Advertisement

பையனை கூட்டிட்டு வர்றேன்னு சொன்னீங்க வரலையா என்றார் அந்த நடுவில் நின்ற மீடியேட்டர். பின்னே இவர்கள் வெண்மையில் பளீரிட கண்ணனை யாரோ டிரைவர் என்று நினைத்துக் கொண்டான். அவன் மட்டுமில்லை அங்கே இன்னும் ஆறேழு பேர் இருந்தனர்.   
சுந்தரி இன்னும் இறங்கவில்லை. நான் சொல்லும் போது இறங்கு என்று விட்டனர்.
அவர் அப்படி கேட்கவும் சந்திரன் மகனை முறைக்க
அவர்களின் பேச்சு சுந்தரிக்கும் கேட்டது ,
அவர் பையன் நான் தாங்க வேலைல இருந்தேன் அப்படியே வந்துட்டேன் என்று கண்ணன் சொல்லிக் கொண்டே அவனின் வேஷ்டியை மடித்து கட்டி இரு கையையும் இணைத்து நெட்டி முறித்து சொல்ல
கணவனின் தோரணையில் சுந்தரியின் மண சுனக்கங்களையும் மீறி அவனை ரசித்து பார்த்தது.
ஒஹ் அப்படிங்களா சரிங்க சரிங்க என்ற அந்த மீடியேடரின் உடல் மொழியில் ஒரு பணிவு வர,
சுந்தரி தயக்கத்தோடு நிற்க அவர்கள் எல்லோருக்கும் சுந்தரியை தெரிந்திருந்தது கண்ணனை தான் தெரியவில்லை, என்ன இருந்தாலும் சுந்தரிக்கு பெரிய சொத்து தானே அங்கே, அவளின் நர்சரியும் பூந்தோட்டமும் பிரசித்தம்,
அட நம்ம பெரிய காட்டுக்காரங்க, இவங்க உங்களுக்கு என இழுக்க
யோவ் என் மருமகய்யா என,
அப்போது தான் அவர்களுக்கு அது ஞாபகத்தில் வந்தது அட சரி சரி என்றனர் உடனே
அங்கிருந்த ஒருவன் மெதுவாக முணுமுணுத்தான் அதானே பார்த்தேன் இவர் கிட்ட இது வாங்கற அளவு ஏது பணம் ன்னு , அந்த பொண்ணுக்கு பெரிய சொத்து அது மருமக ன்னா வாங்குவானுங்க முடிச்சு விடு முடிச்சு விடு கமிஷன் பார்க்கலாம் என்றான் அவனின் கூட்டாளி காதினுள்.
யாரும் சுந்தரிய யார் என்றும் கேட்கவில்லை அவளின் உடை கொண்டும் கீழே பார்க்கவில்லை இல்லை அவளின் சொத்துக்களை கொண்டு மரியாதை தானாய் வந்தது.
பைக்கில் போகும் போது சொல்லிக் கொண்டே சென்றான் அப்பா இதை வாங்கலாம்னு சொல்றாங்க நமக்கு இருக்குறது பார்க்கவே சரியா இருக்கு சொன்னேன் இல்லை சலீசா வருது வாங்கி போடுவோம்னு சொல்றாங்க
என்ன பண்ணலாம் நேத்து இதை தான் பேசணும்னு நினைச்சேன் ஆனா வேற தான் நிறைய பேச வேண்டிய தாயிடிச்சு என்றான்
அந்த பேச்சுக்கள் ப்ச் நினைக்கவே இருவருக்கும் பிடிக்கவில்லை, சுந்தரிக்கு இத்தனை பேர் இருக்க என்ன கோபம் காண்பிக்க முடியும் , சகஜமாய் பேச முயன்றாள்
மாமா வாங்கணும்னு நினைச்சா வாங்கட்டுமே இதுல நான் சொல்ல என்ன இருக்கு என்றாள் பேச்சு பேச்சாய் இருந்தாலும் கண்கள் தோப்பை சுற்றி வலம் வந்தது.
அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்தது, சில மரம் காய்க்க ஆரம்பிக்க, அதை பார்த்தவள் நிறுத்துங்க என்று அவன் நிறுத்தியதும் அது கீழாக தான் காய்த்து இருக்க ஒரு எம்பு எம்பி அதனை பறித்தவள் அந்த மாங்காயை துடைத்து கடித்து ருசி பார்த்தாள்   
மகன் சரி என்று சொல்லுவான் என்று நினைத்திருந்த சந்திரன் முகத்தினில் ஏமாற்றம் அவர்கள் ஏக்கர் இன்ன விலை என்று சொல்ல
கண்ணனுக்கு அதன் விவரங்கள் பிடிபடவில்லை. அவன் இங்கே வந்து சில மாதங்கள் தானே , அதிலும் இந்த விஷயங்கள் அவனுக்கு புதித்து ஆனால் அவன் சற்றும் தயங்கவில்லை மனைவியின் முகம் பார்த்தான் என்ன இந்த விலை சரியா என்று
அவனுக்கு நன்கு தெரியும் சுந்தரி புத்திசாலி அவளுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் அத்து படி என்று   அதையும் விட இங்கே வந்த நாளாய் அவர்களின் நிலத்தில் சுந்தரி சொல்லும் வேலைகள் அவள் பார்த்திருந்த வேலைகள் இப்படி தானே செய்கிறான் அதனால் சற்றும் கூச்சமின்றி அவளின் முகத்தை தான் என்ன சொல்வது என்று பார்த்தான்
விலை அதிகமா இருக்குற மாதிரி இருக்கு என்று கணவனின் காதை கடித்தாள் சுந்தரி
இல்லைம்மா என்ற சந்திரன் பாரு அந்த ஊர்ல கூட இந்த விலைக்கு போச்சு என்றார்
இந்த விலைக்கு ரெண்டு பார்டி இருக்காங்க என்றான் அந்த மீடியேட்டர்
சந்திரன் அச்சோ கை விட்டு போயிடுமோ என்று பார்க்க
கண்ணன் சுந்தரியின் முகம் பார்த்தான்
இவ்வளவு அவசரமா நமக்கு அதை வாங்கணும்னு கிடையாது வேற ஆளுங்க வந்தா குடுத்துட சொல்லுங்க என்று நொடியில் முதலாளியாய் மாறி சுந்தரி சொல்ல,
கண்ணனும் அவங்க முடிவு தான் என்று சுந்தரியை காட்டினான்
மருமகள் மருமகள் என்று தலையில் தூக்கி வைத்த சந்திரன் கூட என்ன அவளை பேச விட்டு பார்க்கிறான் என்று தான் தோன்றியது
சுந்தரி அந்த ஆட்களை பார்த்ததில் எங்களுடன் இப்படி நீ வியாபாரம் செய்ய முடியாது என்ற நிமிர்வு இருந்தது   
இல்லையில்லை அவங்க எல்லாம் வெளி ஆளுங்க நீங்க நம்ம ஆளுங்க உங்களுக்கு சொத்து பெருகும் என்று அவர்கள் தணிந்து வந்தனர்.

Advertisement