பூத்தது ஆனந்த முல்லை -10

அத்தியாயம் -10

சொன்னது போலவே திங்கள் கிழமை காலையில் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள் தேன்முல்லை. 

தருணை தான் வைத்துக்கொள்கிறேன் என ஆனந்த் சொன்னதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை அவள்

நீங்க ஃப்ரீயா இருந்து வேலை தேடணும்னுதான் நான் வேலைக்கு போறேன், நீங்க பார்க்கிற வேலைய விட்டுட்டு கூட சீக்கிரமா வேற நல்ல வேலையா பாருங்கஎன சொல்லி விட்டாள்

ஆனந்துக்கு தற்போதைய வேலையை விடும் எண்ணம் துளியும் இல்லை. அவ்வாறு செய்தால் அது அவனை மனதளவில் மிக மோசமாக தளரச் செய்து விடும் என்பதால் வேலையில் இருந்து கொண்டே வேறு தேடினான்

தேனுக்கு அவளது வேலை அத்தனை சிரமமாக இல்லை. அதைவிட தருணுக்கு பொழுது நன்றாக சென்றது. அவள் வேலைக்கு செல்வது பற்றி அப்பாவை தவிர மற்றவர்களிடம் சொல்லியிருக்கவில்லை. கணவனோடு தேன் சென்றதில் கோவத்தில் இருந்த அவளது அம்மா, அண்ணன், அக்கா யாரும் அவளுடன் இப்போதைக்கு பேசுவதும் இல்லை

வாடகையை குறைக்க எண்ணி சின்ன வீடாக மாறலாமா? என தேன் கேட்டதற்கு ஆனந்த் ஒத்துக் கொள்ளவில்லை

சும்மா சும்மா மாறிட்டே இருக்க முடியாது, இன்னும் கொஞ்சம் மாசத்துல நிலைமை சரியாகும், அப்போ இருக்க வீடு வசதி பத்தாதுன்னு திரும்ப மாற சொல்லுவஎன்றான்

ஆமாம், நான் சொன்னதும் அப்படியே கேட்டு நடந்திருவீங்கஎன்றாள்

நீ சொல்ற எதை கேட்காம போயிட்டேன் இப்போ?” 

இப்ப வந்த அறிவு முன்னாடியே ஏன் இல்லாம போச்சு?” 

வார்த்தைகள் தடிப்பதை உணர்ந்து அவன் மௌனியாக மாறி விட்டான். எதிர்வாதம் இல்லாமல் அவளாலும் மேற்கொண்டு பேச்சை வளர்க்க முடியவில்லை

காலையிலேயே மதிய சமையல் வரை செய்து விட்டு மிச்ச வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு மகனோடு வேலைக்கு புறப்பட்டு விடுவாள் தேன். இரண்டு நாட்கள் அப்படி செய்தவள் மூன்றாவது நாள் சமையல் மட்டும் முடித்து விட்டு சென்றாள்

கேர் சென்டரில் சோர்ந்து போவது போல இருக்கவும்தான் இந்த முடிவு. மற்ற வீட்டு வேலைகளை மாலையில் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தாள்

 மாலை அவள் வீடு திரும்புகையில் ஆனந்தே எல்லாம் செய்திருந்தான். “இனிமே சமையல் மட்டும் செய், மத்தது நான் பார்த்துக்கிறேன்என்றான்

அவள் யோசனையாக பார்க்க, “எல்லாம் சரியா செஞ்சிடுவேன் தேனு, எல்லாத்தையும் நீயே இழுத்து போட்டு செய்றது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குஎன்றான்.

