Advertisement

சிறிது நேரம் தூங்கி எழுந்த தீக்ஷி மதியம் சாப்பிடாததால் பசியெடுக்க நேராக கிச்சனுக்கு சென்றாள்….. அங்கே.,
          என்ன பண்ற மிருது, மாமா டியூட்டி முடிச்சி வருவாங்க யாழி…. அதான் பஜ்ஜியும்,  திகழுக்கு கேசரி ரொம்ப பிடிக்கும் அதான் கேசரியும் செய்ய போறேன்….. சரி நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் என்க….. இதை கேட்ட தீக்ஷி ஒரு வயசு  பொண்ணு சாப்பிடாம இருக்கா…. அவள  பத்தின அக்கறை  இல்ல….. இருங்கடி உங்களுக்கு நாத்தனார் கெத்து என்னன்னு காட்டுறேன்….. கிட்சன் வாசலில் இருந்த ஃப்ரிட்ஜ்ஜை மெதுவாக திறந்து அதிலிருந்து ரெண்டு முட்டையை எடுத்தாள்……. அதில் ஒன்றை மிருது தலையை நோக்கி அடிக்க…. அது நேராக  மிருதுவின் தலையில் அடித்து முட்டை அவளின் நெற்றியில் வலது பக்கமாக வழிந்தது…. 
              தீக்ஷி, “ஃபோர்” என  கத்தினாள்…. 
              மிருது அய்யர் ச்சீ உவ்வே என்று திரும்பியவளுக்கு அங்கு கையில் முட்டையுடன் நின்று கொண்டிருந்த தீக்ஷி கண்ணில் பட….. 
             திரும்பி பார்த்த யாழியை நோக்கி இன்னொரு முட்டையை தூக்கி வீச அது அவளின் மூக்கில் பட்டு வாய் வழியே வழிந்தது….. 
            “சிக்ஸ்” என கத்தினாள்…..
            அய்யச்சீ… கருமம்… தூதூ என கத்த
           தீக்ஷி உன்னைய…. என யாழியும், மிருதுவும் ஃப்ரிட்ஜ்ஜில் இருந்த முட்டையை எடுத்த அவளை நோக்கி வீச….
           தீக்ஷி கீழே குனிய முட்டை நேராக ஈவினிங் ஸ்னாக்ஸ் செய்ய வந்த கௌரியின் மேல் பட “அய்யோ சாரி அத்தை”…. 
            தீக்ஷி என்னடி இது”…. உன் வேலையை ஆரம்பிச்சுட்டியா?….. இன்னைக்கு வெள்ளிக்கிழமை கோயிலுக்கு போகலாம்னு நினைச்சேன்…. உன்னால எல்லாம் போச்சு……என அவர் குளிக்க செல்ல….
            ஹாஹாஹா…..  என இருவரையும் பார்த்து “தொப்பி” “தொப்பி” என சிரித்தபடியே ஓடினாள்……
          அவளை துரத்திக்கொண்டு ஓடிய மிருது, முட்டையை தூக்கி போட தீக்ஷி சைடாக ஓடி விட அது நேராக டியூட்டி முடித்து வந்த புகழின் மேல் பட்டு அவன் முறைத்த முறைப்பில் மிருது ஜாரிங்க மாமோய்ய்ய்…. என்க அவன் மேலும் முறைக்க….
            டேய் அண்ணா “என்னமோ பர்ஸ்ட் தடவை முட்டையில அடி வாங்கின மாதிரி ரொம்ப ஃபீல் பண்ற”…. நீயே எத்தனை தடவை என்னைய அடிச்சிருப்ப…..
          உங்க அண்ணா இப்படி எல்லாம் விளையாடுவாங்களா???….. தீக்ஷி…. என மிருது ஆச்சர்யமாக கேட்க
           அய்யோ மித்து அவன் செம ஜாலி டைப்…. வெளியில தான் அவன் டெரர் ஃபீஸ்…. வீட்டுக்குள்ள திகழுக்கும் எனக்கும் இவன் தான் காமெடி ஃபீஸ்….. எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு நல்லா முழிப்பான்….  என சொல்லி முடிப்பதற்குள் அவளின் தலையில் இரு முட்டைகளை போட்டு உடைத்தான் திகழ்…….    
            
            “ஹேய்ய்ய்ய்”……. என அனைவரும் ஒரு சேர கூச்சலிட….
