Advertisement

“ஐயாவுக்கு பெரிய ஷகீலான்னு நினைப்பு, எப்பவும் அரைகுறையா டிரஸ் போட்டுட்டு கூச்சமில்லாம திரிய வேண்டியது…” என நினைத்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருக்க அருகே வந்தவன் புன்னகைத்தான்.

“ஹேய் செல்லக்கிளி, எந்தினு என்னை இங்கனே உறுத்து நோக்கனது, இந்த டிரஸ்ல நான் சுந்தரன் ஆயிட்டுண்டோ…” அவன் கேட்க முறைத்து எதுவும் சொல்லாமல் குளியலறை நோக்கி நகர்ந்தவள் சூடான நீரில் தேகத்தின் அலுப்பு தீரக் குளித்து முடித்ததும் டவலைத் தேட அப்போதுதான் உடையும், டவலும் எடுக்காமலே வந்தது நினைவில் வர எரிச்சலில் தலையில் அடித்துக் கொண்டாள்.

கதவை மெல்லத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டிப் பார்க்க ஆத்ரேயன் கண்ணாடி முன் நின்று பர்ப்யூம் ஸ்ப்ரே பண்ணிக் கொண்டிருந்தான்.

“ப்ச்… படுக்கப் போற நேரத்துல இது ரொம்ப முக்கியம்…” என நினைத்தவளுக்கு வேர்வையில் பர்ப்யூம் கலந்து மணக்கும் அவனது பிரத்யேகமான வாசனை நினைவில் வர தேகத்தில் ஒரு சிலிர்ப்பை உணர்ந்தாள். மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆத்ரேயனை அழைத்தாள்.

“ஆதி…” எனக் குரல் கொடுக்க, “எந்தா முத்தே…” என்றான்.

“டவலும், டிரஸ்சும், கட்டில் மேலயே வச்சுட்டேன். கொஞ்சம் எடுத்துக் கொடுங்க…” என குரல் கொடுக்க,

“ஓ… குறச்சு மதியோ…” என்றவன் குறும்புடன் டவலோடு அவள் எடுத்து வைத்திருந்த டாப், அண்ட் பான்ட் இரவு உடையின் டாப்பையும், உள்ளாடைகளையும் எடுத்துக் கொண்டு கதவைத் தட்ட வாங்கிக் கொண்டாள் நியதி. உடலைத் துடைத்து உள்ளாடைகளை அணிந்து உடையை எடுக்க அதில் டாப் மட்டுமே இருப்பதைக் கண்டவள் திகைத்து பின் கோபப்பட்டாள்.

“லூஸு ஆதி, வேணும்னே டாப் மட்டும் எடுத்திட்டு பான்ட் விட்டுட்டு வந்து கொடுத்திருக்கான்…” அவனைத் திட்டிக் கொண்டே டாப்பை அணிந்து இடுப்பில் டவலைக் கட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

கட்டிலில் பாதி உடலும், காலை கட்டிலுக்கு வெளியே தொங்க விட்டபடி படுத்து மொபைல் நோண்டிக் கொண்டிருந்தவன் அவளை நோக்க முறைத்தாள்.

“டிரஸ் எடுத்துத் தரச் சொன்னா பான்ட் இல்லாமத் தந்திருக்கிங்க…” எனக்  கோபமாய் கேட்க, “நீதன்னே முத்தே குறச்சு டிரஸ் எடுத்துத் தரான் பரஞ்சது…” என அவன் மீசையைப் பல்லில் கடித்தபடி குறும்புடன் சிரிக்க அதைக் கண்டவளின் மனம் அவன் மீசையில் தடுமாறியது.

பான்ட்டுடன் நகர்ந்தவள் அணிந்து கொண்டு, உயரக் கட்டியிருந்த தலை முடியை அவிழ்த்து விட்டபடி கண்ணாடி அருகே சென்றாள்.

