Advertisement

“நீ போயேன் மருது, அவங்களை அனுப்ப முடியாது.. பொண்ணுங்களை அனுப்ப சொன்ன, அனுப்பிட்டேன்! இவங்களை விட முடியாது!” என்றான் சர்கிள் இன்ஸ்பெக்டர்…

மருது எதுவும் பேசவில்லை கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் போனான்.

“சார் அனுப்பிருவோம். சேனல் காரனா நம்மை கவனிப்பான், என்ன சார் நீங்க” என்று ஏட்டு குறைபட்டார்.

“நீ என்னையா? அசிஸ்டன்ட் கமிஷனர் கேட்டா என்ன சொல்ல?”

“என்ன சொல்ல? எப்படியும் அவன் கூட்டிட்டு போயிடுவான். இதுல நம்மளா விட்டா ஏதாவது தேறும் இப்படி பண்ணறீங்களே சர்” என்று சொல்லி அவர் அமர்ந்து கொள்ள..

அதற்குள் அவன் ஜீவாவை அழைத்திருந்தான்…

==============================================

“சட்டம் தன் கடமையை செய்யணும், எங்காளு இங்க இருந்தா உங்க ஆளுங்களும் இங்க இருக்கணும்!”

“ரைட்டர் சர் கம்ப்ளைன்ட் எழுதுங்க” என்று குரல் கொடுக்க…

மருதுவை “என்ன இது?” என்பது போல பார்த்தார் இன்ஸ்பெக்டர்.

“நான் என்ன சார் பண்ண?” என்று அவனும் பார்த்தான்.

பின்பு அவர் சென்று அசிஸ்டன்ட் கமிஷனருடன் பேசினார், “சர் லோக்கல் ஆளுங்க பிரச்சனை பண்றாங்க, பையனை காணோம், சோ, சேனல் தான் ஏதோ பண்ணிடுச்சுன்னு சொல்றாங்க” என்று சொல்ல,   

“சரி, அவங்களை நாளைக்கு பார்த்துக்கலாம் அனுப்பிவிடு” என்று சொன்னார்.       

======================================================

மறுநாள் காலையில் சரியாக ஆறு மணிக்கு குளித்து சுத்த பத்தமாய் இவன் கோவில் முன் நிற்க… இவர்களை ஆளை காணோம்!

கடுப்பானது இவனுக்கு…

பதினைந்து நிமிடம் கழித்து அவர்களின் வீட்டு கதவு திறக்கும் சப்தம் கேட்க.. பார்த்திருந்தான்..

கோபாலனும் அவர் மனைவியும் வர… காலதாமதம் பொறுத்திராதவன் “உங்க கடிகாரத்துல இப்போ தான் ஆறு மணியா?” என்று விட்டான்.

“நாங்க உங்களை உதவ சொல்லலையே?” என கோபாலன் சொல்லிவிட்டார்.

பின்னே அவர் இரவு முழுவதும் தூங்கவேயில்லை.. பையன் இன்னும் வரவில்லை என்ற பயத்தை விட, பெண்ணுக்காக இவன் செய்கிறானோ பெண்ணை எதுவும் செய்து விடுவானோ என்ற பயம் தான்.

அன்றைக்கு கோவில் கலாட்டாவிலும் இவளை பார்த்ததும் “போங்க” என்று விட்டான்.. இன்றைக்கும் என்ன என்று கூட கேட்காத போது அவளை வீட்டிற்கு அனுப்பிவிட்டான்.   

தங்களுக்கு உதவ அப்படி ஒன்றும் அவர்களுக்குள் அறிமுகமில்லை அவர்களும் உதவி என்று போய் நிற்கவில்லை. ஜெயந்தி அவனிடம் பேசியதே அவருக்கு அதிர்ச்சி.  

=====================================================

வயதுப் பெண்ணை வைத்து மனம் பதைத்து ஸ்டேஷனில் இருக்க.. தெய்வம் போல வந்து மருது காப்பாற்றி விட்டான்.

“நன்றி” என்பது மனிதருக்கு வேண்டாமா என்று கோபாலனை பார்த்து முறைத்தவர் “தம்பி ஒரு நிமிஷம்” என்று வேகமாய் அவன் பின் போகப் போக…  இவர்  யோசித்து முடித்து போவதற்குள் அவன் சென்று இருந்தான்.

அப்படியே கோவில் முன் அமர்ந்து விட்டார் ..

மருதுவை பார்க்கப் போகிறார்கள் என்று தெரியும்… “என்ன நடக்கிறது?” என்று ஜெயந்தி எட்டி பார்க்க….

அங்கு கோவில் முன் தளர்ந்து அமர்ந்திருந்த அம்மா மட்டுமே கண்களுக்கு தெரிந்தார்.

ஏறக்குறைய ரோடில் அமர்ந்திருந்தது போல தான். பதறி அவள் வேகமாய் வந்து “அம்மா எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கீங்க”   

“இன்னும் அந்த சர் வரலையா?”  

“வந்தாருடி நாம லேட்டா வந்தோம், அவர் காத்துட்டு இருந்திருப்பார் போல, அதுக்கு இப்போ தான் உங்க வீட்ல ஆறு மணியான்னு கேட்டார். உங்கப்பா உங்களை யாரு எங்களுக்கு உதவ சொன்னாங்கன்னு சொன்னார். அவ்வளவு தான் அந்த தம்பி நிக்கவேயில்லை, போயிடுச்சு.

Advertisement