அதைக் கேட்டு மாலினி அதிர்ச்சியில் உறைந்தே போனாள். மணி அவளைப் பார்த்து கிண்டலாகச் சிரித்துவிட்டு, காரின் வேகத்தை அதிகப்படுத்த… அப்போது மாலினிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. இனி இவனிடம் இருந்து தான் தப்பிக்க முடியாதோ என்ற ஆத்திரம் வேறு, இருந்த கோபத்தை எல்லாம் திரட்டி, அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தாள்.
எதிர்பாராமல் விழுந்த அறையில் மணி ஒரு நொடி அதிர்ந்து போய் அவளைப் பார்த்தவன், பிறகு கோபத்தில் அவனும் அவளை அடிக்க வர, ரோட்டில் இருந்த கவனம் சிதறியது.