Advertisement

எபிலாக்….
ஐந்து வருடம் கடந்த நிலையில்…
ஜெர்மனியில் உதயேந்திரன் தன் அலுவகத்தில்  தன்  முன் இருந்த கணினியை காட்டி அவனின் பி.ஏ எலிசா ஏதோ சொல்ல…
அதற்க்கு மாற்று கருத்தாய் உதயேந்திரன் ஏதோ சொல்லி   தீவிரமாக  விவாதித்துக் கொண்டு இருக்கும் சமயத்தில், உதயேந்திரனின்  கைய் பேசியின்  அழைப்பாய்…
“கம்பத்து பொண்ணு
 கம்பத்து பொண்ணு 
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சுராளி போல
புழுதி பறக்க தாக்குற 
என்ற பாடல் இசையிலேயே… அழைத்தது  என்று தெரிந்தமையால், கைய் பேசியை பார்க்காது கூட அதை அணைத்தவன்…
எலிசாவிடம்… “நெக்ஸ்ட்…” என்று கணினியை பார்த்து கேட்டவனுக்கு, பதில் ஒன்றும் வராது போகவே நிமிர்ந்து எலிசாவை பார்த்தான்.
எலிசாவோ அணைக்கப்பட்ட தன் கைய் பேசியையே பார்த்திருப்பதை பார்த்து…. “மிஸ் எலிசா லுக் அட் திஸ்.” என்று கணினியை காட்டி சொல்லவும்…
“சாரி சர்.சாரி சர்.” என்று மன்னிப்பு கேட்டவள் தன் வேலையை முடித்து விட்டு தன் அறையை விட்டு வெளியேறியதும்…
இந்த பாட்டை போட்டு போட்டு நம்ம மானத்தை வாங்குவதே இவளுக்கு பொழப்ப போச்சி. இந்த பாட்டை கேட்டாளே இந்த சப்ப மூக்கு எலிசா என்று நினைத்தவன்…சீ இந்த கிருஷ்ணாவால் எனக்கும் எலிசா என்றாலே…கூடவே சப்ப மூக்குன்னு வந்துடுது. என்று தன் மனையாளை மனதில் திட்டிய வாரே…
அணைக்கப்பட்ட தன் பேசியில் இருந்து கம்பத்து பொண்ணுக்கு அழைப்பை விடுத்தான்.
அந்த பக்கத்தில் அழைப்பை ஏற்ற உடன் உதயேந்திரன்… “ஏய்  பட்டிகாடு. நான் மாத்த மாத்த  நீ ஏன்டி என் போன்ல காலர் ட்யூனை   அந்த பாட்டையே போடுற…” என்று திட்டுக்கிறேன் என்ற  பெயரில்  உதயேந்திரன்  தன் மனையாளை  கொஞ்சிக் கொண்டு இருந்தான்.
அவள் அழைப்பை ஏற்காது அணைத்ததிற்க்கு,  தான் அழைத்ததும், அந்த பக்கத்தில் இருந்து  வந்து விழும் சர மாரியாக  திட்டுக்களில் இருந்து தப்பிக்கவே வேணி தன் திட்டை ஆராம்பிப்பதற்க்குள் அவன் திட்டி விடுவான்.
முதலில் வேணி அவன் திட்டுவதற்க்கு ஏற்றவாறு  பதில் அளித்தவள்,  தன் அழைப்பை அவன் ஏன்  ஏற்கவில்லை என்பதையே மறந்தவளாய் பேசியை வைத்து விடுவாள்.
அதே டெக்னிக்கை   உதயேந்திரன் இன்றும் பின் பற்ற…  ஆனால் எப்போதும் இல்லாது அவன் பேச்சை காதில் வாங்கதவளாய்…
“எதுக்கு என் அழைப்பை கட் செஞ்சிங்க…?” என்று  தன் காரியமே பெரிது என்பது போல் கேட்டாள்.
