Advertisement
காற்று கூட சத்தம் செய்யாமல் அவர்களை ரசித்த வண்ணம் மென்மையாய் கடந்து செல்ல, கார்த்தி வாசுவிற்கு அழைத்தான். இவர்கள் ஏகாந்த நிலை கலைய, இருவரும் கண்விழித்தனர்.
கார்த்தி ஏதோ கேட்க, “ டேய், நாங்க இன்னும் ஹாஃப் அன் ஹவர்ல வந்துருவோம்.” என சொல்லியவன், ஸ்ரீயை அழைத்துக்கொண்டு பைக்கில் ஓடைக்கு செல்ல, இருவரும் அங்கே கரையில் அமர்ந்தனர்.
அங்கே காற்றும் நிலவும் குளுமை கூட்ட, இருவரும் இரவின் சிருங்காரத்தை அனுபவித்தவாரு அமர்ந்திருந்தனர்.
சிறிது நேரம் சென்றிருக்கும், வாசு பத்மாவின் மடியில் தலை வைத்து படுத்தான்.
“ மாம்ஸ் என்னதிது யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க. எந்திரிங்க. “ என ஸ்ரீ மெல்லமாக அதட்ட, அவளின் கைகளை பிடித்து தன் கழுத்தை சுற்றி போட்டவன் இன்னும் வாகாக அவள் மடியில் படுத்து கண்மூடிக்கொண்டான். அவனுள் ஒரு ஆசுவாசம், ஒரு நிறைவு.
“ இங்க வந்து உங்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு நிறைய நாள் நினச்சிருக்கேன். ஒரு சில சமயம் அப்படி நடக்கவே நடாகதோனு நினச்சு ஃபீல் பண்ணிருக்கேன். பட் இதெல்லாம் இப்போ நடக்கும் போது உண்மையானு திரும்ப திரும்ப நினைக்க தோணுது.. “ என உள்ளம் திறந்து சொல்ல, பத்மாவிற்கு வாசு புதிதாக தெரிந்தான்.
பத்மாவிற்காவது அபியும் ஷங்கரும் உடன் இருந்தனர். அவர்களுக்கு இவர்களின் விருப்பம் பற்றி தெரியும் என்பதால், அவள் சொல்லாமலே அவளளின் உணர்வுகள் புரிந்து அவளை அவர்கள் அதிகம் பார்த்துக்கொள்வர். ஆனால் வாசுவிற்கு வெளியே சொல்ல கூட ஆள் இல்லாமல் தொழில் என்ற ஓட்டத்தில் அவன் உணர்வுகளை மறைத்திருந்தான். என்ன தான் கிருபாவும் மணியும் உடன் இருந்தாலும், அவர்களிடம் மகிழ்ச்சியை வெளிபடுத்துவானே தவிரே பத்மாவின் விலகல் ஏற்படுதிய உணர்வுகளை அவர்களிடம் பகிர்ந்ததில்லை. அதெல்லாம் இன்று வெளிவர, பத்மாவிற்கு அவன் தன்னை இத்தனை தேடியிருக்கிறான என ஆச்சர்யமாக இருந்தது. இருவரும் காதலில் இருந்த பொழுது கூட வாசு பெரிதாக அவளுக்கான அவனது தேடலை சொன்னதில்லை வெளிக்காட்டிக்கொண்டதுமில்லை. இப்போது இதெல்லாம் சொல்ல, பத்மாவிற்கு என்ன சொல்வதென்ற தெரியவில்லை, அமைதியாக அவன் முகத்தை தான் பார்த்திருந்தாள்.
“ என்ன ஸ்ரீ அப்படி பாக்குற ? “
“ மாம்ஸ் என்னய இவ்ளோ தேடிருக்க, ஆனா என்கிட்ட உன் விஷயம் சொல்லாம ஏன் விட்ட “ என பத்மா அவள் மனதில் உள்ளதை அப்படியே கேட்க,
“ இதுவே எனக்கு ஏதாவது நல்ல விஷயம் அப்போ நடந்துருந்த அப்பவே சொல்லிருருப்பேன், ஆனா நானே ஒரு ப்ராப்ளம்ல மாட்டிருக்க போது அதுல உன்னையும் இழுத்து விட முடில ஸ்ரீ. அத உன்கிட்ட சொல்லவும் முடில “ என சொல்லி ஸ்ரீயின் மடியில் இருந்து எழுந்துகொண்டான்.
