Advertisement
சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 10
இரவு பத்து மணி,
வாசலில் கார் சத்தம் கேட்டு, பவித்ரா கதவைத் திறக்கச் சென்றார்.
அங்கு மானவ் காரில் இருந்து இறங்கி, உறங்கிக்கொண்டு இருந்த தனுவை மனிஷாவின் மடியில் இருந்து அழகாகத் தூக்கிக்கொண்டு கதவை நோக்கி வந்தான்.
மனிஷா காரை லாக் செய்துவிட்டு, சாவியையும், பைகளையும் எடுத்துக்கொண்டு பின்னாலேயே வந்தாள்.
“பாப்பாவை அத்தை ரூம்ல படுக்க வைப்பா”
“இருக்கட்டும்மா, மேல படுக்க வைச்சுக்கிறேன்”
“நீ ரெண்டு நாளா மீட்டிங்க்கு பட்ட கஷ்டம் எனக்குத் தெரியும், ஒழுங்கா போயித் தூங்கு, இவ உன் தூக்கத்தைக் கெடுப்பா” என்றவர், நித்யாவின் அறைக்கதவைத் திறந்து விட்டார்.
நித்யா உறங்கிக்கொண்டு இருக்க, அவரது அருகில் தனுவை படுக்க வைத்துவிட்டு, மானவ் வெளியேறினான்.
பவித்ரா அறைக்கதவை சாத்திவிட்டு தனுவின் அருகில் சென்று படுத்தார்.
மனிஷா கொண்டு வந்திருந்த பைகளை ஒழுங்கு செய்துவிட்டு, ஈர உடைகளை கொண்டு சென்று மொட்டை மாடிக்கு செல்லும் மாடிப்படியில் வைத்துவிட்டு, மானவின் கோட் மற்றும் டையை எடுத்துக்கொண்டு அவர்களது அறைக்குள் நுழைந்தாள்.
மானவ் உடை மாற்றிக் கொண்டு இருக்க, தனக்கான மாற்றுடை மற்றும் டவலை எடுத்துக்கொண்டு மனிஷா குளியலறைக்குள் நுழைந்தாள்.
அவள் குளித்து முடித்து வர, மானவ் உறங்காமல் அவளுக்காக காத்திருந்தான்.
“எவ்ளோ நேரம் குளிப்ப?”
“சாரி, நீங்க ரெஸ்ட் ரூம் போயி இருப்பீங்கன்னு நினைச்சேன்”
“நான் உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்?”
“எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம், எனக்குத் தூக்கம் வருது”
“காலைல பேச நான் ரெடி, பட் வீட்ல ஆளுங்க இருக்கறது உனக்கு பிராப்ளம் இல்லைனா சரி”
அவனது பேச்சு மாற்றத்தை உணர்ந்தவள், படுக்கையில் இருந்த தலையணையையும். பெட்சீட்டையும் எடுத்துக்கொண்டு, அவர்களது அறைக்குள் முன் பக்கம் இருந்த சிறு ஹாலை நோக்கிச் சென்றாள்.
மானவும் அவள் பின்னாலேயே எழுந்து சென்று அவளது கைகளில் இருந்த தலையணையையும், பெட்சீட்டையும் பிடுங்கி கட்டிலின் மேல் எறிந்துவிட்டு, அவளது கரம் பற்றி கட்டிலை நோக்கி இழுத்து வந்தான்.
“இங்க பாரு, நான் பொறுமையா இருக்கேன், என்னை சீண்டிப் பார்க்காத”
“நான் பாட்டுக்கு இருக்கேன், நீங்க தான் இப்ப பிரச்சனை பண்ணறீங்க?”
“என்னடி பிரச்சனை பண்ணேன்? குடிச்சுட்டு வந்து உன்னை அடிச்சேனா? இல்லை பணம் காசு வாங்கி வரச் சொல்லி உங்கம்மா வீட்டுக்கு அனுப்பினேனா?”