“வேல டி. அது தான் உன்னை கட் செஞ்சேன். அந்த எலிசா வேற சமயத்துக்கு குழப்பிட்டு இருக்கா” என்று கூடுதல் தகவலாய் உதயேந்திரன் சொல்லி முடித்த நொடி…
அந்த பக்கத்தில் இருந்து… “ஆ என்னை கட் செய்வீங்க. ஏன் செய்ய மாட்டிங்க. போங்க போங்க அந்த சப்ப மூக்கு எலிசா கிட்டயே பேசுங்க. நான் எல்லாம் உங்களுக்கு சரிப்பட்டு  வர மாட்டேன்.” என்று வேணி சொல்லிக் கொண்டு தன் பேசியை அணைக்கும் வேளயில்…
உதயேந்திரன்… “இப்போ என்ன ராஜா  ராணி படம் பார்த்தியா…?” சம்மபந்தமே இல்லாது கணவனின் பேச்சில்…
“ஆமாம் இப்போ என்ன அதுக்கு…?” என்று சிடு சிடுப்பாய் கிருஷ்ணவேணி  கேட்டாள்.
“உன்னை சும்மா வீட்ல விட்டு வெச்சதுக்கு, கண்ட படத்தை பார்த்து இப்படி தான் கேள்வி கேட்ப…மரியாதையா நாளையில் இருந்து நீயும் என்  கூட ஆபிசுக்கு வா.” 
திருமணமாகி ஜெர்மனி வந்த நாளில் இருந்து… “கிருஷ்ணா  படிச்ச படிப்பை வேஸ்ட் பண்ணாதே…நம்ம கம்பெனிக்கு வா. வேலை கத்துப்ப…எனக்கும் உபயோகமா இருக்கும்.” என்பதை இது போல் பல சமயத்தில் பலவிதமாய் உதயேந்திரன் வேணியிடம்  சொல்லி விட்டான்.
அதற்க்கு பதிலாய் “நான் எங்கே என் படிப்பை வேஸ்ட் செய்யிறேன். பக்கத்துல இருக்க பசங்களுக்கு தமிழ் சொல்லி கொடுத்துட்டு தானே இருக்கேன்.”
“ஆமா அம்மா சொல்லி கொடுக்குற  உன் தமிழால் ஒரு பைசா லாபம் இல்லை.”
என்ன தான் உதயேந்திரன் வேணியின் காதலால் தன்னை மாற்றிக் கொண்டாலும்,  இது போல் பணக்கணக்கு   விசயத்தில் நான் பரமேஸ்வரரின் மகன் என்பதை  நிரூபிப்பான்.
“ஓ  அப்போ என்னால உங்களுக்கு எந்த லாபமும் இல்ல…அப்படி தானே…” என்று தன் முந்தியை இடுப்பில் சொருகிய வாறே சண்டை இடுவது போல் அவனை நெருங்கி கேட்டாள்.
“உன்னால எனக்கு லாபம் இல்லையா…?எந்த மடையன்டி அப்படி சொன்னான். தேவதை போல அந்த நிலவே நமக்கு மகளா  பிறந்து இருக்க நம்ம வெண்ணிலா இருக்க உன்னை நான் உபயோகம் இல்லேன்னு சொல்வேன்னா…
என்ன அப்போ அப்போ நையிட்ல தான் கொஞ்சம்  முரண்டு பிடிக்கிற…நானும் என்ன தான் ட்ரையிங் கொடுத்தாலும், இந்த  மாமனுக்கு  ஈடு கொடுக்க மாட்டேங்குற… அது உன் மேல தப்பு இல்ல உன் ஊர் தப்பு.”
அது என்னவோ உதயேந்திரனுக்கு ஒரு நாளில் ஒரு தடவையாவது வேணியின் ஊரை சொல்லாது இருக்க மாட்டான்.  வேணி எது சொன்னாluம் பொறுத்துக் கொள்வாள்.
தன் ஊரை பற்றி ஏதாவது சொன்னா அவ்வளவு தான்  மூக்கு விடைக்க…முந்தியை சொருகிய வாறு கோபத்துடன் தன்னை நெருங்கும் போது அருகில் கோபத்தால் சிவந்த அவள் முகத்தை பார்க்க அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்.