           டேய்ய்யீ….. கரண்ட் கம்பம் உன்னை சும்மா விடமாட்டேன் டா….. டேய் எருமை நில்லுடா தடித்தாண்டவராயா….. ஹேய் நில்லுனு சொல்றேன்ல….. யாழி கையிலிருந்த முட்டையை வாங்கி வீச….. அது ஸ்லோ மோஷனில் செல்ல…. அனைவரும் அந்த முட்டையயே பார்க்க (நாமளும் பார்ப்போம்) திகழ் ஜஸ்ட் விலக….. அது நேராக ரோஹித்தின் சட்டையில் பட்டு கீழே விழுந்தது….
            திகழும் புகழுமே போயும் போயும் இவன் சட்டையிலையா அடிக்கணும்….. மிருதுவும் யாழியும் நைசாக நழுவி அவரவர் ரூமுக்கு சென்று விட்டனர்….. அவன் அண்ணனின் குணம் தெரிந்து…..  ரோஹித்துக்கு விளையாட்டுத்தனமே பிடிக்காது….. விளையாடுற வயசா இது என அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விடுவான்…. அதற்கு பயந்தே திகழும் புகழும் அவனிடம் வம்பு வைக்க மாட்டார்கள்…. 
           “இந்தா தம்பி ஓரமா போகப்பிடாது…… இப்படியா முட்டை வர வழிய்யில நடுவுல நிப்ப”…… என தீக்ஷி கேட்க….. 
          அவன் திரும்பி புகழை பார்க்க, அவன் வராத போனை காதில் வைத்து இதோ இப்ப வந்துறேன் சார்….. டேய் கமிஷனர் கூப்பிட்டுறாருடா நான் ஒரு ரெண்டு நாள் கழிச்சு வர்றேன்டா…. மீ எஸ்கேப் என ஓடிவிட்டான்….. அவனின் பின்னாலயே திகழும் ஓடி விட…..
           நான் உனக்கு தம்பியா?….
           இல்லை ஒரு ப்ளோவுல….
          ப்ளோவுல என்ன வேணா வருமா?….
          ப்ளோவுல சம்டைம்ஸ் கெட்ட வார்த்தை கூட வரும்……
           வாட்….. படிச்ச பொண்ணு மாதிரியா பிகேவ் பண்ற…. என்னதிது வீட்டை இந்த மாதிரி ஆக்கி வச்சிருக்க….. உனக்கு அரைமணி நேரம் டைம் தரேன்… வீடு புல்லா க்ளீன் பண்ணிட்டு என் கூட வர்ற….. போ…. என்க….. அவனை முறைத்துக் கொண்டே ஏடாகூடமாக க்ளீன் பண்ண…. ஹேய் நான் என்ன சொல்றேன் நீ எப்படி கீளீன் பண்ற…. பர்ஸ்ட் முட்டை தோடு எல்லாம் எடுத்து கவர்ல போடு… போற வழியில குப்பை தொட்டியில போட்டுருவோம் …. நாரும் ரோஹி…. தூக்கி போட்டு விளையாடும்போது நாரலையா?….. ப்ச்….
             ஏன் தீக்ஷி கண்டிப்பா இந்த பெட்ரா மாக்ஸ் லைட்டே தான் வேணுமா என மனசாட்சி கேட்க….. என்ன பண்ண இவன தான பிடிச்சி தொலையுது….. சரி.. எவ்வளவோ பண்ணிட்டோம்… இவன கரெக்ட் பண்ணிற மாட்டோமா?….. 
            அங்க என்ன முணுமுணுப்பு…… 
            வேலை பார்த்துட்டு இருக்கேன் மாமா….. 
            தீக்ஷி வேலையை முடிக்க கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமானது…. சரி நீ போய் குளிச்சிட்டு வா….. எங்க போறோம் ரோஹி…. என் கூட வரும் போது தெரிஞ்சுக்கலாம்…. ம்ஹூக்கும் இந்த முறைப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல….. அவள் ரெடியாகி வர ரோஹி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்….. மஞ்சள் நிற சல்வாரில் புத்தம் புது மலராய் வந்தவளை இமை கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான்…..  போலாமா….. ம்ம் என்க…… நாத்தம் பிடிச்ச சட்டையோடவா வர போறீங்க என கேட்க…. அப்பொழுது தான் அவனை கவனித்தாள்…. யெல்லோ டீசர்ட் ஜீன்ஸ் பேன்ட் என அணிந்திருந்தவனை கண்டவள்….. சேம் பின்ச் என அவன் கையில் கிள்ளி சாக்லேட் நீங்க தான் வாங்கித்தரணும் ஓகே வா…. ம்ம் என தலையாட்டியபடிய….. இருவரும் காரில் செல்ல கிட்டத்தட்ட அரைமணி நேரமாகியும் இருவரும் எதுவும் பேசாமல் இருக்க….. இது நமக்கு சரிப்பட்டு வராது என ரேடியோவை ஆன் பண்ண….. 
