Advertisement

கார் பாதை மாறி செல்ல ஆரம்பித்தது. திருவனந்தபுரம் செல்லவில்லை.
“கல்யாண பொண்ணுக்கு மேக்கப் போட்டவங்க உனக்கும் போட்டாங்களா?” அவளைப் பார்க்க, அவளோ கண்மூடி அமர்ந்திருந்தாள். ஊரில் உள்ள எல்லா தெய்வங்களிடமும் மாமாவுக்காக வேண்டுதல் செய்து கொண்டிருந்தாள்.
கண்களை மெதுவாய் திறந்தவள், அவன் கேள்வி புரியாமல் அவனை பார்க்க, “நீ இந்த பட்டு சாரி, மல்லி பூ, மேக்கப்புனு ரொம்ப அழகா, கல்யாண பொண்ணு மாதிரியே இருக்க..”
என்ன சொல்லவேண்டும்? “த்..தா..ங்க்ஸ்..?”
“உன் கைல அந்த மருதாணி… ரொம்ப அழகா இருக்கு.. வாசம் பிடிக்கணும்னு தொணுது!”
அவனை விழி விரித்து அவள் பார்க்க, அவனும் அவளைப் புன்னகையாய் பார்த்தான். மிகவும் நிதானமாய் இருந்தான். அப்பொழுதுதான் கவனித்தாள் அவனும் பட்டு வேட்டி சட்டையில் இருந்ததை. 
இதயம் விட்ட ஓட்டத்தை மீண்டும் பிடிக்க, “மாமா?”
“அப்பாக்கு என்ன? நல்லா தானே இருக்காங்க?”
“வீட்டுக்குப் போலியா?”
“இல்ல.. நமக்கு கல்யாணம்.. கோவில் போயிட்டு இருக்கோம்!”
“ஏய்.. என்ன உளர்ர?”
“நான் உன் கிட்ட பேசணும் சுதா!”
“எ..ன்ன?” எச்சில் விழுங்கி கேட்க
“முதல்ல என்னை மேரேஜ் பண்ணிக்க சம்மதிச்ச தானே?”
“ம்ம்”
“அப்புறம்.. என் பிஹேவியர் சரி இல்லனு.. வேண்டாம் சொல்லிட்ட?”
“ம்ம்”
“அன்னைக்கு உன் கைய பிடிச்சு இழுத்ததுக்கு, ஒருத்தன் என் மேல கை வச்சுட்டான்..”
“ம்ம்”
“அவன் தானே உன்னோட இப்போதைய பாய்-ஃப்ரெண்ட்?”
“இப்போ எதுக்கு அவரைப் பத்தி பேசர?”
அவளுக்குப் பதில் சொல்லும் எண்ணம் இல்லை போலும். அவன் சந்தேகத்தை தொடர்ந்தான், “நீ அவன மேரேஜ் பண்ணனும்னு நினைக்குரியா?”
“ஆமா.. கண்ணனை நான் விரும்புறேன். அவரைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்”
“இல்ல சுதா.. இனி மேல் நீ அவன மறந்திடு. நீ என்னை பொறுக்கினு சொன்னியா? பொண்ணுங்கள ஒரு டிஸ்டென்ஸ்-ல வச்சிருக்கேன். நான் போதைல இருந்த நால தானே ஒருத்தன் என்னை அடிச்சான்.. நான் குடிக்கரத நிறுத்திட்டேன். இப்போ என் கிட்ட உனக்குக் கண்டு பிடிக்க எந்த குத்தமும் இல்ல.”
“அதுக்கென்ன இப்போ? நீ நல்லவனாகிட்டனு அவார்டுக்கு ஏற்பாடு பண்ணவா? நீ பண்ணின காரியத்துக்கு உன்ன மன்னிச்சு.. உன்னெல்லாம் மனுஷனு பேசரதே ஜாஸ்த்தி!”
“நீ என்னை ரொம்ப அசிங்கமா பேசிட்டியா? அதனால ஒரு வெறி.. உன்ன காயப் படுத்தணும்னு.. போதையிலேயே இருக்கவே.. வெறி அடங்கவே இல்ல. அதனால் தான் மைல்டா உன்ன ட்ரக் பண்ணினேன். உன்ன கண்ட மாதிரி ஃபோட்டோ எடுத்தேன்.. பாக்கரவங்களுக்கு நீயே விரும்பி என் கூட படுத்த மாதிரி சின்ன விடியோ எடுத்தேன்.. அப்போ எல்லாம் நான் நானாவே இல்ல.. போதைல சுயமா யோசிக்க முடியல!”
