Advertisement

நேரமும் பதினோன்றிர்க்கு மேல் இருக்க.. காலையில் திருப்பதி சென்ற களைப்பு பின்பு வரவேற்ப்பு களைப்பு ஜெயந்தி சோர்த்து தெரிய

“நாங்க போறோம்” என்று கிளம்ப

“எப்படி போவீங்க” என

அவர்களை விட்டு கார் கிளம்பியிருந்தது வாடகை கார் தான் பேசியிருந்தான் இன்னும் கார் வாங்கவில்லை… ஆம்! தனியன் என்பதால் யாரோடு காரில் போக போகிறேன் என்று நினைத்தே வாங்கவில்லை… இனி தான் எல்லாம்!!

ரெண்டு வீதி நடந்து போயிடறோம் என்று சொன்னவன்.. ஜெயந்தியை பார்க்க தலையை ஆட்டினாள்.


“ஏன் என்கிட்டே முன்னமே இந்த ஹோட்டல் விஷயம்? எல்லாம் சொல்லலை சொல்லியிருக்கணும் தானே? இப்போ வேண்டாம்னு மறுத்தது அவங்களுக்கும் கஷ்டம்”

“இல்லை… எனக்கு தெரியாது!” என்று அவள் பேச

“தெரிஞ்சிருக்கணும் இல்லையா? கல்யாணம் முடிஞ்சு எங்க போவோம் எல்லாம்…”

“இல்லை… நான் யோசிக்கலை… சாரி!” என்று ஜெயந்தி பேச

“‘இல்லை நான் யோசிக்கலை’ ன்னு சொல்லு… சாரி எல்லாம் சேர்க்காதே” என்று பட்டென்று சொல்ல…

“ம்ம்…” என்ற தலையாட்டல் மட்டும்


“எனக்கு தெரிஞ்சு பொண்ணுங்க தான் சுத்துவாங்க…” என்று  ஜெயந்தி சொல்ல

“ஆனா நீ வீட்டுக்கு வர்றதுக்கு தானே சுத்றோம்…” என்று மருது சொல்ல..

“இருங்க… ரெண்டு பேருமே சுத்திகலாம்” என்றவள் ,அவளும் அவனுமாய் கை பிடித்து சுற்றி பின் அவள் அவனுக்கு பொட்டு வைக்க அவன் அவளுக்கு பொட்டு வைக்க என்று ஒரு நெகிழ்ச்சியான தருணம்.


ஒரு கை மெதுவாய் அவளின் கன்னம் வருடியது

அதில் அவளுக்கு லேசாய் விழிப்பு வர, “ஜதி…” என்றான் மெல்லிய குரலில்… பாதி தூக்கத்தில் கண் விழித்தாள்..

“நான் உன்னை தொட்டுக்கட்டுமா?” என்றான் அவளின் கண்களை நேராய் பார்த்து…

அவளுக்கு புரியவேயில்லை… “எதுக்கு ?”என்று ஒரு கேள்வி கேட்க


“ம்ம்… பெருசா இருக்கு! சின்னதா வேற இருக்கா பார்க்கலாம்…. இப்போதைக்கு இதை கழட்டிடலாம்” என்று சொல்ல

“ம்மா ….அதெல்லாம் முடியாது முடியாது…. வேண்டாம் வேண்டாம்!!”

Advertisement