Advertisement

அத்தியாயம் 10
அக்ஷையும் மதியும் வண்டியை நிறுத்தி விட்டு அக்ஷயின் வீட்டுக்குள் நுழைய 
“நிர்மல் எங்க இருக்கான்?” ஸ்வீட்டி மதியின் கையை பிடித்து நிறுத்திக் கேக்க 
அவளை புருவம் உயர்த்திப் பார்த்த மதியோ! “நீ நிர்மல காதலிக்கிறாயா?” என்று கேட்க ஸ்வீட்டியின் கண்கள் கலங்கி இருந்ததே ஒழிய  பதிலில்லை. 
கண்கள் கலங்கி கண்ணீர் நிறைந்தாலும் கண்ணை விட்டு வழியாமல் காற்றில் கரைந்துக் கொண்டிருக்க, அவள் கலங்கிய கண்களை பதிலாக எடுத்துக் கொண்ட மதி “நிர்மல் அந்த வீட்டில் இருக்கிறான் போய் பார்த்து விட்டு வா” என்றவள் அக்ஷையோடு உள்ளே செல்ல ஸ்வீட்டி நிர்மலை பார்க்க சென்றாள்.  
 ஸ்வீட்டியாக இருக்கும் ஸ்வீட்டியின் அக்கா ப்ரீத்தி வருமுன் ஸ்வீட்டியை அங்கே இருந்து அழைத்து செல்ல வேண்டும் என்ற பரபரப்பில் அக்ஷையையும் மறந்து வாசலுக்கு வந்த மதி மாவிலையை எவ்வாறு கழற்றுவதென்று யோசிக்க அக்ஷய் அவளிடம் வந்திருந்தான். 
“என்ன ஆச்சு மதி” 
அவனைக் கண்டு முகம் மலர்ந்தவள் காதில் கிசு கிசுக்க அவள் நெருக்கம் தந்த கிரக்கத்திலையே! அவள் சொன்னது போல் சோம்பல் முறித்து தவறுதலாக மாவிலை தோரணம் கையில் சிக்கி கழன்றது போல் பாவனை செய்தவன் மதி வெளியேறியபின் அதை இருந்தது போல் கட்டி விட்டு வண்டியில் ஏறி அமர்ந்தான். 
“ஏன் மதி அதை கழற்றி விட்டே வந்திருக்கலாமே! எதற்கு தற்செயலாக கழன்றது போல் பாவனை செய்யணும்” தனக்குள் எழுந்த சந்தேகத்தை கேட்க 
“இந்த தடவ மந்திரம் தெரிஞ்ச ஆவியோட மோதுறோம், அதோட பலம் என்னனு நமக்கு தெரியல, அதான் அப்படி செய்ய சொன்னேன்” 
“ஸ்வீட்டி வந்துட்டாங்களா?” 
“ஆமா பின்னாடிதான் அமர்ந்திருக்கா” 
“கண்ணாடி வழியாக பின்னாடி பார்த்தவாறே ஸ்வீட்டிமா உனக்கு அண்ணனா நான் இருக்கேன். உன் பிரச்சினையை சரி பண்ணலாம் ஓகே வா” என்றவாறே வண்டியை கிளப்ப 
“இவனுக்கு இப்படியெல்லாம் பாசமாக பேச வருமா?” என்று ஆச்சரியமான பார்வையை அக்ஷயின் புறம் வீசினாள் மதி.   
அவனோ அவளைக் பார்த்து “நிர்மல் உனக்கு ப்ரெண்டுனா? அவன் வைப் எனக்கு தங்கச்சியாக இருக்க கூடாதா?” என்று கண்சிமிட்ட 
“வர வர இவன் பண்ணுறதெல்லாம் ஏடா கூடமாகவே இருக்கு மதி” தனக்கு தானே புலம்பிக் கொண்டவள் அமைதியாக அமர்ந்துக் கொள்ள வண்டியை வீட்டுக்கு செலுத்தினான் அக்ஷய்.