“சம்பந்தம் இல்லாம என்ன பேசறீங்க? நாம எப்பயும் போல இருப்போம், அது தான் நமக்கு நல்லது” என்று அவனது கையில் இருந்த கரத்தை உருவ முயற்சித்தாள்.
“என்ன எப்பயும் போல, அப்ப காலைல என்னை பிடிச்சு தள்ளி விட வேண்டியது தானே, எதுக்கு என்கிட்ட உருகி நின்ன”?”
“அது….”
“சொல்லு… எதுக்கு உருகின?”
“————————————————“
“என் மேல கோபம் இருந்தாலும், காதல் இருக்கப்போய் தானே நீ உருகி நின்ன?”
“இன்னிக்கு நீங்க ஏன் அப்படி நடந்துகிட்டீங்க?”
“அது….”
“இத்தனை நாளா, இதே ரூம்ல இருக்கிறோம், உங்க விரல் நகம் கூட என் மேல படாது, அதே ரூம்க்கு எத்தனை தடவை சாப்பாடு கொண்டு வந்து இருக்கிறேன், அப்ப நடக்காதது, இன்னிக்கு மட்டும் எப்படி நடந்துச்சு?”
“இன்னிக்கு உன்னை பார்த்ததும் தோணிச்சு”
“அப்ப நீங்க என்னை என்ன லவ் பண்ணியா அப்படி நடந்துகிட்டீங்க? இல்லைல, திடீர்ன்னு உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளுக்கு வடிகாலா என்னை யூஸ் பண்ணிக்கிட்டீங்க, நானும் மனுசி தான, எனக்கும் உணர்வுகள் இருக்கும்ல, அதை நீங்க தூண்டி குளிர் காய்ஞ்சுகிட்டிங்க, அவ்ளோதான்…” என்று கண்களில் நீர் வர கூறியவள்,
கண்களைத் துடைத்துக்கொண்டே,
“இதுவரை நான் உங்களால அனுபவிச்சதே போதும், மறுபடியும் ஏதாவது பண்ணி நான் தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு என்னை தூண்டி விடாதிங்க”
“நிஷா….”
“கோபம் வருதா? நியாயமா நான் தான் கோபப்படனும், இன்னிக்கு என் பேர்லயும் தப்பு இருக்கப்போயி அமைதியா இருக்கேன்”
“சரிடி.. உனக்கு என் மேல எந்த அன்பும் இல்லை… நீ சொல்ற மாதிரி வைச்சுப்போம், என் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, நீ என்ன பண்ணி இருப்ப? என்கிட்ட இருந்த மாதிரி அவன்கிட்டேயும் உருகி நின்னு இருப்பியா? காஸ் உனக்கும் உணர்வுகள் இருக்கு, நீயும் மனுஷி தான”
அவனது கேள்வியில் கண்கள் சிவந்தவள், அடுத்த நொடி அவனது கன்னத்தில் தனது கரத்தைப் பாய்ச்சி இருந்தாள்.
பிடித்திருந்த அவளது கரத்தை விட்டவன், அவளை வேகமாக இறுக்கி அணைத்தான்.
“பார்த்தியா? ஒரு வார்த்தைக்கு கூட நீ அடுத்தவங்கிட்ட சலனப்பட மாட்டன்னு உனக்கே தெரியும், அப்படின்னா என் மேல உனக்கு லவ் இருக்குங்கறது உண்மை, கூடவே நீ என் தவறை மன்னிச்சுட்டங்கறதும் உண்மை… உன் மனசு மாறிடுச்சு, ஆனா நீ இன்னும் புரிஞ்சுக்கலை”
“சரி, நீங்க சொல்ற மாதிரி எனக்கு உங்க மேல லவ் இருக்குன்னு வைச்சுக்குவோம், நீங்க இன்னிக்கு என்கிட்டே நடந்துகிட்டதுக்கு என்ன காரணம்? லவ்வா? இல்லை லஸ்ட்டா?”
