Advertisement

சுந்தரி அப்படியே ஆயாசமாக படியில் அமர்ந்து கொள்ள , கண்ணனுக்கு மனைவியை காதல் பார்வை பார்க்க வேண்டும் என்றாலும் வரவில்லை, பசி வயிற்ரை கிள்ளியது.
இதற்க்கு மேல் ஆகாது என்று உணர்ந்தவன் , ரொம்ப பசிக்குது நான் ஹோட்டல் போய் சாப்ட்டு வர்றேன் என்று கிளம்பினான்
பக்கமே ஆடையார் ஆனந்த பவன் ஹைவேஸில் இருக்க, வேகமாய் உடை மாற்றி கிளம்பிவிட்டான் பின்னே அழுக்கு வேஷிடியோடு போக மனதில்லை
அவன் சென்ற நேரம் நான்கு மணிக்கு மேல் ஆகியிருக்க சாப்பாடு இல்லாததால் நான் பன்னீர் பட்டர் மசாலா, பிரைட் ரைஸ் என்று திருப்தியை கட்டியவன் , வரும் போது சுந்தரியை தொட்டு பார்த்து வந்திருந்தான் அவளுக்கு காய்ச்சல் விட்டிருந்ததால் அவன் சாப்பிட்டதை அப்படியே அவளுக்கும் பார்சல் வாங்கி பின் மகனுக்கு ஸ்நேக்ஸ் வாங்கி என்று எல்லாம் செய்து அவனின் அப்பாவின் கார்டை தேய்த்து வந்தான்
மனதிற்கு ஒரு உறுத்தல் ஆனது கிட்ட தட்ட ஆயிரம் ரூபாய் இப்போது அவரின் அலைபேசிக்கு மெசேஜ் போயிருக்கும் அவன் படிக்கும் போது இதனை விட அதிகம் செலவு எல்லாம் அவனின் அப்பாவிற்கு அசால்டாய் வைப்பான்
ஆனால் இப்போது மனது என்னவோ செய்தது, அவன் ஒரு பைசா கூட அவர்களுக்கு கொடுப்பதில்லை இதில் அவர்களிடம் வாங்கி செலவு செய்வதா என
அதுவும் சிந்தா மணியோடு அவள் பேசியிருந்த பேச்சுக்கள் அவளுக்குள் ஒரு ஏக்கத்தை கொண்டு வந்து இருந்தது.
அவளை பார்த்ததும் புன்னகைத்தவன், நான் போனதுல இருந்து இங்கயா உட்கார்ந்து இருக்க என்றான் 
ஆம் என்பது போல தலையாட்டியவளிடம் ம்ம் அதிசியம் தான் போ எப்படி உன் காலு தோட்டத்து பக்கம் போகாம நின்னது என
பால் கறக்க ஆள் வந்தாங்க அதுதான் உட்கார்ந்திட்டேன் என்றாள் சமாளிப்பாய்
பால் கறக்க வரும் பெரியவருக்கு யாரும் தேவையில்லை அவர் பாட்டிற்கு செய்வார்
இந்த ஒரு மாதமாய் ஆள் வைத்திருந்தான் கண்ணன் , சுந்தரி ஓய்வில்லாது வேலை பார்ப்பதாய் தோன்ற வைத்திருந்தான்
மிக சிறு வயது ஓய்வில்லாமல் உழைக்கிறாள் அவனின் தங்கை இவளை விட ஒரு வயது சிறியவள் அவ்வளவு சொகுசு தான் ஒரு வேலை செய்ய மாட்டாள் இன்று அண்ணன் வீட்டில் அண்ணனுக்காய் சமைத்தால் அவ்வளவு தான்
சிந்தா விடம் அவ்வளவு இலகுவாய் வாயாடிய போதும் அவள் சொன்ன ஒரு சொன்ன ஒரு விஷயம் மனதை உறுத்த ஆரம்பித்து இருந்தது
நீ மேல சொகுசா படுத்திருக்க தம்பி கட்டாந்தரையில உருளுது என்றது தான்,
கிட்ட தட்ட ஒரு மாதமாய் வெளியில் தான் படுக்கிறான் கயிற்ருக் கட்டிலில் அதற்க்கு முன் ரூமில் படுத்த போதும், அவளும் அபியும் மேலே உறங்க அவன் கீழே தான் அந்த கட்டிலில் மூன்று பேர் உறங்க இடம் போதாதே.
நீங்க மேல படுங்க நான் கீழ படுக்கறேன் என்று இவள் சொன்னதில்லை ரெண்டு பேருமே கீழே படுக்கலாம் என்றும் சொன்னதில்லை
அவனாய் தான் சென்றான் அவனாய் தான் வந்தான் இப்போது பக்கத்திலும் அவனாய் தான் வர வேண்டும் என்று நினைத்திருக்க இன்னம் அப்படி ஒன்று நடக்கவேயில்லை
உடல் சார்ந்த ஏக்கங்களை உணரும் உணர்வு அவளுக்கு இல்லை இன்னம் அவளின் கணவன் அவளுக்கு அதனை எல்லாம் உணர்ந்தியதேயில்லை.
அவனின் மனக் காயம் அவனை தள்ளியே தான் நிறுத்தியது. கல்லூரி படிப்பை கூட முடிதிராத ஒருவன் , எல்லோரின் முன்னும் அவன் கேட்ட பேச்சு கேள்வி அவனின் ஈகோவை வெகுவாய் சீண்டி விட அதனால் தான் விவாகரத்தே பெண்களுக்கு மட்டும் தான் லஜ்ஜையும் அவமானமுமா ஆண்களுக்கும் உண்டே,  
மிக ரகசிய உணர்வுகள் வாழ்க்கை துணையோடு கூட அதனை பகிரும் சுதந்திரம் இருந்தால் தானே பகிர முடியும்
பிடிக்கலை பிடிக்லைன்னு சொலிட்டு நீ புள்ளைய குடுப்பேன் ன்னு நான் என்ன கண்டேன் என்று மொத்த குடும்பத்தினர் முன் அம்மா பேசிய பேச்சு எல்லோர் முன்னும் கூனி குறுகி நின்றது சுந்தறியோடு உடலால் நெருங்க நாள் ஆகும்
அதற்க்கு தக்க அவளும் சீண்டிக் கொண்டே இருக்க , அவளை சேரும் ஆசை அவ்வப் போது எட்டி பார்த்தாலும் பின் ஓடி விடுகிறது  

Advertisement