பூத்தது ஆனந்த முல்லை -15

அத்தியாயம் -15

வினயாவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என மனைவி கேட்டதும் ஆனந்த் மாப்பிள்ளைக்கு கொடுத்து விட்டேன் என தங்கப்பன் சொன்னால் கலைவாணி கணவரை எதுவும் செய்து விட முடியாது. ஆனால் காலத்திற்கும் அதையே சொல்லிக் காண்பித்து ஆனந்தை தலைகுனிய வைத்துக் கொண்டிருப்பாள் மனைவி என்பதால் உண்மையை சொல்லவில்லை அவர்

“நான் பார்த்துக்கிறேன்” என்றவர் வேறு முக்கிய வேலை இருப்பதாக சொல்லி விட்டு உடனடியாக வெளியே சென்று விட்டார்

கலைவாணி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, எப்படியும் பெரிய மகளுக்கு உதவுவார் என நினைத்து அவரது வேலையை பார்க்க சென்று விட்டார்

ராஜ்குமாருக்குத்தான் அப்பாவிடம் தெரிந்த நுணுக்கமான பதற்றம் ஏதோ நெருடலாக இருந்தது. அப்பா வழக்கமாக செல்லும் அவரது நண்பரின் உரக் கடைக்குத்தான் இப்போதும் சென்றிருக்க கூடும் என கணித்து அவனும் அங்கேயே புறப்பட்டான்

நெருங்கிய நண்பனிடம் தனது இக்கட்டான சூழலை சொல்லிக் கொண்டிருந்தார் தங்கப்பன். கடையின் பக்கவாட்டில் வண்டியை நிறுத்தி விட்டு வந்த ராஜ்குமாரும் அவர் சொன்ன அனைத்தையும் கேட்டு விட்டான்

சட்டென தனக்கு எதிரில் வந்து நின்ற மகனை கண்டு அதிர்ச்சி கொண்டார் தங்கப்பன்

எதுக்குப்பா இவ்ளோ ஷாக்? அம்மு வாழ்க்கை நல்லா இருக்கணும்னு மட்டும்தான் நானும் நினைக்கிறேன். நாம சேர்ந்தே இந்த விஷயம் அம்மாக்கு தெரியாம சமாளிக்கலாம்என்றான் ராஜ்

பிறகென்ன தங்கப்பா, எல்லாம் உன் மவன் பார்த்துக்குவான்என தைரியப்படுத்தினார் தங்கப்பனின் நண்பர்

ஆனால் இந்த விஷயத்தில் மகனை எந்தளவு நம்பலாம் என சந்தேகமாக பார்த்தார் தங்கப்பன்.

கையோடு அப்பாவை அருகிலுள்ள கோயிலுக்கு அழைத்து சென்று விட்டான் ராஜ்

உனக்கும் சின்ன மாப்பிள்ளைக்கும்தான் ஆகாதேநீ உதவாட்டாலும் பரவாயில்லைடா, அவரை அவமானம் செய்ற மாதிரி எதுவும் செஞ்சிடாதடா, ப்ளீஸ்டாஎன்றார் தங்கப்பன்

ப்பா!” என அதட்டியவன் பின் சின்ன குரலில், “ஏற்கனவே அவரை அவமானம் செஞ்சிட்டேன்என சொல்லி பெருமூச்சு விட்டான்

அவர் குழப்பமாக பார்க்க, மருத்துவமனையில் அவன் பேசியதை சொன்னான்

மனுஷனாடா நீ, எப்படிடா இப்படி பேச முடிஞ்சது உன்னால? சேச்ச உன்கிட்டேருந்து இப்படி ஒண்ண எதிர்பார்க்கல தம்பி நான்என தன் கோவத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்

தப்புதான்ப்பா, அதுக்கான பரிகாரமா இப்ப அவருக்கு உதவி செய்ய நினைக்கிறேன்” 

யாரு நீ பரிகாரம் செய்ய போற! உன் தங்கச்சிக்கும் நீ பேசினது தெரிஞ்சிருக்கும், அவளை சமாதானம் செய்ய வழி தெரியலை உனக்கு. இப்படி ஏதாவது செய்ய நினைக்கிற” 