சரி, எனக்கும் அங்க டயர்ட் ஆகிடுதுஎன்றாள்

ஏன் என்கிட்ட சொன்னா செய்ய மாட்டேனா? நானா கேட்டாதான் சொல்லுவியா?” வருத்தமாக கேட்டான்

சொல்லக் கூடாதுன்னுலாம் ஏதுமில்லஎன அவள் சொல்லியும் விடாமல் பேசினான்

சின்ன விஷயத்துக்கு இவ்ளோ பேசுறீங்க, நீங்க பெரிய பெரிய விஷயத்தை கூட என்கிட்டருந்து அசால்ட்டா மறைச்சிருக்கீங்க. எத மனசு விட்டு பேசியிருக்கீங்க? ஒரு நாள்ல இவ்ளோ கவலை? அப்போ நான் எத்தன நாள் கவலை பட்டிருக்கணும்?” ஆதங்கத்தில் பொரிய ஆரம்பித்தாள்

ஐயோ தேனு! போதும் விடு, எல்லாத்தையும் சொல்லி உன்னை ஏன் கஷ்ட படுத்தணும்னு விட்ருப்பேன், எனக்கு சொல்லவும் வரலை. அதெல்லாம் உன்னை கஷ்ட படுத்தும்னு நினைச்சே பார்க்கல. கோவ படாத ப்ளீஸ்என மன்றாடுவது போல சொன்னான்

பழைய விஷயங்களை பேசி பேசித்தான் என்ன ஆக போகிறது என நினைத்தவள், “மதியம் சாப்பிட்டீங்களா?” என பேச்சை மாற்றினாள்

சாப்பிட்டேன் என்றவன் மகன் அங்கு எப்படி இருக்கிறான் என விசாரித்தான். இப்படியாக சுமூகமாக மாறியது பேச்சு

பெரிதான பிரச்சனைகள் சண்டைகள் இல்லாமல் இவர்களின் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. தேனின் பிறந்தநாள் வந்தது. திருமணம் ஆனதிலிருந்து நினைவு வைத்து வாழ்த்துவான், முன்னரே புத்தாடை எடுத்து தந்திடுவான். மாலையில் கோயிலுக்கு அழைத்து செல்வான்

இந்த முறை மனைவியை கவரும் விதத்தில் ஏதாவது செய்ய பிரியப்பட்டான். செலவு கையை கடித்து விடக்கூடாது என்பதையும் நினைவில் வைத்திருந்தான்

சர்ப்ரைஸாக எதுவும் செய்து பழக்கம் இல்லாததால் என்ன செய்வது என அவனுக்கு எந்த யோசனையும் வரமாட்டேன் என்றது. மண்டையை உடைத்து யோசித்து திருமணம் ஆனதிலிருந்து கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அலைபேசியில் எடுத்துக் கொண்ட நல்ல நல்ல புகைப்படங்களை சேர்த்து கொலாஜ் செய்து பிரேம் போட்டு அவளுக்கு கொடுத்தான்

நிஜமாகவே அவளுக்கு சர்ப்ரைஸ்தான். மனைவியின் முகத்தை பார்த்து விட்டு அவனுக்கும் மகிழ்ச்சியாகவும் அடடா நாமளும் அசதிட்டோம்டா அவளை என பெருமையாகவும் இருந்தது.

நல்லாருக்கு, ஆனா தருண் இல்லைஎன்றாள்

தருண் உள்ளது போல இன்னொரு கொலாஜ் போட்டோவும் தயார் செய்திருந்தான். அதை கொடுக்கவும் இன்னும் அவளின் முகம் மலர்ந்து போனது

அத்தோடு பூ, புடவை என இன்னும் சில அன்பளிப்புகள். தேன்முல்லை அகமகிழ்ந்து போய் விட்டாள். அதீத மகிழ்ச்சியில் லேசாக கண்கள் கூட கலங்கி விட்டன

ஏஏஏய் என்னாச்சு தேனு?” பதறிப் போனவனாக கேட்டான்

தேங்க்ஸ்ங்க, உங்ககிட்டருந்து இப்படிலாம் எதிர்பார்க்கவே இல்லை, அதான்என்றாள்

தன்னிடமிருந்து நிறைய எதிர்பார்த்து எதிர்பார்த்து ஒரு கட்டத்தில் எதிர் பார்ப்புகளையே நிறுத்திக் கொண்டாள் போலும் என நினைத்து வருத்தம் கொண்டான். அவளின் சிறு சிறு ஆசைகளை தெரிந்து கொண்டு நிறைவேற்ற வேண்டும் எனவும் முடிவெடுத்துக் கொண்டான்

