சஞ்சனா…
ஹாய் ஃபிரண்ட்ஸ்,
சஞ்சனா கதை உருவாகியதைப் பற்றிய சின்ன பின்னோட்டம்….
இக்கதை ஆரம்பிக்கும் போதே , இது வழக்கமான காதல் கதையாக இருக்கப் போவதில்லை என்பது தெரிந்தது.ஆனாலும் சில விஷயங்களைப் பேச வேண்டும் என்பதற்காகவே, இந்தக் கதைக்கருவை தேர்ந்தெடுத்து எழுதினேன்.
இன்று பெண்களைத் தப்பாக படம்பிடித்து, இணையத்தில் வெளியிடுவோம் என்று பயமுறுத்தி பாலியல் சுரண்டல்களுக்கு ஆளாக்குவதை தொடர்ந்து செய்திகளில் பார்க்கிறோம்.
அதேபோல் இன்றைய இளம்பெண்கள் ஓர் ஆர்வத்தில் தன் காதலனோடு இருக்கும் காட்சிகள், இல்லை காதலுனுக்கு ஏதோ ஒரு நம்பிக்கையில் அனுப்பிய பிரத்தியேகமான படங்கள், பின் நாளில் அவர்களுக்குள் பிரிவு ஏற்படும் பொழுது அதை அசிங்கமாக, வெளியிடுவதையும் இன்று மிகவும் சகஜமாக காண்கிறோம்.
மேலும் பொது இடங்களில், குனியும் போது , நிமிரும் போது, குளிக்கும் போது விலகும் ஆடைகள் வைத்து ஆபாசமாக எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் உலா வருவதைக் காண்கிறோம்.
இதில் இருந்து நாம் புரிந்து கொள்வதெல்லாம், இன்றைய விஞ்ஞான உலகில், எல்லோர் கையிலும் கேமிரா இருப்பதால், சில விஷயங்களில் இருந்து தப்புவது கடினம். ஆகையால் இச்சிக்கலில் சிக்கும் பெண்களும் சரி, அவர்கள் பெற்றோர்களும் இணையத்தில் வெளியிடுவதை ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து செல்ல வேண்டும் என்றும் மிரட்டகளுக்கு அடி பணிய கூடாது என்பதையும், வலியுறுத்துவதே இக்கதையின் பிரதான நோக்கம்.
அதையும் மீறி பாதிக்கப்படுபவர்கள் சந்திக்கும் மன அழுத்தங்கள் பற்றியும், அவர்கள் அதை எதிர் கொள்ள, பெற்றோரும், குடும்பமும் சுற்றமும் எவ்வளவு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையும் பேச நினைத்தேன். அதுதான் விஜயன் போன்ற ஈகோயிஸ்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்.
அதேபோல மஞ்சுவின் மரணத்தை, மாரடைப்பு மரணம் இல்லை விபத்து என்று எப்படி வேண்டுமானாலும் கொண்டு போயிருக்கலாம். ஆனால் கொரோனா மரணமாக கொண்டு போனதிற்கு முக்கிய காரணம். என்று நினைத்தேன். பல வருடங்களுக்குப் பிறகு கொரோனா பற்றி தெரியாத தலைமுறை இக்கதையைப் படிக்கும் பொழுது, கொரோனா ஆடிய கோர தாண்டவத்தைப் பற்றி தெரிந்து கொள்வார்கள் என்பதற்காகவே கொரோனா காலத்தைப் பின்னணியாக கொண்டு இக்கதையை அமைத்தேன்.
அதே போல் எந்தவொரு துன்பமும் கடந்து விடும், நிச்சயமாக எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கையையும் விதைக்க வேண்டும் என்று விரும்பினேன். இவ்வாறு பல்வேறு சிந்தனைகளில் உருவான கதை தான் சஞ்சனா.
உங்களுக்குப் பிடித்திருக்கும் என் நம்புகிறேன். மேலும் உங்கள் விரிவான கருத்துக்களை, விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். சிறிய இடைவெளியில் மற்றுமொரு புதிய கதையுடன் சந்திக்கிறேன்.
எனக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றிகள். மிக முக்கியமாக, இக்கதைக்குத் தொடர்ந்து தங்கள் கருத்துக்களைப் பதிவிட்ட, என் தோழிகளுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றிகள்.
அன்புடன்,
சண்முகபிரியா
பின் குறிப்பு
என்னுடைய முந்தைய கதைகளான
-
காதல் வைபோகமே… மற்றும்
-
ஆனந்தக் குயிலின் பாட்டு….