Advertisement
“சுந்தரிக்கு புடவை எடுத்தோம்… தைக்க குடுக்கணும்” என
“என்ன மாதிரிடா?” என
“என்ன மாதிரின்னா?” என
“சும்மா ப்லோவ்ஸ் சா டிசைன் ப்ளவுஸ் சா , வொர்க் பண்ணனுமா பேட்ச் வொர்கா?” என அவர் அடுக்க
“மா… பட்டு புடவை வாணி வீட்டு பான்ச்ஷன் க்கு கட்ட…”
———————————————————————————-
“எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்?” என்றாள்.
“என்ன ஆர்ப்பாட்ம் இதுல? உன்னோட டிரெஸ்ஸிங் ஒரு கேதேரிங் ல எனக்கு முக்கியம்” என
அவளுக்கு புரியவில்லை,
————————————————————-
“யார் அது உனக்கு ப்ளவுஸ் தைக்கரதுன்னு தெரியலை” என்று அவன் கடுப்பாக சொல்ல
“எங்களுக்கு தெரிஞ்சவங்க. அவங்க வடிவு பாட்டிக்கு முன்ன இருந்து தேச்சு குடுக்கறவங்க… அதனால நானும் அங்க தான் குடுபேன் வேற எங்கேயும் குடுக்க மாட்டேன்” என்று அவள் முறைப்பாய் சொல்ல
“அதானே பார்த்தேன்… அதுதான் நீ போடறதும் உன் பாட்டி யோடது மாதிரி இருக்கு”
———————————————————————-
“என்னை… என் துணியை… என் வீட்டை… என் ஆளுங்களை எல்லாம் பிடிக்கலைன்னு தானே விட்டுட்டு போனீங்க… இப்போ என்ன வந்து அதை செய் இதை செய் உனக்கு யாரு தைச்சு குடுக்கரான்னு பண்ணட்டாம் பண்றீங்க?” என்று சுள்ளென்று பேச
கண்ணனுக்கு அப்படி ஒரு கோபம் பொங்கியது
———————————————————
“வீட்டுக்கு போங்க…” என
“நான் எங்க போகணும்னு நான் தான் முடிவு பண்ணனும்” என்றவன் “அப்படியே இறங்கி போய்டலாம் நினைக்காத… தொலைச்சிடுவேன்” என்றவன் வேகமெடுத்து தைப்பவர்களின் வீட்டின் முன் நிறுத்த, “நான் இறங்க மாட்டேன்” என்றாள்
“எறங்குடி” என்று வார்த்தைகளை கடித்து துப்பியவன் அவள் இறங்கியது, “நான் சொல்றதை மட்டும் செய்யற…”
———————————————————–
“இப்போ போட்டிருக்கற மாதிரி வேண்டாம். இன்னும் கொஞ்சம் கரக்டா அளவு இருக்குற ப்ளவுஸ் கொடுத்தா பரவாயில்லை” என
“அவகிட்ட இருக்குற எல்லாம் இப்படி தான்” என்றான்
“அட இதென்ன? நீங்க பாரின் எல்லாம் போயிருக்கீங்கன்னு உங்கம்மா எப்பவும் பெருமை பேசுவாங்க, எப்படி இப்படி இவங்க ட்ரெஸ் பண்றாங்க?” என்றார் பட்டென்று
——————————————————————-
சுந்தரியின் முகத்தில் சிரிப்பு இல்லை. ‘உன் வேலை என்னவோ அதை பார்’ என்ற பார்வையை அந்த தைக்கும் பெண்மணியிடம் கொடுத்தாள்.
பின்பு அந்த பெண்மணி ஒரு வழியாய் அளவு எடுக்க அதை பார்த்தும் பாராமல் பார்த்திருந்தான் கண்ணன்
நிச்சயம் சுந்தரியை ரசிக்க வில்லை, இதுவாவது என் பெண்டாட்டிக்கு அழகாய் தைக்குமா என்ற பார்வை தான்..
——————————————————-
“அச்சோ… தப்பா எடுத்துகிட்டீங்கலா? நான் அப்படி சொல்லலை” என்று அந்த பெண்மணி பெச்சுக்காய் நீட்டி முழக்க
“தப்பா பேசினா தப்பா தான் எடுப்பாங்க…” என்று நிமிர்வாய் சொன்னாள்.
Advertisement