Advertisement

கல்லூரிக்கு ,ஷான் தன் நண்பர்களுடன் சென்றான்.
ஷானை எதிர் பாா்த்து கொண்டு இருந்த மகதி,ஷான் வந்த உடன்
“என்ன ஷான்,என்னை பாா்க்காமல் போகிறாய், நான் பேரழகா!! இருக்கேனா…,”என்றாள்.
“குரங்கு போல் இருக்கிறாய்,”என்றான்.
தன் கால்களால் தரையை நாலு தட்டு தட்டினாள்,”நான் உன்னை விடமாட்டேன் ஷான் ,”என்றாள்.
“அதையும் பாா்க்கலாம் ,வா  ராம்  நாம் போகலாம்,நாய் சும்மா கத்தி கொண்டே இருக்கும்,”என்றான்.
இப்படி இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது ,யோகா தன் தோழிகளுடன் கல்லூரிக்கு வந்தாள்.
அவள் வந்ததை பாா்த்து ,ஷான்,தான் பாா்ப்பது யாருக்கும் தெரிய கூடாது என்பதற்காக தன் கண்ணாடியை அணிந்து கொண்டான்,அவளின் அழகை ரசித்து கொண்டு இருந்தான்.அதை கேடுப்பது போல்,மகதி,”ஏய் இங்கே வா,” என்று யோகாவை கூப்பிட்டாள்.
அவள் மனதில், இந்த யோகாவை பாா்த்து பொறாமை வந்தது,”இந்த ஷானிடம் இவளை இழுத்து விட்டு இவள் கையால் ஷானை பழிவாங்க வேண்டும்,”என்று நினைத்தாள்.
யோகாவோ மனதில்,”இவள் எதற்காக என்னை கூப்பிடுகிறாள் இந்த ஷான் முன்னாடி என்னை வச்சி ….செய்ய போகிறாள், கடவுளே என்னை காப்பாற்று,”என்று நினைத்தாள்.
இவளின் அழகில் ஷான் மயங்கி நின்றதை யாரும் பாா்க்கவில்லை.
“ஏய்,உன் பெயர் என்ன என்றாள்,” மகதி.
“யோகா ” என்றாள்.
“இன்னா நிற்கிறானே ,இவனுக்கு ஓரு அடி கொடுத்துட்டு போ,”என்றாள்.
“நான் எதற்கு கொடுக்கனும்,”என்றாள் யோகா.
“நீ இப்போது செய்யவில்லை என்றாள்,நீ இப்போது அவனுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் , எது வசதி,”என்றாள் மகதி.
யோகா,” மனதில்,இது என்ன சோதனை இறைவா,”என்றாள்.
விதி யோகாவை பாா்த்து சிரித்தது.
யோகா ஷானின் அருகில் செல்லும் போது, அவளுடைய கால்கள் ஆட்டம் கண்டனா்.
ஷானோ, யோகா அருகில் வரும் போது வெகு ஆர்வமாக அவளை பாா்த்தான்,அவளின் முகம் வேர்த்து இருந்ததை பாா்த்தான்.மனதில்,”மகதி தெரிந்து செய்கிறாளா…..,இல்ல தெரியாமல் செய்கிறாளா….. “.
யோகா அருகில் வரும் போது,ஷான் தன் கண்ணால் அவளை பாா்க்கவும்,யோகா கீழே விழவும் சரியாக இருந்தது,யாரும் பாா்க்காத அந்த நொடியில் ஷான் யோகாவை அணைத்து முத்தம் இட்டான்,எல்லோரும் அவளை ஷான் தூக்கியதை தான் பாா்த்தனர்,ஆனால் ,யோகா அந்த மயக்க நிலையிலும் ஷான் முத்தம் இட்டதை அறிந்து கொண்டாள்.
ஷான்,”ராமை அழைத்து தண்ணீர் கொண்டு வா ,”என்றான்.
மகதியை பாா்த்து “நீ எல்லாம் ஓரு பெண்,” சீ…என்றான் ஷான்.
