Advertisement

அடுத்த நாள் காலை மருத்துவமனையின் வாசலில் ராகுல் மற்றும் மிருதுளாவை எதிர்கொண்ட அத்விக் ” நீ எங்கேடா இங்கே ? ” என்றான் .

” நியூஸ் பார்த்துவிட்டு மும்பைக்கு போன் பண்ணினால் நீ அப்போதே புறப்பட்டு விட்டாய் என்று தகவல் கிடைத்தது ….. உன் போன் சுவிட்ச் ஆஃப் …., ஹர்ஷி போனிற்கு அழைத்தால் எடுக்கவில்லை ….. பின் அத்ரிஷுக்கு அழைக்கவும் தான் விஷயம் தெரிந்தது ……. ஹர்ஷி எப்படிடா இருக்கா ? குட்டீஸ் ? ” என்று விசாரித்த ராகுலிடம்

” பேபிஸ் என்.ஐ.சி.யு வில் இருக்காங்கடா … ஒரு மாதம் அங்கே வைத்து அவர்களுக்கு உரிய எடை வந்ததும் தான் கையில் கொடுப்பார்கள் … ஹர்ஷி இஸ் ஃபைன்டா ” என்று அவர்களை  ஹர்ஷிதாவை பார்க்க ரூமிற்கு அழைத்துச் சென்றான் அத்விக் .

” என்ன பண்ணி வச்சுருக்கிற நீ ?? கேர்ஃபுல்லா இருக்க தெரியாதா??? இருந்திருந்து இருபத்தெட்டு வருடங்களுக்கு பிறகு ஆண்டவன் ஒரு தங்கச்சியை அனுப்பி வைத்திருக்கிறான் என்று நினைத்தேன்…. மாடிப்படிகளில் இருந்து விழுந்துவிட்டாய் என அத்ரிஷ் கூறியதும் எப்படி உணர்ந்தேன் தெரியுமா??? தயவுசெய்து இனியாவது ஒழுங்காக கவனமாக இரு!!!” என உணர்ச்சிகளின் பிடியில் நின்று அதட்டிய ராகுலை அங்கிருந்தோர் அனைவருமே அதிர்ந்துதான் பார்த்தனர்.

அதை கண்டுகொள்ளாது
“சரி … என்று சொல்கிறாளா பாரு” என்று மீண்டும் கடிய

” சரி ராகுல் சார்”  இப்புதிய பாசத்தின் காரணம் தெரியாததால் வியப்பாகவே கூறினாள் ஹர்ஷிதா.

“அண்ணானு சொல்லமாட்டாயா???” ஏக்கத்துடன் கேட்டவனிடத்தில் “அது ரொம்ப கஷ்டம் ” என்றபடி அங்கு வந்தான் விக்னவ்.

ஏன்? என்பதுபோல் பார்த்தவனிடத்தில் “அவளுக்கு காரியம் ஆகணும்கிற சமயத்தில் மட்டும் கட்டாயம் பத்து அண்ணன்களாவது கிடைத்துவிடும்…. மற்றபடி வாடிக்கையாகவெல்லாம் சான்ஸே இல்லை …..” என்று விக்னவ் கூறவும்

“விக்கி!!!!!” என கத்திய ஹர்ஷிதா… பின் ” இதற்காகவே நான் இனி உங்களை அண்ணானு கூப்பிடுறேன் ராகுல் அண்ணா” என்றொரு தீர்மானத்தை மேற்கோண்டாள்.

“தட்ஸ் குட் தங்கச்சி” என்ற ராகுலை
“இவனுங்க அலும்பு தாங்கலபா” என்று மற்றவர்கள் எண்ண

”  ஃப்ரெண்டுக்காக கட்டுன பொண்டாட்டிய லவ்வரா தாரை வார்த்து கொடுத்துருக்க …. நீ கேட்டேங்கிறதற்காக அண்ணானு கூட கூப்பிடாட்டி எப்படி ராகுல் அண்ணா” என்றாள் அந்த பாச மலர்….