என்ன எல்லோருக்கும் வெட்கத்தால்  சிவந்த முகத்தை பார்க்க தானே பிடிக்கும் என்பார்கள். இவன் என்ன கோபத்தால் சிவந்த முகத்தை பார்க்க  பிடிக்கிறது என்கிறானே …இது தானே உங்கள் கேள்வி என்றால்…
அதற்க்கு பதிலாய் உதயேந்தினின் மிக பெரிய புலம்பலை நீங்க கேட்க வேண்டி இருக்கும். உங்களுக்கு நேரம் இருந்தால் இதோ அவனின் புலம்பல்களில் சில…
திருமணம் ஆன புதியதில் …இந்த ஊர் ஜெர்மனி வந்த அன்று, ஒரு வணிக வளாகத்தில் வெளியில் நிற்க வைத்திருந்த பொம்மை அணிந்திருந்த ஆடையை பார்த்து  அதன் அழகில் அங்கயே நின்று விட்டான்.
என்ன என்று தெரியாது அந்த உடை அவனை கவர..யாருக்கு ஏன் தெரியாது அதை வாங்கியும் வந்து விட்டான்.
அந்த ஆடை வாங்கிய போது அவன் ஒரு பெண்ணுடன் லிவிங் டூ கெதரில் தான் இருந்தான். ஏனோ அந்த உடையை அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவனுக்கு இல்லை.
 ஜெர்மனி வந்த அன்று தன் கப்போடை  திறந்ததும், அவன் கண்ணில் பட்டது அவன் வாங்கிய அந்த உடை. அப்போதே அந்த உடை தன் மனைவியின் உடலில் தழுவி பார்க்க ஆசை ஏழ…
“குட்டிம்மா இது போட்டு காமிக்கிறியா…”  
அன்று  தான்  அவர்கள் ஜெர்மனிக்கு வந்தது.  வருட கணக்கில் பேச்சிலர் வாழ்க்கை நடத்திக் கொண்டு இருந்தவனின் வீடு எப்படி இருக்கும்…
என்ன தான் வேலையாட்கள் வீட்டை சுத்தம் செய்த போதும், வேணிக்கு அவ்வீட்டை பார்த்ததும் இன்று முழுவதும் நமக்கு வேலை பென்ட் கழன்டி விடும் போலவே…என்று நினைத்து ஒரு நிமிடம் கூட நேரம் கடத்தாது தன் வேலையை ஆராம்பித்து விட்டாள்.
தன் கணவன் கையில் என்ன உடை இருக்கிறது  என்று  கூட பாராது… “நையிட் போட்டு காமிக்கிறேன்ங்க…இப்போ  என்னை தொந்தரவு கொடுக்காதிங்க.” என்ற மனைவி சொல்லே மந்திரம் என்பது போல் உதயேந்திரன் இரவு வரையுமே  அமைதி காத்தான்.
படுக்கைக்கு மனைவி வந்ததும் அவள் கையில் அந்த உடையை கொடுத்து “போட்டு காமிடா பட்டு.” நேரத்துக்கு ஏற்றவாறு இப்படி தான் நம்ம உதயின் வாயில் இருந்து அம்மூ, பட்டு, குட்டி, என்று ஏராளமாக ஆசை பெயர்கள் அவன் வாயில் இருந்து கொட்டும்.
உதயேந்திரன் கையில் கொடுக்கும் போதே அந்த சல்லடை துணியில் என்ன இது என்பது போல்… பார்த்தவளுக்கு அது இரவு உடை…இதையா போடு என்றான் என்பது போல், எப்போதும் போல் கோபம் வந்தாள் செய்யும் செயலை செய்தாளே தவிர…
அவன் என்ன தான் கெஞ்சியும் கொஞ்சியும் கேட்டு கூட … “இது போல் உடை எல்லாம் என்னை போட சொல்லாதிங்க.” என்று திட்ட வட்டமாக வேணி மறுத்தி விட்டாள்.
