Advertisement

ஒரு முழு நிமிடம் கூட மருதுவால் அமர முடியவில்லை.. ஜெயந்தியின் அழுகை அவனை அமர விடவில்லை.. வேகமாக எழுந்தவன் அவள் முன் சென்று நின்றான்..
கீழே தரையில் குத்துகாலிட்டு அமர்ந்து தலையை சுவற்றில் சாய்த்து அழுது கொண்டிருந்தாள்.. இன்னம் ரத்தம் உதடில் வந்து கொண்டிருக்க.. பதறி போனான் கூட பயந்தும் போனான் .
அவளின் முகம் ஒரு புறமே வீங்கி இருக்க.. முகமே வித்யாசமாய் தெரிந்தது.. கண்களும் வீங்கி இருக்க..
எப்படி அடித்து விட்டோம்.. என்னவாகிற்று எனக்கு மனிதனா நான்..
========================================================
நீயும் என்னை அடிச்சிக்கோ இதை விட அதிகமா காயம் ஆகர மாதிரி என்று ஒரு தீர்வு சொல்ல
உன்னை அடிச்சா என்னோட வலி குறைஞ்சிடுமா என்றாள்
எல்லாம் தேம்பி கொண்டே பேசினால் உதடில் இருந்தா வாயில் இருந்தா என்று தெரியவில்லை.. ரத்தம் வேறு வந்தது..
வேகமாய் உள்ளே சென்று அவனின் வேஷ்டி துணியை கிழித்து அதை தண்ணீரில் நனைத்து வந்தவன்.. அவளின் உதடை துடைக்க கைகளை நீட்ட
ஒன்னும் வேண்டாம் என்று அவள் சொல்
பேசாத பேசாத் பேசினா ரத்தம் வருது.. துடைச்சிடலாம் ஹாஸ்பிடல் போலாம் என
நான் துடைக்கவும் மாட்டேன் ஹாஸ்பிடல் வரவும் மாட்டேன் இப்படியே தான் இருப்பேன் என
==========================================================
வாயை திற என்று அவன் போட்ட சத்தத்தில் வாய் தானாக திறந்தது…
பார்த்தால் பல்லிடுக்கிலும் ரத்தம்..
சத்தியமா நான் வேணும்னு செய்யலை.. இதுக்கு தான் ரொம்ப கோபம் வந்தா வெளில போயிடுவேன் . தப்பு தான் வா ஹாஸ்பிடல் போகலாம்… வா போலாம்
அப்போ என்னை அடிக்க போறீங்கன்னு உங்களுக்கு முன்னமே தெரியுமா என்று அழ
அப்படி எல்லாம் எதுவுமில்லை ஜெயந்தி ப்ளீஸ் வா என்னை த்திட்டிக்கோ அடிச்சிக்கோ ஹாஸ்பிடல் போகலாம் வா நிறைய ரத்தம் என்றான் மன்றாடலாய்
அவள் அசையாமல் தேம்பியபடி இருக்க…
======================================================
சில நொடிகள் அவளை பார்க்க நீ என்ன செய்தலும் நான் வரமாட்டேன் என்ற பார்வையை கொடுத்தவள்.. இந்த என்னோட வலி எனக்கு தேவை தான்.. என்று அவனை பார்த்தபடி சொல்ல
மருது ஒன்றும் சொல்லாமல் உள்ளே போனவன் காய்கறி நறுக்கும் கத்தியோடு வெளியே வந்து அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்
என்ன கத்தியை காட்டி பயப்படுத்றீங்களா என்று அழுது சிவந்த விழிகளோடு அவள் சொல்ல
நான் பண்ணினது தப்பு தான் ஆனா சாரி கேட்க மாட்டேன் நான் சாரி கேட்டா செஞ்சது இல்லைன்னு ஆகிடாது.. அதனால் உன்னோட வலி உனக்கு தேவைன்னா எனக்கு தேவைதானே.. உன்னோட வலி என்னால வாங்க முடியாது இப்போ நீ ஹாஸ்ப்பிடல் வரலின்னா அந்த வலியை நான் குடுதுக்குவேன் என்று சொன்னவன் அவள் என்ன என்று அனுமானிக்கும் முன்னரே அவளை அடித்த அவனின் உள்ளங்கையை அவள் முன் நீட்டி அந்த கத்தியால் ஒரே கீறாய் கீற ரத்தம் பீச்சி அடித்தது..

Advertisement