“என்ன ஃப்ரெண்டு??? லவ்வரு????” விக்னவ் சந்தேகம் கேட்க ” நான் அன்னிக்கே சொல்லிருப்பேன் ….. அத்வி தான் தள்ளிவிட்டுடான்… இப்போ சொல்றேன் விக்கி அண்ணா கேளு” என்றாள்…

” அடேய் எருமைமாட்டுல மழை பெய்த மாதிரி நிக்கிற…. உன் பொண்டாட்டி வாயை மூடுடா… ” என  ராகுல் நண்பனை அதட்ட

” அடிப்பாவி….. இதை நீ விடவே மாட்டாயா??” என்றிருந்தாள் மிருதுளா….

” உங்க பிள்ளைங்க கிட்டயும் கூட  உங்க லவ்வ சொல்லுவேன்” என்று ஹர்ஷிதா சிரிக்க

” அன்னிக்கு அத்தனை தடவை மித்து உனக்கு தங்கச்சி மாதிரினு கெஞ்சுனேனே கேட்டாயாடா பாவி” என்று அத்விக்கை திட்டி கொண்டிருந்தான் ராகுல்.

“,அதென்ன என் தங்கச்சி மாதிரி ….. உன் பொண்டாட்டினு ஸ்ட்ரைட்டா சொல்ல வேண்டியது தானேடா….. அன்னிக்கே தெரிந்திருந்தால் நடிக்க கேட்டிருப்பேனா???? புரூட்டஸ்…. எல்லாம் உன்னால்தான்” என்று புலம்பினான் அத்விக்.

நண்பர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட ” சொல்லிட்டு சண்டை போடுங்கடா…. அப்பதானே யாராச்சும் ஒருத்தருக்கு சப்போர்ட் பண்ண முடியும்” விக்னவ் குழம்பியபடி கேட்டதற்கு

” அண்ணா கம் ஹியர்… நானே சொல்றேன்” என்று கதை கூறியவள் ” இப்போ சொல்லு யாருக்கு விக்கி சப்போர்ட் பண்ண போற?? ” என்றாள் ஹர்ஷிதா.

“தேவையாடா இது????  நானே போய் புதை குழில விழறேன்னு விழுந்து வச்சுருக்கியே !!! அந்த ஆண்டவனால கூட இவ கிட்ட இருந்து உன்னை காப்பாத்த முடியாது மச்சி… ஆல் தி பெஸ்ட்” என்று சிரித்தான் விக்னவ்.

” காப்பாத்திராதன்னு தானேடா மச்சி நானும் சாமி கும்பிடுறேன்” என்று அத்விக் அவன் ராட்சஸியை பார்த்து கண்ணடித்தவாறே கூற ” க்ளீன் போல்ட் அத்தான் நானு ” என்பதை வாத்து போல் முழித்து உணர்த்தி வைத்தாள் .

கணவன் மனைவி இருவரும் பார்வையிலே ஆயிரம் கதைகளை பேச செல்ல “ம்ம்ஹீம்ம்” தொண்டையை சரி செய்தபடி ” நாங்க இன்னும் போகலடா” என்றான் ராகுல்.

” அப்போ போங்கடா….” மனைவியின் மீதிருந்த பார்வையை விலக்காதவன் கூற ” இதற்கு மேலும் இருந்தோம் என்றால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவான் போல…. வாங்க ராகுல் “
என்று  வெளியேற சென்றான் விக்னவ்.

” அச்சோ ராகுல் அண்ணா என்ன இது??
முதல்ல உள்ளே வாங்க….. யார் என்ன சொன்னாலும் உன் தங்கச்சிக்காக இருக்க மாட்டாயா???” என்றவள் மிருதுளாவிடம் திரும்பி “எத்தனை மாசம்?” என்று விசாரிக்க ஆரம்பித்தாள் ஹர்ஷிதா.