“ஏன்டி நான் உன் புருஷன் தானேடி…என் எதிரில் என்ன உனக்கு வெட்கம்…?” என்று  கேட்டவனுக்கு தெரியவில்லை.
எப்போதும் ஒரு சிலதில் தன் மனைவி தனக்கு கொடுக்க போவது இல்லை என்பதை. கணவன் என்றாலும் ஒரு  சிலதில் வேணி பிடிவதாக தான்  இருந்தாள்.
இரவுகளின் குளிர்ச்சியில் அதின் குளிரை உதயன்  அனுபவிப்பின் ஆழத்தில் செல்லும்  போது, வேணியின் முகம்  பார்க்க ஆசை படுவான்.
அந்த ஆசை இன்று வரை அவனுக்கு நிறைவேறாத ஆசையாகவே இருந்து விட்டது. அவன் பிடிவாதமாய்… “எனக்கு லைட் வேணும்.” என்று சொன்னால்…
“அப்போ நான் வேண்டாமா…” என்று வாய் சொல்ல கைய் பக்கத்தில் இருக்கும் தன் ஆடையை தேட தொடங்கும்…
பின் என்ன நடக்கும்…? அவளின் கையில் ஆடையை கிடைக்க விடாது செய்து விட்டு, அவளிடன் தன் தேடலை  தொடங்குவான்.
இதோ அதோ என்று அவனின் திருமணம் முடிந்து ஐந்து வருடம் கடந்து விட்ட நிலையிலும், அவன்  ஆசை நிறைவேறாது இருக்க…
மனைவியின் வெட்க முகத்தை தான் நம்மால் பார்க்க முடியவில்லை. கோபமுகத்தையே நாம் ஆசை தீர பார்க்கலாம் என்று நினைத்து தான் அவ்வப்போது வேணியின் ஊரை சொல்லி கோபப்படுத்துவான்.
இதோ இப்போது செய்வது போல் சேலையை தன் இடுப்பில் சொருகிக் கொண்டு கிட்ட வரும் போது அவளின் சிவந்த முகம் அவனுக்கு ஒரு போதையை கூட்டும் என்றால், அந்த இடை ஒரு குழந்தைக்கு தாய் ஆனவளா…என்று அந்த நிலையிலும் யோசிக்க வைக்கும் அந்த சிற்றிடையில் தன் கை  கோர்த்து தன் அருகில் இணைக்கும் போது கோபம் போல் இருக்கும் அவள் முகத்தில் தோன்றி மறையும் அந்த சிறு வெட்கம்.
அதை பார்க்க அவன் என்ன வேண்டும் என்றாலும் செய்வான்.  அவள் ஊரை சொல்லும் போது அவள் தன் குடும்பத்தை கொஞ்சம் டேமஜ் செய்வா…இருக்கட்டும் என் மனைவி தானே  செய்யிறா…இப்போ அவளும் என் குடும்பம் தானே…அதனால் அந்த திட்டும் அவளையும் தானே இப்படி அவனுக்கு அவனே ஆயிரம் சமாதானம் செய்துக் கொண்டு தான் அவளின் அந்த  கோபம் கலந்த தாபமுகத்தை பார்க்க முடிகிறது.
அதே போல் இன்றும் அவளின் ஊரை பற்றி சொல்ல…பேசியில் அந்த பக்கம் இருந்த வேணி கண்ட மேனிக்கு திட்டி  தீர்த்து விட்டு…
“வீட்டுக்கு வாங்க வெச்சிக்கிறேன்.” என்று கடைசி அஸ்திரத்தை வேணி உபயோகித்தாள்.
கடைசியாக உபயோகித்த அந்த அஸ்த்திரன் உதயேந்திரனிடம் நன்றாகவே வேலை செய்தது.
“குட்டிம்மா நான் பாவம் இல்லையா…நான் உன் மாமன் டி.” என்று  கொஞ்சலில் இருந்து கெஞ்சலுக்கு இறங்கி வந்து தன் மனைவியை சமாதனப்பேசி முடித்த பின்னே அவன்  தன் அலுவலக வேலையை தொடங்கினான்.
