Advertisement

அன்றைய இரவு இருவருமே உறங்கவில்லை. வேறொன்றுமில்லை அபி உறங்க விடவில்லை. மனைவியை அணைத்து படுத்து சில நிமிடம் கூட இருக்காது. அணைப்பில் இருவரின் தடதடக்கு இதயத்தின் ஓசையை மற்றவர் உணர்ந்து கொண்டு இருக்கும் போதே அபி சிணுங்க ஆரம்பித்தான்.     
தூக்கி எறியப் பட்டதில் பயந்திருந்தான் போல, அழ ஆரம்பித்து விட்டான்
பின் அது தூங்கா இரவு தான் அவர்களுக்கு மட்டுமல்ல வீட்டினர் அனைவருக்கும்
அப்படி ஒரு அழுகை அபி, என்ன அழுகை என்று சந்திரன் வந்து கதவை தட்ட
குழந்தையை தூக்கி கொண்டு ஹாலிற்கு வந்து விட்டனர்
கையில் வைத்து நடந்து கொண்டிருந்தால் மட்டும் அழுகை குறைந்தது ஆனால் தேம்பல் இருக்க, பின்பு அப்படியே உறங்கினான்  
இரவு முழுக்க சுந்தரியும், கண்ணனும் மட்டும் மாற்றி மாற்றி வைத்திருந்தனர். வேறு யாரிடமும் அவன் செல்லவில்லை
ஆளுக்கு ஒரு புறம் ஹாலில் படுத்துக் கொண்டனர் யாரும் அவர்களை விட்டு செல்லவில்லை.
அவளிடம் இருந்து வாங்கியவன் நீ போய் கொஞ்சம் நேரம் தூங்கு என்றான்
நீங்க தூங்கலை,
எனக்கு பழக்கம் தான் சில சமயம் புல் நைட் வேலை பார்ப்பேன் நான் பகல்ல தூங்கிக்குவேன் நீ தூங்கி எழுந்தா தான் இவனை பார்க்க முடியும் என்று சொல்லி அவளை உறங்க அனுப்பினான்
உறங்கியது தான் தெரியும் சுந்தரிக்கு அவள் எழுந்த போது மதிய உணவு நேரமே ஆகியிருந்தது
அடித்து பிடித்து எழுந்தால் இரவு முழுவதும் உறங்காதது  இப்போது உறங்கி இருந்த போதும் தலை பாரமாய் வலித்தது
வெளியே வந்தால், சாரு கால் நீட்டி அமர்ந்திருக்க அவளின் மடியில் தலை வைத்து கால்களுக்கு இடையில் உடலை வைத்து அமைதியாய் அபி உறங்கிக் கொண்டிருந்தான் , அவன் மட்டுமல்ல இரவு சரியாக உறங்கததால் வீடே உறக்கத்தில்
நீ காலேஜ் போகலை சாரு என்று சுந்தரி கேட்க
இவன் ஒரே அழுகை அண்ணா மட்டும் என்ன பண்ணுவான் அதான் நான் லீவ் போட்டுடேன் நித்யாவும் போட்டுட்டா என
உங்க அண்ணா எங்கே என
சுந்தரியை பொறுத்த வரை அங்கே அவள் விருந்தாளி அவ்வளவே ஓட்ட முடியவில்லை அவள் அந்த வீட்டின் மருமகள் என்ற உணர்வு வரவேயில்லை
இரண்டு நாட்கள் கழித்து கிளம்பும் போது பா இங்க இருக்குற சுந்தரிக்கு கொடுத்த பொருள் எல்லாம் எடுத்துக்கரேன், உபயோகிக்காம சும்மா தானே கிடக்கு அங்க வீட்ட்ல இதெல்லாம் இல்லை என்றான்
அதை தானே டா நீ அங்க போன போதே நான் சொன்னேன் நீ தான் என்னை வீட்டை விட்டு துரதுரீன்களா ன்னு சொன்ன என்றார் அவர்
அப்போவும் நான் தான் சொன்னேன் இப்போவும் நான் தான் சொல்றேன் என்றவன்
அப்போதே ஒரு வண்டி வைத்து பொருக்களை தூக்க , அளவாய் பொருட்கள் இருந்த சுந்தரியின் வீடு இப்போது பொருட்களால் நிறைந்திருந்தது
கண்ணனுக்கு அந்த கட்டிலும் மெத்தையும் வேண்டும் அதை மட்டும் எடுத்துப் போகிறோம் என்று சொல்ல முடியாதே
பின்னே அந்த கட்டிலில் தான் சில நிமிடங்கள் என்றாலும் மனைவியை அணைத்து படுக்கிறான் அதற்காக மட்டுமே  
பின்னே என்ன தான் செய்ய,
சுந்தரி இவன் முகம் பார்த்தாலே ஓடுகிறாள் அவனிடம் உன்னை தேடினேன் என்று சொன்ன பிறகு அவனை தவிர்க்கிறாள்
அதுவுமில்லாமல் ரூமிற்கு உறங்க மட்டும் தானே செல்கிறார்கள் தனியாய் பேச நேரமில்லை என்பதனை விட நேரம் உருவாக்கி கொள்ளவில்லை
சுந்தரிக்கு வீடு வந்ததும் தான் நிம்மதி ஆகிற்று அபியை கண்ணனிடம் விட்டு தோட்டத்தை ஒரு சுற்று சுற்றி வந்தாள் பின்னே நர்சரியில் போய் சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்
என்ன எல்லாம் விட்டுட்டு போன மாதிரி அப்படியே இருக்கா இல்லை எதுவும் காணோமா என்றான் கிண்டலாக
சுந்தரி பதிலே சொல்லவில்லை அவளுக்கு என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை அவனிடம் மனதை சொல்லி விட்ட பிறகு அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை கண்ணிடம் வார்தையாட முடியவில்லை ஒரு தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது  
தயக்கம் மட்டுமல்ல ஒரு ஏமாற்றம் கூட தன் மனதை சொல்லி விட்ட போதும் அதற்குரிய பிரதிபளிப்பு கண்ணனிடம் இல்லையோ என்பது போல  

Advertisement