          கண்ணுக்குள்ள நிக்குற என் காதலனே
உன்னை விட்டா யார் துணையே
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்
உன் நினைவுகள் போகலையே
நெஞ்சுக்குள்ள துடிக்கிற என ஹார்ட்டூ 
உன் பேர் சொல்லுதடா…. 
என்னை விட்டு போக நீ நினைச்சா
என் உசிரே போகுதடா
      
          அதுவரை அந்த பாட்டை ரிசித்து கேட்டு கொண்டிருந்தவள்….. தீடிரென பாட்டு நிக்கவும்…. ஏன் ரோஹி…. எனக்கு இந்த பாட்டு பிடிக்கல…… அப்ப வேற ஏதாவது பாட்டு போடவா….. இல்ல நாம இறங்க வேண்டிய இடம் வந்திருச்சு என்க….. அவள் திரும்பி பார்க்க பீச் இருந்தது….. ஹேய் ஜாலி…. வா ரோஹி போகலாம்…. இரு பார்க் பண்ணிட்டு வர்றேன்…. இருவரும் மணலில் நடக்க….. தீக்ஷி ரோஹித்தின் கையை பிடித்துக் கொண்டாள்…. நான் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதுக்காகத்தான் உன்னை கூட்டிட்டு வந்தேன்……  
            என்ன சொல்ல போற ரோஹி….. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை…. நீ வீணா உன் மனசுல ஆசையை வளத்துக்காத…… நான் உன்னை மட்டும் இல்ல வேற எந்த பொண்ணையுமே கல்யாணம் பண்ண மாட்டேன்…. ஏன்னா நான் வாழ்க்கையில பொண்ணுங்களால பட்ட கஷ்டம் அப்படி….. ப்ளீஸ் என்னை மறந்துட்டு நீ வேற ஒரு நல்ல பையனை கல்யாணம் பண்ணிக்கோ இத சொல்ல தானே கூட்டிட்டு வந்துருக்க…. 
               தன் மனதில் இருந்ததை அப்படியே சொல்வாள் என எதிர்பார்க்கவில்லை….  அப்பொழுது தீடிரென பலத்த காற்று வீச தீக்ஷியின் கண்ணில் மண் விழுந்தது….. ப்ச் என கண்ணை கசக்க….. ஹேய் கண்ணை போட்டு கசக்காத….. இரு அவள் கண்களில் மெதுவாக ஊதி விட்டான்….. எதிரே இருந்து பார்ப்பவர்களுக்கு அவர்கள் இருவரும் முத்தம் கொடுத்தது போலவே தோன்றும்…. இவர்கள் இருவரையும் ஒருவன் புகைப்படம் எடுத்ததை அவர்கள் அறியவில்லை….
             “கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக கடலில் ஆட்டம் போட்டு கொண்டிருந்தாள்…. ஷனா டைம் ஆச்சு….. வா போகலாம்….. ப்ளீஸ் ரோஹி இன்னும் கொஞ்ச நேரம்….. ஏற்கனவே ரொம்ப நேரமாயிடுச்சி….. நீ வந்தா வா….. வரலைன்னா போ…. என திரும்பி பார்க்காமல் நடந்தான்…. ஹேய் நில்லுடா நானும் வரேன்…… என கையில் செப்பலை தூக்கிக்கொண்டு ஓடினாள்”…. 
          “பெரியவங்கள மரியாதை கொடுத்து பேசணும்னு உனக்கு தெரியாதா?”…. 
         “பெரியவங்களுக்கு தான் மரியாதை கொடுக்க சொல்லி கொடுத்துருக்காங்க…… புருஷனுக்கு இல்ல”…. 
         “இந்த மாதிரி இன்னொரு தடவை பேசிட்டு திரிஞ்சன்னு வை அடிச்சி பல்லை கழட்டிருவேன் பாத்துக்கோ”….. 