சில நேரம் கழித்து ” தனபாலை எப்படிடா பிடித்தாய் ? மீடியாவிற்கு அதற்குள் எப்படி லீக் ஆனது ? ” மும்பை கேஸை பற்றி ராகுல் கேட்டான் .

” தனபாலின் பையன் விஷ்வா தான்டா அவனுடைய ஒரே வீக்னஸ் ..

சிறையிலிருந்து தப்பித்த சில நொடிகளில் விஷயம் தெரியவும் எல்லா செக் போஸ்ட்டையும் அலர்ட் ஆக்கிவிட்டார்கள் .

சோ மும்பையை விட்டு ஓடி இருக்க சான்ஸ் இல்லை என்பதை அறிந்து வெளிநாட்டிலிருந்த விஷ்வா போலீசில் மாட்டிக் கொண்டதாகவும் அவன் உயிருக்கு ஆபத்து என்றும் மும்பை முழுக்க செய்தியை பரப்பினோம் .

எதிர்பார்த்தபடி தனபாலின் போன் ஆக்டிவேட் ஆகவும் அந்த இடத்தைச் டிரேஸ் செய்து பிடிக்க போனோம் .

அங்கு கூடவந்த இன்ஸ்பெக்டர் காலில் தனபாலின் ஆட்கள் சுட்டு விட்டதால் பரபரப்பு ஏற்பட்டு மீடியாவிற்கும் நியூஸ் போனது .

என்னை டிவியில் பார்த்த சந்தோஷத்தில் இதோ அம்மணி இரண்டு மாதத்திற்கு பிறகு வெளியே கொண்டு வர வேண்டிய பேபிஸை சர்ப்ரைஸா உடனே கொடுத்துவிட்டாள் ” என்று மனைவியை குறிப்பிட்டு முடித்தான் அத்விக்.

” சும்மாவே அத்விக் சார் ஃபோட்டோவை மீடியாக்கு அலோவ் பண்ண மாட்டாரு ……. இதில் இப்படி எல்லாம் நீ செய்து வைத்தால் மறுபடியும் ஹிடன் மோடிற்கு சென்றுவிடுவார் ” என்று மிருதுளா ஹர்ஷிதாவிடம் கூற

” அப்படியென்றால் நாம் செய்யும் பணி தேசத்திற்கானது…. உடல் மண்ணிற்கு உயிர் நாட்டிற்கு….. அதற்கு ஏன்டா நாம் நம்மை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் ‘ என்றொரு சொற்பொழிவையாற்றி எனக்குத்தானே என் நண்பன் முதல் ஆப்பு வைப்பான் ” என்று ராகுல் தன் தலையில் கை வைக்கவும் அங்கு ஒரு சிரிப்பொலி எழுந்தது .

குழந்தைகளின் எடை சீராக முன்னேறவும் ஹர்ஷிதாவும் பேபிஸும் 20 நாட்களில் வீடு திரும்பியிருந்தனர் .

அவர்கள் வழக்கப்படி குழந்தை பிறந்து 30 நாட்களில் பெயர் சூட்டும் விழாவை வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தனர் .

நிலா பேபிஸ் பெயர்களை அழகாக கிராஃப்ட் ஒர்க் செய்து வீட்டில் ஆங்காங்கே ஒட்டி அலங்கரித்துக் கொண்டிருந்தான் அத்ரிஷ் ….

அவனுக்கு உதவிய அதர்வனாவை பார்த்து ” அடுத்த மாதத்தில் பிறக்கப்போகும் பேபி அடுத்த நிமிடமே பிறந்திடும் போல …..” தன்னுள் முனகி கொண்ட விக்னவ் “இறங்கு கீழே” என்று மனைவியிடம் மொழிந்தான்….