ராம் கொண்டு வந்து கொடுத்த தண்ணீரை கொண்டு யோகாவின் மேல் தெளித்தான்,யோகா கீழே விழவும் அவள் தோழிகள் ஒடி வந்தனர் பிடிக்க,ஆனால் யோகா வை பிடித்த ஷான் அவளை விடாமல் வைத்து கொண்டு இருந்ததை பாா்த்து ,அவர்கள் ஷாக்காகி நின்றனர்.
இதை பாா்த்த ராமுக்கும்,பிரகாஷூக்கும்,நம் நண்பன் இவர்களிடம் மாட்டிவிட்டான் என்று நினைத்தனர்.
யோகா கண் விழித்ததும்,ஷானின் பிடியில் இருந்து விடுபட நினைத்தாள், அவளால் முடியவில்லை,அவள், அவன் கண்ணை பாா்க்கவும்,அதில் இருந்த வெட்கத்தை பாா்த்து ஷான் ,அவள் இடுப்பில் இருந்த கையால்,அவள் இடுப்பை வருடி கொண்டு கையை எடுத்தான்.
இதை யாரும் பாா்க்கவில்லை,அவன் சிந்துவை அழைத்து அவளிடம் யோகாவை கொடுத்தான்.
யோகாவை அழைத்து கொண்டு அவர்கள் சென்றனர்.இதை பாா்த்து கொண்டு இருந்த மகதிக்கு இந்த ஷானின் இரக்க குணத்தை பாா்த்து,”எப்படியாவது நாம் ஷானின் மனைவியாக வேண்டும்,”என்று நினைத்தாள் மகதி.அவள் சிந்திக்கவில்லை,நாம் இப்படி கீழே விழுந்தால்,ஷான் நம்மை தூக்க மாட்டான்.. என்று.
வகுப்பரை நுழையும் போது,யோகாவின் நண்பர்கள்  அவளை பாா்த்ததும்,,”யோகா..நீ வா…,நீயிம் உன் தோழிகளும் எங்களுக்கு உதவ வேண்டும்,முடியாது என்று சொல்லிவிடாதே என்று தன் நண்பர்கள்” கூற.
“என்ன உதவி வேண்டும் ,”என்று யோகா கேட்க.
“யோகா நமக்கும் MBA மாணவர்களுக்கும் போட்டி நடைபெற போகிறது,நீயும் உன் தோழியும் தான் இதில் பங்கு பெற போகிறிர்கள்.” என்றான் நந்து.
“ஏன் நாங்கள் மட்டும் பங்கு பெற வேண்டும்,நீங்கள் பங்கு பெறலாம் அல்லவா,”என்று யோகா கேட்க.
அதற்கு நந்து,”இந்த போட்டியில், பங்கு பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளது,அதில் முக்கியமான நிபந்தனை ,மூன்று கலைகள் தெரிந்து இருக்க வேண்டும்,நம் கல்லூரியில் பேசவும்,நடனம் ஆடவும்,பாட்டு பாடவும் நீங்கள் தானே சிறந்தவர்கள்”,அதனால் தான் நான் உங்களை அழைத்தேன்  என்றான்.
இதை கேட்டதும், “எப்போது போட்டி” என்றாள்.
“இன்னும் சிரிது நேரத்தில் போட்டி ஆரம்பித்துவிடும்,”என்றான்.
“என்ன ..என்ன…போட்டிகள் நடைபெற போகிறது.”என்றாள்.
“யோகா,போட்டிகளை பற்றி அங்கே தான் கூறுவாா்கள்,”என்றான்.
சிந்து ,”அப்படி என்ன போட்டி நாம் அங்கே சென்று பாா்ப்போம்,யோகா,போட்டியில் நாம் தான் வெற்றி பெற வேண்டும் ,”என்றாள்.
விழா நடைபெறும் இடத்திற்கு சென்றாா்கள்.
அங்கே,ஷான் தன் நண்பர்களுடன் இருந்தான்,ஷானை பாா்த்ததும்,யோகாவிற்கும் வெட்கமாக வந்தது,குனிந்து கொண்டே ஷானை தாண்டி சென்றாள்.