“லவ்வோ, லஸ்ட்டோ, பொண்டாட்டிக்கிட்ட வந்தா தப்பில்லை”
“அதை நான் சொல்லனும், என் விருப்பம் இல்லாம உங்க விருப்பத்தை நீங்க சாதிக்கப்போயி, அதுக்கு சாட்சியா இன்னிக்கு தனு இருக்கா, இன்னொரு குழந்தையையும் அப்படி சுமக்க எனக்கு விருப்பம் இல்லை”
“ஏய்… இத்தனை வருஷமா பேசாம இருந்த பிரச்னையை பேசித் தீர்க்கத்தான் உன்னை இங்க பிடிச்சு வைச்சிருக்கேன், ஒரு முறை உன்னை தொட்டு, நான் இதுவரைக்கும் அனுபவிக்கற வேதனை எனக்கு மட்டும் தான் தெரியும்…”
“———————————————————“
“இனிமே நான் சொல்றதைக் கேளு, எனக்கு காலைல காபி இங்க வரனும், நீயே போட்டு கொண்டு வரனும், தென் காலைல பிரேக் பாஸ்ட் பரிமாற, மதியம் லஞ்ச் பரிமாற நீ இருக்கனும், தென் எவ்ரி சாட்டர்டே அன்ட் சண்டே நீயும் நானும் வெளிய எங்கேயாவது போறோம், சினிமா, கோவில், தீம் பார்க், ஹோட்டல், ஷாப்பிங் இந்த மாதிரி… இதுவரை இழந்த நாளுக்கும் சேர்த்து, இனிமே வாழனும், ஒரு டிபிக்கல் பொண்டாட்டி புருசனுக்கு என்ன செய்வாளோ, அதை நீ செய்யற, சேம் அதையே நானும் பாலோ பண்றேன், தென் உன்னை டச் பண்ணுவேன், கிஸ் பண்ணுவேன், வேணும்னா நீயும் பண்ணிக்கோ, அப்புறம் தூங்கறது என் பக்கத்துல தாங்கறத மறந்திடாத…”
“என்னால முடியாது…”
“செய்யற… இல்லை செய்ய வைப்பேன்….”
“———————————————————“
“நீ தெனாவெட்டா இருக்கும் போது எவ்ளோ அழகா இருக்க தெரியுமா?”
“எனக்குத் தூக்கம் வருது, கொஞ்சம் என்னை விடுங்க”
“முக்கியமான ஒரு விஷயம் சொல்லனுமே”
“சொல்லித்தொலைங்க…”
“எனக்கு என்னை மாதிரி ஒரு பையன் வேணும், வீட்ல ஒரே பொண்ணுங்களா இருக்காங்க, போர் அடிக்குது… எப்ப பெத்து தர்ற?”
“என்..னது… பை…யனா?” என்று அவள் திடீர் அதிர்ச்சியில் திக்கித்திக்கி கேட்க,
“யெஸ் பேபி… உனக்கு இன்னும் ரெண்டு மாசம் டைம், நீ பெத்து தரலை நான் உங்கம்மாட்ட போயி கேட்பேன்”
“டேய் என்னடா ஒளர்ற?”
“ஏய்… ச்சீ… கேட்பேன்னா, நியாயம் கேட்பேன்… அத்தை உங்க பொண்ணு எனக்கு இன்னும் பையன் பெத்து தரலை, கேட்டா வேண்டாம்ன்னு சொல்றான்னு சொல்லுவேன்”
“ரெண்டு மாசத்துல, குழந்தை? போயி சொல்லுங்க… சிரிப்பாங்க”
“குழந்தை பிறக்க பத்து மாசம் வேணும், பட் நீ வாந்தி எடுக்க ஒரு மாசமே அதிகம் தானே, நீயே டாக்டர், உனக்கேத் தெரியும்…”
“—————————————————“
கோபம் மேலெழ, அவள் பேசாமல் அமைதியாக இருந்தாள், அவளுடைய நெற்றியில் மெல்ல முத்தமிட்டவன், “ஐ லவ் யூ நிஷா… குட் நைட்” என்று சொல்ல,
அவள் கண்களில் இருந்து கண்ணீர் கோடு மெல்ல வழிந்தது.
