இதோ மாணிக்கம் இளவரசியை அழைத்து வந்திருந்தான் தாரகனின் கட்டு பிரிப்பதற்காக, அந்த வேலையை செய்து முடித்தவன் ஒரு சிறிய பேண்டேஜ் மட்டும் போட்டு, நடங்க ஆனா கால்ல அதிக வெயிட் குடுக்க வேண்டாம் ஒரு வாரத்துக்கு, வண்டி இந்த கால்ல ஸ்டார்ட் பண்ண வேண்டாம் ரெண்டு வாரத்துக்கு என்று சொல்ல

சரி என்று தலையாட்டினான்.

இவர்களை விட்டு அலர் செல்ல, சாரி அன்னைக்கு ராஜவேல் வர்றது தெரியாது என

உன் தம்பி உன் வீட்டுக்கு வர்றான் அதுக்கு என்ன டாக்டரு, சாரி எல்லாம் கேட்காத, அவன் எதுவும் பண்ணலை, பண்ணினா நீ சாரி கேட்டாலும் அதுல பிரயோஜனமில்லை, துவைச்சு தொங்க விட்டுடுவேன் உன் அப்பன் தாத்தன் யார் வந்தாலும். மிரட்டுறேன்னு தப்பா நினைக்க கூடாது. செய்யப் போறதை சொல்றேன் என்றான் தாரகன்

மாணிக்கவேல் அவனை அப்படியே பார்க்க,

அதுகெல்லாம் அவசியம் வராது. அவன் எதுவும் பண்ண மாட்டானா தெரியாது ஆனா அலர் பண்ற அளவுக்கு விடமாட்டா அவளே திருப்பிக் கொடுத்துடுவா

இந்த முறை இவ தான் வம்பு பண்ணியிருக்கா அதனா இந்த முறை நான் தான் சாரி கேட்கணும்

இதென்ன அண்ணா, அலரை வம்பு தும்புக்கு போக வேண்டாம்னு சொல்வீங்கன்னு பார்த்தா அவளே பார்த்துக்குவா சொல்றீங்க என

எதுக்கு சொல்லணும், முன்னெல்லாம் நானே எதுக்கு இப்படி போகணும்னு நினைப்பேன். ஆனா இப்போ அப்படி தோணுறது இல்லை. எனக்கு தெரியும் அவளுக்கு முடியலைன்னா அடுத்த நிமிஷம் என்னை கூப்பிடுவா, அவளுக்கு நான் இருக்கேன், விசாகன், அகிலன் கபிலன் ஆதி ன்னு இத்தனை பேர் இருக்காங்க

அவளே பயந்து போய் எங்களை கூப்பிட்டா, அப்புறம் நிஜமாவே பயந்து இருக்குற பொண்ணுங்க, கூட யாரும் நிக்காத பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க

பொண்ணுங்க தைரியமா இருக்கணும் அதே சமயம் அதை எப்படி உபயோகப் படுத்தனும்னு தெரியணும், தேவையில்லாம சீண்டி பிரச்னையை பெருசாக்கக் கூடாது என்று பேச

என்னவோ போங்கண்ணா எங்க தாத்தாவை விட அதிகம் பேசறீங்க அரசியல்ல நிக்க போறீங்களா என

அதுக்கெல்லாம் திறமை தைரியம் மக்கள் செல்வாக்கு மட்டும் இருந்தா போதாது காசு வேண்டும் தம்பி காசு வேண்டும் அதை கண் மண் தெரியாம இறக்கி இறங்கி விளையாடனும், என்கிட்டே அவ்வளவு காசு இல்லை, அப்படியே இருந்தாளும் எனக்கு மனசு வராது டாக்டரு என்று அவன் சொல்ல

ம்ம் அடுத்த வருஷம் இலக்ஷன் வருது போல் என்று அரசியல் பேச ஆரம்பித்தனர்.

அரசியல்ல நிக்க போறீங்களா என்ற போதே அலர் உள்ளே வந்திருந்தாள். தாரகன் பேசியதையும் கேட்டிருந்தாள் அவர்கள் பேச்சு சுவாரசியத்தில் இவளை கவனிக்கவில்லை பின் அவர்கள் அரசியல் பேச ஆரம்பிக்கவும் வெளியே வந்து விட்டாள்

அவளுக்கு இளவரசியின் வளைக்காப்பை பேச வேண்டி இருக்க, தாத்தாவிடம் சென்றவள், என்ன எந்த மாசம் எல்லாம் பேசுங்க தாத்தா இப்போவே ஏழு மாசமாச்சு என்று சொல்ல, முன்பே வீட்டின் பெண்கள் சேதுபதியிடம் சொல்லித் தான் இருந்தனர். இப்போது அலர் வந்து சொல்ல, மாணிக்கவேலை வெளியே அழைக்க, தாரகனும் உடன் வந்தான்.