எப்படியோப்பாநான்தான் உதவுறேன்னு சொல்றேன்லஎன குரல் உயர்த்தியவன், “அம்முவோட ஹஸ்பண்ட்ங்கிறதாலதான் அவர் நமக்கு சொந்தம், அவருக்கு எது செய்றதா இருந்தாலும் அம்முவை வச்சுத்தான். அதனால அம்முவை சமாதானம் செய்றதுக்காக நான் செஞ்சாலும் அது ஒண்ணும் தப்பில்லஎன்றான்

மகனை முறைத்துக் கொண்டே, “இப்ப என்ன செய்றதுன்னு சொல்லுடாஎன்றார்

வினயாவின் கணவன் வாசுவிடம் பேசிப் பார்க்கலாம் என்றான் ராஜ்குமார். வாசு நல்ல மாதிரிதான், ஆனால் உண்மையை அவனிடம் சொல்வதில் தங்கப்பனுக்கு விருப்பமில்லை

நான் பணம் தர்றேன்னு சொல்லும் போது ஆனந்த் மாப்ள ரொம்ப தயங்கினார், வெளில விஷயம் வராதுன்னு உறுதி கொடுத்துதான் வாங்கிக்க வச்சேன். வாசு மாப்ள இப்ப உண்மையை சொல்லாட்டாலும் எதிர்காலத்துல எப்பயாவது வெளிப்படுத்திட்டா ரொம்ப தப்பாகிடும்என்றார் தங்கப்பன்

சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்த ராஜ், வேறொரு யோசனை சொல்லி அதற்கு அப்பப்பவையும் சம்மதிக்க வைத்து விட்டான்

அடுத்த நாள் காலையில் இருவரும் வாசுவை காண கும்பகோணம் சென்றிருந்தனர். காரியத்துக்கு வாசு குடும்பத்துக்கு துணிகளும் வாசுவுக்கு மோதிரமும் எடுக்க வேண்டியிருப்பதால் அதற்காக வந்தது போல காட்டிக் கொண்டனர்

வினயாவுக்கு சந்தேகம் வராதபடி வாசுவுடன் தனிமையை ஏற்படுத்திக் கொண்டனர். ராஜ்குமார் வியாபாரம் ஒன்றில் முதலீடு செய்வதற்காக அப்பாவின் பணத்தை வாங்கியதாகவும், அது யாருக்கும் தெரியாது, அதிலிருந்து லாபம் வர நாளாகும், அதுவரை விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் இருப்பது என முடிவு செய்திருப்பதாகவும் சொன்னான் ராஜ்

நல்ல விஷயம்தானே, இதைப் போய் ஏன் மறைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினான் வாசு

எதிலேயும் இன்வெஸ்ட் பண்றதுன்னு சொன்னாலே அம்மா தடை சொல்லிடுறாங்க, மீறி செஞ்சா என்னாச்சு ஏதாச்சுன்னு டென்சன் ஆகிட்டே இருப்பாங்க. உங்களுக்கே தெரியும் எந்த தொழிலா இருந்தாலும் ஒரு வருஷம் லாபத்தை எதிர்பார்க்காம உழைச்சாதானே?” தடையில்லாமல் பேசினான் ராஜ்

அப்படி என்ன தொழில் என வாசு கேட்டதற்கும் பொருத்தமான பதிலை சொன்னான் ராஜ். அவனுடைய நண்பன் பார்க்கும் தொழிலை கூறி அதில் தானும் பங்குதாரர் என சொல்ல, வாசுவுக்கு எல்லாமே நம்பும்படி இருந்தது

வினயாவுக்கு தெரிந்தால் அம்மாவுக்கும் தெரிந்து போகும், ஆகவே வெளியில் விஷயம் தெரியாமல் சமாளிக்க உதவும் படி கேட்டுக் கொண்டான் ராஜ். தங்கப்பனுக்கு எப்போதுமே பொய்கள் சரளமாக வராது, ஆகவே மகனை பேச விட்டு அமைதியாகவே இருந்தார்

என்னை நம்பி இத சொல்லி உதவி கேட்கும் போது, ஏதாவது செய்யலைனா நான் என்ன மனுஷன்? பணத்தை வேற வழில அரேஞ் பண்ணிக்கிறேன்என்றான் வாசு

என்ன செய்வீங்க மாப்ள? வட்டிக்கு கடன் வாங்க போறீங்களா?” வினயாவின் தந்தையாக பதற்றமாக கேட்டார்

