Advertisement
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 42-2
தனக்கு முன்னே நின்றிருந்தவனை காதலுடன் பார்த்திருந்தாள் ஸ்ரீகா. இத்தனைப் பரிசுகள், இப்படியொரு காதல் பார்வை அனைத்துமே புதிதாக இருந்தது அவளுக்கு. அதையே அவனிடம் கேட்பவளாக “என்ன அமைச்சரே சட்டுன்னு ரொமான்டிக்கா மாறிட்டிங்க..” என்று அவள் அதிசயிக்க, இப்போது தனக்கானவளை முறைத்தான் அமைச்சன்.
அவன் முறைப்பில், “என் அம்மாஞ்சி சாமியார் இப்படி அதிரடி காட்டினா, நான் என்ன செய்வேன்… எனக்கு நம்ப கொஞ்சம் நேரம் எடுக்கும் இல்ல..” என்று மீண்டும் சிரித்தாள் ஸ்ரீகா.
“நான் அம்மாஞ்சி சாமியாரா… அதிகம் வாய் பேசுற நீ..” என்றவன் அவள் இதழ்களை கைகளால் சுண்டிவிட, “வலிக்குது ராம்..” என்று சிணுங்கி வைத்தாள் அவள்.
அவள் சிணுங்கலில் “மோஹினி.. மயக்கறடி..” என்று அவளை இடையோடு கட்டிக் கொண்டான் ஜெய்.
“ஆமாமா.. மயங்கிட்டிங்க..” என்று அவள் சிலிர்க்க
“ஏன் ஒத்துக்க மாட்டியா..”
“சரியான ரோபோ நீங்க.. உங்களைப் போய் எப்படி லவ் பண்ணேன் நான்..” என்று அவள் சத்தமாக யோசிக்க, அதற்கும் புன்னகைத்தான் நம் புன்னகை மன்னன்.
“இதோ.. இதுதான் இப்படி சிரிச்சு சிரிச்சே என்னை மயக்கி வச்சிருக்கீங்க.. இதுல மயக்கிட்டேன்.. மயங்கிட்டேன் ன்னு பேச்சு வேற..” என்று அலுத்து கொண்டாள் ஸ்ரீகா.
“உன் வாய் குறையுதா…” என்ற ஜெய் அவள் வெற்றிடையை அழுத்தமாக பற்றிக் கொண்டான். அதில் ஸ்ரீகாவின் பேச்சு தடைப்பட, அவளை இன்னும் தன்னோடு நெருக்கிக் கொண்டான் ஜெய்.
அவள் காதுமடலில் தன் இதழ்களை உரசியவன் “வாழ்த்துக்கள்… என் நடனபிசாசுக்கு…” என்று தன் வாழ்த்துக்களை வார்த்தைக்கு வார்த்தை முத்தங்களுடன் அழுத்தமாக அறிவிக்க, அவன் வாழ்த்துதலில் வழக்கம்போலவே கிறங்கி நின்றது பெண்.
கண்கள் தாமாக மூடிக் கொண்டாலும், ஜெய் வாழ்த்தியதில் மொத்தமும் நிறைந்து போன உணர்வு. மெல்ல விலகியவனின் கண்களை காதலுடன் பார்த்தவள் “உங்களுக்கு சந்தோஷமா… ” என்றாள். முகத்தில் காதலும், எதிர்பார்ப்பும் சரிவிகிதத்தில் போட்டி போட்டது.
“எப்படி இல்லாம போகும்ன்னு நினைக்கிற நீ..” என்று கேள்வி எழுப்ப
“டான்ஸ் விட்டுடு ன்னு சொன்னிங்க இல்ல…” என்றாள் மனைவி.
“விட்டுட்டியா..” என்று கணவன் கேட்க, முறைப்புடன் அவனிடம் இருந்து விலகப் பார்த்தாள் அவள். “ஏண்டி படுத்தி வைக்கிற..” என்று அவளை மீண்டும் இழுத்துக் கொண்டவன் “என்ன வேணும் இப்போ..” என்றான் காதலாக.
“ஒன்னும் வேண்டாம்… போங்க.” என்றவள் முகத்தை திருப்ப, அவள் கன்னத்தில் முத்தமிட்டு கடித்து வைத்தான் ஜெய்.
“ராம்..” என்று ஸ்ரீகா அலற,
“டேஸ்ட்டி..” என்றான் சிரிப்புடன். ஸ்ரீகா அவன் நெஞ்சில் அடிக்க, அவள் கையை விடாமல் பிடித்துக் கொண்டான் அமைச்சன்.