எழுந்து அவள் அருகே வந்தவன் அவளுக்குப் பின்னில் நெருங்கி நிற்க கண்ணாடியில் அவன் நெருக்கம் கண்டு தவிப்புடன் அவள் குனிந்து கொள்ள, அவனோ மேஜை மீதிருந்த சீப்பை எக்கி எடுத்துக் கொண்டு, “நான் நினக்கு முடி மாடித் தரட்டே…” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் அவளது நீண்ட கூந்தலை மென்மையான கோ(கா)தலுடன் சீவத் தொடங்க அவனது நெருக்கத்திலும், மென்மையான செய்கைகளிலும் அவளது மனமும், உடலும் தடுமாற தவித்தது என்னவோ அவளது பெண்மை தான். அது புரியாமல் அவள் கூந்தலில் வாசத்தை நுகர்ந்தபடி சீவி தளர்வாய் பின்னலிட்டான் ஆத்ரேயன்.

“நினக்கு நல்ல முடி, அழகாருக்கு…” சொன்னபடி அவளைத் திருப்பியவன் அவள் முகத்தை நோக்க அவனைக் காண முடியாமல் சிவந்திருந்த முகத்தைக் குனிந்து கொண்டாள்.

“இந்த முகம் ஏன் விவஸ்தை இல்லாமல் சிவந்து மனதின் எண்ணத்தை அவனுக்குக் காட்டிக் கொடுக்கிறதோ…” என தவிப்புடன் யோசித்து நின்றவளின் நெற்றியில் இதமாய் அவன் முத்தமிட அவளது உடல் சிலிர்க்க, கண்கள் இயல்பாய் மூடிக் கொண்டு அந்த தருணத்தை ரசித்தது.

அதற்குள் அங்கிருந்த இன்டர்காம் சிணுங்க இருவரும் சட்டென்று கலைந்தனர்.

சட்டென்று நகரப் போனவளின் இடையைப் பற்றி தன்னருகே இழுத்துக் கொண்டவன் புன்னகையுடன் இன்டர்காம் ரிசீவரை எடுக்க, “எடா, எத்தர நேரம் வெயிட் செய்யனது… ரெண்டு பேருக்கும் மேஜையில் பட்சணம் வச்சிட்டுண்டு, வந்து கழிக்கு, நான் கிடக்கான் போவுந்து…” என்றார் ஷோபனா.

“சரி அம்மே, நிங்கள் கிடந்தோளு, ஞங்கள்க்கு வேண்டியது எடுத்து கழிச்சோளாம்…” என்றவன் ரிசீவரை வைத்துவிட்டு, நியதியின் முகத்தை நோக்கி, “கழிச்சோட்டே முத்தே…” எனக் குறும்புடன் அவளிடம் அனுமதி கேட்க, அதற்குமேல் மனதில் பொங்கிய மோக உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் நியதி.

அவளை நெஞ்சோடு நெஞ்சம் சேரும்படி வேகமாய் இறுக்கிக் கொண்டவன் அவள் பின்கழுத்தில் முத்தமிட்டு அவள் தேகம் சிலிர்ப்பதை ரசித்து இதழ் நோக்கிக் குனிய மொத்தமாய் அவனிடம் சரணடைந்திருந்தாள் நியதி.

அவளைப் பூப்போலத் தூக்கிக் கட்டிலில் போட்ட ஆத்ரேயன், மென்மையாய் அவள் மீது படர்ந்தான். கொடுப்பதும், எடுப்பதுமாய் அத்தனை நாள் மனதில் கொண்ட காதலில் துளிர்த்த காமத்தின் தேடல்களைக் குறைவில்லாமல் உணர்ந்து, களித்து, களைத்துப் போனவர்களுக்கு அந்த இரவு தூங்கா இரவாக மாறியது.