நிர்மல் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க அவனருகில் சென்ற ஸ்வீட்டி “நீ கண்டிப்பா என்ன தேடி வருவான்னு தெரியும். உன்ன ஒரு தடவையாவது பார்க்கணும் னு தான் அத்தனை வலியையும் தாங்கிக் கொண்டு இருந்தேன். உன்ன பார்த்துட்டா போதும் னு இருந்தேன். பார்த்த பிறகு உன் கூட பேசணும், உன் கூட வாழனும் னு ஆசையா இருக்கு. என்ன செய்றது னு தெரியாம அழுது கிட்டு இருக்கும் பொழுது தான் மதி வந்தா. எனக்கு நம்பிக்கை இருக்கு, கூடிய சீக்கிரம் நீ என்ன பார்ப்ப, நாம சந்தோசமா வாழத்தான் போறோம்” என்றவள் அவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு அக்ஷையின் வீட்டையடைந்தாள்.
அக்ஷையின் வீட்டில் மதி ஒரு புறமும் அக்ஷய் ஒரு புறமும் அமர்ந்திருக்க, பிர்ஜு இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தான். 
“ஆ… பிர்ஜு இனி மேல் நான் காபி சாப்பிடுறதாக இல்ல. எனக்கு ப்ரெஷ்…..ஷா ஜூஸ் கொண்டுவா” அழுத்தி சொன்னவனின் கண்களோ! மதியின் உதட்டில் இருக்க 
தன்னை வேண்டுமென்றே சீண்ட சொல்கிறான் என்று மதிக்கு நன்றாகவே புரிய அவனை கண்டு கொள்ளாது காபியை அருந்திக் கொண்டிடுந்தாள்.
“பாக்குறாளான்னு பாரு. திமிரு புடிச்சவ. உன்ன எப்படி அடக்கணும் னு எனக்கு தெரியும் டி. என் கிட்ட மாட்டாமளா போய்டுவ” கருவியவாறே அமர்ந்திருந்தான் அக்ஷய். 
ஸ்வீட்டி உள்ளே நுழையவும் “வா ஸ்வீட்டி இப்படி உக்காரு. உனக்கு என்ன நடந்ததுன்னு விலாவாரியா சொல்லு என்னால என்ன செய்ய முடியும் னு பாக்குறேன்” மதி இன் முகமாகவே வரவேற்க அவளருகில் அமர்ந்துக் கொண்ட ஸ்வீட்டியும் சொல்ல ஆரம்பித்தாள்.
“சின்ன வயசுல இருந்தே எனக்கும் என் அக்காக்கும் ஆகாது. எந்த நேரமும் சண்டைதான். காரணமே இல்லாம சண்டை உருவாகும்.
என்னக்கு எது போட்டாலும் அழகா இருக்கும் னு அம்மா அடிக்கடி சொல்வாங்க, எங்கயாச்சும் வெளிய போய் யாராவது போட்டிருந்த டிரஸ் எனக்கு நல்லா இருக்குனு சொன்னா போதும் அந்த ட்ரெஸ்ஸ அதுக்கு பிறகு என்னால போடவே முடியாது. கிழிஞ்சி இருக்கும் இல்லனா துண்டு துண்டா வெட்டப் பட்டு இருக்கும். என் பொருட்களும் அப்படித்தான் எப்படி உடஞ்சதென்றே தெரியாம உடைஞ்சி இருக்கும். 
எல்லாம் என் அக்கா பண்ணுற வேலைனு தெரியும் அம்மா கிட்ட சொன்னா அடிப்பாங்க, ஆனாலும் அவ செய்றத நிறுத்த மாட்டா. அம்மா அடிக்கும் பொழுது குரூரமா சிரிப்பா”
“ஹ்ம்ம் அப்போ உன் அக்காக்கு உன்ன பிடிக்கல இல்ல” 
“ஆமா” ஸ்வீட்டியின் தலை தானாக ஆட
“அவ எப்போ மந்திரம்  கத்துக்க கிட்டா?” மதியின் கேள்விக்கு “தெரியாது” எனும் விதமாக ஸ்வீட்டி தலையசைக்க, ராஜவேலு உள்ளே வருவதைக் கண்டு 
“எங்கப்பா போய் இருந்த? உன்ன எங்கெல்லாம் தேடுறது? சொல்லி இருக்கேன் இல்ல சொல்லாம கொள்ளாம எங்கயும் போகாதேனு” எழுந்து நின்றவள் கத்த ஆரம்பிக்க உள்ளே இருந்து பிரஜூவும் ஓடிவந்து என்ன ஏதோ என்று பார்க்க அக்ஷய் அவனை கண்ணால் உள்ளே போ என்று சொல்ல கழுத்தை நொடித்தவாறே உள்ளே சென்றான் பிர்ஜு. 
