Advertisement

அப்போது அதில் இருந்து மோகனும், காயத்ரியும் இறங்கினார்கள். அவர்களை பார்த்த உடனே முக ஒற்றுமையை வைத்தே கண்டு பிடித்திருந்தாள் காவ்யா.
“இந்த ஷியாமுக்கு பிள்ளைங்க பொறந்தா கூட அவன் வாரிசுன்னு கண்டு பிடிச்சிரலாம் போல?”, என்று உள்ளுக்குள் எண்ணி கொண்டு அவர்களை பார்த்து சினேகமாக சிரித்தாள்.
மோகனும் அவளை பார்த்து சிரித்தார். ஆனால் காயத்ரி பேருக்கு கூட சிரிக்க வில்லை.
அதை குறித்து கொண்டாள் காவ்யா. “நீங்க தான் ஊர்ல இருந்து வந்துருக்குறதா மா? ஷியாம் சொன்னான்”, என்றார் மோகன்.
“ஆமா அங்கிள்”, என்று சிரித்தாள் காவ்யா.
“நான் யாருன்னு தெரியுதாம்மா?”
“தெரியுது அங்கிள். உள்ள வாங்க”
“ஷியாம் இருக்கானா மா?”, என்று கேட்டு கொண்டே அவள் பின்னே சென்றார்.
“இப்ப தான் ரூமுக்கு போனாங்க. நீங்க போய் பாருங்க. நான் டீ கொண்டு வரேன்”
“அதெல்லாம் வேண்டாம் மா. எனக்கு டீ குடிக்கிற பழக்கம் இல்லை. அப்புறம் அவனை இங்க கூட்டிட்டு வரியா?”
“என்னது? நானா?”
“ஆமா, நாங்க போனா திட்டுவான்”, என்று சொல்லி விட்டு அங்கு அமர்ந்து விட்டார். காயத்ரியும் முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்து  விட்டாள்.
“இது என்ன கால கொடுமையா இருக்கு. சொந்தக்காரங்க இவங்க. இவங்க அவன் ரூம்க்கு போக மாட்டாங்களாம். மூணாவது மனுசி, நான் போகணுமாம். என்னையும் திட்டுவானோ?’, என்று தடுமாற்றத்துடன் மேலே ஏறி சென்றாள் காவ்யா.
அப்போது தான் குளித்து முடித்து துண்டுடன் நின்று கொண்டிருந்தான்  ஷியாம். மேலே பவுடரை தீட்டி கொண்டு ஒரு உள் பனியனை எடுத்தவன் தலை வழியாக அதை போட்டான். 
அப்போது தான் அவனுடைய அறைக்கதவின் குமிழ் மீது கை வைத்து திறந்தாள் காவ்யா. அது டொக் என்ற சத்தத்துடன் திறக்கவும் ஷியாமின் இடுப்பில் இருந்த துண்டு அவிழவும் சரியாக இருந்தது.
கண் முன்னே தெரிந்த காட்சியில் திக் பிரம்மை பிடித்தது போல நின்று விட்டாள் காவ்யா. திரும்பி பார்த்த ஷியாமோ அதிர்ச்சியாகி துண்டை தேடி பிடித்து இடுப்பில் கட்டினான்.
அதன் பின்னர் தான் அவளை பார்த்தவன் மானம் கப்பல் ஏறிய கடுப்பில் “அறிவு இருக்கா? கதவை தட்டிட்டு வர மாட்டியா?”, என்று கோபத்துடன் கேட்டான்.
அதில் சுயநினைவுக்கு வந்தவள், “ச்சி உவ்வே. கதவை பூட்டாம நீங்க இருந்துட்டு என்னை குறை சொல்றீங்களா?”, என்று திருப்பி கேட்டாள்.
“என்னோட ரூம்க்கு நீ வருவேன்னு நான் கனவா கண்டேன்?”, என்று முணுமுணுத்தான் ஷியாம்.