தெரியலை மாமா, இனிதான் யோசிக்கணும்என்றான் வாசு

ராஜ் அவனிடமிருக்கும் சேமிப்பு தொகையை சொல்லி, மேற்கொண்டு அவனால் எவ்வளவு லோன் எடுக்க முடியும் என்றும் கூறினான்

தம்பி, நீ எது செய்றதா இருந்தாலும் திவ்யாவுக்கு தெரியாம செய்யக்கூடாதுஎன உறுதியாக சொன்னார் தங்கப்பன்

எப்படியும் வாசு திருப்பி தர போறார், திவ்யாவுக்கு சொன்னா வேற வேற சிக்கல்ப்பாஎன்றான் ராஜ்

ஆமாம், ஆனந்த் பற்றிய உண்மையையும் சொல்லக்கூடாது, வாசுவிடம் சொன்னதை சொன்னால் என்ன தொழில், என்ன முதலீடு என்றெல்லாம் கேட்பாள். ஒரு பொய் சொல்லப் போய் அதுவே தொடர்கதையாகிப் போகுமே

மாமனார் என்ன சொல்வார் என வாசு பார்த்திருக்க, “உங்களால இப்போ எவ்ளோ ரெடி பண்ண முடியும், எவ்ளோ ஷார்ட்டேஜ் ஆகும்?” எனக் கேட்டான் ராஜ்

வாசு சொல்லவும் ராஜ் லோன் போட அவசியமில்லை, தன் சேமிப்பு பணமே போதும் என்றான். வாசுவும் ஆறு மாத காலத்திற்குள் பணத்தை திருப்பி தந்து விடுவதாக உறுதி தந்தான்

இப்படியாக தங்கப்பன் பணம் தருவது போலவே மற்றவர்களுக்கு காட்டி வாசுவின் பணத்தேவை ராஜால் சரி செய்யப் பட்டது

வருகிற வழியில் யோசனையாக இருந்த அப்பாவிடம் என்னவென கேட்டான் ராஜ். தேனுக்கு தெரியாமல் ஆனந்த் அவனது பிறந்த வீட்டுக்கு செய்யப் போய்தான் பெரும் பிரச்சனை ஆனது. இப்போது தன் மகனும் அதே தவறைத்தானே செய்கிறான், தானும் அதற்கு உடந்தையாகிப் போனோமே என அவருக்கு உறுத்தல். மகனிடமும் சொன்னார்

ரெண்டும் ஒண்ணு இல்லப்பா. அவரு அம்முவோட நகையை வச்சு அவளுக்கு தெரியாம கடனும் வாங்கி பணம் கொடுத்தார். அந்த பணமும் திரும்பி வரவே வராது. நான் வாசுவுக்கு கொடுக்கிறது என்கிட்ட சேமிப்பா இருக்கிறதை, அதுவும் கடனா. இத திவ்யாகிட்ட சொல்லிட்டு கொடுத்தா கூட தடுக்க மாட்டா. எப்படியும் திரும்பி கிடைச்சிடும்னு அவளுக்கும் தெரியும். தேனோட வீட்டுக்காரருக்கு பிரச்சனை வரக் கூடாதுன்னுதான் இப்படி ஒளிச்சு மறைச்சு செய்றோம்என சொல்லி அவரை சமாதானம் செய்தான்.

என்ன இருந்தாலும்…” என இழுத்தார் அவர்

என்னப்பாஎன்னஎன்ன இருந்தாலும்? என் கூட பொறந்தவங்க எனக்கு ஒரு தேவைன்னா அவங்களால என்ன முடியுமோ கண்டிப்பா செய்வாங்க. என்கிட்ட பிடுங்கிக்கிட்டே மட்டும் இருக்கிறவங்க இல்லை. அம்மு திரும்பவும் சென்னைக்கு போனதே அவளால என் வாழ்க்கைல பிரச்சனை வந்திட கூடாதுன்னுதான். அவ வீட்டுக்காரர் செஞ்சதையும் நான் செய்யப் போறதையும் தயவு பண்ணி கம்பேர் பண்ணாதீங்கஎன முடிவாக சொல்லி விட்டான்

தங்கப்பனுக்கும் வேறு வழி தெரியவில்லை, ஆறு மாதத்திற்குள் மகனது சேமிப்பு அவனுக்கு திரும்ப கிடைக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டார்.  

