ஒரு முழு நிமிடம் கூட மருதுவால் அமர முடியவில்லை.. ஜெயந்தியின் அழுகை அவனை அமர விடவில்லை.. வேகமாக எழுந்தவன் அவள் முன் சென்று நின்றான்..
கீழே தரையில் குத்துகாலிட்டு அமர்ந்து தலையை சுவற்றில் சாய்த்து அழுது கொண்டிருந்தாள்.. இன்னம் ரத்தம் உதடில் வந்து கொண்டிருக்க.. பதறி போனான் கூட பயந்தும் போனான் .
அவளின் முகம் ஒரு புறமே வீங்கி இருக்க.. முகமே வித்யாசமாய் தெரிந்தது.. கண்களும் வீங்கி இருக்க..
எப்படி அடித்து விட்டோம்.. என்னவாகிற்று எனக்கு மனிதனா நான்..
சில நொடிகள் அவளை பார்க்க நீ என்ன செய்தலும் நான் வரமாட்டேன் என்ற பார்வையை கொடுத்தவள்.. இந்த என்னோட வலி எனக்கு தேவை தான்.. என்று அவனை பார்த்தபடி சொல்ல
மருது ஒன்றும் சொல்லாமல் உள்ளே போனவன் காய்கறி நறுக்கும் கத்தியோடு வெளியே வந்து அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்
என்ன கத்தியை காட்டி பயப்படுத்றீங்களா என்று அழுது சிவந்த விழிகளோடு அவள் சொல்ல
நான் பண்ணினது தப்பு தான் ஆனா சாரி கேட்க மாட்டேன் நான் சாரி கேட்டா செஞ்சது இல்லைன்னு ஆகிடாது.. அதனால் உன்னோட வலி உனக்கு தேவைன்னா எனக்கு தேவைதானே.. உன்னோட வலி என்னால வாங்க முடியாது இப்போ நீ ஹாஸ்ப்பிடல் வரலின்னா அந்த வலியை நான் குடுதுக்குவேன் என்று சொன்னவன் அவள் என்ன என்று அனுமானிக்கும் முன்னரே அவளை அடித்த அவனின் உள்ளங்கையை அவள் முன் நீட்டி அந்த கத்தியால் ஒரே கீறாய் கீற ரத்தம் பீச்சி அடித்தது..