Advertisement

இதோ அதோ என்று கண்ணன் அவனின் கல்லூரி படிப்பின் இறுதி கட்டத்தில் இருந்தான். வெள்ளி கல்லூரி முடிந்து கிளம்பினால் பின் திங்கள் காலை கல்லூரி வருவது போல பழக்கப் படுத்தி இருந்தான். நடுவிலும் எப்போது தோன்றினாலும் சென்று வருவான் என்று சொல்ல முடியாது ஏனென்றால் தோன்றும் சூழ்நிலையே வராது. அது தான் சுந்தரி அழைப்பாளே.  
சுந்தரி அவனை உண்டு இல்லை என்று செய்து கொண்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுத்தான். ஒன்று அவனுக்கு நன்கு புரிந்தது வேறு யாரிடமும் சுந்தரி அப்படி அல்ல அவனிடம் மட்டுமே அப்படி என்று.
முதல் முறை அவனை கோவையில் வந்து பார்த்த போது, அபிக்கு உடல் சற்று தேறியதும், அவளுக்கு அங்கே இருக்கவும் முடியவில்லை தோட்டத்தை பார்க்க வேண்டுமே, காலையில் இருந்து ஒன்றும் செய்யாமல் மாலை வரை வெறும் சமைப்பது என்ன என்று மட்டும் யோசித்து இருக்க அவளுக்கு முடியவில்லை.
தோட்ட ஞாபகமே சரியா தண்ணி விட்டிருப்பாங்களா, நர்சரிக்கு புது பதியன் நான் சொன்னதை சரியா சிந்தா போட்டிருப்பாளா, மருந்து வைக்கணுமே வெச்சிருப்பாங்களா?, ஆயா நம்மை தேடுமோ , ராசாத்தி  வேற என்ன பண்ணுறா தெரியலை என்று தோட்டம் தொறவு மாடு கண்ணு என்று எல்லாம் அதே நினைவே.
கண்ணனும் அவ்வப் போது அவளின் முகம் யோசனைக்கு போவதை உணர்ந்தான் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சிந்தாவிற்கு அழைத்து வேலை வேறு சொல்ல
என்ன பண்ற நீ இப்படி நொச்சக் கூடாது சிந்தா சரியா தான் பண்ணும் ஆனா உன் அளவுக்கு அவங்களுக்கு செய்ய வராது என்று சொல்லிவிட
முறைத்தாலும் பின் அமைதியாகிவிட்டாள்
ஊருக்கு எப்போ போற என்று அவனால் கேட்க முடியாது அது தப்பாகிவிடும் அவளுக்கு கோபம் வந்து விடும் ஆனால் இன்று அவள் அமைதியாக இருந்தாள் அதுவே அதிகம் வெகு நாட்களுக்கு அவளின் தோட்டம் பார்க்காமல் அவளால் இருக்க முடியாது என்று புரிந்தவன்
அவளிடம் போகிறாயா என்று எப்படி எப்படி கேட்பது என்று ஒரு புறம்
மனைவி மகன் என்று இரு நாட்களாக எந்த சச்சரவும் இல்லாத அமைதியான வாழ்க்கை அவனும் கல்லூரிக்கு சென்றாலும் மதியமே வந்து விடுகிறான்
சுந்தரியோடு வாக்குவாதங்கள் இல்லாத அமைதியான வாழ்க்கை அவனுக்குமே ரசித்தது.
மாலை கீழ் வீட்டில் சித்திப் பெண்கள் வந்து அபியை தூக்கி சென்றிருக்க
அமைதியாக கணவனோடு டீ அருந்திக் கொண்டிருந்தாள் சுந்தரி. சூடாய் இருக்க இஞ்சியின் காரத்தோடு கொஞ்சம் கொஞ்சமாய் தொண்டையில் இறக்கினாள்.
கண்ணன் என்னவோ அவளுக்கு கற்றுக் கொடுக்க சொல்லியிருக்க அவளோ என்னை விட நீங்களே நல்லா வைக்கறீங்க என்று சான்றிதழ் கொடுத்து அவனையே அங்கிருந்த எல்லா வேளையும் டீ வைக்க செய்திருந்தாள். 
நெருங்கி தோள் உரச தான் அமர்ந்திருந்தனர். மெதுவாக சுந்தரியே நான் அங்க கொஞ்சம் நாள் இங்க கொஞ்சம் நாள் இருக்கட்டுமா நீங்க சொன்ன மாதிரி என்று விட
வேண்டாம் சுந்தரி என்று கண்ணன் சொல்ல அவன் அடுத்த வார்த்தை பேசக் கூட இல்லை அவளை திரும்பி பார்த்தவளின் கண்களில் ஏகத்திற்கும் முறைப்பு அதனையும் விட கண்களில் நீரும் நிற்க அவனை பார்த்திருந்தாள்
என்ன இப்போ என்றான் சற்று கடுமையான குரலிலேயே
அப்போ உங்களுக்கு என் மேல கோபம் நான் வேண்டாம் சொல்றீங்க என
போடி லூசு என்றவன் நீ வராத நான் வர்றேன் ன்னு சொல்ல விடணும் என்றான்
நம்பாமல் திரும்பி பார்க்க
சும்மா பண்ணாத சுந்தரி உன்னால அங்க இங்க ன்னு இருக்க முடியுமா கண்டிப்பா முடியாது உனக்கு தெரியுமோ இல்லையோ உன்னை பத்தி எனக்கு தெரியும்
நான் எதுக்கு இதுக்கு ஊரை விட்டு வரணும் என் வீட்ல போய் உட்கார்ந்து இருக்க முடியாதா? நான் வேணும்னா நீ என்னோட அங்க வந்து பொழைன்னு சொல்ல முடியாதா?
சுந்தரிக்கு ஒரே எண்ணம் தான் இன்னும் இவனுக்கு என்னை பிடிக்கவில்லையோ அது தான் அதுவும் இதுவும் சொல்கிறானோ அதுதான் இப்போது குழந்தை வந்து விடும் என்று என்னை தள்ளி வைக்கிறானோ என்ற எண்ணம்
அது கண்களில் நீராய் வடிய அப்படியே முறைப்புடன் அமர்ந்திருக்க , பார்த்தியா நம்மளால ரெண்டு நாள் சேர்ந்திருக்க முடியலை சண்டை பிடிக்க ஆரம்பிச்சிட்டோம்
கல்யாணம் பண்ணி டைவர்ஸ் குடுத்துட்டேன்னு வாழ்க்கை முழுசும் தண்டனை குடுக்காதே புதுசா வாழ்க்கையை ஆரம்பி என்னை நம்பு திரும்ப திரும்ப பேச வைக்காதே
பாஸ்ட் இஸ் பாஸ்ட் நோ எக்ஸ்ப்லனேஷன் நோ ரெக்ரெட்ஸ் என்றான் தீர்க்கமாய் பார்த்து

Advertisement