Advertisement

முதலில் கண்ணன் சென்றது சிங்கார சென்னைக்கே, வேலை தேடி தான். ஆனால் அவன் எதிர்பார்த்தது போல வேலை அமையவில்லை, முன்பிருந்தது போல தேடினான். ஏதோ ஒரு வேலையில் அமரலாம் என்றால் மனதில்லை.
கிட்ட தட்ட இரண்டு மாதங்கள் சோர்ந்து தான் போனான். அப்பாவின் கார்டை எத்தனை நாள் தான் தேய்ப்பது. முதல் மாதம் முழுவதும் தேய்த்தான். உண்ண உறங்க ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்ல, நண்பர்களை பார்த்தால் செலவு செய்ய என்று பணம் தண்ணீராய் செலவானது.
சென்ற தினத்தில் இருந்தே சுந்தரிக்கு அவனிடம் கேட்க ஆயிரம் சந்தேகங்கள் இருக்கும். ஏதாவதுன்ன உங்ககிட்ட எப்படி கேட்க என்று அவனிடம் கேட்டிருக்க போன் செய் என்று சொல்லியிருந்தான்
அதனால் தினமும் ஒரு முறை அழைத்து விடுவாள் , தோட்ட வேலை யோ இல்லை பேங்க் வேலை குறித்த சந்தேகமோ ஏதோ ஒன்றிற்காக பேச அழைத்து, எங்க இருக்கீங்க இன்னைக்கு என்ன பண்ணுனீங்க என்ன சாப்டீங்க என்பாள். அவன் அவளுடன் இருந்த போது இப்படி எதுவுமே பேசிக் கொண்டதில்லை.  
மாதம் முடிந்து சில நாட்களில் ஒரு தடுமாற்றம் என்ன சாப்பிட்டீங்க என்றால் யோசிப்பான் ஒன்றிரண்டு நாட்களியே கண்டு கொண்டாள் அவன் சரியாக உண்ணுவதில்லை என்று
வேலையை விட்ட நாளாக பணம் தானே அவனின் பிரச்சனை. கில்ம்புபோதே பணம் செலவு பண்ண யோசிக்காதீங்க எவ்வளவுன்னாலும் எடுத்துக்கோங்க உங்க கிட்ட இருக்கா என்று கேட்டிருந்தாள்.
ஆம் கிளம்புவான் என்று தெரிந்த பிறகு என்ன செய்வாள் அதுவும் கண்ணனின் முகம் மனதை பிசைந்தது.
இருக்கு என்று முடித்து விட்டான். ஒரு மாதம் தானே அப்பாவின் பணம் உபயோகித்து கொள்ளலாம் பின் எப்படியும் வேலையில் சேர்ந்து விடலாம் என்று தான் நினைத்தான் ஆனால் முடியவில்லை உணவு உண்ணும் வேளையை இரண்டாய் குறைக்க ஆரம்பித்தான்
கண்ணனுக்கு என்னவோ எல்லாம் தப்பு தப்பாய் செய்து கொண்டிருக்கும் உணர்வு. மனதை என்னென்னவோ செய்தது.  
இவனின் தடுமாற்றங்களை புரிந்தவள் பணம் இருக்கா என
இருக்கு என்றான் எப்போதும் போல
உங்க அக்கௌன்ட் நம்பர் சொல்லுங்க நான் சின்ராசு அண்ணா கிட்ட பணம் கொடுத்து பேங்க் ல கட்ட சொல்றேன் , நீங்க வாங்க மாட்டீங்க ன்னா நானே போய் வீட்ல நாங்க பிரிஞ்சிட்டோம் சொல்ல போறேன் என்று மிரட்டல் விடுக்க
போடி போய் சொல்லு இந்த கொஞ்சம் நாளைக்கு ன்னு நான் சொன்னதை நிரந்தரம் ஆக்குறேன் என்றான் சிறிதும் அசராதவனாக.