“பாஸ் இவளுக்கு ரொம்ப இடம் கொடுக்குறாரு. அவரை மாதிரி ஒருத்தர் அவளுக்கு இந்த ஜென்மத்துல கிடைப்பாரா? எல்லாம் விதி..” பிர்ஜுவின் புலம்பல்களை கேட்கத்தான் அங்கே யாருமில்லை. 
“என்ன வாயில கொலுக்கட்டாயா வச்சிருக்க, பேசேன்” தந்தையை உலுக்காத குறையாக கேக்க 
“மதி சார எதுக்கு இப்படி திட்டுற? கொஞ்சம் அமைதியாகத்தான் கேளேன்” அக்ஷய் அருந்திக் கொண்டிருந்த பணத்தை கீழே வைத்தவாறு பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு சொல்ல 
“மதி….மா….” என்று குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான் ராஜவேலு. 
‘என்னாச்சுப்பா….” மதி பதற 
“வீட்டுக்கு வரும் போது ஒரு துர்ஆத்மா கிட்ட மாட்டிக் கிட்டேன். ஆத்மா இல்ல பொண்ணு. பொண்ணு உடம்புக்குள்ள துர்ஆத்மா” உளரிக் கொட்ட 
ராஜவேலுவை கட்டிப் பிடித்து முதுகை நீவியவாறே அமைதி படுத்தியவள் “சாரி பா. உன்ன காணோம்னதும்  பயந்துட்டேன்” மதி மன்னிப்பு வேண்ட 
“இதுதான் நீ மதி… பாசத்தினால் மட்டும் தான் எறிஞ்சி விழுவ” அவளையே பார்த்திருந்த அக்ஷய்க்கு நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ராஜவேலுவை ஒருவாறு சமாதானப் படுத்தியவள் என்ன நடந்ததென்று பொறுமையாக கேட்க
“தாஸ பேக்கப் பண்ணி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி விட்டு ஜாலியா ஊரு சுத்தலாம்னு போனேனா… அப்போ ஒரு ஆத்மா அழுத்து கிட்டு இருக்குறத பார்த்தேன். என்னனு போய் விசாரிச்சா… 
 ஒரு பொண்ணு அந்த ஆத்மாவுடைய பொண்ண அடைச்சு வச்சிருக்குறதாகவும் காப்பதும் படியும் சொல்லுச்சு. உன் கிட்ட உதவி கேட்கலாம்னு தோணிருச்சு. இருந்தாலும் மனிசப் பிறவி தானே நானே போலாம்னு போய்ட்டேன். 
அங்க போனா ஒரு பொண்ணு கை, கால் கட்டப் பட்ட நிலைல மேசைமேல படுத்து கிடந்தா. அந்த ஆத்மா அந்த பொண்ணு கிட்ட போய் “என் பொண்ணு, என் பொண்ணு னு” கத்த ஆரம்பிச்சதும். எங்க இருந்து வந்தானே தெரியல ஒரு பொண்ணு வந்து எங்க ரெண்டு பேரையும் புடிச்சி ஒரு குடுவைல அடைச்சிட்டா. 
இத்துணை நாளா அதுக்குள்ளதான் அடஞ்சி கிடந்தோம். எங்க நல்ல நேரம் ஒரு பூன வந்து பாஞ்சதுல குடுவை கீழ விழுந்து ஒடஞ்சிருச்சு. அதனால வெளிய வந்துட்டோம். ஆனா அந்த பொண்ண மட்டும் காப்பாத்த முடியல. அவ எங்க இருக்கானும் தெரியல.
பார்க்கவே சூனியக்காரி மாதிரி இருந்தா. அவ்வளவு பயங்கரம்” சொல்லியவாறே திரும்பிய ராஜவேலு ஸ்வீட்டியைக் கண்டு பெருங்குரலெடுத்து கத்த மதியும் பயந்து போனாள்.
மதியின் வீட்டில் தூங்கி எந்திரிச்சி நிர்மல் மதியை தேட முத்துலட்ச்சுமி அவள் அக்ஷையின் வீட்டில் இருப்பதாக கூறவே அவளிடம் சொல்லிக் கொண்டு அக்ஷையின் வீட்டுக்கு நடையை கட்டினான்.