அதனையும் துடைத்துவிட்டவன், அவளை அணைத்தவாறே நடத்தி சென்று கட்டிலில் படுக்க வைத்து, அவளை இறுக்கி அணைத்துக்கொண்டே படுத்தான்.
அடுத்த சில நிமிடங்களில் அவன் உறங்கி விட, மனிஷா தான் உறக்கம் பிடிக்காமல் அலை பாய்ந்த மனதுடன் விழித்துக் கிடந்தாள்.
மற்றொரு பக்கம் கணவனுடன் அளவளாவிக்கொண்டிருந்த சம்யுக்தா உறங்கிக்கொண்டு இருக்க, அவளுடைய விருப்பமான பாடலான “சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா”வை பவித்ரன் ஊனுருக பாடிக்கொண்டு இருந்தான்.
பாடல் முடிந்ததும், செல் போன் திரையில் தெரிந்த அவளது உருவத்தில் முத்தமிட்டவன், “குட் நைட் டி என் செல்ல பொண்டாட்டி” என்று சொல்லிவிட்டுக் காலை கட் செய்தவன், படுக்கை அறைக்குள் நுழைந்தான்.
படுக்கையில் கிடந்த சம்யுக்தாவின் ஸ்டோலை எடுத்தவன், அதை தன் கழுத்தைச் சுற்றி போட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.
இன்னொரு பக்கம் பரத், பவித்ராவுக்கு வாங்கிய புடவையைக் கையில் வைத்துக்கொண்டு அதையேக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தார்.
பவித்ராவுக்கென்று அவர் வாங்கிய முதல் புடவை அதுவல்ல, ஆனாலும் அது பவித்ராவின் கரத்தைச் சென்று சேரும் என்ற காரணத்தினால், அவர் கரத்தை விட்டு இறங்க மறுத்தது.
அதே நேரம் சிவா, சம்யுக்தாவை பற்றி யோசித்துக்கொண்டு இருந்தார். பவித்ரா இருந்திருந்தால், அவரை அதட்டி உருட்டி உறங்க வைத்திருப்பார், அவரும் இல்லாத காரணத்தினால், அவர் எண்ணம் சம்யுக்தாவை சுற்றியே இருந்தது.
பரத்தையும் சம்யுக்தாவையும் இணைத்து அவர் மனம் பல்வேறு கோணங்களில் யோசிக்க, புத்தி அவ்வப்போது எச்சரிக்கை விடுத்துக்கொண்டே இருந்தது.
பல்வேறு உணர்வுப் போராட்டங்களுக்கு மத்தியில், தனது செல்லில் இருந்து, “நீட் கம்ப்ளீட் டீட்டைல்ஸ் அபவுட் டாக்டர் சம்யுக்தா பரத் மல்ட்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல், த்ரூ டிடெக்டிவ் ஏஜென்சி,” என்று ரகுவிற்கு மெசேஜ் அனுப்பியவர் நிம்மதியாக உறங்க ஆரம்பித்தார்.
வெள்ளிக்கிழமையை நோக்கி நாட்கள் நகர ஆரம்பிக்க, ஒவ்வொரு நாளும் பேத்திக்கு உணவு கொண்டு செல்வதில் பவித்ரா பிஸியாகிவிட, மனைவியுடன் சென்று பேரனையும், பேத்தியையும் காணும் வேலையில் சிவா பிஸியாகிவிட, மானவுக்கும், மனிஷாவுக்கும் இடையில் பஞ்சாயத்து செய்வதில் நித்யா பிஸியாகி இருந்தார்.
இவர்கள் இப்படி இருக்க, சம்யுக்தாவும், பரத்தும் தங்கள் உடமைகளை பேக்கிங் செய்வதில் பிஸியாக இருந்தனர்.
