Advertisement

ஷான் தன் நண்பனிடம், “முதல் இரவுக்கான ஏற்பாட்டை பண்ணச் சொன்னான்”,இதை தற்செயலாக கேட்ட அவன் அம்மா,”இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் “,என்று நினைத்தாா்.
ஷானை தற்செயலாக சந்திப்பது போல்,”ஷான் இன்று உனக்கு முதல் இரவு ஏற்பாடு பண்ண வேண்டாமா….,” என்றாா்.
உடனே அவன்,”ஆமாம் அம்மா ,”என்றான்.
“நான் அதற்கு ஏற்பாடு செய்யட்டா…,”என்றாா்.
ஷானுக்கு அப்போது தான் நினைவு வந்தது, இந்த திருமணத்தை நிருத்த வேண்டும் என்று அவர்  செய்த சில பல முயற்சியையும்  ,அதை பிரகாஷ் அறிந்து கொண்டு வந்து தன்னிடம்  கூறியவுடன் தான் அதை தடுத்ததையும் நினைத்து பாா்த்தான்.
சோளியன் குடுமி சும்மா ஆடாதே, உடனே அவன் ,”ஏற்பாட்டை எல்லாம் பிரகாஷ் பாா்த்து கொண்டான்,அதனால் நீங்கள் போய் ரெஸ்ட் எடுங்கள்,”என்றான்.
“இல்லை…இது எல்லாம் பெண்கள் விசயம்,நான் இதை பாா்த்து கொள்கிறேன்,நீ உன் ரூம்க்கு போ,” என்றாா்.
ஷான்,”பிரகாஷை பாா்த்து கண் சிமிட்டினான்,”அவனும் கண்ணால் பிரகாஷ் பதில் கூறினான்,”நீ போ நான் பாா்த்து கொள்கிறேன் என்று”.
ஷான்,அவன் அம்மாவை பாா்த்து ,”சரி அம்மா நான் போகிறேன்,நீங்கள் அவளை அழைத்து வாருங்கள்,”என்றான்.
இதை கேட்டதும் ஷானின் அம்மாவிற்கு அளவு கடந்த மகிழ்ச்சி,தன் திட்டத்தை செயல் படுத்த விரும்பினாா்.
முதல் திட்டம்மாக,முல்லை பூவை கொண்டுவர சொன்னாா்.ஏன் என்றால்,ஷானுக்கு முல்லை பூவை பிடிக்காது,அதனால் அவனுக்கு தும்மல்…தும்மலாக வரும்,இதனால்,யோகாவை அவன் அருகில் வரவிடமாட்டான் என்று நினைத்தாா்.அலங்காரம் செய்யும் பெண்ணிடம் ,இவளுக்கு அலங்காரம் முடிந்தவுடன் இந்த பர்தாவை அணிவித்து விடுங்கள்,என்றாா்.இது எதையும் அறியாமல்,தன் குடும்ப நினைவாகவே இருந்தாள் யோகா.
இந்த பூ வேலை …செயலனா…,இந்த பால் வேலை செய்யும் என்று நினைத்து பாலில் தூக்க மருந்தை கலந்தாா், மருந்தை கலக்கும் போது,அவர் மனம் அவரை சாடியது,பெத்த பிள்ளைக்கு கொடுக்கும் செயலா இது என்று,ஆனால் எதையும் ஆராயாமல் பாலில் கலந்தாா்,ஆனால் அதை இரண்டு விழிகள் பாா்த்ததை அவர் பாா்க்கவில்லை,இவர் அந்த பணிப்பெண்ணிடம் கொடுத்து,இதை நீ யோகாவிடம் கொடு என்றாா்.
இவர் சற்று நகா்ந்ததும்,அந்த இரண்டு விழிகள் அதை உடனடியாக ஷானிடம் நடந்த விசயத்தை சொன்னது.
இதை கேட்டதும்,”நான் இதை பாா்த்து கொள்கிறேன்,நீ உடனே அந்த அலங்காரம் செய்யும் பெண்ணை வர சொல்,”என்றான்.
பிரகாஷ்,”அந்த அலங்காரம் செய்யும் பெண்ணை அழைத்து வந்தான்”.
அந்த பெண்ணை பாா்த்ததும்,ஷான் ” எவ்வாறு யோகாவை அலங்காரம் பண்ண வேண்டும் என்று கூறி ,” அனுப்பினான்.