“வாரே வா!!! இறங்கு கீழே னு டூ பிக் வேர்ட்ஸ் அத்துகிட்ட பேசியிருக்க விக்கி….. அடடா எவிடன்ஸ் இல்லாமல் போனால் இதை டார்லிங் ஒத்து கொள்ளவே மாட்டாளே!!!! விக்கி ஒன்னு பண்ணு…. மறுபடியும் அத்துவை பார்த்து கிழே இறங்கு னு சொல்லேன்…. அதை இப்போது கரெக்டாக வீடியோ எடுத்து கொள்கிறேன்” என்றவனை “டேய் நில்லு அத்ரி என் கையில மாட்டுன அவ்வளவுதான்” என்றபடி துரத்தி கொண்டு ஓடினான் விக்னவ்.

அவ்வோட்ட பந்தயத்தில் ஒருத்தர் ஒருத்தராய் வீட்டினர் அனைவரும் கலந்து கொள்ள அஃது அவர்களது அந்நாளை மேலும் மெருகேற்றியது…

முக்கியமானவர்களை மட்டும் அழைத்து சிறப்பான முறையில்  இரு குட்டி நிலாக்களுடன் அப்பெயர் சூட்டும் விழாவை கொண்டாடினர் அத்விக் குடும்பத்தினர் .

விழாவிற்கு வந்திருந்த ஆர்யனின் கண்களில் சற்று தொலைவில் பிரகதியும் அவள் தந்தை ரகுநாதனும் தென்பட்டனர் .

……..

இரண்டு மாதங்களுக்கு முன் ஹர்ஷிதாவிற்கும் அதர்வனாவிற்கும் ஒருசேர ஒரு பெரிய மஹாலில் பிரம்மாண்டமான முறையில் வளைகாப்பு நடத்தினர் ….

அப்போது அவர்களை ஏக்கத்துடன் பார்த்தபடி அமர்ந்திருந்த ரகுநாதனிடம் ‘ டாடி உங்களை இப்படி பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கும் என்றுதான் இங்கு வரமாட்டேன் என்றேன் … அத்வி அண்ணாவும் விக்கி அத்தானும் கோபித்துக் கொள்வார்கள் என்று நீங்கள்தான் என்னை வற்புறுத்தி அழைத்து வந்தீர்கள் ….. இப்போது இப்படி மூடு ஆஃப் ஆகி உட்கார்ந்திருக்கிறீர்கள் ” என்று வருத்தமிகு தொனியில் மொழிந்தாள் பிரகதி .

” நான் எதுவும் கேட்க மாட்டேன் ரதி அப்புறம் ‘ லண்டன் கிளம்பி விடுவேன் ‘ என்று மிரட்டுவாய் … நான் சிரித்தபடி உட்கார்ந்து கொள்கிறேன் போதுமா ” என்று பற்களை காட்டியவரை ” சாரி டாடி … ஐ நோ ஐ அம் ஹர்ட்டிங் யூ மச் . பட் நீங்கள் சொல்வது போல் வேற ஒருத்தரை என்னால் கட்டிக் கொள்ள முடியாது … புரிந்துகொள்ளுங்கள் ப்ளீஸ் ” என்றாள் .

” நான் வேண்டுமானால் ஒரே ஒரு முறை பேசி அவனிடம் பார்க்கட்டுமா ? ” என்றவரிடம் ” இனஃப் டாடி … இந்த கேள்வியை மாதத்திற்கு தவறாமல் 30 தடவையும் கேட்டு புளித்து விட்டது .. இனியும் ஆரம்பித்தீர்களானால் அத்வி அண்ணா விக்கி அத்தான் என்று எல்லாம் பார்க்க மாட்டேன் …. இப்போதே இங்கிருந்து கிளம்பி சென்று விடுவேன் ” என்று மிரட்டியவளை எதுவும் பேசாது திரும்பிக்கொண்டார் ரகுநாதன் .

அவர்கள் பின்னால் உட்கார்ந்திருந்த ஆர்யனிற்கு இந்தப் பேச்சு தெளிவாக கேட்டிருந்த போதும் பெரிதாக ஒன்றும் தோன்றிவிடவில்லை .