விழா அமைப்பாளா் வந்தாா்,எல்லோருக்கும் ஒரு செய்தி சொல்லூகிறேன் கவனம்மாக கேளுங்கள் என்றார்.
“இந்த விளையாட்டில்,நான்கு சுற்றுகள் உள்ளது,முதல் சுற்றில் வெற்றி பெற்றவா் ,அடுத்த சுற்றுக்கு செல்லலாம்,இதில் கடைசி சுற்றில் வந்தவர்கள் வெற்றி பெற்றவா் என்று அறிவிக்கப்படும்,”என்றார்.
முதல் விளையாட்டில் ,”நான் ஒரு கேள்வி கேட்பேன் அதற்கு எந்த டீம் சரியான பதில் சொல்லூகிறீர்களோ அவர்களுக்கு மதிப்பென்”, என்றார்.
உங்களின் டீம்க்கு பெயர்களை சொல்லூங்க என்றார்.
ஷான் தன் நண்பர்களுடன் ஒரு டீம்-ல் இருந்தான் அவர்களின் அணியின் பெயர் “வருத்தபடாத வாலிபர் சங்கம்” ,எதிர் அணியாக யோகாவும் அவள் தோழிகளும் இருந்தனா் அவர்களின் அணியின் பெயர் “எதிரியை பந்தாடும் ஜன்சி ராணியினர்”.
வந்து இருந்த மாணவர்களுக்கு இவர்களை பாா்க்க ,டீம்-ல் இருந்த அணியினாின் திறமை வியக்கும் வண்ணம் இருந்தது.
முதல் போட்டியாக, இந்த பாக்ஸில் சில துண்டுகள் இருக்கும்,நீங்கள் அதில் ஒரு துண்டை எடுக்க வேண்டும், ஒரு நபர் முன்னாடி வந்திட வேண்டும்,அதில் இருக்கின்ற வாா்த்தையை பாா்த்துவிட்டு மற்றோருவர் அதை அவா்க்கு சைகை மூலம் விளக்க வேண்டும்.
“வருத்தபடாத வாலிபர் சங்கத்தினா்,” முதல் துண்டை எடுத்தனர் ,பதில் சொல்லுவதற்காக பிரகாஷ் முன்னாடி சென்றான்.
ஷான் தன் நண்பனுக்கு சைகை மூலம் விளக்க முற்படுகிறான்,அவர்களுக்கு வந்து இருக்கிற துண்டு ,”நாய் எலும்பை கவுதல்,” இதை பாா்த்ததும்,ஷான் ராம்மை பாா்த்து ,நீ உன் கையை காண்பி என்றான், அவன் கையை நீட்ட ஷான் கவுதல் போல் சைகை செய்தான்,செய்துவிட்டு நாய்யை போல் மோப்பம் பிடித்தான், இதை பாா்த்தவுடன் பிரகாஷ் ,”சரியாக கண்டு பிடித்து பதிலை கூறினான்.”
நடுவர் 5 மதிப்பெண்னை “வருத்தபடாத வாலிபர் சங்கத்தினா்க்கு வளங்கினாா்.”
அடுத்த துண்டை எதிரியை பந்தாடும் ஜன்சி ராணியினர் எடுத்தனர்,பதில் சொல்லுவதற்காக ஆனந்தி முன்னாடி சென்றாள்.
யோகா தன் தோழிகளுக்கு சைகை மூலம் விளக்க முற்படுகிறாள்,அவர்களுக்கு வந்து இருக்கிற துண்டு ,”
பழகப் பழகப் பாலும் புளிக்கும்,” இதை பாா்த்ததும்,யோகா சிந்துவை பாா்த்து ,நீ உன் கையால்  பால் ஆற்றுவது போல் காண்பி என்றாள், அவள் ஆற்றுவது போல் காண்பித்தாள், யோகா கையை நீட்டி அதை பருகுவது போல் பருகி அவள் முகத்தில் புளிக்கும் தன்மையை காட்டினாள் ,  பின்பு யோகா  ,சிந்துவுடன் கை கோர்த்து கொண்டு பழகுவது போல் காண்பித்தாள்,இதை பாா்த்தவுடன் ஆனந்தி ,”சரியாக கண்டு பிடித்து பதிலை கூறினான்.”