ஷான்,”சொன்னது போல் அலங்காரம் பண்ணினாா் ,அவர் அலங்காரம் முடித்து பா்தாவை போடும் போது,ஷானின் அம்மா  வந்து,எல்லாம் முடிந்ததா என்று கேட்டாா், ஷான் சொல்ல சொன்னது போல்,”நீங்கள் செய்ய சொன்னது போல நான் ,செய்துவிட்டேன்,”என்றாா்.
பா்தாவை தனக்கு போடும் போது தான்,தன் சுய நினைவு அடைந்தாள்,இதை எதற்கு எனக்கு போடுகின்றீர் என்றாா்.
” எங்கள் மரபு படி ,இந்த பா்தாவை அணிய வேண்டும், இது தெரியாமலா…ஷானை விரும்பி,திருமணம் செய்தாய்,”என்றாா் ஷானின் அம்மா.
“என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தாள்”,இதை தனக்கு சாதகம்மாய் வைத்து கொண்டு ,”இந்தா…இந்த பால்-ஐ கொண்டு ஷானிடம் கொடு,ஆம்…மா….உன் அப்பா என்ன செய்கிறாா்,இப்படி பிள்ளை வளர்த்து,நல்ல செல்வ செழிப்பான ஆண்ணை தேடி போ….. என்று அனுப்பிவிட்டாா்கள் போல்,அதனால் தானே நீ என் மகனை வளைத்து கொண்டு ,இந்த திருமணத்தை உடனடியாக நடத்தினாய்”,என்றாா் ஷானின் அம்மா.
இதை கேட்டதும்,என்ன சொல்வது என்றே தெரியமல்,தன் மேல் விழுந்த பழியை நாம் எவ்வாறு நீக்குவோம்,ஒன்றும் தெரியமல் தன் கண்களில் இருந்து வரும் கண்ணீரை துடைக்காமல் அப்படி இருந்தாள்.
இது ஏதும் அறியாமல்,ஷான் தன் விழிஷாவுக்காக காத்து இருந்தான்.
பல ஆயிரம் கற்பனையை கொண்டும் நுழையும் இந்த முதல் இரவு அறைக்கு,ஒரு மரம் மாதிரி ஏதும் தெரியாதவள் போல் அவனின் அறைக்குள் நுழைந்தாள்.
அவள் நுழைந்தவுடன்,என்ன இவள்…பிரமை பிடித்தவள் போல் இருக்கிறாள் என்று நினைத்தான்.
அவளின் அழகை பருகியவாரே,அவள் அருகில் வந்து அவளின் முக துணியை விலக்கினான்,உடனே அவளுக்கு ,அவள் நிலைமை உணர்த்தியது,”சீ….கையை எடு,”என்றாள்.
இதை கேட்டதும்,ஷானுக்கு கண் மண் தெரியாமல் கோபம் வந்தது,”எங்கே வந்து என்ன வாா்த்தை கூறுகிறாய்….”என்றான்.
“நான் அப்படி தான் சொல்லுவேன் …என்ன செய்வாய்….என்ன என்னை அடிப்பியாய்…..அடி ….அடி….,”என்று அவன் முன் வந்து நின்றாள்.
தன் கோபத்தை கட்டு படுத்தி பாா்த்தான்,….அவனால் அது முடியாமல்,”என்ன…நான் என்ன செய்வேன் தெரியுமா,இதோ பாா் என்று கூறி அவளின் பா்தாவை கலற்றினான்.அவள் அவனை கண்டு மிரள..அவன் தன் கோப பாா்வையால் அவளிடம் நெருங்கினான்,அவளுக்கு பயத்தில் பற்கள் ஆடின…அவன் அவளின் பற்களை பாா்த்ததும் தன் கோபம் குறைந்து மோகம் வந்து,தன் விரலால் அவளின் உதட்டை வருடினான்,உடனே யோகாவின் முகம் பயத்தை நீக்கிச் செம்மையாக மாறியது. அவன் விரல் அந்த கன்னச் சிவப்பை பாா்த்து அங்கே நகர்ந்தது, யோகாவிற்கு தன் உணர்வுகளை அடக்க முடியவில்லை,அவன் கையை தட்டி விடச் சென்ற கை அவளை அறியாமல்,அவன் தோளை பற்றி இழுத்தாள்,ஷான்  விழிஷா….. என்று கூறி கொண்டே தன் சரிபாதியை அறிய முற்பட்டான்,அங்கே ஒரு அழகான இல்லறம் நடந்தது.