“இன்னைக்கு நேரமே சரி இல்லை. என் கண்ணுல ஆசிட் ஊத்தி தான் கழுவணும். சரி சரி உங்க அப்பாவும், தங்கச்சியும் வந்துருக்காங்க. சீக்கிரம் வாங்க”, என்று சொல்லி விட்டு திரும்பியவள் மேலும் அதிர்ந்தாள். அவள் திரும்பிய போது கண்ணில் பட்ட  சுவர் முழுவதும் அவளுடைய புகை படங்கள் வெவ்வேறு சைசில் ஓட்ட பட்டிருந்தது.
அதை பார்த்ததும் விதிர்த்து போனவள் மெதுவாக அந்த போட்டோ அருகில் நெருங்கினாள்.
அவள் போட்டோ பார்ப்பாள் என்று அவனே எதிர்பார்க்க வில்லை. அவனும் என்ன செய்ய என்று தெரியாமல் திகைத்து போனான். வெறித்த பார்வையோடு இருந்த அவளை நெருங்கியவன் அவளை சமாதான படுத்த வார்த்தைகளை தேடினான்.
ஒவ்வொன்றையும் பார்த்த காவ்யாவோ ஒரு முறைப்புடன் திரும்பி “என் போட்டோவை நீ எதுக்கு வச்சிருக்க? அதுவும் இத்தனை?”, என்று கேட்டு கொண்டே அதை கிழிக்க போனாள்.
அவள் செயலை யூகித்தவன் “என்னுடைய மனசில் இருக்குற பொண்ணை நான் ஒட்டி வச்சிருக்கேன். உனக்கென்ன வந்தது?”, என்று கேட்டு காதலையே அவளிடம் சொல்லி இருந்தான்.
அதில் திகைத்தவள் “யாரை கேட்டு என்னை லவ் பண்ண? என்னோட போட்டோ எல்லாம் இங்க இருக்க கூடாது”, என்று சொல்லி மறுபடியும் கிழிக்க சென்றாள்.
அவள் கையை பிடித்து இழுத்தவன் “சும்மா இருன்னு சொன்னா கேக்க மாட்டியா? அந்த போட்டோ இங்க தான் இருக்கும். நீ தொட்டா உன்னை கொன்னுருவேன் பாத்துக்கோ”, என்றான்.
“நான் அதை கிழிக்காம விடமாட்டேன் ஷியாம்”, என்று சண்டை கோழியாய் நின்றவளை ரசிக்க தான் தோன்றியது அவனுக்கு. அவளுடைய அருகாமையில் அவனே கொஞ்சம் தடுமாறி தான் போனான்.
“அப்பாடி, நீ என்னை பேர் சொல்லி கூப்பிடணும்னு எவ்வளவு நாள் ஆசை பட்டிருக்கேன் தெரியுமா? அப்புறம் என்ன சொன்ன? என்னை பப்பி சேமா பாத்ததுக்கு கண்ணை ஆசிட் ஊத்தி கழுவ போறியா? இப்ப செய்ற விசயத்துல உன் வாயையும் சேத்து ஆசிட் ஊத்தி கழுவு” , என்று சொல்லி கொண்டே அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவளுடைய உதடுகளில் தன் உதட்டை பதித்தான்.
அதிர்ந்து போய் நின்றவள் அவனை தன்னிடம் இருந்து பிரிக்க முயன்றாள். அவனுடைய அழுத்தமான முத்தத்தில் சிறிது நேரத்திலே அவள் மறுப்பு நின்று விட்டது. நடந்து கொண்டிருந்த நிகழ்வில் அவளுடைய மூளையே வேலை நிறுத்தம் செய்தது போல இருந்தது.