ஒருவாறாக வெள்ளிக்கிழமை மாலையும் வர,
சிவாவும், பவித்ராவும் சம்யுக்தாவின் வருகைக்கு ஆவலுடன் காத்திருந்தனர்.
பவித்ராவோ அடிக்கடி வாசல் வரை சென்று வந்து கொண்டு இருந்தார்.
நித்யாவும் கூட அதிக எதிர்பார்ப்போடு சம்யுக்தாவிற்க்காக காத்திருந்தார்.
அனைவரின் முகத்தையும் கண்ட மனிஷாவிற்கும், மானவிற்கும் மனதில் குழப்பம் வந்து அமர்ந்து கொண்டது.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல்,
“என்னத்தை? வாசலிலேயே இருக்கீங்க? என்ன விஷயம்?” என்று மனிஷா வாய் விட்டேக் கேட்டுவிட்டாள்.
“ஒன்னும் இல்லைம்மா… இன்னும் அந்த சம்யுக்தாவை காணோம், அதான்”
“அவங்க சரியா ஆறு மணிக்கு இங்க இருப்பாங்க… சொன்னா சொன்ன படி வந்துடுவாங்க… இப்ப மணி ஐந்து தானே ஆகுது”
“சீக்கிரம் வரச் சொல்லி இருந்தேன்”
“வந்துடுவாங்க… நீங்க வாங்க….”
“என்னம்மா? திடீர்ன்னு அந்த டாக்டர் மேல இவ்ளோ பாசம்?”
“ஏன்டா, இன்னும் ஆளைக் காணோமேன்னு பார்த்தேன், பூஜைக்கு வேற டைம் ஆகுது, அதுல உனக்கென்ன பிரச்சனை?”
“இல்ல… நீங்க யாரையுமே இப்படி கூப்பிட மாட்டீங்க, தென் இன்னிக்கு கூப்பிட்டதோட மட்டும் இல்லாம வாசலே கதின்னு இருக்கீங்க, அது பத்தாதுன்னு அத்தை ஒரு பக்கம் கண்ணாலேயே வாசலுக்கு காவல் இருக்காங்க, கூடவே அப்பா வேற… அதான் கேட்டேன்….”
“மனிஷாவை காப்பாத்தின அந்த பெண்ணை பார்க்கத்தான் மானவ் இவ்ளோ ஆர்வம், அந்த பொண்ணு கையை பிடிச்சி நன்றி சொல்லனும்… அதுக்குத்தான் வாசலையே பார்த்துக்கிட்டு இருக்கேன்”
“அத்தை ஆனாலும் நீங்க மூனு பேரும் பண்றது ரொம்ப ஓவர்”
“மானவ்…. நீ போயி பாப்பா கூட இரு, எங்களுக்கு வேலை இருக்கு” என்று நித்யாவின் கையில் இருந்த குழந்தையை வாங்கி மானவின் கையில் தந்துவிட்டு நித்யாவை இழுத்துக்கொண்டு பவித்ரா சமையலறைக்குள் நுழைந்தார்.
சரியாக மணி ஆறாக, சம்யுக்தாவின் கார் சிவாவின் வீட்டிற்குள் நுழைந்தது.
“பவித்ரா கார் வந்தாச்சு… சீக்கிரம் வா” என்ற நித்யாவின் அழைப்பில், நித்யா வாசலுக்கு விரைந்தார்.
டிரைவர், கார் கதவைத் திறந்து விட, காரில் இருந்து இறங்கிய சம்யுக்தாவின் பின் பெரியவர்கள் கண்கள் இடம் பெயர, சம்யுக்தாவுடன், ஜுவாலா மட்டும் இறங்கினாள்.
பேரனைக் காணாது பெரியவர்கள் மூவரின் கண்களும் ஏமாற்றமடைய, அதை சம்யுக்தா புரிந்து கொண்டாள்.