காலையில் முதலில் கண் விழித்தது ஷான்,தான் கனவில் கண்ட விழிஷாவுடன் வாழ்ந்த திருப்தியில் அவளை அணைத்து கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தான்.அவன் தூங்கவும் ,யோகா கண் விழித்தாள்,என்ன நடந்தது என்று நினைக்கும் போது அவளுடைய முகம் செந்தாமரை மலரை போல் மலர்ந்தது,அவள் எழுந்து செல்லலாம் என்று நினைக்கும் போது,அவன் அணைப்பில் இருப்பது தெரிந்தது,காதல் கொண்ட மனம் அவன் அணைப்பு வேண்டும் என்று சொல்ல,மூளையோ இது சரிவராது எழும்பு என்று எச்சரித்தது,உடனே அவள் தன் சுயநினைவுக்கு வந்தாள்.
அவனுடைய கையை எடுத்து தலையணையில் வைத்துவிட்டு எழுந்து குளியறை சென்றாள்.
ஷானுக்கு அவள் விலகினவுடன் ,அந்த கதகதப்பு குறைந்தது,கண் திறந்து பாா்க்கும் போது அவள் இல்லை ,ஒரு நிமிடம் அவள் எங்கே சென்றாள் என்று நினைத்தான்,அவன் நினைத்து கொண்டு இருக்க,குளியறையில் இருந்து யோகா வருவதை பாா்த்தான்,அவள் கூந்தலில் இருந்து தண்ணீர் விழ, அது அவனை வா… என்று அழைப்பது போல் இருந்தது,யோகா வீட்டு சிந்தனையில்,என்ன துணி அணிந்து உள்ளோம் என்று ஏதும் உரையாமல் இருந்தாள்.
ஷானுக்கு அவள் மீண்டும் தனக்கு வேண்டும்,எப்படியாவது வேண்டும் என்று நினைத்தான்.
விழிஷா ….என்று அழைத்து பாா்த்தான்,அவள் கனவில் இருந்து வரவில்லை என்று உணர்ந்து கொண்டான்,உடனே அவன் பூனை நடைநடந்து விழிஷா வை தன் கைக்களில் தூக்கி மெத்தையில் கிடத்தி மீண்டும் ஒரு காதல் யுத்தம் நடத்தினான்.
சூரியன் தன் ஒளியை எல்லா இடத்திலும் பரவ செய்கிறான்.அந்த ஒளியால் தன் கண்ணை திறக்க முடியாமல் திறந்தாள்,ஷானின் கை அணைப்பில் இருப்பதை உணர்ந்தாள்,அவனிடம் இருந்து மெதுவாக தன் கையை எடுத்தாள்,அவன் அசந்து தூங்குரதை பாா்த்து குளிக்க சென்றாள்.
ஷானின் சில்மிசத்தோடும்,யோகாவின் கோபத்தோடும் நாட்கள் கடந்தனா்,திருமணம் ஆகி மூன்று மாசம் கடந்த நிலையில்,அன்று யோகாவிற்கு ஏதோ நடக்க போகுது என்று மனம் சொல்லி கொண்டே இருந்தது,விதி இன்னைக்கு என் ஆட்டத்தை பாா் என்று கூறி நகைத்தது.
காலை உணவை சாப்பிடலாம் என்று கீழே போகும் போது,தலை சுற்றுவது போல் இருந்தது,அவள் மெதுவாக வரும் போது,ஷான் வேலைக்கு சென்று இருந்தான்.
ஷானின் அம்மா, இது தான் சரியான தருணம் நாம் இவளை விரட்டி விட்டு தன் அண்ணன் மகளை திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்தாா்.ஆனால் விதியோ தன் ஆட்டத்தை இவர்கள் மூலம் ஆட தொடங்கியது.