ஆனந்திற்கு தெரியாமலேயே மிகப் பெரிய தலைகுனிவிலிருந்து காப்பாற்றப் பட்டு விட்டான்

ஆனந்த் பெங்களூரு கிளம்புவதற்கு முதல் நாளே சென்னைக்கு சென்று விட்டார் தங்கப்பன்.

தேவையானவை எல்லாம் பேக் செய்து முடித்து விட்டான் ஆனந்த். வேலை கிடைத்து விட்ட மகிழ்ச்சி ஒரு பக்கம், மனைவி, மகனை பிரியப் போகும் வருத்தம் இன்னொரு பக்கம் என கலவையான மன நிலையில் இருந்தான்

தேனும் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில்தான் இருந்தாள். கணவனுக்கு பிடித்த அசைவ உணவு சமைத்து பரிமாறினாள். வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயேதான் இருந்தனர்

இரவு பேருந்துக்கு அவன் புறப்படுகையில் அவளை மீறி கண்ணீர் வந்தது. உறங்கிப் போயிருந்த மகனின் நெற்றியில் முத்தமிட்டு மனைவியையும் அணைத்து  முத்தமிட்டு விலகினான்

நெக்ஸ்ட் வீக் வர்றீங்களா?” எனக் கேட்டாள்

உணர்ச்சி மிகுதியில் வார்த்தைகள் வராமல் வருவதாக தலையசைத்து விடை பெற்றுக் கொண்டான்

வீட்டிலேயே இருந்தால் கணவன் உடன் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டிருக்க கூடும் தேன். அவளும் வேலைக்கு செல்கிறாள், துணையாக அப்பா. அலைபேசியில் தினமும் கணவனிடம் பேசி விடுகிறாள். ஆதலால் சமாளித்து விட்டாள்

தங்கப்பனும் பேரனை மகள் வேலைக்கு செல்லும் நேரத்துக்கே அனுப்ப மாட்டார், அவனுடன் நன்றாக நேரம் செலவிட்டு விட்டுத்தான் மகளிடம் விடுவார். பின் வீட்டுக்கு வந்து தொலைக்காட்சி பார்ப்பது, தினசரி படிப்பது என நேரம் சென்றால் மதிய உணவு நேரம் வந்து விடும். சாப்பிட்டு சிறு உறக்கத்துக்கு பின் மீண்டும் பேரனை அழைத்து வந்து விடுவார்

இருள துவங்கவதற்கு முன் தேனும் வீட்டுக்கு வந்து விடுவாள். வீட்டுக்கு தேவையானவை அனைத்தும் நடந்து சென்றே வாங்கி வந்திடுவார். அவரின் பொழுது அழகாக சென்றது

சொல்லாமல் கொள்ளாமல் தன் கணவன் தன் பிறந்த வீட்டில் வந்து நிற்பான் என நினைக்கவே இல்லை திவ்யா

அவளை அழைத்து செல்ல வந்ததாக அவன் சொல்லவும் திவ்யாவின் பெற்றோருக்கு அத்தனை மகிழ்ச்சி. உடனே புறப்படுவதாகத்தான் அவனது திட்டம்

விருந்து சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என திவ்யாவின் பெற்றோர் வற்புறுத்த, மனைவியின் முகத்தை பார்த்தான். அவளும் கண்களால் கெஞ்ச, மறுக்காமல் சம்மதித்தான்

குழலி மும்முரமாக சமைக்க, அம்மாவுக்கு உதவ என வந்தாள் திவ்யா

இங்க எந்த வேலையும் இல்லை, போ போ மாப்பிள்ளைய பாருஎன சொல்லி அவளை அனுப்பி வைத்து விட்டார் குழலி

ஹாலில் தன் அப்பாவுடன் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்த கணவனை பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள். ராஜ்குமாரின் நிலை புரியாமல் விடாமல் பேசிக் கொண்டே இருந்தார் அவனது மாமனார்

என்னங்க இங்க செத்த வாங்க, இந்த மிக்சி ஓட மாட்டேங்குது என்னன்னு வந்து பாருங்கஎன கணவரை அழைத்தார் குழலி

மிக்சி ஓடலைனா நான் என்ன பண்றது, மாப்ள உங்களுக்கு ஏதாவது மிக்சி பத்தி தெரியுமா?” எனக் கேட்டார் திவ்யாவின் அப்பா

என்னவென பார்க்கலாம் என ராஜ் எழ, “நீங்க வந்தாதான் இந்த வீட்டு மிக்சி சரியாகும்அழுத்தக் குரலில் குழலி சொல்ல, புரிந்தவராக, “ஆமாம் மாப்ள, நானே போய் பார்க்கிறேன்என சொல்லி எழுந்து ஓடினார் அவர்.