“இவ தான் இவ தான் இவளே தான். அந்த பொல்லாத பொண்ணு. இவதான்” ஸ்வீட்டியின் புறம் கையை நீட்டியவாறே ராஜவேலு கத்த இவ்வளவு நேரமும் தன் பிரச்சினையில் உழன்றுக் கொண்டு இருந்த ஸ்வீட்டி ராஜவேலு சொல்வதை அமைதியாக கேட்டிருக்க,  தன்னை பார்த்தவாறு கத்தும் ராஜவேலுவை புரியாது பார்த்தாள். 
“அது இவ இல்ல பா… இவளோட அக்கா…” மதி நொடியில் புரிந்துக் கொண்டு சொல்ல ராஜவேலுவும் அமைதியானான். 
“என்னாச்சு மதி அங்கிள் எங்க போய்  இருந்தாராம்?” அங்கே நடப்பவற்றை அமைதியாக பார்த்திருந்த அக்ஷய் அங்கே அமைதி நிலவவும் கேள்வி எழுப்ப அங்கே நடந்தவற்றை சுருக்கமாக அவனுக்கு கூறினாள் மதி. 
அக்ஷய் கேள்வி எழுப்பும் பொழுது உள்ளே நுழைந்த நிர்மலோ! “என் ஸ்வீட்டி இங்கேயா இருக்கா? ஸ்வீட்டி ஸ்வீட்டி” என்றவாறே நாலாபுறமும் அவளை தேட ஸ்வீட்டி அவன் அருகில் இருந்தும்  அவன் கண்களுக்குத்தான் அவள் தென்படவே இல்லை. 
“மதி மதி எனக்கு என் ஸ்வீட்டிய பார்க்கணும் மதி… இப்போவே பார்க்கணும் மறுபடியும் ஆவிகளை என் கண்கள் பார்க்கும் திறனை ஏற்படுத்து மதி” நிர்மல் கதற 
“என்ன விளையாடுறியா? நீ வேணும் னு சொல்லும் போது கிடைக்கவும், வேணான்னு சொல்லும் போது நிறுத்தவும்… வரம்னா சாதாரணமா போச்சா உனக்கு”
“இப்போ எதுக்கு அவன் மேல பாயுற?” அக்ஷய் மதியிடமிருந்து நிர்மலை பிரித்து சோபாவில் அமர்த்தியவன் “இங்க பாரு உன் ஸ்வீட்டி உன் பக்கத்துல தான் நிக்கிறா” 
மதி அவனை சந்தேகமாக பார்க்க, அமர்ந்திருந்த நிர்மலின் இருபுறமும் பார்வையிட்டவன் “ஸ்வீட்டி நீ நிர்மல் பக்கத்துல தானே நிக்குற? மதி எந்த பக்கம்” என்று அவளையே கேட்க
“வலது புறம்” என்றாள் மதி.  
“அக்ஷய் ஜி எனக்கு என் ஸ்வீட்டிய பார்க்கணும்” ஸ்வீட்டி அவனின் தலையை தடவ குழந்தை போல் அழலானான் நிர்மல். 
“இங்க பாரு நிர்மால் ஸ்வீட்டிய மீட்டெடுப்போம். சரியா. அவ கூட நீ என்றைக்கும் சந்தோசமா வாழத்தான் போற. உன் கல்யாணத்த நடத்த போறதும் நான். புரிஞ்சுதா? நீ அழுதா ஸ்வீட்டியும் அழுவால்ல. ஸ்வீட்டி அழுதா உனக்கு பிடிக்குமா? நீ தைரியமா இருந்தா தானே ஸ்வீட்டிக்கு உன்ன பிடிக்கும்” 
அக்ஷையின் ஆறுதல் வார்த்தைகள் நிர்மலுக்கு நிம்மதியை தர கண்களை துடைத்துக் கொண்டவன் “எப்படியாச்சும் ஸ்வீட்டிய காப்பாத்து மதி. என்ன பண்ணலாம்?” என்ற கேள்வியை முன் வைத்தான்.
“அப்பா… அந்த துர்ஆத்மா உன்ன எங்க சிறை வச்சிருந்தது?”