யோகா சாப்பிட அமரவும்,ஷானின் அம்மா “என்ன சாப்பிட வரும் நேரமா…,நீ என்ன கொண்டு வந்தாய் இப்படி சாப்பிடுகிறாய்,போய் சமையலை கவனி….,இனிமேல் உன் இடம் அது தான்,நீ இங்கை எல்லாம் அமர்ந்து சாப்பிட கூடாது…., நீ இங்கு இருந்து கிளம்பினால் எல்லோருக்கும் நல்லது,ஏன் என் மகனை உனக்குள் அடக்கி வைத்துள்ளாய்….அவன் உன்னை நான் நெருங்காமல் இது வரை பாதுகாத்தான், இனிமேல் அவனால் முடியாது,ஏன் என்று தெரியுமா,என் அண்ணன் மகளை திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்துள்ளேன்,அவள் வந்து இருக்கிறாள் அதனால் அவன் அவளை அழைத்து கொண்டு கம்பெனி சென்று உள்ளான்,உன்னிடம் இருந்த மோகம் தீர்ந்துவிட்டத்து……நீ இப்போது போனாலும் ……யாரும் கேட்க மாட்டாா்கள், அல்லது நீ இந்த சமையல் கட்டில் இருந்து எல்லா வேலையும் செய்,நீ ஷானை கவனிக்க வேண்டாம்,அதற்கு ஆள் வந்து விட்டது,…..,இனிமேல் உன் இஷ்டம் இருந்தால் இரு இல்லை என்றாள் இங்கே இருந்து கிளம்பு,”என்றாா்.
இதை கேட்டதும் யோகாவின் மனம் சுக்கு …சுக்காக …நொருங்கியது. ஒரு மனம் உனக்கு இந்த சிறையில் இருந்து விடுதலை என்று கூறியது,காதல் கொண்ட மனம் அழுதது,ஷானை பிரிய போகிறோமே அவனிடம் கடைசிவரை நாம் நம் காதலை சொல்லவில்லையே…இனியும் சொல்வதற்கு விதி நம்மை விடவில்லை,நாம் ஷானின் அம்மா சொன்னப்படி ,இந்த வீட்டைவிட்டு கிளம்புவோம்,ஷான் இனிமேல் ஆவது சந்தோசம்மாக இருக்கட்டும்,ஷான் வருகிறதுக்குள் கிளம்புவோம்,இல்லை என்றால் நம் மனசு மாறிவிடும்.,”என்று நினைத்து கொண்டே மேலே சென்றாள்.
அவர்கள் அறையை நெருங்கும் போது,இனி நாம் இங்கே வரமாட்டோம் என்று கதறி அழுதாள்,ஷானின் புகைப்படத்தை எடுத்து தன் மாா்போடு வைத்து அழுதாள்,அழுது கொண்டே இருந்தாள்,நாம் இப்படி அழுது கொண்டே இருந்தால் கிளம்ப முடியாது,ஷான் வருவதுக்குள் நாம் கிளம்புவோம் என்று நினைத்து, ஷான் திருமணத்தில் அணிவித்த நகை மட்டும் அணிந்து கொண்டு,அவனின் புகைப்படத்தை மட்டும் எடுத்து கொண்டு கீழே வந்தாள்.
ஷானின் அம்மா,இவள் மேலே சென்றதும்,”எங்கே தான் பேசியதை ஷானிடம் கூறிவிடுவாளோ ,”என்று பயந்து போய் இருந்தாா்.
யோகா கீழே வரும் போது,இவளை பாா்த்தும் பாா்க்காத மாதிரி தன் கணவரிடம் தன் அண்ணன் மகளின் பெருமை பற்றி பேசி கொண்டு இருந்தாா்.
அவரை பாா்த்து ஒரு நிமிடம்  நின்றாள்,பின் ஷானின் அப்பாவை பாா்த்து ,”நான் போகிறேன்” என்றாள்.அவர் தன் மனைவியை பாா்த்தாா் ,அவர் கண் சிமிட்ட ,இவர் சரி” நீ போ ,” என்றாா்.
அங்கே ஷானோ,யோகாவின் நினைவில் இருந்தான் ,இன்று நாம் யோகா முளிப்பதற்குள் வந்துவிட்டோம்,அவள் சாப்பிட்டாளோ… இல்லையோ..
 என்று நினைத்தான்.
அதற்குள் வேலை வந்து விட்டது,அவன் நேரம் எல்லாம் அதிலே சென்றது,மதியம் உணவு நேரம் வரவும் நாம் இந்த இடைவெளியில் யோகாவை பாா்த்துவிட்டு வந்துவிடுவோம் என்று நினைத்து கிளம்பினான்.
அவன் வீட்டிற்கு வரும் போது யோகா அவனை விட்டு வெகு தூறம் சென்று இருப்பாள் என்பதை அவன் அறியவில்லை.
அவர்கள் சந்திப்பாா்களா என்பதை பற்றி நாம் பாா்ப்போம்…..

Advertisement