பின் அவளிடம் இருந்து விலகி அங்கிருந்த கட்டிலில் அவளை  அமர வைத்தவன் “நீ என்னோட பொண்டாட்டி டி. என் பொண்டாட்டியோட போட்டோ என் ரூம்ல இல்லாம இருக்குமா? தேவை இல்லாம லூசு மாதிரி யோசிக்காத. இப்ப மாமா கொடுத்த முத்தத்தையே நினைச்சிட்டு இரு என்ன?”, என்று சொல்லி விட்டு வெட்கமே இல்லாமல் அவள் முன்னாலே உடை மாற்றி கொண்டு கீழே சென்று விட்டான்.
அவன் சென்ற பின்னும் அவள் காதில் “நீ என் பொண்டாட்டி டி”, என்ற வார்த்தையே கேட்டு கொண்டிருந்தது. இது வரை அறியாத ஒரு புது வித உணர்வை அவளுடைய உடலும் மனதும் உணர்ந்தது. அடி வயிற்றில் இருந்து ஒரு விதமான உணர்வு கிளம்பி அவளை இன்ப அவஸ்தைக்கு உள்ளாக்கியது.
இங்கு வந்தது முதல் அவனை பார்த்த, அவனுடன் பேசிய என்று அனைத்து தருணங்களும் இப்போது அவளுடைய மனதில் அணிவகுத்தது.
அவன் தன்னிடம் புன்னகையுடன் உரையாடியதுக்கு காரணம் அவன் என் மீது கொண்டுள்ள காதல் தானா என்று சிந்தித்தது மனது. ஆனாலும் அவன் எப்படி இப்படி செய்யலாம் என்று ஒரு வித கோபமும் வந்தது.
அவன் தீண்டிய உதடுகளை வருடி பார்த்தாள். அதில் இன்னும் ஈரம் மிச்சம் இருந்தது.
“லூசு எப்படி எல்லாம் செய்றான்? கொஞ்சம் கூட அறிவே இல்லை. அதுவும் கண்ணு முன்னாடி ஒரு டிரெஸ்ஸும் வேற இல்லாம நிக்குறான். லூசு லூசு. இவனை எல்லாம் நான் ஒன்னும் லவ் பண்ண மாட்டேன்”, என்று வாய் விட்டே புலம்பி கொண்டிருந்தாள்.
ஷியாம் கீழே போன போது சூர்யாவும், மதியும் மோகனிடம் பேசி கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்து புன்னகைத்தவாறே இறங்கி சென்றான் ஷியாம் பிரகாஷ்.
புன்னகையுடன், புது பொலிவுடன் வரும் ஷியாமை பார்த்த மோகனின் கண்கள் நிறைந்து விட்டது. முதல் முறையாக தன் மகனை  இப்படி ஒரு சந்தோசத்துடன் பார்த்திராத அவருக்கு கண்களில் நீர் கோர்த்து விட்டது.
சூர்யாவும், மதியும் அர்த்தமுள்ள பார்வையை பரிமாறி கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கும் அவன் சந்தோசத்துக்கான காரணம் தெரியவில்லை.
“வாங்கப்பா, வா காயு”, என்றான் ஷியாம்.
“ஷியாம்”, என்று நா தழுதழுக்க அழைத்தார் மோகன். “என்ன பா கண் கலங்கிட்டு? இது என்னோட பிரண்ட் சூர்யா”, என்றான் ஷியாம்.
“தெரியும் ஷியாம். இப்ப தான் பேசிட்டு இருந்தோம். அந்த பொண்ணு காவ்யா எங்க?”, என்று கேட்டார் மோகன்.
“அவ என்னை கூப்பிட வந்து கதவுல இடிச்சிகிட்டா பா. மேல கொஞ்ச நேரம் உக்காந்திருன்னு சொல்லிட்டு வந்தேன்”, என்று பொய் உரைத்தான் ஷியாம்.
“சரி ஷியாம். அப்புறம் காயத்ரி இங்க உனக்கு துணைக்கு ரெண்டு பிரண்ட்ஸ், ரெண்டு அண்ணன் இருக்காங்க. நீ சந்தோசமா இரு”, என்றார் மோகன்.