அன்றைக்கு பிறகு தேன் சற்று மலர்ச்சியாகவே இருந்தாள். கணவனுக்கு நல்ல வேலை மட்டும் கிடைத்து விட்டால் வேறு துன்பமே இல்லை, மகிழ்ச்சியாக இருக்கலாம் என கனவு கண்டாள்

அந்த வார இறுதியில் வந்து சேர்ந்தனர் ஆனந்தின் பெற்றோர்

தேனும் வந்தவர்களை வரவேற்று நன்றாகவே கவனித்தாள். காலை உணவுக்கு பின், “மயிலோட ரெண்டாவது மகனுக்கு மொட்டை போடுறாங்களாம். உனக்குத்தான் தெரியுமே, அவங்க வழக்கபடி தாய்மாமன் மடியில வச்சுத்தான் போடணும். சும்மாவா போவ முடியும்? புள்ளைங்களுக்கு, மயிலுக்கு, மயிலு வீட்டுக்காரருக்குன்னு துணிமணி எடுக்கணும். சாயங்காலம் கார புடிச்சு கொடுத்திடு, நானும் உன் அப்பாவும் கடைக்கு போயிட்டு வந்திடுறோம். அடுத்த புதன் அன்னிக்கு ஊருக்கு வந்திடுங்க ரெண்டு பேரும், இன்னிக்கு நைட்டு மாப்ளயே போன்ல பேசுவாரு உன்கிட்டநீட்டி முழக்கி பேசி முடித்தார் சுந்தரி

தேன் ஏதும் பேசாமல் கணவன் என்ன சொல்ல போகிறான் என அவனையே பார்த்திருந்தாள். 

“இப்ப என் நிலைமை தெரியாதாமா உனக்கு?” என்றான் ஆனந்த். 

“தெரியாமா என்னடா? எல்லாம்  நானே ஏற்பாடு பண்ணிட்டேன். நீ வந்தா போதும், சாயந்தரம் ட்ரெஸ் எடுக்க கூட நீ பணம் தர வேணாம், எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்” என்றார் சுந்தரி. 

இப்போது ஆனந்த் தன் மனைவியின் முகத்தை பார்த்தான். 

“எப்படி அத்தை பணம் ரெடி பண்ணுனீங்க?” எனக் கேட்டாள் தேன். 

“நம்மள மாதிரி உள்ளவங்க அவசரத்துக்கு என்ன செய்வாங்களோ அத பண்ணித்தான் ரெடி பண்ணினேன்” என்றார் சுந்தரி. 

வேதாச்சலத்துக்கும்  எதுவும் விளங்கவில்லை.  சென்னைக்கு போக மனைவி துணைக்கு அழைத்ததால் மகனையும் பேரனையும் பார்க்கலாம் என கிளம்பி விட்டார். வழியில்தான் மொட்டை போடுவது பற்றியெல்லாம் அவருக்கு தெரியும். 

தருண் சிணுங்கியதால் அவனை தூக்கிக் கொண்டே வெளியே சென்று விட்டார் வேதாச்சலம்.

எப்படி பணம் ஏற்பாடானது என்பது பற்றி பேசாமல் சம்பந்தம் இல்லாத கதைகள் பேசத் தொடங்கினார் சுந்தரி. 

தேன் விடவில்லை, “பணத்துக்கு என்ன செஞ்சீங்கன்னு நேரடியா சொல்லுங்க அத்தை, நகை ஏதும் அடகு வச்சீங்களா?” எனக் கேட்டாள். 

“சொந்தத்துல ஒரே விஷேஷமா வருதே, எல்லாம் அடகுக்கு போயிட்டா எத போட்டுக்கிட்டு நிப்பேன்?” எனக் கேட்டார் சுந்தரி. 

“அப்போ யார்கிட்டேயும் கடன் வாங்குனீங்களா?” என அடுத்த கேள்வியை கேட்டாள். 

“ரொம்ப ஒண்ணும் இல்லை, அம்பதினாயிரம்தான். அதுவும் ரெண்டு காசு வட்டிதான். ஆறு மாசம் கழிச்சு கொடுத்தா போதும். அதுக்குள்ள ஆனந்த் வேற வேலைக்கு போயிடுவான்”என்றார். 

இப்போது கோவமாக கணவனை பார்த்தாள் தேன்.