“வாம்மா…” என்று பெரியவர்கள் அழைக்க, பவித்ராவிற்கு வாங்கிய உடையுடனும், பழங்கள் மற்றும் பொம்மைகள் சகிதம், சம்யுக்தாவும், ஜுவாலாவும் புன்னகை முகமாக அவர்களை நோக்கி வந்தனர்.
“ஒரு நிமிஷம் இரும்மா” என்ற பவித்ரா,
முன்னேற்பாடாக அங்கு கரைத்து வைத்திருந்த ஆலத்தி தட்டை எடுத்து வந்து இருவருக்கும் சுற்ற ஆரம்பித்தார்.
இதை எதிர்பார்க்காத சம்யுக்தாவின் முகம் புன்னகையை தொலைத்து குழப்பத்தை எடுக்க,
“என்னிக்கு நீ மனிஷாவை காப்பாத்தினியோ, அப்ப இருந்து நீயும் இந்த வீட்டு பொண்ணு தான். அதனால தான், முதல் முறை வர்ற இல்லையா, அம்மா ஆலம் சுத்தறாங்க” என்று சிவா சொல்ல,
அவர் பதில் சரியான பதில் இல்லை என்று உணர்ந்த சம்யுக்தா சிறு புன்னகை ஒன்று உதிர்த்தாள்.
அதற்குள் ஆலம் சுற்றி இருந்த பவித்ரா, இருவருக்கும் பொட்டு வைத்துவிட்டு, “வலது காலை வைத்து உள்ள போங்கம்மா” என்று சொல்லிவிட்டு, கையில் இருந்த ஆலத்தை மனிஷாவிடம் தந்து வெளியே கொட்டச் சொன்னார்.
அவரது சொல் படி சம்யுக்தா மகளுடன் உள்ளே நுழைய, அங்கு மானவ் எடை போடும் பார்வையுடன் அவளைக் கூர்ந்திருந்தான்.
“உட்காரும்மா” என்று ஹாலின் ஓரத்தில் போடப்பட்டு இருந்த சோபாவை சிவா காட்ட, இருவரும் சென்று அங்கு அமர்ந்தனர்.
அவர்களுக்கு எதிரில் இருந்த சோபாவில் அவர் அமர்ந்து கொள்ள, பவித்ரா குடிக்க நீர் கொண்டு வந்து தந்தார்.
அதை பெற்றுக் கொண்டவள்,
“தேங்க்ஸ் ஆண்ட்டி” என்று சொல்ல,
“பரவால்ல… அம்மான்னே சொல்லும்மா…”
“அம்மாக்கு அவங்களைத் தவிர யாரையும் அம்மான்னு கூப்பிட்டா பிடிக்காது, சோ உங்களை பவிம்மான்னு கூப்பிடவா?”
“அப்படியே கூப்பிடு”
“இந்தாங்க பவிம்மா….” என்று புடவை பார்சலையும் பழங்களையும் அவரிடம் தந்தவள், “ஜுவா… பாப்பாக்கு டாய்ஸ் கொண்டு போயி குடு” என்று சொல்ல,
“ஹாய்… பேபி…” என்று சொல்லிக்கொண்டே கைகளில் இருந்த பொம்மைகள் பையை குழந்தையிடம் அவள் நீட்ட,
தனுவும் அதை எட்டி வாங்க முயற்சிக்க, மானவ் குழந்தையை கீழே இறக்கிவிட்டான்.
அடுத்த சில நொடிகளில் இருவரும் ஒன்றாகிவிட,
மானவ் சம்யுக்தாவை நோக்கி வந்தான்.
“வாங்க டாக்டர்… எப்படி இருக்கீங்க? உங்க ஹஸ்பென்ட் வரலையா?”
