Advertisement

அவள் கதவை மூடிய வேகத்திற்கு சட்டென்று பின்னடைந்து தடுமாறி பின் ஸ்திரமாய் நின்றான். அவன் உடனே அனிச்சையாய் செய்தது சுற்றும் முற்றும் பார்த்தான். மனது கொதித்தது என்னவோ ஏதோ வென்று பதறி வந்தால் கதவை முகத்தினில் அடித்து சாத்துகிறாள்.
நான் எட்டி ஒரு உதைத்தேன் என்றால் இந்த கதவு என் முன் நிற்குமா கதவு என்ன ஒரு அறை விட்டதற்க்கே தாள முடியலை.. இப்படி முகமே வீங்கி கிடக்கிறது.. இவள் என்னை அடிப்பளாமா ஆளையும் அவளையும் பார்.. கதவை உடைக்க ஒரு ஆத்திரம் கிளம்ப.. இப்போது யாரும் காரிடாரில் இல்லை என்றாலும் சத்தம் கேட்டு யாராவது வெளியே வந்து  வேடிக்கை பார்த்தால் அது வேறு தலையிறக்கம் என்று புரிய அமைதி காத்தான்.
பின்னே தான் கிளம்பும் போது கையினில் விஷால் இன்னொரு சாவி தன்னிடம் கொடுத்தது ஞாபகம் வர…
ஓஹ் இவள் கதவை திறக்க மாட்டாள் என்று தெரிந்து தான் சாவியை கொடுத்தானா.. அப்போது எல்லோருக்கும் தெரிகிறது நமக்கு தெரியவில்லையா என்பது அப்படி ஒரு கோபம் கொடுத்தது..
=========================================================
எப்படி உள்ள வந்தீங்க நான் இங்க இருக்குறது எப்படி தெரியும்
ஒரு அறை விட்டா முகமே மாறி போச்சு நீ என் முகத்துல அரையர மாதிரி கதவை சாத்துவியா என்று வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டே அருகில் வந்தான். வேம்புலியம்மன் கோவிலுக்கு சென்றதால்
முன்பானால் ஒரு பயம் இருந்தது இப்போது ஜெயந்திக்கு அது இல்லை.. அடித்து விட்டான் வீட்டை விட்டு துரத்தி விட்டான் இனி என்ன செய்து விடுவான் பார்த்துக்கொள்ளலாம் என்ற இருமாப்பு எழ…
நீங்க ஒரு கன்னத்துல அடிச்சது பத்தாதுன்னு இன்னொரு கன்னத்துல அடிக்க வந்திருகீன்களா
அட தெரிஞ்சு போச்சா அதுக்கு தான் வந்திருக்கேன்னு என்றான் அசராமல் அவன் பார்வை அவளின் முகத்தை தான் விடாமல் பார்த்தது.. முகம் சற்று வீக்காம் குறைந்து இருக்க அடிபட்ட பக்கம் கண்ணை சுற்றி கரு வளையம் ஆரம்பித்து இருக்க
=======================================================
மருது அவளுக்கு எதிர்புறம் உள்ள சோபாவில் அமரந்து.. ஒன்னு உங்கம்மா வீட்டுக்கு போ இல்லை நம்ம வீட்டுக்கு வா இப்படி தனியா இருக்குறது எல்லாம் என்னால அனுமதிக்க முடியாது என்றான் கறாராக
உங்க அனுமதியை நான் கேட்கலையே என்றாள் வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு
அது தானே நீ எதுக்கு கேட்ப.. என்னை கல்யாணம் பண்ண சரி ன்னு சொனதையே எதோ போனா போகுதுன்னு சொன்ன ஆசாமி தானே நீ.. இதுல நீ என் அனுமதி எல்லாம் கேட்பேன்னு நான் நினைக்கலை என்றான் அவனும் வசதியாய் சாய்ந்து கொண்டு..
சும்மா கதை பேசாதீங்க போ ன்னு சொன்ன பிறகு நான் எங்க போகணும்னு எல்லாம் நீங்க சொல்ல வேண்டிய அவசியமில்லை.. ஒன்னு எங்கம்மா வீடு கல்யாணமான பிறகு எனக்கு அங்க போக விருப்பமில்லை இன்னொன்னு என் புருஷன் வீடு அவன் என்னை வெச்சிக்க மாட்டேன்னு துரத்தி விட்டுட்டான்
=====================================================
அவனுக்கு என்ன தெரியும் இவள் அம்மா வீடு செல்லாமல் தனியாய் வருவாள் என்று.. ஜெயந்தியை அறிந்தவன் தான் ஆனால் பெண்களை அறிந்தவன் இல்லையே அம்மாவை அறியாதவன்.. கூடப் பிறந்த அக்காவோ தங்கையோ கிடையாது.. மனைவியை ஒரு மாதம் அணு அணுவாய் அறிந்தவன்.. அவளின் உள் இருக்கும் எலும்புகளை தோல் மறைத்து விட்டதால் அதனை அறிய முடியவில்லை.. பாக்கி எல்லாம் கண் மூடி காணும் கனவு இல்லை.. கண் திறந்து கொண்டே காணும் நனவாய் வைத்திருந்தான் அவனுள்.
போ என்று சொன்ன போது அவளின் நிலை ஞாபகம் வரவில்லை..
செய்தது தப்பு என்று கூட புரியாதவன் கிடையாது செய்ததை நியாயப் படுதுபவனும் கிடையாது ஆனால் நடந்து விட்டதற்கு இனி என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் இருக்க..
அமைதியாய் எழுந்து அவளின் அருகில் வந்தான்.. அவள் என்ன என்று பார்க்க
சோபாவில் அமர்ந்திருந்த அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்து.. வீட்டுக்கு வந்துடேன் என்றான்
 

Advertisement