கணவனின் வரவை எதிர்பார்த்து ஜன்னலோரம் நின்றிருந்தாள் திவ்யா. அவன் வரும் அரவம் தெரியவுமே அவளுக்குள் ஒரு வித பதற்றம். அவனுக்குமே லேசான தடுமாற்றம். தங்கள் துணையின் இந்த நிலையை ரசித்துக் கொண்டனர்

சில நிமிடங்களில் இயல்பாகி விட்டார்கள்

இவ்ளோ நாள் என்னை விட்டுட்டு இருக்க முடியுதுல உன்னால?” என அவன்தான் பேச ஆரம்பித்தான்

நீங்களும்தான், இன்னிக்குதானே என்னை தேடி வந்திருக்கீங்க?” என அவளும் செல்லமாக குறை பட்டுக் கொண்டாள்

இனிமேல்லாம் உன்னை இங்க வர விட்டாதானே?” எனக் கேட்டவன் அவளின் முறைப்பில், உடனேதனியா போக விட மாட்டேன், நானும் உன் கூடவே வருவேன்னு சொன்னேன்என வேகமாக சொன்னான்

வந்திட்டாலும்…” என கிண்டல் செய்தாள். பின்னே வருவானே தவிர மாமனார் வீட்டில் தங்குவதெல்லாம் அவனுக்கு சரி வராது. ஏதாவது காரணம் சொல்லி வந்த அன்றே கிளம்பத்தான் நிற்பான்

இனிமே பார்க்கத்தானே போறஎன குழைவாக சொன்னான்

கணவனின் இந்த புதிய பாவனை அவளுக்கு பிடித்திருந்தது. சமாதானம் ஆகி விட்டதற்கு அடையாளமாக அவனது கையை பிடித்துக் கொண்டு வருடி விட்டாள்

இந்த ரியாக்ஷனுக்கா வேலையெல்லாம் வுட்டுட்டு ஓடி வந்தேன், பத்தாது பத்தாதுஎன்றான்

என்கிட்ட இவ்ளோ ரியாக்ஷன்தான், வேணும்னா நீங்க ரியாக்ஷன் கொடுங்கஎன நொடிப்பாக சொன்னாள்

கணவனாக அவளிடம் நெருக்கம் காட்டியவன், “இங்க இவ்ளோதான், மற்றவை நம்ம ரூம்லஎன்றான்

வெட்கம் கொண்டு சிவந்திருந்த மனைவியை ஆரத் தழுவிக் கொண்டான்

மதிய விருந்து முடிந்து சிறிது நேரத்தில் திருச்சிக்கு புறப்பட்டு விட்டனர்

மருமகளை கண்டதும் கலைவாணிக்கு சொல்லொனா சந்தோஷம். அவள் இல்லாத இத்தனை நாட்களில் வீட்டு பொறுப்பை ஒற்றை ஆளாக கவனித்து நொந்து போனவர் இடக்காகவோ குறையாகவோ ஏதும் பேசவில்லை

திவ்யாவும் எந்த சங்கடமும் இல்லாமல் தன் வீட்டில் வளைய வந்தாள்

வினயாவின் மாமனாரின் காரியத்துக்கு என சென்று விட்டார் தங்கப்பன். ஒரு நாள்தானே என தேனும் தைரியமாகவே இருந்தாள்

ஆனந்தின் அப்பாவும் காரியத்தில் பங்கெடுக்க சென்றிருந்தார்

சின்ன மகனோடு மருமகளை காண வந்து விட்டார் சுந்தரி. சும்மா வரவில்லை, வேதாச்சலம்  மகனின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அவரது அம்மாவின் வைரத் தோடுகளை விற்றிருந்தாரே, அதை அறிந்து கொண்டு வந்திருந்தனர்