அப்போதும் ரகுநாதன் ” அவனிடம் நான் பேசி பார்க்கட்டுமா ‘ என்று கேட்டது பிரகதியின் காதலை வெளிப்படுத்த ‘ அந்த அவன் யாராக இருக்கும் ‘ என்ற நெருடல் இருக்கத்தான் செய்தது .

…….

இன்று அப்பா மகளின் பேச்சு காதில் விழாது இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு வாக்குவாதம் இருப்பதாக தோன்றியது .

அது என்னவென்று அறிந்துகொள்ள ஒரு வேகத்தில் எழுந்த ஆர்யனின் கால்கள் அப்படியே அதே இடத்தில் உட்கார்ந்தது .

எப்படி கேட்பது ????

அப்படியே போய் கேட்டாலும் உனக்கு என்ன உரிமை … திடீர் அக்கறை .. என்று கேட்பாளே !!!!

அவள் கேட்பது இருக்கட்டும் அவர்கள் பேச்சில் தலையிடும் உரிமை தனக்கு  இருக்கு என்று எப்படி தோன்றியது ???

அப்படியென்றால் பல சிந்தனைகளில் சில மணி நேரத்தை கடத்திய ஆர்யனின் அருகில் வந்து அமர்ந்தான் அத்விக் கையில் நிலனுடன் .

” டேய் உங்க அம்மா பேம்பர்ஸ் எடுத்து வருவதற்குள் இப்படி டர்ட்டி பண்ணி வைத்திருக்கிறாயே ? ” என்று தன் வேட்டியை ஈரமாக்கிய மகனிடம் பேசிய அத்விக்

“விழாவிற்காக உடுத்தியது . ரொம்ப அன்கம்ஃபர்டபிலா இருக்கு . நான் போய் பேண்ட் மாத்திட்டு வந்துவிடுகிறேன் . இவனைப் பிடி ஆர்யா ” என்று குழந்தையை  நீட்டினான்  .

டாக்டர் என்றாலும் கைக்குழந்தையை தூக்கிய அனுபவம் இல்லாததால் தயங்கிய ஆர்யனிடம் ” அட பிடித்து பழகிக்கொள் . எப்படியும் உனக்கு பயன்படும் தானே…..” என்றான் அத்விக் .

அதர்வனாவின் குழந்தைக்காக சொல்கிறானோ என்று ஆர்யனின் கண்கள் அவன் தங்கையின் புறம் சென்றதை கண்ட அத்விக் “நான் அத்து பேபிக்காக இதை சொல்லவில்லை ஆர்யா ” என்றான் .

மேலும் ” ரதியிடம் நிலனை கொடுத்து விடேன் . நான் டிரஸ் சேஞ்சு பண்ணிட்டு வந்துடறேன் ” என்று ஆர்யனின் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான் அத்விக் .

  பேசி பார்த்தால் தானே பிரச்சனை தீரும்….. பேசவே மாட்டேன் என்று தீர்மானத்துடன் அடம்பிடிப்பவள் குழந்தையோடு வரும் போது புறக்கணித்துவிட மாட்டாள் என்ற நம்பிக்கையில் தான் ஆர்யனிடம் அத்விக் நிலனை கொடுத்து விட்டதற்கான காரணம்…. பாவம் ஒரு மாதத்திற்கு முன் பிரகதி ஆர்யனிடத்தில் தன்னை சரமாரியாக வெளிப்படுத்திவிட்டு ஒதுங்கி போனது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை….

இக்காரியத்தை பெருமைபட செய்துவிட்டதாக எண்ணிய கமிஷனர் அவர்கள் அத்தாடு நிறுத்தாமல்
  ” உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வா ” என்று தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு நடக்க போகும் காதல் கச்சேரியை பார்க்க ஆயத்தமானான்.

அங்கு …..