ராஜவேலு இடத்தை சொல்லவும் “ஆமா அது துர்ஆத்மானு உனக்கெப்படித் தெரியும்?”
“எங்களை கண்ணாடி குடுவைல தான் அடைச்சு வச்சிருந்தா வெளில நடக்குறதெல்லாம் பார்த்தோம். ஏதோ பூஜ செஞ்சா. செய்யும் பொழுது உடம்ப விட்டு வெளியேறி பல  மந்திரங்களை உச்சரிச்சா.. அப்போ கூட அந்த துர்ஆத்மா கருப்பு கொடூரமான உருவமா இருந்ததே தவிர முகம் தெளிவா தெரியல. அதான் கன்பியூஸ் ஆகிட்டேன்” என்றவாறு ஸ்வீட்டியை பார்த்து மன்னிக்கும் படி வேண்டினான். 
“உடலைவிட்டு வெளியேறி பூஜை செஞ்சதா? எல்லாமே புதுசா இருக்கு. எனக்கு தெரிஞ்ச ஒரே வழி ருத்ரமகாதேவிதான். அவங்கள கூப்பிட்டாதான் இதுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்” மதி தீவிரமாக சொல்ல அக்ஷய் பதறினான். 
“சீக்கிரம் கூப்டு மதி” நிர்மல் அவசர படுத்த 
“ஒரு நிமிஷம். யாரு அந்த ருத்ரமகாதேவி? என் இடத்துக்கு கண்டவங்களையெல்லாம் கூப்பிடாத மதி…” கர்ஜனைக் குரலில் சொல்ல 
“அவ ஒரு தேவதை. காட்டில் வழி தவறின தேவதை” ருத்ரமஹாதேவியை பற்றியும், தனக்கு ஆவிகள் தென்படும் வரத்தை பற்றியும் சுருக்கமாக கூறியவள் அக்ஷையை ஏறிட 
“இங்க பாரு மதி அவங்க யாரா வேணா இருக்கலாம் இங்க வேணாம்… வேணும்னா நிர்மல் வீட்டுக்கு அழைச்சி பேசு” ஒரேயடியாக மறுத்தவன் அதற்கான தீர்வையும் சொல்ல, அவனின் மறுப்புக்கு காரணம் அலசாமல் உடனே நிர்மல் வீட்டுக்கு கிளம்பினாள் மதி. 
செல்லும் அவளையே பார்த்திருந்த அக்ஷயோ! “ஐம் சாரி மதி… எனக்கு வேற வழி தெரியல” கையாளாதவனாக நின்றிருந்தான்
இங்கே நிர்மல் வீட்டில் நிர்மலின் அறையில் அமர்ந்திருந்தனர் அனைவரும். மதி கண்களை மூடி வணங்கியவாறே  ருத்ரமஹாதேவியை அழைக்க அவள் முன் ப்ரசன்னமானாள் அவள்.   
“என்ன மதி நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை அழைத்திருக்கின்றாய்? என்ன நடந்து விட்டது? என்ன உதவி வேண்டும் உனக்கு?” காரணமில்லாமல் மதி தன்னை அழைக்க மாட்டாள் என்று அறிந்திருந்தவளோ! கேள்விகளை தொடுக்க நடந்த அனைத்தையும் சொன்னாள் மதி. 
கவனமாக கேட்டிருந்த ருத்ரமகாதேவி “அந்த ஆத்மா உடலை விட்டு பூஜை செய்ய வெளியேறும் நேரம் தான் இந்தப் பெண் தன் உடலை அடைய முடியும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. வெளியே வரும் துர்ஆத்மாவை முதலில் அழிக்க வேண்டும். அதன் பின் தான் உடலை ஆட்கொள்ள வேண்டும் இல்லையேல் மீண்டும் அது உடலை ஆட்கொள்ளும்” 
“அதை எப்படி அழிப்பது?” மதி அடுத்த கேள்வியை கேட்க 
உன் கையிலுள்ள காப்பு மட்டும் போதாது. ஏனெனில் அது மந்திரம் தெரிந்த துர்ஆத்மா. அதை அடக்க முதலில் அதை சிறை பிடிக்க வேண்டும். ஆனால் அது எந்த மந்திரம் என்று எனக்கு தெரியாது. என் நியாபக அடுக்கில் அது இல்லை” ருத்ரமகாதேவி கவலையாக சொல்ல அனைவரின் முகத்திலும் கவலை ரேகைகள். 