          “ம்ம் என ஐந்து நிமிடம் அமைதியாக இருந்தவள்….. ரோஹித்தின் கையை சுரண்டினாள்….. என்ன என அவன் கண்ணால் கேட்க….. ரோஹி பசிக்குது”…… 
           “ஹாங்….. இப்பதானடி சுண்டல், பானிபூரி எல்லாம் சாப்பிட்ட….. ப்ச் காலையில் சாப்பிட்டது ரொம்ப பசிக்குது ரோஹி என வயிற்றில் கை வைக்க….. அவள் அப்படி கேட்கவும் உடனே திரும்பியவன், 
           “ஏன் மதியம் சாப்பிடலை”…..
           “நடந்த கலவரத்துல சாப்பிட தோணலை ரோஹி….. நான் ரொம்ப அழுதா தூக்கம் வந்துரும்….. அதான் தூங்கிட்டேன்….  ஈவினிங் எழுந்து சாப்பிடலாம்னு கிச்சனுக்கு போனா….. உன் தொங்கச்சி ரெண்டு பேரும் என்ன பண்ணுனாளுக தெரியுமா?…. ஒருத்தி என்னடான்னா புருஷனுக்கு பஜ்ஜி செய்யுறா….. இன்னொருத்தி என்னடான்னா அவ புருஷனுக்கு கேசரி தான் பிடிக்குமாம்….. அதை செய்ய கிளம்புறா…. அதான் நாத்தனார் கெத்துனா என்னன்னு காட்டிட்டு வந்துருக்கேன்…. இனி என்கிட்ட ஜாக்கிரதையா இருப்பாங்க…. 
            “அவங்கள என்ன பண்ணின?….. அவன் மனதுக்குள் தன் தங்கைகளை கொடுமைப்படுத்தியிருப்பாளோ என பலவாறு எண்ண ஆரம்பிக்க”….. “மிருதுவையும் யாழியையும் என்னடி பண்ண…. என அவளின் தோள்பட்டையை பிடித்து உலுக்க”….
           “வலிக்குது ரோஹி”……. 
          “உனக்கு வலிக்கிற மாதிரிதாண்டி அவங்களுக்கும் வலிக்கும்”….
           “நான் அவங்க மேல முட்டை மட்டும் தான் அடிச்சேன்”….. பிளீஸ் கையை எடு…
           “சாரி….. சாரி…. நீ அவங்களை ஏதோ கொடுமைபடுத்தினன்னு நினைச்சிட்டேன்… ஐயம் ரியலி சாரி மா”… 
           என்னை அந்த மாதிரி கேவலமான பொண்ணுன்னு நினைச்சிட்டியா ரோஹி….. என கண்கள் கலங்கியவாறே கேட்க…… நான் அவங்க ரெண்டு பேரையும் என் அண்ணனோட ஒய்ஃபா பார்த்ததே இல்லை…. என்னோட கௌரிம்மா ஸ்தானத்துல தான் வச்சி தான் பாக்குறேன்….. தாங்க்ஸ் என்னை பத்தின ஒப்பினியனுக்காக……… என திரும்பி பார்க்காமல் நடந்தாள்….. 
             சாரிடி நான் வேணும்னு தான் அப்படி பேசினேன்…… உனக்கு நான் வேண்டாம்டி….  என மனதுக்குள் நினைத்துக் கொண்டே….. பக்கத்தில் இருந்த ஹோட்டலுக்குள் சென்று நிப்பாட்டினான்”…. 
              இறங்கு….
              அவள் எதுவுமே பேசவில்லை…..
              சர்வர் ஆர்டர் சார் என்க….. 
             அவகிட்டேயே கேட்டுக்கோங்க என்க….. 
              மேடம் ஆர்டர் ப்ளீஸ்…… 
              “சிக்கன் ஃப்ரைடு ரைஸ் 2 பிளேட் கொண்டு வாங்க….. சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம்  ஸ்ட்ராபெரி ஃபிளேவர் ஐஸ்கிரீம் ரெண்டு கப் கொண்டு வந்துருங்க…. என இருவரும் சாப்பிட்டு முடித்ததும்”….. (சண்டை போட்டாலும் சாப்பாட்டுல கரெக்டா இருக்க பார்த்தியா நீயெல்லாம் நம் இனமடா)
            “சர்வர் பில்லை கொண்டு வந்து கொடுக்க….. தன் பர்ஸில் இருந்த காசை எடுத்து கொடுத்தாள்”….. 
           நான் என ஆரம்பித்தவன்…. அவள் பார்த்த பார்வையில் அமைதியானான்….. 
வீட்டிற்கு செல்லும் போது மணி பத்தாகி விட்டது….. வாசலில் இறக்கி விட்டு கிளம்ப போனவனிடம்….. 