காரணம் இல்லாது உதயேந்திரன் தன் அலிவலக வேலையையும் விட்டு மனைவியை சமாதானம் படுத்தவில்லை.அனைத்து மனைவி மார்களும் கணவனிடம்…”உங்கல வெச்சிக்கிறேன்.” என்று சொன்னதும் கணவன் மார்களும்…”அதுக்கு தான்டி காத்து இருக்கேன்.” என்று சொல்வாங்க.
ஆனால் நம் வேணி வெச்சிக்கிறேன் என்று சொன்னால் அவள் உதயை ஒரு வாரம் வெச்சி செய்வாள். அதான் ஒரு வாரம் அவனின் படுக்கை தனி தான். அதற்க்கு என்றே அவனுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் வேணி இந்த வார்த்தை சொல்லி விட்டால், எப்பாடு பட்டாவது அவளை மலை இறக்கிய பிறகு தான் தன் வேலையை பார்ப்பான்.அவனுக்கு சம்சார சாகரம்  தான் முக்கியம்.
அன்று இரவு அவன் தன் மனைவி குழந்தையோடு ஒரு பார்ட்டிக்கு செல்ல வேண்டும். அதை நினைத்து அவன் இப்போதையில் இருந்தே கவலையில் ஆழ்ந்தான்.
முதலில் எல்லாம் பேச்சிலராய் இருக்கும் போது, இது போல் பார்ட்டி என்றால் எவ்வளவு என்ஜாய் செய்வான். ஆனால்  இப்போது எல்லாம்… உதயேந்திரனின் கவலைக்கு காரணம் இன்று இரவே நீங்க பார்க்கலாம்.
சான்  உதயேந்திரன் தொழில் தொடர்பான   ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் பிசினஸ் தான் செய்கிறான். அவன் மகனுக்கு தான் இன்று ஐந்தாவது பிறந்த நாள். அதற்க்கு தான் குடும்பமாய் வந்து இருக்கிறார்கள்.
தன் மனைவி எப்போதும்  போல் சேலை கட்டி மிதமான ஒப்பனை தான் செய்திருந்தாள். ஆனால் அதிலேயே அங்கு இருக்கும் அனைவரையும் தூக்கி சாப்பிடுவது போல் தன் கணவன் கை பற்றி அந்த பார்ட்டி  ஹாலுக்குள் நுழைந்ததும், அனைவரின் கண்ணும் வேணியின் பக்கமே…அதுவும் குறிப்பாய் ஆண்களின் கண்கள்.
இப்போ புரியுதுங்கலா…? நம்ம உதய் பார்ட்டின்னா ஏன் கடுப்பாகுறான்னு. “பொண்டாட்டி பக்கத்துல இருக்கும் போதே இந்த பார்வை பாக்குறாங்க.” உதய் முனு முனுப்பது வேணியின் காதில் நன்றாகவே விழுந்தது. 
எதுவும் சொல்லாது ஒரு புன் சிரிப்போடு தன்னை வரவேற்றவர்களை பார்த்து வீசினாள். ஆனால் கை பிடித்து அழைத்து வந்த உதயனின் குட்டி  தேவதை … “என்னப்பா சொன்னிங்க…” என்ற மகளின் கேள்விக்கு  என்ன பதில் அளிப்பது என்று யோசிக்க…
“அது ஒன்னும் இல்லடா..அப்பாக்கு  ஸ்டோமக்கு பெயின் அதான் முடியலேன்னு சொல்றார்.” என்ற அன்னையின் பேச்சில் தன் தந்தையின் பக்கம் பார்த்து…
“ரொம்ப வலிக்குதாப்பா…?” உண்மையான அக்கறையில் மகள் கேட்ட விசாரிப்பில்..
“இல்லேடா…அப்படி எல்லாம் ரொம்ப இல்ல.” என்று தன் மகளை சமாதானப்படுத்திக் கொண்டே தன் மனைவியை உதயேந்திரன்  முறைத்து பார்த்தான்.