“என்ன சொல்ர? நான் உன்ன விரும்பியா?” அவள் தான் எல்லாவற்றையும் பார்க்கவில்லையே.. கண்கள் அதிர்ச்சியைக் காட்ட
‘அத தான் கண்ணன் பார்த்தாரா? என் மேல அவர் சந்தேகமே படலியே?’ மனம் இன்னும் அடிபட
“சாரி”
“இந்த குடும்பதில பிறந்த உன்னால எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடிஞ்சுது? ச்ச.. என்ன மனுஷன் நீ?”
“உனக்கு புரியல சுதா.. போதைல இருக்கவனுக்கு மூளை சுயமா வேலை செய்யாது. நான் விதி விலக்கில்ல! சொன்னேனே ஒரு வெறி.. அத குணா அடங்கவே விடல.. பழி உணர்ச்சிய தூண்டி விட்டுடே இருந்தான்.. நானும் யோசிக்கவே இல்ல! சாரி!
அவன் உன்ன நாசம் பண்ணிடத் தான் சொன்னான்… அப்படி பழி வாங்கினாதான் நீ என்னை மறக்க மாட்டேனு! நானும் அதுக்கு தான் மருந்து கொடுத்தேன்.. ஆனா அந்த போதைலையும் என்னால அது மட்டும் ஏனோ முடியல. 
தூங்கர பொண்ணுகிட்ட வீரத்தை காட்டுர அளவு நான் மோசமில்லை! சோ அன்னைக்கு உன் கிட்டச் சொன்னது பொய். நீ மயக்கமா இருக்கும்போது உன்ன நான் எதுவும் பண்ணலை. நீ எழுந்ததும், உன்னையே நீ அருவருப்பா பார்க்கனும்னு தான் உன் கிட்ட அப்பிடி பிஹேவ் பண்ணினேன். அப்பா வராட்டியும் நான் உன்ன கண்டிப்பா ரேப் எல்லாம் பண்ணியிருக்க மாட்டேன்.”
அவளைப் பார்க்க அவள் ஏதோ போல் அமர்ந்திருந்தாள். அந்த பேச்சு ரசிக்கவில்லை. இதெல்லாம் குழி நோண்டி புதைத்த கசடு! மீண்டும் கிளரப் பிடிக்கவில்லை. ஆனாலும் அவன் பேச்சு வலி தரவில்லை. கடைசியாக சொன்ன விஷயம் ஒரு நிம்மதியை தந்தது.. இருந்தாலும் எங்கோ இடிக்க..
“அப்போ நீ சொன்னியே எனக்கு.. எனக்கு அன்னைக்கு..” அவள் திக்க
“ஓ.. அதுவா.. அந்த ஸ்பாட்டிங் விஷயமா? அன்னைக்கு காலைல அம்மா உன்ன கோவிலுக்கு கூப்பிடும் போது நீ அம்மாட்ட சொன்னத கேட்டேன். அத நான் யூஸ் பண்ணிகிட்டேன். நீ நினைக்கர அளவுக்கெல்லாம் நான் பொறுக்கி இல்ல சுதா! பொண்ணுகளோட ஒரு அளவுக்கு தான் போவேன்.. இன்னும் ஒரு லிப் லாக் கூட செஞ்சதில்ல.. நம்பு! எனக்கு அவ்வளவு இன்டிமசி கூட அடுத்தவளோட பிடிக்காது.. அப்படி இருக்கும் போது அந்த மாதரி நேரத்தில உன்ன டிஸ்டர்ப் பண்ணுவேனா சொல்லு?”
அவளுக்கு நிம்மதியாய் இருந்தாலும் எத்தனை மன உளச்சல் இவனால்.. கோவமாய் வந்தது. “ஆமா நீ ரொம்ப நல்லவன் தான்.. ஊர்ல சொல்லிகிட்டாங்க!”
“உன் வாய்.. எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு.. அது தான் நான் உன்ன திரும்பி பாக்க வச்சுது! அதுக்காக எப்போவும், எதுக்கும் என்கிட்ட வாய் அடிக்க கூடாது.. எனக்கு பிடிக்காது..”