“வேறு வழியே இல்லையா?” நிர்மல்தான் வாய் திறந்தான். 
யோசனையில் விழுந்த ருத்ரமகாதேவியோ “இருக்கு… அந்த ஆத்மா மந்திரம் உச்சரிக்க கூடாது. உச்சரிக்காத படி அதன் கழுத்தை இறுக்க வேண்டும்”
“கையாலையா?” ராஜவேலு குறுக்கிட 
“இல்லை அதன் கழுத்தில் சிவனின் பாதத்தின் கீழ் வைத்து பூஜை செய்த ருத்ராட்சமாலை அணிவித்தால் அதனால் மந்திரம் உச்சரிக்கக் முடியாது” 
“அது சரி பூனைக்கு மணி கட்டுவது யாரா? பூஜை செஞ்ச ருத்ராட்சைக்கு நாங்க எங்க போறது” ராஜவேலு நொந்தவாறே சொல்ல 
கண்ணை மூடி கணை திறந்த ருத்ரமஹாதேவியின் கையில் ருத்ராட்சமாலை இருக்க அதை மதியின் கையில் கொடுத்து “உடலை விட்டு வெளியேறிய சமயம் மட்டுமே இதை போடவேண்டும். இல்லையேல் பயனில்லை” என்று விட்டு மறைந்தாள்.  
“என்னமா இது? மாலையை போடலாம் ஆத்மாவை எப்படி அழிக்கிறது” ராஜவேலு 
தன் கையிலிருந்த காப்பை காட்டியவள் அக்ஷையின் கையிலும் காப்பு இருப்பதால் அவன் உதவியையும் பெறலாம் என்று எண்ணி “இதால அழிக்க முடியும் னு தோணுது பார்க்கலாம். சரி வாங்க அந்த இடத்துக்கு போலாம்” வெளியே வரவும் அக்ஷையிடமிருந்து அலைபேசி அழைப்பு வரவே வேண்டா வெறுப்பாக இயக்கி காதில் வைத்தவள் அவர்கள் செல்லுமிடத்துக்கு வருமாறு சொல்லி விட்டு அணைப்பை துண்டித்தாள். 
ரெஸ்டூரண்ட்டுக்குள் நுழைந்த ஸ்வீட்டியின் உடலில் இருக்கும் ப்ரீத்தி. ஸ்வீட்டியை எல்லா இடமும் தேட கண்ணில் படாமல் போகவே தப்பித்து விட்டாலோ என்று பார்க்க சீசீடிவியை இயக்க அதில் அக்ஷையின் கை தவறி மாவிலை கன்று விழுவதும் அவன் மீண்டும் அதை மாட்டுவதும் அந்த சிறிய நேரத்தில் ஸ்வீட்டி வெளியேறுவதும் இருக்க கோபத்தில் கனன்றாள். 
  மதியும் இதை தான் எதிர் பார்த்தாள் தவறுதலாக நடந்திருந்தால் ப்ரீத்தியின் கவனம் தங்கள் பக்கம் வராது என்று எண்ணி தான் அக்ஷய்க்கு அவ்வாறு செய்ய சொன்னாள். அவள் நினைத்தது போலவே தான் நடந்திருந்தது. ப்ரீத்தி ஸ்வீட்டியை எங்கே தேடுவதென்று யோசனையில் பூஜை மூலம் ஸ்வீட்டியை தேடுவதற்கு தான் பூஜை செய்யும் வீட்டையடைந்தாள். 
ப்ரீத்தி வரும்முன் அவ்விடத்தை அடைந்த மதி சில ஏற்பாடுகளை செய்து விட்டு வெளியேறி ப்ரீத்தி உள்ளே செல்லும் வரை காத்திருந்தாள். ப்ரீத்தி உள்ளே செல்லவும் அக்ஷய் அங்கே வரவும் சரியாக இருக்க நிர்மலை ஸ்வீட்டியோடு வெளியே இருக்குமாறு உத்தரவிட்டவள் அக்ஷய் ராஜவேலுவோடு உள்ளே நுழைந்தாள்.  

Advertisement