இளவரசி அதுவரையும் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருக்க, அவள் வந்தவுடன் யார் கிட்ட இளா இவ்வளவு நேரம் போன், என்று அலர் கேட்க,

அது ஃபிரண்ட் என்று அவள் சொல்ல

நாப்பது நிமிஷம் பேசியிருக்க, பாப்பா வயத்துல இருக்கு, நீ போன் பேசிட்டே நடக்கற, கவனமில்லாம எங்கேயும் இடிச்சிக்கிட்டா, நாளைக்கு பாப்பா பொறந்த பிறகும் இப்படி பேசிவியா, இப்போவே இவ்வளவு நேரம் பேசறதை கட் பண்ணு, ரெண்டு தரம் உட்கார சொன்னேன் அது கூட கவனமில்லை என்று கண்டிப்பாய் பேசி, மாணிக்கவேலை பார்த்து முறைத்தாள்.

பண்ணினது அவ இவ ஏன் இவனை பார்த்து முறைக்கிறா என்று தாரகன் பார்க்க

மாணிக்கவேலோ அலரின் முறைப்பில் சொன்னது இது தான், இனி கவனமா பார்த்துக்கறேன் என்று

அலரின் பார்வை அவனுக்கு சொன்னதும் அதுதான், இதெல்லாம் பார்க்காம என்ன பண்றீங்க,

அலர் முறைத்ததும் மாணிக்கவேல் பதிலளித்ததும், இளவரசி அலரை பார்த்து என்ன நீ மாமாவை முறைக்கிற என

ஏன் முறைச்சா என்ன? உன்னை கல்யாணம் பண்ணி குடுத்திருக்கோம் அவ்வளவு தான். அதுக்குன்னு எதுவும் கேட்க மாட்டோம்னு கிடையாது. நீ அவரா இருக்கலாம் அவர் நீயா இருக்கலாம் அது உங்களுக்குள்ள. எப்பவும் உனக்கு அவர் பொறுப்பு, நீ ஏதாவது கோக்கு மாக்கு செஞ்சாலும் அவர் தான் பதில் சொல்லணும். வீட்ல நீ எப்படி உன்னை பத்திரமா பாத்துக்கற ன்னு எங்களுக்கு எப்படி தெரியும். அப்படி என்ன பேச்சு சுவாரசியம். இன்னும் கொஞ்சம் நேரம் பேசியிருந்த போனை வாங்கி கடாசியிருப்பேன்  என்று சொல்ல

மொத்த வீடும் பே என்று பார்க்க, மாணிக்கம் தப்பாய் எடுத்துக் கொண்டானோ என்றும் பார்க்க,

தாரகன், இதென்னடா இவ தாத்தாவை விட பேசறா என்று நினைத்தவன், சேதுபதியை பார்க்க என் பேத்திடா டா என்று லுக்கு விட்டு அவர் நின்றிருக்க, நொந்து விட்டான்.

பின்னர் தாரகன் அலரை ஒரு கண்டனப் பார்வை பார்க்க, அலரின் வாய் போட்டுப் போட்டுக் கொண்டது, ஆனாலும் முறைப்பு மாறவில்லை.

சூழலை இலகுவாக்க மாணிக்கவேலை பார்த்து, என்ன டாக்டரு இந்த வீட்ல ரொம்ப பேசறாங்க, வேற வீட்ல பொண்ணு கட்டியிருக்கலாம்னு தோணுதா என்று கேட்க

அண்ணா கும்மி அடிச்சிடாதீங்க என்று கும்பிட்டவன், அலர் சொல்றது சரிதானே, டாக்டருங்க நாங்க, நாங்க அடுத்தவங்களுக்கு சொல்லணும் நாங்களே அலட்சியமா இருக்கலாமா என்றவன் கூடவே சிறு புன்னகையுடன் இல்லை அலரை பேசினா நீங்க என்னை சும்மா விடுவீங்களா என்றான்.

நீ பலே ஆள் டாக்டரே என்றான் தாரகன் அவனின் தோளை தட்டி பெரிய சிரிப்புடன் சொல்ல,