           “ரோஹி ஐ லவ் யூ….. இன்னைக்கு உன் கூட இருந்த நேரத்த நான் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன் தாங்க்ஸ்”……. என சென்றவளை,
           “ஏன்டி என்னை வெறுக்கவே மாட்டியா?….. நான் உனக்கானவன் இல்லைடி….  என போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்….. 
            வீட்டில் அனைவரும் உறங்கி விட புகழுக்காக ஹாலில் உள்ள சோபாவிலேயே  மிருது வெயிட் பண்ணி கொண்டிருந்தாள்…. பதினோரு மணியாகியும் வராததால் சோபாவிலேயே உறங்கி விட….. கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்தே புகழ் வந்து சேர்ந்தான்….. வந்தவன் சோபாவில் தன் உடலை குறுக்கி படுத்திருந்த மனையாளை கண்டதும் இதுவரை இருந்து டென்சன் எல்லாம் காணாமல் போய்விட்டது….. 
            பட்டுக்குட்டி…...
              மாமா… என தூக்கத்திலேயே​ உளறினாள்….. 
             போய் ரூம்ல படு…. என்ற குரலில் அடித்து பிடித்து எழுந்தாள்….. கண்ணை கசக்கியபடியே, இருங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்….. அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்…… நீ போய் தூங்கு….. ப்ச், நீ போய் முதல்ல ஃபிரெஸ்ஸாகிட்டு வா…. அப்புறம் நீ பேசுறத நான் கேட்குறேன்….  இது ஒன்னும் உன் போலீஸ் ஸ்டேஷன் கிடையாது…. உன் பேச்ச கேட்குறதுக்கு…. ஹோம் ஸ்டேஷன் இங்க நாங்க சொல்றதை தான் நீ கேட்கணும்….. ஓகே மேடம் என சிரித்தபடியே சென்றான்….. 
   
            “ஃபிரெஸாகி வந்தவன் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தவளை பின்னால் இருந்த அணைத்தபடியே….. என்ன பண்ற பட்டு….. தக்காளி சட்னி இருக்கு… அதான் சாம்பார் சூடு பண்ணி தோசை ஊத்துறேன்…. போய் டைனிங் டேபிள்ள உட்காரு போ….. அதென்ன எல்லார் முன்னாடியும்​ மாமான்னு கூப்பிடுற…. இப்ப என்னடான்னா வா போங்கிற….. அதெல்லாம் அப்படித்தான்…. போயி டேபிள்ள உட்காரு…… சாப்பிடறதுக்கு ஏன் அங்க உட்காரணும்….. என சமையல் செய்யும் திண்டின் மேல் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினான்….. சாப்பிட்டு கொண்டே அவளுக்கும் ஊட்டி விட, இருவரும் சாப்பிட்டு முடித்து கிச்சனை ஒதுக்கி விட்டு தூங்க சென்றனர்….. 
          பட்டு என மிருதுவின் மடியில் தலை வைத்து படுத்தான்….. ரொம்ப டென்ஷனா இருக்கா மாமா….. ம்ம் என்க…. ஏதாவது பிரச்சினையா மாமா…. தைலம் தேய்த்து மெதுவாக பிடித்து விட்டாள்….. சில மணி நேரம் கழித்து பார்க்க அவளின் மடியிலே தூங்கி விட அவன் தலையை மெதுவாக தலையணையில் வைத்து நேராக படுக்க வைத்து பக்கத்தில் படுக்க….. அவள் இடுப்பில் கை போட்டு தன்னோடு இறுக்கி அணைத்தபடியே படுத்து….  உன் வாசம் எனக்குள்ள எப்போவும் வேணும்டி…. என அவள் நெஞ்சில் தலை வைத்து படுத்து உறங்கினான்……
          இரவில் மொட்டை மாடியில்  …… கையை தலைக்கு அடியில் கொடுத்து படுத்திருந்த ரோஹித்தின் எண்ணம் முழுமையாக ஷனாவே ஆக்கிரமித்திருந்தாள்….. மூடியிருந்த கண்களின் வழியே நீர் வழிந்தது…. 
          அதே நேரம் தீக்ஷியும் ஏன்டா என் மனசு கஷ்டப்படுற மாதிரி பேசுனா​ நான் உன்னை விட்டு போயிருவேனா….. கண்டிப்பா மாட்டேன்….. நீ எனக்கானவன்டா….. என முத்தமிட்டாள் நிஜத்திற்கு அல்ல நிழல்படத்திற்கு…..
             “நாளை விடியல் அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்பதை அறியாமல்”….. 

Advertisement