அவரை முறைத்து விட்டு பதில் கூறாமல் அங்கிருந்த மற்றொரு அறைக்குள் சென்று மறைந்தாள் காயத்ரி.
கவலையுடன் அவனை பார்த்தார் மோகன். “ரெண்டு நாள்ல சரியாகிருவா பா. நீங்க எதாவது சாப்பிடுறீங்களா?”, என்று கேட்டான் ஷியாம்.
“அதெல்லாம் வேண்டாம் ஷியாம். அவ மனசு  மாறி உன் மேல அன்பா இருந்தாலே எனக்கு போதும். நான் ரெண்டு நாள் கழிச்சு வரேன். வரேன் பா சூர்யா. வரேன் மா மதி”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார் மோகன்.
அப்போது தான் கீழே செல்லலாம் என்று எழுந்த  காவ்யா அந்த போட்டோவை எல்லாம் ஏனோ கிழிக்க தோன்றாமலே கீழே வந்தாள்.
அவள் கீழே வந்ததும் அவள் அருகே ஓடி வந்த மதி “அடி பலமா டி? பாத்து நடக்க மாட்டியா? இப்படியா இடிச்சிக்குவ? தைலம் தேய்க்கவா?”, என்றாள்.
“என்ன உளருறா?”, என்று நினைத்து கொண்டே ஷியாமை பார்த்தவளுக்கு அனைத்தும் விளங்கியது. அவன் அவளை பார்த்து கண்களை சிமிட்டினான்.
அதில் அவன் மீதிருந்து பார்வையை விலக்கியவள் “லைட்டா தான்”, என்றாள்.
“சரி டி, நீ ரெஸ்ட் எடு”, என்று சொல்லி விட்டு மதி உள்ளே சென்றதும் சூர்யாவும் சென்று விட்டான்.
“என்ன டார்லிங்? ரூம்ல இருக்குற போட்டோவை எல்லாம் கிழிச்சிட்டியா?”, என்று கேட்டான்.
“ஹ்ம்ம் ஆமா”, என்று சொல்லி அவனை வெறுப்பேத்தினாள் காவ்யா.
“சரி பரவால்ல. அது ஒரு போட்டோவை தான் வித்தியாசமா மாத்தி மாத்தி வச்சிருந்தேன். ஆனா இன்னைக்கு தான்  உன்னை நிறைய போட்டோ  எடுத்துருக்கேனே?”, என்று சிரித்தான் ஷியாம்.
“ப்ச்”, என்றாள் காவ்யா.
“என்ன டி ப்ச்? மூணு மாசமா உன் நினைவுல பித்து புடிச்ச மாதிரி இருந்துருக்கேன் தெரியுமா? நேத்து உன்னை பாத்ததும் எனக்கு எப்படி இருந்துச்சுன்னு எனக்கு தான் தெரியும். எப்படி காதலை சொல்லன்னு தவிச்சிட்டு இருந்தேன். இப்ப சொல்லிட்டேன்னு நிம்மதியா இருக்கு. என் காதலை ஏத்துக்கோ காவ்யா”
“அதெல்லாம் முடியாது. நான் லவ் பண்ண கூடாதுன்னு முடிவுல இருக்கேன்”
“அப்படியா? ஏன் டீ?”, என்று நக்கலாக சிரித்தான் ஷியாம்.
“டீன்னு எல்லாம் சொல்ல கூடாது சொல்லிட்டேன்”
“சரி சரி சொல்லலை. நீ எதுக்கு என்னை லவ் பண்ண மாட்ட?”
“அதான் அன்னைக்கே காரணம் சொன்னேன்ல? எனக்கு கல்யாணத்துல நிறைய கனவு இருக்கு. எனக்கு செஞ்ச நகை எல்லாம் நான் கல்யாணத்தன்னைக்கு போட்டுக்க வேண்டாமா? அதுவும் எனக்கு புடிச்ச கம்மல் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன் தெரியுமா?”

Advertisement