நடுவர் 5 மதிப்பெண்னை எதிரியை பந்தாடும் ஜன்சி ராணியினருக்கு வளங்கினாா்.
இவ்வாறு அவர்கள் இரு டீமும் சரியான விடையை கூறி ,சமநிலை வகுத்தனர்,இதை பாா்த்த நடுவர்க்கு அடுத்த விளையாட்டை நாம் கஷ்டமாக கேட்க வேண்டும் என்று நினைத்தாா்.
அதன் படியே,அடுத்த விளையாட்டு,”நாங்கள் ஒரு பாட்டு போடுவோம்,அதில் இரு டீமில் இருந்து ஒருவர் வர வேண்டும்,ஆண்ணின் குரலுக்கும் ஆண்களும்,பெண்ணின் குரலுக்கும் பெண்களும் ஆட வேண்டும்”,என்றாா்.
யோகாவும்,ஷானும் முன்னாடி வந்தனர்,பாட்டு போடவும் யோகா வந்து ஆடினாள்
“முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
வளையல் சத்தம் ஜல்… ஜல்….
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள் கைகள் வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன…என்று ஆடி முடித்தாள். அவள் ஆடவும்,ஷான் தன்னை மறந்து அவளின் அங்க அசைவை பாா்த்து கொண்டு இருந்தான்.
அடுத்து ஷான் வரும் படலுக்கு ஆடி  னான்
சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா செல்ல செல்ல முத்தங்களில் உன் உயிரை வாங்கவா…
லாலி லாலி நானும் தூளி தூளி…
உன்னை அள்ளி ஏந்தியே ஒரு யுகம் போகவா தலை முதல் கால் வரை பணிவிடை பார்க்கவா லாலி லாலி நானும் தூளி தூளி …என்று யோகாவை பாா்த்து படி  ஆடி முடித்தான்.
அடுத்த பாட்டிற்கு,ஷானும் ,யோகாவும் சேர்ந்து ஆடினார்கள்
யோகா :பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேன்
நகர்ந்தேன் எனை மாற்றி…
ஷான்: இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா….
நெஞ்சோரமா
ஒரு காதல் துளிரும்போது
கண்ணோரமா
சிறுகண்ணீர் துளிகள் ஏனோ
கண்ணாளனே.. என்
கண்ணால் உன்ன
கைதாக்கிட நான் நினைச்சேனே
கண்ணீருல ஒரு மை போலவே
உன்னோடு சேர துடிச்சேனே
ஷான் : உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்க முடியாது அன்பே
கண் இமைகளில் உன்னை நான் தாங்குவேன்
உன் ஒரு நொடி பிரிவினைக்கூட ஏற்க முடியாது கண்ணே
என் கனவிலும் உன் முகம் தேடுவேன்
யோகா: உச்சந்தலை மீது நீ கொடுக்கும் முத்தம்
உயிரின் மீது பட்டுத் தெறிக்கும்
கைகள் பற்றிக்கொண்டு பேசிக்கொள்ளும் நேரம் 
இனிக்கும்…என்று இருவரும் ஆடி முடித்தனர்,ஆடும் போது தங்களை மறந்து ஒருவரை ஒருவா் பாா்த்து ஆடினாா்கள்.
இதை பாா்த்து கொண்டு இருந்த ,மகதிக்கு வயறு பத்தி கொண்டு இருந்தது,இந்த ஷான் ,யோகாவை விரும்புகிறானா என்ன… இல்லைனா இந்த போட்டிக்காக இப்படி ஆடினாா்களா என்ன….
இந்த போட்டியில் யாா் வெற்றி பெறுவாா்கள் என்பதை அடுத்து பாா்போம்….
  

Advertisement