நிலானி பேபியை தூக்கிக்கொண்டு வந்த பிரகதி ஆர்யாவை கண்டதும் ” உன்னால் தான் எல்லாம் . எனக்கும் டாடிக்கும் இப்போ சண்டை ” என்று திட்டியபடி திருப்பிக் கொண்டு சென்றாள் .

” நான் என்ன செய்தேன் ? ” … ஆர்யன்

” நீ என்ன தான் செய்யவில்லை .. ஆள விடு .. நான் லண்டனுக்கே போகிறேன் ” என்று பிரகதி கோபமாக செல்ல

அச்சண்டை  காட்சியை பார்த்த ஹர்ஷிதா ” அடுத்து கல்யாணம் தான் என்று சொன்ன …. இங்கு என்னவோ டிவோர்ஸ் பண்ணிட்டு போய்க்கிறாங்க” என்று கணவனை முறைத்தாள் .

” நிலனிடம் சொல்லித்தான் அனுப்பினேன் … சின்னதுங்க பெர்ஃபார்ம் பண்ணுவதற்கு முன்பே பெருசுங்க முந்திக் கொண்டார்கள் …. நான் என்ன செய்யட்டும் ” என்றான் அத்விக் நொந்தபடி .

” பட்டு சாரி சேஞ்ச் பண்ண போனவளை இழுத்து வைத்துக்கொண்டு……. டென்ஷன் ஆக்காதே விடு அத்வி” என்று சிடுசிடுத்தவளிடம்  ” நான் வேண்டுமானால் சேஞ்ச் பண்ணி விடவா ஹர்ஷி பேபி ” என்று கண்ணடித்து கேட்டு வைத்தான் காதலனாக மாறிய அவள் காவலன்.

சுற்றும் முற்றும் பார்த்தவள் அவசரமாக அவன் வாயை பொத்தி ” ஏய் மெதுவா பேச தெரியாதா ? யாராவது பார்த்துவிட்டால் ” என்று கடிந்தாள் .

அவன் இதழ்களின் மேல் பொதிந்திருந்த அவளின் விரல்களை பிரித்தவன் அதற்கு ஒரு சிறு முத்தத்தை வழங்கியதோடு ” எப்படி அரிசி மூட்டை நான் சேஞ்ச் பண்ண போவதை வேறு யாராவது பார்ப்பார்கள் ” என்றான் அவள் காதில் கிசுகிசுப்பாக .

தன்னை மீறி சிவந்த கன்னங்களை மறைக்க சிரமப்பட்டவள் ” ஏதோ இரண்டு பேரை சேர்த்து வைப்பதாய் ப்ராமிஸ் பண்ணினாயே … அதை முதலில் செய் .. இதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் … அதற்கும் முதலில் அந்த ஆங்கிரி பேர்ட்ஸ்களிடமிருந்து நம்ம நிலா பேபிஸை காப்பாற்று ” என்று கூறிவிட்டு ஓடியிருந்தாள் அவன் ராட்சஸி .

அவர்களை சேர்க்கணும் என்றால் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினால் தான் முடியும் . அப்போதும் பிரகதி ” உன் பொண்டாட்டி உன்னை வெளியே எடுத்து விடுவாள் என்ற தைரியத்தில் தானே அண்ணா என்னை சுட பார்க்கிறாய் … தாராளமாய் சுடு ” என்று சொல்வாளே தவிர ஆர்யனுடன் சேர்வது பற்றி யோசிக்க கூட மாட்டாள் என்று தன்னுள் கூறி கொண்டான் அத்விக்.

தங்கள் அறைக்குள் அனுமதிக்காத மனைவியை திட்டியபடியே அருகிலிருந்த அறையில் தனது பேண்ட்டை மாற்றிக்கொண்டு வந்த அத்விக் அங்கு கண்ட காட்சியை அவன் கண்களாலேயே நம்ப முடியவில்லை .

தான் காண்பது உண்மை தானா என்பது போல் கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்த்தபடி அப்படியே நின்றான் அத்விக்……

Advertisement