“ஏன் இந்த கஷ்டம் உனக்கு.. கார நிறுத்து.. நான் உன் முகத்துலயே முழிக்கல..”
அவள் பேசுவதை அவன் ஒரு பொருட்டாய் மதித்தால் தானே.. சொல்லணும்னு நினைச்சேன்.. உன் உதடு.. இன்னைக்கு ரொம்பவே அழகா இருக்கு..”
முகத்தை அவள் திருப்பி கொள்ள
“நான் எதுக்கு இத எல்லாம் சொல்றேன் தெரியுமா?”
“உனக்கு நேரம் போகல?” வாய்குள் முணுமுணுத்தாள்.
“ஜோக்கா? நான் ரொம்ப சீரியசா பேசிட்டு இருக்கேன் சுதா! வாழ்கையை ஒன்னா துடங்க போறோம். என்னை நீ நல்லா தெரிஞ்சுக்கனும் அதுக்குத் தான். எந்த தப்பான அபிப்பிராயமும் நம்ம உறவை கெடுத்திடும்.
உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! காதல் வரல.. காதல் வர வரைக்கும் காத்திட்டு இருக்க நேரம் இல்ல சுதா! ஆனா உன்னை மேரேஜ் பண்ணவேண்டிய அவசியம் இருக்கு எனக்கு. உடனே இல்லாட்டியும் கண்டிப்பா உன்னை என் மனசார விரும்ப ஆரம்பிச்சுடுவேன். நீயும் ட்ரை பண்ணவேண்டி இருக்கும்”
“நீ கொஞ்சம் நேரம் உன் கனவுல இருந்து வெளில வா தீபக்… என் மேரேஜ் கண்ணனோட மட்டும் தான். சும்மா உளரிட்டே வராத! எரிச்சலா வருது!”
“சுதா உனக்கு விஷயத்தோட சிரியஸ்னஸ் புரியல! நான் உன்ன கடத்த போறேனு சொன்னதும் மண்டையை மண்டைய ஆட்டின குணா, உன்னைக் கல்யாணம் செய்ய போறேனு தெரிஞ்சதும் சண்ட போட்டான். அவனுக்கு உன் மேல ஒரு எண்ணம். நான் இல்லேணா.. உன்ன அவன் நாசம் பண்ணிடுவான்!”
“என்னை நான் பார்த்துக்கறேன்.. எனக்காக எல்லாம் நீ ஒன்னும் தியாகம் பண்ண வேண்டாம்.. இந்த நினைப்பை விட்டுடு.. நல்லா தானே இருந்த ஏன் தீடீர்னு உனக்கு பைத்தியம் பிடிச்சுது?”
“இந்த திடீர் கல்யாணத்துக்கு நீயும் அஷோக்கும் தான் காரணம்! எதிரி யார்னு தெரியாம கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. அது மிஸ்டர்.அஷோக் கண்ணனா போனது என் துர்ப்பாக்கியம்.
இதெல்லாம் நடக்கரதுக்கு முன்ன வரைக்கும் என்னோட ரோல் மாடல் அவர் தான்! சின்ன வயசுல அவர் சாதனை ரொம்ப பெருசு. உன் ஆளு தான் அவர்னு எனக்கு இப்போ தான் கொஞ்ச வாரம் முன்ன தெரிஞ்சுது. 
என் மொத்த பிஸினசை படுக்க வச்சுட்டான். எத்தன கோடி லாஸ் தெரியுமா? மொத்தம் முன்னூறு கோடி! என்னை எழுந்திரிக்கவே முடியாத அளவு சாச்சுட்டான்.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எங்க போனாங்கனு தெரியல. தனியாகிட்ட ஃபீலிங்க்! ஆனலும் பரவால நான் எழுந்திடுவேன்.. கொஞ்சம் நிறைய பணம் வேணும்.. இதுக்கு நடுவுல அப்பாக்கு உடம்பு சரி இல்லாம போகவும் சொத்தில பாதிய உனக்கும், அடுத்த பாதிய எனக்கு வாரிசு வந்த பிறகு எனக்கும்னு எழுதி வச்சிருக்கார். அங்க தான் நீ வர!”