அவள் தான் தணிந்து வரும் படி ஆகிற்று ஏன் இந்த பிடிவாதம் பணம் இல்லைன்னா பரவாயில்லை நம்ம கிட்ட தான் இருக்கே, ஏன் அங்க மாமா கிட்ட இருந்து எடுக்கறீங்க அவர்துல இருந்து எடுக்காதீங்க, நீங்க இப்படி பண்ணுணிங்கன்னா நானும் சாப்பாடை குறைப்பேன் சும்மா சொல்றேன்னு நினைக்காதீங்க நிச்சயம் செய்வேன் என்றாள்
ஏய் அங்க இருந்தும் என் உயிரை எடுப்பியா நீ என்று கத்தினான்
ஆமாம் எடுப்பேன் சொல்றதை செய்யலைன்னா நேர்ல வந்து எடுப்பேன் என
அவனும் தான் என்ன செய்வான் பிரிந்து இருப்போம் என்று சொல்லி வந்த பிறகு அவளிடம் பணம் வாங்கி உபயோகம் செய்வதா? 
பேச்சை மாற்றினான் அபி என்ன பண்றான் என
சிந்தாவோட இருக்கான் உங்களை ரொம்ப தேடறான் என
கொஞ்சம் நாள்ல பழகிடுவான் என்னை தேடமாட்டான் என்று சொல்ல
எதுக்கு இவ்வளவு கஷ்டம் வந்துடுங்களேன் என்றாள்
ப்ளீஸ் சுந்தரி அதை தவிர வேற ஏதாவது பேசு என்றான்
சரி வேண்டாம் வர வேண்டாம் இந்த பணம் உபயோகிங்க அப்புறம் எப்போனாலும் நீங்க எனக்கு செய்வீங்கலாம் என்றாள் தணிவாய் அதே சமையம் கெஞ்சலாய்
சரி நீ சொல்றதை நான் கேட்கறேன் நான் பணம் யூஸ் பண்றேன் அப்பாது எடுக்க எனக்கும் கஷ்டமா இருக்கு, ஆனா ஒரு கண்டிஷன் நீ என் பேர்லயும் உன் பேர்லயும் ஒரு இடம் வாங்கின இல்லையா அதை உன் பேருக்கு முழுசா மாத்தனும் அப்போ தான் வாங்குவேன் என்றான்      
புரிஞ்சிக்கோ சுந்தரி நாம சேர்ந்து வாழ ஆரம்பிச்சே சில மாசம் தான் ஆகுது என்னோட உழைப்பை நான் இப்போ தான் குடுத்தேன் என்னோட உழைப்பு எங்கேயும் இல்லை அதுல போட்ட முதல் எல்லாம் உங்கப்பா உனக்காக சேர்த்தது மீது உன் உழைப்பு தயவு செஞ்சு மாத்து எனக்கு ரொம்ப பேட் டா பீல் ஆகுது ஒரு மனிஷன் சாகும் போது கூட உன்னை பத்தின கவலைல செத்திருக்கார் அதுக்கு காரணம் நான் , அவரோட உழைப்புல நான் சொத்து வாங்குவேனா புரிஞ்சிக்கோ என்னை என்றான் உணர்ச்சிமயமாய் .
இப்படி ஒரு கோணம் சுந்தரி யோசிக்கவேயில்லை
நீங்க வேற நான் வேற இல்லை அப்படி நினைச்சு தான் வாங்கினேன் என
புரிஞ்சிக்கோ சுந்தரி இப்போ நான் சம்பாரிச்சு உன் பேர்ல சொத்து வாங்கலாம் அது நியாயம் அதுக்காக எங்கப்பாம்மா சம்பாரிச்சதுல உனக்கு சொத்து வாங்கினா அது நல்லாவா இருக்கும் எனக்கும் அப்படி தானே என்றான் பொறுமையாய் 
சரி நீங்க இங்க வரும் போது கண்டிப்பா மாத்திக்கலாம் இப்போ வந்தாலும் சரி எப்போ வந்தாலும் சரி நம்ம பணம் எடுத்து தான் நீங்க செலவு பண்ணனும் என்று கெஞ்சலாய் பேச
அவனுக்கு வேறு வழி இல்லையே சரி என்றான்

Advertisement