“ஹேய் மோஹினி…. என்ன சொல்லணும் உனக்கு. ” என்றவன் அவள் இடையில் மீண்டும் அழுத்தம் கொடுக்க, அவன் மற்றொரு கை அவள் அடிவயிற்றை கட்டிக் கொண்டது.
ஸ்ரீகா வழக்கம்போல் கேட்க நினைத்ததை மறந்து போக, “இப்படி பண்ணா, நான் என்ன சொல்ல..” என்றாள் பாவமாக
“ஏன்.. ராம் ஐ லவ் யூ ன்னு சொல்லு..” என்றவன் அவள் தோளில் தன் தடத்தை பதித்தான்.
“ம்ம்.. ஒருமுறை சொன்னதுக்கே ஆயுள் தண்டனைல மாட்டிட்டேன்.. இதுல மறுபடியுமா.. நோ வே..” என்றாள் சிரிப்புடன்.
“அப்போ இப்படியே இரு…” என்றவன் தன் பிடியை இறுக்க,
“ரொம்ப பண்றிங்க நீங்க.. நான் ஒருமுறை சொன்னதுக்கே இப்போவரை பதில் சொல்லல.” என்று ஸ்ரீகா குற்றம்சாட்டிட
“நான் ஏன் சொல்லணும்.. ஒரு வீட்டுக்கு ஒருத்தர் பைத்தியமா இருந்தா போதாதா..” என்று கண்சிமிட்டினான் ஜெய்.
“நான் பைத்தியமா..” என்றவள் அவன் கன்னத்தில் பட்டென்று அடித்து வைக்க,
“நீ ராம் பைத்தியம்டி… உனக்கு என்மேல பைத்தியம்..” என்றான் ஜெய்.
அவனை கடுப்பாகப் பார்த்தவள் “அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. தள்ளிப் போடா..” என்றுவிட
“என்னடி டா சொல்ற..”
“ஏன் நீ சொல்லல… என்னை பைத்தியம் னு வேற சொல்ற..” என்று மூக்கில் காற்றடிக்க, அவள் தலையில் தட்டியவன் “இதெல்லாம் ஒரு பீல்.. உனக்கு புரியாது. என் பொண்டாட்டிக்கு என் மேல அப்படி ஒரு லவ்…
“நான் என்ன செய்தாலும் அப்படியே ஏத்துக்கிற அளவுக்கு ஒரு லவ். நான் தப்பே செய்தாலும் என்னை விட்டு விலகாம, என்கூடவே இருந்து என்னை காதலிக்கிற அளவுக்கு காதல் என் மோகினிக்கு.”
“இங்கே எத்தனைப் பொண்ணுங்க, தான் ஒருத்தரைக் காதலிக்கிறேன் ன்னு வெளியே வெளிப்படையா சொல்வாங்க.. லவ் இருக்குன்னு தெரிஞ்சாலும், பசங்க தான் முதல்ல சொல்லணும். ஆனா, என் பொண்டாட்டி என்கிட்டே எந்த ஈகோவும் இல்லாம லவ் சொல்லி, எனக்கும் லவ் பண்ண சொல்லிக் கொடுத்தவ… இதெல்லாம் எத்தனைப் பேருக்கு கிடைக்கும்..” என்று பெருகிய காதலோடு கர்வத்துடன் அவன் கூற,
“அதிர்ச்சியிலே இங்கே லேசா வலிக்குது ராம் எனக்கு..” என்று நெஞ்சைத் தொட்டுக் காட்டினாள் ஸ்ரீகா.
“அச்சோ.. ஹார்ட்ல வலிக்கக்கூடாதே மோஹினி.. உள்ளே இருக்க எனக்கு எதுவுமோ..” என்றவன் அவள் இரவு உடையை விலக்க முயல, விடாமல் இழுத்துக் கொண்டாள் ஸ்ரீகா.
“நீதானே வலி ன்னு சொன்ன.. இதெல்லாம் உடனே பார்த்திடனும்.. பார்த்து ட்ரீட்மெண்ட் பண்ணிக்கலாம் .. காட்டு..” என்றவன் மீண்டும் அவள் உடையைப் பற்ற,
“நீங்க டாக்டரா..” என்று அவன் மண்டையில் தட்டினாள் மனைவி.
“இங்கெல்லாம் வலிச்சா, நான் தான் ட்ரீட்மெண்ட் பண்ணனும்..” என்றான் ஜெய்.
“இன்னிக்கு என்ன ஓவர் ரொமான்ஸா இருக்கு..” என்று ஸ்ரீகா கேட்க,
“ஸ்வாமிஜி பரவசநிலையில் இருக்கிறோம் பக்தையே..” என்றவன் அணைப்பை இருக்க, “என்னாச்சு உங்களுக்கு..” என்றாள் மனைவி.