“பணத்துக்காகவா? வேண்டாம் தீபக்.. உனக்கு எவ்வளவு வேணுமோ அவ்வளவு பணமும் நான் தரேன்.. என் சொத்து பூராவுமே உனக்கு தரேன்.. எனக்கு அதுல ஒன்னுமே வேண்டாம்”
“அது சரி படாது.. அமௌண்ட் ரொம்ப பெருசா.. என்னைக்குனாலும் பிரச்சினை தான். எனக்கு உன் அப்பா சொத்து கொஞ்சமும் என் அப்பாதும் வேணும், நான் திரும்பவும் எழுந்து நிக்க! நீயும் நானும் மாரேஜ் பண்ணிக்கிட்டா.. லீகலாகவே உன்னது எல்லாம் என்னது. பிஸினஸ் நல்லா வந்ததும் உன்கிட்ட எடுத்ததுக்கு மேலயே தருவேன். நீ எனக்குன்னு ஆகிட்டா.. அந்த அஷோக் என் வழில வர மாட்டான். அவன் என்னை பாடா படுத்தினான்.. இப்போ அவனுக்கு பிடிச்சதை நான் எனதாக்கிட்டா.. அவனும் படுவனான்ல.. அது.. அந்த சந்தோஷம், எனக்கு வேணும்! நான் என் கனவ தொலச்ச மாதரி அவன் உன்ன தொலைக்கணும்! அவன் உன் நினைப்பில உருகி உருகி சாகணும்! சாரி சுதா.. அவன மறந்திட்டு என்னை லவ் பண்ண ஆரம்பி.”
“அவர மறந்திட்டு உன்னையா? என்னைச் சிரிக்க வைக்காத!”
“நான் உனக்கு நல்லது பண்றேன் சுதா. எப்படின்னு கேக்கறியா? நீ கூர்க் வந்த போது குணாவ அடிச்சியா? உன் வாயும் கையும் சரி இல்ல..
எப்படி உன் வாய், என்னை உன் பக்கம் இழுத்ததோ.. அதே மாதரி உன் கை.. அவனை உன் பக்கம் இழுத்திருக்கு! அப்போவே அவன் ரேடார்ல நீ வந்துட்ட.. அவன் ஒரு பொண்ண மார்க் பண்ணினா விட மாட்டான் அது ஊருக்கே தெரியும். ஆனா அவன் உன்ன மார்க் பண்ணினானு எனக்கு அப்போ தெரியலை. உன்ன அடயனும்னு தான் அவன் கண்ட ஐடியாவும் எனக்குக் கொடுத்தான்.. ஆனா நானும் உன்னை ஒன்னும் பண்ணல.. அவன் கேட்ட போட்டோஸ்ச அவன்ட்ட கொடுக்கவும் இல்ல.
அவன் நிறையப் பணம் இன்வெஸ்ட் பண்ணியிருந்தான் எங்க பிஸினஸ்ல.. அஷோக்கால.. எல்லாம் நாசம். குணா பார்ட்னர்ஷிப்ல இருந்து விலகிட்டான். அவனுக்கு நான் இருநூறு கோடி திருப்பி தரணும். 
இதுக்கு நடுவுல இன்னும் பல கோடி தந்தான்.. அது கணக்குல கூட வரல! இப்போ நான் உன்ன அவன்ட்ட குடுத்தா அந்த பல கோடி வேண்டாம்னு சொல்றான். எனக்கு புரியலை உன்ட்ட அப்படி என்னத்த கண்டான்னு.. உன்ன அவனுக்குத் தெரியக் கூட தெரியாது! ஊர ஏமாத்தி அவன் அப்பன் சேத்த பணம் தானே.. அது தான் தானம் பண்றான். 
இல்ல.. எனக்கு கொஞ்சத்தை விட்டு கொடுத்துட்டு உன்னது பூரா அவன் எடுத்துக்க நினைச்சிருக்கலாம். அத விடு..  அவன் உன்கிட்ட எதை வேணும்னாலும் காணட்டும்.. அதைப் பத்தி எனக்குக் கவல இல்ல.