அவன் முகம் சிறிது வருத்தத்தை காட்ட, பத்மாவிற்கு ஏதோ போல் ஆகிவிட்டது. இனிமையான நேராகளின் ஊடே பேச்சு இப்படி செல்வது பிடிக்காமல், அவனின் தலை முடியை கொத்தாக பற்றிய ஸ்ரீ, அதை அப்படியும் இப்படியும் ஆட்ட,
“ ஆஆஆஆஆ ஏய் ஸ்ரீ விடு, வலிக்குது டி ஆஆஆ …”
“ நல்லா வலிக்கட்டும்,
என்னய இழுத்து விட வேண்டாம் சரி, ஆனா ஒரு வார்த்த என்கிட்ட தனியா சொல்ல ட்ரை பண்ணிருக்கலாம்ல. “ என சொல்லிக்கொண்டே இன்னும் ஆட்ட
“ சொல்ற அளவு எனக்கு வழி தெரில. ஆஆஆஆஆ கைய எடு ஸ்ரீ. “
“ வழி தெரிலயா…
அப்போ இந்த வலியாச்சும் தெரியட்டும், என்னைய எவ்ளோ ஆழ விட்டுருப்ப நீ. “ என இப்போது இரு கைகளாலும் பிடித்து இன்னும் ஆட்டிவைக்க,
“ அடி பாவி என்னைய தனியா கூட்டிட்டு வந்து கொல்ல பாக்குறறறற. “
“ கொல்ல பாக்குற அளவு நீ வொர்த் இல்ல மாம்ஸ்.
இனிமே என்கிட்ட ஏதாவது மறைகனும்னு நினச்சிங்க அதுக்கு டிசைன் டிசைனா நீங்க அனுபவிப்பிங்க.
என்ன புரியுதா. “ என அவன் தலையில் இருந்து கை எடுத்தவள் இரு கைகளையும் தூசி தட்டி கண்களை உருட்டி மிரட்டினாள்.
“ என்னடி ரொமான்ஸ் பண்ண வேண்டிய நேரத்துல புருஷன மிரட்டுற.மேல கைவைக்குற, இதெல்லாம் ரொம்ப தப்புமா “ என வாசு கலவரமாக சொல்ல,
“ புருஷன்றதால இதோட விடுறேன். எப்போ பார்தாலும் ஹெல்மெட் மாட்டிக்கிட்டு என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆவிங்கள்ள, இப்போ சிக்கிட்டிங்கள்ள.
இன்னும் உங்களுக்கு இந்த ட்ரீட்மெண்ட் பத்தல போல இருக்கே, இப்போ எஸ்கேப் ஆகுங்க பார்க்கலாம். “ என சொல்லி இவள் அவனை நெருங்க போக, வாசு சுதாரித்து எழுந்தவன், வேகமாக அவளிடமிருந்து விலகி நடக்க, அவன் பின்னே ஸ்ரீயும் எழுந்தவள் அவனின் வேகத்திற்கு ஈடாக இவளும் நடக்க, அவன் ஓடவே ஆரம்பித்துவிட்டான்.
“ ஹே இது பப்ளிக் பிளஸ் டி, இப்படி எல்லாம் பண்ணக்கூடாது. “ என சொல்லிக்கொண்டே இவன் சிரித்து ஓடை ஓரம் ஓட,
“ ஹா ஹா… நீ என் பிரைவேட் ப்ராப்பர்டி டா, நான் உன்ன என்ன வேணா டார்ச்சர் பண்ணுவேன்.“ என சொல்லிக்கொண்டே அவன் பின்னே ஸ்ரீ துரத்தி ஓட, சிறிது நேரம் சிக்காமல் ஆட்டம் காட்டினான்.
ஸ்ரீ எதிர்பார்க்க சமயம் வாசு அப்படியே திரும்பி நிற்க, ஸ்ரீ அவன் மீது மோதி விழ போனவளை அப்படியே இடையை பற்றி தூக்கியவன் ஓடையை நோக்கி சென்றான்.
“ டேய் மாம்ம்ஸ் என்ன பண்ற. “ இப்போது கலவரமாக கேட்டாள் ஸ்ரீ,
“ ம்ம்… இங்க உன் வெப்பன் சப்லயர வச்சு என்னைய தண்ணில துவச்சு எடுத்த, இரு நானும் உன்ன துவைக்குறேன். “
“ நோஓஓஓஓ இப்படி எல்லாம் கட்டுன பொண்டாடிய பண்ண கூடாது. திஸ் இஸ் வன்கொடுமை. “
“ ஓஹ் அப்போ நீ இவ்ளோ நேரம் பண்ணது மென்கொடுமையா ? “
“ மாம்ஸ் எதுவா இருந்தாலும் நம்ப பேசிக்கலாம்.