மனைவியோ… “அப்படியா…?”  என்பது போல் வாய் அசைக்கும்  வேளயில்…
எங்கிருந்தோ  இவர்களை பார்த்து ஓடி வந்த சான்… “மிஸஸ் கிருட்ஷட்ட வணி. எப்போ வந்திங்க நான் கவனிக்கவே இல்ல.” என்று தன் மனைவியை வரவேற்றுக் கொண்டு இருந்த தன் நண்பனை உதயேந்திரன் கொலை வெறியோடு பார்த்துக்  கொண்டு இருந்தான்.
அவ பெயரை கூட ஒழுங்கா சொல்ல தெரியல…இவன் எல்லாம் என்று பல்லை கடித்துக் கொண்டே… 
“டேய் டேய் நானும் வந்து இருக்கேன். என்  பொண்ணை தூக்கிட்டு நிக்குறேன்டா…” என்று குரல் கொடுக்கவும்  தான்  தன் பக்கம் பார்த்த சான்…
“ம் பார்த்தேன். பார்த்தேன். நாம் எப்போவும் பார்த்துக்குறோம் ஆனா உன் மிஸஸை  எப்போவோ தானே பாக்குறேன் அதான்.” தன் வழிசலை ஒரு மாதிரியாக சமாளித்து தன்னிடம் பேசியவனை மனதில் திட்டிக் கொண்டு இருந்தாலும், நாகரிகம் கருதி சிரித்த முகமாய் பேசினான்.
அவன் தொல்லை அதோடு விடவில்லை. இவன் தன் மனைவியோடு சென்றாளே அனைவரின் கண்ணும் வேணியின் பக்கம் தான் இருக்கும். இன்னும் சொல்ல போனால் அவளின் உடையிலும் ஆகட்டும், அவள் நடந்துக்  கொள்ளும் விதத்திலும் ஆகட்டும், அவ்வளவு கட்டுபாடு இருக்கும். இருந்தும் அனைவரும் அவளை பார்ப்பர்.
ஒரு காலத்தில் இவனும் அழகை ரசிக்க தான்  என்று சொன்னவன் தான். ஆனால் அந்த அழகு தன் மனைவியிடம் இருந்து மற்றவர்கள் ரசித்தால்… விளைவு பார்ட்டி முடியும் வரை மனைவியை விட்டு அங்கு இங்கு நகரமாட்டான்.
இதை அனைத்தும் ஒரு புன் சிரிப்போடு பார்த்துக் கொண்டு இடுப்பவளோ…அந்த பார்ட்டியை ஈடு பாட்டோடு கலந்துக் கொள்வாள்.
ஜெர்மனியில் தான் இப்படி என்றால் அடுத்த வாரம் இந்தியாவுக்கு, இவள் ஊரான கம்பத்துக்கு போக வேண்டும். அங்கு இவங்க எல்லோரையும் ,மீறிய ஒரு வில்லன் அவனுக்கு  என்று காத்துக் கொண்டு இருப்பான்.
அதை நினைத்தாலே ஒரு பெரும் மூச்சு அவனிடம் இருந்து வந்தது. “என்ன பவியை பத்தி நினச்சிங்கலா…?” அவனின் பெரும் மூச்சில் இருந்தே அவன் யாரை பற்றி நினைத்தான் என்று தெரிந்தவளாய் வேணி கேட்டாள்.
“ம் ஆமான்டி ஆமாம். எனக்கு மட்டும் ஊரு முழுக்க வில்லனா வந்து தொலைக்கிறாங்க.”
“நீங்க என்ன டையட் பாலோ பண்றிங்க…கொஞ்சம் என் மனைவிக்கும்  சொல்லுங்கலே…”  என்று கேட்டுக் கொண்டு இருந்தவனிடம்..
“அதை உங்க மனைவி கிட்டயே சொல்ல சொல்றேன்.” என்று சொல்லி விட்டு ஒரு வழியாக அந்த பார்ட்டியில் இருந்து தன் மனைவியை அழைத்து வந்து விட்டான்.
  
 
 
  

Advertisement