Advertisement

அத்தியாயம் –31

 

சூர்யா கல்லூரி படிப்பு முடிந்ததும் வேறு வேலை தேடாமல் தன் தந்தையுடன் சேர்ந்து அதே தொழிலில் ஈடுபட்டான். அவர்கள் பசுமை தாயகத்தை மேலும் இரண்டு இடங்களில் கிளை நிறுவி அவனே சென்று பார்த்துக் கொண்டான். ஊருக்கு செல்வதும் அவர்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் மட்டுமல்லாது ஆதியின் தோட்டத்தில் இருந்தும் அவர்களுக்கு காய்கறிகள் வந்தது.

 

அவர்கள் கடைக்கு என்று ஒரு நல்ல பெயரை அவர்கள் வாங்கி இருந்தனர். ஆதி தன்னாலான உதவிகள் அனைத்தும் செய்தான். ஒரு மிக பெரிய நட்சத்திர ஓட்டலுக்கு காய்கறிகள் மொத்தமாக கொடுக்கும் ஆர்டர் அவர்களுக்கு கிடைத்தது. மேலும் இரண்டு கிளைகளை நிறுவியவன் அதில் ஒரு கடையை பல்பொருள் அங்காடியாக மாற்றி இருந்தான்.

 

இதற்கிடையில் ஆதர்ஷாவை எப்போதாவது அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது சந்திப்பான். அப்போது அங்கு அவர்கள் பார்வை மட்டுமே பேசிக் கொள்ளும். நேத்ராவிற்கும் சின்ன காந்திமதிக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேத்ரா மூன்று மாதங்கள் கழித்து வீட்டிற்கு வந்தாள்.

 

ஆதிராவுக்கு சீமந்தம் முடித்து அவர்கள் வீட்டிற்கு செல்ல ஆதி தான் ரொம்பவும் தவித்து போனான். குழந்தைகளும் அவளுடனே செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்க ஆதிக்கு தான் வீடு வெறுத்து போனது. எப்போது அவள் வருவாள் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான். குழந்தைகள் குதூகலமாக இருந்தனர்.

 

கவின் தனக்கு தம்பி தான் வேண்டும் என்று சொல்ல கவினியோ “அதெல்லாம் முடியாது உனக்கு தான் துணையா குட்டி பையன் வீட்டில இருக்கான்ல அதுனால எனக்கு தங்கச்சி பாப்பா தான் வேணும். அம்மா நீயே சொல்லு இது தங்கச்சி பாப்பா தானே” என்றாள் அவள் ஆதிராவையும் துணைக்கழைத்து, ஆதித்தியன் சரியாக அந்த நேரம் வீட்டிற்குள் நுழைய “ஆமாம் கவினி அம்மா மாதிரியே ஒரு குட்டி பாப்பா தான் பிறக்கப் போற, கண்டிப்பா உனக்கு தங்கச்சி பாப்பா தான்” என்றான் அவன் அவளை பார்த்து கண் சிமிட்டியவாறே.

 

“நீங்களுமாங்க” என்றாள் அவள் சிரிப்புடன். கோமதி மருமகனுக்கு காபி கலந்து எடுத்து வந்து கொடுக்க சூர்யாவும் அப்போது தான் வீட்டிற்கு வந்தான். “வாங்க அத்தான் எப்படி இருக்கீங்க உங்களுக்கு எங்க வீட்டுக்கு வர்றதுக்கு இப்போ தான் வழி தெரியுதா அக்கா வந்தா தான் நீங்க வருவீங்க போல” என்று அவன் கிண்டல் அடிக்க, “நீ சொல்றதும் சரி தான் மச்சான், பார்க்க தானே போறேன், நாளைக்கு நீ என்ன செய்யப் போறேன்னு தங்கச்சி வந்தா தான் நீயும் மாமியார் வீட்டுக்கு போவ” என்று ஆதி அவன் காலை வாற “அய்யோ என்னை விட்டுடுங்க அத்தான் நான் இந்த விளையாட்டுக்கு வரலை” என்று எழுந்தான் அவன்.

 

“சரி சூர்யாவுக்கு எப்போ கல்யாணம்” என்று வேண்டுமென்றே பேச்சை ஆரம்பித்து வைத்தான் ஆதி. “அவன் நல்ல வேலைக்கு போனதுக்கு அப்புறம் தான் கல்யாணம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். கடவுள் புண்ணியத்துல அவனும் அவங்க அப்பாவோட சேர்ந்து கடையை நல்லா முன்னேற்றி அவனும் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டான். சூர்யாவுக்கு பார்க்க ஆரம்பிக்க வேண்டியது தான் மாப்பிள்ளை” என்றார் கோமதி.

 

“என்ன மச்சான் உனக்கு எப்படி பொண்ணு வேணும்” என்று அவனை பார்த்து கேட்க சூர்யாவோ பொறியில் அகப்பட்ட எலி போல் விழித்தான். ஆதி அவனை பார்த்து கண் சிமிட்ட ‘இவர் என்ன என்னை பார்த்து மட்டும் தான் கண் சிமிட்டுறார்ன்னு நினைச்சா என் தம்பியை பார்த்தும் கண் சிமிட்டி வைக்குறார். ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன நடக்குது’ என்று நினைத்துக் கொண்டே அவள் இருவரையும் நோட்டம் விட்டாள்.

 

ஆதி சொல்லிவிடவா என்று கேட்க சூர்யாவோ இப்போது வேண்டாம் என்று கையை ஆட்டிக் கொண்டிருந்தான். “என்னங்க கொஞ்சம் உள்ள வாங்களேன் உங்ககிட்ட பேசணும்” என்று ஆதிரா அழைக்க ஆதி சந்தோசமாக அவள் பின்னே சென்றான். “சொல்லு ஆரா என்ன பேசணும்” என்று பின்னாடியே வந்தவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

 

“நீங்க அடங்கவே மாட்டீங்களா” என்றாள் அவள். “நீ என் பொண்டாட்டி நான் எதுக்கு என்னை அடக்கணும்” என்றான் அவன். “சரி மாமனுக்கும் மச்சானுக்கும் நடுவுல என்ன நடக்குது” என்றாள் அவள். “அதான் நீயே சொல்லிட்டியே மாமனுக்கும் மச்சானுக்கும் நடுவுல ஆயிரம் நடக்கும் அது எதுக்கு உனக்கு” என்றான் அவன்.

 

“கேட்டா பதில் சொல்ல…” என்று ஆரம்பித்தவளுக்கு இடுப்பில் ஏதோ வலி எடுப்பது போல் இருந்தது, முகத்தை சுளித்தவள் அடுத்து வலி இல்லாது போகவே ஏதோ பிரமை என்று நினைத்துக் கொண்டாள். “பதில் சொல்லுங்க” என்றாள் அவள். அவள் பேசும் போது அவன் அந்த பக்கம் திரும்பி இருக்க அவளின் முகச்சுளிப்பை அவன் கவனிக்கவில்லை.

 

“அதெல்லாம் விடு எனக்கு இப்போ என் பொண்ணோட பேசணும்” என்று குனிந்தவன் அவள் வயிற்றில் மென்மையாக முத்தமிட குழந்தை எட்டி உதைப்பது போல் இருந்தது. “ஏய் இங்க பாரு ஆரா என் பொண்ணுக்கு நான் முத்தம் கொடுத்தா பதிலுக்கு அவளும் எனக்கு முத்தம் கொடுக்கறா” என்று சொல்லி மகிழ்ந்தான் அவன்.

 

“பொண்ணா நீங்களும் பொண்ணுனே முடிவு பண்ணிட்டீங்களா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளுக்கு மீண்டும் வலி எடுத்தது. அவள் முகம் சுளிப்பதை கண்டவன், “ஆரா என்னாச்சு என்னாச்சும்மா” என்றான் அவளை தாங்கியவாறே.

 

“இடுப்பு வலிக்கற மாதிரி இருக்குங்க” என்றாள் அவள். “நீ தான் இன்னும் ஒரு வாரம் இருக்குன்னு சொன்னியே. இரு நான் அத்தையை கூட்டிட்டு வர்றேன்” என்று சொல்வதற்குள் அவள் வலியில் அவன் சட்டையை இருக்க பயந்து போனான் ஆதி.

 

அங்கிருந்தவாறே சூர்யாவையும் கோமதியையும் சத்தமாக அழைக்க அவர்களும் பதறியவாறே உள்ளே வந்தனர். அவள் வலியை பார்த்து கோமதி சூட்டு வலியாக இருக்கும் என்று சமையலறைக்கு சென்று கஷாயம் வைத்து கொண்டு வந்து அவளுக்கு குடிக்கக் கொடுத்தார். அதன் பின்னும் வலி குறையவில்லை என்றதும் தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கிளம்புவதற்கு முன் ஆதி தன் அன்னையை அழைத்து கவினையும் கவினியையும் அவர்களிடம் அனுப்பினான்.

 

“சூர்யா நீ கார் ஓட்டுறியா” என்று அவன் கேட்க “நான் ஓட்டுறேன் அத்தான் நீங்க இதெல்லாம் ஏன் என்கிட்ட கேட்டுகிட்டு” என்று சொல்லி அவன் காரை எடுக்க ஆதி அவளை தன்னோடு சாய்த்து அவள் கையை விடாமல் பற்றி இருந்தான். மருத்துவமனை சென்ற பின்னும் மருத்துவரிடம் அனுமதி வாங்கி அவனும் பிரசவ அறைக்கு செல்வதற்கு அனுமதி வாங்கினான்.

 

மருத்துவர் குழந்தை பிறக்க இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் என்று விட அவள் வலியில் துடிப்பதை பார்த்து அவனால் வருத்தப்பட மட்டுமே முடிந்தது. அந்த வலியை வாங்கிக் கொள்ள முடிந்தால் நிச்சயமாக அவன் தாங்கியிருப்பான். அவன் முகம் சுத்தமாக உணர்ச்சி துடைக்கப் பட்டது போல் இருக்க எப்போது அவளுக்கு பிரசவம் நடக்கும் என்று கடவுளை வேண்ட ஆரம்பித்தான். ‘கடவுளே இவளுக்கு நல்லபடியாக பிரசவம் முடிந்து இவளை நல்லபடியாக தாயும் சேயுமாக என்னிடம் சேர்த்துவிடு’ என்று பிரார்த்தித்தான்.

 

கடவுளுக்கு அவன் வேண்டுதல் கேட்டது போலும், அவளுக்கு வலி அதிகமாகி இருக்க அவளை பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றனர், உடன் சென்ற ஆதியும் அவள் கைகளை பற்றிக் கொண்டிருந்தான். ஒருவழியாக அவன் மகள் எல்லோரையும் கலக்கிவிட்டு வெளியில் வந்து அழுதாள். குழந்தையை குளிப்பாட்டி அவன் கைகளில் கொடுக்க ஒரு பூவை தாங்குவது போல் குழந்தையை தாங்கினான் அவன்.

 

குழந்தை அப்படியே அவள் சாயலில் இருந்தது. ரோஜாப்பூ போன்று இருந்த குழந்தை தன் சிப்பி இமைகளை திறந்து மெல்ல அவன் தந்தையை நோக்கியது. ஆதிக்கு சந்தோசத்தில் கண்கள் பனித்தது.

 

____________________

 

 

“ஆரா இன்னும் என்ன செய்யுற குழந்தையை தூக்கிட்டு வா, இன்னைக்கு குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டாமா” என்றான் ஆதி. “ஏங்க குட்டிம்மா எங்க போனா குழந்தையோட துணியை அவ தான் வைச்சு இருக்கா” என்று ஆதிரா கவினியை தேடினாள். “அம்மா நான் இங்க இருக்கேன், அப்பா பாப்பாக்கு டிரஸ் நான் தான் போடுவேன். இந்த டிரஸ் பாப்பாக்கு அழகா இருக்கும்ல” என்றாள் அவள் ஆர்வமாக.

 

“குட்டிம்மா அம்மா பாப்பாவுக்கு டிரஸ் போட்டு விடுவேனாம், நீங்க பாப்பாவுக்கு பவுடர் போடுவீங்களாம் சரியா” என்று கவினியை சமாதானப்படுத்தினாள். “அம்மா பாப்பாக்கு நான் சொன்ன பேரு தானேம்மா வைக்கப் போறீங்க” என்றாள் அவள். “ஆமாடா செல்லம் நீ சொல்லிட்டல்ல அந்த பேரு தான் உன் தங்கச்சி பாப்பாவுக்கு சந்தோசமா” என்றாள் அவள்.

 

கவினி சந்தோசத்துடன் தலையசைத்தாள் “என்ன ஆரா என்ன சொல்றா உன் மூத்த பொண்ணு” என்று கேட்டுக் கொண்டே அவர்கள் அறைக்குள் நுழைந்தான் ஆதி. “ஒண்ணுமில்லைங்க அவ சொன்ன பேரு தானே வைக்க போறோமான்னு கேட்டுட்டு போறா” என்றாள் அவள்.

 

“கவினி உன்னை மாதிரியே இருக்கா ரொம்பவும் தெளிவு, பொறுப்பு அவளுக்கு” என்று மகளை பற்றி சிலாகித்தான் அவன். “ரொம்ப கண்ணு வைக்காதீங்க எங்களை பார்த்து” என்று அவனை இடித்துவிட்டு சென்றாள் அவள். ஆதவனின் குழந்தைக்கு வாசன் என்று பெயர் வைத்திருந்தனர். கவினி “அப்பா நம்ம பாப்பாக்கு வாசினின்னு பேர் வைக்கலாம்ப்பா, தம்பி பேரு வாசன் பாப்பா பேரு வாசினி நல்லா இருக்காப்பா” என்றாள் அவள்.

 

“எப்படிடா செல்லம் இப்படி பேரு யோசிச்சீங்க” என்றான் அவன். “அப்பா நாங்க ரெண்டு பேரும் கவின், கவினி, அது மாதிரி இவங்க ரெண்டு பேரும் வாசன், வாசினி நல்ல இருக்குல” என்று கிளுக்கிச் சிரித்தாள் குழந்தை. ஆதிரா அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

 

குழந்தைக்கு பெயர் வைத்துக் கொண்டிருப்பது ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்க சூர்யா ஆதர்ஷாவை பார்த்து கண் ஜாடை காட்ட இருவரும் யாரும் அறியாதவாறு ஒருவர் பின் ஒருவராக மாடி ஏறிச் சென்றனர். மாடிக்குச் சென்றதும் “என்னங்க எதுக்கு என்னை கூப்பிட்டீங்க” என்றாள் ஆதர்ஷா. “எதுக்கா உன்கிட்ட பேச முடியறதே எப்பவாச்சும் தான் இதுல எதுக்கு கூப்பிட்டன்னு கேட்குறேயே தர்ஷு என்னை பார்த்தா உனக்கு பாவமா இல்லையா” என்றான் அவன்.

 

“நான் படிக்கணும் நல்ல மதிப்பெண் வாங்கணும் அப்படி இப்படின்னு பெருசா டயலாக் எல்லாம் விட்டது யாரு” என்றாள் அவள் கிண்டலாக. “நான் தான்… நான் தான்… அது நானே தான்… அதுக்காக பேசவே வேண்டாம்னா சொன்னேன். இப்படி ஏதாச்சும் விஷேசத்துல உன்னை பார்த்தா தான் பேச முடியுது. சரி விடு நீ கீழே போ, உனக்கு என்கூட பேச விருப்பமில்லை போல” என்று அவன் சுணங்க “சும்மா சொன்னேங்க அதுக்குள்ள கோவிச்சுக்கறீங்க” என்றாள் அவள்.

 

“சரி எப்படி படிக்கற நல்லா படிக்கிறீயா, இன்னும் ஒரு ஆறு மாசம் தான் உன் படிப்பு முடிஞ்சுடும். அப்புறம் நம்ம கல்யாணம் தான்” என்று அவன் சந்தோஷித்துக் கொண்டிருக்க, ஆதிரா குழந்தை துணியை மாடியில் உலர்த்துவதற்காக படியேறி வந்தவள் அவர்கள் பேசியதை கேட்டுவிட்டாள்.

 

‘பேச்சுக் குரல் கேட்கிறதே’ என்று வேக நடை போட்டு மாடிக்கு வந்தால் அங்கு சூர்யாவும் ஆதர்ஷாவும் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர், அவர்கள் கடைசியாக பேசியதும் அவள் காதில் விழுந்திருந்தது. சத்தம் கேட்டு இருவரும் திரும்ப அங்கு ஆதிராவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் சூர்யாவும் ஆதர்ஷாவும்.

 

“ஆஷா நீ கீழே போ நான் உன்கிட்ட வந்து பேசிக்கறேன்” என்று குரலில் ஒரு கண்டிப்பை கொண்டு வந்து அவள் சொல்ல அவள் அங்கிருந்து கிளம்பினாள், கிளம்பும் முன் சூர்யாவை நின்று திரும்பி பார்த்துவிட்டு சென்றாள். அதையும் கண்டுவிட்டாள் ஆதிரா.

 

அவள் சென்றதும் தம்பியிடம் திரும்பியவள் “என்ன சூர்யா இதெல்லாம் என்ன பண்ணிட்டு இருக்க நீ, உங்க அத்தானுக்கு தெரிஞ்சா என்ன ஆகும். எதையும் யோசிக்கவே மாட்டியா, நம்மை நம்பி இந்த வீட்டில விட்டு இருக்காங்களே அதுக்கு நீ காட்டுற மரியாதை இது தானே. நீ என் தம்பி தானா உனக்கு ஏன்டா இப்படி புத்தி போகுது” என்று அவனை பேசவிடாமல் அவளே பேசிக் கொண்டிருந்தாள். 

 

“எனக்கு தெரிஞ்சா என்னாகும் சொல்லு ஆரா” என்று பின்னிருந்து ஒரு குரல் கேட்க அங்கு ஆதித்தியன் நின்றிருந்தான். “நீங்க… நீங்க எப்போ வந்தீங்க” என்றாள் அவள். “உன் தம்பிக்கு நீ அர்ச்சனை ஆரம்பிக்கும் போதே வந்துட்டேன்” என்றான் அவன். “அது அது ஒண்ணுமில்லைங்க அவன் தெரியாம பண்ணிட்டான்” என்று அவள் சமாளித்துக் கொண்டிருக்க அவன் அவளை பேசாமலிருக்குமாறு சைகை செய்தான்.

“எனக்கு எல்லாம் தெரியும் ஆரா உனக்கு தான் ஒண்ணு புரியலை. என்னை நம்பி உங்க வீட்டில உன்னை எனக்கு ரெண்டாம் தாரமா கொடுத்தாங்க. உன் தம்பியை நம்பி நான் என் தங்கையை கொடுக்க மாட்டேனா” என்றான் அவன். அவள் திகைத்து விழிக்க, சூர்யாவோ “அத்தான் நீங்க எதுக்கு அந்த பேச்சு எல்லாம் பேசறீங்க, பாருங்க அக்கா வருத்தப் படுறா, உங்களுக்கு என்னத்தான் குறை நீங்க ராஜா மாதிரி இருக்கீங்க, உங்களை நம்பி நாங்க எங்க அக்காவை கொடுத்தோம். அவளுக்கென்ன அவ சந்தோசமா தானே இருக்கா. அக்காவுக்கு நான் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணதா நினைச்சுட்டா, அதான் அப்படி பேசிட்டா விடுங்க அத்தான். அக்காவுக்கு பிடிக்கலைன்னா இந்த கல்யாணம் வேண்டாம்” என்றான் அவன்.

 

“உன் தம்பியை பாரு உனக்காக அவன் விரும்பற பொண்ணு கூட வேணாம்னு சொல்றான். உனக்கு உன் தம்பி மேல பாசமே இல்லை, அவனுக்காக அவன் விரும்பற பொண்ணை நீ வேணாம்கற” என்றான் ஆதி. “ஏன் உங்க வீட்டுக்கு என் தங்கை நல்ல மருமகளா உன் தம்பிக்கு நல்ல பெண்டாட்டியா இருக்க மாட்டான்னு நினைக்கிறியா” என்றான் அவன் மேலும். “போதும் போதும் ரெண்டு பேரும் நிறுத்தறீங்களா” என்றாள் அவள்.

 

“நான் ஏதோ அதிர்ச்சியில பேசாம நின்னா ரெண்டு பேரும் என்னம்மா கதை சொல்றீங்க. உங்களை… ஆமா இந்த கதை எப்போல இருந்து நடக்குது, ஏன்டா உனக்கு அக்கான்னு ஒருத்தி இருக்கறது மறந்தே போச்சா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்கு தோணலியா. என்னங்க நீங்க மட்டும் என்ன உங்களுக்கு எப்போ தெரியும்” என்றாள் அவள் இருவரையும் மாறி மாறி பார்த்து, ஆதி அவனுக்கு எப்போது தெரியும் என்று அவளுக்கு விளக்க ஆதிரா கோபமானாள்.

 

“ஆக ரெண்டு பேரும் இவ்வளோ நாளா என்கிட்ட இருந்து மறைச்சு இருக்கீங்க. அதான் ரெண்டு பேரும் அடிக்கடி கூடி கூடி பேசுனீங்களா. இன்னும் யார் யாருக்கு எல்லாம் இந்த விஷயம் தெரியும்” என்றாள் அவள். அங்கு இவர்களை காணாமல் தேடி வந்தாள் கீர்த்தி. “இதோ இவளுக்கும் தெரியும்” என்று சொல்லி அவளை மாட்டி விட்டான் ஆதி.

 

“என்ன அண்ணா எனக்கு தெரியும்” என்றாள் அவள். “கீர்த்தி நீ தானா எல்லாம் செஞ்சது, ஆமா சுர்யாக்கும் ஆதர்ஷாவுக்கும் நடுவில என்ன” என்றாள் அவள். “அதுவா மதினி அண்ணனுக்கும் உங்களுக்கும் நடுவில என்ன இருக்கோ அதான் மதினி” என்று சிரியாமல் சொன்னவளை பார்த்து ஆதி சிரித்துவிட்டான். “பாரு என் தங்கச்சியை எப்படி பதில் சொன்னா பாரு” என்றான் ஆதி.

 

“சரி கீர்த்தி நீ கீழே போ, சூர்யா நீயும் போ நாங்க கொஞ்ச நேரத்துல வந்திடுறோம்” என்றான் ஆதி. “என்ன ரெண்டு பேரும் அஎங்களை துரத்திவிட்டுட்டு நீங்க தனியா ரொமான்ஸா நடத்துங்க நடத்துங்க” என்றுவிட்டு கீர்த்தி கீழே இறங்கிச் சென்றாள்.

“என்னங்க என்ன பேசணும் உங்களுக்கு என்கிட்ட” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் ஆதிரா. “என்னை சரியா புரிஞ்சுகிட்டடி” என்றான் அவன். “என்ன விஷயம் சொல்லுங்க” என்றாள் அவள். “உனக்கு இதுல சம்மதமா இல்லை உனக்கு எதுவும் தயக்கம் இருக்கா, அப்படி எதுவும் இருந்தா சொல்லிடு” என்றான் அவன்.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க எனக்கு சந்தோசம் தான் நீங்களே சரின்னு சொல்லிட்டா நான் மறுக்கவா போறேன்” என்றாள் அவள். அவளை தன்னோடு சேர்த்து அணைத்தவன் “ஹேய் உன் மேல ஏதோ வாசம் வருதுடி” என்றான். “அதுவா அது சாம்பிராணி வாசம்” என்றாள் அவள்.

 

“எனக்கு என்னென்னமோ செய்யுது” என்று அவளை தன்னோடு இருக்கியவன் அவளுக்கு முத்தமிட்டு பின் விடுவித்தான். “சரி நீ ஆதர்ஷாகிட்ட போய் நல்லா படி நாங்களே இந்த கல்யாணத்தை பண்ணி வைக்கிறோம்ன்னு மட்டும் சொல்லு, அவளுக்கு எனக்கு தெரியும்கறது தெரியாது. சரியா” என்றான் அவன்.

 

____________________

 

“நான் மாப்பிள்ளை வீட்டுக்காரன் எனக்கு மதிப்பு கொடுக்கலைன்னா பொண்ணு வேணாம்னு சொல்லிட்டு நாங்க கிளம்பிடுவோம். அதுனால எங்களை நல்லா கவனிங்க” என்று சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டான் ஆதி. “ஆமாம் நானும் மாப்பிள்ளை வீடு, என் கொழுந்தனுக்கு பொண்ணு பார்க்க வந்திருக்கோம், என்னையும் கொஞ்சம் பஜ்ஜி சொஜ்ஜி கொடுத்து நல்லா கவனிங்க” என்றாள் கீர்த்தி.

 

“என்னங்க நீங்க என்ன அந்த பக்கம் போய் உட்கார்ந்துகிட்டு வாங்க நாம மாப்பிள்ளை வீடு இப்படி வந்து உட்காருங்க” என்றாள் கீர்த்தி கார்த்தியை பார்த்து. அவனும் மனைவி சொல்லே மந்திரம் போல் எழுந்து வந்து அவளருகில் அமர்ந்தான்.

 

சூர்யா பார்த்துக்கோ என்னை மாதிரியே நாளைக்கு நீயும் ஆதர்ஷா நில்லுன்னு சொன்னா நிக்கணும் உட்காருன்னு சொன்னா உட்காரணும். அதுக்கு என்னை பார்த்து எல்லாம் கத்துக்கோ. கீர்த்திம்மா நான் இங்க உட்கார்ந்துக்கலாமா” என்றான் அவன். “உட்காருங்க உட்காருங்க” என்றாள் அவள் அசராமல்.

 

“நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்கனா நாங்க பொண்ணு வீட்டுக்காரங்கஎன்றுபதிலுக்குஆதவனுக்குகாலரைதூக்கினான். “பொண்ணுக்குஎன்னபோடுவீங்கஎன்றான்ஆதிகலாட்டாவாக. “நாங்கதான்எங்கபொண்ணையேதர்றோமோஇதுக்குமேலஉங்களுக்குசீர்செனத்திஎல்லாம்வேணுமா என்றான் ஆதவன் பதிலுக்கு. இவர்கள் இப்படி கலாட்டாவாக பேசிக் கொண்டிருக்க நம் விழாவின் நாயகனும் நாயகியும் வேறு லோகத்துக்கு சென்று விட்டார்கள். அது எந்த லோகம்னு கேட்குறீங்களா, அதாங்க அதான் அதான்…

 

கனவின் மாயா லோகத்திலே நாம்

கலந்தே உல்லாசம் காண்போமே நாம்

கலந்தே உல்லாசம் காண்போமே…

கனவின் மாயா லோகத்திலே நாம்

கலந்தே உல்லாசம் காண்போமே நாம்

கலந்தே உல்லாசம் காண்போமே…

 

என்று அவர்கள் பாடிக் கொண்டு அங்கு சென்றுவிட்டார்கள்.

 

அவர்களை இங்கு இழுத்து வர ஆதி அதிரடியாக ஒரு குண்டை போட்டான். “சரி எங்க மாப்பிள்ளை பொண்ணு கூட ஒரு பத்து நிமிஷம் பேசணும் பெரியவங்க அனுமதியோட, அதுக்குள்ள நாம கல்யாணம் எப்போ எந்த தேதில வைச்சுக்கலாம்னு பேசிடலாம்” என்றான் ஆதி. பெரியவர்களும் ஆமோதிக்க “என்ன மச்சான் போய் பேசிட்டு வாங்க எல்லாரும் சரின்னு சொல்லிட்டாங்க” என்றான் ஆதி.

 

“என்னத்தான் என்ன சொன்னீங்க” என்று அவன் இயல்புக்கு வந்தான். “போய் நீங்க பொண்ணுகூட ஒரு பத்து நிமிஷம் நல்லா கேட்டுக்கோங்க பத்து நிமிஷம் மட்டும் தான் பேசணும். பேசிட்டு வாங்க” என்றான் ஆதி. “அய்யோ அத்தான் அதெல்லாம் எதுக்கு” என்று அவன் பதற ஆதர்ஷா அவனை பார்த்து முறைத்தாள்.

 

“என்ன மச்சான் பேசணும் சொல்லிட்டு இப்போ வேணாம்ன்னு சொன்னா எப்படி போங்க போயிட்டு வாங்க” என்று அவன் அனுப்பி வைத்தான். ஆதர்ஷாவின் அறைக்கு அவன் செல்ல அவள் அங்கு அந்த பக்கம் திரும்பி நின்றிருந்தாள்.

 

சூர்யாவுக்கு உடல் சூடாவது நன்றாக தெரிந்தது, அவன் உடல் அந்த ஏசியையும் மீறி குளிர ஆரம்பித்தது. அவன் வந்த அரவம் கேட்டு திரும்பியவள் “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க, அவங்களே நாம பேசட்டும்ன்னு அனுப்பி வைக்குறாங்க, அன்னைக்கு மட்டும் என்கிட்ட பேசணும் சொல்லி வரச் சொன்னீங்க. இன்னைக்கு என்னமோ வேணாம்னு சொல்றீங்க உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க” என்று அவள் பாட்டுக்கு புலம்பிக் கொண்டிருந்தாள்.

 

சூர்யாவின் நிலையோ திண்டாட்டமாக இருந்தது, இதுவரை ஆதி தான் அவர்கள் இருவரையும் சந்திக்க வைத்திருக்கிறான் அப்போதெல்லாம் ஆதிக்கு தன் மேல் இருந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக சூர்யா ஆதர்ஷாவை தொட்டுக் கூட பேசியதில்லை. அவன் பேச்சும் எப்போதும் கண்ணியத்துடனே இருக்கும், இன்று ஏனோ அவனை அவனாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை.

 

எதனால் இப்படி ஒரு வேளை இவள் இன்று எனக்காக ப்ரித்யேகமாக அலங்கரித்துக் கொண்டிருப்பதாலா இல்லை புடவையில் இவளை பார்ப்பதாலா என்று அவன் மனதிற்குள் பட்டிமன்றமே நடந்துக் கொண்டிருந்தது. அவள் பேசுவது ஏதோ அவனுக்கு எரிச்சலாக அவளை தன்னோடு இழுத்து பேசும் அவள் அதரத்தை மூடினான்.

 

அவனிடம் இருந்து விடுபட திமிறியவளுக்கு மூச்சு முட்டியது போல் இருந்தது, அவளையறியாமலே அவளும் இணங்கி இருக்க அவளை விடுவித்தான் சூர்யா. அவளிடம் ஏதும் பேசாமல் அவள் முகத்தை கூட பார்க்காமல் வெளியே சென்றுவிட்டான். அவளுக்கு தான் கண்ணை கரித்தது. அவள் உதடுகளை தொட்டுப் பார்த்தாள். வெளியே சென்ற சூர்யாவோ தப்பு செய்து விட்ட உணர்வில் இருந்தான்.

 

அத்தான் நம்மை நம்பி தானே அனுப்பினார் நாம் இப்படி நடந்தது தவறல்லவோ என்று நினைத்தவன் முகம் சரியில்லாமல் இருந்ததை ஆதி கண்டு விட்டிருந்தான்.

 

“என்ன சூர்யா உன் முகம் ஏன் இப்படி இருக்கு, எதையும் நினைச்சு வருத்தப்படாதே இதெல்லாம் ஒரு திரில் தான் கல்யாணத்துக்கு அப்புறம் இதெல்லாம் கிடைக்காது. அதுக்கு அப்புறம் உன்னோட கவனம் உங்க வாழ்க்கைக்கான தேவையை தேட போய்டும். அப்போவும் சந்தோசமிருக்கும் ஆனா அது வேற இது வேற இதை இப்போ தான் நீ அனுபவிக்க முடியும். அதுனால எதையாச்சும் நினைச்சு உன்னை குழப்பிக்காம சந்தோசமா இரு” என்று ஆதி கூற அதன் பின்னே சூர்யாவின் முகம் தெளிந்தது.

 

அறையில் ஆதர்ஷாவின் நிலைமையை சொல்ல வேண்டுமோ அவளை தேடி கீர்த்தி உள்ளே வந்தாள். “ஹேய் என்னடி இன்னும் உள்ளே இருக்க வெளிய வா உனக்கு பூ வைக்க வேணாமா” என்று அவள் அழைக்க “நீ போ நான் வர்றேன்” என்றவளின் குரல் உடைந்திருப்பதை உணர்ந்தாள் கீர்த்தி.

 

“என்னடி என்னாச்சு” என்று அவளை திருப்ப அவள் கண்களில் இருந்து நீர் முத்துகள் உதிர்ந்தது. அவள் உதடுகள் சிவந்து தடித்திருந்தது. இதான் சங்கதியா என்று நினைத்தவள் தங்கையிடம் பேச ஆரம்பித்தாள். “ஆஷா என்னடி இது இதுக்கு போய் அழலாமா” என்றாள் அவள். அவளுக்கு தெரிந்து விட்டதை அறிந்து மேலும் கண்ணீர் உகுத்தாள் ஆதர்ஷா.

 

“அவர் எப்போமே இப்படி எல்லாம் செய்ய மாட்டார் கீர்த்தி, இன்னைக்கு அவர்க்கு என்னாச்சுன்னு தெரியலை. இப்போ நான் எப்படி வெளிய போவேன்” என்று அவள் அழ ‘கொழுந்தனாரே உன் பாடு ரொம்ப கஷ்டம் போல’ என்று நினைத்துக் கொண்டவள். “இரு இதெல்லாம் நான் சரி பண்றேன்” என்று சொல்லிவிட்டு அவள் முகத்தை துடைத்து லேசாக ஒப்பனையிட்டு அவள் உதட்டிற்கு லேசாக சாயம் பூச அவள் கண்ணாடியை பார்த்தாள். கொஞ்சம் திருப்தி வந்திருந்தது.

“சரி வா” என்று அவளை வெளியில் அழைத்து செல்ல ஆதிரா அவளுக்கு பூ வைத்து அந்த நிச்சயத்தை உறுதி செய்தாள். அவர்கள் கொண்டு வந்திருந்த புடவையை அவளுக்கு கொடுக்க அவள் உள்ளே சென்று மாற்றிக் கொண்டு வந்தாள். ஏனோ அவள் சூர்யாவை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. சூர்யா அவள் பார்ப்பாளாவென்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவர்கள் எல்லோரும் கிளம்ப அவன் எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்ப அவனை ஏறிட்டால் அவளோ வேறு பக்கம் பார்வையை திருப்பி இருந்தாள். “ஹேய் லூசு அங்க பாருடி சூர்யா உன்னையே பார்க்குறார்” என்று கீர்த்தி இடிக்க அவர்கள் கிளம்பிவிட்டது அவளுக்கு உரைக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். அதற்குள் அவன் காரில் ஏறி அமர்ந்து காரை கிளப்பிச் சென்றுவிட்டான்.

 

இரவில் முதன் முதலாக அவள் கைபேசிக்கு அவன் அழைப்பு விடுக்க “ஹலோ” என்றாள் ஆதர்ஷா. “தர்ஷு ஏன்ம்மா இப்படி பண்ற, நான் பண்ணது தப்பு தான் என்னை ரெண்டு அடி வேணா கொடு. இப்படி உன் முகத்தை வைச்சிருந்தா எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா” என்றான் அவன். “நீங்க செஞ்ச வேலைக்கு வேற எப்படி இருக்க முடியும் தப்புன்னு சொல்லிட்டா எல்லாம் சரி ஆகிடுமா” என்று அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தாள்.

 

“கொஞ்சம் நிறுத்து நான் பண்ணது தப்பு தான் சொல்லிட்டேன்ல உன்கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன். என்னைக்காச்சும் நான் உன்னை தொட்டு பேசி இருக்கனா, நீ எனக்கு தாங்கற ஒரு உரிமையில செஞ்சுட்டேன். தப்பு தான் விடு நான் வைக்கறேன்” என்று அவன் போனை வைக்க போக “ஒரு நிமிஷம்” என்றாள் அவள்.

 

இம் என்றான், “ஏன் நான் உங்களை எதுவும் கேட்க கூடாதா எனக்கு அதுக்கு உரிமையில்லையா, நான் உங்க பொண்டாட்டி தானே உங்களை எதுவும் சொல்லக் கூடாதா” என்றாள் அவள். அவள் பொண்டாட்டி என்றதில் சூர்யா மனம் குளிர்ந்தான்.

 

_____________________

 

 

“என்னங்க இன்னைக்கு நீங்க என்ன வேலை பண்ணீங்க” என்றாள் ஆதிரா. “என்னாச்சு ஆரா” என்றான் அவன். “சூர்யா உங்களை கேட்டானா ஆஷாகிட்ட பேசணும்னு சொன்னானா” என்றாள் அவள், “நீங்க ரெண்டு பேரும் பேசினது நான் கேட்டேன் எதுக்குங்க இதெல்லாம்” என்றாள் அவள்.

 

“ஹேய் என்னடி நீ புரியாம பேசுற உன் தம்பி என்ன சாமியாராவா போகப் போறான் கல்யாணம் தானே பண்ணிக்க போறான். அவனுக்கும் பொண்ணுகிட்ட பேசணும்னு ஆசை இருக்காதா. இது நாள் வரைக்கும் எனக்காக அவன் ஆதர்ஷாகிட்ட சிரிச்சு பேசுனது கூட இல்லை, அளவாவே பேசி இருந்தான். அதான் அவங்க தனியா பேசட்டும்னு அனுப்பி வைச்சேன். இந்த அனுபவம் எல்லாம் இப்போ தான் கிடைக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் கிடைக்குமா, அப்புறம் எப்படி ரொமான்ஸ் பண்ண முடியும்” என்றான் அவன்.

 

“இல்லைன்னா நீங்க ரொமான்ஸ் பண்ணவே மாட்டீங்க” என்று இடித்தாள் அவள். “சரி உங்க தங்கச்சிக்கு நீங்க முன்னிருந்து நடத்தாம உங்க தம்பியை செய்ய வச்சீங்க அதுல ஏதோ விஷயமிருக்கு என்ன அது” என்றாள் அவள். “நீ ரொம்ப மோப்பம் பிடிக்கறடி என்னை” என்று அவள் மூக்கை செல்லமாக ஆட்டினான் அவன்.

 

“என்னோட ரெண்டு தங்கச்சிக்கும் நான் தான் முன்னிருந்து பண்ணேன். ஆதர்ஷானா ஆதவனுக்கு உயிர், அவன் அவகூட சண்டை போடுவான், ரெண்டு பேரும் அப்படி தான் ஆனா அவ மேல அவனுக்கு என்னைவிட பிரியம் அதிகம். அவனுக்கும் அவளுக்கு செய்யணும்ன்னு ஆசை இருக்கும்ல. நான் ஒண்ணுக்கு ரெண்டா ரெண்டு தங்கச்சிக்கு முன்னாடி இருந்து எல்லாம் செஞ்சுட்டேன். இது அவனோட முறை அவன் செய்யட்டும். பார்த்தல அவன் முகத்தில எவ்வளோ சந்தோசம்ன்னு” என்றான் அவன்.

 

“நீங்க பெரிய ஆளுதாங்க உங்களை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு” என்றாள் அவள். “உன் பொறாமை எல்லாம் அப்புறம் வைச்சுக்கோ, இப்போ என்னை கொஞ்சம் கவனி தாயே. என்னை பார்த்தா பாவமா இல்லையா உனக்கு” என்றான் அவன்.

 

ஆதவனும் அவர்கள் அறையில் நேத்ராவிடம் தன் அண்ணனை பற்றியே பேசிக் கொண்டிருந்தான். “பாரு நேத்ரா அண்ணா எனக்காக அவரோட உரிமையை விட்டு கொடுத்திருக்கார், உண்மையிலேயே அவருக்கு தான் எங்க ரெண்டு பேர் மேல எவ்வளவு பிரியம்” என்று சிலாகித்து கூறினான்.

 

“ஆமாங்க பெரியத்தான் உண்மையிலேயே பெரிய ஆளு தான்” என்று ஆமோதித்தாள் நேத்ரா. அதன் பின் அவர்கள் திருமணத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று பேச ஆரம்பித்தனர்.

 

____________________

 

 

திருமணம் ஏற்பாடானதுமே சங்கரன் ஊரில் உள்ள அவர்கள் வீட்டை சற்று விரிவுபடுத்தினார் எல்லோரும் வந்து தங்க வசதியாக, பக்கத்தில் உள்ள இடமும் விலைக்கு வந்ததில் சூர்யா அதையும் சேர்த்து வாங்கலாம் என்று சொல்ல அந்த இடத்தையும் வாங்கி வீட்டை சற்று பெரிதாக விரிவுபடுத்தினர்.

 

எல்லா அறைக்கும் குளிர்சாதன வசதி செய்து இன்ன பிற மாற்றங்களும் செய்து அந்த வீடு திருமணத்திற்கு தயாரானது. ஈஸ்வரனும் மீனாட்சியும் வந்தவர்களை வரவேற்றனர். திருமணம் அவர்கள் சொந்த ஊரான திருக்குறுங்குடியில் நடப்பதாக ஏற்பாடானது. எல்லோரும் கிளம்பி அங்கு சென்றனர், பாபநாசத்தில் இருந்து காந்திமதி ஆச்சி, பேச்சி என்று எல்லோருமே வந்திருந்தனர். சென்னையில் வரவேற்பு என்று முடிவு செய்திருந்தனர்.

 

அழகிய நம்பி கோவிலில் திருமணம் முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணுமாக வீட்டிற்கு வர வீட்டு வாசலில் கட்டியிருந்த ஒலிப்பெருக்கியில் அவர்களை வரவேற்கும் விதமாக பாடல் ஒலித்தது.

 

மணமகளே மருமகளே வா வா – உன்

வலது காலை எடுத்து வைத்து வா வா

குணமிருக்கும் குலமகளே வா வா – தமிழ்க்

கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா…

 

மணமகளே மருமகளே வா வா – உன்

வலது காலை எடுத்து வைத்து வா வா

குணமிருக்கும் குலமகளே வா வா – தமிழ்க்

கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா…

 

வழக்கமாக கிராமங்களில் நடக்கும் திருமணங்களில் எல்லா வீட்டிலும் மணமகள் வீட்டிற்கு வரும் போது இந்த பாடலை ஒலிக்க விடுவர். என்னவொரு கருத்தாழமிக்க வரிகள் என்று நினைத்துக் கொண்டாள் ஆதிரா.

 

அடுத்து வந்த வரிகளை கேட்டவள் ஆதர்ஷாவிடம் “இந்த வரிகள் உனக்காவே தான் உனக்கு யாரை பார்த்தும் எந்த கலக்கமும் வேண்டாம். இதை உன் வீடாக எண்ணிக் கொள் உன் பயம் எல்லாம் போய்விடும்” என்று அவளின் பயத்தை கண்டு அவளுக்கு புரியவைக்கும் விதமாக பேசினாள் ஆதிரா.

 

தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது – இங்குதங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது…பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப்பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது… “ஏம்மா ஆதிரா எங்கலா என் பேரன்” என்றார் காந்திமதி. “உள்ள இருக்காங்க ஆச்சி கூப்பிடவா” என்றாள் ஆதிரா. “கூப்பிடுல உங்க ரெண்டு பேருக்கும் வேலை இருக்குலா” என்றார் அப்பெண்மணி. “என்னங்க ஆச்சி கூப்பிடுறாங்க நமக்கு ஏதோ வேலை இருக்காம்” என்று அவனை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தாள் அவள். “என்ன ஆச்சி என்ன வேலை சொல்லுங்க எங்க ரெண்டு பேருக்கும்” என்றான் ஆதித்தியன். 

“நீங்க ரெண்டு பேரும் தான் அவங்க அறையை அலங்காரம் பண்ணனும்” என்றார் அவர். “என்னாது நாங்களா, ஆச்சி உனக்கு எங்க ரெண்டு பேரையும் பார்த்தா எப்படி தெரியுது. எங்களையே எல்லாருக்கும் அலங்காரம் பண்ண சொல்ற” என்றான் அவன்.

“நீங்க ரெண்டு பேரும் ராசிய்யா நீங்க அலங்காரம் பண்ணா பத்து மாசத்தில அவங்களுக்கு குழந்தை பிறந்துடுது. பார்த்தல்ல என் பேத்திக ரெண்டு பேரும் என் பேரன் புள்ளைங்களுக்கு கொடுக்க முத்து முத்தா கொள்ளு பேத்திகளை பெத்து கொடுத்திருக்காங்க. சரி நீங்க ரெண்டு பேரும் போய் அலங்கார வேலைகளை பாருங்க” என்று அனுப்பி வைத்தார் அந்த பெரிய மனுஷி.

 

அறையை அலங்காரம் செய்யும் போது “என்னடி நம்மளையே அலங்காரம் செய்ய அனுப்பறாங்க” என்றான் அவன். “அதான் ஆச்சி அதுக்கு விளக்கம் கொடுத்தாங்களே மறந்துட்டீங்களா, பேசாம வேலையை பாருங்க” என்று அலங்காரம் செய்ய ஆரம்பித்தாள் அவள். “என்னை பத்தி யாருமே கவலைப்பட மாட்டேங்குறாங்களே” என்று சலித்தான் அவன்.

 

“உங்களை என்ன கவனிக்கலை” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கவினி வாசினியை கூட்டிக் கொண்டு உள்ளே வந்தாள். “அம்மா பாப்பாக்கு ரசம் பூவா ஊட்டிட்டேன். பாப்பாக்கு தூக்கம் வருதாம்” என்றாள் கவினி. “சரி செல்லம் நீங்க போய் ஆச்சி கூட தூங்குங்க பாப்பாவை நான் தூங்க வைக்கறேன்” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தாள் ஆதிரா.

 

“பார்த்தீங்களா பெரியவளை எவ்வளோ பொறுப்பா இருக்கா” என்றாள் ஆதிரா பெருமையாக. “ம்மா சாச்சு, ம்மா சாச்சு” என்று சொல்லிக் கொண்டிருந்தாள் அவள் அருமை மகள். “என்ன கேக்குற என் பொண்ணு” என்றான் அவன். “ஒண்ணுமில்லை நீங்க வெளிய கிளம்புங்க நான் அவளை தூங்க வைச்சுக்கறேன்” என்று அவனை வெளியே அனுப்பி வைத்தாள்.

 

“ஆரா ஆரா” என்றழைத்தான் ஆதி. “என்னங்க” என்றாள். “கிளம்பு கிளம்பு” என்றான் அவன். “எங்க கிளம்பணும்” என்றாள் அவள். “தோட்டத்துக்கு, அங்க இருக்க வீட்டுக்கு” என்றான் அவன். “ஏங்க அங்க எதுக்கு” என்றவளை “நீ வர்றியா இல்லை உன்னை குண்டு கட்டா தூக்கிட்டு போகவா” என்றவனுக்கு பயந்து எல்லோரிடமும் சொல்லிவிட்டு அவன் பின்னே சென்றாள்.

 

“எனக்கு இப்படி ஒரு சூழ்நிலைல உன் கூட தனியா இருக்கணும்னு ஆசை அதுக்கு தான் உன்னை வரச் சொன்னேன், நீ என்னன்னா பிகு பண்ற” என்றான் அவன். “ஏங்க வீட்டில தலைக்கு மேல வேலை கிடக்கு, நீங்க தனியா இருக்கணும்னு என்னை இப்படி தள்ளிக்கிட்டு வந்திருக்கீங்க” என்றாள் அவள்.

 

“அங்க பாரு என் தம்பியை உன்னோட தோழியை தனியா கூட்டிட்டு போறான் என்றவன் “ஆதவா” என்று அழைக்க அந்த இருட்டில் திரும்பியவன் “அண்ணா சொல்லுங்க அண்ணா” என்றான். “எங்க போறீங்க” என்றான் அவன். “ஏங்க பேசாம இருக்கமாட்டீங்களா” என்று அவனை அடக்கினாள் ஆதிரா.

 

“தோட்டத்து வீட்டுக்கு போகலாம்ன்னு சொல்லி இவளை கூப்பிட்டேன், அங்க தான் போயிட்டு இருக்கோம். நீங்க எங்க கிளம்பிட்டீங்க” என்றான் அவன். “நாங்களும் அங்க தான்” என்றான் அவன். “பாரு அண்ணியே வர்றாங்க நீ வர்றதுக்கு இவ்வளோ யோசனை பண்ற” என்று அவன் நேத்ராவை கேட்க, “ஆதவா உன் அண்ணியும் வரமாட்டேன்னு தான் சொன்னா, அவளை வரவைக்கறதுக்குள்ள கண்ணை கட்டி போச்சு” என்றான் அவன்.

 

“பாருடி ரெண்டு பேருக்கும் வேலை இல்லாம நம்மை வெளிய கூட்டிட்டு போறாங்க” என்று அலுத்தாள் நேத்ரா. “அண்ணா வேலைக்கு ஆகாது போல” என்று பேசிக் கொண்டிருக்கும் போது கார்த்தியும் கீர்த்தியை அழைத்துக் கொண்டு வந்தான். “அய்யோ நீங்க எங்க கிளம்பிட்டீங்க தோட்ட வீட்டுக்கா” என்றான் ஆதவன்.

 

“எப்படி மச்சான் கண்டுபிடிச்சீங்க” என்றான் அவன் வியப்பாக, “இப்போ தான் மச்சான் இங்க ஒரு குடுகுடுப்பைக்காரன் வந்து சொல்லிட்டு போனான். எல்லாரும் அவங்க அவங்க பொண்டாட்டியை கூட்டிட்டு தோட்ட வீட்டுக்கு போய் சந்தோசமா இருங்கன்னு” என்று கிண்டல் செய்தான் ஆதி.

 

அந்த தோட்டத்தில் இருந்த வீட்டில் கீழே இரண்டு அறைகளும் பின்னால் ஒரு தாழ்வாரமும் இருந்தது. தென்னை மட்டையும், காய்களும் இறக்குவதற்கு வசதியாக. மாடியில் மேலும் இரண்டு அறைகள் இருக்க, கீழே இருந்த அறையில் அந்த தோப்பை பார்த்துக் கொள்பவர்கள் தங்கி இருந்தனர்.

 

எல்லோருமாக ஒன்றாக மொட்டை மாடியில் அமர்ந்து அரட்டை அடித்தனர். “ஆமா இந்த அம்மு எங்க போய்ட்டா, சரவணனையும் ஆளையே காணோமே” என்றான் ஆதி. “அண்ணா அக்காவோட சின்ன மாமியா பொண்ணு வீடு இங்க இருக்காம். அவங்க வீட்டில தான் இன்னைக்கு தங்கணும்ன்னு சொல்லி அவங்க வந்து அழைச்சுட்டு போய்ட்டாங்க” என்றாள் கீர்த்தி.

 

“நீங்க இப்படி கலகலன்னு பேசுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை மச்சான்” என்றான் கார்த்தி. ஆதியை பார்த்து. “எங்க அண்ணன் நல்லா பேசுவாரு, நானே அவரை பார்த்து தான் பேசவே கத்துக்கிட்டேன், நடுவுல கொஞ்ச நாள் வேலை வேலைன்னு இருந்துட்டார் அதான் எல்லாத்தையும் மறந்து இருந்துட்டார். எங்க மதினி வந்து தான் எங்க அண்ணனை மாத்திட்டாங்களே” என்றாள் அவள்.

 

ஆதி அப்போது ஆதிராவை பார்க்க அவள் தலை தாழ்ந்தது. “ஆமா உன்னோட வாலை எங்க விட்டுட்டு வந்த” என்றான் ஆதவன். “ஹர்ஷினியா அவளை வழக்கம் போல நம்ம பேச்சி சித்திகிட்ட தான் விட்டுட்டு வந்தேன். எல்லா குட்டிஸ் அவங்ககிட்ட நல்லா சேர்ந்துக்கறாங்க. அவங்களும் குழந்தைங்ககிட்ட அன்பா இருக்காங்க. ஆமா கவின், கவினி, வாசன், வாசினியும் அவங்களோட தானா” என்றாள் அவள்.

 

“ஆமாமா அவங்ககிட்ட தான் விட்டுட்டு வந்திருக்கோம்” என்றனர் ஆதிராவும் நேத்ராவும் கோரசாக. “எனக்கு தூக்கம் வருது போய் படுக்கலாமா” என்று ஆதி நாசுக்காக சொல்ல எல்லோரும் எழுந்தனர். மாடியில் இருந்த இரண்டு அறைகளில் ஒன்றில் ஆதவன், நேத்ரா தங்கிக் கொள்ள மற்றொன்றில் கார்த்தியும் கீர்த்தியும் தங்கினர்.

 

அவர்கள் கீழே இறங்கிச் செல்ல மொட்டை மாடியில் நிலவொளியில் அமர்ந்திருந்தவன் அந்த ஒளியில் மனைவியின் அழகை கண்டு ரசித்தான். “நிலா எவ்வளோ அழகுலடி” என்றான் அவன். “இம்… ஆமாங்க” என்று ஆமோதித்தாள் அவள். “நான் அந்த நிலாவை மட்டும் சொல்லலை, இந்த நிலாவையும் சேர்த்து தான் சொல்றேன்” என்றான் அவன்.

 

“உன் பேரோட அர்த்தம் அதானே, நான் சூரியன் நீ நிலா. இந்த சூரியனின் தணலை தனித்து குளிர்விக்க வந்தவள் தானே இந்த நிலவு” என்று அவளை பார்த்து சொல்ல அவள் முகம் நாணியது. “உங்களுக்கு வேற வேலையே இல்லையாங்க” என்றாள் அவள்.

 

“இல்லை” என்று அவளை இழுத்து தன் நெஞ்சின் மீது சாய்த்துக் கொண்டு அவர்கள் மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் என்று பாட ஆரம்பித்துவிட்டனர். அவனுக்குள் அந்த பாடலின் வரிகள் மனதிற்குள் வந்து போனது.

 

தாகமறிந்தீயுமருள்வான்மழைக்கேயுண்டோ?
தாகத்தின்துயர்மழைதான்அறிந்திடுமோ?’என்றேன்.
வேகமுடன்அன்பினையேவெளிப்படுத்தாமழைதான்
விருப்புடனேபெய்குவதுவேறாமோ?”என்றாள்.
காலத்தின்விதிமதியைக்கடந்திடுமோ?’என்றேன்.
காலமேமதியினுக்கோர்கருவியாம்’என்றாள்.
ஞாலத்தில்விரும்பியதுநண்ணுமோ?’என்றேன்;
நானிலேஒன்றிரண்டுபலித்திடலாம்’என்றாள்
ஏலத்தில்விடுவதுண்டோஎண்ணத்தை?’என்றேன்;
எண்ணினால்எண்ணியதுநண்ணுங்காண்’என்றாள்.
மூலத்தைச்சொல்லவோ?வேண்டாமோ?’என்றேன்;
முகத்திலருள்காட்டினாள்மோகமதுதீர்ந்தேன்.

 

நிலவை முகில் மறைக்க அங்கு இனிதாக ஒரு தேடல் தொடங்கியது. இனி இவர்கள் வாழ்வில் என்றும் இல்லை ஊடல் என்று சொல்ல முடியாது, ஊடல் இல்லாத வாழ்வு உப்பு சப்பில்லாத சாப்பாட்டை போன்றது. இவர்களுக்குள் ஊடளும் பின் கூடலும் வரும் இருவரும் ஒருவரையொருவர் புரிந்ததால் இனி விட்டுக் கொடுத்து தங்கள் வாழ்க்கையை இனிதாக வாழ்வர் என்று சொல்லி நாமும் விடை பெறுவோம் இவர்களிடமிருந்து.

 

தொலையவில்லை உன்

நேசம் ஒளித்து

வைத்திருந்தேன்

என் நெஞ்சினிலே…

தணலாய் இருந்தவன்

பனியாய் மாறினேன்

உன் நேசச்சாரலில்…

 

சாராலாய் காதல்

விதை தூவி

இதயத்தில் இறங்கினாய்

சில்லென்று ஒரு காதலாகினாய்…

 

முற்று பெற்றது என்று போட விரும்பவில்லை இவர்கள் காதலும் நேசமும் புரிதலும்தொடரும் நாம் இவர்களிடமிருந்து விடை பெறுவோம்….

முடிவுரை

 

 

வாசகர்களுக்கு முடிவுரையை சிறப்புரையாய் சமர்ப்பிக்கிறேன்..

 

வெற்றியின் திருமணம்

—————————————-

 

வெற்றியின் திருமணத்திற்கு அவன் ஆதிக்கு பத்திரிகை வைக்க ஆதியும் முன் போல் அவனுடன் சந்தோசமாக பேச வெற்றிக்கு மகிழ்ச்சியாகவும் சற்று ஆச்சரியமாகவும் இருந்தது. எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்களை திருமணத்திற்கு அழைத்துவிட்டு அவனின் மற்ற நண்பர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அவன் ஊருக்கு சென்றுவிட்டான்.

 

அடுத்த வாரம் வெற்றியின் திருமணம் என்பதால் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக தத்தம் குடும்பத்துடன் அவன் திருமணத்திற்கு பயணமானார்கள். எல்லோரும் ஒன்றாக ரயிலில் சந்தோசமாக பயணித்தனர். அது திருமண விழாவிற்கு அவர்கள் செல்வது போல் அல்லாமல் ஏதோ அவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விடுமுறை கழிக்க செல்வது போல் இருந்தது.

 

திருமணத்தின் போதும் ஆதி சகஜமாக வெற்றியுடன் பேச வெற்றி ராஜீவை அழைத்தான். மாலையில் பரிசம் போடுவதாக இருக்க அதற்கு சற்று முன் ராஜீவை தனியே அழைத்தான் வெற்றி. “என்னடா எதுக்கு என்னை கூப்பிட்டஎன்றான்ராஜீவ்.

 

“ராஜீவ் எனக்கு ஒரு சந்தேகம் ஆதி எப்படிடா இப்படி மாறினான். அவன் அந்த விஷயத்துக்கு அப்புறம் என்னை பார்த்த போதெல்லாம் பேசினானே தவிர அதில் ஒரு உயிர்ப்பு இல்லாமல் இருந்தது. சகஜமாக அவன் என்னுடன் பேசியிருக்கவில்லை. ஆனால் இப்போது அவன் என்னுடைய பழைய ஆதியாக என்னுடன் பேசுகிறான் அவனின் இந்த மாற்றம் எனக்கு மிகுந்த சந்தோசமே ஆனால் இது எப்படி நடந்ததுஎன்றான்ஆச்சரியமாக.

“அதெல்லாம் அப்படி தான்டா அவன்கிட்ட நீ பேசும் போது அவனோட தவிப்பு என்னன்னு எனக்கு மட்டும் தான்டா தெரியும். அவன் ஆதிரா மேல எவ்வளவு அன்பு வைச்சிருந்தான் தெரியுமா, உன்னோட பேச்சு அவனுக்கு அவன் ஏதோ தப்பு செஞ்சதா உணர வைச்சுது. அதுக்கு பிறகும் அவன் உன்னை பார்க்கும் போது நீ பேசிய விஷயங்கள் அவன் மனதை குடைஞ்சிருக்கு அதுனால தான் அவன் உன்னோட சகஜமா பேசலை. அவன் என்கிட்ட சொல்லி எத்தனை நாள் வருத்தப் பட்டான் தெரியுமா, உன் மேல உண்மையிலேயே அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை

 

“அந்த நாளைக்கு பிறகு அவன் வாழ்க்கையில நல்லது தான் நடந்ததுஎன்றுசொல்லிஅவன்நடந்ததைசுருக்கமாகசொல்லவெற்றியின்முகத்தில்ஒருநிம்மதிபடர்ந்தது. “லட்சுமிக்குஅவவிரும்பினவாழ்க்கைஅமைஞ்சதுலரொம்பவேசந்தோசம்டா, ஆதியோடநல்லமனசுக்குஅவரொம்பவும்பொருத்தமாஇருப்பா. ரெண்டுபேரும்சந்தோசமா இருக்கட்டும்என்றான்மனதார.

 

“நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்டாஎன்றுவெற்றிராஜீவிடம்கூற“என்னடாஎன்னாச்சுஎன்றான்ராஜீவ். “இல்லைடாநான்தான்முட்டாள்தனமானகற்பனையிலஇருந்துட்டேன். பாவம்டாசங்கரி கல்யாணம் நிச்சயம் பண்ணதுல இருந்து நான் அவகிட்ட பேச மாட்டேனான்னு ஏங்கி இருக்கா தெரியுமா. அவ என்னோட தங்கைகிட்ட வாய் விட்டு கேட்டும் நான் பேசினதில்லை. இனி அப்படி இருக்க போறது இல்லைஎன்றவன்சந்தோசமாகஅவன்திருமணத்திற்குதயாரானான். நல்லபடியாகஅவன்திருமணம்முடிந்துஎல்லோரும்ஊருக்குதிரும்பினர்.

 

அருணாசலத்திற்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட யோசித்த ஆதி அவருக்கு முழு ஓய்வு கொடுக்க எண்ணினான். அதனால் ஆதி ஆதவனை அலுவலகத்திற்கு தினமும் வரச் சொல்ல ஆதவனும் ஆதியுடன் சென்றான். ஆதவனும் ஆதி ஏதோ கணக்கு வழக்கிற்காக வரச் சொல்லுகிறான் என்று நினைத்திருக்க ஆதி ஏதோ பொறுப்பை ஒப்படைப்பவன் போல் அவனுக்கு எல்லாமும் கற்றுக் கொடுத்தான்.

 

ஆதி வாயை திறந்து ஏதாவது சொல்லுவான் என்று ஆதவன் நினைக்க அவன் வாயே திறக்கவில்லை. ஆதியும் யோசனையுடன் இருக்கவே ஆதவனே ஆதியிடம் அதை வாய்விட்டு கேட்டுவிட்டான்.

 

“அண்ணா என்ன அண்ணா எதாவது பிரச்சனையாஎன்றான்அவன் தயங்கிக் கொண்டே, “இல்லை ஆதவா என்னாச்சுஎன்றான்ஆதிபதிலுக்கு. “இல்லைநீங்கஎனக்குஎல்லாமும்சொல்லிக்கொடுக்கறமாதிரிதோணிச்சு, அதான்கேட்டேன்என்றான்அவன்.

 

“நீ நினைக்கிறது சரி தான் ஆதவா நான் எல்லாம் முடிஞ்சதும் உன்கிட்ட இதை பத்தி பேசலாம்னு நினைச்சேன். நீ பார்த்தல அப்பாவுக்கு உடம்பு முடியாம இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா தேறிட்டு வர்றாங்க. அப்பாவை இனி நாம கஷ்டப்படுத்த முடியாது ஆதவா நாம ரெண்டு பேரும் தான் இனி இந்த அலுவலகத்தையும் தொழிற்சாலையும் பார்த்துக் கொள்ள வேண்டும்

 

“நீ இங்கிருந்து இந்த அலுவலகத்தை பார்த்துக் கொள், அப்பாவும் சந்தோசப்படுவார். நான் ஊருக்கு போயிடலாம்ன்னு இருக்கேன், அங்க இருக்கற நம்ம எண்ணெய் தொழிற்சாலையை பார்த்துக் கொண்டு நான் விரும்பிய விவசாயத்திலும் ஈடுபடலாம் என்று நினைக்கிறேன். அப்பாவையும் அம்மாவையும் ஊருக்கு என்னுடன் அழைத்து செல்லலாம் என்று எண்ணி இருக்கிறேன்என்றுமனதில்உள்ளதைஒளியாமல்சொன்னான்அவன்.

 

“அண்ணா நான் மட்டும் எப்படி இங்க தனியா, எனக்கு ஒண்ணும் புரியலை. இப்படி ஒட்டு மொத்தமா என்னை நம்பி எப்படி அண்ணாஎன்றான்அவன். “ஆதவாநீஒண்ணும்சின்னபையன்இல்லை, உன்னாலமுடியும்னுஎனக்கு எப்பவோ தெரியும். நீ பொறுப்பானவன், உனக்கு ராஜீவ் துணைக்கு இருப்பான். நீ அவனை முழுசா நம்பலாம். உனக்கு என்னைக்கு ஊருக்கு வரணும் தோணுதோ அன்னைக்கு நீயும் ஊருக்கு வந்திடு ராஜீவ்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சுட்டு சரியாஎன்றுஆதிசொல்லஅரைமனதாகசம்மதம்சொன்னான்ஆதவன்.

 

அவனுக்கும் தெரியும் ஆதியின் கனவு விவசாயத்தில் உள்ளது என்று தன் லட்சியம் அடைய உதவிய அண்ணன் அவன் லட்சியத்தை அடைய ஆதவன் அந்த பொறுப்பை தட்டாமல் ஏற்றுக் கொண்டான். ராஜீவ் பற்றியும் இங்கு சொல்லியே ஆக வேண்டும், கதிருக்கும் ராகுலுக்கும் அவர்கள் தந்தை தொழில் கை கொடுக்க சிறு வயதிலேயே தந்தையை இழந்திருந்த ராஜீவ் அவன் அன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்.

 

ராஜீவ் எல்லாவற்றிலும் முதல் மாணவனாக வந்து அவன் அன்னைக்கு பெருமை சேர்த்தான். அவனுக்கு இன்ஜினியரிங் படிப்பு மெரிட்டில் கிடைத்தது. அவ்வப்போது அவனுக்கு தேவைப்பட்ட உதவியை ஆதி சத்தமில்லாமல் பலமுறை செய்திருந்தான்.

 

ராஜீவ்க்கு ஆதி கடமைப்பட்டவனாக அவர்கள் நட்பு மேலும் மேலும் இறுகியது. திறமை மிகுந்த ராஜீவை வேலையில் சேர்த்தது ஆதியே, அவன் திருமணம்கூட ஆதியின் வீட்டினரே முன்னின்று நடந்த அவன் காதல் மனைவியை கைபிடித்திருந்தான்.

 

ஆதவன் கொஞ்ச கொஞ்சமாக ஆதியிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தான், ராஜீவ் துணை இருந்ததால் சீக்கிரமே அவனுக்கு எல்லாமும் பிடிபட்டது. ஆதி ஆறு மாதம் கழித்து ஊருக்கு செல்லப் போவதாக ஆதவனிடம் தெரிவித்திருந்தான். அண்ணன் தம்பி இருவரும் வரும் ஆயுத பூஜையை ஒட்டி வரும் விடுமுறையை தங்கள் குடும்பத்தினருடன் சந்தோசமாக கழிக்க விரும்பினர்.

இருவருமாக சூர்யாவையும், கார்த்திக்கையும் உடன் சேர்த்துக் கொண்டு வீட்டினருக்கு தெரியாமல் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். சரவணனுக்கும் அழைத்து விபரம் சொல்லி இருக்க எப்படி எங்கு செல்வது என்பதை அவனிடமும் தெரிவித்தனர். அதன்படி ஆயுதபூஜையை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே கொண்டாடிவிட்டு அடுத்த புதன் அன்று அவர்கள் அலுவலகத்தை திறக்க முடிவெடுத்தனர்.

 

சூர்யாவோ எப்படியும் தங்களின் பல்பொருள் அங்காடியை மூட முடியாதே என்று சொல்ல ஆதி அதற்கும் ஒரு திட்டம் வைத்திருந்தான். அதன்படி ராஜீவ் முன்னதாகவே வந்து சூர்யாவுடன் கடைக்கு சென்று பழக வைத்து அவர்கள் வரும் வரை அவனையே கடையை பார்த்துக் கொள்ள செய்வதென ஏற்பாடு செய்தனர். அலுவலகமும் விடுப்பில் இருப்பதால் ராஜீவிற்கு சிரமம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்பதால் அப்படி யோசித்தனர்.

 

____________________

 

மீனாட்சியையும் ஈஸ்வரனையும் கோமதி வீட்டினர் அவர்களுடனே வந்து தங்கச் சொல்ல எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டிலேயே வசித்தனர். ஆதர்ஷாவும் எல்லோருடனும் சேர்ந்து கொள்ள வீடு கலகலப்பாகவே சென்றது. காலையில் சூர்யாவும், சங்கரனும் கடைக்கு செல்வர். மதிய உணவிற்கு பின் சூர்யா ஈஸ்வரனுடன் அவர் தொழிற்சாலைக்கு செல்வான்.

 

“ஆரா ஆரா ஆராஎன்றுகோர்ட்டவாளியைபோல்ஆதிஏலம்போட்டுக்கொண்டிருந்தான். “என்னங்கஎன்றாவறேவெளியேவந்தாள்ஆதிரா. ஆதவனும்ஆதியும்அலுவலகத்தில்இருந்துஅன்றுவிரைவாகவேவந்திருந்தனர்.

 

“நேத்ரா என்று அவனும் தன் பங்குக்கு தன் மனைவியை அழைத்தான். அவளும் வந்துவிட ஏற்கனவே அருணாசலமும் லட்சுமியும் அங்கிருந்ததால் அவர்கள் பேச்சை ஆரம்பித்தனர்.

 

“நாளை மறுநாள் நம் அலுவலகத்தில் ஆயுத பூஜை அன்று இரவு நாம் ஊருக்கு செல்கிறோம். நீ தேவையான துணியை எடுத்து வைத்துக் கொள்என்றான்ஆதி. “ஊருக்காஎந்தஊருக்குங்கஎன்றாள்ஆதிரா. “சொன்னாசெய்ஆராஏன்எதுக்குன்னுகேள்விகேட்காதேஎன்றான்அவன். “என்னங்கநீங்கஎதுக்குஎன்னைகூப்பிட்டீங்கஎன்றாள்நேத்ராஅசுவாரசியமாக.

 

“என்ன உன் காதுல விழலையா அண்ணன் தான் சொன்னாங்கல நான் வேற உனக்கு வெத்தலை பாக்கு வைச்சு சொல்லணுமா. அம்மா, அப்பா உங்களுக்கும் தான் நாம எல்லாரும் ஊருக்கு போறேன். எங்க போறோம்ன்னு நீங்க அங்க போய் தெரிஞ்சுக்கலாம். அதுவரை எங்களை எந்த கேள்வியும் கேட்காதீங்கஎன்றான்ஆதவன்.

 

“என்னப்பா நாம வீட்டில சாமி கும்பிடவேணாம, அப்பாவுக்கும் உடம்பு இப்போ தானே குணமாகி இருக்கு. நாங்க எதுக்குப்பா நீங்க போயிட்டு வாங்கஎன்றார்லட்சுமி. “அத்தைமாமாநல்லாஇருக்காங்கநீங்கஎதுக்குசிரமப்படுறீங்க, நாங்கஎல்லாம்இருக்கோம்லஇனிமாமாவுக்குஎதுவும்வராதுஎன்றாள்ஆதிரா.

 

“என்னம்மா பார்க்குறீங்க அதான் ஆரா சொல்லிட்டால நான் நினைச்சது தான் அவ சொல்லி இருக்கா. இந்த பயணம் அப்பா உடம்புக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்மா. வீட்டில வேணா நாளைக்கே நாம சாமி கும்பிடுவோம். நீங்க கிளம்புறதுக்கு மட்டும் பாருங்கஎன்றான்ஆதி.

 

“அத்தை யோசிக்காதீங்க நீங்க துணி மணி எடுத்து மட்டும் வைங்க, நானும் ஆதிராவும் வந்து பெட்டியை அடுக்கி தர்றோம்என்றாள்நேத்ரா. “ஆமாம் அத்தை நீங்க அந்த வேலை மட்டும் பாருங்க, நேத்ரா நாளைக்கு வீட்டில பூஜை, நாம பூஜைக்கு தேவையானது எல்லாம் வாங்க வேண்டாமா, நாம கடைக்கு போயிட்டு வருவோம்என்றுதோழியர்கள் கிளம்ப குழந்தைகளை பார்த்துக் கொள்வது தந்தையின் கடமையாக அவர்கள் குழந்தைகளிடம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

“என்னடி உன்னவரும் என்னவரும் ஓவரா கதை சொல்லிக்கிட்டு இருக்காங்க. அப்படி எங்க தான் கூட்டிட்டு போகப் போறாங்க இந்த ரெண்டு முறை மாமனுங்களும். ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கிறாங்களாம். நம்மால கண்டுபிடிக்க முடியாதாஎன்றாள்நேத்ரா. “தெரியலைடிஎன்னதிட்டம்வைச்சுஇருக்காங்கன்னுநாமளும்பதிலுக்குஇவங்களுக்குஏதாச்சும்அதிர்ச்சிவைத்தியம்கொடுக்கணும்என்றாள்ஆதிரா.

 

“நீ கீர்த்திக்கு போன் பண்ணு, நான் ஆதர்ஷாகிட்ட பேசுறேன். இவங்க அவங்களையும் கூப்பிட்டு இருப்பாங்கன்னு தான் நினைக்கிறேன்என்றாள்ஆதிரா. அவர்களிடம்தோழியர்பேசஅவர்களும்தங்கள்கணவன்மார்கள்தங்களையும்ஊருக்குகிளம்பச்சொன்னதாகக்கூறினர்.

 

“பார்த்தியாடிநான்சொன்னதுசரியாபோச்சு, அப்போகண்டிப்பாஅம்முவும்வருவான்னுநினைக்கிறேன்என்றுசொல்லிவிட்டு அவளுக்கும் போன் செய்ய அவளும் அதே பதிலை கொடுத்தாள்.

 

ஆண்கள் ஒரு பக்கம் பெண்களுக்கு அதிர்ச்சி கொடுக்க நினைக்க அவர்கள் வீட்டு பெண்களும் தங்கள் வீட்டு ஆண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். வீட்டிலிருந்து கிளம்பி எல்லோரும் ரயில் நிலையத்திற்கு வந்தனர். எல்லோருமாக ரயிலில் ஏறி அமர்ந்தனர். நேத்ராவும் ஆதிராவும் ஓரளவு எங்கே செல்கிறோம் என்று யூகித்து விட்டனர்.

 

“என்ன மச்சான் இவங்களை பார்த்தா அதுக்குள்ள விஷயம் தெரிஞ்சுருச்சு போலவே, என் ஓட்டைவாய் தங்கச்சிகிட்ட நீங்க எதுவும் சொல்லிட்டீங்களாஎன்றான்ஆதவன்கார்த்தியைபார்த்து. “மச்சான்இப்படிமட்டும் சொல்லாதீங்க, நான் கம்பெனி ரகசியத்தை எல்லாம் வெளிய சொல்றது இல்லை. இதுனால எங்க ரெண்டு பேருக்கும் மனஸ்தாபமே ஆகிப்போச்சு. பாருங்க உங்க தங்கச்சியை மூஞ்சியை தூக்கி வைச்சு இருக்காஎன்றான்பாவமாக.

 

“நீங்க எப்படி இப்படி பேசக் கத்துக்கிட்டீங்கஎன்றான்ஆதிசிரிப்புடன். “எல்லாம் உங்க தங்கச்சி வேலை தான்என்றான்கார்த்தி. “இப்போசண்டையைஎப்படிசமாளிக்கபோறீங்கஎன்றான்ஆதவன். “உங்கதங்கச்சிதானேஇருங்கஇப்போவேகாட்டுறேன்என்றவன்கீர்த்தியைஅழைத்தான்.

 

“என்ன எதுக்கு என்னை கூப்பிடுறீங்கஎன்றுசிடுசிடுத்தவாறேவந்தாள் கீர்த்தி. “இந்தா உனக்கு பிடிக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன். இந்தா இதை குழந்தைகளுக்கு கொடுத்துடுஎன்றுஅவளிடம்ஒருபெரியடைரிமில்க்சாக்லேட்டும்குழந்தைகளுக்குதனியாககொஞ்சம்சாக்லேட்டும்கொடுத்தான்.

 

“நிஜமாங்க எனக்காக வாங்கிட்டு வந்தீங்களா, ச்சே நான் உங்க மேல கோவிச்சுக்கிட்டனே. சாரிங்க அத்தான்என்றுசொல்லிவிட்டுபோனாள்அவள். “மச்சான்இதென்னஒருசாக்லேட்கொடுத்துசமாதானம்பண்ணிட்டீங்கஎன்றான்ஆதவன்.

 

“இது பரவாயில்லை வீட்டில தினமும் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் ஒரே சண்டை எதுக்குன்னு தெரியுமா. ஹர்ஷினிக்கு வாங்கிட்டு வர்ற சாக்லேட் எல்லாம் அவளுக்கு தெரியாம உங்க தங்கச்சி எடுத்து சாப்பிடுறாளாம். குழந்தை என்கிட்ட இனிமே சாக்லேட் வாங்கிட்டு வந்தா ரெண்டு பேருக்கும் வாங்கிட்டு வாங்க இல்லைனா வாங்கவே வேண்டாம்ன்னு சொல்லிட்டாஎன்றுசொல்லஆதியும்ஆதவனும்சிரித்தனர்.

 

சூர்யா நமட்டு சிரிப்புடன் நிறுத்திக் கொள்ள அதை கவனித்த ஆதி “என்ன சூர்யா நீ எப்படிஎன்றான்ஆதி. “மச்சான்உங்களுக்குவிவரமேதெரியாதா, இவங்கபல்பொருள்அங்காடிலதினமும்அதிகமாகாலிஆகறபொருள்எதுதெரியுமாசாக்லேட்தான், இந்தவிஷயத்துலஅக்காவும்தங்கையும் ஒரே மாதிரி தான், என்ன சூர்யா நான் சொன்னது சரி தானேஎன்றான்கார்த்தி.

 

“அண்ணா இப்படியா போட்டு உடைப்பீங்கஎன்றான்சூர்யா. “ஆமாஇந்தவிஷயம்உங்களுக்குஎப்படிதெரியும்என்றான்ஆதிகேள்வியாக. “அதுவந்துஅத்தான்அண்ணன்ஒருநாள்நம்மகடைக்குவந்தாங்க, அன்னைக்கு நம்ம கடையில சாக்லேட் எல்லாம் தீர்ந்து போச்சு. உங்க தங்கச்சி கேட்டுச்சேன்னு நானே எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டேன். அதான் அண்ணன் கிண்டல் அடிக்கிறார்என்றான்அவன்.

 

இப்படியாக இவர்கள் இருக்க பெண்கள் தங்களுக்குள் தனித்தனியாக கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். ஈஸ்வரன் மீனாட்சியும் கூட வந்திருந்தனர். அவரவர்கள் கொண்டு வந்திருந்த உணவுகளை முதலில் குழந்தைகளுக்கு ஊட்டி பின் பெரியவர்களை சாப்பிட்ட வைத்து அதன் பின் கணவன்மார்களும் மனைவிமார்களும் சாப்பிட்டு ஒருவாறு உறங்கினர்.

 

மறுநாள் ரயிலில் இருந்து இறங்கியதும் ஒரு பேருந்து வந்திருக்க எல்லோரும் அதில் ஏறிக் கொள்ள அவர்கள் கொடைக்கானல் மலையை வந்தடைந்தனர். இறைவன் கொடுத்த கொடுத்த கொடையாய் இயற்கை அதன் அழகை அள்ளி இறைத்திருந்தது. ஆதி ஏற்கனவே கம்பளி எடுத்து வரச் சொல்லி இருந்ததால் எல்லோரும் அதை எடுத்து போட்டுக் கொண்டனர்.

 

செல்லும் வழி எங்கும் பனியாய் சூழ்ந்திருக்க கண் கவரும் இயற்கை அங்கு எல்லோர் கண்களுக்கும் விருந்தாகி இருந்தது. ஆதி எல்லோருக்கும் அறை பதிவு செய்திருந்ததால் அங்கு சென்றனர். அங்கு சென்றால் ஏற்கனவே பார்வதி உலகநாதன், பேச்சி, காந்திமதி ஆச்சி, சரவணன், சின்ன காந்திமதி அவர்களின் தவப்புதல்வி யாசினி மற்றும் சரவணனின் பெற்றோர் என்று எல்லோரும் குழுமி இருக்க அங்கு ஒரு சந்தோஷ சூழ்நிலை உருவாகியது.

 

எல்லோரும் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்க காந்திமதி ஆதியின் அருகில் வந்தார். “என்னல ஆதி இது நானும் வரணும்ன்னு சொல்லிட்டில இந்த வயசான காலத்துல இதெல்லாம் எனக்கு தேவையால நான் இந்த மூட்டு வலியோட உனக்காக தாம்ல இங்க வந்தேன்என்றார்அவர்.

 

“ஆச்சிநீங்கவேணாபாருங்கநீங்கஇங்கவந்துட்டீங்கள்ளஉங்கமூட்டுவலிபறந்துபோகும். உங்களுக்குஉங்கநோய்பற்றிநினைப்பேவராது, எங்கஎல்லாரையும்பார்த்ததுல உங்களுக்கு அது மறந்தே போகும் பாருங்கஎன்றான்ஆதி.

 

அவன் சொன்னது ஒரு வகையில் சரியே, உடம்பு முடியாத அருணாசலம் கூட எல்லோரையும் கண்டதும் சிறுபிள்ளையென உற்சாகமாகவும் சந்தோசத்துடனும் உரையாடிக் கொண்டிருந்தார். பேச்சியை கண்டதும் மழலையர் பட்டாளம் எல்லாம் அவரிடம் ஓடிச் சென்று ஒட்டிக் கொண்டது.

 

“அத்தை நீங்க என்ன மாயம் பண்ணி வைச்சு இருக்கீங்க, எல்லா குட்டீஸ்க்கும் உங்களை ரொம்ப பிடிக்குதுஎன்றுஅவரிடம்வந்தாள்ஆதிரா. “நான்என்னம்மாபண்ணேன்நான்எதுவுமேசெய்யலையே, பிள்ளைஇல்லாதஎனக்குநீங்கள்லாம்பிள்ளைங்கனாஇவங்க என் பேரப்பிள்ளைங்கஎன்றுகண்கள்கலங்கினார்பேச்சி.

 

“அத்தை நான் விளையாட்டா கேட்டேன், நீங்க எதுக்கு கண்ணு கலங்கிட்டு இனி இவங்க உங்களை விட்டு நகரமட்டாங்கஎன்றாள்ஆதிரா. “நான்இவங்களைபார்த்துக்கறேன், நீங்கஇப்போதான்வந்தீங்கபோங்கபோய்குளிச்சுட்டுசாப்பிடுங்கஎன்றுஅவர்களைஅனுப்பிவைத்தார்.

 

அன்று தான் அவர்கள் வந்ததினால் யாரும் அன்று வெளியில் செல்லவில்லை, குளித்துவிட்டு சாப்பிட எல்லோரும் திரண்டனர். இப்படி எல்லோரும் ஒட்டுமொத்தமாக சந்தோசமாக குதூகலித்திருப்பது சந்தோசமாக இருந்தது.

 

சந்தோசமாக பேசிக் கொண்டே எல்லோரும் உணவருந்தினர், ஆச்சி மூட்டு வலி என்று சொல்வார் அறைக்கே அவருக்கு சாப்பாடு அனுப்பலாம் என்று நினைத்தால் முதல் ஆளாக அவர் வந்து அமர்ந்திருந்தார். சாப்பிட்டு முடிக்கவும் அந்த குளிரிலும் ஆதர்ஷா ஐஸ்கிரீம் சுவைத்துக் கொண்டிருந்தாள்.

 

அவளருகில் வந்த சூர்யா “தர்ஷு எனக்கு ஐஸ்கிரீம் வேணும்என்றான். “அங்கதானேஇருக்குஎடுத்துகோங்கஎன்றாள்அவள். “அடியேநான்ஐஸ்கிரீம்கேட்டேன்டிஎன்றான்அவன்அவளைஒருமாதிரிபார்வையுடன். “உங்களுக்குவேலையேஇல்லையாபோங்கஎன்றுஅவள்அவனைவிரட்டஇதைகேட்டநம்கீர்த்திசும்மாஇருப்பாளா என்ன.

 

“ஏய் என்னடி என் கொழுந்தன் ஒரு ஐஸ்கிரீம் தானே கேட்டார் அதை கொடுக்க உனக்கு என்ன, சரியான தின்னுங்கோளி. என்ன கொழுந்தனாரே ஐஸ்கிரீம் தானே நான் தர்றேன் உங்களுக்குஎன்றாள்கீர்த்தி. “அய்யோமதினிஎனக்குஐஸ்கிரீம்வேணாம்ஐஸ்கிரீம்வேணாம்என்றுஅவன்பதறினான். ஆதர்ஷாவோ அவனை முறைத்தாள்.

 

“சரி வேணாம்னா விடுங்கஎன்றுஅவள்இடத்தைகாலிசெய்தாள், “உங்களுக்குஐஸ்கிரீம்சாப்பிட்டேஆகணுமாஎன்றுமுறைத்தாள்அவள். “ஆமாம்வேணும்உன்னாலதரமுடியுமாமுடியாதா, நான்வேணாஎன்றுஅவன்முடிப்பதற்குள்அவனைஅவர்கள்அறைக்கு இழுத்துச் சென்றாள் அவள். ‘இதுக ரெண்டும் தனியாக எங்க போகுதுங்கஎன்றுஆராய்ச்சிசெய்தகீர்த்திஅவர்கள்பின்னேயேசென்றாள்.

 

அவர்கள் அறைக்கு சென்று கதவை அடைக்க ‘என்ன நடக்குது இந்த ஆஷா வரட்டும் வச்சுக்கறேன் கச்சேரியைஎன்றுநினைத்துக்கொண்டுஅவள் அங்கிருந்து நகர்ந்தாள். சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் புன்னகை முகத்துடன் வெளிவர கீர்த்தி ஆதர்ஷாவை ஆராய்ச்சி செய்ய அவள் முகம் சிவந்திருந்தது எதையோ உணர்த்தியது.

 

‘அட பக்கிகளா இன்னை வைச்சு இன்னைக்கு காமெடி பண்ணிட்டீங்களே இருங்க உங்களுக்கு இருக்குஎன்று மனதிற்குள் அவர்களை வைதாள் கீர்த்தி. இரவு பயர் கேம்ப் இருக்க பெரியவர்கள் சிறிது நேரம் இருந்துவிட்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்றுவிட்டனர். மற்றவர்கள் தத்தம் இணையுடன் அமர முயற்சிக்க பெண்கள் எல்லோரும் அதற்கு வழிவிடாமல் சேர்ந்து அமர்ந்துக் கொண்டனர். கீர்த்தி அப்போது தான் ஆரம்பித்து வைத்தாள்.

“என்ன ஆதர்ஷா மதியம் சாப்பாட்டுல ஐஸ்கிரீம் ரொம்ப நல்லா இருந்துச்சு போல ரொம்ப ரசிச்சு சாப்பிட்ட மாதிரி தெரியுதுஎன்றாள். “என்னதம்பிநீங்களும்சேர்ந்துஇந்தகொடைக்கானல்குளிருலசூடாஐஸ்கிரீம்சாப்பிட்டீங்க போலஎன்றுஅவனையும்கிண்டல்செய்யமற்றவர்கள்என்னநடக்குதுஎன்பதுபோல்அவர்களைபார்த்தனர்.

 

சூர்யாவும் ஆதர்ஷாவும் பேந்த பேந்த விழிக்க ஆதிராவுக்கு ஏதோ புரிய “கீர்த்தி பேசாம இருஎன்றுஅவளைஅடக்கினாள். “மதினிஇதுகரெண்டும்என்னையவைச்சுகாமெடிபண்ணிருச்சுங்கஅதான்நான்ரொம்பகடுப்பாகிட்டேன்என்றாள்அவள்.

 

“என்ன செல்லம் உன்னை வைச்சு அவங்க என்ன பண்ணாங்க நீ மாமாகிட்ட சொல்லு நான் அவங்களை கேட்குறேன்என்றுசந்தடிசாக்கில்கீர்த்தியைதன்னருகில்இழுத்தான்அவன். “அத்தான்இவங்கஎதுக்கோஐஸ்கிரீம்ன்னுபேருவைச்சுஇருக்காங்க, அதுஎதுக்குன்னுதான்எனக்குபுரியலை. இதுஅவங்ககோடுவோர்ட்போலஎன்றுமதியம்நடந்த நிகழ்வை கூற எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

 

“என்ன அத்தான் எல்லாரும் என்னை பார்த்து சிரிக்கறாங்கஎன்றுசிணுங்கினாள்அவள். “ஹேய்உனக்குஐஸ்கிரீம்வேணும்னாமாமாவாங்கிதருவாங்கபோய்வாங்கிக்கஎன்றாள்ஆதர்ஷாரோஷத்துடன். இந்தகலாட்டாவில்ஆதிஆதிராவின் அருகில் வந்து அமர்ந்ததை அவள் கவனிக்கவே இல்லை.

 

எல்லோரும் தத்தம் இணையுடன் சேர்ந்து அமர்ந்திருந்தனர். சில்லிட்டு போயிருந்த கைகள் தீடிரென்று சூடாவது போல் உணர்ந்த ஆதிரா கண்களை நிமிர்த்த அவள் கைகள் ஆதியின் கைகளில் அடங்கியிருந்தது. அவர்கள் அந்த மோன நிலையில் லயித்திருக்கும் போது ஆதி யாரிடமோ சமிக்கை செய்தது போல் தோன்ற சட்டென்று திரும்பிப் பார்த்தால் யாருமில்லை. என்ன என்பது போல் அவனை பார்க்க அவனோ ஒன்றுமில்லை என்பதாய் தலையசைத்தான்.

 

“சரி நீங்க எல்லாரும் உள்ள போங்க நாங்க இதோ வர்றோம்என்றுசொல்லிஅவர்களைஅவரவர்அறைக்கு போகச் சொன்னான் ஆதி. பெண்கள் எல்லோரும் கிளம்ப எதையோ கேட்க ஆதிரா முனைய, “சொன்னா கேளு ஆரா என்ன ஏதுன்னு கேள்வி கேட்காதே கிளம்புஎன்றான்அவன். அதற்குமேல்யாரும்எதுவும்பேசாமல்அவரவர்அறைக்குசென்றதும்தான்அவர்களுக்குவிவரம்புரிந்தது.

 

அறை முழுதும் ஏதோ பூக்களால் அலங்கரித்திருக்க மெத்தை முழுதும் பூ தூவி இருந்தது. ‘எல்லாம் இதுக்கு தானாஎன்றுநினைத்தவர்கள்ஒன்றாகஒன்றுகூடிஏதோபேசிவிட்டுஅவரவர்அறையில்சென்றுஅடைந்தனர். “இந்நேரம் நம்மாளுங்க எல்லாம் அறையை பார்த்து இன்ப அதிர்ச்சியில இருப்பாங்க, நாம இப்போ போனா சரியா இருக்கும்என்றுஆதிசொல்லஎல்லோரும்அவரவர்அறைக்குசென்றுகதைவைதட்டினர்.

 

வெகுநேரமாகஅவர்கள்தட்டிக்கொண்டேஇருக்கவேண்டியாதாகிஇருந்தது. போன்செய்தாலும்அவர்கள்எடுக்காமல்இருக்கஐவரும்நொந்துபோயினர்.‘அடாடா ரொம்ப கடுப்பாக்குறாளுங்களே என்ன செய்யுறதுஎன்றுமுழித்தனர். மனைவிமார்கள்எல்லோரும்வேண்டுமென்றேசெய்வதுபோல்தோன்றஅவர்களைசமாதானப்படுத்ததங்களால்ஆனதைசெய்தனர். வாருங்கள்அவர்கள்எப்படிசமாதானம்செய்கிறார்கள்என்றுபார்ப்போம்

 

 

 

 

சரவணன் – மதி

 

“மதிம்மா மதிம்மாஎன்றசரவணனின் அழைப்பில் மதி, மதி மயங்கி எழுந்து வந்து கதவை திறந்தாள். மற்றவர்களிடம் கட்டைவிரலை உயர்த்தி காட்டிவிட்டு அவன் உள்ளே சென்று விட்டான். “என்ன வைச்சு இருக்கீங்க உங்க மதிக்கு எதுக்கு என்னை மதிம்மா மதிம்மான்னு கூப்பிட்டீங்கஎன்றாள்அவள்கறார்குரலில்.

 

‘சாமி வந்திருச்சு இவளுக்கு இனி இவளை வேப்பிலை அடிச்சு தான் இறக்கணும்என்றுநினைத்தவன்அவள்உள்ளேஅழைத்ததையேசம்மதமாகஎடுத்துக்கொண்டுகதவைஅடைத்துவிட்டுகட்டிலில்அமர்ந்தான்.

 

“மதி இங்க பாருட்டி, உனக்கு இப்போ என்ன கோவம் என் மேல சொல்லு, இதெல்லாம் செஞ்சு வைச்சு இருக்கனே. உன்கிட்ட சொல்லலையேன்னு தானே. உனக்கு பிடிக்கலையா மதி, இனி நான் இது மாதிரி செய்யமாட்டேன். உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்ன்னு எல்லாரோடையும் சேர்ந்து நானும் இப்படி செஞ்சது தப்பு தான்

 

“என்ன என் பொண்டாட்டி மேல எனக்கு இருந்த அளவு கடந்த அன்பினால செஞ்சது உனக்கு பிடிக்கலை. என்னல எதுவும் பேசாம இருக்க சொல்லுலா உனக்கு இதெல்லாம் பிடிக்கலையாஎன்றான்அவன்முகத்தைபாவமாவைத்துக்கொண்டு.

 

அவன் முகம் மாறியது கண்டு பொறுக்காதவள் “அத்தான் நான் எப்போ பிடிக்கலைன்னு சொன்னேன், அதான் நீங்க எல்லாம் எனக்காகன்னு சொல்லி என்னை குளிர வைச்சுட்டீங்களேஎன்றுசொல்லிஅவன்மார்பில்சாய்ந்தவளைஅள்ளிக்கொண்டான்சரவணன்.

 

கார்த்தி – கீர்த்தி

 

“கீது செல்லம் கதவை திறடா அத்தான் உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன் பாருஎன்றுஅவன்சொல்லவேகமாகவந்துஅவள்கதவைதிறக்கஅதற்குள்அவனும் மற்றவர்களுக்கு விரல் உயர்த்தி காண்பிக்க “என்ன அத்தான் என்ன நான் என்ன சின்ன குழந்தையா எனக்கு மிட்டாய் கொடுத்து ஏமாத்தலாம்ன்னு பார்க்குறீங்களா, கிளம்புங்கஎன்றுசொல்லிவிட்டுகதவைஅடைத்தாள்.

மற்றவர்கள் அவனை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தனர். இருந்தும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவன், “சரி கீதும்மா நீ கதவை திறக்க வேணாம், அத்தான் இந்த குளிர்ல வெளிய போய் படுத்து உறைஞ்சு போறேன், நீ காலையில வந்து கட்டை மாதிரி நான் வெறைச்சு போயிருப்பேன் அப்போ தூக்கிட்டு வந்து என்னை உள்ள படுக்க வைச்சுக்கோ. நான் கிளம்புறேன்என்றுசொல்லும்போதேகதவைதிறந்துஅவன்அவர்களுக்குசமிக்கைசெய்யகூடவிடாமல்அவன்கையைபற்றிஇழுத்துஉள்ளேசென்றாள்.

 

“என்ன பயமுறுத்தறீங்களா இப்படி எல்லாம் சொன்னா நான் மனசு மாறிடுவேனாஎன்றாள்முறைத்துக்கொண்டே, “கீதுநீயும்எத்தனைநாளாஎன்னை கேட்டுட்டு இருக்க என்னை நீங்க தேனிலவு கூட்டிட்டே போனதில்லைன்னு, அதுக்காக தான் எல்லோரும் பேசி இந்த மாதிரி ஒரு திட்டம் போட்டோம். உன் ஆசையை நிறைவேத்தணும்னு நான் நினைச்சது தப்பா

 

“உனக்கு இன்னமும் என் மேல கோவமா, நம்ம கல்யாணம் ஆனா புதுசுல என்னால உன்னோட தேனிலவு போக முடியலை. வேலை நெருக்கடி இப்போ தானா ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சது, நீ இப்படி கோவிப்பேன்ன்னு தெரிஞ்சு இருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன் என்று அவன் உண்மையாக வருந்த திருந்தாத கீர்த்தி “அத்தான் எதுக்கு இப்படி நெறைய பேசுறீங்க நான் என்ன கேட்பேன்னு உங்களுக்கு தெரியாதாஎன்றாள்அவள்.

 

அவன் திருதிருவென்று விழிக்க “எடுங்க என்னோட சாக்லேட் அதை விட்டுட்டு பக்கம் பக்கமா டயலாக் பேசிட்டு எடுங்க எடுங்கஎன்றுசொல்லிஅவள்சிரிக்க, “கொஞ்சநேரத்துலஎன்னைகலக்கிட்டியேஉன்னைஎன்றவன்அவளைகைகளில்தூக்கியவன்கட்டிலில்கிடத்தினான், அவளருகில் படுத்தவன் அவள் கேட்ட சாக்லேட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

 

“போதுமா உனக்குஎன்றான்அவன். “கொஞ்சமாதான்இருக்கு, சரிபரவாயில்லைநான்சமாளிச்சுக்கறேன்என்றவளின்வாயைஅடைத்தான்கார்த்தி. சிலநிமிடபோராட்டத்தில்அவளைவிட்டவனிடம், “அத்தான்நிஜமாவே எனக்காக தான் இதெல்லாம் செஞ்சீங்களாஎன்றுஅவள்கண்கள்கலங்க“கீதும்மாஇதெல்லாம்உனக்குசரியாவராதுடாநீஎப்பவும்போலதுறுதுறுன்னுஇருஅதுதான்நல்லாஇருக்குஎன்றவன்அவள்விழிநீரைசுண்டிஎறிந்தான்.

 

சூர்யா – ஆதர்ஷா

 

இவங்க என்ன செய்யுறாங்கன்னு பார்ப்போம் வாங்க…

“தர்ஷு தர்ஷுஎன்றுசூர்யாஅழைக்கஅவளோபேசாமல்இருந்தாள், பதிலளித்தால்தானேஏதாவதுசொல்வான்என்றுநினைத்துஅமைதிகாத்தாள். அடுத்துஅவன்பேசியதில்வேகமாககதவைதிறந்துஅவனைஉள்ளேஇழுத்துகதவைஅடைத்தாள்.

சூர்யா என்ன சொன்னான் என்றால் “தர்ஷு நீ இப்போ கதவை திறக்கலன்னா நான் ஐஸ்கிரீம் பத்தி எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன் கதவை திறஎன்றதும்தான்தாமதம், “ஏன்இப்படிஎன்மானத்தைவாங்குறீங்கஎன்றவாறேஅவனைஇழுத்துஉள்ளேவிட்டுகதவைஅடைத்தாள்.

 

“ஏங்க இப்படி என் மானத்தை வாங்குறீங்க, ஏற்கனவே இந்த கீர்த்தி தொல்லை என்னால தாங்கலை என்ன என்னன்னு கேட்டு மதியத்துல இருந்து என் உயிரை வாங்குறாஎன்றாள்அவள். அவன் சிரித்துவிட்டு “சரி சரி இப்போ எனக்கு ஐஸ்கிரீம் வேணும், தரமுடியுமா முடியாதாஎன்றான்சீரியஸாக.

 

“உங்களை உங்களை….என்றவளை“என்னைஎன்னைஎன்னசெய்யபோறஎன்றான்அவன். “நீங்கரொம்பகெட்டுபோயிட்டீங்கஎன்றாள்அவள். “நானாஇம்ஏன்சொல்லமாட்ட, பார்க்கஅமைதியானபொண்ணுமாதிரிஇருந்துகிட்டுமுத்தம்குடுக்குறதுக்குஐஸ்கிரீம்ன்னுபேருவைச்சதுயாருங்கமேடம்என்றுஅவன்கிண்டலடிக்க.

 

“அய்யோஎன்றுமுகத்தைமூடிக் கொண்டாள் அவள் வெட்கத்தில். “சரி சரி இதுக்கு மேல நான் உன்னை கிண்டல் பண்ணலை போதுமாஎன்றான்அவன்குறுஞ்சிரிப்புடன். “கீர்த்தி மதினிகிட்ட என்ன சொன்னஎன்றான்அவன். “அத்தான்கிட்டபோய்கேளுன்னுசொல்லிட்டேன்என்றாள்அவள்.

 

“அவங்க அவங்க அத்தான்கிட்ட கேட்க போயிட்டாங்க, நான் உன்கிட்ட கேட்டது என்னாச்சுஎன்றான்அவன். “என்னைகேட்டுதான்நீங்கஎல்லாம்செய்வீங்களா, அப்படிதான்நம்மநிச்சயதன்னைக்குநடந்துதாஎன்றுகேட்டுவிட்டுவேறுபுறம்பார்த்தாள். “அப்போ இது மட்டும் ஏன் பிடிக்கலைஎன்றான்அவன். “பிடிக்கலைன்னுநான் எப்போ சொன்னேன், சும்மா கொஞ்சம் பிகு பண்ணேன். பிடிக்கலைன்னு நீங்களே முடிவு பண்ணிடுவீங்களாஎன்றாள்அவள்.

 

“அப்போ பிடிச்சுருக்காஎன்றவனிடம்“ரொம்பஎன்றாள்அவள். “ஆனாஎங்கிட்டயும்ஒருவார்த்தைசொல்லிஇருக்கலாம்என்றவளிடம், “அதெல்லாம்முடிஞ்சுபோச்சு, எனக்கு இப்போ ஐஸ்கிரீம் வேணும். நீ கொஞ்சம் பேசாம இருஎன்றான்அவன்.

 

 

ஆதவன் – நேத்ரா

 

மற்ற மூவரும் உள்ளே சென்றுவிட எஞ்சி இருந்தது ஆதவனும் ஆதியும் மட்டுமே, ஆதவன் “அண்ணா நீங்க உள்ள போங்கஎன்றுசொல்லஆதியோ“நீபோஆதவாஎன்றான். ஆதவன்அவர்கள்அறைக்கதவைதட்டினான்.

 

“ஹேய் கதவை திறடி, நீது கதவை திறக்க போறியா இல்லையாஎன்றான்அவன். “முடியாதுடாபனைமரம்என்றாள்அவள்உள்ளிருந்து. “நீ இப்போ திறக்கலைன்னா நான் கதவை உடைச்சு உள்ளே வந்துடுவேன்டி ஆழாக்குஎன்றுஅவன்சொல்லஆதியோஎன்னநடக்குதுஇங்கஎன்பதுபோல்பார்த்தான். ஹேய் நீ கதவை திறக்குறியா அரைக்காப்படிஎன்றுமீண்டும்சொல்லஅவள்கதவைதிறந்தாள்.

 

“எதுக்குடா இப்போ என்னை அப்படி கூப்பிட்டஎன்றாள்அவள். “நீதான்டிமுதல்லஎன்னைபனைமரம்னுகூப்பிட்டஅதான்நானும்பதிலுக்குகூப்பிட்டேன்என்றான்அவன். வெளியேயாராவதுஇருக்கிறார்களா என எட்டிப் பார்த்தவள் ஆதியை கண்டதும் “நீ முதல்ல உள்ள வா, பெரியத்தானை வைச்சுட்டு தான் என் மானத்தை வாங்குனியாஎன்றாள்அவள்.

 

“உனக்கு தான்டி கொழுப்பு நீ தான் முதல்ல எங்க அண்ணன் முன்னால என் மானத்தை வாங்குனஎன்றான்அவன்பதிலுக்கு. அவள்மீண்டும்மீண்டும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, “சரி தாயே நான் உனக்கு தெரியாம இதெல்லாம் செஞ்சது தப்பு தான் என்னை மன்னிச்சுடுஎன்றுசொல்லிவிட்டுகட்டிலில்ஏறிபடுத்துக்கொண்டான்.

 

உறங்குவது போல் பாவனை செய்தவன் அவன் மனைவியை லேசாக கண் திறந்து பார்த்தான். “என்னங்க நாங்க எல்லாம் சும்மா உங்களை வம்பு பண்ண தான் அப்படி செஞ்சோம். ஆதிராகூட வேண்டாம்ன்னு தான் சொன்னா, நீங்கலாம் ஒரு அதிர்ச்சி கொடுக்கறீங்களே. சும்மா கொஞ்சம் உங்களை கலாட்டா பண்ணலாம்ன்னு நினைச்சோம். நீங்க இப்படி என்கிட்ட எதுவும் சொல்லாமா நீங்க பாட்டுக்கு தூங்குனா என்ன அர்த்தம் என்றவளுக்கு கண்கள் லேசாக கசிந்தது. “இது தான் அர்த்தம்என்றுஅவளை இழுத்து அணைத்தான்ஆதவன்.

 

 

ஆதித்தியன் – ஆதிரா

 

இந்த ரெண்டு ஆதியும் எப்படி ரொமான்ஸ் பண்ணுறாங்கன்னு நீங்களே பாருங்க…

 

 

எல்லோரும் உள்ளே சென்றதும் திருப்தியுற்றவனாக ஆதி அவர்கள் அறைக் கதவை தட்டினான். அவனுக்கு தெரியும் ஆரா தன்னிடம் விளையாட மாட்டாள் என்று அதனாலேயே அவன் எல்லோரும் அவரவர் அறைக்கு சென்றதும் தங்கள் அறைக்கதவை தட்டினான். “ஆரா ஆராஎன்றுஅவன்அழைப்பில்உடனேகதவைதிறந்தாள்அவள்.

 

“சாரிங்க குளிச்சுட்டு இருதேன் அதான் கொஞ்சம் லேட் ஆகி போச்சு என்றவாறே கதவை திறந்தாள் அவள். “என்ன உனக்கு என் மேல எந்த கோபமும் இல்லையே ஒரு சின்ன வருத்தம் கூட உனக்கு இல்லையாஎன்றான்ஆதி. இல்லை என்பதாய் தலையசைத்தாள் “நீங்க தான் இந்த திட்டத்தை போட்டாதாஎன்றாள்அவள். “ஆமாம்என்றான்அவன்.

“நினைச்சேன்நீங்கதான்எல்லாரையும் ஒண்ணா சேர்த்து இப்படி ஒரு திட்டம் போட்டு இருப்பீங்கன்னு. ரொம்பவே சந்தோசங்க இப்படி எல்லாரும் ஒண்ணா ஒரு இடத்துல சேர்றது ரொம்பவே நல்லா இருக்குங்கஎன்றாள்அவள்சிலாகித்து.

 

“நீ என்னை புரிஞ்சுக்குவன்னு நான் நினைச்சேன் ஆராஎன்றவன்அவளருகில்வந்துஅவள்உள்ளங்கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான் அவன். “உனக்கு பிடிச்சு இருக்காஎன்றான்அவளைபார்த்துக்கொண்டேகாதலாக. “இம் ரொம்ப பிடிச்சு இருக்குங்க, அதைவிட இதை பாருங்கஎன்றுசொல்லிஅவன்கையை பற்றி சன்னல் அருகே அழைத்துச் சென்றாள்.

 

சன்னல் திரைச் சீலையை விலக்கி சன்னல் கதவை திறந்து காண்பித்தாள், “எனக்கு இது ரொம்ப பிடிச்சு இருக்குஎன்றவள்விளக்கணைத்துவிட்டுஅவனருகே சென்று சென்றாள். “அங்க பாருங்கஎன்றுசொல்லிஅவள்கைநீட்டிகாண்பிக்கஅவனும்பார்த்தான். கொடைக்கானலின் அழகிய ஏரி முழு நிலவு கிரணத்தை வாரி இறைத்திருக்க வெள்ளி நீராக காட்சி அளித்தது. “எவ்வளோ அழகு இல்லை ஆரா, சரி வர்றியா நாம மெதுமா நடந்து அங்க போயிட்டு வருவோம்என்றான்அவன். அவள்சந்தோசமாக“ஓபோகலாமேஎன்றாள்அவள்.

 

மெதுவாக நடந்து சென்றவர்கள் ஓரிடத்தில் அமர்ந்தனர். “நான் எத்தனையோ தடவை கொடைக்கானலுக்கு வந்திருக்கேன் ஆனா இது போல நான் ரசிச்சதில்லை ஆரா. உன்னால தான் நான் இன்னைக்கு இப்படி ஒரு அழகை ரசிச்சிருக்கேன். நான் உன் மடிமேல படுத்துக்கறேன் ஆராஎன்றவன்அவள்மடிமீதுதலைசாய்த்தான்.

 

அவன் தலையை மூடி மெல்ல கோதியதை ரசித்தவன் கண் மூடி சயனித்திருந்தான். “ஆரா நாம ஊருக்கே போகலாம்ன்னு நான் முடிவெடுத்ததில் உனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையேஎன்றான்அவன். “நிச்சயமாஇல்லைங்கஎனக்குஅதுசந்தோசம்தான், ஆனாமாமா,அத்தை, தம்பி, நேத்ரா, வாசன்எல்லாரையும்விட்டுட்டுபோகணுமேன்னுதான்இருக்குங்கஎன்றாள்அவள்.

 

“ஆரா அம்மா அப்பா நம்ம கூட ஊருக்கு வர்றாங்க. ஆதவன், நேத்ரா, வாசன் மட்டும் தான் இங்க இருக்க போறாங்கஎன்றான்அவன். “என்னங்க சொல்றீங்க, நான் நாம மட்டும் தான் போறோம்னு நினைச்சேன். என்னங்க இது நாம எல்லாரும் ஊருக்கு போய்ட்ட தம்பிக்கு ரொம்பவே கஷ்டமா இருக்காதா

 

“தம்பிக்கு உயிராய் இருந்த ஆதர்ஷா போனா, அப்புறம் நாம எல்லாரும் ஒட்டு மொத்தமா ஊருக்கு போயிட்டா அவங்களுக்கு வருத்தம் தானேங்கஎன்றாள்அவள். “என்னஆராபண்றதுஅப்பாக்குகொஞ்சம்ஓய்வுகொடுக்கணும்ன்னுதானேநம்மோடகூட்டிப்போகலாம்னுசொல்றேன்என்றான்அவன்.

“இல்லைங்க தம்பி வேணா ஆபீஸ் போய் வரட்டும், மாமா அத்தை இங்கயே அவங்க கூட இருக்கட்டும். மாமா அவங்களால முடிஞ்ச உதவியை வீட்டில இருந்தே செய்வாங்க. தம்பியும் இப்போ தானே தொழில் கத்துக்கறாங்க மாமா கூட இருந்தா ஒரு பலமா இருக்குமேஎன்றாள்அவள். “நீசொல்றதும்சரிதான்அப்படியே செய்வோம்என்றான்அவன்.

 

“சரி ஊர்ல நாம ஆச்சி வீட்டில தானே தங்கப் போறோம் எனக்கு இன்னொரு விருப்பம் இரு… “நீ என்ன சொல்றப் போறேன்னு எனக்கு தெரியும் சித்தி, சித்தப்பா நம்ம கூட வந்து இருக்க சொல்லணும் அதானேஎன்றான்அவன். “நான்முடிக்கமுன்னாடிநீங்களேசொல்றீங்கஎன்றாள்அவள். “உன்னோடஇருக்கறஇத்தனைநாள்லஇதைநான்தெரிஞ்சுக்கலைன்னாஎப்படிஆரா.

“ஆனா சித்தப்பா இதுக்கு ஒத்துக்கமாட்டாங்க ஆரா, ஆச்சி எத்தனயோ தடவை அவங்க கூட வந்து இருக்க சொல்லியும் அவங்க அங்க போகவே இல்லை. நாம கூப்பிட்டா மட்டும் எப்படி வருவாங்கஎன்றான்அவன். “நீங்ககூப்பிடுறவிதத்துலகூப்பிடணும், மகனோடவீட்டிலதங்காமநீங்கஎங்கதங்கபோறீங்கன்னு கேளுங்க. கண்டிப்பா வருவாங்கஎன்றாள்அவள். “இதுஎனக்குதோணவேஇல்லையே, சரிநாளைக்கேஎல்லார்கிட்டயும்பேசறேன்என்றவன்“ஆராரொம்பநேரமாச்சுபோகலாமாஎன்றான்.

 

“இம் வாங்க போகலாம்என்றுஎழுந்துஅவர்கள்அறைக்குசென்றனர். “நான்இன்னைக்குரொம்பவேசந்தோசமா இருக்கேன்டி, உன்னால நான் நிறையவே மாறி இருக்கேன் ஆராஎன்றான்ஆதி. “நீங்கஎப்பவும்போலதான்இருக்கீங்க, உங்களுக்குவயசாகுதுலஅதான்பொறுப்புவந்துடுச்சுஎன்றாள்அவள்கிண்டலாக. “யாருக்குவயசாச்சுஇப்போவேணாபாக்குறியாஉன்னைஅப்படியேதூக்கிஒருசுத்துசுத்தறேன்என்றவன்சற்றும்தாமதியாமல்அவளைதூக்கிஒருசுற்றுசுற்றிகட்டிலில்சரிந்தான்.

 

விடிந்ததும் எல்லோரும் குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு போவதற்காக கிளம்பினர். “என்னங்க இந்த சட்டை நான் உங்களுக்காக எடுத்தது போட்டுக்கோங்கஎன்றுஒருசட்டையும்வேட்டியும்கொடுத்தாள். ஆதி உடை உடுத்தி தயாராகி வர ஆதிரா லேசாக சரிகை கரையிட்ட புடவையுடுத்தி வந்தாள். “ஜம்முனு இருக்கீங்கஎன்றாள்அவள்.

 

எல்லோரும் வெளிய வர பார்த்தால் ஆண்கள் அனைவரும் ஒரே நிறத்தில் சட்டையும் வேட்டியும் அணிந்திருப்பதை அப்போது தான் பார்த்தனர். “நீங்க தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பீங்களா நாங்களும் கொடுப்போம்என்றுமுன்னாடிநின்றாள் கீர்த்தி. ஆதி ஆதிராவை அர்த்தத்துடன் பார்த்தான். நீ தானே இந்த வேலை செய்தது என்பது போல் இருந்தது அந்த பார்வை.

 

ஆதி அவன் தாய் தந்தையிடம் அவர்களை சென்னையிலேயே இருக்கச் சொல்ல ஆதவனின் முகம் சற்று தெளிந்ததை ஆதியும் ஆதிராவும் கண்களாலே பகிர்ந்து கொண்டனர். உலகநாதனிடம் பேசி அவரை தங்களுடன் வந்து இருக்கச் சொல்ல முதலில் மறுத்தவர் ஆதி உங்கள் மகனின் வீட்டில் வந்து இருக்கமாட்டீர்களா என்று சொல்ல அவர் சம்மத்தார்.

 

காந்திமதி ஆச்சிக்கு அதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி, உள்ளுரிலேயே இருப்பதால் உலகநாதன் அவ்வப்போது வீட்டிற்கு வந்து சென்றதுண்டு, ஆனால் அந்த வீட்டில் வந்து தங்கியதில்லை. மறுவீட்டிற்கு வந்து சென்றதோடு இருவரும் ஒன்றாக வந்து இருந்ததில்லை என்ற மனத்தாங்கல் அவருக்கு இருந்தது. இப்போது அவருக்கு அந்த கவலை விட்டு போயிருந்தது.

 

பெரியவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடமும் பேசிக் கொண்டு நாளைய தலைமுறையை வழிநடத்தி (அதாங்க அவங்க பேரப்பசங்க) முன்னே செல்ல இந்த தலைமுறை தத்தம் இணையுடன் நடந்து சென்றனர். நாளைய தலைமுறையினர் எல்லோரும் ஒற்றுமையுடனும் சந்தோசத்துடனும் விட்டுக் கொடுத்தும் இன்றைய தலைமுறையை போலவே இருந்தனர்.

 

முன்னேறு எவ்வழியோ பின்னேறு அவ்வழியே என்று சொல்வர் விட்டுக் கொடுத்தலிலும் அன்பு செலுத்துவதிலும் முன்னவர்களை கொண்டு அவர்கள் நடக்க இந்த சிறப்புரையை இங்கு முடித்துவைக்கிறேன்.

 

 

 

Advertisement