அவள் தோளில் புதைந்து கொண்டவன் “தெரியலையே… கொஞ்சமா ஸ்ரீகா பைத்தியம் பிடிக்க தொடங்கி இருக்கோ…” என்றான். அவன் இதழ்கள் தோளில் உரசிக் கொண்டிருக்க, அதுவேறு ஒருபுறம் இம்சித்தது அவளை.
அதற்கும் மேல் அவன் வார்த்தைகள் நிறைக்க, “நிஜமாவே என்னமோ ஆகிடுச்சு மினிஸ்டரே…” என்று காற்றாக வந்தது அவள் குரல்.
“ஆமா.. என்னமோ பண்ணிட்ட என்னை…” என்று அவளை அணைத்தபடியே கட்டிலில் விழுந்து வைத்தான் அவன். அவன் நெஞ்சில் அழகாக படுத்துக் கொண்டவள் “இப்போ சொல்லுங்க.. என் டான்ஸ் பிடிக்குமா இல்லையா..” என்று கேள்வி கேட்க
“பிடிக்காது போடி..” என்றான் கடுப்புடன்.
அவன் நெஞ்சில் தன் கையை மூடி குத்தியவள் “இதுக்காகவே உன்னை டிவோர்ஸ் பண்றேன் பாரு..” என்று அவன் நெஞ்சில் இருந்த முடிகளை பிடித்து இழுக்க, “ஆ…”என்று வலியில் அலறினான் ஜெய்.
“ஹேய் வலிக்குதுடி..” என்று கத்த
“என் டான்ஸ் பிடிக்காது இல்ல.. வலிக்கட்டும் உனக்கு..” என்று மீண்டும் இழுத்து வைக்க, சட்டென அவளை கீழே தள்ளி அவள்மீது புரண்டிருந்தான் ஜெய்.
“பிடிக்கலைன்னா கிள்ளி வைப்பியா.. எனக்கு இந்த டிரஸ் பிடிக்கல..” என்றவன் அவளை தான் நினைத்த இடங்களில் எல்லாம் கிள்ளியும், கடித்தும் வைக்க, அவன் தண்டனையை முடிக்கும் நேரம் அவள் உடைகள் தூரப் போயிருந்தது.
இப்போதும் ஸ்ரீகா அவன் கைக்குள் இருக்க, “ஹேய்.. அந்த சலங்கையை எங்கேயோ போட்டுட்டேன்..” என்று தலையில் தட்டிக் கொண்டே அவள் எழ, அவளை விடாமல் பிடித்துக் கொண்டான் அவளின் ராம்.
“உனக்கு நான் வேணுமா.. சலங்கை வேணுமா..” என்று கேள்வி வேறு..
“நீங்க இங்கேதான இருக்கீங்க.. எனக்கு என் சலங்கை வேணும்..” என்றவள் எழுந்து கொள்ளப் பார்க்க,
“காலையில் தேடிக்கோ..” என்றவன் அவளை பேசவே விடாமல், அவள் வாயை அடைத்து இருந்தான். அவன் முதுகில் அவள் அடித்ததோ, கிள்ளியதோ எதுவும் உரைக்காதவன் போல் அவன் வேலையைத் தொடர, இறுதியில் ஸ்ரீகா “எப்படியோ போ..” என்று விட்டுவிட்டாள்.
அவன் கையணைப்பில் அவள் உறங்கியும் இருக்க, காலை எழுந்தவள் கால்களில் மெல்லிய சத்தத்துடன் உறவாடிக் கொண்டிருந்தது அந்த புதிய சலங்கை. அதன் சிணுங்கல் ஒலியில் ஸ்ரீகாவின் உறக்கம் கலைய, “எங்கிருந்து சத்தம் வருகிறது..” என்று யோசித்தவள் அதன்பின்பு தான் தன் கால்களைப் பார்த்தாள்..
பார்த்த நொடி ஜெய்யின் மீது காதல் பெருக, அருகில் உறங்கி கொண்டிருந்த அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் அவன் இதழ்களைத் தீண்ட, இப்போதும் அவளை விடாமல் தனக்குள் இழுத்துக் கொண்டான் ஜெய்ராம் கிருஷ்ணா… அந்த மெல்லிய சலங்கை ஓசை அவர்கள் காதலுக்கு ஜதிப்போட, மீண்டும் ஒருமுறை சங்கமித்தது காதல்.
—————————————————
Advertisement