்பதை அடுத்த அத்தியாத்தில் பாா்ப்போம்…

Advertisement