மூன்று மணிக்கு மெல்ல உணர்ந்த நியதி கணவனின் அணைப்புக்குள் தான் கிடந்த கோலத்தைக் கண்டு வெட்கினாள். இரவு நடந்த களியாட்டம் மனதுக்குள் நினைவு வர தேகத்தில் மீண்டும் மோகத்தின் சுகமான சிலிர்ப்பு. அவனது முகத்தை நாணத்துடன் நோக்க, அவனோ நிறைவான உறக்கத்தில் இதழில் உறைந்த புன்னகையுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.

தன்னை சுற்றி வளைத்திருந்த அவனது கையை மென்மையாய் விலக்கிவிட்டு எழுந்தவள் மனமும், உடலும் ஆதியை மட்டுமே நினைத்திருக்க அவனது ஆண்மைக்குள் இளைப்பாறி, களைப்பாறிய தனது பெண்மையை எண்ணி உடலும், உள்ளமும் சிலிர்த்தது.

எழுந்து டிரஸ்ஸிங் டேபிள் முன் சென்று நின்றவள் அங்கிருந்த ஸ்பாட் லைட்டை ஒளிர விட ஓவியம் போலத் தோன்றினாள். இதழிலும், பின் கழுத்திலும், கன்னத்திலும் அவனது வேகத்தின் வெளிப்பாடுகள் சிவப்பாய் தெரிந்தது.

“கள்ளன்…! செய்யுறதெல்லாம் செய்திட்டு குழந்தை போலத் தூங்கறதைப் பாரு…” இதழ்கள் சந்தோஷமாய் சலித்துக் கொண்டபடி அந்த அடையாளங்களைத் தடவின. தேகமெங்கும் சுகமான வேதனையை உணர்ந்தவளுக்கு குளித்தால் தேவலாமென்று தோன்ற மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

வெதுவெதுப்பான வெந்நீர் சுகமாய் உடல் களைப்பைப் போக்க குளித்து, உள்பாவாடை பிளவுஸ் அணிந்து கொண்டு தலையில் ஈர டவலை சுற்றிக் கொண்டு வெளியே வந்தாள். கட்டிலில் ஆத்ரேயன் எழுந்து அமர்ந்திருந்தான். அவனைக் கண்டதும் திகைத்து சேலையை எடுத்துக் கொள்ள எதுவும் பேசாமல் எழுந்து அவளருகே வந்தவன், கழுத்தில் மூக்கை உரசி அவள் வாசனையை நுகர்ந்தான்.

“ம்ம்… முத்தே, நினக்கு தாமரப் பூவின் மணம்…” அவன் ஹஸ்கி வாய்ஸில் அவள் கழுத்து வளைவில் கிசுகிசுக்க உரசிய மூக்கின் நுனி அவளை சிலிர்க்கச் செய்ய தவிப்புடன் அவள் நிற்க அவனது கைகளோ அவளது மென்மைகளை மேலும் அறியும் எண்ணத்துடன் வன்மையுடன் அவள் உடலில் வலம் செய்யத் தொடங்க தடுமாறினாள்.

“ப்ச்… ஆதி விடுங்க, நான் இப்பதான் குளிச்சேன்…” சிணுங்கினாலும் அவன் கைகளுக்குள்ளேயே நின்றவளுக்கும் விலகும் எண்ணமில்லை என்று புரிய அவன் மேலும் அவளைப் பின்னிலிருந்து அணைத்து இறுக்கினான்.

“அதுக்கென்ன, மறுபடி குளிக்கலாம்… இங்க தண்ணிப் பிரச்சனையே கிடையாது…” கிசுகிசுத்தவனின் கைகள் வேகமாய் அவளில் முன்னேற, அவனது காதல் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவளாய் அவளும் அவனில் தணிந்து போனாள். தேடல் முடிந்து களைப்புடன் கிடந்தவனின் நெஞ்சத்தில் தலை வைத்து அவள் படுத்திருக்க, இதமாய் அவள் தலையைக் கோதியபடி சுகமாய் கண் மூடிப் படுத்திருந்தான் ஆத்ரேயன்.