இப்போ தண்ணிக்குள்ள மீனு தூங்குற நேரம். சோ நம்ப டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.“ என ஸ்ரீ சமத்தாய் டீல் பேச
“ அப்போ சரி நம்பலும் வீட்டுக்கு போயிடலாம். நீ சொல்றது கரெக்ட் எதுக்கு நம்ப மீன டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு, நான் உன்ன டிஸ்டர்ப் பண்றேன், நீ என்னைய டிஸ்டர்ப் பண்ணு “ என கண்கள் சிரிக்க ஸ்ரீயின் நெற்றியில் முட்டி பதிலுக்கு டீல் பேசினான் வாசு. ஸ்ரீபத்மா மென்புன்னகையுடன் குறும்பாக அவனை பார்த்து கண்களை மூடி திறந்து அமோதித்த அதே நிமிடங்கள் வாசுவும் அவள் நெற்றியில் இருந்து தலை எடுக்காமல் புன்னகையுடன் அசைக்க, அந்த நொடிக்கள் யாவும் இருவருள்ளும் தென்றலாய் வருடியது.
அவளை அப்படியே தூக்கிக்கொண்டு பைக் அருகில் நடந்து வர,
“ மாம்ஸ் மாம்ஸ் நான் வண்டி ஓட்டுறேன். “ என ஸ்ரீ ஆசையாக கால்களை உதறிக்கொண்டு சொன்னாள்.
“ நீ பைக் ஒட்டுவியா. “
“ இல்ல. எனக்கு தெரியாது. நான் சும்மா ஹாண்டில் பிடுசுக்குறேன். நீங்க பின்ன உட்கார்ந்து ட்ரைவ் பண்ணுங்க ”
அதே போல் ஸ்ரீயை பைக்கின் முன்னே அமர்த்தி இவன் பின்னே உட்கார்ந்து வண்டியை எடுக்க, முதலில் தடுமாறிய ஸ்ரீ பிறகு நன்றாக உட்கார, இருவரும் மெல்ல மெல்ல உல்லாசமாய் உற்சாகமாய் ஊர்வலம் போக ஆரம்பித்தனர்.
ஈர காற்று சில்லென்று முகத்தில் வீச, அந்த மண் பாதையை மேலும் அழக்கூடியது நிலவின் ரம்மியமான ஒளிக்கதிர்கள்.
வாசுவின் கன்னம் ஸ்ரீயின் கன்னதத்தோட ஒட்டிக்கொண்டு வண்டியை ஓட்ட, இருவரின் உள்ளத்திலும் அடை மழை.
” மாம்ஸ்…” தயக்கமாய் ஸ்ரீ அழைக்க,
” ம்ம்…” பாதையில் கவனம் வைத்து வாசு பதில் சொன்னான்.
” மாம்ஸ்ஸ்…” ஸ்ரீயின் குரலில் சாக்லேட் சாஸ்ஸின் சுவை.
” ம்ம் சொல்லு ஸ்ரீ.” மொரு மொரு வேபராய் வாசுவின் வார்தைகள்.
” ஒரு பாட்டு பாடேன்.”
” போடி.” வெட்க எட்டி பார்த்த குரலில் வாசு சொல்ல,
” பிளீஸ் டா மாம்ஸ். நேத்து மட்டும் பாடுன. ” என ஸ்ரீ வாகாக அவன் மீது பின்னே சாய்ந்து கொண்டாள்.
“ அது நேத்து ஸ்பெஷல் டே அதான் பாடுனேன்.”
“ ப்ச்… ஸ்பெஷல் டே அப்படினு ஒன்னும் இல்ல.
நம்ப தான் டேஸ்ஸ ஸ்பெஷல் அக்குறோம்.
சோ இன்னைக்கு இந்த மொமெண்ட்ட ஸ்பெஷல் அக்குறோம். ஓகே. “ என இவள் சலுகையாய் அவன் காதோரம் சொன்னாள்.
அவளின் விளக்கத்தில் புன்னகை விரிய, மெல்ல அவள் காதோரம் சாய்ந்தவன்,
” நீ எந்தன் பாதி என்றும்
நானும் உந்தன் மீதி என்றும்
காதல் காதக்குள்ள
வந்து ஓதுது “
என ரசனையாய் வாசு பாட, கண்மூடி அவனது குரலின் வாசம் பிடித்த ஸ்ரீயின் காதில் வாசுவின் உதடுகள் கிட்சு கிட்சு மூட்ட, அவன் புறம் திரும்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் அவனின் ஸ்ரீபத்மா.
வாசுவின் புன்னகை இன்னும் விரிய அவள் கன்னத்தோடு இன்னும் இன்னும் ஒட்டிக்கொண்டான். அந்த பயணம் முழுவதும் காதல் சாரல் வீச இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
Advertisement