அத்தன பணத்தையும் திருப்பி தரேன்.. என் வீட்டு பொண்ண கூட்டி குடுக்க மாட்டேனு சொல்லிட்டேன்.. இப்போதைக்கு என்னை தவிற உன்ன அவன்ட்ட இருந்து யாரும் காப்பாத்த முடியாது சுதா.. யார் நடுவில வந்தாலும் அவங்களை இல்லாம பண்ணிடுவான். நான்கரனால மட்டும் தான் இன்னும் உன் கிட்ட கூட அவன் வரலை! அவனுக்குப் பல நல்லது செஞ்சிருக்கேன்.. அவன் எனக்கு நிறைய கடன் பட்டிருக்கான். நீ என்னை தவற வேற யார் கூடப் போனாலும் அவன் கதை முடிஞ்சுது.. நினைவில வச்சிக்கோ.. நான் கட்டுர தாலி தான் உன்ன சுமங்கலியா மானத்தோட வச்சுக்கும்!”
“உன் கனவில கூட நான் உனக்கு மனைவியா வர மாட்டேன்!”
“திரும்பவும் ஆரம்பிக்காத! என் ஈகோவ சீண்டாத சுதா.. பாக்க தானே போறோம்.. நீ வொரி பண்ணாத.. நான் சத்தியமா உன்னைக் கொடுமைப் படுத்த இந்த மேரேஜ் அரேஞ்ச் பண்ணல.. எனக்கு உன்ன பிடிச்சு தான் பண்றேன்.. இந்த கொஞ்ச நாளா உன்ன பார்க்கத் தானே செய்யறேன். நீ அப்பாவ கவனிச்சுகரது, அம்மாகூட செல்லம் கொஞ்சரது.. பாக்கவே அழகா இருந்தது. நீ இருக்க இடத்தில எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. எனக்கும் அந்த மாதிரி நல்ல பொண்ணு தான் வேணும்னு தோணிச்சு.
சீக்கிரம் விரும்ப ஆரம்பிச்சிடு.. உன்ன சந்தோஷமா வச்சுப்பேன். அப்பாக்கு பேர பசங்க பெத்து தரதா சொன்னியே.. நான் ஹெல்ப் பண்றேன். உனக்கு தான் உன் அத்த மாமானா உயிராச்சே.. அவங்க கூடவே இருக்கலாம். இந்த ஒரு கல்யாணத்துல எத்தனை பேருக்கு லாபம் பாரு”
“லாபம் பார்த்து செய்யரது கல்யாணம் இல்ல.. தீபக்! அது பேர் பிஸினஸ். நீ உன்னையே கன்ஃபியூஸ் பண்ணிக்காத. நான் உனக்குப் பணம் தரேன். முன்னூறும் நானே தரேன். கண்ணன் கண்டிப்பா உன் பக்கமே வர மாட்டார். கண்ணன் கண்டிப்பா எனக்கும் அத்த மாமாக்கும் நடுவில வரவே மாட்டார். எங்க உறவு எப்போவும் நல்ல விதமா இருக்கும். குணா பத்தி நீ ஒரி பண்ணாதா.. அவர் பார்த்துபார்.”
“நீ அவன பத்தி பேசரத நிருத்தி!” முதல் முறையாய் சத்தத்தை உயர்த்த, சுதாவிற்குச் சப்த நாடியும் ஒடுங்கியது.
‘இவன் கண்டிப்பா என்னை விட மாட்டான்!’ ஓடிக்கொண்டிருந்த கார் கதவைத் திறக்க நினைத்துத் தள்ள அது திறக்கவில்லை.
“சைல்டு லாக் போட்டிருக்கேன்.. திறக்காது.”
அவனைப் பார்த்துக் கொண்டே, “எப்படியும் திறந்து தானே ஆகணும்!” என்றாள் முறைப்பாய்.
முகத்தில் புன்னகை தவழ, “கொஞ்ச நேரம் சும்மா வா! கத்தி கத்தி தொண்டை வலிக்க போகுது.. இந்தா தண்ணிய குடிச்சுட்டு வேடிக்கை பார்த்துட்டே வா.. வெளில எவ்வளவு அழகா இருக்குப் பார்..”
நீட்டின தண்ணீரைப் பிடுங்கி வைத்துக் கொண்டவள், அடுத்து என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தாள்.
தண்ணீர் தொண்டையில் இறங்க.. அதோடே இறங்கியது அதிலிருந்த வஸ்துவும்! யோசிக்க ஆரம்பித்தாள் கண்களை மூடி.. நித்திரையில்!!
மணப்பெண் போல தன்னை சுதா அலங்கரித்தது இவனுக்கு மனைவி ஆக தானா? 

Advertisement