“முத்தே…!” குரலில் தேன் தடவி அவன் அழைக்க, “ம்ம்…” என்றவளின் பதில் குரலும் குழைந்திருந்தது.

“தேங்க்ஸ்டி சக்கரே…!” எனவும் சட்டென்று எழுந்தாள் நியதி.

“லூஸு ஆதி…!” அவள் கோபமாய் திட்ட அவன் விழித்தான்.

“லூஸா… எந்தாடி பெட்டெந்து இங்கன பரஞ்சது…?”

“பின்ன, பொண்டாட்டிகிட்ட எந்த புருஷனாச்சும் தேங்க்ஸ் சொல்லுவானா…?” அவள் கேட்க, அப்போதுதான் காரில் அவளை நெற்றியில் முத்தமிட்டு சாரி சொன்னபோது அவள் கோபப்பட்டது நினைவில் வர, “ஆஹா, அதுக்கு இதான் அர்த்தமா…” என அவன் சந்தோஷத்தில் மிதந்தான்.

“சரியான மைதா மாவு… தாடியும், மீசையும் வளர்ந்தா மட்டும் போதுமா, கொஞ்சம் மூளையும் வளர்த்துங்க…”

“நான் தினமும் தலைக்கு நிறையத் தண்ணி ஊத்துறனே, அப்பவும் வளரலியே என்ன பண்ணுறது…?” அவன் குறும்புடன் கேட்க அவள் சிரித்து விட்டாள்.

அவளை மீண்டும் இழுத்து நெஞ்சில் போட்டுக் கொண்டு, “எந்தாடி பரஞ்சது…? ஞான் மைதா மாவா…? அப்போ நீ எந்தா கோதம்பு மாவோ…?” என்றவனின் கைகள் அவள் உடலில் மீண்டும் ஊர்ந்து கொண்டிருக்க கூச்சத்தில் கையைப் பிடித்து வைத்தாள் நியதி.

“ச்சோ, குறச்சு சும்மாதிரி மனுஷ்ஷா…”

“ஹா, கள்ளத்தி கொள்ளால்லோ, மலையாளம் படிச்சோ…”

“என் அம்மாயி அம்மாவோட ட்ரெயினிங் எப்படி, சரி டைமாச்சு… இப்ப மறுபடி குளிக்கணும், என்ன விடுங்க..”

“நான் வேணமெங்கில் நின்னே குளிப்பிச்சு தரட்டே…” அவன் உல்லாசமாய் அவளை நோக்கிக் கண்ணடிக்க அவள் முகம் மீண்டும் சிவந்து மிளிர்ந்தது.

“ஹூக்கும், குளிச்ச போலதான்… நேத்து ராத்திரியும் சாப்பிடல, சீக்கிரம் கீழ போகலேனா அத்தை என்ன நினைப்பாங்க…?” அவள் சிணுங்கிக் கொண்டே எழுந்தாள்.

“என் அம்ம ஒண்ணும் நினைக்காது, மருமக மகனை நல்லா கவனிக்குது நினைச்சு சந்தோஷப்படுமாக்கும்…”

“அது சரி…” எனப் புன்னகைத்தபடி அவள் குளியலறைக்குள் நுழைய ஆதியும் எழுந்து கொண்டான்.

காலை நேரமே எழுந்து அடுக்களைக்கு வந்த ஷோபனா உணவு மேஜையில் இரவு எடுத்து வைத்த உணவுகள் அப்படியே இருப்பதைக் கண்டு திகைத்தார். “இக்குட்டிகள் ராத்திரி பட்சணம் கழிக்கான் வந்தில்லே…” என்றவருக்கு ஏதோ தோன்ற புன்னகையுடன் நகர்ந்தார்.

கன்னத்தின் சிவப்பை

எடுத்துக் காட்டிடும்

கண்ணாடி போல்

எண்ணத்தின் சிவப்பைக்

படம் போட்டுக் காட்டிடும்

முகத்தின் கண்ணாடி…

Advertisement