“பைன் சார்… நெக்ஸ்ட் வீக் என்ட் வந்துடுவார்”
“எதுக்கு மேம் இவ்ளோ டாய்ஸ்?” என்று மனிஷா கேட்க,
“அது தனு குட்டிக்காக, ஜுவா அவங்க அப்பாகிட்ட கேட்டு கனடால இருந்து வர வைச்சது, எனக்கே சஸ்பென்ஸ்…”
“ஹோ… பைன்… அவளுக்கு எப்படி தனுவை தெரியும்?”
“அன்னிக்கு ஸ்கூல் பங்க்சன்ல பார்த்தோம், தென் அடிக்கடி பவிம்மா அவளை ஸ்கூல் கூட்டிகிட்டு வருவாங்களாமே…”
“எஸ்… எஸ்…”
“சரி சரி எல்லாரும் பேசி முடிச்சுட்டீங்களா? பூஜையை முடிச்சுட்டு அப்புறம் பேசிக்கலாம்… வாங்க…” என்று நித்யா அழைக்க,
“இவங்க தானே உங்கம்மா…”
“ஆமாம் மேடம்…”
“மனிஷா… பிளீஸ் மை ஹம்பிள் ரெக்வஸ்ட்… டோன்ட் மைன்ட் மீ யா”
“சொல்லுங்க மேடம்”
“கனடால டாக்டர்ன்னு சொல்லுவாங்க, இங்க அடிக்கடி மேடம் மேடம்ன்னு சொல்லி, ஒரே ஹாஸ்பிட்டல் அட்மாஸ்பியரா இருக்கு, சோ இந்த மேடமை விட்டுடேன் பிளீஸ்…”
“உங்களை வேற எப்படி கூப்பிடறது?”
“நேம் சொல்லி கூப்பிடு”
“அச்சோ.. நீங்க ஏஜ்ல சீனியர்… உங்களை அக்கான்னு கூப்பிடவா?”
“பைன்… எனக்கும் சிஸ்டர் இல்லை… டீல்”
“என்னம்மா? இன்னும் ரெண்டு பேரும் பேசி முடிக்கலையா?” என்று பவித்ரா குரல் எழுப்ப,
“பேசி முடிச்சுட்டோம் அத்தை…” என்று சொல்லிக்கொண்டே மனிஷா சம்யுக்தாவின் கரம் பற்றி ஹாலிற்கு அழைத்துச்சென்றாள்.
குழந்தைகள் இருவரும் சோபாவில் அமர்ந்து விளையாட, சிவா இருவருக்கும் அருகில் சென்று அமர்ந்து கொண்டார்.
பூஜை ஆரம்பமாக,
“குத்துவிளக்கை ஏத்தி வைச்சிடுங்கோம்மா” என்று ஐயர் சொல்ல,
“மனிஷா, நீ ஒரு குத்து விளக்கை ஏத்து, சம்யுக்தா நீ ஒரு குத்து விளக்கை ஏத்தும்மா?”
“நானா?”
“சுமங்கலிப் பொண்ணுங்க குத்துவிளக்கு ஏத்தறது நல்லது, ஏத்து”
இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் விளக்கேற்றி வைக்க, அனைத்தும் மானவின் லேசர் கண்களில் படமாகிக்கொண்டு இருந்தது.
பூஜை ஆரம்பிக்க,
சிவாவும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அங்கு வந்துவிட்டிருந்தார்.
பூஜையின் இடையில்,
“முக்கியமான கால், பேசிட்டு வந்துடறேன், அதுவரை யாரேனும் சாமி பாட்டு பாடுங்கோ” என்று ஐயர் சொல்ல,
“ஜுவா குட்டி, நீ தான் சூப்பரா பாடுவில்ல, இந்த மாமாவும், அத்தையும் உன் பாட்டை கேட்டதே இல்லை, கொஞ்சம் பாடேன்” என்று நித்யா சொல்ல,
ஜுவாலா அன்னையை நோக்கினாள்.
“பாட்டி கேட்கறாங்கள்ல நீ பாடு” என்று சம்யுக்தா சொல்ல,
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா….
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!
தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?
குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா….
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா