சில்லென புது மழைத்துளி!

23

நாளும் கிழமையும் யாருக்காகவும் நிற்கவில்லை. 

சுபி, இயல்பான குடும்பத்தை உருவாக்கினாள்.. காலை நேரத்தில் கரணின் உறக்கத்தையும் களைத்தால்.. லக்ஷ்மிக்கு, காலையில் காபி வைத்துவிட்டு தன் வேலையை தொடங்குவாள்தான். ஆனால், அதன்பின் கரண்தான் எல்லாம்.. “இன்னிக்கு, எனக்கு ஈவினிங் வேலையிருக்கு.. விசாகனுக்கு, புட்பால் மேட்ச்.. நீங்களும் குருவும் போயிட்டு வந்திடுங்க..” என்றாள் இப்போது.

கரண் அப்போதுதான் காபி பருகி கொண்டிருந்தான்.. மாலை வேலை இருக்குமே என தன் தந்தையை பார்க்க.. சுபி “இல்ல.. திருவள்ளூர் போகனும்.. மாமாவினால், முடியாது. நீங்கதான் போகனும்” என்றாள்.

விசாலாட்சி “என்ன சொல்றான் அவன்” என்றார் கிட்சேன் உள்ளிருந்தே. இன்னமும் பிள்ளைகள் எழுந்திருக்கவில்லை.

சுபி.. அத்தைக்கு பதில் சொல்லவில்லை.. கரண் “போயிடுவேன் மா.. நீ டென்ஷன் ஆகாத” என்றான், மனையாளை பார்த்துக் கொண்டு. அப்படியே அடுத்த இரண்டுநாளும் “நான் பிசி.. ரிசார்ட்டில் ஒரு நிச்சய விழா புக் ஆகியிருக்கு.. நான் வீடு வரமாட்டேன்..” என மனையாளிடம் சின்ன குரலில் கரண் சொல்லிக் கொண்டிருந்தான். 

சுபி, அதற்கு தக்க.. அடுத்த இரண்டுநாட்களை சரி செய்துக் கொண்டாள். பின் இருவரும் சேர்ந்து.. விசாலாட்சியிடம் பிரகாஷ் தம்பியின்  கல்யாணத்திற்கு.. என்ன சீர் செய்வது என கேட்டுக் கொண்டிருந்தனர்.

இப்படியாக காலை நேரம் இன்று திட்டமிடுதலோடு தொடங்கியது. ஆனால், அடுத்த பத்து நிமிடத்தில் எல்லோரும் கிளம்பினர். 

கரண், எல்லோரையும் வழியனுப்பி வைத்துவிட்டு.. சற்று உறங்க மேலே சென்றான். ம்.. கரண், இரவில் வர தாமதமாகும் எப்போதும். அதனால், காலையில் சற்று ஒய்வு வேண்டும் அவனுக்கு.

ம்.. இருவரின் நிலையம் ஒன்று என இருவருக்குமே தெரிந்திருந்தது.. அதனால், முதலில் அந்த காயத்தினை ஆற்றுவதற்கு காலம் எடுத்துக் கொண்டனர். கரணுக்கு, சுபியின் மன அமைதி எவ்வளவு முக்கியமோ அப்படிதான் சுபிக்கு.. கரணின் தொழில்.

கரண் அடிக்கடி சொல்லுவது ரெசார்ட் பற்றிதான். அதனால், கரணின் வேலை நேரத்தை அவள் தொந்திரவு செய்வதேயில்லை. கரண் முழு நேரமாக வேலையை பார்க்க தொடங்கினான். 

சுபி, பிள்ளைகளின் விளையாட்டு படிப்பு.. பள்ளி.. பெரியவர்களின் உடல்நலம் என பார்த்துக் கொண்டாள். விசாலாட்சிக்கு, வீட்டினை கவனிப்பதிலிருந்து சற்று ஒய்வு கிடைத்ததுதான். சுபி நேரமாக வீடு வந்துவிடுகிறாள்.. விசாலாட்சிக்கு, சிலபல பயிற்சிகள் சொல்லி தருவாள். அவருக்கு சிலநேரங்களில் மூட்டு வலி வர தொடங்கியிருக்கிறது.. அதனால், கவனிக்க தொடங்கினாள். 

அருணகிரி.. உடலினை நன்றாகவே பார்த்துக் கொண்டார் எனலாம், ஆனால், விசாலாட்சிக்குதான் ஒய்வு தேவைபட தொடங்கியது. சுபி, அந்த ஓய்வினை வழங்கினாள்.

அவளின் கிளினிக் வேலைகளை மாலையோடு முடித்துக் கொண்டாள். வீட்டில் மாலை நேரத்தை செலவழிக்க தொடங்கினாள். கிளினிக்கில்.. மாலை நேரத்திற்கான பயிற்சியை கவனிக்க.. ஆட்களை ஏற்பாடு செய்திருந்தாள்.. தனி சம்பளத்தோடு. 

சுபி, இப்போதெல்லாம் அதிகமாக வேலைகளை எடுத்துக் கொள்ளவில்லை.. தன்னிடம் வேலை பார்த்தவர்களுக்கு பொறுப்பினையும் அதற்கான ஊதியத்தினையும் கொடுத்து பார்த்துக் கொண்டாள்.

அருணகிரி பேரன்களை கூட்டி செல்லுவது.. தேவையானவற்றை வாங்கி தருவது என.. பார்த்துக் கொண்டார். 

சுபி, காலையில் நேரமாக கிளம்பிவிடுவாள்.. கரண், அந்த நேரத்தில் வீட்டில் இருந்து பசங்க இருவரையும் பள்ளிக்கு அனுப்புவான். பிள்ளைகள், பாட்டியோடும் தாத்தாவோடு சேர்ந்து கிளம்பிடுவார்கள். மாசிலாமணி சிலநேரம் உணவு கொண்டு வருவார் பிள்ளைகளுக்கு.. விசாகன் அங்கே சென்றிடுவான் சிலநேரம். இப்படியாக நான்கு பெரியவர்கள் சேர்ந்தே பேரன்களை கவனித்தனர்.

சுபி மாலை நேரம் இருப்பாள் என்றால்.. கரண், இரவில் தாமதமாவதால்.. காலையில் வீட்டில் இருப்பான். மதியத்திற்கு மேல்தான் ரெசார்ட் செல்லுகிறான். ம்.. மனையாளை மதியம் சென்று பார்ப்பான், அவள் கிளினிக்கில். அவளோடு சிலநேரம் மதிய உணவு உண்டு கிளம்புவான். இருவரும் பார்த்துக்கொள்ளும் நேரம் இப்படியாகத்தான் இருந்தது. வார இறுதியில்.. பிள்ளைகளோடு.. பீச் ஹவுஸ் சென்றிடுவர், குடும்பமாக. பேலன்ஸ் செய்ய பழகினர் இருவரும். அதனூடே கண்ணுக்கு தெரியாத நெருக்கம் இருவருக்குள்ளும் பயணிக்க தொடங்கியது.

ஒருநாள் கரண், தன் கிளினிங் வரவில்லை என்றாலும்.. சுபி அழைத்து ‘என்ன கரண்.. பிசியா.. சாப்பிட்டீங்களா’ என கேட்ப்பாள். சிலநேரம்.. கரண் தானாகவே அழைத்தும் சொல்லிவிடுவான்.. ‘இன்று வேலை இருக்கு’ என.. அது போன்ற நாட்களில் இருவரும் இரவில் நேரம் எடுத்து மொட்ட மாடியில்.. சில நிமிடங்கள் பார்த்து பேசி நேரம் செலவிடும் செய்தனர்.

இருவருக்கும் என.. எந்த திட்டங்களும் இல்லை இந்த திருமண வாழ்வில் அவர்களுக்கு. நட்பு போன்ற ஒரு.. இல்லை, அதைவிட கொஞ்சம் நெருக்கமான உருவாக.. எப்படி விவரிப்பது இந்த உறவினை.. எனது இந்த தனிமையையும்.. உனது தனிமையையும்.. போக்கிக் கொள்ள.. தங்களை திருமணம் என்பதுதான் பிடித்து வைக்கும் என்றால்.. நல்லது.. அதிலேயே நாம் இணைவோம் என இணைந்துவிட்டனர். அதனூடே  பொறுப்புகளையும் அழகாக பகிர்ந்துக் கொண்டனர். இப்படி மனங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்தான். ஆனால், உடல்களுக்கான பகிர்வு இன்னும் அவர்களுக்கு வரவில்லை. அதற்கான காலம் வரவில்லை போல. ஆனால், இப்போது நிம்மதியாகவே பயணத்தை தொடங்கினர் எனலாம்..

சுபியின் அன்றாட வாழ்வில் கரண் மெல்ல மெல்ல காற்றாக மாறினான். லக்ஷ்மியிடம் எதுவாக இருந்தாலும் சொல்பவள்.. இப்போது கரணை அதிகமாக நாடினாள். விசாகனிடமும் குருவிடமும் கூட “டாட் கிட்ட சொல்லிட்டியா, அம்மாகிட்ட சொல்லணும்..” என கேட்டு பேச பழகிக் கொண்டாள். இரண்டு பிள்ளைகளின் அம்மா.. மாமனார் மாமியார்.. கணவர் என எல்லோரிடமும் ஒன்றுபோல பழகி.. தன்னை அங்கே பொருத்திக் கொண்டாள்.

சுபியின் மாற்றம் கரணுக்கு புரிகிறது.. கரண், இந்த மாற்றாத்தை முன்பு எதிர்பார்த்திருக்கவில்லை.. எனலாம். இப்போதெல்லாம், அவளோடு மதிய உணவு பேசிக் கொண்டே உண்பதற்காகவே.. இரவில் தாமதமாக வருகிறேன் என தனக்கு தானே சொல்லிக் கொண்டான். சிலநேரம், கண்களாலும்.. வார்த்தைளாலும் “நீங்கதான் போகனும் கரண்.. இது நீங்கதான் செய்யனும்.. எனக்கும் வேலை இருக்கு அத்தைக்கும் வேலையிருக்கு” என அவள் எங்கோ பார்த்துக் கொண்டு அழுத்தமாக சொல்லும் போதெல்லாம் கரண்.. அசந்தே போகிறான். அந்த வார்த்தையும் த்வனியும் அவனை என்னமோ செய்கிறதுதான். தான் மறக்கும் விஷயங்களை கூட அவள் நினைவில் வைத்திருப்பது என எல்லாவற்றிலும் தன் குடும்பத்திற்கும் தனக்கும் பொருந்திவிட்டால் என புரிகிறது. ஆனால், அவள் கண்களில்.. ஒரு தயக்கம் இருக்கிறதோ தன்னிடம்.. என தோன்றுகிறது கணவனுக்கு.

கரணுக்கு, அந்த தயக்கம் சங்கடமாக இல்லை.. ஆனால், காத்திரு.. பொறுத்திரு.. என்ற சமிக்கை மொழியாகவே தெரிகிறது. அப்போதெல்லாம் இந்த ஆண்மகன் எண்ணிக் கொள்வது.. ஆசையான திருமண வாழ்வை வாழ்ந்தவள்.. முழு காதலோடு அவர்கள் இருந்த போதுதானே விபரீதம் நடந்தது. கணவன் என பொறுப்பிற்காக என்னை ஏற்றாலும்.. காதலாக எனை ஏற்க நேரமாகும் என தனக்குதானே சொல்லிக் கொள்ளுகிறான். தந்து காத்திருப்பிற்கு காரணம் கற்பிக்கிறான். மேலும், இயல்புகளை ஏற்கிறான்.. எதுவோ ஒன்று. கரண் அப்போதெல்லாம் கம்பீரமாகிரான்.

இன்று, கரண் சுபி இருவரும் பிரகாஷ் தம்பியின் திருமணத்திற்கு.. கிளம்பினர். பிள்ளைகளின் பள்ளி.. கரணுக்கு வேலை என நிறைய உறவுகளின் விழாக்களுக்கு பெரியவர்கள் மட்டும் சென்று வந்துக் கொண்டிருந்தனர். இது முக்கிய உறவு என்பதால்.. முதல்முறை.. கரண் சுபிக்ஷா இருவரும் பிள்ளைகளோடு கிளம்பினர். 

மாலை நேர ரிசப்ஷன்.. மறுநாள் காலை திருமணம் இரண்டிற்கும் ஜோடியாகவே சென்றனர். 

மாலையில் நால்வருமாக அந்த மண்டபம் வந்து சேர்ந்தனர். முதலில் பிரகாஷின் தாத்தா பாட்டி இருவரும் புன்னகையாக வரவேற்றனர். முன்பே ஒருமுறை.. திருமணம் முடிந்து. கரண் தம்பதி இவர்களை பார்த்துதிருக்கிறார்கள்.. இப்போது பெரியவர்களின் அருகில் வந்து நலம் விசாரித்து ஆசி வாங்கினர். பின் பிரகாஷ், சாரதா.. அவர்களின் பெற்றோர் என எல்லோரும் வந்து வரவேற்றனர்.

விழா ஆரம்பித்து நடந்துக் கொண்டிருந்தது. பிரகாஷின் தம்பி வரவேற்பாக கரண் சுபி இருவரையும் பார்த்து தலையசைத்து புன்னகைத்தான். கீழிருந்த தம்பதியும் அப்படியே முகமன் கூறினார். பிள்ளைகள்.. எப்போதும் போல தங்கள் நண்பர் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது.

மரகத பச்சையில் பட்ரோஸ் பார்டர் கொண்ட பான்சி பட்டு.. உச்சி குங்குமம்.. நீண்டு தோள்தொடும் மல்லிசரம்.. வைர மூக்குத்தி.. தோதான அணிமணிகள் என.. சுபி பாந்தமாக இருந்தாள். கரணின் இரண்டாம் மனைவி என்பதால் ஒரு குறுகுறுப்போடு எல்லோரும் பார்த்தனர்தான்… முதல்பார்வையில். ஆனால், இரண்டாம் பார்வை.. அவளின் தோற்றத்தில் மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது.

எல்லோரிடமும் சுபியை சாரதாவும் விசாலாட்சியும் அறிமுகம் செய்து வைத்தனர். சுபிக்கு சாரதாவின் உறவுமுறைகள் புதிது என்பதால். 

சுபி புன்னகையோடு நலம்விசாரித்து.. எல்லோரோடும் பழகினாள்.

கரணின் கண்கள் அவ்வபோது.. சுபியிடம் இரண்டு நொடிகள் நிலைத்து.. மீண்டு.. தன்னோடு உரையாடுபவர் பக்கம் கவனம் சென்றது. பேசிக் கொண்டிருந்தவர் விடைபெற.. ‘கண்ட்ரோல் கரண்’ என எண்ணிக் கொண்டே மீண்டும் சுபியை தேடினான், பார்வையால்.

சுபி, தன் அன்னை தந்தையோடு அமர்ந்திருப்பது பார்த்து.. அருகில் வந்து நின்றான். பின்தான்.. யோசியாமல் வந்துவிட்டோமோ என பெற்றோரின் பார்வையில் உணர்ந்தான். என்ன பேசுவதென தெரியவில்லை.. “ம்மா.. போன் கொடு” என்றான்.

சுபிக்கு அதெல்லாம் தெரியவில்லை.. புன்னகையோடு கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

விசாலாட்சி “இங்க என்ன டா பண்ற.. போ.. பிரகாஷோடு நில்லு” என்றார்.. அதட்டலாக.

கரண் கண்களை விரித்து தன்னை சரிசெய்துக் கொண்டவன் “சரிரிரி.. போன் கொடு” என சொல்லி.. காரணமே இல்லாமல்.. போனினை வாங்கிக் கொண்டு, எரிச்சலாக கரண், பிரகாஷிடம் சென்றான்.

விசாலாட்சி ‘ஊர் கண்ணே இவங்க மேல்தான்.. இதில், இங்கேயே நின்னுக்கிட்டு’ என தனக்குள் எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தார்.. மருமகளை மகனோடு விடாமல்.

ம்.. நிறைய முகங்கள் இவர்களை பார்வையால் வருடி.. கண்டுக் கொண்டது. பேசியது.. வாழ்த்தியது.. புன்னகைத்தது உள்ளார்ந்து. அதை இருவராலும் கண்டுக் கொள்ள முடிந்தது. விசாலாட்சியும் கண்டுக் கொண்டார். அதான், இந்த ஏற்பாடு.

நேரம் கடந்தது.. பிள்ளைகளை உண்ண வைத்து.. குடும்பமாக மணமக்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு.. குடும்பத்தார் எல்லோரும் உண்டு கிளம்பினர். நாளை வரவேண்டும் என்பதால்.. விசாலாட்சி அருணகிரி இருவரும் இங்கேயே தங்கிக் கொண்டனர். கரண் தம்பதி பிள்ளைகள் என நால்வர் வீடு வந்தனர்.

காரிலிருந்து இறங்கியதும்.. பிள்ளைகள் ஓட்டமாக சென்று.. சைக்கிளை எடுக்க.. சுபியோடு இறங்கியவாறே, அவர்களை  சப்தமிட.. கரண்
“சுபி.. சரீ’யை.. சேன்ஜ் பண்ணிடாத..” என சொல்லிக் கொண்டே.. இறங்கினான்.

சுபிக்கு கணவன் சொன்னது சரியாக கேட்க்கவில்லை.. சேன்ஜ் பண்ணிடாத என மட்டும் கேட்டது.. பிள்ளைகளை மிரட்டிவிட்டு.. என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டே கணவன் திறந்த கதவினுள் நுழைந்தாள் பெண்.

பிள்ளைகளை உடைமாற்ற பணித்து.. சுபி அமர.. கரண் ஐஸ் வாட்டர் எடுத்து பருகிக் கொண்டே.. “பசங்களா.. இருங்கடா.. வாங்க ஒரு ஸ்னாப் எடுத்துக்கலாம்” என்றான்.

விசாகன் “டாட்.. அது செல்பி..” என்றான்.

கரண் “சரி டா.. வா வா..” என அழைக்க.. நால்வருமாக சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர்.. அப்போது.. தன் தோளில் கணவனின் கை இருப்பதை உணர்ந்தாள் பெண். சுபியின் கன்னம் லேசாக சிவந்தது. கரண்.. மீண்டும் ஒரு செல்பி எடுக்க.. குரு “போதும் ப்பா” என சொல்லி.. அமர்ந்தான். விசாகனும் அப்படி செய்ய.. இப்போது கணவன் மனைவி இருவரும் அருகருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். லேசான வெட்கத்தோடு சுபியும்.. அதை இரசிப்பவனாக  கரணும் என.. நீண்ட நாட்களுக்கு பிறகு.. தங்களுக்குள் எதோ ஒன்றை உணர்ந்தவர்களால நின்றனர்.

பிள்ளைகள் பேசிக் கொண்டே டிவி பார்க்க.. கரண் “இப்போ போய் சரீ.. சேன்ஜ் பண்ணிக்கோ” என்றான், மனையாளிடம்.

சுபி, எழுந்து செல்லவில்லை.. அருகிலிருந்த கரணின் கரம் பற்றினாள்.. கரண், அதிர்ந்து பெண்ணவளின் கண்களை ஆராய.. அதில் வெட்கம் மட்டுமே. கணவனுக்கு நிரம்ப திருப்தி.. லேசாக அவளின் விரல்களை சுண்டி.. அவளை தன் தோள் சாய்த்துக் கொண்டான்.. சுபிக்கு எந்த உறுத்தலும்.. நினைவுகளும் இல்லை.. நிம்மதியாக கணவனின் தோள் சாய்ந்தாள். கரணுக்கு அவளின் விரல்களின் ஸ்பரிசம் வேறு உலகிற்கு அழைத்துக் கொண்டிருந்தது.. கரண் “கொஞ்சம் கிட்ட வரது” என்றான்.

நெருங்கி அமரவில்லை.. என்பதால் கரண் சொன்னான்.. சுபி “பசங்க.. உள்ளேதான் இருக்காங்க.. இன்னும் தூங்கலை” என்றாள்.

கரண் ஏதும் பேசாமல் தான் வந்து.. அவளின் அருகில் அமர்ந்தான்.. பெண்ணவளின் மற்றொரு கையினை எடுத்து முத்தமிட்டான்.. மென்மையான உள்ளங்கை.. அவனின் காய்ந்த உதடுகளில் இதமாக உரச.. விடுவிக்க மனதேயில்லை கணவனுக்கு. சுபி, தன் கையை இழுத்துக் கொள்ள.. மென்மையாக அவளை நெருங்கியவன்.. அவளின் உதடுகளை.. அழுத்தமான தன் உதடுகளால் சிறை செய்தான். ம்கூம்.. சுபிக்கு, தொலையத்தான் முடிந்தது.. மீள்வது அவன் உதடுகளிடம்தான் இருந்தது.  இந்த காதலோடு சேர்ந்த ஆசை மட்டும் ஏன் தீயாய் தகிக்கிறது.. என அவனுக்கு புரியவேயில்லை இப்போது. 

இப்போது விசாகன் “அம்மா..” என அழைத்துக் கொண்டே ஓடி வர.. இருவரும் இயல்பாகினர். விசாகன் இருவருக்கும் நடுவில் வந்து அமர்ந்தான்.. குரு பின்னாலேயே வந்து.. சுபியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

கரண், புன்னகை வடிய.. தள்ளி அமர்ந்தான் “என்ன டா.. இன்னும் தூங்காமல் என்ன பண்றீங்க.. நாளைக்கு காலையில் சீக்கிரம் போகனும்” என்றான்.

குரு “நாளைக்கு ஸ்கூல் லீவ்தானே ப்பா.. அப்புறம் என்ன ப்பா.. இங்க கொஞ்ச நேரம் மாம் கூட டிவி பார்த்துட்டு தூங்கறோம்” என்றனர்.

கரணுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. மேலே சென்றான் சுபியிடம் கண்களால் விடைபெற்று.

பிள்ளைகள் உறங்கவும்.. கரண் இன்று கீழே சுபியோடு வந்து உறங்கினான்.. அவளை அணைத்துக் கொண்டே.

தாமதமாக உறங்கி.. காலையில் அவசரமாக எழுந்து.. மீண்டும் திருமணத்திற்கு சென்றனர் கரண் குடும்பம்.

நாட்கள் வேகமாகவே கடந்தது.

சங்கீதா கூட கரண் சுபி, அன்னுன்யமாக வாழ்கிறார்களா.. இல்லை, நட்பாகத்தான் இருக்கிறார்களா என சந்தேகம் வந்தது. அதை அடிக்கடி சங்கீதா கேட்டுக் கொண்டே இருப்பாள்.. ‘என்ன முகம் ஜொலிக்குது.. எதோ விஷேசம் போல’ என்பாள் கரணிடம். தங்கையிடம் ‘ம்.. ஒருவருஷம் ஆகபோகுது இன்னும் சிறப்பாக ஏதுமில்லை போலவே’ என்பாள்.

யார் எப்படி கேட்டாலும் இருவர் பதிலும் புன்னகைதான். கரணோ சுபியோ இன்னொரு குழந்தை என்ற முடிவினை எடுக்கவேயில்லை. அதனால், யார் என்ன சொன்னாலும்.. அதை மனதிலே எடுத்துக் கொள்வதில்லை.. புதிதாக என்ன சொல்லிவிட போகிறார்கள்.

வினு சாரதா கூட.. உங்க வாழ்க்கை பற்றி சொல்ல ஒரு வாரிசு வேண்டாமா எனகூட கேட்டுப்பார்த்தனர். பதில் என்னமோ புன்னகைதான். யாருக்கும் பதில் இல்லை அவர்களின் வாழ்க்கையில். இது அவர்களுக்கான வாழ்க்கை.. இதில் யாருக்கும் பதில் சொல்ல தோன்றவில்லை அவர்களுக்கு.

பிள்ளைகள் அறையில் இப்போதெல்லாம் கரண் சுபியோடு உறங்க தொடங்கினான். சின்ன உரசல்.. லேசான அணைப்பு என சற்று முன்னேற்றம்தான்.. அவர்கள் வாழ்வில்.

கரணுக்கு, சுபியின் தனிமை மீண்டும் கிடைக்க.. முதல் வருட திருமணநாள் ஆனது. காத்திருந்தான். காத்திருப்பின் பலன் எப்போதும் நிறைவுதானே.. கரண் சுபியை முழுதாக தனதாக்கிக் கொண்டான், இந்த இரவில்.

கம்ப்ளிட்.. என்பதாக இருந்தது. வாழ்க்கை இரண்டாம்முறையும் தொடங்கும்.. நிலைக்கும்.. நிறைவாகும் தானே.

“அறியாத புது வாசம்..

அகமெல்லாம் இனிவீசும்..

அதில்தானே கரைந்தோடும்..

நம் வாழ்வின் வனவாசம்..

காதல் கொஞ்சம்.. காற்று கொஞ்சம்..

சேர்த்துக் கொண்டு செல்லும் நேரம்..”